பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Friday, January 22, 2010

ஆசிரியருடன் ஏன்?

டியூசன் மாணவியோடு அமலன் என்ற ஆசிரியரும்...
டியூசன் மாணவனோடு நசுரீன் என்ற ஆசிரியையும் காதல் மராத்தான் நடத்தியதைப் பற்றி "குரு- சிஷ்யை உறவு' என்ற தலைப்பில் ரிப்போர்ட் வெளியிட்டிருந்தோம்.
இந்த கள்ள ஜோடிகளில்... ஆசிரியர் அமலனால் கடத்தப்பட்ட ப்ளஸ்-டூ மாணவி ஸ்ரீலேகா வை... சந்தித்து.. ""எப்படி ஆசிரியரின் வலையில் விழுந்தாய்'' என்றோம். கண்ணீர் ததும்ப சங்கடமாய்ப் பேச ஆரம்பித்த அவள்..
“""நான் டென்த் படிக்கும் போது அமலன் சார்தான் எனக்கு கிளாஸ் டீச்சர். நான் கிளாஸ்லயே முதல் மார்க் வாங்குற மாணவி. அதனால் என் மேல் சார் ரொம்பப் பாசம்காட்ட ஆரம்பிச்சார்.
ஸ்கூல் பீஸ் கட்ட ஒருதடவை நான் சிரமப்பட்டப்ப... அவரே கட்டினார். அதனால் அவர் மேல் எனக்கு மரியாதை வந்துச்சி. இதைத்தெரிஞ்சி சந்தோசப் பட்ட எங்க அப்பாவும் அம்மாவும்... சார்ட்ட எங்க பொண்ணை உங்கக்கிட்ட ஒப்படைக்கிறோம். நீங்கதான் அவளை பெரிய ஆளாக்கணும்னு சொன்னாங்க. அதிலிருந்து சார் எங்கிட்ட ரொம்ப உரிமை எடுத்துக்க ஆரம்பிச்சார்.
சாருக்கு ஸ்கூலிலும் செல்வாக்கு அதிகம் என்பதால் என்னை எல்லோரும் அமலன்சார் ஸ்டூடண்ட்டுன்னு மரியாதையா பார்க்க ஆரம்பிச்சாங்க.டென்த்ல ஸ்டேட் லெவல்ல மார்க் வாங்க வைக்கிறேன்னு அவர் வீட்டுக்கு கூப்பிட்டு இலவசமா டியூசனும் சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சார்.
அப்ப அவ ருக்கும் அவர் மனைவிக்கும் பேச்சு வார்த்தை சரியா இருக்காது. அதனால் அடிக்கடி தன் மனைவி இல்லாத சமயங்களில் நான் அன்புக்கு ஏங்கற ஜீவன்னு ஒரு மாதிரியா பார்ப்பார்.
என் கையைப் பிடிச்சிக்கிட்டு கலங்குவார். அப்பல்லாம் எனக்கு அவர்மேல் பரிதாபமா இருக்கும். டென்த் முடிஞ்சி லெவன்த் வந் தப்பவும் அவரே டியூசனுக்குக் கூப்பிட்டார். இந்த சமயத்தில் அவர் மனைவியோட கோச்சிக்கிட்டு தனியா ஒரு சின்ன ரூமில் தங்கினார். அங்கும் என்னை டியூசனுக்குக் கூப்பிட்டார். அங்க டியூசனை மறந்து எனக்கு அன்புகாட்டற ஜீவன் வேணும்னு என்னை கட்டிப்பிடிச்சிக்குவார்.
சார் இது தப்புன்னு சொன்னாலும் விடாம... உன்னை உலகத் திலேயே பெரிய ஆளா நான் ஆக்கிக் காட்டறேன். என் கூடவே இருந்தா போதும்னு சொல்லியே... கொஞ்சம் கொஞ்சமா அங்க இங்க தொடுவார். கடைசியா உன்னைக் கல்யாணம் பண்ணிக்கப்போறேன். நீதான் என் மனைவி.
நான் அந்தமான்லயாவது... அஸ்ஸாம், பீகார்லயாவது வேலைதேடிக்கிறேன். நாம் அங்க போய்டலாம். நாம நிறைய சம்பாதிச்சி உங்க அப்பா- அம்மாவுக்கு நிறைய பணத்தை அனுப்பலாம்னு சொல்லிச் சொல்லியே தப்பிக்கவிடாம பண்ணிட் டார்.அமலன் சாரை முதல்ல ஆசானா நினைச்சேன்.
அப்புறம் அப்பா ஸ்தானத்தில் வச்சிப்பார்த்தேன். அப்புறம் என்னை வழி நடத்தவந்த கடவுளா நினைச்சேன். கடைசியா தன்னைக் கணவன்னு சொல்லி என்னை முழுசா மோசம்பண்ணிட்டார். இவ்வளவும் பண்ணிய அந்த ஆள்... எல்லாத்தையும் முடிச்சிக்கிட்டு... என்னை நடுத் தெருவில் விட்டுட்டுப் போய்ட்டார். இனி எப்படி எந்த முகத்தை வச்சிக்கிட்டு எங்க அப்பா- அம்மாவை நான் பார்ப்பேன்''’’ அதற்குமேல் பேச முடியாமல் முகத்தைப் பொத்திக்கொண்டு உடைந்து அழ ஆரம்பித்தாள் அந்த பரிதாபத்துக்குரிய மாணவி.மாணவி ஸ்ரீலேகாவின் கதை; பலருக்கும் விழிப்புணர் வைப் போதிக்கும் விதமாக இருக்கிறது.
காக்கிகளுடன் கண்ணா மூச்சி ஆடும்... ஆசிரியர் அமலன் பிடிபடும்போது மேலும் பல பகீர் விவகாரங்கள் வெடித்து வெளியே வரலாம் என்கிறார் கள் காக்கிகள்.

Wednesday, January 20, 2010

சினிமாவை விட்டே போயிடறேன்!-செல்வராகவன்

ஆயிரத்தில் ஒருவன் படம் சில ஆங்கிலப் படங்களின் தழுவலாக இருப்பதை யாராவது நிரூபித்தால், நான் சினிமாவை விட்டே போய் விடுகிறேன் என்றார் இயக்குநர் செல்வராகவன்.
பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஆயிரத்தில் ஒருவன் படம் பொங்கலுக்கு வெளியானது. ஆனால் ரசிகர்களுக்கு இந்தப் படம் புரியாததால், வசூல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் கூறுகிறது.
அதே நேரம் மீடியாவில், வேறு விதமான விமர்சனங்களை செல்வராகவன் எதிர்கொள்ள வேண்டிய சூழல்.
எனவே உடனடியாக பிரஸ் மீட்டுக்கு அழைக்கப்பட்டனர் செய்தியாளர்கள்.இந்த கூட்டத்தில், 'ஆயிரத்தில் ஒருவன் படத்தின் காட்சிகளில் மெக்கனாஸ் கோல்ட், டைம்லைன், கிளாடியேட்டர் போன்ற படங்களின் தாக்கம் உள்ளதே?' என்று கேள்வி எழுப்பினர்.இதைக் கேட்டதும் மிகவும் கடுப்பான செல்வராகவன், 'இந்தப் படம் முழுக்க முழுக்க கற்பனையானது. அது போன்ற ராஜா உண்மையில் கிடையாது. எந்த ஆங்கிலப் படத்தையும் பார்த்து நான் காப்பியடிக்கவில்லை. அதற்கான அவசியமும் இல்லை.
அப்படி எந்தப் படக் காட்சியாவது இதில் இடம் பெற்றிருந்தால், அந்த படத்தின் சிடியைக் கொடுங்கள்... உண்மையாக இருக்கும்பட்சத்தில் சினிமாவை விட்டே விலகி விடுகிறேன்..." என்றார். அடுத்ததாக, 'படத்தில் லாஜிக்கே இல்லையே?' என்று கேட்டதற்கு, "ஆங்கிலப் படங்களில் லாஜிக் பார்க்கிறீர்களா... அதே மாதிரி இந்தப் படத்தையும் பாருங்கள் (!??). அவதார் படத்தில் எத்தனையோ ஓட்டைகள் இருந்தாலும் அதை ரசிக்கிறார்கள்... ஆனால் ஒரு தமிழன் எடுத்த வித்தியாசமான படத்தில் ஆயிரம் ஓட்டைகளைக் காண்கிறீர்கள்.இப்படி இருந்தால் வித்தியாசமான படங்கள் எப்படி வரும்? ஹாலிவுட்டை விட அட்டகாசமான படைப்புகளை இங்கேயே தர முடியும்" என்றார்.

எந்திரன் பாட்டு லீக்?!

ரஜினிகாந்த்- ஷங்கர் கூட்டணியில் உருவாகும் மெகா படைப்பான எந்திரன் - தி ரோபோ படத்தின் பாடல் என்ற பெயரில் ஒரு ஆடியோ ஃபைல் இணைய தளங்களில் உலா வரத் துவங்கியுள்ளது.
படம் வெளியாகும் முன்பே அதை இணைய தளங்களில் லீக் செய்வது வாடிக்கையாகிவிட்டது.முன்பு சிவாஜி படத்தின் படப்பிடிப்புக் காட்சிகள், பாடல்கள் அனைத்தும் படம் வருவதற்கு சில மாதங்களுக்கு முன்பே ஆன்லைனில் லீக்காகி பரபரப்பேற்படுத்தின. தரம் மோசமாக இருந்தாலும், முன் கூட்டிய படத்தின் பாடல்களை தெரிந்து கொள்வதில் உள்ள த்ரில் காரணமாக பலரும் இவற்றை டவுன்லோடு செய்து வந்தனர்.
இந்த பப்ளிசிட்டியைப் பார்த்த கவுதம் மேனன் போன்ற சில இயக்குநர்கள் இதனை ஒரு விளம்பர உத்தியாகவே பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். வாரணம் ஆயிரம், விண்ணத் தாண்டி வருவாயா படங்களில் இதை பெரும் பப்ளிசிட்டியாக்க முயன்றார் அவர்.
( சரத்குமாரின் ஜக்குபாய் சமாச்சாரம் இதில் சோராதுங்ணா!)இந் நிலையில் இப்போது மீண்டும் ரஜினியின் எந்திரன் பட பரபரப்பு ஆரம்பித்துள்ளது. முதலில் பெருவில் எடுக்கப்பட்ட எந்திரன் படப்பிடிப்பு காட்சிகளின் வீடியோவை உலாவிட்டவர்கள், இப்போது, அதன் ஆடியோ என்று ஒரு பாடலை லீக் செய்துள்ளனர்.
'என் உயிரிடம் ஒரு கேள்வியைக் கேட்டேன்...' என்று ஆரம்பிக்கும் இந்தப் பாடல் 3.16 நிமிடங்கள் ஒலிக்கிறது.இந்தப் பாடலின் ஒலி (பாடகர் குரல்) தெளிவாக இல்லை. ரஹ்மான் ட்ராக் பாடியதை அப்படியே எடுத்து இணையத்தில் விட்டுவிட்டார்களோ எனும் அளவுக்குதான் உள்ளது.

Tuesday, January 19, 2010

A Brighter Future


தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பாதுகாப்பாகவுள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் செய்தி தொடர்பாளர் விடுத்துள்ள அறிக்கை
எமது அன்பிற்குரிய தமிழீழ மக்களுக்கு.
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பற்றி இலங்கை அரசும், சில சர்வதேச சக்திகளினாலும் பரப்பப்பட்ட மாறுபட்ட தவறான தகவல்களை எமது இயக்கம் முற்றாக மறுக்கின்றது.தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் மிகுந்த நலமுடனும் பாதுகாப்புடனும் உள்ளார்.
தேசியத் தலைவர் பற்றிய தவறான செய்திகளுக்கு எமது மக்கள் செவிசாய்க்காமல் எமது விடுதலைப் போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வுக்கு வீறுடன் களம் அமைக்குமாறு வேண்டப்படுகின்றனர்.
அதோடு தேசியத் தலைவர் அவர்கள் வெகுவிரைவில் மக்கள் முன் தோன்றி உரிய நேரத்தில் உரை நிகழ்த்துவார்.சர்வதேச ஒழுங்குகளுக்கு ஏற்ப எமது மக்களின் தற்போதைய நிலை, இலங்கை அரசின் நோக்கம் போன்றவற்றை கருத்தில் கொண்ட எமது தேசியத் தலைவர் விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வை புதிய வடிவில் நெறிப்படுத்தியுள்ளார்.
எமது தாயக விடுதலைப் போராட்ட வரலாற்றில் பாரிய இழப்புக்களை எமது மக்களுடன் நாம் சந்தித்துள்ளோம்.இழப்புக்கள் என்பது எமக்கும் எமது மக்களுக்கும் புதியவைகள் அல்ல.சிங்கள அரசின் சிந்தனைகளைத் தாண்டி எமது விடுதலைப் போராட்டம் புதிய வடிவம் பெற்று வீறுடன் எழுந்து நிற்கின்றது.
சிங்கள பேரினவாத அரசு எமத மக்களின் சுயநிர்ணய உரிமைகளுக்கு மதிப்பளித்து எமது மக்களுக்கு சரியான தீர்வு திட்டத்தை முன்வைக்காத வரை சிங்கள பேரினவாதற்திற்கு எதிராக எமது விடுதலைப்போர் எமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தலைமையில் மாறுபட்ட வடிவங்களுடன் தொடர்வதுடன்.
எமது மக்களை ஏமாற்ற நினைக்கும் எந்த சக்தியினையும் நாம் அனுமதிக்கப்போவதில்லை என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.
புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்
ச.தமிழ்மாறன்
செய்தி தொடர்பாளர்
தமிழீழ விடுதலைப்புலிகள்தமிழீழம் .

Friday, January 15, 2010

ராஜபக்சேவின் கள்ளக் காதலி!


இலங்கை அதிபர் தேர்தல் விறுவிறுப்பாகியிருக்கும் சூழலில்,மகிந்த ராஜபக்சேவின் ரகசிய காதலி பற்றி ராஜபக்சேவின் சுதந்திரா கட்சியில் பரபரப்பாக கிசுகிசுக்கப்படுகிறது. ராஜபக்சேவின் இந்த ரகசிய உறவுகள், அவரது மனைவி ஷிராந்தி ராஜபக்சேவிற்கு தெரியவர...
அந்த ரகசிய காதலிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது.சுதந்திரா கட்சியில் பரபரப்பாகியிருக்கும் இந்த விவகாரம் குறித்து அக்கட்சி வட்டாரங்களிடம் பேசியபோது,
’’ ""போரின் வெற்றிக்கு பிறகு ராஜ பக்சேவை போற்றிப் புகழ்ந்துரைக்கும் வகையில் "வணக்கம் மாமன்னரே'’என்கிற பாடல் எழுதப்பட்டது.இந்த பாடலை பிரபல சிங்கள பாடகி சஹோலிகமகே பாடினார். இந்த பாடல் தொடர்பாக ’அலரி மாளிகை’ (அதிபர் மாளிகை)க்கு சஹோலிகமகே வந்து போக வேண்டியிருந்தது. அப்போது ராஜபக்சேவையும் சந்திக்க நேர்ந்தது பாடகிக்கு.பாடகியின் அழகிலும் குரலிலும் மயங்கினார் ராஜபக்சே.
பாடகியின் நட்பை’விரும்பியுள்ளார். ராஜ பக்சேவின் விருப்பத்தை அறிந்ததும் பாடகியோடு ‘புதிய சிநேகத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். பாடல் உருவாகும் பணி முடிந்துவிட்ட பிறகும் பாடகியுடனான அந்த ‘சிநேகிதம்’ துண்டிக்கப்படவில்லை.
மாறாக சிநேகத்தை இறுக்கமாக்கிக் கொண்டிருக்கிறார் ராஜபக்சே.இந்த விவகாரம் ராஜபக்சேவின் மனைவி ஷிராந்தி ராஜபக்சேவிற்கு தெரியவர,அதிர்ச்சி அடைந்தவர்... இது குறித்து ரகசியமாக விசாரித்திருக்கிறார். அப்போது பாடகியுடனான ரகசிய உறவுகள் உண்மைதான் என்று சொல்லப் பட்டிருக்கிறது.
அத்துடன், தனது பெர்சனல் மொபைல்ஃபோனிலிருந்து தினமும் பாடகியுடன் அதிக நேரம் ராஜபக்சே பேசியிருக்கும் விவ ரங்களையும் ஷிராந் தியே கண்டுபிடித்திருக் கிறார்.இது பற்றி ராஜபக்சேவிடம் பேச விரும்பாத ஷிராந்தி... ராஜபக்சேவின் சகோதரரும் இலங்கையின் பாதுகாப்புத்துறை செயலாளருமான கோத்தபாய ராஜபக்சேவிடம் முறையிட்டுள்ளார். உடனே இந்த பிரச்சினையை முளையிலேயே ரகசியமாக கிள்ளியெறிய வேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
அதனடிப்படையில் பாதுகாப்புத் துறையில் உள்ள தனது நம்பிக்கைக்குரிய 2 அதிகாரிகளிடம் விஷயத்தை கூறியிருக்கிறார் கோத்தபாய.உடனே அந்த அதிகாரிகள் பாடகியை தொடர்புகொண்டு,’"ஜனாதிபதியுடனான தொடர்பை துண்டித்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில்...
நீங்கள் அதிகம் சங்கடப்பட நேரிடும்'’என்று எச்சரித்துள்ளனர். இந்த எச்சரிக்கையை அறிந்து ஆத்திரமடைந்த ராஜபக்சே, பாடகியை அச்சுறுத்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் கோபப்பட்டுள்ளார். அதேசமயம் பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் எச்சரிக்கையால் பயந்துபோன பாடகியோ தற்போது தலைமறை வாகிவிட்டார்'' என்று விவரிக்கின்றனர்.இதற்கிடையே, தேர்தல் அரசியலுக்காக பாடகி சஹோலியை வைத்து ’"இளைஞர்களின் எதிர்காலம்' என்கிற விளம் பரப்படத்தை தயாரிக்கத் திட்ட மிட்டிருந்தார் ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே.
பாடகியுடனான தனது கணவரின் ரகசிய உறவுகளை அறிந்திருந்த ஷிராந்தி, விளம்பரப்படம் தொடர்பாக பாடகியுடன் இருக்கும் தொடர்புகளை துண்டித்துக்கொள்ளுமாறு மகனுக்கு கட்டளை பிறப்பித்திருப்பதாகவும் கொழும்பில் தகவல்கள் பரவிக் கிடக்கின்றன.
ராஜபக்சேவின் இந்த ரகசிய சினேகிதம், இலங் கை அரசியல் மேல்மட்டத்தில் சத்தமில்லாமல் அலையடித்துக் கொண் டிருக்கிறது.

