பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Wednesday, November 25, 2009

ரம்பாவுக்கு தொழிலதிபர் மாப்பிள்ளை-திருப்பதியில் திருமணம்!

தென் இந்திய சினிமாவின் முக்கிய நடிகைகளுள் ஒருவராக விளங்கிய ரம்பா அடுத்த மாதம் திருப்பதியில் தொழிலதிபர் மாப்பிள்ளையை மணக்கிறார்.
33 வயதாகும் ரம்பா, முதல் முதலில் தமிழில் நடித்த படம் உழவன். பின்னர் ரஜினி, கமல், பிரபு, சரத்குமார் , கார்த்திக் , விஜய், அஜீத் என ஒரு பெரிய ரவுண்ட் வந்தார்.இந்தி, தெலுங்கு , மலை யாளம், போஜ்புரி படங்களிலும் நடித்தார். சமீப காலமாக மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு நடுவராகவும் இருந்தார்.அவரோடு நடிக்க வந்த எல்லோருக்கும் மீனா போன்றவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டாலும், இவர் மட்டும் தொடர்ந்து சொந்தப்படம், செக் மோசடி, வீட்டுத் தகராறு என பிரச்சனைகளுடன் போராடிக் கொண்டிருந்தார்.

இப்போது கிட்டத்தட்ட எல்லா விவகாரங்களிலிருந்தும் மீண்டு விட்டாராம். மேலும் ஒரு வெளிநாட்டு நிறுவனத்துக்கு விளம்பர்த் தூதராகவும் மாறியுள்ளார்.இந்திப் பட வாய்ப்பு வேறு வந்துள்ளது. இந்த சந்தோஷத்தோடே திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்த அவர், ஒரு பெரிய தொழிலதிபருடன் செட்டிலாகிறார்.

சமீபத்தில் ரம்பாவுக்கு விலை உயர்ந்த கார் ஒன்று பரிசாக வந்ததாக செய்தி அடிபட்டதே... அந்தக் காரை வங்கித் தந்தது கூட இந்த தொழிலதிபர்தானாம். ஆனால் அவர் பெயரை இன்னும் வெளியிடாமல் ரகசியம் காக்கிறார் ரம்பா.வரும் டிசம்பர் 27ம் தேதி இருவருக்கும் திருப்பதியில் திருமணமாம்.