Saturday, January 2, 2010
2009 சினிமா... 'ஹிட்' அடித்த படங்கள்!
இவற்றில் வெற்றிக் கோட்டைத் தொட்டவை, கையைக் கடிக்காமல் தயாரிப்பாளர்களைக் காப்பாற்றியவை 19 படங்கள் மட்டுமே என்கிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில்.
அவற்றின் விவரம்...
நாடோடிகள்:
2009-ம் ஆண்டில் அதிக லாபம் தந்த படம் என்ற பெருமையைப் பெறுகிறது சசிகுமாரின் நாடோடிகள் திரைப்படம். சமுத்திரக் கனி இயக்கத்தில் குறைந்த பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் பல மடங்கு நல்ல லாபம் தந்தது. சமுத்திரக் கனிக்கு புதிய வாழ்கையும் தந்தது.
அயன்:
ஏவிஎம் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தை கேவி ஆனந்த் இயக்கியிருந்தார். இயக்குநர் கேவி ஆனந்த் என்றதுமே இது மிடில்கிளாஸ் படமாக இருக்கும் என்றுதான் நம்பினார்கள். படத்தின் மீது பெரிய நம்பிக்கை இல்லாததால் சன்னுக்கு விற்றது ஏவிஎம். ஆனால் அயனோ மசாலா படமாக வந்து வசூலையும் அள்ளியது. சன் டிவியின் வியாபார உத்தியே இந்த பெரிய வெற்றிக்குக் காரணம் என்பதில் இரண்டாவது கருத்து இருக்க முடியாது.2009-ம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றி சன் பிக்சர்ஸின் அயன்தான். சிவாஜி படத்துக்கு அடுத்து அதிக வசூல் பெற்ற படமும் இதுதான்.
உன்னைப் போல் ஒருவன்:
கமல்ஹாசன், மோகன்லால் நடிப்பில், ஸ்ருதி ஹாசன் இசையமைப்பில், சக்ரி டோலட்டியின் இயக்கத்தில் உருவாகி வெளியான உன்னைப் போல் ஒருவன், இந்திப்பட ரீமேக்தான் என்றாலும், தமிழில் ஒரு புதிய முயற்சியாகப் பார்க்கப்பட்டது.வித்தியாசமான தமிழ்ப் படமாக வந்த உன்னைப் போல் ஒருவன் மூலம் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் இசையமைப்பாளராக அறிமுகமானார். ஆனாலும் கமல் ஹாசன் தனது மதவாதப் பார்வையை இதில் திணித்திருப்பதாக சர்ச்சையையும் எழுப்பியது. எப்படியிருந்தாலும் கமலுக்கு இந்தப் படம் லாபமே, தமிழ் சினிமா வுக்கும் பலம் கூட்டியபடம்.
பசங்க:
எந்தவித ஸ்டார் வேல்யூவும் இல்லாமல் வந்து அனைவரது பாராட்டையும் அள்ளிக் கொண்டு போனது. ஒரு ஆங்கிலப் படத்தின் உல்டாதான் இந்தப் பசமும். ஆனால் கிராமப்புறத்து பசங்களும் உஷாராக, புத்திசாலித்தனமாக, லட்சிய வேகத்தோடு இருப்பவர்கள் என்ற செய்தியை நேட்டிவிட்டியோடு சொன்னதில் வெற்றி பெற்றிருந்தார் இயக்குநர் பாண்டிராஜ். நல்ல தயாரிப்பாளர் என்ற பெயரை சசிகுமாருக்குப் பெற்றுத் தந்தது பசங்க. ரேணிகுண்டா:
முற்றிலும் புதுமுகங்களுடன் வெளியாகி, சத்தம் போடாமல் அனைவரின் சபாஷையும் பெற்ற படம். அஜீத், நடிகர் என்ற நிலையிலிருந்து பெரிய நட்சத்திரமாக மின்ன உதவிய படங்களைத் தயாரித்த நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி, தன் மகன் ஜானியையே பெரிய கதாநாயகனாக்கி விட்டார் இந்தப் படம் மூலம்.
வெண்ணிலா கபடிக் குழு:
இந்தப் படமும் புதுமுகங்களுடன் வந்து ரசிகர்களின் மனதில் அமர்ந்த படம். சக்தே இந்தியாவை இன்ஸ்பிரஷனாக வைத்து நம்ம ஊர் கபடியை பிரதானப்படுத்தி ஜெயித்தவர்கள் இந்தக் குழுவினர். மூச்சு விடாமல் வெற்றிக் கோட்டைப் பிடித்து வெற்றியும் பெற்றது இந்த டீம்.யாவரும் நலம்:மாதவன், நீத்து சந்திராவின் நடிப்பில் வெளியான இந்த திரில்லர் படம், சுமார்தான் என்றாலும், விநியோகஸ்தர்களின் புலம்பலுக்கு ஆளாகாமல் தப்பித்த ஆச்சரியப் படம்.