சன்: சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதை

வேட்டைக்காரன் படம் சரியில்லை என்பது தெரிந்த விசயம். சன் டிவியின் விளம்பரத்தால் அது கொஞ்சம் மறைந்து போனது. விளம்பரத்தால் ஓரளவு கலெக்‌ஷன் ஆகிக்கொண்டிருந்தது.
இந்த நேரத்தில் சன் பிக்சர்ஸ், படத்தை ஓட வைப்பதற்கு ஏவி.எம். பாணியை கையாண்டதுதான் சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதையாகிவிட்டது.
வேட்டைக்காரன் படத்தை தயாரித்தது ஏவி.எம்.தான். பொதுவாக ஏவி.எம். தயாரித்த படங்கள் ஓடுவதற்கு அந்நிறுவனம் பல பரிசு போட்டிகளை அறிவிப்பது வழக்கம். இந்த போட்டிகளில் முக்கிய நட்சத்திரமாக பெரும்பாலும் பங்கேற்று பரிசு அளித்தது நடிகை மனோரமா.
இப்படி பரிசு போட்டி அறிவிப்புகள் மக்கள் மத்தியில் ‘’ஆஹா அப்ப படம் ஓடலையா’’ என்ற கமெண்ட்டை கிளம்பும். வேட்டைக்காரனிலும் அதுதான் நடந்திருக்கிறது. வேட்டைக்காரன் படத்திலிருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிப்போருக்கு 25 ஆயிரம் பரிசு என்ற விளம்பரம் வந்ததுமே வேட்டைக்காரன் படம் பார்க்காதவர்களும், அப்படம் பற்றி கேள்விப்படாதவர்களும், ‘’ஏன் வேட்டைக்காரன் படம் நல்லாயில்லையா? படம் ஓடலையா? இப்படி போட்டியெல்லாம் வைக்கிறாங்களே?’’என்ற கேள்வியை எழுப்பிவிட்டார்கள்.
அப்புறமென்ன, தியேட்டர்களில்.......!(சொல்ல வேண்டுமா என்ன..தெரிந்த விசயம்தானே)

Thursday, January 14, 2010

"தம்பி உயிரோடு நலமாக இருக்கிறான்: என்னை வந்து பார்ப்பதாக சொல்லிச்சென்றான்"

"தம்பி உயிரோட நலமாக இருக்கிறான்.
அவன் என்னை சந்திப்பதாக சொல்லியே சென்றான்" -
என்று தேசிய தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மா தெரிவித்துள்ளார் என விடுதலை சிறுத்தைகள் அணி தலைவர் தொல் திருமாவளவன் விகடனுக்குத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழகத்திலிருந்து வெளிவரும் ஆனந்தவிகடன் சஞ்சிகைக்கு திருமாவளவன் வழங்கியுள்ள விரிவான செவ்வி வருமாறு:-
தமிழகம் திரும்பியதும் கனடாவில் வசிக்கும் பிரபாகரனின் சகோதரியான விநோதினிக்கு ஒரு நண்பர் மூலம் தகவல் சொல்லிவிட்டு, விசா எடுப்பதற்கான வேலைகளில் தீவிரமானேன்.
அதற்குள்ளே என் கனவுத் தாழி உடைந்துபோய் விட்டது.கடந்த ஆறாம் தேதி இரவு அய்யா வேலுப்பிள்ளை இறந்ததாகச் செய்தி வந்தது. ஒரு மாவீரனின் தந்தையை மீட்கவும் காப்பாற்றவும் முடியாத கையறு நிலையில் துடித்தேன். அவசரகதியில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவாஜிலிங்கம், செல்வம் அடைக்கல நாதன், ஆகியோரிடம் பேசி, 'வேலுப்பிள்ளையின் இறுதி அஞ்சலி நிகழ்வில் நான் கலந்துகொள்ள வேண்டும்.
இலங்கை அரசிடம் பேசி ஏ-9 பாதையால் செல்ல ஏற்பாடு செய்யுங்கள்' எனச் சொன்னேன். ஒருவழியாக அனுமதி கிடைக்க, எட்டாம் தேதி இலங்கைக்கு பயணமானேன். வேலுப்பிள்ளைக்கு இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு இட்டிப்பான மன பாரத்தோடு திரும்பி இருக்கிறேன்!'' என்ற திருமாவளவனிடம் நம் கேள்விகளை அடுக்கினோம்.''இலங்கை போய் இறங்கியவுடன் முதலில் எங்கு போனீர்கள்?''''எம்.பி-யான செல்வம் அடைக்கலநாதன்தான் என்னை அழைக்க வந்திருந்தார். கொழும்பில் இருந்து வவுனியா 280 கிலோமீட்டர் தூரம்.
ஒன்பதாம் தேதி விடியற்காலை மூன்று மணிக்கு செல்வம் அடைக்கலநாதன், அரியனேந்திரன், தோமஸ் வில்லியம் ஆகிய எம்.பி-க்களோடு நானும் தமிழக வழக்கறிஞர்களான சந்திரசேகர், பிரபு ஆகியோரும் புறப்பட்டோம். வவுனியாவில் உள்ள 'ஸ்வர்கா' என்ற ஹோட்டலில் வேலுப்பிள்ளை அவர்களின் உடலை ராணுவப் பாதுகாப்போடு வைத்திருந்தார்கள். அங்கே பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாவும் இருந்தார்.
முதலில் அவரைத்தான் பார்த்தோம். அங்கு வரும் வரை பார்வதி அம்மாவுக்கு தன் கணவர் இறந்தது தெரியவில்லை. முதுமையும் வேதனையும் அவரை ரொம்பவே சுகவீனமாக்கி இருந்தது.அந்தத் தாயைப் பார்த்ததுமே என் கண்கள் பொங்கி நிறைந்துவிட்டன.
அவர்களை நெருங்கி என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினேன். ''ஐயா...'' என வேலுப்பிள்ளை குறித்து நான் வாய் திறந்ததுமே, ''அவர் சாமி கும்பிடப் போயிருக்கார், அல்லவா... சீக்கிரமே வந்திடுவார்...'' எனச் சொன்னார். அவரிடம் அந்த நிமிடம் வரை அப்படித்தான் சொல்லி வைத்திருக்கிறார்கள் என்பது அப்போதுதான் எனக்குப் புரிந்தது.''அம்மா... நீங்கள் என்னோடு இந்தியாவுக்கு வந்து விடுகிறீர்களா?'' எனக் கேட்டேன். ''ஐயா வந்ததும் அவரை கேட்டுவிட்டுச் சொல்கிறேன்...'' என்றார்.
கணவர் மீது அவர் வைத்திருந்த மரியாதையைப் பார்த்து என் கண்கள் குளமாகிவிட்டது!''''வேலுப்பிள்ளை சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக ஒரு கருத்து இருக்கிறதே..?''''தமிழ் மக்கள் அடைக்கப்பட்டிருக்கும் வழக்கமான அகதிகள் முகாம்களில் மேதகு பிரபாகரனின் பெற்றோர் தங்க வைக்கப்படவில்லை. ராணுவ முகாமான பனாகொடா முகாமில்தான் அய்யா வேலுப்பிள்ளையும் பார்வதி அம்மாவும் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.சிலநாட்களாகவே அய்யா வேலுப்பிள்ளைக்கு உடல்நிலை சரியில்லையாம். உயர் ரத்த அழுத்தத்தால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார்.
அவரை வெளியே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், உள்ளுக்குள்ளேயே சிகிச்சை அளித்திருக்கிறார்கள். ஒரு மாதத்துக்கு முன்பு வரை வேலுப்பிள்ளையும் பார்வதி அம்மாளும் அருகருகேதான் வைக்கப்பட்டு இருந்தார்களாம். வேலுப்பிள்ளைக்கு சிகிச்சை அளிப்பதாகச் சொல்லி அவரை மட்டும் பிரித்து வேறெங்கேயோ தங்க வைத்திருக்கிறது ராணுவம்.கடந்த ஆறாம் தேதி இரவே வேலுப்பிள்ளை இறந்து விட்டாராம். அந்தத் தகவலை ராணுவத் தரப்பு அடுத்த நாள் காலையில்தான் வெளியிட்டிருக்கிறது. பிரபாகரனின் சகோதரியான விநோதினியின் வேண்டுகோளை ஏற்று, வேலுப்பிள்ளையின் உடலை சிவாஜிலிங்கம் எம்.பி-யிடம் ஒப்படைக்க ராணுவம் முடிவெடுத்தது.
வேலுப்பிள்ளை இறந்த தகவல் பார்வதி அம்மாளிடம் சொல்லப்பட, அவர் அதை நம்பாமல் அழத் தொடங்கிவிட்டார். ''எங்க ஐயா செத்திருக்க மாட்டார்...'' எனத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். உடல் நிலை சரியில்லாததால், அவர் இறந்து விட்டதாக ராணுவத்தினர் பார்வதி அம்மாவிடம் சொல்லி இருக்கின்றனர். அவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ராணுவத்தினர் ஏதோ செய்து விட்டதாகவே அவர் அஞ்சுவதாகத் தெரிகிறது. அய்யா வேலுப்பிள்ளை சித்திரவதை செய்யப்பட்டிருப்பாரோ என்கிற சந்தேகம் எனக்கும் உண்டு. ஆனால், அதை எப்படி உறுதிப்படுத்த முடியும்? முறையாக பிரேதப் பரிசோதனை செய்து, பாடம் பண்ணி, முகச் சவரம் செய்து, தலை வாரி, புது உடை உடுத்தி, வெண் பட்டுத் துணியால் போர்த்தி அவரை சவப்பெட்டிக்குள் வைத்திருந்தார்கள். அவருடைய நெற்றியையும் காலடிகளையும் தொட்டு வணங்கினேன்!
''''இறுதிச் சடங்குகள் எப்படி நடந்தன? அப்போது அங்கிருந்த தமிழ் மக்களின் மனநிலை எப்படி இருந்தது?
''''வல்வெட்டித்துறையில் உள்ள தீருவில் என்னும் பகுதியில் புலேந்திரன், குமரப்பா ஆகிய 12 பேருக்கான நினைவிட மைதானம் உள்ளது. அய்யா வேலுப்பிள்ளையின் உடல் அங்குதான் கொண்டு வரப்பட்டது. ஒன்றரை ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த சதுக்கத்தில், வேலுப்பிள்ளையின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
மக்கள் ஏதோவொரு பயத்தோடு தூரத்தில் நின்றே வேலுப்பிள்ளையின் உடலை பார்த்தார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.பி-க்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதி ராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், பத்மினி சிதம்பரநாதன், ஸ்ரீகாந்தா, வினோ உள்ளிட்டோர் அங்கு வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.சைவ மரபுப்படி அய்யா வேலுப்பிள்ளைக்கு அனைத்து சடங்குகளும் நடக்கத் தொடங்கின.
அவருடைய உடம்பு பாடம் செய்யப்பட்டிருந்ததால், அதன் மேல் தண்ணீர் பட்டுவிடாமல் அவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. வாழைப்பழம், தயிர், வெல்லம், பால் என பலவித அபிஷேகங்களும் அவரது உடலுக்கு அருகே செய்யப்பட்டது. ஒருபுறம் தேவாரம், திருவாசகம் ஓதப்பட்டது.வேலுப்பிள்ளையின் மைத்துனர்களில் ஒருவரான (வேலுப்பிள்ளையின் தாத்தா வழி உறவான) ராமசாமி என்பவர்தான் இறுதிச் சடங்குகளை முன்னின்று செய்தார்.
ராணுவக் கண்காணிப்பு இருப்பது தெரிந்தும் வேலுப்பிள்ளையின் உடலை நோக்கி கண்ணீரோடு வந்த ஒரு தாய், ''மாவீரனை பெத்துக் கொடுத்த ராசாவே... என்னிக்கு இருந்தாலும் நாம நாடு அடையாம விடமாட்டோம்யா... நீங்கள் நிம்மதியாப் போய் வாருங்கோ!'' எனக் கதறினார். கொந்தளிப்பைக் கட்டுப்படுத்திக் கொண்டவர்களாக தமிழ் இளைஞர்கள் பலரும் இறுக்கத்தோடு அங்கே நின்று கொண்டிருந்தார்கள். சில இளைஞர்கள் துக்கத்தை வெளிக்காட்டும் விதமாக வாண வெடிகளைக் கொளுத்தினார்கள். ஒன்பதாம் தேதி காலையில் நிறைய இளைஞர்கள் தைரியமாக வேலுப்பிள்ளையின் உடலைப் பார்வையிட வந்தார்கள்.
அவர்கள் உணர்ச்சி வேகத்தோடு, ''கண்டிப்பாக தமிழீழம் மலரும். தலைவரின் கனவு நனவாகும்!'' என சத்தமிட்டார்கள். காலை 10.40 மணிக்கு அந்த சதுக்கத்திலிருந்து, மூத்த மகள் ஜெகதீஸ்வரியின் வீட்டுக்கு வேலுப்பிள்ளையின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கே பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதார்கள்.
பார்வதி அம்மாள் அடக்க முடியாத வேதனையில் கணவரின் சடலத்துக்கு அருகே அமர்ந்து குமுறிக் குமுறி அழுது கொண்டேயிருந்தார். 'என்னைய விட்டுட்டு எங்கேயும் போக மாட்டீங்களே... ஏன்யா எங்கிட்ட சொல்லாம போனீங்க..?' என அங்கே இருந்த நான்கு மணி நேரமும் அரற்றியபடியே இருந்தார். அவரைத் தேற்றுவதற்குள் தெம்பற்றுப் போய் நானும் குலுங்கத் தொடங்கிவிட்டேன்!
''''பிரபாகரனின் தாயாரோடு நீங்கள் நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தீர்களாமே... தன் மகன் பிரபாகரன் குறித்து அவர் ஏதாவது சொன்னாரா?''''தலைவர் பிரபாகரன் குறித்து நான் கேட்டபோது, 'அவர் பத்திரமா இருக்கார்...' என்றே பார்வதி அம்மா திரும்பத் திரும்ப சொன்னார். போர்க் காலங்களில் பார்வதி அம்மா எங்கிருந்தார், யார் யாரெல்லாம் அவரை சந்தித்தனர் என்பது உள்ளிட்ட தகவல்களை என்னிடம் பகிர்ந்து கொண்டார். வயதான நிலையிலும் மிகுந்த கவனத்தோடு பார்த்துப் பார்த்துப் பேசினார். 'தலைவர் பிரபாகரன் உங்களைப் பார்த்தாரா' என நான் கேட்டபோது,
'தம்பி உயிரோடு நலமாக இருக்கிறார். என்னை கனடாவில் வந்து சந்திப்பதாகச் சொல்லிச் சென்றார்' என்றார். அவருடைய உறவினர்கள் சிலருடைய பெயரைச் சொல்லி நான் சில விஷயங்கள் கேட்டபோதும், அவர்களின் பெயர்களை மிகத் திருத்தமாக, நல்ல சுவாதீனமாகவே சொன்னார். தற்போது சிவாஜிலிங்கத்தின் கவனிப்பில் இருக்கும் பார்வதி அம்மாவை கனடாவுக்கோ இந்தியாவுக்கோ அழைத்துக்கொள்ள அடுத்தகட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்!'' என்ற திருமாவளவன், அங்கே எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

Wednesday, January 13, 2010

என் சாமி கோயிலுக்கு போயிருக்கிறார் -பிரபாகரனின் அம்மா!

உலகத்தில் தமிழர்கள் இருக்கும் நாடுகளிலெல்லாம் பிரபாகரனின் தந்தைக்கு கண்ணீர் அஞ்சலிக் கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர் தமிழர்கள். பிரபாகரனின் பிறந்த ஊரான வல்வெட்டித்துறைக்கு வேலுப்பிள்ளையின் உடல் கொண்டு செல்லப்பட்டு மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மக்களின் அஞ்சலிக்குப் பிறகு வேலுப்பிள்ளையின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை விடுதலை செய்திருந்தது சிங்கள அரசு.
விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், வழக்கறிஞர்கள் சந்திரசேகரன், பழனி ஆகியோர் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள தமிழகத்திலிருந்து சென்றிருந்தனர்.இறுதிச் சடங்கில் கலந்துகொண்டிருந்த திருமாவளவனை தொடர்பு கொண்டு பேசினோம்.
நம்மிடம் பேசிய திருமா, ‘""கடந்த 6-ந்தேதி மரண மடைந்திருக் கிறார் அய்யா வேலுப்பிள்ளை. அதனை உடனடியாக சிங்கள அரசு தெரிவிக்க வில்லை. மறுநாள் 7-ந்தேதி மதியத்திற்கு மேல்தான் அறிவித்தனர்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவாஜி லிங்கத்திடமும் செல்வம் அடைக்கல நாதனிடமும் வேலுப்பிள்ளையின் உடலை சிங்கள அரசு ஒப்படைத்தது.
பிரபாகரனின் தந்தையின் உடலை தக்க மரியாதையுடன் அவர்கள் வல்வெட்டித்துறைக்கு கொண்டு சென்றனர். மற்றொரு வாகனத்தில் பார்வதி அம்மாள் அழைத்து வரப்பட்டார்.
பார்வதி அம்மாள் குளிப்பதற்காக வவுனியாவில் உள்ள ஒரு ஹோட்டலில் உடல் சில மணி நேரங்கள் இருக்க வேண்டியிருந்தது. 8-ந்தேதி இரவு சென்னையிலிருந்து புறப்பட்ட நாங்கள், வவுனியாவில் அவர்களுடன் இணைந்து கொண்டோம்.அங்கேயே அய்யா வேலுப்பிள்ளைக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அறையில் இருந்த பார்வதி அம்மாவிற்கு ஆறுதல் சொன்னேன். வயதின் முதிர்ச்சிக் காரணமாக மிகவும் தளர்ந்து போயிருந்தார். என்னைப்பற்றி சொல்லிய போது கேள்விப்பட்டிருப்பதாகச் சொன்னார் அம்மா. அய்யா மரணமடைந்திருப்பதை வல்வெட்டித்துறைக்கு சென்ற பிறகு சொல்லிக் கொள்ளலாம் என்று முடிவெடுக்கப்பட்டிருந்ததால் அவரிடம் யாரும் இறப்பு குறித்துப் பேசவில்லை. ஆனால் பார்வதி அம்மாள்,
"என் சாமி (அய்யா) கோயிலுக்கு போயிருக்கிறார். பின்னால வருவார்' என்றே சொல்லிக்கொண்டிருந் தார்.வவுனியாவிலிருந்து வல்வெட்டித் துறைக்கு புறப்பட்டபோது அவர்களோடு இணைந்து கொண்டேன். 9-ந்தேதி மாலை வல்வெட்டித்துறையைச் சென்றடைந்தோம்.
புலேந்திரன்குமரப்பா நினைவு சதுக்கத்தில் மக்களின் அஞ்சலிக்காக உடல் வைக்கப் பட்டது. வல்வெட்டித்துறைக்கு வந்ததும்தான் பார்வதி அம்மாளிடம் அய்யா மரணமடைந்திருப்பதையே சொன்னார்கள். அதை கேட்டு கதறித் துடித்தார் பார்வதி அம்மாள். அப்போதுதான் எனக்கு ஒரு உண்மை புரிந்தது. அதாவது, ராணுவ முகாமில் கடைசி நாட்களில் வேலுப் பிள்ளையையும் பார்வதி அம்மாளையும் தனித்தனியே பிரித்து வைத்திருக்கிறார்கள் என்கிற உண்மை. அதனால்தான் வேலுப்பிள்ளை மரணமடைந்த சம்பவம் அவருக்கு தெரிந்திருக்கவே இல்லை.
வல்வெட்டித்துறைக்கு வந்ததும் சிவாஜிலிங்கம் சொன்னபிறகுதான் தெரிந்தது.வல்வெட்டித்துறையில் எங்குதிரும்பினாலும் 100 அடிக்கு 2 ராணுவத்தினர் துப்பாக்கிகளை ஏந்தி கொண்டு நின்றிருந்தனர். ராணுவம் நிற்கும் தோரனையே மக்களை மிரட்டுகிற தொனியில்தான் இருந்தது. இதனால் அந்த பகுதி மக்களிடம் சொல்லமுடியாத பயம் சூழ்ந்திருந்தது. அதையும் மீறி ஏராளமானோர் அஞ்சலி செய்ய திரண்டு வந்திருந்தனர். இதில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் தலைமையில் தமிழ் எம்.பி.கள் பலரும் வந்திருந்து கண்ணீர் அஞ்சலி செய்தனர். தேசியத்தலைவர் பிரபாகரன் பிறந்து வளர்ந்த வீடு சிதிலமடைந்திருந்தது. பல ஆண்டுகளாக கவனிப்பாரற்று இருந்ததால் அந்த வீடு சிதைந்திருந்தது. மக்கள் திரண்டு அந்த வீட்டை துப்புரவு செய்தனர்.
அதேபோல பிரபாகரனின் அக்காள் ஜெகதீஸ்வரியின் வீடும் சிதைந்திருந்தது. அந்த வீட்டையும் சுத்தப்படுத்தினர் மக்கள்.10-ந்தேதி ஜெகதீஸ்வரியின் வீட்டிற்கு வேலுப் பிள்ளையின் உடலை கொண்டு சென்று அங்கு சைவ முறைப்படி சில சடங்குகள் நடந்தன. சைவ மதத்தில் வேலுப்பிள்ளை தீட்சைப் பெற்றிருக்கிறார். அதனால் சைவ கடவுளான சிவபெருமானுக்கு எப்படி அபிஷேகம் செய்யப்படுமோ அந்த முறைகளில் சடங்குகள் நடந்தன. இந்த சடங்குகள் நடக்கிறபோது தேவாரம், திருவாசகத்தின் பாடல்களை பாடினர்.வேலுப்பிள்ளையின் உடல் "பாடம்' செய்யப்பட்டு சவப்பெட்டியில் வைத்திருந்தனர். முகத்தை ஷேவ் செய்து உடலுக்கு புதிய உடையை உடுத்தியிருந்தனர்.
பாடம் செய்யப்பட்ட உடல் என்பதால் உடலை மீண்டும் ஒருமுறை தண்ணீரால் சுத்தம் செய்வது சரியாக இருக்காது என்பதால் மிகப்பெரிய நிலைக்கண்ணாடி கொண்டு வரப்பட்டு சவப்பெட்டிக்கு முன்னால் நிறுத்தப்பட்டது. கண்ணாடியில் தெரிந்த உடலை சைவ சித்தாந்தப்படி தண்ணீர் விட்டு கழுவினர். தனது கணவர் வேலுப் பிள்ளையின் தலைமாட்டிலேயே அமர்ந்துகொண்டு கணவரின் முகத்தையே கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார் பார்வதி அம்மாள். அவரது கண்களில் இருந்து தாரைதாரையாக கண்ணீர் வழிந்தோடிக்கொண்டிருந்தது. எல்லாவித சடங்குகளும் முடிந்ததும் பார்வதி அம்மாளின் கழுத்திலிருந்து தாலியை அகற்றினர். ஓ..வென்று கதறினார்.
நெஞ்சே வெடித்து விடும் போலிருந்தது எங்களுக்கு. பார்வதி அம்மாளின் கதறலுக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் மக்களும் வேலுப் பிள்ளையின் உறவினர்களும் கதறினர்.
அதன்பிறகு இரங்கல் உரை. தமிழகத்திலிருந்த வைகோ, பழ.நெடுமாறன், சீமான் ஆகியோரை சிவாஜிலிங்கம் தொடர்பு கொள்ள அவர்கள் வாசித்த இரங்கல் உரைமைக்கில் ஒலிபரப்பப்பட்டது. அதன் பிறகு நான், சிவாஜிலிங்கம், கஜேந்திரன் ஆகியோர் இரங்கல் உரை வாசித்தோம். இதனையடுத்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஊரணிக்கு உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது.
வழி நெடுகிலும் மக்கள் தங்கள் வீடுகளின் இருபுறமும் நின்றுகொண்டு மலர் தூவி வணங்கினர். ஊர்வலத்தில் வந்த இளைஞர்கள் "மாவீரனை இந்த மண்ணுக்கு ஈந்த மாமனிதரே... உங்கள் ஆன்மா அமைதி கொள்ளட்டும். அந்த மாவீரனின் (பிரபாகரன்) கனவு ஒரு நாள் நிறைவேறும். தமிழீழம் கிடைத்தே தீரும்....' என்று வீரமாக கோஷமிட்டுக்கொண்டே வந்தனர். ஊரணியில் வேலுப்பிள்ளையின் உடல் எரியூட்டப்பட்டது.
அவரது உடலுக்கு வேலுப்பிள்ளையின் உறவினர் ராமசாமி தீ மூட்டினார்.ராமசாமிக்குத்தான் அந்த உரிமையை தரவேண்டும் என்று கனடாவில் உள்ள பிரபாகரனின் அக்காள் வினோதினி சொல்லியிருந்ததால் ராமசாமி கொள்ளி வைத்தார். வேலுப்பிள்ளையின் பிறந்த நாள் ஜனவரி 10. அதே நாளில் அவரது உடலும் தகனம் செய்யப்பட்டது'' என்று அந்த துயர நினைவுகளை பகிர்ந்து கொண்டார் திருமா.

