பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Saturday, December 12, 2009

புலிகள் சரணடைந்தபோது என்ன நடந்தது? தேர்தல் பிரசாரத்தில் உண்மையை அம்பலமாக்க பொன்சேகா திட்டம்

போர் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த காலப்பகுதியில் விடுதலைப்புலிகளின் அரசியற்பிரிவினர் சிறிலங்கா படையினரிடம் சரணடைவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் அவர்களுக்கு உண்மையில் என்ன நடந்தது போன்ற விடயங்களை எதிர்வரும் அரச தலைவர் தேர்தல் நெருங்கும் காலப்பகுதியில் வெளியிடுவதற்கு முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தரப்பினர் ஆலோசித்துவருவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக அரச தரப்பு தெரிவித்துள்ளனர்.
அவ்வாறு பொன்சேகாவினால் முன்வைக்கப்படும் எந்த குற்றச்சாட்டுக்களையும் எதிர்கொள்வதற்கு தாம் தயார் என்றும் அரச தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கையில் -
விடுதலைப்புலிகளின் அரசியற்பிரிவினர் சிறிலங்கா அரச படையினரிடம் சரணடைவதற்கு நோர்வே அரசின் ஊடாக பசில் ராஜபக்சவுடன் தொடர்புகொண்டமை, அதனை கேள்வியுற்ற கோத்தபாய ராஜபக்ச எவ்வாறு நடந்துகொண்ட விதம் ஆகியவை குறித்து மக்களுக்கு உண்மை கூறப்போவதாக புறப்பட்டுள்ளார் என்று அரசு தரப்புக்கு தகவல் கிடைத்துள்ளது.
சரணடைய முடிவெடுத்த விடுதலைப்புலிகள் செஞ்சிலுவை சங்கத்தின் ஊடாக எந்த கோரிக்கையையும் முன்வைக்கவில்லை. அதுவே அக்காலப்பகுதியில் சரியான ஏற்பாடாக இருந்திருக்கும்.
விடுதலைப்புலிகள் சரணடைவதாக அறிவித்த காலப்பகுதியானது சிறிலங்கா படையினர் மீளத்திரும்ப முடியாத புள்ளிக்கு சென்றுவிட்ட நாட்கள் ஆகும். இவை குறித்தெல்லாம் அரசு சரியாக சிந்தித்துத்தான் முடிவெடுத்தது.
இவை பற்றி பொன்சேகா என்ன கூறினாலும் அதற்கு பதிலளிக்க அரசு தயார். இந்த விடயத்தையே தனது பிரதான தேர்தல் பிரசார மூலோபாயமாக பொன்சேகா திட்டமிட்டு வருகின்றார் என்பதும் எமக்கு தெரியும் – என்று கூறியுள்ளன.

வேட்டைக்காரன் படத்திற்கு வெளிநாடுகளில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது


மானமுள்ள ஒவ்வொரு தமிழனும் இளைய தலைவலியின் வேட்டைக்கரனை புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
வேட்டைக் காரனுக்கு வேட்டு வைப்பானா தமிழன்??


வேட்டைக்காரன் படத்துக்கு மீண்டும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த முறை உள்ளூரில் அல்ல… வசூலுக்கு பெரிதும் நம்பியிருக்கும் வெளிநாடுகளிலிருந்து.
காங்கிரஸுடன் ரகசிய உறவு வைத்துக் கொண்டு, ஒப்புக்காக ஈழத் தமிழர்களுக்கு ஆதரவளிப்பதாக நாடகமாடிய விஜய்யின் வேட்டைக்காரனைப் புறக்கணிப்போம் என ஈழத் தமிழர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் இந்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மேலும் இலங்கை ராணுவத்துக்கு, வன்னிப் போர் காலத்தில் பாடல்கள் உருவாக்கிய ராஜ் வீரரத்னே என்பவருடன் இணைந்து பணியாற்றும் விஜய் ஆண்டனி, இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
தமிழ் உணர்வுக்கு எதிரான ஒரு சிங்களப் பாடலின் மெட்டையும் அப்படியே வேட்டைக்காரனில் பயன்படுத்தியுள்ளார். எனவே இந்தப் படத்தை அனைத்து தமிழர்களும் புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கபட்டுள்ளது. இப்படம் தயாரிக்கும் போதும், பாடல் காட்சிகள் படமாக்கப்படும் போதும் இத் தவறுகள் தமிழ் நாட்டில் பலரால் சுட்டிகாட்டப்பட்டுள்ளன. இதனை நடிகர் விஜய் புறக்கணித்துள்ளார்.
படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் கிளம்பியுள்ள இந்த எதிர்ப்பு விஜய் தரப்பை அதிர வைத்துள்ளதாக அறியப்படுகிறது. போர் உக்கிரமடைந்த காலத்தில் சிங்கள படைகளை வலுப்பெற வைக்க பாடல்களை இயற்றி மெட்டுப்போட்ட கயவர்களுடன் இவர் கூட்டுச் சேர்வதா? அதே மெட்டை விஜய் படத்திலும் இவர்போட நாம் பணத்தை வாரி இறைத்து நடிகர் விஜயை வாழ்த்துவதா?

இதுவும் ஒரு பிழைப்பா? தமிழர்களே சிந்தியுங்கள், எமது பெருந்தொகையான பணம் இவ்வாறு வசூலிக்கப்பட்டு, ஒரு சில நபர்களிடன் கோடிக்கணக்கில் முடங்கி இருக்கிறது.
அவர்கள் தமிழர்களுக்கு உதவிசெய்யாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரம் செய்யாமல், தமிழர்களின் மனதைப் புண்படுத்தாமல் வாழ கற்றுக்கொள்ளவேண்டும், இதுவே நாம் இவர்களுக்குப் புகட்டும் நல்ல பாடமாக அமையும்.

இந்த எதிர்ப்பு கோஷத்தை தமிழர்களுக்கு, தமிழர்கள் தெரியப்படுத்துங்கள்.
வேட்டைக்காரனுக்கே வேட்டு….

Thursday, December 10, 2009

புதிய குழு புருடா! - ஜெகத் கஸ்பர்


வேலுப்பிள்ளை பிரபாகரன் கருத்து வேறுபாடு களை விரும்பாதவர், விமர்சனங் களை வெறுத்தவர் என்றொரு பொய் தோற்றம் வலுவாக வனையப்பட்டிருக்கிறது.

தன் இனத்தின் எதிரிகளாகவும் துரோகிகளாகவும் அவர் கருதி யவர்களை அவர் வெறுத்தார் என்பது உண்மைதான். அது தான் பிறந்த தமிழ் இனத்தின் மீது கொண்ட தீராக் காதலாலும், பெருமிதத்தாலும். ஆனால் அவர் விமர்சனங்களை சகித்துக் கொள்ள முடியாதவர் என்று பலர் ஏற்படுத்தியுள்ள பிம்பம் உண்மை யல்ல.

1998-ம் ஆண்டு வாக்கில் என்று எண்ணுகிறேன். நான் மணிலா வேரித்தாசு வானொலியில் கடமையாற்றியிருந்த காலத்தில் நடந்த மறக்க முடியா நிகழ்வொன்று நினைவுக்கு வருகிறது.வானொலி நேயர் ஒருவர், "தங்கள் ஆளுகைப் பரப்புக்குள் குற்றம் சாட்டப்பட்ட பொதுமகன் ஒருவருக்கு விடுதலைப்புலிகள் உரிய நீதி விசாரணை நடத்தாமல் சர்வாதிகாரத்தன்மையோடு மரணதண்டனை தீர்ப்பு வழங்கியுள்ளனர். இப்படியான விடுதலைப்புலிகளை உங்கள் வானொலி ஆதரிப்பது பிழையான செயல்' -என்ற தொனியில் எழுதியிருந்தார்.

மரண தண்டனைக்கு எதிரான உலகு தழுவிய கருத்தியக்கத்தில் ஆர்வமுடன் பங்கேற்கிறவனென்ற வகையில் இந்த நேயர் எழுதிய கடிதத்தை முக்கிய பிரச்சனையாக முன்வைத்து வானொலியில் நீண்டதொரு விவாதம் நடத்தினேன். முறையான நீதி விசாரணை நெறிகளும், வழிமுறைகளும் இன்றி மரண தண்டனை போன்ற இறுதித் தண்டனையை வழங்குவதென்பது பாசிச அமைப்புகளால் மட்டுமே செய்யக்கூடியது என்ற ரீதி யில் மிகக் கடுமையான விமர் சனத்தை முன்வைத்தேன்.

ஒலிபரப்பு நிறைவுற்று இருமணி நேரத்திற்குள் வன்னிப் பகுதியி லிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது சண்டைக் காலமாயிருந்ததால் தங்களது வர்த்தகக் கப்பல்களின் பெயரில் பெறப்படும் செயற்கைக் கோள் தொலைபேசிகளை அவர்கள் காட்டுக்குள் வைத்து பாவித்து வந்தார்கள் என நினைக்கிறேன்.

அழைப்பில் வரும் சுமார் இருபது இலக்க எண்களைப் பார்த்தாலே புரிந்து விடும். அது வன்னிக்காடுகளிலிருந்துதான் வருகிறதென்பது. பேசுவதற்கு பெரும் செலவு ஆகும் எனவும் பின்னர் நான் அறிந்தேன். அன்றைய தினம் அழைப்பில் வந்தார்.

தன்னை பரா என்றும் தமிழீழ நீதித்துறை பொறுப்பாளராய் இருப்பதாயும் அறிமுகம் செய்து கொண்டார். ""என்ன ஃபாதர்... நீங்கள் ரேடியோவிலெ கதைச்சுப் போட்டீங்கள், இஞ்செ எங்களுக்குத்தான் மண்டையிடி. தலைவர் (பிரபாகரன்) அடியடா, பிடியடா என்று நிற்கிறார்.

சனம் மணிலாவுக்கு குற்றக் கடிதம் எழுதுறமாதிரிதான் உங்கட நீதித்துறை செயல்படுதா என்று கேட்கிறார்...'' என்பதாக உரையாடலை தொடங்கியவர் மிகவும் பண்பாக, ""ஃபாதர், அந்த நேயர் உங்களுக்கு பிழையான தகவல் தந்திருக்கிறார். அதனை தலைவருக்கு நாங்கள் விளக்கிச் சொல்லியிட்டம். ஆனால் தலைவர் இந்த வழக்கு தொடர்பான விசாரணை- தீர்ப்பு விபரங்கள் மட்டுமல்ல, தமிழீழ நீதித்துறை அமைக்கப்பட்டபின் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனைத்து வழக்கு விபரங்களையும் உடனே உங்களுக்கு அனுப்பித் தரும்படி அறிவுறுத்தியுள்ளார்.

உங்கட ஃபாக்ஸ் (Fax) நம்பர் தாருங்கோ. எல்லா விபரங்களையும் அனுப்பிப் போட்டு இரவுக்கே தலைவருக்கு நான் பதில் சொல்லோணும்'' என்றார்.நானும் எனது அலுவலக தொலைநகல் (Fax) எண்ணை பரா அவர்களுக்குத் தந்தேன். சுமார் ஒன்றரை மணி நேரம் 140-க்கும் மேலான பக்கங்கள் எம் தொலைநகல் கருவியில் வந்து விழுந்து கொண்டிருந்தன.

வந்து முடிய அதிகாலை மூன்று மணி ஆயிற்று. வியப்பு என்னவென்றால் விடுதலைப் போராட்டத்திற்கு ""துரோகம்'' செய்பவர்களை மட்டும்தான் பிரபாகரன் அவர் களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. துரோகத்தின் சம்பளம் மரணம் என்றே அங்கு இருந்திருக்கிறது. அதே வேளை துரோகம் தவிர்த்த ஏனைய குற்றங்கள்- கொலைக்குற்றங்கள் உட்பட- யாவுமே சிவில் சட்ட அடிப்படையிலேயே விசாரிக்கப் பட்டு தண்டனைகள் வழங்கப் பட்டிருக்கின்றன. உண்மையில் 1995 இறுதி தொட்டு 1999 தொடக்கம் வரை வன்னிப் பகுதியில் தமிழீழ நீதித்துறை மொத்தத்தில் மரண தண்டனை வழங்கிய தீர்ப்புகள் நான்கு மட்டுமே என்றும், அவற்றிலும் கூட ஒன்று மட்டுமே நிறை வேற்றப்பட்டதாகவும் ஏனையவர் கள் தலைவரிடம் கருணை மனு சமர்ப்பித்துள்ளதாகவும் பரா கூறினார். பிரபாகரன் அவர்கள் மீதான என் தனிப்பட்ட மதிப் பினை மிகவும் உயர்த்திச் சென்ற நிகழ்வுகளில் இந்நிகழ்வு என்னைப் பொறுத்தவரை மிக முக்கியமான ஒன்றாக இருந்தது.

ஏனென்றால் நான் ஓர் சாதாரண ஒலிபரப் பாளன், எனது விமர்சனத்திற்கு உரிய பதில் தரப்பட வேண்டும் என்று பிரபாகரன் நினைத் திருக்கிறார் என்பது மிகப்பெரிய மனமுதிர்ச்சியாகவும், தலை மைத்துவப் பண்பாகவும் எனக்குப் பட்டது.

அதுவும் செயற்கைக்கோள் தொலைநகலி வழி தகவல் அனுப்புவ தென்பது ஒரு பக்கத்திற்கே பத்து டாலர்களுக்கு மேல் ஆகும் என பின்னர் அறிய வந்தேன். எனக்கு அன்று பரா அவர்கள் அனுப்பிய 140-க்கும் மேலான பக்கங்களுக்கு மட்டுமே சுமார் 1500 டாலர்கள் ஆகியிருக்கும். அன்றைய இலங்கை பண மதிப்பில் அது சுமார் ஒரு லட்ச ரூபாய்.