மாயாண்டி குடும்பத்தார்:
பீம்சிங் காலத்துக்கு நம்மை அழைத்துச் சென்ற படம் இது. குடும்பத்தோடு அமர்ந்து பார்க்க வைத்த படம். முற்றிலும் இயக்குநர்களே நடிகர்களாக மாறி அனைவரையும் வியக்க வைத்திருந்தனர். கூட்டுக் குடும்பத்தின் அழகு, அவலம், பங்காளிச் சண்டை என உறவுகளுக்குள் பின்னிப் பிணைந்த இந்த மண்ணின் மனிதர்களது வாழ்க்கையைத் திரையில் பார்த்தபோது மனசு கனத்துப் போனது. பெரிய வெற்றி இல்லை என்றாலும், தயாரிப்பாளர்களை நிம்மதிப் பெருமூச்சு விட வைத்த படம் இது.
சிவா மனசுல சக்தி:
ஸ்லீப்பிங் விக்டரி என்று கோலிவுட் வட்டாரத்தில் அடிக்கடி சொல்லப்படும் வார்த்தையை நிஜமாக்கிய படம் இது. சுமாராக இருந்தாலும் நகரப் பகுதிகளில் இந்தப் படத்துக்கு பார்வையாளர்கள் அதிகமாக இருந்தது. ஒரு இடைவெளிக்குப் பிறகு படமெடுக்க வந்த விகடன் டாக்கீஸுக்கு இந்த வெற்றி உற்சாகம் தந்தது (ஆனால் அதே விகடன் குழுமத்தின் வால்மீகி சோகத்தைக் கொடுத்து விட்டது).
ஈரம்:
பேய்ப் படம் என்று கூறினாலும் பேயை கண்ணிலேயே காட்டாமல் தண்ணீரை மட்டும் காட்டி மிரட்டலாக எடுக்கப்பட்ட வெற்றிப் படம்.இந்தப் படத்தை எவ்வளவோ கேட்டுப் பார்த்தது சன் டிவி. ஆனாலும் ஷங்கர் அழுத்தமாக அமைதி காத்தார். படத்தின் வெற்றியைப் பார்த்து, வட போச்சே என சன் பிக்ஸர்ஸே புலம்பும் அளவுக்கு நன்றாக ஓடிய படம்.
பேராண்மை:
ஜெயம் ரவியின் நடிப்புப் பக்குவத்தை படம் போட்டுக் காட்டிய, சிறப்பான கதையம்சத்துடன் கூடிய அருமையான படம். ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் விமர்சகர்களின் பாராட்டுக்களையும் வாரிக் குவித்தது. வரிசையாக தோல்வியைத் தழுவிய ஐங்கரனுக்கு முதல் வெற்றியாக அமைந்தது இந்தப் படமே.
கந்தசாமி:
அது ஏனோ தெரியவில்லை இந்தப் படம் ஒட்டு மொத்தமாக விமர்சகர்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டது. ஓவர் பில்ட் அப் கொடுத்த சுசி கணேசன் கடைசியில் சிவாஜியின் கதையை காப்பியடித்துப் படமாக்கிய ஏமாற்றத்தின் விளைவு என்று கூட இசைத் சொல்லலாம். ஆனால் கலைப்புலி தாணுவோ பல கோடி ரூபாய் வசூல் விவரம் காட்டி, நூறாவது நாள் விழாவும் எடுத்துவிட்டார். எனவே இதுவும் ஹிட் லிஸ்டில் சேர்ந்தாகி விட்டது.
இவை தவிர,கண்டேன் அழகர் மலை, மதுரை சம்பவம், படிக்காதவன், மாசிலாமணி, கண்டேன்காதலை போன்ற படங்களும் சராசரியாக ஓடி தயாரிப்பாளர்களை நாலு காசு பார்க்க வைத்தன.
Friday, January 1, 2010
பாதிரியாருடன் கன்னியாஸ்திரி!