நக்கீரன் சொன்னது! கேட்காத மக்கள் கண்ணீர்!


அதிர்ச்சியோ ஆச்சர்யமோ படுவதற்கு ஒன்றுமில்லை.
"ஹெலிகாப்டர்ல இறங்கி வந்து... இப்படி யும் மோசடி' என்று ஜெ.பி.ஜே. சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவனத் தின் தில்லுமுல்லுகளையும்...
ஜெகஜ் ஜால ஜெ.பி.ஜெ.வான இதன் உரிமையாளர் ஜஸ்டின் தேவ தாஸின் ஃப்ராடு தனத்தையும் கடந்த 08-10-08 நக்கீரன் இத ழிலேயே அம்பலப்படுத்தியிருந் தோம். அப்போதே அந்நிறுவனத் தில் பணம் போட்டு ஏமாந்த பலரும் போலீஸில் புகார் கொடுக்க... பணத்துக்கு துணை போகும் அதிகாரிகளால் தப்பித்துவிட்டார் ஜெ.பி.ஜெ.அதற்குப் பிறகாவது உஷா ரானார்களா மக்கள்? ம்ஹூம்... ஜெ.பி.ஜெ.வின் கவர்ச்சிகரமான விளம்பரங்களில் வாய் பிளந்து முன்பைவிட அதிகமாகவே பணம் கட்டி நிலத் திற்காக காத்திருந்தவர்களின் வயிற்றில் இடியாய் இறங்கி கண்ணீர் விட வைத்திருக்கிறது இந்த செய்தி.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக துறைமுகப்பகுதி தலைவர் முகமது ஹாலித் ""ரெண்டு லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் பணம் கட் டின பாத்திமாவுக்கு நிலம் கொடுக்காம இழுத்தடிக் கிறதோட... எக்ஸ்ட்ராவும் பணம் கேட்டு மிரட்டுறதா நம்மக்கிட்ட வந்து சொன்னதும்... சென்னை அண்ணாநகர் 18-வது மெயின் ரோட்டுல இருக்குற ஜெ.பி.ஜெ.வின் தலைமை ஆபீஸுக்குப் போனோம். அங்க போனபிறகுதான் ஏகப்பட்ட பேர் ஏமாந்து போய்...
அடியாட்களால் மிரட்டப்படுறதும் தெரிய வந்தது. அதுக்கப்புறம்தான் எல்லாரையும் கூட்டிட்டுப் போய் புகார் கொடுத்தோம். சினிமாவும், சீரியலும் பார்க்குற நேரத்துக்கு நக்கீரன் மாதிரியான விழிப்புணர்வு பத்திரிகைகளை படிச்சாலே ஏமாறாம இருக்கலாம்'' என்கிறார் அவர்.
""தமிழ்நாடு மட்டுமல்ல ஜெ.பி.ஜெ.வின் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி என 120 கிளைகளும், 40 அலுவலகங்களும், 60 சேவை(?) மையங்களும் உள்ளன.
கர்நாடகாவில் மட்டுமே ரூ.7 கோடி அளவுக்கு பணம் வசூலித்து மோசடி செஞ்சுருக்காரு. விஜயக்குமார், மீனா, பா.விஜய்னு வெச்சு விளம்பரங்கள் பண்ணினது மட்டுமில்லாம... சினிமா, சீரியல் முன்னணி நடிகைகளிடமும் ஜெகஜ்ஜாலமாக இருக்கும் கில்லாடி இவர்'' என்கிறார்கள் ஜெ.பி.ஜெ.வை பற்றி நன்கு அறிந்தவர்களே.சி.பி.சி.ஐ.டி.யிலிருந்து பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டிருக்கிறது இந்த வழக்கு. ஐ.ஜி.விஜயகுமாரோ, ""புகார்கள் குவிந்துகொண்டே இருக்கின்றன. நாலரை கோடி ரூபாய் மோசடி செய்ததாக பெங்களூரில் கைது செய்யப்பட்ட ஜெ.பி.ஜெ.. நிறுவனத்தின் உரிமையாளர் ஜஸ்டின் தேவதாஸ் மீது 420 பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செஞ்சுருக்கோம். முழுமையா விசாரித்த பிறகுதான் பல உண்மைகள் வெளிவரும்'' என்கிறார்.
"ஏமாறுகிறவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்' என்ற ஓல்டு டயலாக்கை விட்டுக் கொண்டிருக்காமல் அட்லீஸ்ட் ஜெ.பி.ஜெ.வுக்கு துணை போனவர்களையும் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும்.

நயன்-பிரபுதேவா! கும்பகோணம் கும்மாளம்!

சென்னை புத்தகக் காட்சியில், நக்கீரன் ஸ்டாலில் இருந்து வெளியே வந்த காவேரியின் கரங்களில் இருந்த புத்தகங்களை வாங்கிப் பார்த்தார் மெரீனா.
""இன்னாம்மே... பிரபாகரன் பேசுகிறார்... பிரபாகரன் சிந்தனைகள்... பிரபாகரன் நூறு... வீரம் விளைந்த ஈழம்னு ஒரே பிரபாகரன் கலெக்ஷனா கீது?''""என் டேஸ்ட் இப்படி.
நீ கவிதைப் புத்தகம் வாங்கினியா... இது யாருடி உன் கூட புதுசா ஒரு குட்டீஸ்? கவிதை மாதிரி அழகழகா?''""இவ பேர்கூட கவிதா தாண்டி... என் கிளாஸ் மெட்டோட கவிதைடி...
இவளை எழுதின கவிஞனையும் எழுதப்பட்ட காகிதத்தையும் காட்டவா? அதோ பார்... அந்த ஸ்டால்ல... நடனப் புயல் பிரபுதேவாவும் நயன்தாராவும் மாதிரி... அவங்கதான் இந்த கவிதையைப் பெத்தவங்க!''.""நிஜமாவே பிரபுதேவா-நயன்தாரா பத்தின ஒரு கும்பகோணம் சீக்ரெட் நியூஸ் எங்கிட்ட இருக்குடி... வாங்க வெளில...
பட்டிமன்றம் ஆரம்பிக்க இன்னும் நேரம் இருக்கு... அங்கே போய் உக்கார்ந்து சொல்றேன்...!''.""சொல்லுங்க காவேரி... சொல்றேன்னு கூட்டி வந்துட்டு... மேடையைப் பாத்துட்டு இருக்கீங்களே!''""ம்... மெரீனாவும் பெண்ணையும் வரட்டும்னுதான் இருந்தேன்... சொல்றேன்.
"சிவா மனசில சக்தி' படம் டைரக்டர் ராஜேஷ்... "பாஸ் என்ற பாஸ்கரன்'னு ஒரு படம் எடுக்கிறாரு... திருவாடுதுறை, திருவிடைமருதூர், திருச்சி, தஞ்சாவூர் ஏரியாக்கள்ல படம் சூட்டிங். படத்தோட ஹீரோயின் நயன்தாரா வுக்கும் ஹீரோ ஆர்யாவுக்கும் கும்ப கோணம் ஹோட்டல் ரிவர் சைட் ரிசார்ட்ல ரூம் போட்டுக் கொடுத்திருந்தாங்க...''""ஒரு நிமிஷம்... கன்டினீயூட்டிய மறந்திராத... நீ சொல்லப் போற நியூஸ், நம்ம திண்ணைக் கச்சேரியை நக்கீரன் அட்டையில கவர் ஸ்டோரியா போட்றாமாதிரி இருக்கும்ல... ஏன்னா... இதுவரை நாம் கவர்ல வர்ற லைடி அதான்... இன்னக்காச்சும் உன் நயன்தாரா நியூசால நமக்கு பிரமோஷன் கிடைச்சா சரி... ஆமா, நயன்தாராவுக்கும் ஆர்யாவுக்கும் ரூம் போட்டுக் கொடுத்தாங்க... அப்புறம்?''.""அவங்க ரெண்டுபேருக்கும் தனித்தனி ரூம்... ஆர்யா அந்தப் படத்திலதான் ஹீரோ... நம்ம நியூஸ்ல இல்லை.
8 நாள் சூட்டிங் ஒழுங்கா போச்சு... அந்த எட்டுநாளும் கேமராவுக்கு முன்னால நிக்கிற நேரம் தவிர மற்ற நேரமெல்லாம், ஒரு காதில ஐபேடு ஒயர்... மறுகாதில செல்போன் ஒயர்... இன்ட்ரஸ்டா பாட்டுக் கேக்கிற மாதிரி செல்போன்ல சீரியஸா பேசிக்கினே இருந்தாராம் நயன்தாரா...!''.""பொறுமையைச் சோதிக்காம விஷயத்துக்கு வாங்கங்க!''.""கடைசி நாள் 23-ஆம் தேதி சூட்டிங் முடிஞ்சு ஹோட்டலுக்கு வந்த நயன்தாரா... அரைமணி நேரத் தில, ஹோட்டல் ரூம்ல இருந்து பிரபுதேவாவோட இறங்கி வந்து கார்ல ஏறிப் பறந்துட்டாரு... "பாஸ் கரன்' பட யூனிட்டே வாயைப் பொளந்திருக்கு. நாம இங்கேதானே இருக்கோம்... பிரபுதேவா எப்ப வந் தாருனு எல்லாருக்கும் ஷாக். அதே ஹோட்டல்லதான் ஆர்யா இருந்தார். "மாப்பிள்ளை' ரீமேக் படத்துக்காக வந்த நம்ம தனுஷ் தங்கியிருந்தார்.
இவங்களுக் கெல்லாம் நடனப் புயல் வந்தது பற்றி எதுவும் தெரி யலை. ஹோட்டல் பாய் ஒருத்தர் எனக்கிட்ட ரகசியமா சொன்னாரு... ரெண்டுநாள் முன்னயே வந்து... அந்த ரூமுக்குள்ளயே இருந்தாரு பிரபுதேவா... ஒரே கும்மாளம்தான். எனக்கே காலைலதான் தெரியும்னு... மறுநாள் சொன்னார். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில பிரபுதேவா-நயன்தாராவுக்கு பிரபுதேவா அப்பா சுந்தரம் மாஸ்டர்தான் வீடு பாத்திட்டு இருக்காராம்!''.
""யாருக்கும் தெரியாம எப்படி ரெண்டுநாள் அந்த ரூம்ல இருக்க முடியும்?''""ஸாரிடி... நயன்தாராவோட மேனேஜருக்கும் மேக்கப்மேனுக்கும் தெரியு மாம்டி... பப்ளிக்குக்கும் மீடியா வுக்கும் தெரியக் கூடாதுனு சீக்ரெட்டை மெயின் டைன் பண்ணிருப் பாங்கம்மே... சரி வுடுங்க... இதெல் லாம் சீக்ரெட் டாவே இருந்துட்டு போவட்டும்!''

Sunday, January 10, 2010

வரன் பார்க்க அரவாணிகள் தொடங்கியுள்ள இணையம்




அரவாணிகளும் பெண்கள்தான், மதிப்புக்குரிய பெண்கள். அவர்களுக்கும் திருமணம் செய்து, கணவருடன் வாழ வேண்டும், சமூகத்தில் அந்தஸ்துடன் உலவ வேண்டும் என்ற ஆசை இருக்கும்.


அப்படிப்பட்டவர்களின் ஆசையைப் பூர்த்தி செய்ய திருநங்கை கல்கி புதிய இணையதளம் ஒன்றைத் தொடங்கியுள்ளார். www.thirunangai.net என்ற பெயரில் கல்கி தொடங்கியுள்ள இந்த இணையதளம், அரவாணிகளுக்கு வரன் பார்க்கும் அருமையான வேலையை செய்கிறது.


கல்கி - பொள்ளாச்சியில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். தந்தை லாரி தொழிலில் ஈடுபட்டிருந்தார். 2 சகோதரிகள். கல்கி மட்டுமே வீட்டின் ஒரே ஆண் வாரிசு. கொடைக்கானலில் போர்டிங் பள்ளியில் சேர்ந்து படித்தார்.


சிறு வயதிலேயே தனது சகோதரிகளுடன் அதிக நேரத்தை செலவிட விரும்பாமல் ஆண்களுடனேயே செலவிட விரும்பினார். தனக்குள் ஏற்பட்ட மாற்றங்களை அவர் உணர ஆரம்பித்தார். மேலும், அழகான பெண்களை விட துணிச்சலான, உறுதியான பெண்கள்தான் இவரை அதிகம் கவர்ந்தனர்.


13 வயதில் இவரது மனதுக்குள் அலையடித்த உணர்வுகளின் போராட்டத்தை தாயார் கண்டுபிடித்தார். கவலை கொண்டார்.


பள்ளிப் படிப்பிலிருந்து ஒரு நாள் விலகி முழுமையான திருநங்கையாக தன்னை மாற்றிக் கொள்ள முடிவு செய்தார் கல்கி. 14 வயதில் அரவாணிகள் குடும்பத்தில் இணைந்தார். இன்று கல்கி, சகோதரி பவுண்டேஷன் அமைப்பின் நிறுவனர் - இயக்குநர்.இவர் உருவாக்கியுள்ள திருநங்கை.நெட் இணையதளம், அரவாணிகளுக்கு வரன் பார்த்துத் தரும் வேலையைத் தொடங்கியுள்ளது.வெளிநாடுகளில் அரவாணிகளுக்கு திருமணம் என்பது சர்வசாதாரண விஷயம்.


ஆனால் இந்தியாவில் இது மிக மிக கடினமான ஒன்றாக உள்ளது. குறிப்பாக அரவாணிகளுக்கு மாப்பிள்ளைகள் கிடைப்பது என்பதும், தேடுவதும் சாதாரண விஷயமல்ல. பல தடைகள், இடையூறுகள், சிக்கல்கள் குறுக்கே நிற்கின்றன.இதுவே கல்கி தனி இணையதளம் தொடங்க முக்கியக் காரணம். இதுகுறித்து கல்கி கூறுகையில், நிறைய ஆண்களுக்கு திருநங்கைகளுடன் பழக வேண்டும் என விருப்பம் உள்ளது. ஆனால் கல்யாணம் என்று வரும்போது மறுத்து விடுகிறார்கள்.


எங்களது சமூகத்தைச் சேர்ந்த திருநங்கைகளுக்கு நல்ல ஆண்களைக் கல்யாணம் செய்து குடும்பமாக வசிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. சமூகத்தில் கெளரவத்தோடு வாழ வேண்டும் என்பதே அவர்களின் ஆசை.சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ளவர்கள் அரவாணிகள். அப்படிப்பட்டவர்களுக்கான தளம்தான் இந்த திருநங்கை.நெட்.எங்களது இணையதளம் மூலம் வரன்களைத் தேடிக் கொள்ளலாம், நல்ல ஆண் துணைவர்களைத் தேடிக் கொள்ளலாம்.