புலம்பெயர் தமிழர்களிடையே உரையாற்றுகையில் இதனை நான் முக்கியமாகக் குறிப்பிடுவதுண்டு. அப்போதெல்லாம் நான் சொல்ல விரும்பியது, ""தூர விலகி நின்று, எவ்வித பங்களிப்புகளும் விடுதலைக்குச் செய்யாமல் மேதாவித்தனமாக விமர்சித்துக் கொண்டிருப்பவர்களைத்தான் பிரபாகரன் அவர்களுக்குப் பிடிக்காதேயன்றி, விடுதலையை நேசித்து ஈடுபட்டிருக்கிறவர்களின் விமர் சனங்களை அவர் மதித்து மிகக் கவனமாகக் கேட்கிறார் என்பதே எனது அனுபவம்'' என்ற செய்தியை.இதனை இன்றைய காலத்தில் மிக முக்கியமானதாகக் குறிப்பிட்டு எழுதக் காரணங்கள் உண்டு. விடுதலைப் போராட்ட இயக்கம் மிகப்பெரிய பின்னடைவினைக் கண்டுள்ள இக்கால கட்டத்தில், போராட்ட இயக்கத்தின் கட்டளைக் கட்டமைப்பு (Command Structure) பற்றின தெளிவின்மையும் ஐயங்களும் நிலவுகிற நிலையில், ரணம்பட்ட தமிழ்மக்களின் உணர்வுகள் கொந் தளித்துப் போயிருக்கிற சூழமைவில் விடுதலைப் போராட்டக் களத்தினை கட்டுப்படுத்தி நெறியாழ்கை செய்ய விழைகிறவர்களின் திட்டங்கள், செயல் முறைகள் நேர்மையானவையா, உண்மை யானவையா என்பதை பொறுப்புணர்வோடு விவாதிக்கிற வெளியொன்று அத்தியா வசியமாகிறது. அத்தகைய விவாத வெளி ஒருசிலருக்கு எரிச்சல் தருகிறதென்பதே நம் ஐயங்களையும், அச்சங்களையும் மேலும் அதிகமாக்குகிறது.

இரு வாரங்களுக்கு முன் ஈழத்திலிருந்து என் பழைய வானொலி முகவர் மின் அஞ்சல் அனுப்பியிருந்தார். போர் உக்கிரமாய் நடந்த களங்களின் செய்திகளை துணிவுடன் தாமதமின்றி அந்நாட்களில் எமக்குத் தந்து கொண்டிருந்த துணிவாளர். 2002-க்குப் பின் அவரோடான தொடர்புகள் இல்லாதிருந்தது. மீண்டும் மின் அஞ்சல் மூலம் தொடர்புக்கு வந்த அவர் தனது குறுமடலில் குறித்திருந்த சில உணர்வுகள் கசப்பான இன்றைய உண்மைகள். இவ்வாறு அவர் எழுதியிருந்தார்:

""தமிழீழ விடுதலையின் எதிர்காலம் பற்றின கவலை எம்மையெல்லாம் இங்கு ஆட்கொண்டுள்ளது. ஒருவகையான மர்மத் தன்மையை உணர முடிகிறது. இங்கிருந்து பார்க்கிறபோது எல்லாமே மாயையோ என எண்ணத் தோன்றுகிறது'' என்பதாக எழுதியிருந்தார்.

அவரது கூற்று உண்மை. விடுதலைப்புலிகள் இயக்கம் கட்டுக்கோப்பான பேரியக்கமாய் உலகின் கசப்பான வியப்பாய் நின்ற காலத்திலேயே சதிகளும், ஊடுருவல்களும், துரோகங்களும் வெற்றிகரமாய் இலங்கை-உலக சக்திகளால் நடத்தமுடிந்ததென்றால், இன்றைய சூழலில் அது எளிது. உண்மையில் புலம்பெயர் தமிழர் மத்தியில் அதனை இலங்கை -உலக சக்திகள் எளிதாக நடத்துமெனவும் முன்னர் ஒருமுறை எழுதியிருந் தேன். எனவேதான் கூச்சல்வாதிகள், சுயநலப் பேர்வழிகளிடமிருந்து விடுதலைக் களத்தை காப்பாற்ற ஜனநாயக ரீதியான, வெளிப்படையான இயங்குதலே இன்றைய காலகட்டத்திற்கு உகந்ததாயிருக்க முடியும்.உதாரணமாக ஒன்றைச் சொல்கிறேன்.

ஓரிரு நாட் களுக்கு முன்பு மீண்டும் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக ஏதோ ஒரு புதிய குழு அறிவித்திருந்தது. அதனை தமிழ் சார்ந்த இணைய தளங்களெல்லாம் ஏதோ புதிய விடியலுக்கான பூபாளம் போல் விசிலடித்துக் கொண்டாடி யிருந்தது.

ஆனால் விசாரித்தால் இச்செய்தியின் பின்னணியில் இருப்பது இலங்கை ராணுவப் புலனாய்வுப் பிரிவும், செத்துப்போனதாய் கருதப்பட்ட பழைய ஓர் தமிழ் இயக்கமும் எனத் தெரிய வருகிறது. இச்செய்தியின் நோக்கம் இதுதான்: ""வவுனியா முகாம்களிலிருந்து மக்கள் விடுதலையான பின் அரசியல் தீர்வு பற்றின அழுத்தங் களை உலகம் இலங்கை மீது ஏற்படுத்தும். அதில் தமிழீழ தாயக நிலப்பரப்பில் நிலைகொண்டுள்ள ராணுவத் தினரை கணிசமாக வெளியேற்றுவதும் உள்ளடங்கும். அந்நிலை வருகையில் ராணுவ ஆக்கிரமிப்பை தொடர வைக்கத் தேவையான வாதிடல்களுக்காகவே இப்படியான புதிய ஆயுதக்குழுக்கள் அறிவிப்புகள்.

எனவேதான் விடுதலைப் போராட்ட களம் ஜனநாயகத்தன்மை கொண்டதாகவும் வெளிப் படைத்தன்மை கொண்டதாகவும் நிறுவப்பட வேண்டுமென்பதை தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.

சமீபத்தில் அனைத்துலக மனித உரிமைகளுக்கான நீதி விசாரணையாளர் ஒருவர் -பெயர் மறந்துவிட்டேன். தனது உரையொன்றில் கூறியிருந்தார், ""உலகின் ஜனநாயக அமைப்புகளும், உபகரணங்களும் தருகிற அசாத்தியமான வாய்ப்புகளை தமிழர்கள் உரிய முறையில் பயன்படுத்தவில்லையென்பது கவலையளிக்கிறது'' என்று.

உண்மை, கசப்பான உண்மை.ஜனநாயக அலகுகளின் உபகரணங்களின் வலுவினை, வளங்களை எவ்வாறு உணர்ந்துகொள்வது? கடந்த வாரம் இந்திய பாராளுமன்ற இரு அவைகளிலும் ஈழத்தின் இன்றைய நிலை குறித்து நடந்த விவாதங்களைப் பார்த்தாலே போதுமானது. பாரதிய ஜனதா கட்சியின் சுஷ்மா ஸ்வராஜ், வெங்கைய நாயுடு இருவரின் உரைகளும் கண்களில் நீர்மல்க வைத்தன. வெறும் அரசியல்வாதிகளாக அவர்கள் பேசவில்லை. உண்மையில் தமிழர்களாக நின்று அவர்கள் பேசியது போலவே இருந்தது.

அவர்களது உரைக்கு நிகராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் ராஜா அவர்களது உரையும் இருந்தது. தோழர் ராஜா மிகவும் அடிப்படையான, முக்கிய கேள்விகள் சிலவற்றையும் முன் வைத்தார்.தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட்ட எல்லா கட்சிகளும் ஓருணர்வில் நின்ற காரணத்தால் வெளியுறவு அமைச்சர் பதில் சொல்ல நிர்பந்திக் கப்பட்டார்.

அதுதானே நாட்டின் கொள்கையாகவும் மாறும்.

நானும் எல்லை மீறிச் செயல்ப்படவேண்டி இருக்கும்: மகிந்த ஆவேசம்

எதிர்க்கட்சித் தலைவர் இதன் பின்னர் தமக்கோ தமது குடும்ப உறுப்பினர்களுக்கோ அபகீர்த்தியை ஏற்படுத்தினால், எல்லைகளைத் தாண்டி பதில் நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் என ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் இரவு ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தலைவர் மலிக் சமரவிக்ரமவிற்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய மாநாடு கடந்த சனிக்கிழமையன்று வெலிசரையில் நடைபெற்ற போது அதில் பேசிய ரணில் விக்ரமசிங்க, மகிந்த ராஜபக்ஷவின் குடும்ப அரசியலில் உள்ள ஊழல் மோசடிகளை வெளிப்படுத்துவதாக பகிரங்கமாக அறிவித்ததன் பின்னரே மகிந்த ராஜபக்ஷ மலிக் சமரவிக்ரமவை தொலைபேசியில் தொடர்புகொண்டு இதனைத் தெரிவித்துள்ளார். எஸ்.பீ.யை அரசாங்கத்தில் இணைத்துக்கொள்ள தாம் எண்ணியிருக்காத போதிலும், ரணில் விக்ரமசிங்கவிற்கு பதிலடி கொடுப்பதற்காக எஸ்.பீ.யை அரசாங்கத்தில் இணைத்துக் கொள்ள தாம் தீர்மானித்துள்ளதாகவும், இதன்பின்னல் ரணில் விக்ரமசிங்க எல்லைமீறி செயற்படுவாராயின், தானும் எல்லைமீறி செயற்பட நேரிடும் என ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.அதாவது இவர் எப்போதுமே எல்லை மீறிச் செயல்படாத உத்தமர்போலவும், இனி எல்லை மீறிச் செயல்படுவார் போலவும் பேசியுள்ளது.
மகிந்த ரணில் மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தமிழர்கள் சற்று நிதானமாக அவதானித்து இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காய்களை நகர்த்துவது நல்லது.

Wednesday, December 9, 2009

வன்னியில் செயற்பட்ட ‘றோ’ முகவர்கள் 50 பேர் பாதுகாப்பாக இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டனர்

வன்னியிலிருந்த றோ முகவர்கள் ஐம்பது பேரை போர்முடிவடைந்த கையோடு றோ அமைப்பு இந்தியாவுக்குள் எடுத்துவிட்டது. வன்னியில் றோ முகவர்களாக செயற்பட்ட இந்த ஐம்பது பேரும் ஈழத்தமிழர்கள் என்றும் இவர்களை சிறிலங்கா அரசுடன் பேசி இரகசியமாக றோ இந்தியாவுக்குள் எடுத்துக்கொண்டது என்று சிறிலங்காவின் உயர் அரச மட்டங்களிலிருந்து கசிந்திருக்கிறது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:-
வன்னியில் பல காலமாக செயற்பட்டுவந்த றோ அமைப்பின் முகவர்கள் அங்கு அரச உயர்உத்தியோகங்களிலும் வர்த்தக நிறுவனங்களிலும் விவசாயிகளாகவும்கூட பணிபுரிந்துவந்தார்கள். போர் நடைபெற்ற கடைசிக்காலப்பகுதிவரை இவர்கள் அனைவரும் அங்கிருந்தவாறே புலனாய்வுத்தகவல்களை திரட்டி தமது உயர்பீடத்துக்கு அனுப்பிவந்துள்ளார்கள். இவர்களது செயற்பாடு சிறிலங்கா அரசுக்கோ படையினருக்கோகூட தெரிந்திருக்கவில்லை.
போர் முடிவடையும் தறுவாயில் இவர்கள் அனைவரையும் பாதுகாப்பாக இந்தியாவுக்குள் எடுப்பதற்கு தீர்மானித்த றோ அமைப்பு, இந்திய அரசின் ஊடாக சிறிலங்கா அரசுடன் பேச்சு நடத்தியது. இதன்பிரகாரம், இவ்வாறு வன்னிப்பகுதியிலிருந்து செயற்பட்ட றோ முகவர்கள் ஐம்பத பேரின் பெயர் பட்டியலை சிறிலங்கா அரசிடம் வழங்கி, அந்த பட்டியலில் உள்ள பெயர்களுடையவர்கள் வன்னியில் சிறிலங்கா அரச படையினரிடம் சரணடைவார்கள். அவர்கள் பாதுகாப்பாக இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவேண்டும் என்று சிறிலங்கா அரசிடம் இந்திய அரசு தெரிவித்தது.
இந்த விடயம் தொடர்பாக சிறிலங்கா அரசுடன் இந்திய பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் எம்.கே.நாரயணன் தலைமையிலான குழுவினரே பேச்சு நடத்தினர். இதேவேளை, சிறிலங்கா அரசுடன் சரணடைதல் தொடர்பாக பேச்சு நடத்தப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பான இடத்தில் சிறிலங்கா படையினரிடம் சரணடையும்படியும் வன்னியிலிருந்த றோ முகவர்கள் ஐம்பது பேருக்கும் அவர்களது தலைமைப்பீடத்திடமிருந்து தகவல் அனுப்பப்பட்டு, சரணடையும்போது கடைப்பிடிக்கவேண்டிய முறைகள் பற்றியும் தெளிவாக அறிவுறுத்தப்பட்டது.
இதனையடுத்து, சிறிலங்கா அரச படையினரிடம் சரணடைந்த ஐம்பது றோ முகவர்களும் பாதுகாப்பாக இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
- என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
--- puthinam

ஹெலிகாப்டர் விபத்து: உயிர் தப்பினார் ஜனாதிபதி பிரதீபா

இந்திய ஜனாதிபதி பிரதீபா பாட்டில் ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கட்டிடத்தில் மோதியது.
பின்பு சுதாரித்துக்கொண்டு ஹெலிகாப்டரை தரையிறக்கப்பட்டது. புவனேஸ்வரில் ஹெலிகாப்டர் தரையிறங்கியது. விபத்தில் இருந்து தப்பினார் பிரதீபா.
குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டில் நலமுடன் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஓடும் ரயிலில் சொர்ணமால்யாவிடம் சில்மிஷம் - போலீஸில் புகார்

