பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Saturday, January 30, 2010

பொதுமக்களின் நாளாந்த இயல்பு வாழ்க்கைக்கு தடையாக இருக்க வேண்டாம்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பொதுமக்களிடம் வேண்டுகோள்


பொது மக்களின் நாளாந்த செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அவர்களது இயல்பு வாழ்க்கைக்குத் தடையான நடவடிக்கைகளில் எவரும் ஈடுபட வேண்டாம் என்றும் கடந்த காலங்களில் இவ்வாறான நிலைமைகள் தோன்றி எமது மக்களை பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாக்கியதை நாம் மனதில் கொண்டு இவ்வாறான நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்வதே நாம் எமது சமுதாயத்திற்கு செய்யும் உன்னத கடமையாகும் என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக எழுந்துள்ள ஒரு தகவலை அடிப்படையாகக் கொண்டு, அவர் அப்பதவியை இராஜினாமா செய்யக் கூடாது எனக் கோரி இன்றைய தினம் பொது அமைப்புக்களினால் யாழ் குடாநாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பொது ஹர்த்தால் நடவடிக்கையையடுத்தே அமைச்சர் அவர்கள் மேற்படி வேண்டுகோளை விடுத்துள்ளார்.

கடந்த காலங்களில் இவ்வாறான ஹர்த்தால்கள் கடையடைப்புக்கள் போன்ற பல்வேறு இயல்பு வாழ்க்கையை சீர்குலைக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு வந்த போதெல்லாம் தான் அதற்கு தொடர்ந்தும் எதிராகவே கருத்துக் கூறி வந்துள்ளதை உணர்த்தியதுடன் பொதுமக்களின் உணர்வுகளையும் கருத்து கூறும் சுதந்திரத்தையும் தான் பெரிதும் மதித்து வருவதாகவும் அதற்காக பொதுமக்களின் நாளாந்த இயல்பு வாழ்க்கைக்குத் தடையான வகையில் செயற்பாடுகளை மேற்கொள்வது தனக்கு மிகுந்த வேதனையைத் தருவதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனது இராஜினாமா தொடர்பில் தான் பரிசீலனை செய்து வருவதாகவும் இவ்விடயம் தொடர்பில் தான் பகிரங்கமாக அறிவிப்பதாகவும் எனவே இவ்வாறான ஹர்த்தால் செயற்பாடுகளை இப்போதும் சரி எதிர்காலத்திலும் சரி தவிர்த்துக் கொள்வதே எமது மக்களுக்கும் எமது சமுதாயத்திற்கும் நாம் செய்யும் சிறந்த கடமையாகும் என்றும் உணர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Friday, January 29, 2010

அரசியல் அமைப்பில் திருத்தம்: நாட்டில் நல்லாட்சி:

அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வந்து நாட்டில் நல்லாட்சியொன்றை ஏற்படுத்துவதற்கு எதிர்க்கட்சியினர் அரசாங்கத்துக்குப் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். அதற்காக ஒருவார கால அவகாசம் வழங்கப்படுமென அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
எதிர்க்கட்சி இதற்கு ஒத்துழைப்பு வழங்காத பட்சத்தில் பாராளுமன்றத்தின் மூலம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்று எதிர்கால நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளதெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
தகவல் ஊடகத்துறை அமைச்சில் நேற்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு விளக்க மளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,
வரலாற்றில் முன்னெப்போதுமில் லாதவாறு 60 வீதமான வாக்குகளைப் பெற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றுள்ளார். இது நன்றியுணர்வுள்ள நாட்டு மக்கள் அவருக்கு வழங்கிய கெளரவ மாகும். இவ்வெற்றியையடுத்து நாட்டை சமாதானத்திலும் அபிவிருத்தியிலும் முன்னெடுப்பதே எதிர்கால நோக்கமாகும். நல்லாட்சியை ஏற்படுத்தி நாட்டைக் கட்டியெ ழுப்புவதில் எதிர்க்கட்சி எம்முடன் ஒத்துழைக்க முடியும். அரசியல மைப்பில் திருத்தம் கொண்டு வருவதில் அவர்கள் எமக்கு உதவ முடியும்.
எவ்வாறெனினும் பாராளுமன்றத் தேர்தலில் எமக்கு நாட்டு மக்கள் மூன்றி லிரண்டு பெரும்பான் மையைப் பெற்றுத்தருவர் என்பது உறுதி. நாட்டின் நிர்வாகத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான அங்கீகாரத்தை நாம் மக்களிடம் கோருவோம். மக்கள் அதற்கு பூரண ஆதரவு தருவது உறுதி.
சகல மக்களுக்கும் பொருத்த மானதான நிர்வாகத்தை ஏற்படுத்துவதே ஜனாதிபதியின் நோக்கம். எதிர்வரும் நவம்பர் மாதம் வரையிலான அவரது முதலாவது பதவிக் காலத்தில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார். அடுத்து வரும் ஆறு வருடங்களில் நாட்டில் நல்லாட்சியை அவர் ஏற்படுத்துவார்.
இதேவேளை, இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் யானையா - அன்னமா என்ற பிரச்சினையும் எதிர்க்கட்சியினருக்கு உள்ளது. சாதாரண மக்களின் தேவைகளைப் புரிந்து கொள்ளாமல் செயற்பட்டால் இன்னும் ஐந்து தேர்தல்களில் கூட ஐ. தே. க. வால் வெல்ல முடியாமற் போகும்.
இம்முறை தேர்தலில் சிறுபான்மை மக்கள் ஜனாதிபதிக்கு ஓரளவு ஆதரவு வழங்கியுள்ளனர். கடந்த காலங்களை நோக்குகையில் சிறுபான்மையினர் பொதுஜன ஐக்கிய முன்னணிக்கோ அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கோ பெருமளவு ஆதரவு வழங்கியதில்லை. அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கே ஆதரவு வழங்கினர். இம்முறை எம்முடனிருந்த தமிழ் மக்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒப்பந்தமே திசை திருப்பியது.
வாக்களிப்பை நோக்குகையில் புலிகளின் தமிbழ எல்லைக்குள் வாழும். மக்களே எதிர்க்கட்சிக்கு வாக்களித்துள்ளமை தெரிகிறது.
அரசாங்கம் தற்போதுதான் தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கிணங்கவே டக்ளஸ் தேவானந்தா, கருணா, பிள்ளையான் போன்றவர்களை அரசாங்கம் நியமித்து செயற்படுகிறது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். (ஸ)