எல்லோருக்கும் போலவே எங்களுக்கும் காதல் வரும். நல்ல கணவன் வேண்டும் என்ற ஆசையம் வரும். எங்களால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்றாலும், குழந்தைகளைத் தத்தெடுத்துக் கொண்டு அந்தக் குழந்தையுடனும், கணவருடனும் இயல்பான வாழ்க்கை வாழ முடியும் என்றார்.தற்போது இந்த இணையதளத்தில் சில அரவாணிகள் தங்களுக்கு வரன் தேவை என்று கோரி விண்ணப்பித்துள்ளனர். இந்த அரவாணிகளை கல்யாணம் செய்து கொள்ள விரும்பியும், துணைவிகளாக்கிக் கொள்ளவிரும்பியும், இந்தியா, ஐரோப்பா, அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்டவற்றிலிருந்து 200க்கும் மேற்பட்ட பதில்கள் வந்துள்ளனவாம்.அவர்களில் டாக்டர்கள், பொறியாளர்கள், பத்திரிக்கையாளர்கள், விஞ்ஞானிகள், ஆசிரியர்கள், தொழிலதிபர்களும் அடக்கமாம்.இருப்பினும் தீவிரப் பரிசீலனைக்குப் பிறகே வரன்கள் இறுதி செய்யப்படும் என்கிறார் கல்கி.அடுத்த ஆண்டு மார்ச் 8ம் தேதி (மகளிர் தினம்) அல்லது பிப்ரவரி 14ம் தேதி (காதலர் தினம்) ஆகிய ஏதாவது ஒரு நாளில் முதல் கல்யாணம் நடைபெறும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் கல்கி.இந்தியாவில் அரவாணிகள் அல்லது திருநங்கைகள் குறித்த பார்வை மாறி வருகிறது.


அரவாணிகளும் கூட மாறி வருகிறார்கள். பாலியல் தொழில், பிச்சை எடுப்பது உள்ளிட்டவற்றிலிருந்து மீண்டு வருகிறார்கள். இதில் இன்னும் ஒரு படி மேலே போய், சாதாரணப் பெண்களைப் போல திருநங்கைகளும், கணவன், குடும்பம் என்ற கட்டமைப்புக்கு மாறும் சூழல் தற்போது வந்துள்ளதாகவே கருதுகிறேன் என்கிறார் கல்கி.

வேலுப்பிள்ளை உடல் இன்று தகனம் - திருமாவளவன் நேரில் அஞ்சலி

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாரகனின் தந்தை வேலுப்பிள்ளையின் உடல் தகனம் இன்று நடைபெறுகிறது.
முன்னதாக நேற்று இலங்கை சென்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், வல்வெட்டித்துறைக்குச் சென்று வேலுப்பிள்ளையின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.நேற்று வவுனியாவில் தனியார் விடுதியொன்றில் மக்கள் அஞ்சலிக்காக வேலுப்பிள்ளையின் உடல் வைக்கப்பட்டிருந்தது.
அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து நீண்ட வரிசையில் நின்று வேலுப்பிள்ளையின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.அதனைத் தொடர்ந்து அவரது உடல் வல்வெட்டித்துறைக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அவரின் சொந்த ஊரான வல்வெட்டித்துறையில் உள்ள அவரது உறவினரின் வீட்டில் நடைபெற்று, உடல் ஊறணி மயானத்தில் தகனம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக நேற்று சனிக்கிழமை நண்பகல் முதல் தீருவில் உள்ள குமரப்பா உட்பட பன்னிருவர் மயானத்திற்குச் சமீபமாக உள்ள சதுக்கத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
அங்கு தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் நேரில் வந்து தமது இறுதி அஞ்சலியை செலுத்தினர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறனின் பிரதிநிதிகளான வழக்கறிஞர்கள் சந்திரசேகரன், பிரபு ஆகியோர் தமது இறுதி அஞ்சலியைச் செலுத்தினர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த இரா. சம்பந்தன், மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், வினோநோகராதலிங்கம், துரைரத்தினசிங்கம், சிவசக்தி ஆனந்தன், அரியநேத்திரன், கஜேந்திரகுமார், தாமஸ் வில்லியம் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி வேட்பாளர் விக்கிரமபாகு கருணாரட்ண சார்பில் பிரதிநிதிகளும் வேலுப்பிள்ளை உடலுக்கு இறுதி மயாதையைச் செலுத்தினர். பிரபாகரன் குடும்பத்தினர் வரவில்லை...இதற்கிடையே, தந்தை வேலுப்பிள்ளையின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளில் அவரது பிள்ளைகள் யாரும் பங்கேற்கவில்லை.
பாதுகாப்பான முறையில் இதில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்வதாக ராஜபக்சே அரசு அளித்த உறுதிமொழிகளையும் அவர்கள் நிராகரித்து விட்டனர்.பிரபாகரனின் ரத்த உறவுகளான மனோகரன் டென்மார்க்கிலும், ஜெகதீஸ்வரி இந்தியாவிலும், வினோதினி கனடாவிலும் உள்ளனர். மூன்று பேருமே வேலுப்பிள்ளையின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.
இறுதிச் சடங்குக்காக வந்தால், நிச்சயம் ராஜபக்சே அரசு தங்களைக் கைது செய்து அடைத்து வைத்து சித்திரவதை செய்யும் என்பதால் அவர்கள் வரவில்லை என்று தெரிகிறது.இதற்கிடையே, இன்னும் ராணுவத்தின் பிடியில் சிக்கியிருக்கும் பிரபாகரனின் மாமியார் ஏரம்புவையும் மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவாம்.

சுறா கேமராமேன் மாற்றம்... ஒரு அதிர வைக்கும் பின்னணி!!

விஜய்யின் 50வது படம் சுறாவில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் வடிவேலு என்பது தெரிந்த விஷயம். இந்தப் படத்தின் இயக்குநர் எஸ் பி ராஜ்குமாருக்கும் வடிவேலுக்கும் நல்ல அண்டர்ஸ்டாண்டிங் உண்டாம்.
வடிவேலுவின் இன்றைய சம்பளம் ரூ 10 லட்சம், நாளொன்றுக்கு.
இவரை சமீபத்தில் 5 நாட்கள் மட்டும் கால்ஷீட் பேசி அழைத்துச் சென்றுள்ளனர். வடிவேலு தொடர்புடைய காட்சிகள் அனைத்தையும் இந்த 5 நாளில் சுருட்டிக் கொடுத்துவிடலாம், இயக்குநர் நினைத்தால்.
அவரோ வேறு மாதிரி நினைத்துவிட்டார் போலிருக்கிறது. ஒருநாளைக்கு இரண்டொரு சீன் மட்டுமே எடுத்து வந்த இயக்குநர், மீண்டும் 5 நாள் வடிவேலுவின் கால்ஷீட்டை நீட்டிப்பதாகச் சொல்ல, கேமராமேன் எம்எஸ் பிரபுவுக்கு சந்தேகம் வந்துவிட்டதாம். ஒரு நாளைக்கு 10 லட்சம் ரூபாய் சம்பளம் பேசி கூட்டிவந்த ஆர்டிஸ்டை வைத்து இப்படி இழுத்தடித்தால், மேற்கொண்டு ரூ 50 லட்சம் செலவாகுமே என்று யோசித்தவர் அதை இயக்குநரிடமும் கேட்க, அவர் கண்டு கொள்ளவே இல்லையாம்.அடுத்து சில காட்சிகளுக்கு 500 துணை நடிகர்கள் தேவைப்பட்டார்களாம்.
ஆனால் இயக்குநரே 1000 பேரை வரச்சொன்னாராம். 'எதுக்கு இப்படி... காசுக்கு பிடிச்ச கேடு. 500 பேர் இருந்தா 5000 பேரா காட்டக்கூடிய டெக்னிக் இருக்கும் போது இது வெட்டி செலவுதானே, என்று கேட்டுள்ளார் மீண்டும் எம்எஸ் பிரபு. அடுத்த நாள் பிரபுவுக்கு கல்தா கொடுத்த எஸ்பி ராஜ்குமார், என் கே ஏகாம்பரத்தை ஒளிப்பதிவாளராக போட்டுள்ளார்.

Saturday, January 9, 2010

தேசிய தலைவரின் தந்தையாரின் இறுதிநிகழ்வில் யாழ். செல்லும் மகிந்த கலந்துகொள்வார்? சாவு வீட்டை தேர்தலுக்கு சாதகமாக்க திட்டம்!

தேசியத்தலைவர் வே.பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் இறுதிக்கிரியைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை அவரின் சொந்த ஊரான வல்வெட்டித்துறையில் நடைபெறவுள்ளன.
அவரது பூதவுடல் அன்று முற்பகல் 11 மணியளவில் ஊறணி மயானத்தில் தகனஞ்செய்யப்படும்.
அமரர் வேலுப்பிள்ளையின் பூதவுடல் வல்வை, பூச்சிவிட்டானில் உள்ள அவரது உறவினர்களில் ஒரு வரின் வீட்டில் வைக்கப்பட்டு கிரியைகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
பூச்சிவிட்டான் பகுதி தீருவில் பன்னிருவர் மயானத்திற்குச் சமீபாக உள்ளது.
அமரரின் பூதவுடல் இன்று சனிக்கிழமை நண்பகல் தொடக்கம் தீருவில் சதுக்கத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. யாழ். மாவட்டத்தின் பல்வேறு பாகங்களிலிருந்தும் அமரரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு பெருந்திரளான மக்கள் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, நாளை ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் சென்று தனது தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ள அரச தலைவர் மகிந்த, தேசிய தலைவரின் தந்தையாரின் இறுதி நிகழ்வுகளில் கலந்துகொண்டு யாழ். மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையை மேற்கொள்ளக்கூடும் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் ஊகம் தெரிவித்துள்ளன.
ஆனாலும், இது குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை

713 புலிகள் இயக்க முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்கள் விடுதலை




வன்னிச் சமரின் போது ராணுவத்தால் கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் 713 பேர் இன்று சனிக்கிழமை விடுவிக்கப்படவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
வவுனியா செட்டிக்குளத்தில் நடைபெறும் வைபவமொன்றில் வைத்து இவர்கள் விடுவிக்கப்பட உள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயக பணியகம் தெரிவித்துள்ளது.



புலிகளினால் கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்ட, ஆனால் பயங்கரவாதத்துடன் நேரடியாகத் தொடர்பு இல்லாதவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட உள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் தயா ரத்னாயக்க கூறினார்.இன்று விடுவிக்கப்படுபவர்களில், வவுனியா, பம்பைமடு புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களிடையே 18 வயதுக்குக் குறைவானவர்கள் சுமார் 100 பேரும் அடங்குவதாகத் தெரியவந்துள்ளது. ஏனையவர்கள் தொடர்பான தகவல்களும் திரட்டப்பட்டு வருவதோடு பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்பற்றவர்கள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட உள்ளதாகவும் தயா ரத்னாயக்க கூறினார்.

இதற்கிடையில், இன்று விடுவிக்கப்படும் 713 பேரையும் இலங்கை புலனாய்வுப் பிரிவு இன்னொரு தடவை தாம் ஆராயவேண்டும் எனவும், அதற்கான ஒரு குழுவை வவுனியா அனுப்ப வேண்டும் எனவும் முன்வைத்த கோரிக்கையை கொழும்பு குற்றவியல் நீதிபதி சம்பக் ஜானகி ராஜரட்ன நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விடுவிக்கப்படுபவர்கள் சந்தேகத்துக்கு இடமில்லாதவர்கள் எனும்போது மீண்டும் விசாரணை செய்வதற்கு அவசியம் இருக்கிறதா என்ன? அவர் புலனாய்வாளர்களைக் கேள்வி கேட்டிருந்தார்.

Friday, January 8, 2010

பொங்கல் படங்கள்: 'வரூம்... ஆனா வராது!'

வடிவேலு படத்தில் 'வரூ..ம்... ஆனா வரா...து!' என்று என்னத்தே கண்ணையா அடிக்கடி இழுப்பாரே... அது தமிழ் சினிமாவுக்குதான் மிகச் சரியாகப் பொருந்தும்.ஒவ்வொரு விசேஷத்தின் போதும் ரசிகர்களுக்கு விருந்தளிக்க வரும் படங்கள் இவை என்று பெரிய பட்டியலே போடுவார்கள்.
பண்டிகை நாளின் போது அந்தப் பட்டியலில் பெரும்பாலான படங்கள் பின்வாங்கிவிட, நான்கைந்து படங்கள் தேறினாலே பெரிய விஷயமாகிவிடும். அவையும் கூட சொல்லிக் கொள்கிற மாதிரி இருக்காது.
இதற்கு முக்கிய காரணம், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களிடம் திட்டமிடல் என்ற விஷயமே இல்லாமலிருப்பதுதான்.
இதைச் சொன்னால், 'படைப்பாளிகளை குறிப்பிட்ட கால வரையறைக்குள் முடக்காதீர்கள்' என்று டப்பா சென்டிமெண்ட் பேசுவார்கள்!சரி... இந்த பொங்கலுக்கு வரவிருப்பதாக இப்போதைக்கு பட்டியலிடப்பட்டுள்ள படங்கள் இவை:
ஆயிரத்தில் ஒருவன்
கார்த்தி, பார்த்திபன், ரீமாசென், ஆன்ட்ரியா நடித்து, செல்வராகவன் டைரக்டு செய்த படம். ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த படத்தை, ரூ.32 கோடி செலவில் ரவீந்திரன் தயாரித்து இருக்கிறார்.தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களாக ரீமாசென், ஆன்ட்ரியா ஆகிய இருவரும் வருகிறார்கள். அவர்களுக்கு உதவுகிற போர்ட்டராக கார்த்தி நடித்து இருக்கிறார். இவர்களின் அபூர்வமான 'கண்டுபிடிப்பு' பார்த்திபனாம். அது என்ன கண்டுபிடிப்பு? என்பதை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்களாம்.
குட்டிசி
ரஞ்சீவியின் அக்கா மகன் அல்லு அரவிந்த் நடித்து, ஆந்திராவில் வெற்றிபெற்ற ஆர்யா' என்ற தெலுங்கு படத்தை தழுவிய கதை இது. ஒரு கல்லூரி மாணவருக்கும், மாணவிக்கும் இடையே ஏற்படும் காதல், அதனால் ஏற்படும் பிரச்சினைகள், அதை அவர்கள் இருவரும் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது கதை. தனுஷ் - ஸ்ரேயா ஜோடியாக நடிக்க, மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்க, ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரித்துள்ளது.
இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்
கௌபாய் பாணி படம் இது. ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் சாதாரண மனிதனைச் சுற்றி நடக்கும் விஷயங்கள்தான் திரைக்கதை.ராகவா லாரன்ஸ், பத்மப்ரியா, லட்சுமிராய், சந்தியா நடித்துள்ளனர். இம்சை அரசன் 23 ம் புலிகேசி' படத்தை இயக்கிய சிம்புதேவன் படம் என்பதால், கொஞ்சம் எதிர்பார்ப்புள்ளது. ஏ.ஜி.எஸ். நிறுவனம் சார்பில் கல்பாத்தி அகோரம் தயாரித்துள்ளார்.
நாணயம்
வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து வந்த ஹாலிவுட் படத்தின் ஜெராக்ஸ் காப்பிதான் இந்த நாணயம்.பிரசன்னா, சிபிராஜ், ரம்யா, யாஸ்மின் நடித்து இருக்கிறார்கள். சக்தி, டைரக்டு செய்துள்ளார். கேபிட்டல் பிலிம் நிறுவனம் சார்பில் எஸ்.பி. பி.சரண் தயாரித்துள்ளார். படத்துக்கு வில்லன் சிபிராஜாம். தியேட்டருக்கு வரும் ரசிகர்களுக்கும் வில்லனாகி விரட்டிவிடாமல் இருந்தால் சரி!
போர்க்களம்
பொல்லாதவன், வெண்ணிலா கபடி குழு ஆகிய படங்களில் நடித்த கிஷோர், கதாநாயகனாக நடித்துள்ளார். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த கிஷோர், ஆந்திரப் பெண் ஒருவருக்கு நேரும் பிரச்சினையை ஆந்திராவுக்கே போய் எப்படித் தீர்க்கிறார் என்பது கதை. பண்டி சரோஜ்குமார் இயக்கியுள்ளார். இந்த ஐந்து படங்களில் இரண்டு மட்டுமே திரையரங்குகளை உறுதி செய்துள்ளன. மற்றவை 'வரூம்... ஆனா வராது' ரகம்தான். வந்தால் சந்தோஷமாகப் பாருங்கள்!

ரூ.48 கோடிக்கு சுறாவை வாங்கிய சன்!

விஜய் நடிக்கும் 50 வது படமான சுறாவை ரூ 48 கோடி கொடுத்து சன் பிக்சர்ஸ் வாங்கியிருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தை சமீபத்தில் சன் வெளியிட்டது. இந்தப் படத்தை வாங்கியபோதே, விஜய்யின் 50வது படமான சுறாவையும் தங்களுக்கே தரவேண்டும் என ஒப்பந்தம் போட்டது சன் என்கிறார்கள். வேட்டைக்காரன் வெளிவந்து, போதிய வரவேற்பைப் பெறாத நிலையில், சங்கிலி முருகன் தயாரித்து வரும் விஜய்யின் 50வது படத்தை முன்பு பேசிய விலையை விட குறைவான தொகைக்குத்தான் வாங்கிக் கொள்ள முடியும் என சன் கூறிவிட்டதாம்.
இந்த விஷயத்தில் ஏற்கெனவே அனுபவசாலி சங்கிலி. முன்பு விஜய்யின் காதலுக்கு மரியாதை படத்தை அவர்தான் தயாரித்தார். படம் நன்றாக வந்திருந்தும், கொஞ்சம் ஸ்லோவாக இருப்பதாக நண்பர்கள் கூறியதால், வந்த விலைக்கு ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு விற்றார்.ஆனால் ஆஸ்கர் ரவியின் நேரம், அந்தப் படம் பிளாக் பஸ்டராகி கோடிகளில் அள்ளிக் கொடுத்தது. பின்னர், வந்த லாபத்தில் சங்கிலி முருகனுக்கு ஒரு தொகையை ஆஸ்கர் கொடுத்ததாகச் சொல்லப்பட்டது.
இப்போது, கிட்டத்தட்ட அதே பாணியில்தான் சுறாவை விற்றுள்ளார் சங்கிலி.
ஆனால் அவரைப் பொறுத்தவரை பிஸினஸ் லாபம் என்கிறார்கள். சுறாவின் கதை, மலையாளத்தில் வந்த சோட்டா மும்பை என்பதாலும், அதை கொஞ்சமும் மாற்றாமல் அப்படியே எடுக்கப் போவது தெரிந்ததாலும்தான், தைரியமாக வாங்கியுள்ளார்களாம் சன். இந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமை, ஆடியோ உரிமை, உலக உரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் (perpetual rights) ஒட்டு மொத்தமாக சன்னுக்கு கொடுத்துள்ளார் சங்கிலி என்பது குறிப்பிடத்தக்கது.

ஜக்குபாயை கொன்னுட்டாங்க...!'' -நடிகை கதறல்!



""மாப்ளே... ஜக்குபாய் எப்படி இருந்துச்சு?

''""ஜக்குபாய் வெரி பிக் பாய்.''""


இது அந்தப் படத்துல கவுண்டமணி பேசுற டயலாக்ல...'


'-"ஹேப்பி நியூ இயர்' நள்ளிரவில் பீரை நுரை தள்ளிக்கொண்டாடிய நண்பர்கள் மறுநாள் "பார்த்த சங்கதி'யை ஒருவருக் கொருவர் பகிர்ந்துகொள்ள... அந்த டீமில் ஒருவருக்கு ஒன்றும் புரியவில்லை. நண்பர்கள் விளக்கினார் கள்.


""அதான் நெட்ல 30-ந் தேதியே ஜக்கு பாய் ரிலீசாயிருச்சுல்ல. டி.வி.டி.கூட மார்க் கெட்டுக்கு வந்துருச்சுல்ல...'' என்று சிரித்தார் கள்.