ஓடும் ரயிலில் தன்னிடம் யாரோ ஒரு நபர் செக்ஸ் சில்மிஷம் செய்ததாக கூறி போலீஸில் புகார் கொடுத்துள்ளார் நடிகை சொர்ணமால்யா.
அதே பெட்டியில் பயணம் செய்த ஒருவர், இதுதொடர்பாக முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவர் இதுதொடர்பாக செஷன்ஸ் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், நடிகை சொர்ணமால்யா கடந்த 3-ந் தேதி எழும்பூர் ரயில்வே போலீசில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அவர் கொடுத்த புகார் அடிப்படையில் இந்திய தண்டனை சட்டம் 354 (மானபங்கம் ஏற்படுத்த உட்கருத்துடன் செயல்படுதல்), பெண் வதை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முத்துநகர் எக்ஸ்பிரசில் கடந்த 3-ந் தேதி திண்டுக்கல்லில் இருந்து எழும்பூருக்கு சொர்ணமால்யா வந்ததாகவும், சீட் நம்பர் 31-ல் லோயர் பெர்த்தில் வந்ததாகவும், தூங்கிக் கொண்டிருந்தபோது அதிகாலை 2.30 மணி முதல் 3 மணிக்குள் ஒருவர் தன்னை தொட்டதாகவும் அந்த புகாரில் அவர் கூறியுள்ளார்.காலை 6.45 மணிக்கு தனது படுக்கைக்கு எதிரே உள்ள கீழ் பெர்த்தில் இன்னொருவர் இருந்ததாகவும், மீண்டும் தூங்க முயற்சித்தபோது தன்னை அந்த நபர் தொட்டு சில்மிஷம் செய்ததாகவும் புகாரில் கூறியுள்ளார். தனது உதவியாளர் மூலம் டிக்கெட் பரிசோதகரை அழைத்ததாகவும், ஆனால் அப்போது அவர் அங்கு இல்லை என்றும், இந்த சூழ்நிலையில் சிவப்பு சட்டை போட்ட, `ஷூ' அணிந்த லக்கேஜ் இல்லாத நபர் ஒருவர் ரயிலில் இருந்து குதித்து தப்பி விட்டதாகவும் அந்த புகாரில் கூறியுள்ளார்.இந்த புகாருக்கும், எனக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது. ஒரு வயதான அம்மாவுக்கு மேல் பெர்த் வழங்கப்பட்டிருந்தது. அவர் தனக்கு கீழ் பெர்த் வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் அந்த பெர்த் அவருக்கு கொடுத்துவிட்டு, நான் அவருக்கு ஒதுக்கப்பட்ட மேல் பெர்த்தில் ஏறி படுத்து தூங்கினேன். நள்ளிரவில் நடந்த விவரம் எனக்கு தெரியாது. நான் ரயிலில் இருந்து குதிக்கவும் இல்லை.
யாரோ ஒருவர் தப்பாக நடந்துவிட்டு தப்பி ஓடியிருக்கலாம். அப்பர் பெர்த்தில் படுத்திருந்த ஒருவர், லோயர் பெர்த்தில் படுத்து தூங்கும் ஒருவரை தொட முடியாது. நான் பி.பி.ஏ. படித்துள்ளேன்.
தனியார் நிறுவனம் ஒன்றில் இயக்குனராக உள்ளேன். எந்த நிபந்தனையையும் ஏற்க தயாராக உள்ளேன். ஆகவே, எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.இம்மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

நமீதாவை பார்த்து மற்ற பெண்கள் திருந்தவேண்டும்

நமீதா கதாநாயகியாக நடித்து வரும் படம், `நில் கவனி என்னை காதலி. இந்த படத்தில் நமீதா நடித்த படுகவர்ச்சியான காட்சிகள் இடம்பெறுகின்றன.
படத்தின் பாடல் வெளியீட்டு விழா, சென்னை போர்பிரேம் தியேட்டரில் நடந்தது.
பாடல்களை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் சிவசக்தி பாண்டியன் வெளியிட்டார்.
விழாவில் கவிஞர் சினேகன் பேசினார்.
அவர், ’’இந்த படத்தில் நமீதா அதிக கவர்ச்சியாக நடித்து இருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். கிராமப்புறங்களில் கூட, பெண்கள் இப்போதெல்லாம் பாவாடை-தாவணி அணிவதில்லை. சினிமாவில் கதாநாயகிகள் அணிவதுபோல் நாகரீக உடைகளையே அணிகிறார்கள்.
எனக்கு நீண்ட நாட்களாக ஒரு ஆசை.

நமீதாவை ஒரே ஒரு படத்திலாவது பாவாடை-தாவணியில் பார்த்துவிட வேண்டும். நமீதா ஒரு படத்தில் பாவாடை-தாவணி அணிந்து நடித்து என் ஆசையை நிறைவேற்ற வேண்டும்.
நமீதா போன்ற பெரிய கதாநாயகிகள் பாவாடை-தாவணி அணிந்து நடித்தால், அதைப் பார்த்தாவது மற்ற பெண்களும் பாவாடை-தாவணி அணிய ஆரம்பிப்பார்கள்’’என்று பேசினார்.

முட்கம்பிச் சிறையிலிருந்து விடுதலை; ஆனால், தமிழர்கள் கொடுத்த விலை...


தன்னைக் கொலை செய்ய முற்பட்ட ஒருவரைக் கச்சிதமாகப் பழி தீர்ப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் - முட்கம்பி வேலியின் பின்னால் அந்தச் சமையல்காரருக்கு எதிர்பாராத விதமாகக் கிடைத்தது.
அந்த வாய்ப்பு வந்த போது - சிறிலங்கா அரசினால் நடத்தப்பட்ட தடுப்பு முகாமில் 280,000 தமிழ் மக்களுடன் மக்களாக ஒரு கைதியாக அவர் இருந்தார்.
கடந்த மே மாதத்தில் - விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசிச் சிறு நிலத் துண்டில் இருந்து அவர் தப்பி வந்த அந்த நாளின் நினைவுகள் இன்னமும் அவர் மனதில் ஒளிர்ந்துகொண்டு உள்ளன.
“மக்கள் ஒரு குழுவாகத் தப்பி ஓட முயற்சித்த போது - அவர்களில் 20 முதல் 30 வரையானோரைப் புலிகள் சுட்டுக் கொன்றார்கள்; அந்த மக்கள் குழுவில் நானும் இருந்தேன்” என்று நினைவு கூருகின்றார் வி.சிவலிங்கம்.
கடந்த செவ்வாய்க் கிழமை (டிசெம்பர் 1, 2009) வவுனியா தடுப்பு முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டு வெளியே வந்த கடைசித் தமிழ்க் கைதிகளில் ஒருவர் அவர்.
“அங்கே அவர்கள் நான்கு அல்லது ஐந்து பேர் இருந்தார்கள். முதலில் அவர்கள் எங்களுடன் வாக்குவாதப்பட்டனர். சற்று நேரத்தில், அவர்களைச் சுற்றி இருந்த மக்கள் கூட்டம் பெரியதாகத் தொடங்கியது; அவர்கள் பயப்படத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் மக்கள் அவர்களைத் தள்ளிக் கடந்து கொண்டு வெளியேற முயன்றனர்.
உடனே அவர்கள் மக்களை நோக்கித் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்; மிக நெருக்கமாக, இடுப்பளவு உயரத்தில், எங்களை நோக்கி சரமாரியாகச் சுட்டனர். பெரும் அல்லோல கல்லோலமாக ஆகி விட்டது. அதேநேரத்தில் - படையினர் கூட எம் மீது பீரங்கிக் குண்டுகளைக் கொட்டிக்கொண்டிருந்தனர்” என்றார் சிவலிங்கம்.
சிவலிங்கம் முல்லைத்தீவைச் சேர்ந்த சமையல்காரர். தனது மனைவி மற்றும் ஐந்து குழந்தைகளுடன் தெய்வாதீனமாக உயிர் தப்பி வெற்றிகரமாகப் படையினரின் முன்னணி நிலைகளை வந்தடைந்தவர்; 10 மணி நேரமாகக் கழுத்தளவு கடல் நீரில் நடந்து வந்து அவர்கள் இந்தக் காவியத்தைப் படைத்தனர்.
அதன் பின், சில நாட்களிலேயே - வவுனியா "மெனிக்" பண்ணை முகாம் வளாகத்தில் உள்ள 'வலயம் - 2' [ Zone - 2 ] பகுதியில் சிறிலங்கா படையினரால் அவரும் அவரது குடும்பத்தினரும் அடைக்கப்பட்டனர்.
கடந்த செவ்வாய்க் கிழமை வரை அவர்கள் அங்கேயே இருந்தனர். அவருடன் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் பலரும் முன்னாள் போராளிகள்; அற்புதமான நாள் ஒன்றில் தனக்குத் தெரிந்த முகம் ஒன்றை சிவலிங்கம் அங்கே கண்டார்.
“அவர் ஒரு விடுதலைப் புலிப் பேராளி. அன்றைய தினம் பலரைச் சுட்டுக் கொன்றவர்களில் ஒருவர்” என்கிறார் சிவலிங்கம். “அவர் இளம் வயதில் உள்ளவர்; எப்படியோ ஒரு வழியாகத் தப்பி விட்டார்; இப்போது பொதுமக்களுள் ஒருவராகக் கலந்து இருந்தார்.
நான் அவரை அணுகி ‘என்னைத் தெரிகிறதா...? நீங்கள் சுட்ட அந்த மக்கள் கூட்டத்திற்குள் நானும் இருந்தேன். என்னால் இப்போது உங்களுக்கு என்ன செய்ய முடியும் என்பதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்’ என்றேன். அந்த இளைஞன் தலையைத் தொங்கப் போட்டான்” என்று மேலும் விபரிக்கிறார் சிவலிங்கம்.




அந்த முன்னாள் பேராளியைத் தாக்குவதற்கு அல்லது சிறிலங்கா படை ஆட்களிடம் காட்டிக் கொடுப்பதற்குப் பதிலாக “நான் எதுவும் செய்யவில்லை; அவரைப் பற்றி எவரிடமும் சொல்லவில்லை; புலிகள் எங்களுக்காக நீண்ட காலமாகக் கடுமையாகப் போராடி இருக்கிறார்கள். ஆனால் கடைசிக் காலத்தில் அவர்கள் செய்தவைகள் எல்லாம் பயங்கரமானவை தான் – அது எங்களுக்குத் தெரியும். இருப்பினும் அந்த நேரத்தில் அவர்களுக்கும் வேறு வழிகள் எதுவும் இருக்கவில்லை" என விபரிக்கிறார் அவர்.




பெரும்பாலான தமிழர்களிடம் - விடுதலைப் புலிகளால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களிடம் கூட - புலிகளை நோக்கிய இத்தகைய இரட்டை மனப்போக்கு காணப்படுகின்றது.
தடுப்பு முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் - தமது எதிர்கால வாழ்க்கை குறித்த போராட்டங்களை இனி எப்படி எதிர்கொள்ளவது என்று தெரியாமல் திணறி வரும் சமயத்திலும் - அந்த மக்கள் மத்தியில் இத்தகைய போக்கு நீடிக்கிறது.



வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து 6 மாதங்கள் தடுப்பு முகாமில் இருந்து, டிசெம்பர் 1ஆம் திகதி விடுவிக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் தற்காலிக வதிவிடம்.




“பிரபாகரன் இறந்துவிட்டார் எனக் கேள்விப்பட்ட போது, அது பற்றி எத்தகைய உணர்வும் எனக்கு எற்படவில்லை" எனத் தெரிவித்தார் ஜெகதீஷ் சித்தார்த்தன் (34). கிளிநொச்சியைச் சேர்ந்த ஆசிரியையான இவர், "மெனிக்" பண்ணை தடுப்பு முகாமில் கடந்த 6 மாதங்களாக கணவர் மற்றும் ஆண் குழந்தைகளுடன் அடைத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் இப்போது தான் விடுவிக்கப்பட்டு இருக்கிறார்.




“ஆனால், பின்னர் - ஒரு தமிழ்ப் பெண்ணாக, அவரது சாவுக்காக நான் மிகவும் வருத்தப்பட்டேன். 30 வருடங்களாக எமது உரிமைக்காகப் புலிகள் போராடினார்கள். அழிவைச் சந்தித்த இறுதித் துளி வரைக்கும் அவர்கள் போராடினார்கள்” என விபரித்தார் அவர்.