பாராளுமன்றத்தைக் கலைக்க ஏற்பாடு: ஓரிரு தினங்களில் அறிவிப்பு வெளியாகும்

பாராளுமன்றம் வெகு விரைவில் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான அறிவித்தல் இன்னும் ஓரிரு வாரங்களில் விடுக்கப்படும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான மைத்திரிபால சிரிசேன தெரிவித்தார்.
ஜனாதிபதிக்கு கிடைக்கப்பெற்ற 60 வீத வாக்குகளை தக்கவைத்துக்கொண்டு எதிர்க் கட்சிக்கு வழங்கப்பட்ட 40 வீத வாக்குகளையும் வெற்றிகொள்ளும் முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பொதுத் தேர்தல் ஒன்றுக்கு முகம் கொடுப்பதற்கு தேவையான நடவடிக் கைகளை உடனடியாக ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றதை அடுத்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்திருந்த விஷேட செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை நடைபெற்றது.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம் ஜயந்த், அமைச்சர்களான கலாநிதி சரத் அமுனுகம, பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், ரிஷாத் பதியுதீன், சம்பிக ரணவக்க, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச ஆகியோர் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் அமைச்சர் மைத்திரிபால மேலும் கூறுகையில்:-
தற்போதைய பாராளுமன்றத்தின் காலம் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் முடிவடையவுள்ளது. இந்நிலையில் அரசியலமைப்பின் பிரகாரம் பொதுத் தேர்தல் ஒன்றுக்கான அறிவிப்பு வெகு விரைவில் விடுக்கப்படும்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடனான பேச்சுவார்த்தைகள் இன்னும் ஓரிரு தினங்களில் நடைபெறவுள்ளது.
பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் தகவல்களை திரட்டி பெயர்ப்பட்டியலை தயாரிக்கும் நடவடிக்கைகள் நேற்று (இன்று) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் என்ற வகையில் இதற்கான ஆலோசனைகளை வழங்கியுள்ளேன் என்றார்.
மக்கள் எதிர்பார்க்கும் வளமான எதிர்காலம் நிச்சயம் உருவாக்கப்படும். மஹிந்த சிந்தனையில் கூறப்பட்டமை நிறைவேற்றப்படும். உலகிலேயே வளமான நாடாக மாற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் எம்மீது நம்பிக்கை வைத்துள்ள மக்கள் 60 வீத வாக்குகளையும் எதிர்க்கட்சி வேட்பாளருக்கு 40 வீத வாக்குகளையும் வழங்கியுள்ளனர்.
எஞ்சிய 40 வீதத்தை பெற முடியாமல் போன காரணங்கள் ஆராயப்பட்டு அந்த குறைகளை நிவர்த்தி செய்துகொண்டு ஜனநாயக முறையிலான அரசியலின் மூலம் எஞ்சிய 40 வீத வாக்குகளையும் எமது வெற்றிக்காக பெற்றுக்கொள்ள முயற்சிப்போம்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இந்த நாட்டை முன்னேற்ற எதிர்க்கட்சியின் 40 வீத வாக்காளர்களும் எம்முடன் கைக்கோர்க்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றார்.
சரத் பொன்சேக்கா தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாக கூறி வருகிறார். அவருக்கு நாங்கள் ஒன்றும் செய்யப்போவதில்லை, இதற்கான தேவையில்லை.
எமது கூட்டங்களில் பெருந்தொகையான மக்கள் கலந்துகொண்டனர். ஆனால் குறைவான வாக்குகளே கிடைத்துள்ளது. இது நீதியான தேர்தல் இல்லை என்று சரத் பொன்சேகா தெரிவித்தார். இதன் மூலம் அரசியல் தெரியாதவர் என்பதை தெளிவாக காண்பிக்கின்றது என்றார்.
மக்கள் விடுதலை முன்னணி இம்முறை தவறான முடிவுகளை எடுத்துள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Thursday, January 28, 2010

19 இலட்சம் மேலதிக வாக்குகளால் ஜனாதிபதி அமோக வெற்றி

லக நாயகனாகவும், ஜனாதிபதித் தேர்தலில் உலகிற்கே வழிகாட்டியாகவும் தனது புதிய வரலாற்றினை நிரூபித்துள்ள எமது இலங்கை மாதாவின் பெருமகனுக்கு http://www.shockan.blogspot.com/ வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது.

Wednesday, January 27, 2010

18 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ராஜபக்சே வெற்றி

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சே மீண்டும் வெற்றி பெற்றார்.
சுமார் 18 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அவர் சரத் பொன்சேகாவை தோற்கடித்தார்.இதன்மூலம் 3ல் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார் ராஜபக்சே.
இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேற்று நடந்தது. மாலை 4 மணிக்கு வாக்குப் பதிவு முடிந்தது. கிட்டத்தட்ட 60 சதவீதத்திற்கும் மேலான வாக்குகள் பதிவாகியிருந்தன.
வாக்குப் பதிவு முடிந்த பின்னர் இரவில் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.இதில் ஆரம்பத்திலிருந்தே ராஜபக்சே முன்னிலையில் இருந்து வந்தார். தமிழர் பகுதிகளில் பொன்சேகாவுக்கு கூடுதல் வாக்குகள் கிடைத்தாலும் அவர் ஒட்டுமொத்த வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்தில் இருந்தே பின் தங்கியிருந்தார்.இறுதியில் 18 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ராஜபக்சே வெற்றி பெற்றதாக அந்நாட்டு அரசு தொலைக்காட்சியான ரூபவாகினி அறிவித்துள்ளது.
இதன் மூலம் இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் வாக்கு வித்தியாசத்திலும் ராஜபக்சே வென்றுள்ளார்.பொன்சேகா வெற்றி பெறுவார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், அவர் தோல்வியுற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.வட கிழக்கில் பொன்சேகாவுக்கு கூடுதலான வாக்குகளும், தெற்கில் ராஜபக்சேவுக்கு கூடுதலாகவும் வாக்குகள் கிடைத்துள்ளன.
கடந்த 2005ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சே 50.29 சதவீத வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்கே 48.43 சதவீத வாக்குகளைப் பெற்றார். ஆனால் இம்முறை சுமார் 60சதவீத வாக்குகளை ராஜபக்சே பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் 6வது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே நாளை பதவி ஏற்பு/mahinda rajapaksa won election


இலங்கையின் ஆறாவது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச என்பது உறுதியாகிவிட்டது.