நண்பர்கள் நம்பவில்லை.""அய்யய்ய... நம்பமாட்டியாடா நீ? கதையைச் சொல்றேன் கேட்டுக்க.


சரத் ஒரு ஐ.பி.எஸ். ஆபீஸர். இந்தியாவுல அவரு பேரு ஜெகன்னாதன். ஆஸ்திரேலியாவுல ஜக்குபாய். சரத்துக்கு மகளா வர்றாங்க ஸ்ரேயா. படம் முழுக்க கத்திக் கத்திப் பேசுற பழைய கவுண்டமணி வர்றாரு. அவரு மேக்கப்பும் ஹேர் ஸ்டைலும் சகிக்கல.


அவருகூட பெரிய போலீஸ் ஆபீசருதான். ஜோக்கா இருக்குல்ல. கவுண்டமணி அடிக்குற லூட்டியப் பார்த்துட்டு அந்தப் படத்துல வர்ற ஒரு கேரக்டர் "இவன் திருந்தவே மாட்டானா? ட்ரண்ட மாத்திக்கவே மாட்டானா?'ன்னு கலாய்க்குற மாதிரி ஸீனெல்லாம் இருக்கு. முறைப்படி ரிலீசாகுறதுக்கு முன்னாலயே எவனோ ஜக்குபாய் முழுப்படத்தையும் லேப்லயிருந்து சுட்டிருக்கான். அத யாரோ ஒருத்தன் நெட்ல ஏத்திவிட்டிருக்கான். இதுக்கும் காரணம் இல்லாமலா இருக்கும்?'' என கவுண்டமணி பாணியிலேயே அவர்களும் சத்தமாகப் பேசினர்.
2010 பிறக்கும்போதே தமிழ் டொரண்ட் . நெட் நேயர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அவ்வலைத் தளத்தில் விரிந்தது ஜக்குபாய். இச்சேவையைச் செய்த அந்தப் "புண்ணியவான்' தன் பெயரை த்லோகா என்று பதிவு செய்திருந்தான். இதை டொரண்ட் ஃபைலாகவும், அதை உபயோகிக்கத் தெரியாதவர்களும் ஆன்லைனிலேயே ஸ்ட்ரீமிங் வீடியோவாகவே பார்க்கவும் வசதியாக ஏற்பாடு செய்திருந்தான்.
சுமார் இரண்டரை மணி நேரம் ஓடும் ஜக்குபாயின் கதைக்களம் ஆஸ்திரேலியா. போலீஸ் அதிகாரியான சரத்குமார் கடமைக்காக தன் காதல் மனைவியையே இழக்கிறார். பிறகு தன்னை அப்பா என்றறியாத மகள் ஸ்ரேயாவோடு பாசப் போராட்டம் நடத்துகிறார்.
கடத்தல்காரனாக சித்தரிக்கப்பட்டிருக்கும் வில்லனை க்ளைமாக்ஸில் ஹெலிகாப்டரில் பறந்து கொன்றுவிடுகிறார் சரத்குமார். நிஜத்திலோ... ரிலீஸ் தேதி அறிவிக்கும் முன்பே, ஆதாயத்துக்காக ஜக்கு பாயை வலைத்தளம் வரை கடத்திய நிஜ வில்லனால் சோகத்தில் ஆழ்ந்திருக்கிறது அந்த சினிமா டீம்.ரிலீசுக்கு மறுநாள் தியேட்டர் பிரிண்ட்டாக திருட்டு வி.சி.டி. வருவதெல்லாம் வழக்கத்தில் உள்ளதுதான். ரிலீசுக்கு முதல்நாள் கள்ளச்சந்தையில் "ஜீன்ஸ்' வெளியானபோது அப்போது திரையுலகமே கொந் தளித்தது. ஜக்குபாய் விவகாரம் அப்படியல்ல. டப்பிங், எடிட்டிங்கெல்லாம் முடிந்து ரீ-ரிக்கார்டிங்கில் பண்ணாத இ.எப்.எக்ஸ். பிரதியை கொஞ்சம் கொஞ்சமாக எட்டு பாகமாகத் திருடி, முன்கூட்டியே வெளியிட்டுவிட்டார்கள். ஜக்குபாய் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரிடம் பேசினோம்.""எடிட்டிங்கே முடியாத, முழுமை யில்லாத வெர்ஷன் அது. ரிலீஸ் தேதிகூட இன்னும் ஃபிக்ஸ் பண்ணல.
அதுக்குள்ள வெளியேத்திட்டாங்க. இது புகாராகி, சி.எம். உத்தரவு போட்டு பெரிய அளவுல இன்வெஸ்டிகேஷன் நடந்துகிட்டிருக்கு. யாரு இத பண்ணுனாங்கன்னு ராதிகாவுக்கும் சரத்குமாருக்கும் தெரியும். ஒரு வருஷம் ஒர்க் பண்ணுன படம். என்னோட ஜக்குபாய அநியாயமா கொன்னுட்டாங்க. ரொம்ப கஷ்டமா இருக்கு. டப்பிங், எடிட்டிங், ரீ-ரிக்கார்டிங்ன்னு ஒவ்வொரு இடமா தூக்கிட்டுப் போற தொழில் இது. இப்ப யாரை நம்புறதுன்னு தெரியல.'' -ரொம்பவும் நொந்துபோய் சொன்னார்.
இன்னொருபுறம் ""முதல்ல 5 கோடி ரூபாய ஜீ.டி.வி.காரங்ககிட்ட வாங்கித்தான் இந்தப் படத்த தயாரிக்க ஆரம்பிச்சாங்க ராதிகா. அப்புறம் படத்த முடிச்சிட்டு செலவானது 17 கோடி... இன்னும் 12 கோடிய செட்டில் பண்ணுங்கன்னு கேட்டிருக் காங்க. ஜீ.டி.வி. தரப்பிலோ "சரத்குமார் பட மெல்லாம் 17 கோடி ரூபாய்க்கு எப்படி போணி ஆகும்? 5கோடி போனாலும் போகட் டும் ஆள விடு'ன்னு ராதிகாவ நோஸ்கட் பண்ணிட்டாங்க. இந்த சண்டையாலதான் அதுவரைக்கும் பேப்பர்ல வந்துக்கிட்டிருந்த ஜக்குபாய் விளம்பரம்கூட நின்னுபோச்சு.
இதுல ஏதாச்சும் ஒரு பின்னணிலகூட இந்த குற்றம் நடந்திருக்கலாம்'' என்று சந்தேகம் கிளப்புகிறார்கள். ஜக்குபாய் தயாரிப்பாளர் ராதிகாவை தொடர்புகொண்டோம்.""ஜீ.டி.வி.காரங்க பிரச்சினை, அது தனியா போய்க்கிட்டிருக்கு. மியூசிக் இல்லாம, சரியா டப்பிங் இல்லாம ஜக்குபாயை திருட்டுத்தனமா வெளியேத்தி சினிமா தொழிலுக்கே பெரிய துரோகம் பண்ணிட்டாங்க. தவறு எங்கே நடந்துச்சுன்னு இப்ப கண்டுபிடிச்சாச்சு'' என்றார் கொதிப்புடன்.விதவிதமான திருட்டுக்களால் திணறிக்கொண் டிருக்கிறது திரையுலகம்.

சாதிகளை ஒழித்த தலைவன்! - ஜெகத் கஸ்பர்


நாட்பட, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எனக்கு ஆழ்ந்த ஈர்ப்பும், ஈடுபாடும் வரக் காரணம் போர்க்கள வெற்றிகளின் சிலிர்ப்போ, ஆயுதப் போராட்டத்தின் உள்மனம் சார்ந்த கேள்விக் குரிய கவர்ச்சிகளோ அல்ல.

சமூகக் களத்தில் அது ஏற்படுத்தி வந்த தாக் கங்களும், புதிய பரிமளிப்புகளும் -அவை தந்த புதிய நம்பிக்கைகளுமே முக்கிய காரணங்கள்.

குறிப்பிட்டுச் சொல்வதானால் சாதி ஒழிப்பு, பெண் விடுதலை இரண்டையும் கூறலாம்.சாதி இரண்டொழிய வேறில்லை -இட்டார் பெரியோர், இடாதார் இழிகுலத்தோர் என்றெல்லாம் இன்றும் மேடைகளில் நன்றாகத்தான் பேசுகிறோம்.

ஆனால் திரும்பும் திசையெங்கும் தெரிகிற சாதீயத்தின் திரைமறை வக்கிரங்கள் தமிழ் இனத்தின் சமூக மரபணுவை ஆழப் பீடித்துவிட்ட புற்றுநோய் என்றும், அதை குணப்படுத்துதல் எளிதல்ல என்றும் அறிவுசார், முடிவு செய்திருந்த காலத்தின்தான் தமிழீழ விடுதலைப் போராட்டமும்- தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் புதிய நம்பிக்கையின் ஒளிச்சிதறல்களைத் தந்தன.

பொதுவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சாதி பேதம் பார்க்கப்படுவதில்லை யென்பதும், எந்தப் படிவங்களிலும் ஒருவரது சாதி பதிவு செய்யப்படுவதில்லையென்பதும், போராளி கள் தங்களுக்குள் ஒருவரது சாதி பற்றி அறிந்து கொள்வதில் அக்கறை காட்டுவதில்லையென் பது மட்டுமல்ல -அதுபற்றின பிரக்ஞைகளே இல்லாதிருந்தார்களென்பதும் நீண்ட ஆய்வுகள் மூலம் எமது வேரித்தாஸ் வானொலி கண்டெடுத்த முடிவுகள்.

இத்துணைக்கும் வரலாற்று ரீதியாக ஈழத் தமிழ்ச் சமூகம் குறிப்பாக யாழ்ப்பாணச் சமூகம் கெட்டியான சாதீயப் படிநிலைகள் கொண்டதொன்றாகவே இருந்து வந்திருக்கிறது. சமூக-பொருளாதார- பண்பாட்டு- கல்வி வெளிகளில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை மிகவும் பின்தங்கியதாகவே மிக நீண்ட காலம் இருந்துள்ளது. இந் நிலையை தமிழீழ விடுதலை இயக்கம் -முழக்கங்களும், பிர கடனங்களும் செய்யாமல் தன் இயல்பான இயங்கி யல் ஓட்டத்திலேயே இடைமறித்திருக்கிற தென்பது எதிர்காலத்தின் சமூகமானுடவியல் ஆய்வாளர்கள், விஞ்ஞானிகளால் வியப்புடன் போற்றப்படப் போகும் மகத்துவம் கொண்ட உண்மைகளில் ஒன்று.

ஈழத்து நண்பர் ஒருவர் உரையாடலின் போது கூறிச் சென்றதொரு நிகழ்வு -ஊர் விபரம் மறந்து விட்டேன்... சாவகச்சேரிக்குப் பக்கம் என்பதாக நினைவு... தாழ்த்தப்பட்ட மக்கள் குடிநீர் எடுக்கும் கிணற்றில் உயர் சாதியினர் மலம் அள்ளிப் போட... முதலில் விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர்கள் நேரிற் சென்று பேசி செய்தவர்களை மன்னிப்புக் கேட்க வைத்து -இனிமேல் ஒருபோதும் அவ்வாறு நடக்காதென்ற உறுதியையும் ஊராரிடமிருந்து பெற்று வந்திருக்கிறார்கள். ஆனால் அடுத்த நாள் மீண்டும் அவ் உயர்சாதியினர் மலம் அள்ளிக் குடிநீர் கிணற்றில் போட, குற்றவாளிகளை அழைத்து வந்து அக்கிணற்றடியிலேயே சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்.

நான் தீவிர மரண தண்டனை எதிர்ப்பு நிலைப்பாடு கொண்டவன். அதுபோலவே முறைப்படியான நீதி விசாரணைகள் நடத்தப்படாமல், குற்றவாளி தனது தரப்பு நியாயங்களை எடுத்துரைக்க வாய்ப்புத் தரப்படாமல் தண்டனை வழங்கப்படுவதிலும் உடன்பாடில்லை.

ஆயினும் சக மனிதருக்கான குடிநீரில் மலம் அள்ளிப் போட முடிகிறவர்கள் மனிதர்களாக இருக்க முடியாது, அவர்களை மனிதர்களாக நாம் மதிக்க வேண்டிய தேவையும் இல்லை. எனவே அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது சரியே என்று அக்கணத்தில் என் மனதிடை ஓடிய எண்ணம் நினைவுக்கு வருகிறது.

அந்த நண்பர் தொடர்ந்தும் குறிப்பிட்டார், மேலே விவரித்த அந்த நிகழ்வுக்குப் பின் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது உயர் சாதியினரின் வெளிப்படையான சமூக வன்கொடுமைகள் நின்று விட்ட தென்று.விடுதலைப் போராட்ட இயக்கத்திற்குள் திருமணங்கள் ஆணும்- பெண்ணும் இணைகிற மிக இயல்பான நிகழ்வுகளாகவே இருந் திருக்கின்றன.

சாதி பார்க்கிறவர்களை இயக்கத்தை விட்டே வெளியேற்றுகிற ஒழுக்க நடைமுறையை கொண்டிருந்திருக்கிறார்கள். தங்களது ஆளுகைப் பரப்பில் ""தமிழ்மொழி தான் நமது தேசிய அடையாளம் -அதனைக் கடந்த ஒன்றாக நிச்சயம் சாதி இருக்கக்கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்திருக்கிறார்கள்.உண்மையில் தமிழகத்தில் -இந்தியாவில் சமூக நீதிப் பேரியக்கம் எப்படி எல்லா சமூக மக்களும் அரசியல் -அரசு நிலைகளில் பங்கேற்கிற நிலையை உருவாக்கியதோ அவ்வாறே ஈழத்தில் விடுதலைப் போராட்ட இயக்கம் அதனை சாத்தியப்படுத்தியிருந்திருக்கிறது. விடுதலைப் போராட்ட வீரர்களின் சாதி- சமூக அடையாளங்களைப் பற்றிப் பேசுவதே குறையுடைத்த செயல். எனினும் மேற்குறிப்பிட்ட உண்மையை வலுப்படுத்த வேண்டி இதனைச் சொல்ல நேரிடுகிறது.

வேலுப்பிள்ளை பிரபாகரன் மீனவ சமூகத்தைச் சேர்ந்தவரென்பதும், தமிழ்ச்செல்வன், நடேசன் போன்ற முக்கிய தலைவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத் தவர்களென்பதும் இவர்களையும் சூசை போன்ற இன்னபிற தளபதியர்களையெல்லாம் ஈழத்து உயர் சாதியினரான வேளாள மக்களில் மிகப் பெருவாரியானோர் தங்களின் வரலாற்று நாயகர்களாக ஏற்றுப் போற்றி மதித்து வணங்கினார்களென்பதும் சாதி மனநிலையை (Caste Consciousness) அல்லது சாதிய மனநிலை வெளியை சுருக்குவதில் விடுதலைப் போராட்டம் சாதித்த மிகப்பெரும் வெற்றியாகவே கருதப்பட வேண்டும்.விடுதலைப் போராட்டம் பின்னடைவு கண்டு நிற்கிற இக்கால கட்டத்தில், போராட்டம் சாதித்த பெருமைமிகு சமூக வெற்றிகள் தொடர்ந்து நிலைபெறச் செய்யப்படுமா என்ற கேள்விகள் கவலையோடு எழுகின்றன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை "சென்னை சங்கமம்' போல் ஈரோடு மக்கள் கொண்டாடிய ""நம்ம ஈரோடு-கூடல் 2010'' நிறைவு நாளில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரைப் போற்றி ""பிறப் பொக்கும் எல்லா உயிர்க்கும்'' என்ற முழக்கத்தோடு நடந்த தந்தை பெரியார் சமத்துவ அணிவகுப்பில் முன் சென்றபோது அக்கேள்விகள் மனதில் எழுந்தன.

அப்பேரணியில் பல்லாயிரக்கணக்கான கல்லூரி மாணாக்கர்கள் பதாகைகள் தாங்கி முன் நடந்த காட்சியும், ஆயிரத்திற்கும் மேலான பெரியாரின் கறுப்புச் சட்டை பிள்ளைகள் அறிவியற் செய்திகள் சொன்ன கலை நிகழ்வுகள் நடத்தி வந்த காட்சியும் எழுச்சியாய் இருந் தன.

தந்தை பெரியார் சமூக நீதிக்குச் செய்த இமாலய பங்களிப்பு களை இருட்டடிப்பு செய்து காலப்போக்கில் அவர் பெயரை மங்கி விடச் செய்ய முடியு மெனக் கருதுவோ ருக்கு -அந்தப் பகலவன் மறையாத ஒளிப் பிழம்பென்ற செய்தி யுரைப்பதாய் அமைந் தது. இன்றைய இளை ஞர்களைப் பற்றி நாம் அவநம்பிக்கை கொள்ள வேண்டிய அவசியமில்லை -அவர் களை நாம் நம்பலாம் என்பதற்கான மறக்க முடியா நிகழ்வொன்றும் தமிழ் மையம் அமைப்பு ஏற்பாடு செய்த ""நம்ம ஈரோடு'' கலை-பண்பாட்டுத் திருவிழாவின் போது நடந்தது.

மூன்று மாதங்களுக்கு முன்னரேயே "நம்ம ஈரோட்டிற்கான' திட்டமிடல்கள், உரையாடல்கள் தொடங்கிவிட்ட போதும் பெரியதோர் நிகழ்வு நடத்துவதற்கான நிதி ஆதாரம் கிட்டவில்லை. ஒரு கட்டத்தில் நிகழ்வை ஒத்தி வைக்கலாம் -தற்காலிகமாகக் கைவிடலாம் என்ற நிலை வந்தபோது ஈரோட்டின் சித்தோடு பகுதியில் இயங்குகிற ஸ்ரீ அம்மன் கலை- அறிவியல் கல்லூரி மாணாக்கர்கள் கனவில் மட்டுமே நம்மால் ஆசிக்க முடிகிற இலட்சியக் காட்சி போல் வந்தார்கள்.

சுமார் 1500 மாணாக்கர்கள் 500, 1000 என்று பங்களித்து பத்து லட்ச ரூபாய்க்கும் மேலாகத் திரட்டி "நம்ம ஈரோடு' நடத்தினார்கள். புத்தாண்டின் முதல் அற்புதம் என மகிழ்ந்து கொண்டாடி பெருமையுடன் இதனைப் பதிவு செய்கிறேன்.

வளர்ந்து விட்ட நம்மை விட இளையோரை, நாளைய பிள்ளைகளை நிச்சயம் நாம் நம்பலாம்."நம்ம ஈரோடு' கலை-பண்பாட்டு விழாவின் எதிர்பாரா வியப்பு மாவட்ட ஆட்சித் தலைவர் சுடலைக் கண்ணன் அவர்கள் விழா அரங்கில் கிராமியத் தாலாட்டுப் பாடலொன்று பாடி அசத்தியது.

அடடா, எளிமையான-அமைதியான-பண்பான ஓர் அரசு அதிகாரிக்குள் செறிந்து கிடந்த தமிழ் அறிவும், குரல் வளமும், கலை-பண் பாட்டு உணர்வும் காண ஏற்பட்ட பரவசம் மறக்க முடியாதது.

என் பவர் மிரட்டும் நீலப்பட சாமியார்!

""வேலை கேட்டுப்போன என்னை மயங்க வைத்து... கற்பழித்ததோடு... ஆபாசப் படம் எடுத்தும்.. சீரழித்து வருகிறார்''’என சாமியார் ஈஸ்வர ஸ்ரீ குமார் மீதான அதிரடிப் புகாரோடு ஹேமலதா என்ற பெண்மணி நக்கீரனை நாடி வந்ததையும்...