சமாதானம் நோக்கிய பயணத்தில் எம்மை ஊக்குவிப்பவர்களோடு நல்லுறவைப் பேண தயார்
கடந்த வருடம் நாம் ஒரு தேசமாக ஒன்றிணைந்து 27 வருடகால கொடூரப் பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளிவைத்து, எமது மக்கள் மத்தியிலிருந்த சந்தேகம், பிரிவினை என்பவற்றைத் துடைத்தெறிந்ததன் மூலம் நாம் பெற்றுக்கொண்ட அடைவுகள் குறித்த பெருமையோடும் திருப்தியோடும் புதிய ஆண்டில் பிரவேசிக்கின்றோம்.
எமது வரலாறு நெடுகிலும் நாம் செய்ததுபோன்ற அளப்பெரும் தியாகங்களின் மூலம் ஐக்கிய இலங்கையை வெற்றிகொண்டோம். புதியதோர் ஆண்டில் காலடி எடுத்துவைக்கும் இச்சந்தர்ப்பம் தேசத்தின் வெற்றிக்காக உயர்ந்த தியாகங்களைச் செய்த படைவீரர்கள், அவர்களது பெற்றோர்கள், பிள்ளைகள், மனைவிமார்கள் அனைவருக்கும் தேசத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவிப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாகும்.
ஒரு தேசம் என்ற வகையில் முன்னேற் றத்தையும் சுபீட்சத்தையும் எதிர்பார்க்கும் எமது மக்களின் அபிலாஷைகளை நிறை வேற்றவும் எமது எதிர்கால சந்ததியினருக்கு அமைதியும் ஐக்கியமும் நிறைந்த நாட்டை கட்டியெழுப்பவும் முடியுமென்ற மிகுந்த நம்பிக்கையோடு நாம் இப் புத்தாண்டைப் பார்க்கிறோம்.
பயங்கரவாதத்தைத் தோற் கடிக்கும் எமது முயற்சிக்கு குறுக்கே நின்ற இடையூறுகளுக்கு எதிராக நாம் உறுதியாக இருந்ததுபோன்று கடந்தகால காயங்களைக் குணப்படுத்தும் விடயத்திலும் வெளியிலி ருந்துவரும் அழுத்தங்களுக்கு அடிபணியாது அந்த இலக்கை அடைந்துகொள்ள எம்மை அர்ப்பணித்துள்ளோம்.
பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்து விடுபட்டுள்ள இச்சந்தர்ப்பத்தில் எமது முழுப்பலத்தையும் அபிவிருத்தி செயற்பாடு களை நோக்கி குவிப்பதற்கும் பயங்கர வாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கு மத்தியில் நாம் ஆரம்பித்த பல்வேறு பாரிய கருத்திட்டங்களைத் தொடர்வதற்கும் நாடு சுதந்திரமடைந்தது முதல் மறுக் கப்பட்டிருந்த முன்னேற்றத்தை எமது நாட்டுக்குக் கொண்டுவரும் வகையில் புதிய தொழில் முயற்சிகளை ஆரம்பிப் பதற்கும் எனது அரசாங்கம் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றது. இன்று ஆரம்பிக்கும் புதிய தசாப்தத்தின் எமது அபிவிருத்தி மூலோபாயங்கள் இலங்கையை தென்னாசியாவிலேயே ஒரு கேந்திர நிலையமாக மாற்றியமைக்கும்.
அந்தவகையில் அபிவிருத்தியை கட்டியம் கூறும் வகையில் அமைக்கப்படும் துறை முகங்கள், விமான நிலையங்கள் மற்றும் விரிந்த நெடுஞ்சாலைகளின் நிர்மாணப் பணிகள் வெற்றிகரமாக முன்னெடுக் கப்பட்டுவரும் அதேவேளை தகவல் தொழிநுட்ப அறிவையும் பரந்தளவில் அதிகரிக்கவும் எதிர்பார்த்துள்ளோம்.
எதிர்பார்க்கப்பட்ட ஒரு குறுகிய காலப் பகுதியில் உள்நாட்டில் இடம்பெயர்ந்த சுமார் மூன்று இலட்சம் மக்களில் பெருந்தொகையினரை மீள் குடியேற்றும் நடவடிக்கையில் நாம் வெற்றிகண்டோம். இதேபோன்று புத்தாண்டில் எமது மக் கள் நாட்டின் அரசியல் அபிவிருத்தியில் ஒரு தீர்க்கமான கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் ஒரு சந்தர்ப்பத்தில் இலங்கையின் தேசிய விவகாரங்களில் மூலோபாய தலையீடுகளைக் கொண்டுவர விரும்புபவர்களால் ஏற்படுத்தப்படும் பொரு ளாதார தடை அல்லது வர்த்தக நலன்களை தடைசெய்யும் அச்சுறுத்தல்களால் நாம் பின்வாங்கப்போவதில்லை.