Tuesday, January 26, 2010

2ம் இணைப்பு ‐ யாழ்ப்பாணத்தில் தொடர்; குண்டுத் தாக்குதல் நாட்டின் பல பகுதிகளில் வன்முறைகள்

யாழ்மாவட்டத்தில் பரவலாக பல பிரதேசங்களில் குண்டுவெடிப்புக்கள் இடம்பெற்றுள்ளன. மக்களை வாக்களிப்பிலிருந்து தடுப்பதற்காகவே இந்தக் குண்டுவெடிப்புகள்நிகழ்த்தப்படுவதாக யாழ் கள நிலவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விசேட விமானத்தில் டில்லி பயணம்‐

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விசேட விமானத்தில் டில்லி பயணமாகியுள்ளதாக ஜனாதிபதி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தத் தேர்தல் தனக்குச் சாதகமாக இருக்கப் போவதில்லை என உணர்ந்த மகிந்த ராஜபக்ச அது தொடர்பாக டில்லித்தலைமைகளுடன் உரையாடவே உடனடியாக டில்லி புறப்பட்டுள்ளதாக ஒரு தகவல் கூறுகிறது.
சரத் பொன்சேகா ஜனாதிபதியாவதைத் தடுக்கு முகமாக இந்திய இராணுவத்தைத் தலையீடு செய்யக் கோருவதற்கான விஜயமாக இது இருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.

Sunday, January 24, 2010

ராஜபக்சே சரத் பொன்சேகா வெல்வது யார்?

