பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Wednesday, January 6, 2010

இன்று முதல் ஏ9 பாதையில் 24 மணிநேரம் பயணிக்கலாம்

இன்று நள்ளிரவு முதல் ஏ9 ஊடாக வீதித் தடை முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஸ யாழ்ப்பாணத்தில் அறிவித்துள்ளார். இதன்படி இன்று நள்ளிரவு முதல் சகல வாகனங்களும் பொதுமக்களும் எவ்வித அனுமதியும் பெறாமல் 24 மணி நேரமும் ஏ9 வீதியூடாக பயணங்களை மேற்கொள்ளலாம் என பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தேர்தல் வந்ததால் இவ்வளவும் கடுகதிவேகமாக நடக்கிறது, ஆனால் இவை அனைத்தும் நிலைக்குமா என்பதே தற்போது பெரும் கேள்வியாக இருக்கிறது.