இரு தரப்பின் வாக்குமூலத்தையும்... சாமியார் போலீஸில் ஆஜராகாமல் சில போலீஸ் அதிகாரிகள் உதவியுடன் நழுவி வந்ததையும் உடனுக்குடன் நாம் ரிப்போர்ட்டாகத் தந்து வந்தோம். இந்த நிலையில் தனது உதவியாளர் மூலம் சாமியார் ஈஸ்வர குமார் தனது விளக்கத்தை எழுதி அனுப்ப... அதை ஏற்க மறுத்து... நேரில் ஆஜராகியே தீரவேண்டும் என கறாராய் உத்தரவிட்டது காவல்துறை.

இதைத் தொடர்ந்து சாமியார் திடீரென எஸ்கேப் ஆக... இவரைப் பிடிக்க டி.சி.சம்பத்குமார் ஸ்பெஷல் டீம் ஒன்றை அமைத்தார்.

இந்த டீம் சாமியாரின் மனைவிக்கும் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கும் வருகிற செல்போன்களை எல்லாம் ட்ரேஸ் பண்ண ஆரம்பிக்க... உஷாரான சாமியார் தனது செல்போன்களை ஆஃப் செய்துவைத்து போலீஸுடன் கண்ணாமூச்சு ஆடினார். சாமியாரின் மனைவிக்கு கர்நாடகாவில் இருக்கும் மந்திரா லயத்திலிருந்தும் பெங்களூரில் இருந்தும் இடையில் இரண்டு மூன்று கால்கள் மட்டும்வர.. அவர் கர்நாடகாவில்தான் பதுங்கி இருக்கிறார் என்ற முடிவுக்கு வந்தது போலீஸ்.

எந்த வகையிலாவது சாமியார் தன் வீட்டைத் தொடர்புகொண்டே தீருவார் என கணித்த காவல்துறை மப்டியில் அவர் வீட்டைச் சுற்றி ஆட்களை நிறுத்தியது.இந்த நிலையில்... பல வி.ஐ.பி.க்களுக்கு பவர் புள்ளியாக இருப்பதாலும் பல வழக்குகளில் தான் சம்பந்தப்பட்டிருப்பதாலும் தன் வீட்டில் இருக்கும் ஃபைல்களை எல்லாம் பெங்களூருக்குக் கொண்டுபோகும் முடிவிற்கு வந்தார் சாமியார். இதன்படி அவரது டிரைவர் ஒரு இரவில் பாதி ஃபைல்களை அள்ளிச்செல்ல..

இதைத் தாமதமாக அறிந்த காவல்துறை... மேலும் ஆட்களை நிறுத்தி உஷார்படுத்தியது. பெங்களூரில் சர்வீஸ் அபார்ட்மெண்டில் பதுங்கியிருந்த சாமியார் இடைப்பட்ட காலத்தில்... போலீஸுக்கு பயந்து மூன்றுமுறை இடம் மாறியிருந்தார்.

இந்த நிலையில் 4-ந் தேதி இரவு மிச்ச ஃபைல்களை அள்ளிச்செல்ல... சாமியார் தன் டிரைவரை மீண்டும் வீட்டுக்கு அனுப்ப... டிரைவரை சைலண்டாக மடக்கி... பெங்களூர் தூக்கிச்சென்றனர் காக்கிகள். 5-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு அபார்ட்மெண்ட் கதவை காக்கிகள் தட்ட.. டிரைவர்தான் என அசால்ட்டாக கதவைத்திறந்த சாமியார் அதிர்ந்தார். அவரை போலீஸ் டீம் காரில் ஏற்ற... அந்த நிலையிலும் சாமியார் “""என் பவர் தெரியாம என்மேல் கை வைக்கிறீங்க. நான் மதிய லஞ்ச்சை ஐ.ஜி.யோடும் நைட் டின்னரை ஏ.டி.ஜி.பியோடும் சாப்பிடறவன். ரொம்ப வருத்தப்படப் போறீங்க''’’ என தெனாவெட்டாக மிரட்ட... கொஞ்சமும் சளைக்காமல் அவரை சென்னைக்குக் கொண்டுவந்துவிட்டது ஸ்பெஷல் டீம்.

அவரை ரிமாண்டுக்கு கொண்டு செல்லும்வரை ""நான் சங்கரமடத்துக்கு நெருக்கமானவன். இதுவரை எந்த வழக்கிலும் என்னிடம் போலீஸ் இப்படி நடந்துகொள்ளவில்லை. என் பவரைக் காட்டினாத்தான் சரிப்படுவீங்க''’’ என காக்கிகளை எச்சரித்தபடியே இருந்தார். விசாரணைக்கு ரெடியான அதிகாரிகளோ... ""விசாரணையில் சாமியார் தொடர்பான மேலும் பல விவகாரங் கள் வெளியே வரும்'' என் கிறார்கள் அழுத்தமாய்.

ரஜினியின் 2வது மருமகன்


ரஜினியின் 2வது மகள் சௌந்தர்யாவுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெறுகிறது. கட்டுமான நிறுவனத்தின் அதிபர் மகனை அவர் மணந்து கொள்கிறார். ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.அவர் திரைப்பட நடிகர் தனுசை மணந்து கொண்டார்.
ரஜினிகாந்தின் 2வது மகள் சௌந்தர்யா ஆக்கர் ஸ்டுடியோ என்னும் பெயரில் அனிமேஷன் நிறுவனத்தை நடத்தி வருகிறார். ரஜினியை மையமாக கொண்ட சுல்தான் தி வாரியர் என்னும் அனி மேஷன் படத்தையும் அவர் இயக்கி வருகிறார். இதனிடையே வெங்கட் பிரபு இயக்கத்தில் கோவா படத்தை யும் அவர் தயாரித்து வருகிறார். இந்நிலையில் தனது 2வது மகள் சௌந்தர்யாவுக்கு திருமணம் செய்ய ரஜினிகாந்த் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த 2 ஆண்டுகளாக ரஜினிகாந்த் ஷங்கர் இயக்கும் எந்திரன் படத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். படம் முடியவுள்ள நிலையில் அவர் தனது மகள் திருமணத்தை பேசி முடித்திருப்பதாக கூறப்படுகிறது. சென்னையைச் சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவன அதிபர் ராம்குமார் என்பவரின் மகன் அஸ்வினுக்கும், ரஜினி மகள் சௌந்தர்யாவுக்கும் திருமணம் பேசப்பட்டிருப்பதாக இரு குடும்பத்திற்கும் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அஸ்வின் பொறியியல் படிப்பை முடித்து பின்னர் அமெரிக்காவில் மேற் படிப்பு படித்தவர். தற்போது தனதுதந்தை நிறுவனத்தில் நிர்வாகத்தை கவனித்து வருகிறார். சௌந்தர்யாஅஸ்வின் திருமணம் அடுத்த மாதம் 14ந் தேதி நடை பெறலாம் என்று கூறப்படுகிறது. திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், இந்த சம்பந்தம் இருதரப்பினருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி யிருப்பதாகவும் தெரிகிறது.

Thursday, January 7, 2010

விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தை காலமானார்

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை இன்று காலமானார். இராணுவ தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று காலமானதாக இராணுவ தரப்பு தெரிவித்துள்ளது.
இது ஒரு இயற்கை மரணம் என்றும் அந்த தரப்பு குறிப்பிட்டுள்ளது.
வேலுப்பிள்ளை, கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்புப்பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அவருடன், பிரபாகரனின் தாயும் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

Wednesday, January 6, 2010

சிங்களவருக்கு மட்டுமே நாடு சொந்தம் என்று கூறவில்லை: சரத் பகிரங்க அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, ,நாடு சிங்களவர்களுக்கு மாத்திரம் சொந்தமானது என எந்தவொரு வெளி நாட்டு ஊடகத்திற்கும் தான் தெரிவிக்கவில்லை எனப் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு காத்தான்குடியில் நேற்று மாலை மாகாண சபை உறுப்பினர் யு.எல்.எம். முபீன் தலைமையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனை தெரிவித்துள்ள அவர் தான் தெரிவித்த கருத்து அந்த ஊடகத்தில் திரிபுபடுத்தப்டப்டிருந்ததாகவும் கூறினார்.
“இலங்கையில் வாழும் சகல இனங்களுக்கும் நாடு சொந்தமானது என்பதை திட்டவட்டமாக கூறுகின்றேன்” என்றும் தனது உரையில் குறிப்பிட்ட அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
“நாட்டில் வாழும் சகல இன மக்களும் சமாதானமாகவும், சமத்துவமாகவும் வாழ வேண்டும் என்பதே எனது இலட்சியமாகும் .இதனைத் தான் அரசியல் யாப்பும் உறுதிப்படுத்துகின்றது.
நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்பு, வடக்கு கிழக்கு மக்கள் ஏனைய மக்கள் போல சம அந்தஸ்துடன் வாழக் கூடிய சூழ்நிலை ஏற்படுத்தப்படும்.
இந்நாட்டில் பெரும்பான்மையாக வாழும் சிங்கள மக்களுக்கு ஒரு பாரிய பொறுப்பு உண்டு. அதாவது சிறுபான்மை மக்களின் பாதுகாப்பினையும் உரிமையையும் உறுதிப்படுத்துவது” என்றும் குறிப்பிட்டார்.
1990ஆம் ஆண்டு காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை,குருக்கள் மடத்தில் ஹஜ் யாத்திரிகர்கள் படுகொலை போன்ற சம்பவங்களையும் தனது உரையில் நினைவுபடுத்திய ஜெனரல் சரத் பொன்சேகா தனது கண்டனத்தையும் வெளிப்படுத்தினார்.
குறித்த சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட ஹஜ் யாத்திரிகர்களின் குடும்பங்களுக்கு நஷ்டஈடுகள் வழங்கப்படும் என்றும் கூறினார்.
இத்தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தின் பின் கல்முனை மற்றும் அம்பாறை ஆகிய இடங்களில் நடைபெற்ற கூட்டங்களிலும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகா உட்பட, பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர். கல்முனை செல்லும் வழியில் ஆரையம்பதி கந்தசாமி ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசை வழிபாட்டிலும் இவர்கள் கலந்து கொண்டனர்.
ஆலய முன்றலில் கூடியிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கைகளை அசைத்து தமது ஆதரவை வெளிப்படுத்தியதைக் காணக் கூடியதாக இருந்தது.

இன்று முதல் ஏ9 பாதையில் 24 மணிநேரம் பயணிக்கலாம்

இன்று நள்ளிரவு முதல் ஏ9 ஊடாக வீதித் தடை முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஸ யாழ்ப்பாணத்தில் அறிவித்துள்ளார். இதன்படி இன்று நள்ளிரவு முதல் சகல வாகனங்களும் பொதுமக்களும் எவ்வித அனுமதியும் பெறாமல் 24 மணி நேரமும் ஏ9 வீதியூடாக பயணங்களை மேற்கொள்ளலாம் என பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தேர்தல் வந்ததால் இவ்வளவும் கடுகதிவேகமாக நடக்கிறது, ஆனால் இவை அனைத்தும் நிலைக்குமா என்பதே தற்போது பெரும் கேள்வியாக இருக்கிறது.

Sunday, January 3, 2010

பிரபாகரன்! மதிவதினி! இசைப்பிரியா! -நேரில் கண்ட அறிவரசனின் நினைவலைகள்!

சிங்கள ராணுவத்திடம் சரணடைந்து தடுப்பு முகாமிலிருந்த புலிகளின் பெண் போராளியும் தமிழீழத் தேசியத் தொலைக் காட்சியின் செய்தி வாசிப்பாளருமான இசைப்ரியாவை, ராணுவத்தினர் கடத்திக் கொண்டு போய் கொடூரமாகப் படுகொலை செய்திருப்பதை

"அய்யோ... தங்கச்சி! கதறும் ஈழ அண்ணன்' என்கிற தலைப்பில் விரிவாக எழுதியிருந்தோம்.

இந்த செய்தி, தமிழகத்திலும், புலம்பெயர்ந்த தமிழர்களிடத்திலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. நக்கீரனை தொடர்பு கொண்டு நிறைய விபரங்களை பகிர்ந்து கொள்கின்றனர் புலம்பெயர்ந்த தமிழர்கள்.
இந்த சூழலில், நெல்லை யைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தமிழ்ப் பேராசிரியர் அறிவரசன் கிளிநொச்சியில் 2 வருடம் தமிழ்ப்பணி செய்தவர். இசைப்பிரியாவையும் அவர் சந்தித்துப் பேசியுள்ளார் என்கிற தகவல்களை பகிர்ந்து கொண் டனர் ஈழ ஆதரவாளர்கள்.

பேராசிரியர் அறிவரசனை தொடர்பு கொண்டு நாம் பேசியபோது, ""நெல்லை கலைக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக பணிபுரிந்து 1996-ல் ஓய்வு பெற்றுவிட்டேன்.

தமிழ்ப் பணி மட் டுமே என் மூச்சு!என்னுடைய தமிழ்ப்பணி பற்றி போராளிகள் அறிந் திருந்தனர். 2006-ல் அவர்களிட மிருந்து "தமிழீழத்தில் தமிழ்ப்பணி செய்ய இயலுமா? விருப்பம் இருப்பின் இங்கு வர இயலுமா அய்யா?' என்று எனக்கு அழைப்பு வந்தது.

அப்போது யுத்த நிறுத்தம் அமலில் இருந்த காலகட்டம்.அவர்களின் அழைப்பை ஏற்று, முறைப்படி விசா பெற்று 2006 மார்ச்சில் கிளிநொச்சிக்குச் சென்றேன். தமிழீழத்தின் கல்வித்துறை பொறுப் பாளர்கள், "அய்யா, இங்குள்ள தமிழாசிரியர்களை தகுதியுள்ளவர் களாக உருவாக்க வேண்டும். அப்படி தமிழாசிரியர்களாக உருவாக்க 40 பேரை தேர்ந்தெடுத்துள்ளோம்.

அவர்களுக்கு பயிற்சியளித்து, தேர்வு நடத்தி, சான்றிதழ் வழங்க வேண்டும்' என்றனர்.மேலும், "இதற்கான பாடத் திட்டங்களையும் நீங்களே உருவாக்கிக் கொள்ளுங்கள். இந்த பணி முடிய எவ்வளவு நாட்கள் ஆகும்?' என்றனர்.

நான், "இரண்டு ஆண்டுகள் ஆகும்' என்றேன்.உடனே அவர்கள் "இரண்டு ஆண்டுகள் பணி செய்ய இயலுமா அய்யா' என்று கேட்க, "எனக்கு முழு சம்மதம்' என்று கூறி ஒப்புக் கொண்டேன்.



எனக்கான அனைத்து வசதிகளையும் பொறுப்பாளர்கள் பார்த்துக் கொண்டனர். அங்கு பணி செய்த இரண்டாண்டுகளும் எந்த குறையும் எனக்கில்லை.40 பேருக்கும் தமிழ் பயிற்சி கொடுத்து ஆசிரியர்களாக உரு வாக்கினேன். 40 பேருமே தேர்ச்சி பெற்றனர்.

சங்ககால இலக்கியங்கள், பிற்கால இலக்கியங்கள் ஆரம்பித்து அனைத்து இலக்கண பயிற்சியும் அவர்களுக்குத் தரப்பட்டது. தவிர... பிறமொழி கலப்பில்லாமல் பேசும் பயிற்சி, எழுதும் பயிற்சியையும் கற்றுத் தேர்ந்தனர்.இந்தத் தமிழ்ப் பணிக்காகத்தான் நான் அழைக்கப்பட்டிருந்தேன். இந்த பணிக் காலத்தில் ஒருநாள், இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனியும் 8 மாணவிகளும் பயிற்சிக் கூடத்திற்கு வந்தனர்.

"சில பயிற்சிகளை கற்றுக் கொள்ள விரும்புகிறோம் அய்யா' என்றனர்.அந்த வகையில் தமிழின் அடிப்படை இலக்கணம் குறித்து 8 மாதங்கள் என்னிடம் பயிற்சி எடுத்துக் கொண்டனர் அவர்கள்.

தமிழ் இலக்கணம் கற்றுக் கொள்வதில் மிகுந்த ஈடுபாடு காட்டினார் மதிவதனி. எந்த ஒரு பயிற்சியை கொடுத்தாலும் மற்ற மாணவிகளை விட முதன்முதலாக பயிற்சியை முடித்து "சரியாகச் செய்திருக்கிறேனா அய்யா' என்று ஓடோடி வந்து நோட்டுகளை காட்டுவார் மதிவதனி.

உலகத் தமிழர்கள் போற்றும் ஒரு மாமனிதரின் மனைவிக்கு தமிழ்ப் பயிற்சி கொடுத்தேன் என்பதில் எனக்கு பெரு மிதம் உண்டு.

மாலை 7 முதல் இரவு 9 மணி வரை மட்டுமே புலிகளின் "தமிழீழத் தேசியத் தொலைக் காட்சி' ஒலிபரப்பு செய் யப்படும். இதில் தினமும் செய்தி வாசிப்பார் இசைப்பிரியா. நல்ல கணீர் குரல்.

மிகச் சரியான தமிழ் உச்சரிப்பு இசைப்பிரியாவிடம் இருந்தது. ஒவ்வொரு நாளும் அவரது செய்தி வாசிப்பை கவனிப்பேன்.துவக்கத்தில் கடற்பிரிவில் பெண் போராளியாக இருந்துள்ளார். அவரிடமிருந்த கலை மற்றும் இலக்கிய ஆர்வம், குரல் வளம் அறிந்து அவரை அரசியல் துறைக்கு அழைத்துக் கொண்டனர். தமிழீழ வானொலியும் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியும் அரசியல் துறையின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது.

அதனால், அரசியல் துறைக்கு மாற்றப்பட்ட இசைப்பிரியா, தொலைக் காட்சியின் செய்தி வாசிப்பாளராக பணியில் அமர்த்தப்பட்டார். வானொலி மற்றும் தொலைக்காட்சி பணியாளர்கள் எனக்கு அறிமுகமானவர்கள் என்பதால் ஒருமுறை நான் அங்கு சென்றபோது, இசைப்பிரியாவை சந்தித்தேன்.அப்போது அவரிடம், ""இசை சரி... பிரியா என்பது தமிழ்ப் பெயர் இல்லையே...' என்றேன். அதற்கு அவர், "இயக்கத்தில் நான் சேர்ந்தபோது இசை அருவி என்றுதான் பெயரிட்டனர். ஆனால் இசைப்பிரியா... இசைப்பிரியா... என்று என் தோழிகளும் உறவினர்களும் அழைத்ததால், அதுவே நிலைத்துவிட்டது' என்றார்.இசை அருவி மிக அழகான தமிழ்ப் பெயர்.
ப்ரியா என்பது தமிழ் கிடையாது என்றேன். மறுநாள் தொலைக் காட்சியில் செய்தியை கவனித்தபோது செய்தி வாசிப்பவர் இசை அருவி என்றே பதிவு செய்தனர். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ப்ரியா என்பது தமிழ் பெயர் என்றே நினைத்திருந்தனர். தமிழ்ப் பெயர் அல்ல என்று சொன்னதை ஏற்று உடனே அவர்கள் அதை மாற்றிக் கொண்டது எனக்கு மகிழ்ச்சியாகவும் ஆச்சரிய மாகவும் இருந்தது.
துடிப்பான அந்த இளம்பெண், ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளதை நக்கீரனில் பார்த்து மிகுந்த வேதனைப்பட்டேன்'' என்றார் அறிவரசன்.அவரிடம், ""பிரபாகரனை சந்தித்தீர்களா?'' என்று கேட்டபோது, ""தமிழ்ப்பணிக்காக கிளிநொச்சியில் இருந்த 2 வருட காலத்தில் 2 முறை அவரை சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. பணியை துவக்கிய காலகட்டத்தில் முதன்முறையாக பிரபாகரனை நான் சந்தித்தபோது மிகுந்த கம்பீரமாகவும் இயல்பாகவும் இருந்தார்.என்னிடம், "உங்களுக்கான வசதிகள் எல்லாம் சரியாக இருக்கிறதா அய்யா. ஏதேனும் வசதி குறைவாக

இருந்தாலோ பிரச்சனைகள் இருந்தாலோ தாராளமாக என்னிடம் சொல்லுங்கள்' என்றார். மன நிறைவாக இருக்கிறது என்று கூறினேன்.நான் ஒரு தமிழ்ப் பேராசிரியர் என்பதால் மொழியைப் பற்றி மட்டுமே என்னிடம் பேசினார். மொழியின் வளர்ச்சி குறித்தும் மொழியைப் பாதுகாப்பது குறித்தும் பேசிய பிரபாகரன், "யுனெஸ்கோ நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் 50 ஆண்டுகளில் அழியக் கூடிய மொழிகளின் பட்டியலில் தமிழ் மொழியையும் சேர்த் துள்ளனர்.எதனை கண்டு அழியும் மொழியில் தமிழைச் சேர்த்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், இங்கு வந்து பார்த்திருப்பார்களாயின் அப்படி கூறியிருக்கமாட்டார்கள்.