பரபரப்பான உச்சத்தில் இருக்கிறது 26-ந்தேதி நடக்கும் இலங்கை ஜனாதிபதிக்கான தேர்தல்.
இந்த தேர்தலை நடத்துவதற்கு இன்னும் இரண்டு வருட கால அவகாசம் இருக்கும் நிலையில், போரின் வெற்றியை தனதாக்கிக் கொள்ளும் தீராத ஆசையில், முன்கூட்டியே நடத்துகிறார் தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் (ஆளும் கட்சி கூட்டணி) சார்பில் தற்போதைய ஜனாதிபதி ராஜபக்சேவும், இலங்கையின் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கே உருவாக்கிய "தேசிய சுதந்திர கூட்டமை'ப்பின் (எதிர்க்கட்சிகளின் கூட்டணி) சார்பில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவும், பிரதான வேட்பாளர்களாக தேர்தல் களத்தில் நிற்கிறார்கள்.
ஜனநாயக கோட்பாடுகளை சிறிதும் மதிக்காமல் ஈழத் தமிழினத்தை கொன்றழித்து, உலகமே அதிர்ச்சியடையும் வகையில் மனித பேரவலத்தை தமிழீழத்தில் நடத்திக் காட்டியவர்களான இந்த நண்பர்கள் இரண்டுபேரும் (ராஜபக்சே, சரத் பொன்சேகா) தற்போது எதிரிகளாக நின்று தேர்தலை சந்திக்கின்றனர்.
தேர்தல் களத்தில் ராஜபக்சேவும், சரத்பொன்சேகாவும் சம பலத்துடனேயே மோதுகிற சூழல் காணப்படுகிற நிலையில், இவர்களின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிற சக்தியாக தமிழர்களின் 15 சதவீத வாக்குகள் இருப்பதாகவே தேர்தல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.
இதனால் தமிழர்களின் வாக்குகளை குறிவைத்து களத்தில் குதித்திருக்கிறார் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் டெலோ இயக்கத்தைச் சேர்ந்தவருமான சிவாஜிலிங்கம். ஆனால், இவருக்கு தங்களின் ஆதரவை தெரிவிக்க மறுத்து, சரத் பொன்சேகாவிற்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளது "தமிழ்த் தேசிய கூட்டமைப்பு' என்பது இந்த தேர்தலில் குறிப்பிடத் தக்கது.
""2008-ல் எடுக்கப் பட்ட வாக்காளர் பட்டிய லின் அடிப்படையில் நடக் கிறது இந்தத் தேர்தல். அதன்படி ஒட்டுமொத்த இலங்கையின் வாக்காளர்கள் எண்ணிக்கை 1 கோடியே 40 லட்சத்து 88 ஆயிரத்து 500 பேர். இதில் தமிழ் வாக்காளர்கள் (வடகிழக்கு, மலையகம், மேல் மாகாணம்) எண்ணிக்கை 15 சதவீதம்.
அதாவது, 21 லட்சத்து 13 ஆயிரத்து 275 பேர்'' என்கிறது இலங்கை தேர்தல் ஆணையம்.மேலும், ""ஜனாதிபதி தேர்தலில் பிரதான வேட்பாளர்களான ராஜபக்சேவிற் கும் சரத்திற்கும்தான் போட்டி. இலங்கைத் தேர்தல் நடைமுறைகளின்படி, பதிவாகிற வாக்குகளில் யார் அதிகம் வாங்கு கிறார்களோ அவர்தான் வெற்றி பெற்றவர் என்று அறிவிக்க முடியாது. மாறாக, பதிவாகிற வாக்குகளில் 50 சதவீதத் திற்கும் அதிகமாக யார் பெறுகிறார்களோ அவர்தான் வெற்றி பெற்றவர்.
50 சதவீதத் திற்கும் அதிகமான வாக்குகளை ஒருவர் வாங்கிவிட்டால் வெற்றியை உடனடி அறிவிப்பதில் எந்த சிக்கலும் இருக்காது.அதேசமயம், பிரதான வேட்பாளர் கள் இருவருமே 50 சதவீதத்திற்கும் குறைவாக முதல் இரண்டு இடங்களை பிடிக்கிற போதுதான் சிக்கல்.
, இரண்டாவது விருப்ப வாக்குகள் யாருக்கு அதிகம் கிடைத்துள்ளதை வைத்துதான் வெற்றி தோல்வி முடிவு செய்யப்படும்.
அதாவது, இந்தத் தேர்தலில் ஒருவர் இரண்டு வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். முதல் வாக்கினை ராஜபக்சே வுக்கும் இரண்டாவது வாக்கினை சரத் திற்கும் ஒருவர் போடலாம். அல்லது முதல் வாக்கு சரத்துக்கும் இரண்டாவது வாக்கு ராஜ பக்சேவுக் கும் பதிவாகலாம். அல்லது முதல் வாக்கு இவர்களில் ஒருவருக்கும் 2-வது வாக்கு இவர்கள் அல்லாத வேறு ஒருவருக்கும் ஒருவரின் ஓட்டு பதிவாகலாம்.
அந்த வகையில், முதல் ரவுண்டில் ராஜபக்சேவுக்கு 49 சதவீதமும் சரத்திற்கு 48 சதவீதமும் வாக்குகள் பதிவாகி யிருக்கும் பட்சத்தில்... இருவருக்கும் கிடைத்துள்ள இரண் டாவது விருப்ப வாக்குகள்தான் யார் வெற்றி பெற்றவர் என்பதை முடிவு செய்யும். இதுதான் இங்குள்ள தேர்தல் நடைமுறை.2005-ல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்சே 50.23 சதவீதமும் ரணில் விக்ரமசிங்கே 49.3 சதவீதமும் முதல் ரவுண்டில் வாக்குகள் வாங்கியிருந்தனர். முதல் ரவுண்டிலேயே 50 சதவீதத்தை ராஜபக்சே தாண்டியிருந்ததால் அவரது வெற்றியை உடனே அறிவிக்க முடிந்தது.
ஆனால், தற்போதைய தேர்தலில் அந்த சூழல் இருப்பதாக தெரியவில்லை. காரணம், யாரும் 50 சதவீதத்தை கடக்க முடியாத நிலையே இருக்கிறது. அதனால், ""இரண்டாவது விருப்ப வாக்குகள்'' என்கிற நிலையை நோக்கியே தற்போதைய இறுதி கள நிலவரம் போய்க் கொண்டிருக்கிறது!'' என்றும் சுட்டிக் காட்டுகிறார்கள்.யுத்தத்தின் வெற்றியால் கிடைத்த இமேஜ் மூலம் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து விடலாமென்றும் கண்களுக்கு எட்டிய தூரத்தில்தான் தமது வெற்றி இருக்கிறது என்றும் கணக்கிட்டு முன்கூட்டியே தேர்தல் நடத்த முன்வந்துள்ள ராஜபக்சேவிற்கு, சரத் பொன்சேகாவின் திடீர் அரசியல் பிரவேசமும் எதிர்க்கட்சிகளின் "பொது வேட்பாளர்' என்கிற கான்ஸெப்ட்டும் மிகப் பெரிய தடையாக பூதாகரமாகிவிட்டது. இந்த சூழலில் இரு தரப்புமே... சிங்களர் மற்றும் தமிழர்களின் வாக்குகளில் அதிகபட்ச வாக்குகளை பெற்று விட, இறுதிக்கட்ட மாயாஜாலங்களை காட்டிக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் இரண்டு தரப்பினரும் "முதல் ரவுண்டிலேயே வெற்றி பெறுவோம்' என்று மார்தட்டுகிறது.
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக சரத் பொன்சேகாவை களத்தில் இறக்கியுள்ள ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி தலை வர்கள், ""2005-ல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் 1 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில்தான் ராஜபக்சேவிடம் தோற்றுப் போனார் ரணில். தேர்தலை புறக்கணிக்காமல் தமிழர்கள் ஓட்டுப் போட்டிருந்தால் ராஜபக்சே ஜெயித்திருக்கவே முடியாது. அந்த தேர்தலில் எங்களிடம் கூட்டணி பலமே கிடையாது. ராஜபக்சேவிடம் கூட்டணி பலம் வலிமையா இருந்தது. கூட்டணி பலமே இல் லாமல், 1 சதவீத வித்தியாசத் தில்தான் தோற்றார் ரணில். ஆனால், இந்த முறை அப்படி அல்ல, ரணில் உருவாக்கியுள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணி அசுர பலம் கொண்டதாக இருக்கிறது.குறிப்பாக, கடந்த தேர்தலில் ராஜபக்சேவின் வெற்றிக்கு பெரிதும் காரணமாக இருந்த ஜே.வி.பி. (சிங்கள பேரினவாத கட்சி) தற்போது எங்க கூட்டணியில் இருக்கிறது. மேலும் ராஜபக்சேவின் சுதந்திரா கட்சியை பிளவுபடுத்தி தனிக்கட்சி கண்டுள்ள மங்கள சமரவீராவும், 2004 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு 7 சதவீத வாக்கு களைப் பெற்ற தமிழ்த்தேசிய கூட் டமைப்பும், அதே தேர்தலில் போட்டி யிட்டு 9 எம்.பி.க்களை பிடித்த ஜாதிக ஹெல உறுமய கட்சியும், 5 எம்.பி.க்களை பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், மேல் மாகாணத்தில் தமிழர்களின் ஆதரவு பெற்ற மனோகணேசன் எம்.பி.யின் ஜனநாயக மக்கள் முன்னணியும் சரத்தை ஆதரித்து எங்க கூட்டணியில் இருக்கின்றன.