மிகக் கொடூரமான போர்க் களத்தின் கொடுமைகளைத் தாங்கிக் கொண்டு - கடல் ஊடாகத் தனது இரண்டரை வயது மற்றும் 7 மாதக் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு - கணவருடன் நடந்து வந்த ஒரு பெண்ணிடம் இருந்து இந்த வார்த்தைகள் வந்தன.
ஒரே சமயத்தில் விடுதலைப் புலிகளும் சிறிலங்கா படையினரும் நடாத்திய துப்பாக்கிச் சூடுகளுக்கு மத்தியில் தப்பி ஓடி வரும் போது - வானூர்தி மற்றும் பீரங்கிக் குண்டுகளின் தாக்குதல்களால் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழர்களின் உடலங்களைத் தாம் கண்டதாக ஜெகதீஷ் சித்தார்த்தன் கூறினார்.
“பெரும் கூட்டமாக நாங்கள் தண்ணீரில் இறங்கிய போது எங்களை நோக்கி விடுதலைப் புலிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்; தாக்குண்டவர்கள் தண்ணீரில் வீழ்ந்தார்கள்” என அவர் மேலும் தெரிவித்தார்.
சண்முகர் ராஜா லூத்மேரி தனது குழந்தைகளுடன் தடுப்பு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டார்; ஆனால், அவரது கணவர் புலிகள் இயக்க உறுப்பினர் என தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.மே 2009-இல் கிடைத்த போர் வெற்றியை நிலையான அமைதியாக மாற்றுவதற்கு சிறிலங்கா அரசு வேகமாக முயற்சிக்க வேண்டும். இல்லையேல் - இரட்டை மனப்பாங்கோடு உள்ள இத்தகைய மக்கள் அரசுக்குப் பெரும் சவாலாகவும் குழப்பமாகவும் அமைவார்கள்.
“வரலாற்றில் மிகப் பெரிய பணயக் கைதிகள் மீட்பு நடவடிக்கை” என்று பறை சாற்றி விடுதலைப் புலிகளிடம் இருந்து மக்களை விடுவித்ததாகத் தெரிவித்தவர்கள் - 280,000 மக்களை 6 மாதங்களாகத் தடுத்து வைத்திருந்தது அந்த மக்களது மனங்களை வெல்லக் கூடிய ஒரு சாதகமான தொடக்கமாக அமையவில்லை.
தடுப்பு முகாம்களில் திட்டமிட்ட ரீதியிலான துன்புறுத்தல்கள் இல்லை என்ற போதும் - அளவுக்கு அதிகமான சன நெருக்கடி மற்றும் மோசமான சுகாதாரச் சீர்கேடுகள் காரணமாக அந்த மக்களது வாழ்க்கை மிகக் கடினமான ஒன்றாக அமைந்திருந்தது.
“குறிப்பாக, எமது முகாம் மோசமானது” என்றார் சிவலிங்கம். “தண்ணீருக்காகவும் உணவுக்காகவும் தமக்கென ஒர் இடத்திற்காகவும் மக்கள் சண்டை போட வேண்டியிருந்தது.
கைதிகளாகத்தான் எங்களை நாங்கள் அங்கே உணர்ந்தோம். ஏனெனில், அப்படித்தான் நாங்கள் வைக்கப்பட்டிருந்தோம்: கீழ்த்தரமான மக்களாக” என அவர் விளக்கினார்.
கடந்த செவ்வாய்க் கிழமை விடுவிக்கப்பட்ட 130,000 மக்கள் உள்ளடங்கலாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைவருக்கும் - ஏதோ ஒரு வகையில் - உடனடி மீள்குடியமர்வு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
சிறு தொகைப் பணம், போர்வைகள் போன்ற உணவு-அல்லாத அத்தியாவசியப் பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் போது குறைபாடுகள் ஏற்படுகின்றன.
சிலர் காசையும் நிவாரணப் பொருட்களையும் பெற்றுள்ளனர்; சிலருக்கு எதுவும் கிடைக்கவில்லை: திருகோணமலைக்குத் திரும்பி இருப்பவர்களில் ஒருவரால் கூட இதுவரை வாராந்த நிவாரணத்தைப் பெற முடியவில்லை.
“அதிகாரிகளிடம் செல்லும் ஒவ்வொரு தடவையும், எங்களுக்குக் கொடுப்பதற்கான நிவாரணப் பொருட்கள் இன்னும் வந்து சேரவில்லை என்றே கூறுகிறார்கள்” எனச் சொன்னார் ராஜினிதேவி விசுவலிங்கம் (32).
விவசாயியான 40 வயது நிரம்பிய இவரது கணவருக்கு இரண்டு கண்களுமே போய்விட்டன; கடந்த ஏப்ரல் மாதத்தில் குண்டுத் தாக்குதல் ஒன்றில் அவர் தனது கண்களை இழந்துவிட்டிருந்தார். அப்படி இருந்த போதும், மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்பு - அவர் "மெனிக்' பண்ணையின் வலயம் 4-இல் இருந்த அவரது குடும்பத்தினருடன் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.


தடுப்பு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட குடும்பம்: கந்தையா விசுவலி்ங்கம் சிறிலங்கா படையின் பீரங்கிக் குண்டில் இரண்டு கண்களையும் இழந்துவிட்டார்.


“அகதிகளுக்கான ஐ.நா. தூதரகத்திற்கு (UNHCR - United Nations High Commissioner for Refugees) இது தொடர்பில் கடிதம் கொடுத்தேன்:
எனக்கு மூன்று குழந்தைகள், என் கணவருக்குப் பார்வை கிடையாது, எங்களுக்குச் சொந்தமாக வீடும் கிடையாது. கையில் காசும் கிடையாது என அந்தக் கடிதத்தில் எழுதி இருந்தேன்.
அவர்கள் என்னை அனைத்துலக குடிபெயர்வோர் அமைப்பு (IOM -International organisation for Migration) அலுவலகத்திற்கு அனுப்பினார்கள்.
ஐ. ஓ. எம் ஆட்கள் அங்கிருந்து என்னை மாவட்டச் செயலக அதிகாரிகளிடம் திருப்பி அனுப்பினார்கள்; அவர்கள் என்னை வெறுங்கையுடன் வெளியேற்றி விட்டார்கள்.
அரசாங்கம் எங்களைக் கைகழுவி விட்டுவிட்டது” எனப் பொருமினார் ராஜினிதேவி.
“நிலைமை தாறுமாறாகக் கிடக்கிறது” எனச் சொன்னார் அருட்தந்தை வி.யோகேஸ்வரன்.
கிறிஸ்த்தவ மதகுருவான அவர், திருகோணமலையில் உள்ள மனித உரிமைகளைப் பாதுகாத்து ஊக்குவிப்பதற்கான மையத்தின் [ Centre for Promotion and Protection of Human Rights in Trincomalee ] இயக்குனராகப் பணியாற்றுகின்றார்.
“மீள்குடியமர்வு அல்லது புனர்வாழ்வு நடவடிக்கைக்கெனத் தெளிவான நடைமுறைகள் எவையும் இங்கு இல்லை; அவை பற்றி எங்களுக்கு எதுவும் தெரியவில்லை; ஊர் திரும்பி இருப்பவர்களுக்கும் எதுவும் தெரியாது.
ஐ.நா.சபை கூட தெளிவான திட்டங்கள் எதுவும் இல்லாமலே இருக்கின்றது... ஏன் இப்படி...? இவற்றுக்கெல்லாம் யாருக்கும் பதில் தெரியாது.
கண்தெரியாத ஒருவர் இருட்டு அறைக்குள் இருந்து வெயியேறுவதற்குத் தட்டுத் தடுமாறி கதவு தேடுவது போல இருக்கிறது நிலைமை” எனப் படபடத்தார் அருட்தந்தை.
தடுப்பு முகாமில் வைக்கப்பட்டு இருந்தோருக்கு வழங்கப்பட்டிருந்த ஒரு வகை அடையாளப் பட்டிநாட்டின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்திய சிறிலங்கா அரசு, அதன் பின் ஏற்பட்ட குழப்ப நிலைமையைச் சமாளிப்பதற்கான சொந்த வழிகளைக் கண்டறியத் தவறிவிட்டது.
மீள்குடியமர்வுப் பணிகளுக்கான உதவிகளை வழங்குவதில் உள்ளூர் அரச அதிகாரிகளை விடவும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மிகத் திறமையாகச் செயற்படக் கூடியன.
அதேசமயத்தில், முகாம்களில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட 130,000 தமிழ் மக்களின் நடமாட்டச் சுதந்திரம் குறித்தும் தெளிவு இல்லை; அவர்களில் பெரும்பாலானவர்கள் செல்லுவதற்கு வீடுகள் கூட இல்லை.
"மெனிக்" பண்ணை தடுப்பு முகாமிலிருந்து வந்த சிலருக்கு - 10 நாட்களில் திரும்பி வந்துவிட வேண்டும் எனச் சொல்லப்பட்டுள்ளது; வேறு சிலருக்கோ 15 நாட்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
கடைசியாக கடந்த செவ்வாய்க்கிழமை ( டிசம்பர் 1, 2009) விடுவிக்கப்பட்டவர்கள் - 6 மாத சிறை வைப்புக்குப் பின்னர் ஏதோ ஓரளவு சுதந்திரமாவது கிடைத்ததே என்று மகிழ்ச்சி அடைகிறார்கள்.
ஆனால், சமையல்காரர் சிவலிங்கம் போன்ற சிலருக்கு அது ஒர் உணர்ச்சியைப் பிழியும் நாள்.
“அன்று முகாம் வாசலைக் கடந்து நான் வெளியே வந்த போது - ‘போய் வருகிறேன்’ என்று எனது மனைவியிடம் கடைசியாகச் சொல்லிவி்ட்டு வந்தேன்.
நல்லது கெட்டது எல்லாவற்றையும் நாங்கள் இருவரும் சேர்ந்தே கடந்து வந்தோம்; போருக்கு நடுவே தப்ப முயற்சி்த்த போது கூட - 'செத்துப்போய் விடுவோம்' என்று தெரிந்தும் ஒன்றாகவே தப்பி ஓடி வந்தோம். ஆனால், பின்பு உயிர் தப்பி வந்த போது ஒன்றாகவே நிம்மதியடைந்தோம். நான் அவளைக் காதலித்தேன்.


- செய்தியும் படங்களும்: நன்றி - தி ரைம்ஸ் இணையம் [ The Times Online ]


ஜெகத் கஸ்பர் இந்திய உளவாளி -சீமான்




கனடாவில் மாவீரர் நாள் நிகழ்ச்சியில் பேசுவதற்காகச் சென்ற திரைப்பட இயக்குநரும், `நாம் தமிழர்' இயக்கத் தலைவருமான சீமானை கனடா போலீஸார் பேசவிடாமல் தடுத்து, நாட்டை விட்டு வெளியேறும்படி உத்தரவிட்டிருக்கிறார்கள்.

27-ம் தேதி சென்னை திரும்பிய சீமானிடம் பேசினோம்.

கனடாவில் நீங்கள் கைது செய்யப்பட்டது ஏன்?

``கனடாவுக்குச் செல்லும்போதே உள்ளேயே நுழையவிடாமல் தடுத்து விடுவார்கள் என்று எதிர்பார்த்தோம். அங்கே சென்று தலைமறைவாகவே இருந்தேன். அவர்களும் என்னைத் தேடிக் கொண்டேதான் இருந்தார்கள். 26-ம் தேதி மாலை நிகழ்ச்சியில் பேசுவதாக இருந்தேன். தூங்கிக் கொண்டிருந்த என்னை எழுப்பி அன்று காலையே கைது செய்தனர். முதுகிற்குப் பின்னால் என் கைகளைக் கட்டி, விலங்கிட்டு இழுத்துச் சென்றனர்.

நான் பேசினால் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போகும் என்று அங்கிருந்த அதிகாரி கூறினார். `இதே கனடாவில் 2007-ல் இதே மாவீரர் நாள் நிகழ்ச்சியில் பேசியிருக்கிறேன். அப்போது கெட்டுப் போகாத சட்டம் ஒழுங்கு இப்போது மட்டும் எப்படி கெட்டுப் போகும்?' என்று கேட்டேன். அதற்கு அந்த அதிகாரி, `தட் இஸ் பாலிடிக்ஸ்' என்றார். `கனடாவை விட்டு உடனே வெளியேறுங்கள்; மீறி இருந்தால் சிறையில் தள்ளுவோம்' என்று எச்சரித்தனர். என்னை வழியனுப்ப வந்த தமிழர்களையும் சந்திக்கவிடாமல் தடுத்துவிட்டனர். இலங்கை அரசு சொல்லி, ஓர் இந்தியனை கனடா அரசு திருப்பி அனுப்பாது. அங்கே என்னை விசாரித்ததே ஒரு சீக்கிய அதிகாரிதான். `ராஜிவ்காந்தி கொலையை நியாயப்படுத்துகிறீர்களா?' என்ற அவரிடம், `நீங்கள் இந்திரா காந்தி கொலையை நியாயப்படுத்துவீர்களா?' என்றேன்.''

அங்கு ஒரு நிகழ்ச்சியில் வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசியதற்காகவே நீங்கள் கைது செய்யப்பட்டு திருப்பி அனுப்பியதாக சொல்லப்படுகிறதே?

``புதன்கிழமை (25-ம் தேதி) பல்கலைக்கழக மாணவர்களுடன் பேசினேன். நிச்சயம் அந்தப் பேச்சுக்காக என்னைக் கைது செய்யவில்லை. மாவீரர் நாள் நிகழ்ச்சியில் நான் பேசிவிடக் கூடாது என்றே என்னைக் கைது செய்து திருப்பி அனுப்பினார்கள்.''
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக உங்கள், `நாம் தமிழர்' இயக்கத்தினர் மூன்று பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்களே?


``இந்தக் கைதின் மூலம் எங்கள் இயக்கத்தை ஒரு பயங்கரவாத இயக்கம்போல் ஜோடிக்கப் பார்க்கிறார்கள். பெரும் திரளான இளைஞர்கள் என் பின்னால் திரண்டு வருவதைத் தடுக்கும் வேலைதான் இது. கனடாவில் இருந்து நான் விமான நிலையத்துக்கு வரும்போது, அதிகாலை (27-ம் தேதி) ஒன்றரை மணி. இரண்டரை மணிக்கு வெளியே வந்தேன். விருகம்பாக்கம் அருகே வரும்போது எங்களுடன் வந்த இரண்டு வாகனத்தை காவல்துறையினர் மறித்து அழைத்துச் சென்றனர். அந்தத் தகவல் எனக்குத் தெரிந்ததும் என்னருகில் இருந்த தம்பிகளிடம், `என்னவென்று பார்த்துவிட்டுச் சொல்லுங்கள். தேவையென்றால் நான் வருகிறேன்' என்றேன். அப்படி விசாரிக்கப் போன அந்த மூன்று தம்பிகள்தான் இன்றைக்கு சிறையில் இருக்கிறார்கள்.
விமான நிலையத்தில் பேட்டி எடுக்க வந்திருந்த ஊடகவியலாளர்களின் காணொளியில் அந்தத் தம்பிகள் என்னுடன் இருப்பது பதிவாகியிருக்கிறது. அப்படியிருக்கும்போது, அவர்கள் எங்கிட்டுப் போய் குண்டு வைத்திருக்க முடியும்? மீனம்பாக்கம் எங்கிருக்கிறது? என் அலுவலகம் எங்கிருக்கிறது? ஈ.வி.கே.எஸ். அவர்களின் வீடு எங்கிருக்கிறது? குண்டு வீசவும், கொலை செய்யவும், கட்டப்பஞ்சாயத்து செய்யவும் `நாம் தமிழர்' இயக்கத்தை நான் தொடங்கவில்லை. மிக உயர்ந்த லட்சியமும், நோக்கமும் எங்களுக்கு இருக்கிறது.
இதே ஈ.வி.கே.எஸ். பிறந்தநாள் சுவரொட்டியை என் அலுவலக வாசலில் ஒட்டிவிட்டு, என் வாகனத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசினார்கள். அதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. பாரதிராஜா அப்பா அலுவலகத்தை அடித்து நொறுக்கியதற்கும், தா.பாண்டியன் கார் எரிக்கப்பட்டதற்கும் இன்னும் ஒருவர்கூட கைது செய்யப்படவில்லை. இப்போது கைது செய்யப்பட்ட என் தம்பிகளுக்கும் அந்த சம்பவத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று நான் நிரூபிக்கிறேன். குண்டு வீசியதாகச் சொல்லப்படும் நேரத்தில் அந்தத் தம்பிகள் என்னுடன் இருந்ததற்கு ஆதாரங்கள் இருக்கின்றன.''