தமிழீழம் கிடைத்துவிட்டால், தமிழை பாதுகாக்கவும் வளர்ச்சிக்காகவும் நிறைய திட்டங்களை வைத்திருக்கிறோம். தமிழை அழியவிட மாட்டோம்' என்றார். மொழி மீது அவருக்கிருந்த பற்று புரிந்தது.இப்படிச் சொன்னவர் சட்டென்று, "என் பெயர் (பிரபாகரன்) தமிழ்தானே அய்யா?' என்றார்.

நான் பதில் பேசாமல் சிரித்துக்கொண்டே இருந்தேன். அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டாரோ என்னவோ "எனக்கு கரிகாலன்னு ஒரு பெயர் உண்டு. கரிகாலன் தமிழ் பெயர்தானே?' என்றார்.

உடனே நான், "மிக அழகான சரியான தமிழ்ப்பெயர்' என்றேன். மகிழ்ந்து சிரித்தார். "உங்களின் தமிழ்ப் பணி எங்களை நெகிழ வைக்கிறது' என்று கூறி அனுப்பி வைத்தார் பிரபாகரன்.

இதற்கு பிறகு, 2008 மார்ச்சில் என் பணியை நிறைவு செய்துவிட்டு கிளிநொச்சியிலிருந்து தமிழகத்திற்கு புறப்பட வேண்டிய நாளில், விடைபெற்றுச் செல்வதற்காக அவரை சந்தித்தேன்.

சிங்கள அரசு யுத்தத்தை துவக்கியிருந்த நேரம் அது.அந்த சூழலிலும் முகம் மலர்ந்து பேசிய அவர், "அய்யா வந்து எவ்வளவு நாட்கள் ஆகியுள்ளன?' என்றார். "சரியாக இரண்டு வருடம்' என்றேன். "அப்பா... இரண்டு வருடங்கள் உருண்டோடி விட்டனவா?' என்று ஆச்சரியப்பட்டார்.

"தமிழீழம் மலர்ந்தால் நீங்களெல்லாம் இங்கு வந்து தமிழ்ப்பணி செய்ய வேண்டும் அய்யா' என்று கூறி வழி அனுப்பி வைத்தார் பிரபாகரன்.கிளிநொச்சியில் இரண்டு வருடம் தமிழ்ப்பணி செய்ததை நான் பாக்கியமாக கருதுகிறேன்.

அந்த 2 வருடங்கள்தான் என் தமிழ்ப்பணியில் மறக்க முடியாத நாட்கள். அங்குதான் தமிழ் வாழ்கிறது'' என்றார் பேராசிரியர் அறிவரசன்.

Saturday, January 2, 2010

2009 சினிமா... 'ஹிட்' அடித்த படங்கள்!

வழக்கம் போல 2009ம் ஆண்டிலும் நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் தமிழில் வெளியாகின. இதற்கு முந்தைய ஆண்டுகளில் இல்லாத அளவு 131 படங்கள் வெளியாகின இந்த ஆண்டு.
இவற்றில் வெற்றிக் கோட்டைத் தொட்டவை, கையைக் கடிக்காமல் தயாரிப்பாளர்களைக் காப்பாற்றியவை 19 படங்கள் மட்டுமே என்கிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில்.
அவற்றின் விவரம்...
நாடோடிகள்:
2009-ம் ஆண்டில் அதிக லாபம் தந்த படம் என்ற பெருமையைப் பெறுகிறது சசிகுமாரின் நாடோடிகள் திரைப்படம். சமுத்திரக் கனி இயக்கத்தில் குறைந்த பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் பல மடங்கு நல்ல லாபம் தந்தது. சமுத்திரக் கனிக்கு புதிய வாழ்கையும் தந்தது.
அயன்:
ஏவிஎம் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தை கேவி ஆனந்த் இயக்கியிருந்தார். இயக்குநர் கேவி ஆனந்த் என்றதுமே இது மிடில்கிளாஸ் படமாக இருக்கும் என்றுதான் நம்பினார்கள். படத்தின் மீது பெரிய நம்பிக்கை இல்லாததால் சன்னுக்கு விற்றது ஏவிஎம். ஆனால் அயனோ மசாலா படமாக வந்து வசூலையும் அள்ளியது. சன் டிவியின் வியாபார உத்தியே இந்த பெரிய வெற்றிக்குக் காரணம் என்பதில் இரண்டாவது கருத்து இருக்க முடியாது.2009-ம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றி சன் பிக்சர்ஸின் அயன்தான். சிவாஜி படத்துக்கு அடுத்து அதிக வசூல் பெற்ற படமும் இதுதான்.
உன்னைப் போல் ஒருவன்:
கமல்ஹாசன், மோகன்லால் நடிப்பில், ஸ்ருதி ஹாசன் இசையமைப்பில், சக்ரி டோலட்டியின் இயக்கத்தில் உருவாகி வெளியான உன்னைப் போல் ஒருவன், இந்திப்பட ரீமேக்தான் என்றாலும், தமிழில் ஒரு புதிய முயற்சியாகப் பார்க்கப்பட்டது.வித்தியாசமான தமிழ்ப் படமாக வந்த உன்னைப் போல் ஒருவன் மூலம் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் இசையமைப்பாளராக அறிமுகமானார். ஆனாலும் கமல் ஹாசன் தனது மதவாதப் பார்வையை இதில் திணித்திருப்பதாக சர்ச்சையையும் எழுப்பியது. எப்படியிருந்தாலும் கமலுக்கு இந்தப் படம் லாபமே, தமிழ் சினிமா வுக்கும் பலம் கூட்டியபடம்.
பசங்க:
எந்தவித ஸ்டார் வேல்யூவும் இல்லாமல் வந்து அனைவரது பாராட்டையும் அள்ளிக் கொண்டு போனது. ஒரு ஆங்கிலப் படத்தின் உல்டாதான் இந்தப் பசமும். ஆனால் கிராமப்புறத்து பசங்களும் உஷாராக, புத்திசாலித்தனமாக, லட்சிய வேகத்தோடு இருப்பவர்கள் என்ற செய்தியை நேட்டிவிட்டியோடு சொன்னதில் வெற்றி பெற்றிருந்தார் இயக்குநர் பாண்டிராஜ். நல்ல தயாரிப்பாளர் என்ற பெயரை சசிகுமாருக்குப் பெற்றுத் தந்தது பசங்க. ரேணிகுண்டா:
முற்றிலும் புதுமுகங்களுடன் வெளியாகி, சத்தம் போடாமல் அனைவரின் சபாஷையும் பெற்ற படம். அஜீத், நடிகர் என்ற நிலையிலிருந்து பெரிய நட்சத்திரமாக மின்ன உதவிய படங்களைத் தயாரித்த நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி, தன் மகன் ஜானியையே பெரிய கதாநாயகனாக்கி விட்டார் இந்தப் படம் மூலம்.
வெண்ணிலா கபடிக் குழு:
இந்தப் படமும் புதுமுகங்களுடன் வந்து ரசிகர்களின் மனதில் அமர்ந்த படம். சக்தே இந்தியாவை இன்ஸ்பிரஷனாக வைத்து நம்ம ஊர் கபடியை பிரதானப்படுத்தி ஜெயித்தவர்கள் இந்தக் குழுவினர். மூச்சு விடாமல் வெற்றிக் கோட்டைப் பிடித்து வெற்றியும் பெற்றது இந்த டீம்.யாவரும் நலம்:மாதவன், நீத்து சந்திராவின் நடிப்பில் வெளியான இந்த திரில்லர் படம், சுமார்தான் என்றாலும், விநியோகஸ்தர்களின் புலம்பலுக்கு ஆளாகாமல் தப்பித்த ஆச்சரியப் படம்.
மாயாண்டி குடும்பத்தார்:
பீம்சிங் காலத்துக்கு நம்மை அழைத்துச் சென்ற படம் இது. குடும்பத்தோடு அமர்ந்து பார்க்க வைத்த படம். முற்றிலும் இயக்குநர்களே நடிகர்களாக மாறி அனைவரையும் வியக்க வைத்திருந்தனர். கூட்டுக் குடும்பத்தின் அழகு, அவலம், பங்காளிச் சண்டை என உறவுகளுக்குள் பின்னிப் பிணைந்த இந்த மண்ணின் மனிதர்களது வாழ்க்கையைத் திரையில் பார்த்தபோது மனசு கனத்துப் போனது. பெரிய வெற்றி இல்லை என்றாலும், தயாரிப்பாளர்களை நிம்மதிப் பெருமூச்சு விட வைத்த படம் இது.
சிவா மனசுல சக்தி:
ஸ்லீப்பிங் விக்டரி என்று கோலிவுட் வட்டாரத்தில் அடிக்கடி சொல்லப்படும் வார்த்தையை நிஜமாக்கிய படம் இது. சுமாராக இருந்தாலும் நகரப் பகுதிகளில் இந்தப் படத்துக்கு பார்வையாளர்கள் அதிகமாக இருந்தது. ஒரு இடைவெளிக்குப் பிறகு படமெடுக்க வந்த விகடன் டாக்கீஸுக்கு இந்த வெற்றி உற்சாகம் தந்தது (ஆனால் அதே விகடன் குழுமத்தின் வால்மீகி சோகத்தைக் கொடுத்து விட்டது).
ஈரம்:
பேய்ப் படம் என்று கூறினாலும் பேயை கண்ணிலேயே காட்டாமல் தண்ணீரை மட்டும் காட்டி மிரட்டலாக எடுக்கப்பட்ட வெற்றிப் படம்.இந்தப் படத்தை எவ்வளவோ கேட்டுப் பார்த்தது சன் டிவி. ஆனாலும் ஷங்கர் அழுத்தமாக அமைதி காத்தார். படத்தின் வெற்றியைப் பார்த்து, வட போச்சே என சன் பிக்ஸர்ஸே புலம்பும் அளவுக்கு நன்றாக ஓடிய படம்.
பேராண்மை:
ஜெயம் ரவியின் நடிப்புப் பக்குவத்தை படம் போட்டுக் காட்டிய, சிறப்பான கதையம்சத்துடன் கூடிய அருமையான படம். ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் விமர்சகர்களின் பாராட்டுக்களையும் வாரிக் குவித்தது. வரிசையாக தோல்வியைத் தழுவிய ஐங்கரனுக்கு முதல் வெற்றியாக அமைந்தது இந்தப் படமே.
கந்தசாமி:
அது ஏனோ தெரியவில்லை இந்தப் படம் ஒட்டு மொத்தமாக விமர்சகர்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டது. ஓவர் பில்ட் அப் கொடுத்த சுசி கணேசன் கடைசியில் சிவாஜியின் கதையை காப்பியடித்துப் படமாக்கிய ஏமாற்றத்தின் விளைவு என்று கூட இசைத் சொல்லலாம். ஆனால் கலைப்புலி தாணுவோ பல கோடி ரூபாய் வசூல் விவரம் காட்டி, நூறாவது நாள் விழாவும் எடுத்துவிட்டார். எனவே இதுவும் ஹிட் லிஸ்டில் சேர்ந்தாகி விட்டது.
இவை தவிர,கண்டேன் அழகர் மலை, மதுரை சம்பவம், படிக்காதவன், மாசிலாமணி, கண்டேன்காதலை போன்ற படங்களும் சராசரியாக ஓடி தயாரிப்பாளர்களை நாலு காசு பார்க்க வைத்தன.

Friday, January 1, 2010

பாதிரியாருடன் கன்னியாஸ்திரி!


வேளாங்கண்ணி என்றாலே கிறிஸ்தவர்களின் புனித தலமாக மட்டு மல்ல ஜாதி, மதம் கடந்த சாந்திக்கான அமைவிடமும் கூட. இந்த புனித பூமியை ஒருமுறையாவது வந்து தரிசித்து விட வேண்டும் என்று கிறிஸ்தவர்கள் எண்ணுவது வழக்கம்.
வேளாங்கண்ணி மாதா தேவாலய திருவிழாவில் பல லட்சம் மக்கள் கூடி கொண்டாடுவது வழக்கமாகிக் கொண்டிருக்கிறது. வெளி மாநிலத்து சுற்றுலா பயணிகளும் கூட இப்படி வந்து செல்வது வழக்கம்.
இதே புனித பூமிக்கு புனிதர்கள் மட்டுமல்ல, பலநூறு காமுகர்களும் அவ்வப்போது வந்து செல்வதும், கூட்டத்தைப் பயன்படுத்தி திருட்டு கும்பல் அதிகரிப்பதும் வழக்கம்தான்.
இந்த புனித வெள்ளி நாளில் மட்டும் பலநூறு திருட்டு சம்பவங்கள் நடந்தும் வழக்காக பதிவாகவில்லை.அதே புனித வெள்ளி நாளில்தான் வேறொரு ஏடாகூடமான 10 நிமிடம் ஓடக்கூடிய அந்த வீடியோ காட்சி வெளியாகி புனித பூமியை நிலைகுலைய செய்து வருகிறது.
ஒரு பெட்ரூமில் உள்ளே நுழையும் ஒரு பாதிரியாரும், ஒரு கன்னியாஸ்திரியும் அவரவர்க்கே உரிய உடையில் இருக்கின்றனர். இது ஃபாதரின் அறை என்பது மட்டும் நன்றாக தெரிகிறது.உள்ளே நுழைந்த ஃபாதரின் முகம் காட்டப்படவில்லை. ஆனால் எதிரில் பெட்டில் உட்கார்ந்திருக்கும் கன்னியாஸ்திரி முகம் மட்டும் நன்றாகவே காட்டப்படுகிறது. கன்னியாஸ்திரி யான அந்த பெண்தான் முதலில் அந்த வேலையை தொடங்கு கிறார்.
சொல்ல முடியாத வரைமுறையற்ற விளையாட்டு களும் நடக்கிறது. இவையனைத்தையும் அந்த ஃபாதராக காட்டப்பட்ட நபர்தான் வீடியோ பதிவுகளையும் செய் திருக்கிறார். பல்வேறு விளையாட்டு களில் தொடங்கி உறவுகளில்தான் முடிகிறது. புனித பூமியில் புனிதர் களாக கருதப்பட்டவர்களின் லீலைகளை படம் பிடித்த பாதிரியாரே தன் நண்பர்கள் மூலமாக வீடியோவை வெளியிடங் களுக்கும் பரவ விட்டதால் இப்போது வேளாங் கண்ணி தாண்டியும் செய்தி பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.தேவாலய ஊழியர்கள் நம்மிடம், ""கன்னி யாஸ்திரிகளும், ஃபாதர்களும் ஏசுவின் உத்தரவுப்படி மக்களுக்கு முகம் சுளிக்காமல் சேவை செய்ய வருபவர்கள்தான்.
தங்கள் சேவையில் ஏதும் தடை வந்துவிடக்கூடாது என்பதற்காகவே திருமணம், இல்வாழ்வை துறந்து வருவார்கள். இந்த தேவாலயம் புகழ்பெற்றது. இங்கு பலநூறு பெண்கள் தினம் தினம் வந்து மக்கள் சேவை செய்ய வருகின்றனர். தேவன் அனுப்பினார்னு வருவாங்க. சேவையும் செய்வாங்க. புனிதமான உடையும் அணிந்து கொள்வாங்க. அவர்களில் ஒருசில காம இச்சை கொண்ட பெண் கள்தான் இப்படி கண்ட இடத்தில் தவறாக புனித மான உடையுடன் நடந்துகிட்டு புனித தலத்துக்கும், உடைக்கும் இழுக்கு ஏற்படுத்துறாங்க.
இங்க 6 பாதிரியார்களும், 5 பூஜை செய்றவங்களும், 15 பர்மனென்ட் கன்னியாஸ்திரிகளும் இருக்காங்க. ஆனா தினமும் 1000 பெண்கள் கன்னியாஸ்திரிகள் தியான கூடத்துக்கு வந்து பாட்டு பாடுவாங்க, சேவைகள் செய்வாங்க.இங்கேயே இருக்கிற ஒருசில ஃபாதர்கள் கொஞ்சம் கவுச்சி புடிச்சவங்களும் இருக்காங்க. இந்த பாட்டு பாட வர்ற கன்னியாஸ்திரிகளை பர்ம னென்ட் ஆக்குறேன்னு சிலரை பணிய வச்சிடு றாங்க. எல்லாருக்கும் தனித்தனியா தங்கும் அறைகள் தேவாலயம் ஒட்டியே இருக்கு. எல்லா சவுகரியமும் இருந்தாலும் பெண் உறவு வேணும் கிறபோது சிலர் இதுபோன்ற வேலைகள் செய்றாங்க.
சில பேர் வெளியிடங்களுக்கு போவாங்க. சிலர் இதுபோல அவங்க அறைகள்லயே நடந்துக்கிறாங்க. வெளியில இருந்து வரக்கூடிய பக்தர்களும் ஏதாவது பெண்களை தள்ளிக்கிட்டு வந்து இங்க அறையெடுத்து தங்கிட்டு போறவங்களும் இருக்காங்க. இப்ப இந்த வீடியோவுல இருக்கிற அந்த ஆண் யார்னு தெரியல. இதே தேவாலயத்துல பலமுறை சர்ச்சைகள்ல சிக்கியவராக ஒருவர் இருக்கிறார். அவர்தான் இந்த வேலை செய்வார்.
இங்க யாரும் யாரையும் கட்டுப் படுத்த முடியாமதான் நடந்துக் கிட்டு இருக்காங்க. புனித நாளான புனித வெள்ளியில் இந்த காட்சிகள் வெளியாகி இருப்பது ரொம்ப கஷ்டமாதான் இருக்கு. உடனே இது யார்னு கண்டு பிடிக்கணும். இல்லைன்னா புனித தலத்தின் புனிதம் கெட்டுப் போறதோட மேலும் தொடர்ந்து நடக்கத் தொடங்கிடும். இதுக்கு அரசுதான் நல்ல முடி வெடுக்கணும்'' என்று பேசியவர்கள் ஓடினார்கள் பூசைக்கு நேரமாச்சு என்று.இன்னும் சிலரோ, ""காஞ்சிபுரம் குருக்கள், சென்னை சாமியார், ஆந்திர கவர்னர் திவாரி வரிசையில இப்ப வேளாங்கண்ணியில வெளியாகி இருக்கிற இந்த புனித உடை ஏடாகூட காட்சிகள் ரொம்ப கேவலமா இருக்கு. இதுக்கெல்லாம் நல்ல நடவடிக்கை எடுக்கணும்.
வீடியோ எடுத்தவரையும் இதை வெளியில விடறவனையும் முதல்ல பிடிச்சு உள்ளே போடணும். ஊர் பேரை கெடுத்துட்டாங்க.புனிதமாக நினைக்கிற இந்த உடையும், உடைக்குள் இருக்கிற பெண்ணும் எப்படி என்ன சர்ச்சையை ஏற்படுத்தப் போகுதோ'' என்றனர். வேளாங்கண்ணி நகர மக்களோ, ""ஊர் பேரை கெடுத்துட்டாங்க'' என வருத்தப்பட்டனர்.
இந்த வீடியோ காட்சியில் பாதிரியார், கன்னி யாஸ்திரி வரைமுறையற்ற ஏடாகூட லீலைகளில் ஈடுபட்டிருக்கிறார்களே? யாரென்று தெரிந்து அவர்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட்டுள்ளதா? என்று தலைமை பாதிரியார் மைக்கேலிடம் பேசினோம்.""நீங்க சொல்றது புதுசா இருக்கு. இதுவரை என் கவனத்துக்கு வரல. இந்த வீடியோவுல யார் இருக்காங்க என்பதையும், எங்க எடுத்தாங்கன்னும் விசாரிக்கிறேன்.
தினமும் பல ஃபாதர்கள், கன்னியாஸ் திரிகள் வந்து போற இடம். இதுல யார்னு கண்டுபிடிக் கிறது? விசாரிக்கிறேன்'' என்றார் பொறுப்பாக.பாவங்களை மன்னியுங்கள் என்று மண்டியிட்டு நிற்கும் மக்களின் தூதுவர்களாக தேவனிடம் கொண்டு செல்லும் பாதிரியார்கள் போன்றவர் கள் இப்படியும் இருக்கலாமா? கன்னியாஸ்திரி என்றாலே புனித வார்த் தை.
அதை குழி தோண்டி புதைக்கலாமா பெண்கள்? என்ற வினாக்கள் தேவால யம் சுற்றி வந்து கொண்டிருக்கிறது.