மெகா கூட்டணியாக நாங்கள் இருக்கிறோம். தவிர, அதிகார துஷ்ய பிரயோகம், ஊழல் முறைகேடுகள், குடும்ப அரசியல், ராணுவத்தின் தியாகத்தை கேவலப்படுத்தியது, பொருளாதார சீரழிவு, விலைவாசி உயர்வு என்பவை ராஜபக்சேவிற்கு எதிராக இருக்கிறது. மேலும், சரத் பொன்சேகாவை காட்டிலும் ராஜபக்சே மீதுதான் தமிழர்களின் வெறுப்புகள் அதிகரித்து கிடக்கிறது. அதேபோல, எந்த கட்சியையும் சாராதவர் என்கிற இமேஜ் சரத்திற்கு இருப்பதும் கூடுதல் பலம். அதனால், எந்த அரசியல் கண் ணோட்டத்தில் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் முதல் ரவுண்டிலேயே சரத்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விடும்'' என்கின்றனர் மிகுந்த நம்பிக்கையுடன்.ஆனால், இந்த விபரங்களையெல்லாம் மறுத்துப் பேசுகின்ற ராஜபக்சேவின் இலங்கை சுதந்திரா கட்சியினரோ,
""ஒரு தேர்தலில் கூட்டணி பலம் மட்டுமே வெற்றியை தீர் மானிப்பதில்லை. சிங்களவர்களின் ஒட்டுமொத்த ஆதரவையும் யார் பெறுகிறார் என்பதில்தான் வெற்றி இருக்கிறது. அந்த வகையில், 30 வருட காலம் சிங்கள வர்களை அச்சுறுத்திக் கொண்டி ருந்த ஆயுத போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து சிங் களவர்க்கு நிம்மதியை ஏற்படுத்தித் தந்திருப்பது ராஜபக்சேதான். அது மட்டுமல்லாது, சர்வதேச நாடுகளிடம் இலங்கையின் இறையாண்மையை யும் தனித்தன்மையையும் அடகு வைக்காமல் ஆட்சி செய்த ராஜ பக்சேவிற்குத்தான் சிங்கள மக்க ளிடம் ஆதரவு அதிகம் உள்ளது. சிங்கள மக்களின் பெரும்பான்மை வாக்குகள் ராஜபக்சேவிற்கு கிடைக்கும் என்பதால், இரண்டாவது விருப்ப வாக்கிற்கு அவசியமே இருக்காது. நாங்கள் எடுத்துள்ள கருத்துக் கணிப்பும் இதனைத்தான் கூறுகிறது. மேலும், 15 சதவீதம் உள்ள தமிழர் களின் வாக்குகள் ஒரே இடத்தில் குவிந்துவிடும் என்பதெல்லாம் ஏற் பதற்கல்ல. வட பிரதேச தமிழர்கள் (யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள்) வேண்டுமானால் ராஜபக்சேவிற்கு எதிராக இருக்கலாம். மற்றபடி தென்னிலங்கை, மத்திய இலங்கை, கிழக்கு பகுதியில் உள்ள தமிழர்களில் கணிசமானவர்கள் ராஜபக்சேவை ஆதரிப்பார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது. மேலும், தமிழர்களில் ராஜபக்சேவை எதிர்ப்பவர்கள் சரத்தை ஆதரிப்பார்கள் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. போரின் விளைவுகளுக்கு சரத்தும் காரணம் என்பதை தமிழர்கள் உணராதவர்கள் அல்ல.
அதனால், இருவருக்கும் இல்லாமல் தேர்தலை பெரும்பான்மை தமிழர்கள் புறக்கணித்தாலும் அது எங்களுக்கு பலம்தான். ஆக, ராஜபக்சேதான் மீண்டும் ஜனாதிபதி. இது உறுதி செய்யப்பட்ட விஷயம்!'' என்று விவரிக்கின்றனர்.இரு தரப்பும் இப்படி தங்களின் வெற்றி குறித்து விவரித்தாலும், தமிழர்களின் 15 சதவீத வாக்குகள் எந்த பக்கம் சிதறும் என்றே அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் விவாதிக்கப்படுகிறது.
அவர்களிடம் நாம் பேசியபோது, ""போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களிடம் "எந்த ஒரு சிங்களவன் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்களுக்கான அரசியல் உரிமைகள் கிடைத்துவிடப் போவதில்லை. தமிழின விரோத நடவடிக்கைகளையே கடைபிடிக்கப் போகிறார்கள். அப்படியான நிலையில் இவர்களுக்கேன் ஓட்டுப்போட வேண்டும்? இரண்டு சிங்களவனும் அடித்துக்கொள் ளட்டும், தேர்தலை புறக்கணிப்போம். அதுதான் அவர்களுக்கு நாம் தரும் பதிலடி' என்று நினைக்கின்றனர். மற்ற பகுதிகளில் உள்ள தமிழர்களோ, "ராஜபக்சே மீண்டும் ஜனாதிபதியானால் ஒட்டுமொத்த இலங்கையும் சிங்கள ராணுவமயமாக்கிவிடுவார்.
சரத்தை ஆதரித்தால், அட்லீஸ்ட் ராணுவமயமாக்கலாவது நிறுத்தப்படும். ஓரளவுக்கு நிம்மதி கிடைக்கலாம்' என்றே கருதுகிறார்கள்.
அதனால், தமிழர்களின் வாக்குகள் சிதறுகிற நிலையில், ராஜபக்சேவை விட சரத்திற்கே தமிழர்களின் வாக்குகள் அதிகம் கிடைக்க வாய்ப்புள்ளது'' என்கின்றனர்.ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும் கொழும்பு தமிழ் எம்.பி.யும் சரத்தை ஆதரிப்பவரு மான மனோகணேசன் ""இந்தத் தேர்தலில் தமிழர்கள் யாரை ஆதரிப்பது என்பதைவிட, யார் ஆட்சி அதிகாரத்திற்கு வந்துவிடக் கூடாது என்பதில்தான் தெளிவாக இருக்க வேண்டும். அந்தவகையில், இன்றைய ஆட்சித் தலைமையை (ராஜபக்சே) தூக்கியெறிய வேண்டியதுதான் காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. தமிழ் மக்களை கொன்றவரும் (சரத்) கொல்ல ஏவியவரும் (ராஜபக்சே) எதிர் எதிராக நிற்கின்றனர். கொன்றவனைவிட ஏவியவன்தான் கொடூரமானவன். அதனால் ஏவியவன் இருக்க அம்பை நோவதால் பயனில்லை. ஏவிய ராஜபக்சேவின் தலையைக் கொய்ய...
இந்தத் தேர்தலை தமிழர்கள் பயன் படுத்திக்கொள்ள வேண்டும். இலங்கை கள நிலவரப்படி ஒரு தமிழரோ, சிறுபான்மையினரோ ஜனாதிபதியாகும் வாய்ப்பே கிடையாது. ஒரு சிங்களவர்தான் ஆட்சிக்கு வரமுடியும். தமிழர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், தேர்தலைப் புறக்கணித்தாலும் இதுதான் யதார்த்தமான நிலை. அப்படிப்பட்ட சூழலில், தேர்தலைப் புறக்கணித்து ராஜபக்சேவின் வெற்றிக்கு தமிழர்கள் மீண்டும் வித்திட்டுவிடக்கூடாது. தமிழினத்தின் முதல் பொது எதிரி ராஜபக்சே தான்.
அவரை ஆட்சி அதிகாரத்திலிருந்து துரத்துவதுதான் தமிழர்களின் கடமையாக இருக்க வேண்டும். நிச்சயம் தமிழர்கள் அதனை செய்துகாட்டுவார்கள்'' என்கின்றார் மிக உறுதியாக!ஆக, இலங்கை ஜனாதிபதிக்கான தேர்தலில் "நண்பர்கள் இருவரும் கடுமையாக சம பலத்துடன் மோதிக்கொள்கிற சூழலே இறுதிக்கட்டம் வரையிலும் எதிரொலித் துக்கொண்டிருக்கிற நிலையில், ஓரிரு சதவீதத்தில் ராஜபக்சேவை விட சரத்பொன்சேகா முன்னணியில் இருப்ப தாகவே இறுதிக் களநிலவரம் கூறுகிறது. இதனைத் தடுக்க, கடைசிகட்ட பகீரதப் பிரயத்தனம் செய்துகொண்டிருக்கிறார் ராஜபக்சே.