இளங்கோவனுக் கும், உங்களுக்கும் அப்படியென்ன பிரச்னை?


``ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது எங்களுக்கு வருத்தம் உண்டு. பிரபாகரன் படத்தை அவர் கிழிக்க வேண்டிய அவசியம் என்ன? அவருடன் வந்த ஒரு பெண், பிரபாகரன் படத்தை மிதித்திருக்கிறார். அதை அவர் அனுமதித்திருக்க வேண்டியதில்லை. இங்கே பிரபாகரனின் படத்தை அட்டைப் படத்தில் போட்டு அவரைப் பற்றி கட்டுரை எழுதாத பத்திரிகைகளே இல்லை. அவரைப் பற்றி பேசினால் மட்டும் கைது செய்வார்கள் என்றால், எழுத்துச் சுதந்திரம் இருக்கும் அளவுக்கு இந்த நாட்டில் பேச்சு சுதந்திரம் இல்லையா?''


என்னுடைய அறையில் தான் உங்களுடைய `நாம் தமிழர்' இயக்கம் உருவானது. சீமான் செயல்பாடுகள் எனக்குப் பிடிக்காததால் அவரைவிட்டுப் பிரிந்துவிட்டேன்' என்று ஜெகத் கஸ்பர் கூறியிருக்கிறாரே?

``ஜெகத் கஸ்பருக்கும், எனக்குமான உறவு துண்டிக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்; பெருமை அடைகிறேன். அவர், `சீமானுக்கு என்ன நாணயம் இருக்கு?' என்றும் பேசியிருக்கிறார். யாரைக் கேட்டு `மௌனத்தின் வலி' என்ற அவருடைய புத்தகத்தில் என்னுடைய கவிதையை வெளியிட்டார்? அவருக்கு என்ன நாணயம் இருக்கு?
எங்களுடைய `நாம் தமிழர்' இயக்கத்துக்கு இவர்தான் பெயர் வைத்தாராம். மதுரையில் கூட்டம் நடத்த `நாம் தமிழர் இயக்கம்' என்ற பெயரில் அனுமதி கோரலாம் என்றவர், வழக்கறிஞர் காமராஜ். அது விவாதிக்கப்பட்டது, இயக்குநர் மணிவண்ணன் அப்பா வீட்டில். இவர், அரசியல் கட்சியா தொடங்க வந்தார்? தொண்டு நிறுவனம் போல் பேசினார். அறக்கட்டளை நிறுவி, அதற்கு `ஜஸ்டிஸ் ஃபண்ட்' திரட்டலாம்' என்றார். திடீரென `நான் பின்னால் இருந்து இயங்குகிறேன்' என்றவர், மருத்துவர் எழிலனுடன் வந்து ஆர்வமே இல்லாமல் பேசிவிட்டுச் சென்றார். என் ஓட்ட வேகம் வேறு. அவரது ஓட்ட வேகம் வேறு. `நாம் தமிழர்' என்று அவர்தான் பெயர் வைத்தாரென்றால், அந்தப் பெயரில் அவரும் ஒரு இயக்கத்தை நடத்தட்டும்; ஒரு கூட்டம் போடட்டும். நானும் கூட்டம் போடுகிறேன். மக்கள் எங்கே வருகிறார்கள் என்று பார்க்கலாம். `ஜெகத் கஸ்பர் இருந்தால் இந்த இயக்கத்தில் சேர மாட்டேன்' என்று நிறையப் பேர் என்னிடம் சொன்னார்கள்.''


கஸ்பர் உங்களையும், புலிகளையும் விமர்சிக்கும் நோக்கம் என்ன?

``முழுக்க முழுக்க அவர் இந்திய உளவுத்துறையின் ஆள். நான் அலைபேசியில் யார் யாருடன் பேசுகிறேன் என்று ஜெகத் கஸ்பர் ஒட்டுக் கேட்கிறார். அவரது நிஜமுகம் புரிந்ததும், அவரைவிட்டு விலகி விட்டேன். அமைதிப் பேச்சு வார்த்தை என்கிற பெயரில் பிரபாகரன் சிறுபிள்ளைத்தனமாக முடிவெடுத்து விட்டார் என்று கஸ்பர் எழுதுகிறார். அதை பிரபாகரன் களத்தில் போராடிக் கொண்டிருந்தபோது அவர் ஏன் எழுதவில்லை? பிரபாகரன் உணர்ச்சிவயப்பட்டுவிட்டார்; அப்படிச் செய்திருக்க வேண்டும், இப்படிச் செய்திருக்க வேண்டும் என்று, பிரபாகரனுக்கு இன்று பாடம் நடத்துபவர், அவரைச் சந்தித்தபோதே ஏன் சொல்லவில்லை? பிரபாகரனைச் சந்தித்த ஒருசில வினாடிகளைப் பெரிதுபடுத்தி, சுயவிளம்பரம் தேடுவதாக இவர் மீது எழுந்த விமர்சனத்துக்கு இன்று வரை பதிலில்லையே!''


தேவர் ஜெயந்தி விழாவில் நீங்கள் கலந்துகொண்டதற்கு உங்கள் இயக்கத்திலேயே எதிர்ப்புக் கிளம்பியுள்ளதாகக் கூறப்படுகிதே?


``முத்துராமலிங்கத் தேவர் என்ன மராட்டியரா? மார்வாடியா? குஜராத்தியா? மலையாளியா? அவர் தமிழர் இல்லையா? இந்த மாதிரி பழிபோடுவதை நான் மதிக்கிறேன். இதை நான் தொடர்ச்சியாகச் செய்வேன். நான் என் முன்னோர்களை மதிக்கிறேன். இம்மானுவேல் சேகரனுக்கும், அம்பேத்கருக்கும், ரெட்டைமலை சீனிவாசனுக்கும் வீரவணக்கம் செலுத்தியபோது வராத சாதியம், முத்துராமலிங்கத் தேவரிடம் மட்டும் ஏன் வந்தது?
தீரன்சின்னமலைக்கும், காமராஜருக்கும், வீரநங்கை வேலு நாச்சியாருக்கும், மருது பாண்டியருக்கும் வீர வணக்கம் செலுத்தினாலும் சாதியம் பார்ப்பீர்களா? மதுரை வீரனுக்கு வீரவணக்கம் செலுத்தினால் அந்த சாதியைத் தூக்கிப் பிடிக்கிறேன் என்று சொல்வீர்களா? அங்கே போய் `தேவரின மக்களே திரண்டு வாருங்கள்' என்றா அழைத்தேன்? `முத்துராமலிங்கத் தேவரைவிட சிறந்த தலைவர் இந்த மண்ணில் இல்லை' என்று அங்கே பேசிவிட்டு வரவில்லை. நான் அனைத்து மக்களையும் தமிழர்களாகவே பார்க்கிறேன். என் முன்னால் நிற்பவர்களில் இவன் பள்ளர், பறையர், சக்கிலியர், நாடார், முதலியார் என்று பார்க்க மாட்டேன். என் பின்னால் வந்த பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த தம்பிமார்கள் முத்துராமலிங்கத் தேவருக்கு வீரவணக்கம் செலுத்தினார்கள். அதேபோல் தேவர் சமூகத்தைச் சேர்ந்த தம்பிகள் என்னால் இம்மானுவேல் சேகரனுக்கு வீரவணக்கம் செலுத்தினார்கள்.
இருபெரும் மோதல் சக்தியாக இருக்கிறவர்களை இணைப்பது யார்? என்னால்தானே அது நடந்தது.


அந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ரௌலட் சட்டம் என்கிற வாய்ப்பூட்டுச் சட்டம் போட்டு குற்றப் பரம்பரை என்று அறிவித்து வைத்திருந்ததை எதிர்த்துப் போராடிய முத்துராமலிங்கத் தேவரை ஏன் போராளியாகப் பாாக்க மறுக்கிறீர்கள்? அவர் என்ன, மொத்த சாதி அடையாளத்தையும் குத்தகைக்கு எடுத்து வைத்திருக்கிறாரா? வேறு எவன்கிட்டயும் சாதி இல்லையா என்ன? பேனா இருக்கு, பேப்பர் இருக்கு, அரிப்பு இருக்கு என்பதற்காக சீமான் சாதியத்தைக் கையில் எடுத்துவிட்டார் என்று எழுதுவதை நிறுத்துங்கள்! நான் சாதி வெறியனா இல்லையா என்பதை காலம் சொல்லும்.''


பிரபாகரன் சொல்லித்தான் `நாம் தமிழர்' இயக்கத்தைத் தொடங்கினீர்களாமே?

``அண்ணன் (பிரபாகரன்) சொன்னபோது எனக்கு ஆர்வம் இல்லை. தமிழ்த் தேசிய தளத்தில் அண்ணன் திருமாவளவன் போன்றவர்கள் இருக்கிறார்கள் என்று அவர்களிடம் எடுத்துச் சொன்னேன். அங்கே இருந்த போராளிகள் கூட `திருமாவளவன் மீது எங்களுக்கு நல்ல புரிதலைக் கொண்டு வந்தீர்கள்' என்றார்கள். அந்த மண்ணில் திருமாவளவன் போய் நின்றிருந்தாலும் அவரைப் பற்றி அங்கே அதிகமாக நான்தான் எடுத்துப் பேசியிருக்கிறேன். இங்கே இருக்கிற அரசியல் இயக்கங்கள் மீது எனக்கு நம்பிக்கை இருந்ததால், ஓர் அரசியல் இயக்கத்தின் தேவை அப்போது ஏற்படவில்லை.''
பிரபாகரன் சொல்லித்தான் இயக்கம் தொடங்கினீர்கள் என்றால், தமிழக அரசியலில் பிரபாகரன் தலையிடுகிறார் என்கிற இந்திய அரசின் குற்றச்சாட்டு உண்மையாகிவிட்டதே?
``அவர் தலையிட வேண்டும் என்பது இல்லை. அவர் சொல்லித்தான் இதைச் செய்யணும் என்பதும் இல்லை. இந்த மண்ணில் எங்கள் மக்களுக்கு ஓர் அரசியல் இயக்கம் வேண்டும் என்று தோன்றியது. அதைக் கட்டமைக்கிறோம். அவர் சொல்லித்தான் ஒவ்வொன்றையும் செய்யணும் என்பது இல்லை.''


தமிழினம், மொழி என்று பேசுவதால் உங்கள் இயக்கத்தின் மீதும், உங்கள் மீதும் பிரிவினைவாதிகள் என்ற பார்வை விழாதா?


``நாங்கள் தனித் தமிழ்நாடு கோரவில்லை. இந்திய தேசிய ராணுவத்தில் என் அண்ணன், தம்பி இருக்கிறார்கள். இலங்கை தேசிய ராணுவத்தில் தமிழர்களை அந்நாடு சேர்த்துக் கொள்ளுமா? அந்த உரிமையை இந்தியா பெற்றுத் தருமா? இந்த மண்ணில் நாங்கள் கேட்கும் இந்தக் கேள்விக்கு இந்த நாடு பதிலே சொல்லவில்லை. தனித் தமிழீழம் ஏன் கேட்கிறோம் என்று, இப்படியான காரணங்களை எங்களால் அடுக்க முடியும். தங்கள் மொழியை உயர்த்திப் பிடிப்பதால் பால்தாக்கரேவும், ராஜ்தாக்கரேவும் பிரிவினைவாதிகள் அல்ல. தமிழர்களுக்கு உரிமை உள்ள தண்ணீரைத் தர மறுப்பதால் மலையாளிகளும், கன்னடர்களும் பிரிவினையைத் தூண்டுகிறார்கள் என்று ஆகிவிடுமா? தமிழன் மட்டும் தேசிய உணர்வோடு இருக்கணும். மற்றவர்கள் எல்லாம் அவரவர் மொழியுணர்வோடு இருக்கலாம் என்பது சரியா? விடுதலைக்குத் தமிழனும் சேர்ந்துதான் போராடினான். ஆனால், இந்தி மட்டும் ஆட்சி மொழியானது எப்படி?
சுதந்திரத்தை அவன் கையில் கொடுத்து விட்டோம். மொத்த அதிகாரத்தையும் அவன் எடுத்துக்கொண்டான். இலங்கையிலும் தமிழனும், சிங்களவனும் போராடி விடுதலை பெற்றார்கள். அதன்பிறகு, சிங்களம் மட்டும் ஆட்சி மொழி; சிங்களவன் மட்டும் அதிபர் என்று திருத்திக் கொண்டான். அதேதான் இங்கேயும் நடக்கிறது. இந்திய நாடாளுமன்றத்தில் தமிழில் பேச இன்னும் அனுமதி இல்லையே.''

தமிழீழ விடுதலைப் போராட்டம் தோல்வி அடைந்ததற்கு சகோதர யுத்தம்தான் காரணம் என்று முதல்வர் கூறியிருக்கிறாரே?