எமது நாட்டில் பயங்கரவாதத்தைத் தோற் கடித்து எமது மக்களுக்கு சமாதானத்தைக் கொண்டுவருவதில் எமக்கு முழு அளவில் உதவிய நாடுகளோடு பலமானதும் நிலையானதுமான நட்பை பேண நாம் அர்ப்பணிப்போடு உள்ளோம். அதேபோன்று, எமது இறைமையை ஏற்று சமாதானம் சுபீட்சத்தை நோக்கிய எமது பயணத்தில் எம்மை ஊக்குவிப்பவர்களோடு நல்லுறவைப் பேணுவதற்கும் நாம் தயாராக உள்ளோம். புலர்ந்திருக்கும் இப்புத்தாண்டில் நாம் எதிர்பார்க்கும் அபிவிருத்தி எமது சூழ லைப் பாதுகாப்பதுவும் அதிகரித்துவரும் போட்டிமிக்க உலக சந்தைச் சூழலில் எமது உற்பத்திகளுக்கு நல்லதொரு இடத்தை உறுதி செய்யும் அதேவேளை எமது தேசிய சொத்துக்களைப் பாது காப்பதுவுமாகும். எல்லா இலங்கையர்களினதும் அபி லாஷையான கண்ணியமும் கீர்த்தியும் மிக்கதோர் இலங்கை தேசத்தை கட்டி யெழுப்புவதற்காக தேசத்தின் ஸ்திரத்தன்மை எமது மக்களின் முன்னேற்றம் என்ப வற்றுக்கான அர்ப்பணிப்போடு சமாதானமும் மகிழ்ச்சியும் சுபீட்சமும் நிறைந்த புத் தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மர்மமான முறையில் கணவன் மனைவி படுகொலை :திடுக்கிடும் தகவல்

அத்துடன் உண்மையாகவே விடுதலைப் புலிகள் வந்து உணவு கேட்டால் கூடக் கொடுப்பதற்கு இனி மக்கள் அஞ்சுவார்கள் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.சுமார் 3 நாட்களுக்கு முன்னர் இக் குடும்பம் கொலைசெய்யப்படதாகக் கூறப்படுகிற போதும் இதனைச் சுயாதீனமாக எம்மால் உறுதி செய்யமுடியவில்லை.
அதிலும் இவ் விடையம் குறித்து மக்கள் மேலும் கருத்துக்களைத் தெரிவிக்க மறுக்கின்றனர். மீள் குடியமர்த்தப்பட்ட பகுதிகளில் இவ்வாறான பல அசம்பாவிதங்கள் நடைபெறுகின்ற போதிலும் இதுவரை எதுவும் வெளிவராத நிலையிலேயே உள்ளது என்பது குற்பிடத்தக்க விடையமாகும்.
இவ்வாறன செயல்கள் மூலம் ஒரு உளவியல் போரைத் தொடுத்து, மீள் குடியேறிய மக்களை அச்சுறுத்தி தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க இலங்கை இராணுவம் பகிரங்கமாக முயல்வது தெரிகின்றது.புலம்பெயர் மக்களின் உறவினர்கள் யாராவது இது குறித்து அறிந்திருந்தால் எமது இணையத்துடன் தொடர்புகொள்ளவும்.
கொல்லப்பட்டதாகக் கூறப்படும் கணவன் மனைவி, யார் என்பது பற்றியோ அல்லது அவர்கள் பெயர்விபரங்களோ இன்னும் சரிவரக் கிடைக்கப்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Thursday, December 31, 2009
""போர் வெடிக்கும்'' -அனல் வீசிய தஞ்சை மாநாடு

Wednesday, December 30, 2009
எரித்திரியாவில் உள்ள புலிகளின் விமானங்களை கைப்பற்றும் முயற்சி தோல்வி
Tuesday, December 29, 2009
Curfew in Jaffna to be lifted
Monday, December 28, 2009
இயேசுவுக்கு உலகம் தந்த முதல் பரிசு!


Sunday, December 27, 2009
பற்றி எரியும் ஆந்திரா! இளம்பெண்ணோடு கவர்னர் உல்லாசம்!