வந்துட்டாங்கய்யா அதிகாரிங்க வந்துட்டாங்கய்யா! -வடிவேலுவின்






சென்னையில் கடந்த 19-ந்தேதி நடந்த ரெய்டுகள் குறித்தும் நடிகர்கள் சூர்யா, வடிவேலு, இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் வீடுகளில் நடந்த களேபரத்தால் மற்ற நடிகர்கள் பணத்தோடும் டாக்குமெண்ட்டுகளோடும் அன்று முழுதும் காரிலேயே சுற்றிக் கொண்டிருந்தது குறித்தும் கடந்த நக்கீரன் இதழ் "ராங்-கால்' பகுதியில் ட்ரெய்லர் பாணியில் மிகச் சுருக்கமாய் சொல்லியிருந்தோம். இப்போது திரை பிரபலங்கள் வீடுகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடியாய் புகுந்தது குறித்து கொஞ்சம் விரிவாகவே பார்ப்போம்.



டெல்லியில் இருந்து சென்னையில் தரையிறங்கிய வருமானவரித்துறை அதிகாரிகளோடு சென்னை அதிகாரிகளும் 19-ந் தேதி அதிகாலை, ஒரு தனியார் டிராவல்ஸில் 40 கார்களை வாடகைக்கு அமர்த்திக் கொண்டனர்.

திபுதிபுவென காரில் ஏறிய அதிகாரிகள் முதலில் அந்தந்த கார் டிரைவர்களின் செல்ஃபோன்களை வாங்கி ஸ்விட்ச் ஆப் செய்தனர்.பின்னர் 4 டீமாகப் பிரிந்து நடிகர்கள் சூர்யா, வடிவேலு, இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோரைக் குறிவைத்து... அவர்களின் வீடுகளை நோக்கி விரைந்தனர்.

அதேநேரம்... முன்னதாகவே மதுரையில் லேண்ட் ஆகியிருந்த மற்றொரு டீம்... மதுரை அருகே இருக்கும் ஐராவதநல்லூர் கிராமத்தில் இருக்கும் நடிகர் வடிவேலுவின் வீட்டுமுன் போய் நின்றது. அப்போது ஹாயாக எம்.ஜி.ஆர். பாட்டை பாடிக் கொண் டிருந்த வடிவேலு...

அதிகாரிகளைப் பார்த்து "ஷாக்'காகி... ""என்ன சார் மதுரை வரை வந்து என்னைத் துரத்திப் பிடிக்கிறீங்க'' என சமாளித்தபடி சிரிக்க முயல... அதிகாரிகளோ இறுக்கமான முகத்தோடு வீட்டுக்குள் நுழைந்து கதவுகளை உட்பக்கமாக தாழிட்டனர்."சட்'டென பாத்ரூமுக்குள் ஓடிய வடிவேலு... "மதுரைக் காரரை' அழைத்து... விஷயத்தைச் சொல்ல... அவரது செல்ஃபோனையும் கேட்ச் பண்ணினார்கள் அதிகாரிகள். இருந்தும் வடிவேலு வின் சமயோஜித புத்தியால் அங்கு சுருக்கமாகவே ரெய்டை முடித்துக் கொண்ட அதிகாரிகள்...

""சென்னைக்குப் புறப் படுங்க'' என அவரைத் தமிழகத் தலைநகரில் தரை இறக்கம் செய்தனர்.இதற்கிடையே சென்னை தி.நகர் கிருஷ்ணா தெருவில் இருக்கும் நடிகர் சூர்யாவின் வீட்டுக்குள் அதிகாரிகள் நுழைய முயல... செக்யூரிட்டிகள் அவர்களை உள்ளே விட மறுத்து வாக்குவாதத்தில் இறங்கினர்.அப்போது தனது "சிங்கம்' படத்திற்காக டப்பிங் பேசக் கிளம்பிய சூர்யாவை, வாசலிலேயே அதிகாரிகள் மடக்க... ""என்ன சார் ரெய்டா... வாங்க'' என அவர் களை வீட்டிற்குள் அழைத்துச் சென்றார். திபு திபுவென வீட்டிற்குள் புகுந்த அதிகாரிகள்... முதல் வேலையாக வீட்டுத் தொலைபேசி இணைப்புகளை "கட்' பண்ணிவிட்டு செல் ஃபோன்களையும் வாங்கி வைத்துக் கொண்டனர்.