``கருணாநிதி எப்போதும் இதைத்தான் சொல்லி வருகிறார். அவரது கருத்தை யாரும் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை. சகோதர யுத்தத்தைத் தூண்டிவிட்டதே இந்திய உளவுத் துறைதான். விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை ஒப்படைக்கச் சொன்னார்கள். புலிகள் ஒப்படைத்த ஆயுதங்களை மாற்றுக்குழுவிடம் கொடுத்து, புலிகளுக்கு எதிராக உசுப்பிவிட்டு, தாக்குதலை நடத்த வைத்தது, இந்திய அரசுதான். கருணா என்கிற துரோகியைக் கொல்லாமல் விட்டதால்தான், இந்த மிகப்பெரிய பின்னடைவைப் புலிகள் சந்திக்க வேண்டியதாகிவிட்டது!'' என்று முடித்தார், சீமான்.
நன்றி குமுதம்

புலிகளின் சொத்துக்கள் : முழுமையான விபரங்கள்

விடுதலைப் புலிகளின் தங்கம் மற்றும் கப்பல்கள், வங்கி கணக்குகள் உட்பட அவர்களின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சொத்துக்கள் தொடர்பான விசாரணைகள் முடிவடைந்ததும் அவை பற்றிய முழுமையான விபரங்கள் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும் என்று பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான ஜோசப் மைக்கல் பெரேரா எம்.பி. விடுத்த விசேட கூற்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
2008 மே 18ஆம் திகதிக்கு பின்னர் புலிகளிடமிருந்த சொத்துக்கள், தங்கம் தொடர்பான விபரங்களை புலனாய்வு பிரிவினர் திரட்டினர். தகவல்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. கே.பி.யின் வெளிநாட்டு சொத்துக்கள் தொடர்பில் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. கப்பல்கள் தொடர்பில் தகவல்கள் திரட்டப்பட்டன.
அதில் சிலவற்றை எமது கடற்படையினர் அழித்தொழித்துள்ளனர்.
புலிகளின் வெளிநாட்டு சொத்துக்கள், எமது நாட்டின் சொத்துக்கள், மக்களின் சொத்து, அவை நாட்டின் பொருளாதார மற்றும் அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படும்.
புலிகளின் சொத்துக்கள் தொடர்பில் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்துள்ள தகவல்களை வெளியிட்டால் அது எதிர்கால விசாரணைக்கு இடையூறாக இருக்கும். விசாரணைகள் முழுமையாக நிறைவடைந்ததன் பின்னர் தகவல்களை பாராளுமன்றத்திற்கு தருகின்றோம் என்றார்.
முன்னதாக கேள்வி எழுப்பிய ஜோசப் மைக்கல் பெரேரா,விடுதலைப் புலிகளின் தலைவர் கடந்த மே 18ஆம் திகதி கொல்லப்பட்டதன் பின்னர் பாதுகாப்பு தரப்பினரால் விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான சொத்துக்கள் கைப்பற்றப்ப்டுள்ளன. பாரிய தொகை தங்கம் நவம்பர் 26ஆம் திகதி அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதுமட்டுமன்றி கே.பி. கைது செய்யப்பட்டதன் பின்னர் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது புலிகளுக்கு சொந்தமான பணம் மற்றும் ஏனைய சொத்துககள் தொடர்பான சகல தகவல்களையும் விசாரணைகளின் போது வெளிப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறான தகவல்களையும் புலிகளின் சொத்துக்களையும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

Tuesday, December 8, 2009

வடக்கு கிழக்கில் துளிர் விடும் ஜனநாயகம்! TNA,TULF,PLOTE,EPDP உட்பட பல்வேறு தமிழ் கட்சி தலைவர்கள் யாழ்ப்பாணத்தில் ஒரே மேடையில்!

கடந்த மே மாதம் புலிகளின் தலைமை அழிக்கப்பட்ட நிலையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஜனநாயகம் துளிர்விட்டு வருகின்றது என்பதற்கு நாளை மறுதினம் இடம்பெறவுள்ள கூட்டம் ஒர் எடுத்துக்கட்டு. ஒரே மேடையில் தமிழ்கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். மனித உரிமைகள் இல்லத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை ஒட்டி மக்கள் பேரணி, தீபமேற்றல் ஆகிய நிகழ்வுகள் நாளை மறுதினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளன.வீரசிங்கம் மண்டபத்தில் முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை இந்த நிகழ்வுகள் இடம்பெறும். அதை தொடர்ந்து முத்தமிழ் சங்கமத்துடன் மக்கள் பேரணி இடம்பெற்று மாலை 6:30 மணிக்கு தீபமேற்றும் நிகழ்வு நடைபெறும்.
இந்த நிகழ்வுகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பின்(TNA) மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், எஸ்.அரியநேந்திரன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்(PLOTE) தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஜனநாயக மக்கள் முன்னணியின்(DPF) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின்(EPDP) செயலரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, தமிழர் விடுதலைக் கூட்டணியின்(TULF) தலைவர் வீ,ஆனந்தசங்கரி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி(EPRLF) பத்மநாபா பிரிவு தலைவர் எஸ்.ஸ்ரீதரன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
யாழ் நகரில் ஒரே மேடையில் தமிழ்கட்சிகளின் தலைவர்கள் ஒன்றுகூடவிருப்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் விடுதலை இராணுவம்: ஒரே கல்லில் இரண்டு மாங்காயா ?

கிழக்கில் புதிதாக ஆரம்பிக்கபட்டுள்ளதாகக் கூறப்படும் மக்கள் விடுதலை இராணுவம் குறித்து பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளது. கியூபாவுடனும், பாலஸ்தீன விடுதலை அமைப்புடனும் இணைந்து இந்த மக்கள் விடுதலை இராணுவம் செயற்படப் போவதாக தமிழர்களின் அபிமானத்தைப் பெற்ற லண்டன் டைம்ஸ் ஊடகம், ஊடாக செய்தியை வெளியிட்டுள்ளது.
அதன் தலைவர் எனத் தம்மை அடையாளப்படுத்தியுள்ள கொமாண்டர் கோணேஸ் என்பவர் லண்டன் டைம்ஸுக்கு நேர்காணல் ஒன்றையும் வழங்கியுள்ளார்.1970 துகளில் கியூபா மற்றும் பாலஸ்தீன நாடுகள் எமது விடுதலைப் போராட்டத்திற்கு உதவியது என்பதில் ஜயமில்லை.

இருப்பினும் அப்போது இருந்த அரசியல் பின்ணணி, புரட்சி அமைப்புக்களின் கொள்கைகள் என்பன எமது விடுதலைப் போராட்டத்திற்கு அவர்கள் உதவ ஏதுவாக இருந்தது. இருப்பினும் தற்போதைய பூகோள அரசியல் நிலையைக் கருத்தில் கொண்டால் கியூபா நாடானது இலங்கைக்கு பல உதவிகளை வழங்கிவருவதுடன், ஆயுதக் கொள்வனவில் எவ்வகையான ஆயுதங்களைக் கொள்வனவுசெய்ய வேண்டும் என அறிவுரைகளையும் கூறிவருகிறது.இதேபோல பாலஸ்தீன நாடும் தற்போது பல பின்னடைவுகளைச் சந்தித்து, "ஹமாஸ்", "பத்தா" என இரு போராட்ட அமைப்பு தமக்குள்ளே பலப்பரீட்சையில் ஈடுபட்டுள்ளது. இந் நிலையில் பாலஸ்தீன விடுதலை அமைப்பு, வேறு நாடுகளில் உள்ள போராட்டங்களுக்கு உதவும் என வெளிப்படையாகக் கூறமுடியாது.அத்துடன் இலங்கை அரசின் முகமூடியைக் கிளித்து பல விடையங்களை தமிழர்களுக்குச் சார்பாக எழுதி, உண்மை நிலையை வெளியுலகிற்க்குக் கொண்டுவந்து, தமிழர்களின் அபிமானத்தை பெற்ற லண்டன் டைம்ஸ் ஊடகம் ஊடாக இந்தச் செய்தி ஏன் வெளிவரவேண்டும் ?

இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள். சமீபகாலமாக ஹம்சா இங்கிலாந்தில் செயல்பட்டுவருவதால், இவரூடாக இச் செய்திகள் பிரசுரமாகியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. அத்துடன் இவ்வாறான ஒரு ஊடகத்தில் செய்தி வந்தால் தமிழர்கள் நம்புவார்கள் என ஹம்சா நிணைத்திருக்கலாம். நாம் என்ன அவ்வளவு முட்டாள்களா ?

இனிக் கிழக்கு மாகாணத்தில் புதிதாக ஆரம்பித்துள்ள இந்த மக்கள் விடுதலை இராணுவத்தின் நோக்கம் என்னவாக இருக்கலாம் என ஆராய்ந்தால், இதுவரை காலமும் தளபதி ராம் அவர்களை வைத்து இலங்கை அரசு ஆடிவந்த நாடகம் தற்போது அம்பலமாகியுள்ளதால், கிழக்கில் உள்ள சில தமிழ் இளைஞர்களுக்கு அரசாங்கம் ஆயுதங்களைக் கொடுத்து புதிதாக மக்கள் விடுதலை இராணுவம் என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளதாக அதிர்வு இணையத்திற்கு சில தகவல்கள் கசிந்துள்ளன. இருப்பினும் இதனைச் சுயாதீனமாக உறுதிசெய்ய முடியவில்லை.இலங்கையில் தேர்தல் சூடு பிடித்துள்ளவேளையில், எதிர்கட்சிப் பிரமுகர்கள் சிலரை இலங்கை அரசானது மறைமுகமாக தீர்த்துக்கட்ட இது ஒரு முணைப்பாக இருக்கலாம். எதிர்க் கட்சிப் பிரமுகர்களை தீர்த்துக்கட்டிவிட்டு, அதனை முன்போல விடுதலைப் புலிகள் தான் செய்தார்கள் என தற்போது கூறமுடியாது.

அப்படியாயின் தென்னிலங்கையில், மகிந்தவின் அரசு செல்வாக்கை இழக்கநேரிடும். அதற்காக இப்படி ஒரு அமைப்பை இலங்கை அரசு ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் நின்றுவிடாமல் புலம்பெயர் மக்கள் அல்லது ஈழத்தில் உள்ள இளைஞர்கள் திரும்பவும் ஒரு ஆயுதப்போராட்டத்தை தொடங்க நினைத்திருந்தால், மக்கள் விடுதலை இராணுவம் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதே இனி நாம் ஏன் ஒன்றை ஆரம்பிக்கவேண்டும் என எண்ணுவார்கள்.

அதைவிட அது உண்மையான போராட்ட இயக்கம் என சில இளைஞர்கள் எண்ணி சேரவும் நிணைப்பார்கள், அப்படி சேர நினைக்கும் இளைஞர்களையும் இலங்கை அரசு இலகுவாக இனம்காண முடியும். எனவே மக்கள் விடுதலை இராணுவம் என்று ஒன்றை ஆரம்பித்துள்ளது ஒரே கல்லில் இரண்டு மாங்காயை வீழ்த்தவா என்ற சந்தேகம் வலுப்பெறுகிறது. இவர்கள் உண்மையான போராட்ட இயக்கமாக இருந்தால் விரைவில் இவர்கள் நடவடிக்கை மூலம் இது தெளிவாகத் தெரியும். தற்போது உள்ள சூழ் நிலையில் எதையும் எடுத்த எடுப்பில் நாம் நம்பிவிட முடியாது என்பதே யதார்த்தம்.அப்படியே ஒரு புதிய ராணுவக் கட்டமைப்பு இந்த 7 மாதத்தில் கொமாண்டர் கோணேஸ் உருவாகியிருந்தாலும், தம்மை ஒரு இராணுவக் குழு என இவர்கள் இவ்வளவு வேகமாக ஏன் தம்மை அறிமுகப்படுத்தவேண்டும் ?

அவ்வாறு அவர்கள் தம்மை அடையாளப்படுத்தியதை ஏன் சிங்கள ஊடகங்கள் பெரும்செய்தியாக வெளியிடவேண்டும், குறிப்பாக அரச கட்டுப்பாட்டில் உள்ள சிங்கள ஊடகங்கள் இச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதின் அர்த்தம் என்ன ? இவற்றை எல்லாம் பொறுத்திருந்து மிக அவதானமாக தமிழ் மக்கள் நிதானத்துடன் பார்க்கவேண்டும் என அதிர்வு இணையம் மக்களை வேண்டி நிற்கிறது. உண்மையாகப் போராடும் அமைப்பை மிகச் சுலபமாக நாம் அடையாளம் காணலாம் என்பதில் ஜயமில்லை. இதனையே நாம் செய்தும் இருக்கிறோம்.

தற்போது ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப விரைவில் ஒரு உண்மையான போராட்ட அமைப்பு களமிறங்கும். அது விடுதலைப் புலிகளின் அதி நவீன படை அமைப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

மலரும் தமிழீழம் விரைவில்... ஏன் என்றால் மாண்ட மாவீரரின் இலட்சியம் அதுவென்றபடியால்...

வெளிநாட்டு தொழில் அதிபர்களின் வங்கி கணக்கு ரகசிய எண்ணை பயன்படுத்தி போலி ஏ.டி.எம். கார்டு மூலம் கோடிக்கணக்கில் பணம் கொள்ளை

வெளிநாட்டு தொழில் அதிபர்களின் வங்கி கணக்குகளின் ரகசிய குறியீட்டு எண்ணை பயன்படுத்தி, போலி ஏ.டி.எம். கார்டு மூலம் கோடிக்கணக்கில் பணம் கொள்ளையடித்த, இலங்கையை சேர்ந்த 4 தமிழ் வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
முக்கிய குற்றவாளியான இலங்கை அரசு அதிகாரி ஒருவர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு கூடுவாஞ்சேரி போலீஸ் பெண் சப்-இன்ஸ்பெக்டர் தரணி, போலீசாருடன் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது ஒரு ஆட்டோ தாம்பரம் பக்கம் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்று கொண்டு இருந்தது. சந்தேகம் அடைந்த போலீசார், அந்த ஆட்டோவை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். அந்த ஆட்டோவில் 4 வாலிபர்கள் இருந்தனர். அவர்கள் ஒரு `லேப்டாப் கம்ப்ïட்டர்', ஏராளமான ஏ.டி.எம். மற்றும் `கிரெடிட் கார்டு'கள் வைத்து இருந்தனர்.
செங்கல்பட்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சேவியர்தன்ராஜ் உத்தரவுப்படி, கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் சவுந்தர்ராஜன், அலெக்சாண்டர், கோவிந்தராஜ் ஆகியோர் கொண்ட தனிப்படையிடம் 4 பேரும் ஒப்படைக்கப்பட்டனர். தனிப்படை போலீசார், ரகசிய இடத்தில் வைத்து அவர்களிடம் தனித் தனியாக விசாரணை செய்தனர்.

விசாரணையில், அவர்கள் இலங்கையில் உள்ள வவுனியா மாவட்டத்தை சேர்ந்த தமிழர்கள் ராஜேந்திரன் (வயது 47), கோனேஸ்வரன் (34), ராஜரத்தினம் (43), தர்ம நிஷாந்தன் (19) என்பது தெரிய வந்தது. இவர்கள், வெளிநாட்டில் உள்ள தொழில் அதிபர்களின் வங்கி கணக்கு மற்றும் ஏ.டி.எம் கார்டுகளின் ரகசிய குறியீடு எண்ணை தெரிந்து கொண்டு, பின்னர் போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரித்து, கோடிக்கணக்கான பணத்தை கொள்ளை அடித்து, ஆடம்பரமாக வாழ்க்கை நடத்தி வந்த மோசடி கும்பல் ஆகும்.