அதே சமயம் தற்போது ஆந்திர கவர்னராக இருக்கும் நாராயண் தத் திவாரி மீது தொடர்ந்து எழுந்துவரும் பல்வேறு புகார்களும் மத்திய அரசை கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது. திவாரி உ.பி.மாநிலத்தைச் சேர்ந்தவர். சஞ்சய் காந்தியின் நெருக்கமான விசுவாசியாக அவர் காலத்தில் காட்டிக்கொண்டவர். மிசா காலத்தில் உ.பி.யில் இவர் அமைச்சராக இருந்த போது... விமானத்தில் இருந்து இறங்கிவந்த சஞ்சய் காந்தியின் சூ லேஸ் அவிழ்ந்திருப்பதைப் பார்த்து... ஓடிப்போய் அவர் காலடியில் உட்கார்ந்து சூ லேஸைக் கட்டியதால் பலத்த சர்ச்சையில் அப்போது அடிபட்டார். இது தவிர முறையற்ற பல திருமணங்களை செய்து கொண்டதாக இவர் மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கும் இருக்கிறது.
இந்த 85 வயதிலும் சபலத்தை விடாதவராக... ஆந்திரா மாநிலமே எரிந்து கொண்டிருக்கும் இந்நேரத்தில் கவர்னர் மாளிகையில் மனம்போன போக்கில் மன்மத லீலைகளில் இறங்கி வசமாக சிக்கிக் கொண்டார்.கவர்னர் மாளிகையில் வேலை செய்த ராதிகா என்ற இளம்பெண்ணின் கட்டுடலைப் பார்த்து மயங்கிய கவர்னர் திவாரி... தனது பதவியைக் காட்டியும் பரிசுப் பொருட்களை வாரிக்கொடுத்தும் வசப்படுத்தினார். பின்னர் கவர்னர் மாளிகையின் பல்வேறு அறைகளில் அந்தப் பெண்ணுடன் அவர் மன்மத விளையாட்டை நடத்தினார். ஆரம்பத்தில் லாபங்கள் கருதி கவர்னரின் சல்லாப லீலைகளைப் பொறுத் துக்கொண்ட ராதிகா... கவர்னரின் அளவுக்கு மீறிய வேகத்திற்கும் அவர் கையாண்ட பொஸி சன்களுக்கும் ஈடுகொடுக்க முடியாமல் திணறினார்.
ஒரு கட்டத்தில் ஆங்கில ஆபாசப் படங்களைப் போட்டுக்காட்டி... அதில் வருவது போல் நடந்து கொள்ளும்படி கவர்னர் வற்புறுத்தத் தொடங்க... கவர்னரை தவிர்க்க ஆரம்பித்தார் ராதிகா. ஆனால் ருசிகண்ட பூனையான கவர்னர் ராதிகாவை மிரட்டி தன் ஆசைகளுக்குப் பணிய வைக்க... தப்பிக்க வேறு வழிதெரியாத ராதிகா பிரபல ஏ.பி.என். தொலைக்காட்சியிடம் தஞ்சமடைந்தார். கவர்னர் திவாரிக்கு சூடுகொடுக்க விரும்பிய ஏ.பி.என். தொலைக்காட்சி... ராதிகாவிடமே மைக்ரோ கேமராவையும் கேமரா செல்போனையும் கொடுத்தனுப்பியது. ராதிகா கவர்னருக்குத் தெரியாமல் அந்த கேமராவையும் செல்போனையும் சரியான பொஸிசன்களில் மறைத்து வைத்துவிட்டு காத்திருக்க... வழக்கம்போல் ராதிகாவைக் கண்டு உற்சாகமாக கவர்னர் லீலைகளை ஆரம்பிக்க அத்தனையும் அப்பட்டமாகப் பதிவாகியது.. அந்தக் காட்சிகளை அதிரடியாக ஒளிபரப்ப ஆரம்பித்தது ஏ.பி.என்.இதைப் பார்த்த ஜனநாயக மாதர் சங்கம், புரட்சிகர பெண்கள் முன்னணி போன்ற பெண்கள் அமைப்புகள் கவர்ன ருக்கு எதிராக கவர்னர் மாளிகையை ஆவேசமாக முற்றுகையிட்டனர்.
இதைக்கண்டு வியர்த்துப்போன கவர்னர் மாளிகை ஆந்திர மாநில ஹை கோர்ட்டில் அவசரமாக முறையிட்டு அந்த ஒளிபரப்பை நிறுத்தியது. எனினும் கவர்னர் மாளிகையின் லட்சணத்தைப் பார்த்து ஒட்டுமொத்த ஆந்திராவும் காறித்துப்பிக் கொண்டிருக்கிறது.
குண்டு துளைக்காத BMW கார் இரண்டை மகிந்த வாங்கியுள்ளார்