சூர்யாவின் மனைவி ஜோதிகா கொஞ்சம் டென்ஷனாக இருக்க... வீட்டில் இருந்த நடிகர் சிவகுமாரும் அவர் மனைவியும் அமைதியாக சோபாவில் உட்கார்ந்தபடி... ரெய்டை வேடிக்கை பார்த்தனர்.

தனது "ஆயிரத்தில் ஒருவன்' படம் எப்படி ஓடுகிறது என்று பார்ப்பதற்காக மதுரைப் பகுதிகளில் சுற்றிக் கொண்டிருந்த நடிகர் கார்த்தி... அவசரமாக சென்னைக்கு அழைக்கப்பட்டார் விசாரணைக்கு என்று.இதை வழக்கமான ஃபார்மால்டி ரெய்டு என நினைத்த சூர்யாவும் வடிவேலுவும் நேரம் செல்லச் செல்ல... அதிகாரிகள் காட்டிய தீவிரத்தைப் பார்த்துத் திகைத்தனர்.

வீட்டில் அன்றாட செலவுக்கு வைத்திருந்த ஐயாயிரம், பத்தாயிரம் ரூபாய்க்கே கணக்கைக் கேட்டு குடைந்து அதிகாரிகள் பீதியூட்ட... ஆரம்பத்தில் கேஸுவலாக இருந்த இந்த இருவரும் பதட்டமடைந்தனர்.டிரைவர்களையும், வீட்டு வேலைக்காரர்களையும் கூட விட்டு வைக்காமல் தீவிரமாய் விசாரித்தனர். வடிவேலுவின் சாலிகிராமம் ஆபீசுக்கு சான்ஸ் கேட்டு வந்த திருச்சி இளைஞர் ஒருவரையும் பிடித்து உட்கார வைத்துவிட்டார்கள் இன்கம்டாக்ஸ் அதிகாரிகள்.

""ஏண்ணே அவனை புடுச்சிருக்கீங்க... பாவம்ணே அந்த பையன் என்று'' அதிகாரிகளிடம் பேசிப் பார்த்தார் வடிவேலு. நள்ளிரவு 1 மணி வரை அமர வைத்துவிட்டார்கள்.இவர்களைப் போலவே இயக்குநர்களான ரவிக்குமாரும், முருகதாஸும் அதிகாரிகளின் நட வடிக்கைகளைப் பார்த்து விழிபிதுங்கினர். ரவிக்குமாருக்கு ஏற்கனவே ரெய்டு அனுபவம் உண்டு. அப்போதெல்லாம் இவ்வளவு கெடுபிடி இல்லை.

ரவிக்குமார் வீட்டிற்கு ரெய்டு நடத்த வந்த வட இந்திய அதிகாரி ஒருவர் இயக்குநரின் மகளின் பெட்டில் படுத்துக் கொண்டு யாரிடமோ ஃபோனில் மிதப்பாக பேசிக் கொண்டிருந்தார்.

இதைப் பார்த்து கடுப்பான ரவிக்குமார், ""உங்க லிமிட்டுக்கு மேல போறீங்க... இப்படி பெட்ரூமில் அட்டகாசம் செய்வதற்கு எந்த ரைட்சும் கிடையாது'' என்று கோபப்பட்டார். அதன் பிறகு மற்ற அதிகாரிகள் அவர்களை சமாதானப் படுத்தி ரெய்டை தொடர்ந்தனர். முருகதாஸுக்கோ ரெய்டு அனுபவம் புதிது. எனவே அவர்தான் ரொம்பவே மன உளைச்சலுக்கு ஆளானார்.

வழக்கமாக சில மணி நேரங்கள் மட்டுமே நடக்கும் ரெய்டு இந்தமுறை நள்ளிரவைத் தாண்டிப் போகப் போக... திரைப்பிரபலங்களான நால்வரும் கைபிசைந்தனர். சூர்யாவின் வீட்டருகே அவர் நடத்தும் "அகரம்' அறக்கட்டளை அலுவலகமும், அடையாறு பிளாட்டும் "ஸ்டுடியோ கிரீன்' என்ற படத் தயாரிப்பு நிறுவன அலுவலகமும் கூட ரெய்டுக்குத் தப்பவில்லை.அதிகாரிகள் தீவிரமாக ரெய்டு நடத்தும் தகவல் கலைஞர் காதுக்குப் போக...

அவர் மத்திய நிதித்துறை இணை அமைச்சராக இருக்கும் பழனி மாணிக்கத்தை தொலைபேசியில் அழைத்து ""என்னய்யா நடக்குது. சினிமாக்காரங்க என்ன செஞ்சாங்க?

ஏன் இந்தக் குடை குடையறாங்க. சூர்யா, வடிவேலெல்லாம் சரியாகத்தானே இருக்காங்க. நார்மலா நடக்குற ரெய்டு மாதிரி தெரியலையே... யாரோட தூண்டுதல்ய்யா இது'' என்ற ரீதியில் கறார் குரலில் வறுத்தெடுக்க...""பாக்கறேண்ணே... விசாரிக்கிறேண்ணே... நாம சொல்லி இது நடக்கலேண்ணே...'' என அவர் திணறினார். இதன்பின்னர் ரெய்டின் போக்கு இயல்பு நிலைக்கு மாறியதோடு...

வழக்கமான சில காமெடிக் காட்சிகளும் அரங்கேற ஆரம்பித்தன.சூர்யா வீட்டில் கறாராய் ரெய்டு நடத்திய அதிகாரி ஒருவர் ""சார்... என் வொய்ப்... உங்க தீவிர ரசிகை சார். எனக்கு ஆட்டோகிராப் போட்டுக் கொடுங்க'' என பாக்கெட் நோட்டை நீட்டினார்.