இதையடுத்து 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.போலீஸ் விசாரணையில் ராஜேந்திரன் அளித்த வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:- நான் 1 வருடத்திற்கு முன்பு இலங்கையில் உள்ள வவுனியா மாவட்டத்தில் இருந்து சுற்றுலா விசா மூலம் தமிழ்நாட்டுக்கு வந்தேன். சென்னை தாம்பரத்தில் உள்ள ஆட்டோ டிரைவரான என் மச்சான் ராஜரத்தினம் வீட்டில் தங்கி இருந்தேன். எனக்கு சரியான வேலை கிடைக்கவில்லை. ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பு, வவுனியாவில் இருந்து வந்து, தமிழ் நாட்டின் பல்வேறு இடங்களில் தங்கி இருந்த எனது நண்பர்களான கோனேஸ்வரன், தர்ம நிஷாந்தன் ஆகியோருடன் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவேன். அவர்களும் சரியான வேலை இல்லாமல் இருந்ததால் என்ன செய்யலாம் என்று யோசித்தோம்.அப்போது வவுனியா மாவட்டத்தில், அரசு விளையாட்டுத் துறையில் அதிகாரியாக வேலை செய்து வரும் தன்ராஜ் (35) என்பவரின் நட்பு, இலங்கையில் உள்ள நண்பர்கள் மூலம் எனக்கு கிடைத்தது. அவர் மூலம், போலி ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி, ஏ.டி.எம். மையங்களில் இருந்து பணத்தை கொள்ளையடிக்க முடிவு செய்தோம்.

தன்ராஜ் போலி ஏ.டி.எம். மூலம் பணம் எடுக்கும் வித்தையை கற்றுத்தர, தமிழ்நாட்டிற்கு வந்தார். கணினி உதவியுடன் எப்படி செயல்பட வேண்டும் என்று கற்று தந்து விட்டு சென்று விட்டார்.இதனைத் தொடர்ந்து, நான், ராஜரத்தினம், கோனேஸ்வரன், தர்ம நிஷாந்தன் ஆகிய 4 பேரும் பெருங்களத்தூர் அருகே சதானந்தபுரம் பகுதியில் உள்ள மடம் தெருவில் ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்தோம். பின்னர் போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரிக்க `கம்ப்ïட்டர்' மற்றும் `கார்பன் ரைட்டர்', ஏ.டி.எம். மையங்களில் உள்ள கதவை திறக்கப் பயன்படுத்தும் கருவி ஆகியவை வாங்கினோம்.இந்த தகவல்களை, இலங்கையில் உள்ள தன்ராஜிடம் கூறினோம். நான் அனுப்பும் ரகசிய குறியீட்டு எண்ணை வைத்து பணம் எடுத்தால், கமிஷன் பணத்தை எடுத்துக் கொண்டு, மீதிப் பணத்தை நான் சொல்லும் நபர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவர் கூறினார். இதற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம்.

அதன்படி ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, கனடா உள்பட பல்வேறு நாடுகளில் உள்ள தொழில் அதிபர்களின் வங்கி கணக்குகளின் ரகசிய குறீயிட்டு எண்களை, அங்கு உள்ளவர்களிடம் இருந்து வாங்கி, அதனை எங்களுக்கு தன்ராஜ் இ.மெயில் மூலம் அனுப்பினார். வாரம் 3 அல்லது 4 தொழில் அதிபர்களின் வங்கி ரகசிய எண்களை அவர் அனுப்புவார்.நாங்கள் 30-க்கும் மேற்பட்ட பெட்ரோ கார்டுகளை வாங்கி சேகரித்தோம்.அந்த பெட்ரோல் கார்டின் பின்புறம் இருக்கும் ரகசிய எண்களை, கணினி மற்றும் கார்பன் ரைட்டர் மூலம் அழிப்போம்.

பின்னர் அதே இடத்தில், கணினி மூலம் தன்ராஜ் அனுப்பிய வெளிநாட்டு தொழில் அதிபர்களின் ரகசிய எண்களை பதிவு செய்து விடுவோம். இதேபோல வாரத்தில் சுமார் 5 போலி ஏ.டி.எம். கார்டுகளை தயார் செய்வோம். பின்னர், கார் மற்றும் ஆட்டோவில் பல்லாவரம், வேளச்சேரி, மேடவாக்கம், கிழக்கு தாம்பரம், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, மறைமலைநகர் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள கனரா வங்கி, சிட்டி ïனியன் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் ஆகிய வங்கிகளின் ஏ.டி.எம். மையங்களுக்குச் சென்று, போலியாக தயாரித்த கார்டுகளை பயன்படுத்தி பணத்தை எடுத்தோம்.இப்படி கடந்த 7 மாதமாக இத்தொழிலில் ஈடுபட்டு, கோடி கணக்கில் பணத்தை எடுத்தோம். இதில் கமிஷன் போக, மீதிப் பணத்தை, தன்ராஜிடம் கொடுத்து விடுவோம்.

நாங்கள் போலி ஏ.டி.எம். கார்டைப் பயன்படுத்தி எடுத்த பணம் எல்லாமே, வெளி நாட்டினர் பணம் என்பதால் இதுவரை எந்த வித சிக்கலிலும் நாங்கள் மாட்டிக் கொள்ள வில்லை.ஒரு நாளைக்கு சுமார் 1 லட்சம் ரூபாய்வரை பல்வேறு மையங்களில் இருந்து எடுத்து வருவோம்.இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். பிடிபட்டவர்களிடம் இருந்து கட்டுக்கட்டாக ரூ.9 லட்சம் ரொக்கம், 20 சவரன் நகைகள், 4 செல்போன்கள், 50 போலி ஏ.டி.எம். கார்டுகள், ஒரு லேப்டாப் கம்ப்ïட்டர், வெப்கேமரா, இலங்கை அரசின் பாஸ்போர்ட் மற்றும் டிரைவிங் லைசென்ஸ், ஏ.டி.எம். நம்பரை அழிக்கப் பயன்படுத்தப்பட்ட கருவிகள், கொள்ளையடிக்கப் பயன்படுத்திய ஆட்டோ ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைதான 4 பேரையும், போலீசார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.முக்கிய குற்றவாளியான இலங்கை அரசு விளையாட்டுத்துறை அதிகாரி தன்ராஜ் தலைமறைவாக உள்ளார்.

அவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பொட்டு அம்மான் உயிருடன்:விடுதலைப்புலிகளின் புதிய இயக்கம்:PLA

விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர் பொட்டு அம்மான் தப்பிச் செல்லும்போது கொல்லப்பட்டதாக இலங்கைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் உயிருடன் இருப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக டைம்ஸ் இதழ் குறிப்பிட்டுள்ளது.

விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகள் ஒடுக்கப்பட்டதால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் புதிய இயக்கம் எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த இதழ் குறிப்பிட்டுள்ளது.

புலிகள் அமைப்பு அழிக்கப்பட்டு 6 மாதங்கள் கழிந்துள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தில் மக்கள் விடுதலை இராணுவம் எனும் புதிய மாக்சிஸ்ட் தமிழ் குழு ஒன்று உருவாகியுள்ளதாக லண்டன் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பிரச்சினை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும் இலங்கை அரச படைகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் தொடரும் என்றும் பி.எல்.ஏ என்ற மேற்படி அமைப்பு தெரிவித்துள்ளது.

கோணேஸ் என்பவரை தளபதியாக கொண்டுள்ள மேற்படி அமைப்பில் 300 உறுப்பினர்களும், 5000 உதவியாளர்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளதுடன். இந்த அமைப்புக்கும் புலிகள் அமைப்புக்கும் எந்தவித தொடர்புகளும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்.
புலிகளின் முன்னைநாள் உறுப்பினர்களும் இணைத்து கொள்ளப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புக்கும் பலஸ்தீனம், கியுபா, இந்தியன் மவோயிஸ்ட் போன்ற அமைப்புக்களுடன் தொடர்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும்

Monday, December 7, 2009

அடுத்த முதல்வர் ஸ்டாலின்...

சென்னை: முதல்வர் கருணாநிதி அடுத்த ஆண்டு மத்தியில் ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளதால் அடுத்த முதல்வர் யார், அடுத்த துணை முதல்வர் யார் என்ற கேள்விகள் எழ ஆரம்பித்துள்ளன.
கோவையில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் அரசியல், பதவி உள்ளிட்டவற்றிலிருந்து விடுபடப் போவதாகவும், மக்களில் ஒருவனாக மாறப் போவதாகவும் முதல்வர் அறிவித்துள்ளார்.இதையடுத்து அடுத்த முதல்வர் யார், துணை முதல்வர் யார் என்ற ஆர்வம் மக்களிடையே எழுந்துள்ளது.

ஏற்கனவே எதிர்பார்த்து வருவது போல மு.க.ஸ்டாலினை முதல்வர் பதவியில் அமர்த்த தலைவர் தீர்மானித்து விட்டார் என்று திமுகவினர் மத்தியில் பேச்சு அடிபடுகிறது.

அதே நேரத்தில் மு.க.ஸ்டாலின் முதல்வராக்கப்பட்டால் அவர் வகித்து வரும் துணை முதல்வர் பதவியில் யார் அமர்த்தப்படுவார் அல்லது துணை முதல்வர் பதவி அகற்றப்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.முதல்வர் பதவிக்கான பக்குவத்தையும் அனுபவத்தையும் ஸ்டாலின் அடைய வேண்டும் என்பதற்காகவே அவரை அந்தப் பதவியில் உடனடியாக அமர்த்தாமல் பல்வேறு பரீட்சைகளை வைத்து வந்தார் கருணாநிதி.மாணவர் அணி, இளைஞர் அணித் தலைவர் பதவி, எம்எல்ஏ, சென்னை மேயர் பதவி, உள்ளாட்சித் துறை அமைச்சர் பதவி, கட்சி துணைப் பொதுச் செயலாளர் பதவி, பொருளாளர் பதவி என அமர்த்தி அவரது திறமைகளைப் பரிசோதித்த பின்னர்தான் துணை முதல்வர் பதவியை உருவாக்கி அதில் ஸ்டாலினை அமர வைத்தார் கருணாநிதி.

எனவே முதல்வர் பதவியில் கருணாநிதிக்கு அடுத்து நிச்சயம் ஸ்டாலின்தான் என்பதில் திமுகவினர் மத்தியில் எந்த சந்தேகமும் இல்லை என்பது பொதுவான கருத்து.

அதேசமயம், இந்த அதிகார மாற்றம் சுமூகமான முறையில் நடைபெறுமா என்று சிலர் சந்தேகம் எழுப்புகின்றனர். காரணம்- மு.க.அழகிரி மற்றும் கனிமொழி.

அழகிரியை மத்திய அரசியலுக்கு அனுப்பி வைப்பதன் மூலம், மாநிலத்தில் ஸ்டாலினுக்கு இடையூறு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும் திட்டத்தில்தான் அவரை எம்பியாக்கி மத்திய அமைச்சர் பதவியையும் வாங்கிக் கொடுத்தார் கருணாநிதி.இருப்பினும் மத்திய அமைச்சர் பதவியில் அழகிரி செளகரியமாக இல்லை.

இதற்கான காரணங்கள் அனைவரும் அறிந்ததே.

அவரால் டெல்லி பதவியில் எத்தனை காலத்திற்கு நீடிக்க முடியும் என்பது அவருக்கே தெரியவில்லை. மீண்டும் மாநில அரசியலுக்கே அவர் திரும்பி வர விரும்புவதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

இதனால் முதல்வர் பதவி ஸ்டாலினுக்குத் தரப்பட்டால் அழகிரிக்கு நிச்சயம் ஏதாவது முக்கியப் பதவியை, தந்தாக வேண்டிய நிலை ஏற்படலாம். அது கட்சிப் பதவியாக இருக்கலாம் என்கிறார்கள்.ஸ்டாலினுக்குக் கீழ் அழகிரி துணை முதல்வராக வாய்ப்பில்லை. இதனால் அவருக்கு கட்சியின் மிக மிக முக்கியப் பதவி தரப்படலாம் என்று தெரிகிறது.இப்போது தென் மண்டலச் செயலாளர் என்ற அளவில் திருச்சிக்கு அந்தப் பக்கம் கன்னியாகுமரி வரை அழகிரியின் கட்டுப்பாட்டில் கட்சி உள்ளது.

ஆனால், ஸ்டாலின் முதல்வரானால் கட்சியில் மாநில அளவில் மிக மிக முக்கியப் பொறுப்பை அழகிரி கோரலாம்.அழகிரியின் வருகைக்குப் பின் தென் மண்டலத்தில் திமுக மாபெரும் சக்தியாக உருவெதிருப்பது அடுத்தடுத்த தேர்தல் முடிவுகள் காட்டிவிட்டன.

அதிமுக கோட்டையாக கருதப்பட்ட தென் மாவட்டங்களை திமுகவுக்கு சாதமாக்கிக் காட்டியது அழகிரியின் அயராத உழைப்பும், கட்சியினரிடம் அவர் நடந்து கொள்ளும் விதமும் தான்.

அவரிடம் மாநில அளவிலான பொறுப்பைத் தந்தால் ஜெயலலிதாவுக்கும் வளர்ந்து வரும் தேமுதிகவுக்கு பெரும் அவர் நிச்சயம் மாபெரும் சவாலாக அமைவார் என்பது அழகிரி ஆதரவாளர்களின் எண்ணம்.

இதுதவிர முதல்வரின் மகளான கனிமொழியும் ஆக்டிவான பதவிக்காக காத்திருக்கிறார். அவருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்ப்பு ரொம்ப பலமாகவே இருந்து வந்தது.

ஆனால் அதற்கான சாதகமான நிலை ஏற்படாமலேயே உள்ளது.இதனால் அழகிரி மாநில அளவில் முக்கிய கட்சி நிர்வாக்கப்பட்டால் அவர் விலகும் மத்திய அமைச்சர் பதவி கனிமொழிக்குத் தரப்படலாம்.

ஸ்டாலின்-ராகுல் காந்தி இடையே நல்ல அன்டர்ஸ்டான்டிங் இருப்பதால் முக்கிய கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் முதல்வர் கருணாநிதிக்கு அளிப்பதைப் போலவே ஸ்டாலினுக்கும் தொடர்ந்து ஆதரவு தரலாம் என்றே தெரிகிறது.