சமாதானம் நோக்கிய பயணத்தில் எம்மை ஊக்குவிப்பவர்களோடு நல்லுறவைப் பேண தயார்

எமது இறைமையை ஏற்று சமாதானம், சுபீட்சத்தை நோக்கிய எமது பயணத்தில் எம்மை ஊக்குவிப்பவர்களோடு நல்லுறவைப் பேணுவதற்கும் நாம் தயாராக உள்ளோம்” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். இந்த வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி மேலும் தெரிவித்து ள்ளதாவது; புதியதோர் ஆண்டில் காலடியெடுத்து வைக்கும் வேளையில் கடந்த வருடத்தை மீட்டிப்பார்ப்பதும் புதிய ஆண்டின் எதிர்பார்ப்புகள் குறித்து சிந்திப்பதும் மரபாகும்.
கடந்த வருடம் நாம் ஒரு தேசமாக ஒன்றிணைந்து 27 வருடகால கொடூரப் பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளிவைத்து, எமது மக்கள் மத்தியிலிருந்த சந்தேகம், பிரிவினை என்பவற்றைத் துடைத்தெறிந்ததன் மூலம் நாம் பெற்றுக்கொண்ட அடைவுகள் குறித்த பெருமையோடும் திருப்தியோடும் புதிய ஆண்டில் பிரவேசிக்கின்றோம்.
எமது வரலாறு நெடுகிலும் நாம் செய்ததுபோன்ற அளப்பெரும் தியாகங்களின் மூலம் ஐக்கிய இலங்கையை வெற்றிகொண்டோம். புதியதோர் ஆண்டில் காலடி எடுத்துவைக்கும் இச்சந்தர்ப்பம் தேசத்தின் வெற்றிக்காக உயர்ந்த தியாகங்களைச் செய்த படைவீரர்கள், அவர்களது பெற்றோர்கள், பிள்ளைகள், மனைவிமார்கள் அனைவருக்கும் தேசத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவிப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாகும்.
ஒரு தேசம் என்ற வகையில் முன்னேற் றத்தையும் சுபீட்சத்தையும் எதிர்பார்க்கும் எமது மக்களின் அபிலாஷைகளை நிறை வேற்றவும் எமது எதிர்கால சந்ததியினருக்கு அமைதியும் ஐக்கியமும் நிறைந்த நாட்டை கட்டியெழுப்பவும் முடியுமென்ற மிகுந்த நம்பிக்கையோடு நாம் இப் புத்தாண்டைப் பார்க்கிறோம்.
பயங்கரவாதத்தைத் தோற் கடிக்கும் எமது முயற்சிக்கு குறுக்கே நின்ற இடையூறுகளுக்கு எதிராக நாம் உறுதியாக இருந்ததுபோன்று கடந்தகால காயங்களைக் குணப்படுத்தும் விடயத்திலும் வெளியிலி ருந்துவரும் அழுத்தங்களுக்கு அடிபணியாது அந்த இலக்கை அடைந்துகொள்ள எம்மை அர்ப்பணித்துள்ளோம்.
பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்து விடுபட்டுள்ள இச்சந்தர்ப்பத்தில் எமது முழுப்பலத்தையும் அபிவிருத்தி செயற்பாடு களை நோக்கி குவிப்பதற்கும் பயங்கர வாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கு மத்தியில் நாம் ஆரம்பித்த பல்வேறு பாரிய கருத்திட்டங்களைத் தொடர்வதற்கும் நாடு சுதந்திரமடைந்தது முதல் மறுக் கப்பட்டிருந்த முன்னேற்றத்தை எமது நாட்டுக்குக் கொண்டுவரும் வகையில் புதிய தொழில் முயற்சிகளை ஆரம்பிப் பதற்கும் எனது அரசாங்கம் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றது. இன்று ஆரம்பிக்கும் புதிய தசாப்தத்தின் எமது அபிவிருத்தி மூலோபாயங்கள் இலங்கையை தென்னாசியாவிலேயே ஒரு கேந்திர நிலையமாக மாற்றியமைக்கும்.
அந்தவகையில் அபிவிருத்தியை கட்டியம் கூறும் வகையில் அமைக்கப்படும் துறை முகங்கள், விமான நிலையங்கள் மற்றும் விரிந்த நெடுஞ்சாலைகளின் நிர்மாணப் பணிகள் வெற்றிகரமாக முன்னெடுக் கப்பட்டுவரும் அதேவேளை தகவல் தொழிநுட்ப அறிவையும் பரந்தளவில் அதிகரிக்கவும் எதிர்பார்த்துள்ளோம்.
எதிர்பார்க்கப்பட்ட ஒரு குறுகிய காலப் பகுதியில் உள்நாட்டில் இடம்பெயர்ந்த சுமார் மூன்று இலட்சம் மக்களில் பெருந்தொகையினரை மீள் குடியேற்றும் நடவடிக்கையில் நாம் வெற்றிகண்டோம். இதேபோன்று புத்தாண்டில் எமது மக் கள் நாட்டின் அரசியல் அபிவிருத்தியில் ஒரு தீர்க்கமான கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் ஒரு சந்தர்ப்பத்தில் இலங்கையின் தேசிய விவகாரங்களில் மூலோபாய தலையீடுகளைக் கொண்டுவர விரும்புபவர்களால் ஏற்படுத்தப்படும் பொரு ளாதார தடை அல்லது வர்த்தக நலன்களை தடைசெய்யும் அச்சுறுத்தல்களால் நாம் பின்வாங்கப்போவதில்லை.
எமது நாட்டில் பயங்கரவாதத்தைத் தோற் கடித்து எமது மக்களுக்கு சமாதானத்தைக் கொண்டுவருவதில் எமக்கு முழு அளவில் உதவிய நாடுகளோடு பலமானதும் நிலையானதுமான நட்பை பேண நாம் அர்ப்பணிப்போடு உள்ளோம். அதேபோன்று, எமது இறைமையை ஏற்று சமாதானம் சுபீட்சத்தை நோக்கிய எமது பயணத்தில் எம்மை ஊக்குவிப்பவர்களோடு நல்லுறவைப் பேணுவதற்கும் நாம் தயாராக உள்ளோம். புலர்ந்திருக்கும் இப்புத்தாண்டில் நாம் எதிர்பார்க்கும் அபிவிருத்தி எமது சூழ லைப் பாதுகாப்பதுவும் அதிகரித்துவரும் போட்டிமிக்க உலக சந்தைச் சூழலில் எமது உற்பத்திகளுக்கு நல்லதொரு இடத்தை உறுதி செய்யும் அதேவேளை எமது தேசிய சொத்துக்களைப் பாது காப்பதுவுமாகும். எல்லா இலங்கையர்களினதும் அபி லாஷையான கண்ணியமும் கீர்த்தியும் மிக்கதோர் இலங்கை தேசத்தை கட்டி யெழுப்புவதற்காக தேசத்தின் ஸ்திரத்தன்மை எமது மக்களின் முன்னேற்றம் என்ப வற்றுக்கான அர்ப்பணிப்போடு சமாதானமும் மகிழ்ச்சியும் சுபீட்சமும் நிறைந்த புத் தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மர்மமான முறையில் கணவன் மனைவி படுகொலை :திடுக்கிடும் தகவல்

தற்போது மீள் குடியேறியுள்ள குடும்பங்களை சோதித்துப் பார்ப்பதற்கும், இதுபோல உண்மையாகவே காட்டில் மறைந்திருக்கும் சில விடுதலை புலிகள் உணவு கேட்டு வந்தால் இவர்கள் எவ்வாறு நடந்துகொள்வார்கள் எனப் பரிசோதிக்கவே இவ்வாறு இராணுவத்தினர் நடந்துகொண்டதாக அங்கிருந்த சிலர் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் உண்மையாகவே விடுதலைப் புலிகள் வந்து உணவு கேட்டால் கூடக் கொடுப்பதற்கு இனி மக்கள் அஞ்சுவார்கள் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.சுமார் 3 நாட்களுக்கு முன்னர் இக் குடும்பம் கொலைசெய்யப்படதாகக் கூறப்படுகிற போதும் இதனைச் சுயாதீனமாக எம்மால் உறுதி செய்யமுடியவில்லை.
அதிலும் இவ் விடையம் குறித்து மக்கள் மேலும் கருத்துக்களைத் தெரிவிக்க மறுக்கின்றனர். மீள் குடியமர்த்தப்பட்ட பகுதிகளில் இவ்வாறான பல அசம்பாவிதங்கள் நடைபெறுகின்ற போதிலும் இதுவரை எதுவும் வெளிவராத நிலையிலேயே உள்ளது என்பது குற்பிடத்தக்க விடையமாகும்.
இவ்வாறன செயல்கள் மூலம் ஒரு உளவியல் போரைத் தொடுத்து, மீள் குடியேறிய மக்களை அச்சுறுத்தி தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க இலங்கை இராணுவம் பகிரங்கமாக முயல்வது தெரிகின்றது.புலம்பெயர் மக்களின் உறவினர்கள் யாராவது இது குறித்து அறிந்திருந்தால் எமது இணையத்துடன் தொடர்புகொள்ளவும்.
கொல்லப்பட்டதாகக் கூறப்படும் கணவன் மனைவி, யார் என்பது பற்றியோ அல்லது அவர்கள் பெயர்விபரங்களோ இன்னும் சரிவரக் கிடைக்கப்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Thursday, December 31, 2009

""போர் வெடிக்கும்'' -அனல் வீசிய தஞ்சை மாநாடு


உணர்ச்சியும் எழுச்சியுமாய் இரண்டு நாட்கள் தகித்தது தஞ்சைத் தரணி. பழ.நெடு மாறனின் உலகத் தமிழர் பேரமைப்பின் ஏழாம் ஆண்டு நிறைவையொட்டி, ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத் தமிழர் மாநாடு, தஞ்சையில் எம்.நடராஜனுக்கு சொந்தமான தமிழரசி மண்டபத்தில் டிசம்பர் 26,27 தேதி களில் நடைபெற்றது.

திரும்பிய பக்கமெல்லாம் பிரபாகரன் பேனர்கள், ஈழ வரைபடம், சிங்கள அரசின் கொலைவெறித் தாண்டவக் காட்சி களாய் தஞ்சாவூர் காட்சியளித்தது.முதல்நாள், மேரீஸ் கார்னரி லிருந்து புறப்பட்ட பேரணியில் நெடு மாறன் தலைமையில் ஆயிரம்பேர் திரண்டிருந்தனர். வெளிநாட்டிலிருந்து வந்திருந்த தமிழர்களும் இதில் அடக்கம். உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் மாநாட்டு அரங்கத்திற்கு சென்று சேர்ந்தது பேரணி. மாநாட்டு அரங்க நுழைவாயிலில், முள்ளிவாய்க்காலில் இருந்து சேகரித்து வரப்பட்ட ரத்தம் தோய்ந்த மண் வைக்கப் பட்டிருந்தது. அதற்கு அஞ்சலி செலுத்தி விட்டே அரங்கிற்குள் நுழைந்தனர்.ஈழம் தொடர்பான புத்தகங்கள், குறுந்தகடுகள் வெளியிடும் நிகழ்ச்சிகளும் கருத்தரங்குகளும் முதல்நாளில் முதன்மை பெற்றிருந்தன. கருத்தரங்கத்திற்குத் தலைமை தாங்கிய இந்திய-இலங்கை கூட்டமைப்பின் சச்சிதானந்தம், ஈழத்தமிழர்களுக்காகத் தாய்த் தமிழகம் என்ன செய்து விட்டது என்ற ரீதியில் பேச, அரங்கத்தின் வெப்பநிலை உயர்ந்தது. இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் கவியரங்கமும், வெளிநாடு வாழ் தமிழர்களின் அரங்க மும் முக்கியமானவை.

கவியரங்கம் அதன் வீச்சோடு நடந்தேற, வெளிநாட்டுத் தமிழர்கள் அரங்கத்திற்குத் தலைமை தாங்க வேண்டிய இலங்கை தமிழ் எம்.பி. சிவாஜிலிங்கம் , துபாயிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்தபோது, அனுமதியில்லை என அவரை திருப்பி அனுப்பினர் இந்திய அதிகாரிகள். இது இரண்டாம் நாளின் பரபரப்பாக அமைந்தது.மாநாட்டில் பங்கேற்க முடியாத நிலை யிலும், செல்போனில் தலைமையுரையாற்றினார் சிவாஜிலிங்கம். ""ராஜதந்திர கடவுச்சீட்டு இருந்தும்கூட என்னை அனுமதிக்க மறுத்து விட்டது இந்திய அரசு.

ராஜபக்சேவையும் பொன் சேகாவையும் எதிர்த்து தேர்தலில் போட்டியிடப் போகிறேன் என்பதாலேயே இந்தியா என்னைத் தடுத்துவிட்டது. இந்தியா வின் தவறான வெளியுறவுக் கொள்கைதான் என்னை இந்த மாநாட்டுக்கு வர விடாமல் தடை செய்துள் ளது. இக்கட்டான நிலையில் ஈழத்தமிழினம் உள்ளது. ஈழத்தமிழர் உரிமைகள் காக்கப்பட, தொப்புள் கொடி உறவுகளின் துணைவேண்டும்'' என்றார்.

கனடாவிலிருந்து வந்தி ருந்த தேவராஜன், ""இந்திய சுதந்திரத்திற்காக சிவாஜிலிங்கத்தின் தாத்தா இலங்கையில் போராடினார். ஆனால், பேரனுக்கோ இந்தியாவில் நுழையவே அனுமதியில்லை'' என்றார் சோகத்துடன். மாநாட்டில் தோழர் நல்லகண்ணு, பேராசிரியர் விருத்தாசலம், பெங்ளூரு தமிழ்ச்சங்கம் சுப்ரமணியன், அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா ஆகியோருக்கு "உலகப் பெருந்தமிழர்' பட்டம், பிரபாகரன் படம் போட்ட விருதுடன் வழங்கப் பட்டது.தோழர் நல்லகண்ணு, ""முள்ளிவாய்க்கால் சோகம் இனி எந்த மூலையிலும் நடக்கக் கூடாது.

போராட்ட முறையை எதிரிதான் தீர்மானிக்கிறான். அதனால், ஆயுதம் ஏந்துவது தவறில்லை.

இலங்கைப் பிரச் சினையில் இந்திய அரசின் அணுகுமுறை தவறாக உள்ளது'' என்றார். ம.நடராஜன் பேசும்போது, ""தனித்தமிழ்நாடு அமைந் திருந்தால் தனி ஈழம் எப்போதோ அமைந் திருக்கும்'' என பரபரப்பூட்டினார்.தாயகத் தமிழர்கள் என்ன செய்தார்கள் என்று சச்சிதானந்தம் முதல்நாள் கேட்டதற்கு இரண்டாம் நாளில் பதிலளித்தார் பழ.நெடு மாறன்.

""புலிகளுக்கு சிகிச்சை அளித்த வைகோ தம்பி சிறைக்குப் போனார். நானும் போனேன். பயிற்சி பட்டரை அமைத்து உதவி செய்தவர் எம்.ஜி.ஆர். இது ஜெய லலிதாவுக்குப் பிடிக்கா மல், பயிற்சி அளிப் பவர்கள் எங்க ளையே அழிக் கலாமே என பிரதமர் இந்திராவிடம் சொல்ல, இதே கேள்வியை எம்.ஜி.ஆரிடம் கேட்ட இந்திரா, பதிலையும் அவரே சொல்லி எம்.ஜி.ஆரை எழுதச் சொன்னார். அதாவது, அவர்கள் புலிகள் அல்ல, அகதிகள் என்று.

சட்டசபைக்கு அனைவரும் கருப்புசட்டை போட்டு வரச்சொன்னார் எம்.ஜி.ஆர். அப்போதுதான் கலைஞரும் பேராசிரியரும் பதவியை ராஜினாமா செய்தார்கள்'' என்றார்.கவிஞர் காசிஆனந்தன், ""நான் சிங்கள அரசில் வேலை பார்த்தபோது, எனக்கு கீழே இருந்து வேலை பார்த்த சிங்களர்கள்கூட தமிழ் நாய்கள் என்பார்கள். பிரபாகரன் வந்த பிறகு, அதே சிங்களர்கள் எங்கள் தமிழர் களைப் பார்த்து தமிழ்ப்புலிகள் என்றார்கள்.

உலக வரலாற்றில் பிரபாகரன் குடும்பம் போல தியாகம் செய்த குடும்பம் இல்லை. விரைவில் பெரிய போர் வெடிக்கும்'' என்றார் உணர்ச்சி கரமாக.ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, ""திருப்பதிக்கு வந்த ராஜபக்சேவுக்கு அனுமதி வழங்குகிறார்கள். ஆனால், சிவாஜிலிங்கத்துக்கு அனுமதியில்லை. இது பின்னடைவு இல்லை.

தொடக்கம். 7 நாட்டு படைகளுடன் போரிட்ட ஒரே தலைவன் பிரபாகரன் மட்டும்தான். அவர் தலைமையில் வீறுகொண்டெழுவோம். வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு உலகத்தமிழர்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அதை இங்கேயும் கொண்டுவந்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும்'' என்றார். அதுவே, தீர்மான மாகவும் நிறைவேற்றப்பட்டது.

ஈழத்தமிழர்களின் துயர்துடைக்க தாயகத் தமிழர்களின் கரங்கள் எப்போ தும் தயாராக இருக்கிறது என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறது தஞ்சையில் நடந்த உலகத் தமிழர் மாநாடு.