செவ்வாய்க்கிழமை அதிகாலை தொடங்கிய ரெய்டு வைபவத் துக்கு மறுநாள் காலை அதிகாரிகள் முற்றுப் புள்ளி வைத்தனர். இந்த ரெய்டில் பணத் தையோ நகைகளையோ கைப்பற்றாத அதிகாரிகள் -கணக்கு வழக்கு தொடர்பான ஆவணங்களை மட்டும் அள்ளிச் சென்றனர். ஆரம்பத்தில் வடிவேலுவிடம் கடுமை காட்டிய அதிகாரிகள் முடியும் நேரத்தில் ஒருமணி நேரம் வாய்விட்டு சிரிக்கும் அளவு காமெடி கச்சேரி பார்த்திருக்கிறார்கள். இனி சொந்த பந்தம் யாரும் எட்டு வருஷம் வரமாட்டாங்க என தன் ஸ்பெஷல் மாடுலேஷனில் பேச... இதுக்கு ஏன் பயப்படணும் என அதிகாரிகள் திருப்பி கேட்டிருக்கிறார்கள்.

""ஏண்ணே நீங்க சும்மாவா விடுவீங்க. வர்ற சொந்தக்காரங் களை புடுச்சு உன் வீட்ல இருக்கிற கோழி எத்தனை வருஷமா இருக்கு? அது போட்ட முட்டை எவ்வளவு? அதுக்கு கணக்கு எங் கேன்னு குடைஞ்சுருவீங்களே'' என்று ஜாலியாக கலாய்த்திருக்கிறார். நள்ளிரவுக்கு பின் ரெய்டு முடிந்து கிளம்பிய அதிகாரிகளிடம், ""அடிக்கடி வந்துட்டு போங்கண்ணே'' என்று வழியனுப்பியிருக்கிறார்.திரையுலகப் புள்ளிகள் அனைவர் வயிற்றிலும் இந்த ரெய்டு... புளியக் கரைக்க... எல்லோருமே கணக்கில் வராதவைகளை பாதுகாப்பாய் வைக்க... அந்த ரெண்டு நாளும் படாதபாடு பட்டனர். இந்த ரெய்டு... குறித்த டாக்கும்... விதவிதமாய் எழுந்து கொண்டிருக்கிறது.""இந்த ரெய்டின் பின்னணியில் இருப்பவரே உதயநிதிதான்'' என அடித்துச் சொல்கிறது ஒரு தரப்பு.""எப்படி என்றால்...

"ஆதவன்' படத்தில் சூர்யாவும் வடிவேலுவும் இயக்குநர் ரவிக்குமாரும் தங்கள் சம்பளத்தில் ரொம்பவும் கறார் காட்டினர். இதனால் இவர்களோடு தயாரிப்பு தரப்பிற்கு லேசான உரசல் இருந்தது. எங்களிடமே இப்படியா? எங்க பவரைப் பாக்கறீங்களா? என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்தத்தான் இந்த ரெய்டை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்'' என அந்தத் தரப்பே... ஏகப்பட்ட புள்ளிகளை வைத்து... கோலத்தையும் போட்டுக் கொண்டிருக்கிறது.உதயநிதி மீதான இந்தப் புகார்கள் குறித்தும் ரெய்டு குறித்தும் சம்பந்தப்பட்ட திரைப் பிரபலங்கள் என்ன நினைக்கிறார்கள். நடிகர் சூர்யாவோ, ""ச்சே! ச்சே! உதயநிதி ஜென்டில்மேன்.

ரெய்டு பத்தி தெரிஞ்சதும் எங்களுக்கு முதல்ல லைன்ல வந்து அக்கறையா விசாரிச்சி ஆறுதல் சொன்னதோடு... ஏதாவது சிக்கல்ன்னா சொல்லுங்கன்னு உதவிக்கரமும் நீட்ட ரெடியானார். அதே சமயம் எங்க கணக்கு வழக்குகள் கிளியரா இருந்ததால் நாங்க யாரும் பயப்படவோ கவலைப்படவோ இல்லை'' என்கிறார் நம்மிடம்.நடிகர் வடிவேலுவோ ""இது என்ன சின்னபுள்ளத்தனமா இருக்கு. உதயநிதி எப்பவுமே எங்களுக்கு உதவும் நிதியாத்தான் இருப்பார். உபத்திரநிதியா அவர் யாருக்கும் இருக்கமாட்டார். அவர் தயாரிப்பில் ரவிக்குமார் சார் டைரக்ட் பண்ற அடுத்த படத்தில் நானும் நடிக்கிறேன். ரெய்டுக்கு வந்த அதிகாரிகளுக்கு என்ன பிரச்சினையோ... அவங்க எரிச்சலை எல்லாம் எங்க மேல காட்டிட்டாங்க. பொங்கல் கொண்டாட மதுரைக்கு போன என்னை வரச் சொன்னாங்க.

கணக்கு வழக்கு எல்லாம் தெளிவா கொடுத்திருக்கேன். ஒரு பிரச்சினையும் இல்லை'' என்று நம்மிடம் வெளிப்படையாக பேசினார். இயக்குநர்களான ரவிக்குமாரும் முருகதாஸும் கூட ""இது டிபார்ட்மெண்ட் ரெய்டு. இதில் சம்பந்தமே இல்லாம உதயநிதி சாரை எதுக்கு சம்பந்தப்படுத்தறாங்க. எங்கக்கிட்ட அள்ளிக்கிட்டு போற அளவுக்கு எதுவும் இல்லை. அதனால் பயமில்லை.

மன உளைச் சல் உண்டாக்கிட்டுப் போயிட்டாங்க'' என்றார்கள் வேதனையோடு.மழை விட்டும் தூவானம் விடாததைப்போல் ரெய்டு முடிந்த பிறகும்... அது தொடர்பான சர்ச்சை அலைகள் ஓயாமல் எழுந்தபடி இருக்கிறது.