செல்ஃபோன் வில்லிகள்!

சில மிஸ்டு கால்கள் மிகுந்த பாதிப்புகளை உண்டாக்கும் வகையில் அமைந்துவிடுகின்றன. எப்படி?
சம்பவம்-1

கோவையில் தனியார் வங்கி ஒன்றில் வேலைபார்க்கிறார் செந்தில் குமார். இவரின் ஏர்செல் போனைத் தொடர்புகொண்ட ஒரு பெண் "குமாரண்ணா... நான் தேவி பேசறேன்'’என்றது ஐஸ்க்ரீம் வாய்ஸில்.

திகைத்த செந்தில், "நான் குமார் இல்லைங்க. ராங் நம்பர்'’என்று சொல்ல...

"ஸாரி சார்'’என்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள் அவள். மறுநாளும் இரவில் வர, மறுபடியும் ராங் நம்பர் என்றார் செந்தில்.

அவளோ, "ஸாரி சார்... தப்பா நினைச்சிக்காதீங்க.

உங்க வாய்ஸ் இனிமையா இருக்கு. உங்களைப் பத்தி தெரிஞ்சிக்க லாமா?'’என்று அவள் கொக்கி போட... "என் பேர் செந்தில்குமார். கோவைல பேங்க்கில் ஒர்க் பண்றேன்'’என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டார். பிறகு ’’"நீங்க..?'

என அவர் கேட்க, அவளோ... தான் ஊட்டியில் படிக்கும் கல்லூரி மாணவி என்று அறிமுகப் படுத்திக்கொண்டு அவரது நட்பை விரும்புவதாகச் சொன்னாள். தனக்கு ஒரு கேர்ள் ஃபிரண்டாய் ஒரு கல்லூரி மாணவியே கிடைத்துவிட்டாளே என செந்தில் பூரித்தார். பிறகு?

தனது அனுபவத்தை செந்திலே சொல்கிறார்... “""அன்னைக்கு இரவு ஆரம்பிச்ச நட்பு... ஒரே வாரத்தில் செக்ஸ் பத்தி பேசற அளவுக்கு தீவிரமாச்சு. ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்காமலே செல்ஃபோனில் கொஞ்சிக்க ஆரம்பிச்சோம். ஃபர்ஸ்ட் நைட்டில் என்னவெல்லாம் பண்ணுவீங்கன்னு அவ கேட்க... பீர் போதையில் நானும் வெட்கமில்லாம விவரிச்சிட்டேன்.

திடீர்னு ரெண்டாவது வாரம் என்னைத் தேடிக்கிட்டு 2 தடியனுங்க எங்க வங்கிக்கு வந்தானுங்க. எங்க தங்கச்சி வெள்ளந்தியான பொண்ணு. ஒரு கல்லூரி மாணவிக்கிட்ட எப்படியெல்லாம் ஆபாசமா பேசி இருக்கே... வாடா போலீஸ் ஸ்டேஷனுக்கு.

இதோ நீ பேசினது இந்த போனில் இருக்குன்னு கையைப் பிடிச்சி இழுத்து பலவந்தமா கூப்பிட ஆரம்பிச்சானுங்க. திகைச்சுப்போன நான்... தெரியாமப் பண்ணிட்டேன் விட்ருங்க. என் மானத்தை வாங்கிடாதீங்கன்னு கெஞ்சி னேன். அப்படின்னா 50 ஆயிரம் ரூபாய் கொடுன்னானுங்க.

வேற வழியில்லாம ஏ.டி.எம்.மில் இருந்த 30 ஆயிரம் ரூபாயை அப்படியே எடுத்துக்கொடுத்துட்டேன். இப்படி பொண்ணுகளை வச்சி போன் மூலமே வலை விரிச்சி ஒரு கூட்டமே சம்பாதிக்கிது போலிருக்கு.

இப்பல்லாம் தெரியாத நம்பர்ல இருந்து கால் வந்தாலே... வியர்த்து விறுவிறுத்துப்போய்டறேன்''’’என்கிறார் சங்கடம் விலகாமலே செந்தில்குமார்.

சம்பவம்-2

திருவண்ணாமலை அரசுக் கரு வூலத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவரின் டீன் ஏஜ் மகன் சௌந்தர். கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் அவனுக்கு இப்படி மிஸ்டு கால் மூலம் அறிமுகமாகி நட்பானாள் வேட்டவலத்தைச் சேர்ந்த அந்தப் பெண் மணி.

தனக்கு சின்ன வயதில் இரண்டு பிள்ளைகள் என்றும் தன் கணவன் ஃபாரினில் இருப்பதாகவும்.. தான் தனிமைத் தணலில் தவிப்பதாகவும்... விரகமாய்ப் பேசியவள்...

ஒருநாள் "லாட்ஜில் சந்திக்கலாம்' என அழைத்தாள். பிறகு?""ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு லாட்ஜில் ரூம் போட்டுட்டு... அவளை சந்திக்கிற ஆர்வத்தோடும் கற்பனையோடும் திருவண்ணாமலை பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தேன். திமிசுக்கட்டை உடம்பு.

எதிர்பார்த்ததை விட ரொம்ப அழகாவே இருந்தாள். ஓட்டல்ல காபி சாப்பிட்டுட்டு... அந்த லாட்ஜுக்கு ஆட்டோவில் போனோம். அப்பவே ரூம் பாய் சந்தேகமாப் பார்த்தான். அந்த சங்கடத்தை சகிச்சிக்கிட்டு ரூமுக்குள்ள போய் கதவை சாத்திட்டு கட்டில்ல உட்கார்ந்ததுதான் தாமதம்... படபடன்னு கதவு தட்ற சத்தம். பதறிபோய்க் கதவைத் திறந்தா..

நாலைஞ்சிபேர் திபுதிபுன்னு ரூமுக்குள் நுழைஞ்சானுங்க. "ஏண்டா என்ன தைரியம் இருந்தா எங்க ஊர்ப் பொண்ணை லாட்ஜுக்கு கூட்டிட்டு வருவே'ன்னு என்னை அடிக்க ஆரம்பிச்சானுங்க.

அப்புறம் பையில் இருந்த 3 ஆயிரம் ரூபா, கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கச்சங்கிலி, செல்ஃபோன்னு எல்லாத்தையும் பிடுங்கிக்கிட்டு அவளையும் அழைச்சிக்கிட்டுப் போய்ட் டானுங்க. ஒரு மணிநேரம் ரூமைவிட்டு வெளியவே வரலை. ரொம்ப அவமானமாப் போச்சு. இதை யார்ட்ட சொல்லமுடியும்? அப்ப அவள் நடந்துக்கிட்டதைப் பார்த் தப்பதான்... அவளே அவனுங்களை கூட்டிட்டு வந்திருக்கான்னு புரிஞ் சிது''’என்றான் குன்றிப்போனவனாய்.

-இப்படியாக மிஸ்டு கால் மூலம் வலைவிரித்து மடக்கி... பணம் பறிக்கும் கும்பல்கள் இப்போது பெருகத் தொடங்கியிருப்பது ஆபத்தானது.வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவையின் மாநில துணைச்செயலாளர் நீலமூர்த்தியிடம் இது பற்றி நாம் கேட்டபோது, ""இப்போது சில நல்ல குடும்பத்துப் பெண்களே கூட இப்படிப்பட்ட செல்ஃபோன் வில்லன்க ளிடம் மாட்டிக்கிட்டு சங்கடப்படுறாங்க. மிஸ்டுகால் மூலம் நட்பு பிடிச்சி...

ஆறுதலாப் பேச ஆரம்பிச்சி... ரொமான்ஸ் என்ற பெயரில்... சிலர் பெண்களைத் தூண்டிவிட்டு அவங் களைக் கிளுகிளுப்பா பேசவச்சி.. அதை ரெக்கார்ட் பண்ணி... இணையதளங்கள்ல உலவவிடுவதும் இப்ப அதிகமா ஆகிக் கிட்டு இருக்கு. எக்குத் தப்பா மாட்டிகிற பெண்களும் ஆண்களும் அவமானத்துக்கு ஆளாகறாங்க. இல்லைன்னா அந்த வில்லன், வில்லிகள்ட்ட பணத்தைக் கொடுத்து... அவங்க தங்களைக் காப்பாத்திக்க வேண்டியிருக்கு. இப்படிப்பட்ட மோசடிக் கும்பல்கள்கிட்ட இருந்து அப்பாவிகளை மீட்க.. போலீஸ்தான் ஏதாவது அதிரடி நடவடிக்கைகளை எடுக்கணும்''’என்கிறார் ஆதங்கமாய்.

திருவண்ணாமலை வோடோ போன் கம்பெனி நிர்வாகி ரமேஷ் கிருஷ்டியோ, ""தொடர்ந்து ஒருத்தர்ட்ட இருந்து மிஸ்டுகால் வந்தா அவங்களைக் கூப்பிட்டு எச்சரிக்கை பண்ணமுடியுமே தவிர வேற எதையும் செய்யமுடியாது. அதனால் தேவையற்ற பிரச்சினைகள்ல சிக்கவேணாம்னு நினைக்கிறவங்க... தெரியாத நம்பர்ல இருந்து மிஸ்டுகால் வந்தா...

அதை அவாய்டு பண்றதுதான் நல்லது''’என்கிறார் ஆலோசனை யாய்.

செல்ஃபோன் வைத்தி ருக்கும் ஆண்களே.... செல் ஃபோன் வில்லிகளிடம் உஷார்... உஷார்...!

காமுகர்கள் வேட்டை!

""ப்ச்... இதுக்கு மேலேயும் காவல் துறை நடவடிக்கை எடுக்கலைன்னா... அவளோட உடம்பு தாங்காதுங்க.
எப்படித் தான் மிருகத்தைவிட கேவலமா நடந்துக்கி றானுங்களோ அந்த படுபாவிப் பயலுக. ச்சே...'' -வேதனையில் கொந்தளிக் கிறார்கள் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியத்தின் செந்தியமங்கலம் கிராம மக்கள். என்ன நடந்தது?
சோகத்துடன் விவரிக்கிறார்கள்...""பாண்டிக்கு பக்கத்துல கல்லிக்குடி கிராமத்தில் விவசாய கூலி வேலை செய்து வந்த சுப்பிரமணியன்-சுந்தரம்பாள் தம்பதிக்கு பொறந்த புள்ளதான் இந்த சித்ரா. ஊமையா... ஒருவித மந்தமா பொறந்ததால பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி படிக்க வைக்கல.
அஞ்சு வருஷத்துக்கு முன்னால ஆதரவா இருந்த அப்பா சுப்பிரமணியனும் இறந்துபோக... வேற வழியில்லாம சுந்தரம்பாளும் சித்ராவும் இந்த ஊர்ல இருக்கிற உறவினரான காத்தான் வீட்டுக்கு வந்து தங்கினாங்க.அம்மா விவசாய கூலி வேலைக்குப் போய்விட, அக்கம்பக்கத்துல உள்ளவங்க சொல்ற வேலைய செய்யத் தொடங்கினா. வேலை வெட்டி இல்லாம சும்மா சுத்திக்கிட்டு கெடக்கிறவனுங்க மட்டுமில்லாம...
வயசான சில வக்கிரனுங்களுடைய பார்வையும் சித்ராவின் வனப்பான உடம்பையே வட்டமடிக்க ஆரம்பிச்சிடுச்சு.ப்ச்... பாவம்ங்க... கருவேலங்காட்டுப் பக்கம் தூக்கிட்டுப்போய் வாய் பேசமுடியாத பொண்ணை குதறியிருக்கிறானுங்க பொறுக்கி நாய்ங்க. இருக்க...
இருக்க வயிறு பெருசாயி அழகான ஆண் குழந்தை பொறந்துச்சு. இவளால வளர்க்க முடியாததால இதை கேள்விப்பட்ட குழந்தையில்லாத் தம்பதி இந் தக் குழந்தையை வாங்கிட்டுப்போய் வளர்க்குறாங்க.அந்த நாய்ங்களோட தொல்லை அதோட நிக்கல. குழந்தை பொறந்து கொஞ்சம் நடமாட ஆரம்பிச்ச சித்ராவைத் தொடர்ந்து காமவேட்டை ஆட... மீண்டும் கர்ப்பமாகி பெண் குழந்தை பெற்றெடுக்க, நாச்சிக் குளம் பகுதி தம்பதி தூக்கிட்டுப்போய் வளர்க்குறாங்க. அதுக்கப்புறமும் அதே வேதனை... இரண்டு ஆண் குழந்தைகள். இதில் ஒரு குழந் தையை இதே ஊர்ல மாதவன் -தவமணி தம்பதி வளர்க்கி றாங்க. இப்படி அவளை பிள்ளை பெக்குற வாடகைத் தாயாவே ஆக்கிட்டாங்க'' என்று உச் கொட்டுகிற அப்பகுதி மக்கள்.
ஊர்ல காமக்கண் களோடு சுத்திக்கிட்டிருக்கிற நாய்ப்பயலுகளை கூட்டி வந்து இந்த புள்ளைகிட்டக் காட்டுனாவே போதும், யாரெல்லாம் தன்னை சீரழிச்சானுங்கன்னு காண்பிச்சுடும். ம்... போலீஸ்காரங்க மனசு வைக்கணுமே'' என்கிறார்கள் வேதனையோடு.உடனே திருவாரூர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகரனின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம்.
""அந்தப் பொண்ணை மீட்டு திரு வாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில சிகிச்சைக்கு அனுப்பியிருக்கோம். மனநிலை சோதனைக்குப் பிறகு ஒரு நல்ல காப்பகத்துக்கு அனுப்ப ஏற்பாடு செய்றேன். அவங்களோட வாக்குமூலத்தை வெச்சு இந்தளவுக்கு சீரழிச்சவங்க மேல நிச்சயமா நடவடிக்கை எடுக்கிறேன்''
என்கிறார் உறுதியாக. இதுபோன்ற காமுகர்களை விட்டு வைத்தால் இன்னும் பல சித்ராக்களின் வாழ்க்கை சூறையாடப் பட்டுக்கொண்டுதான் இருக்கும்.

மருவத்தாருடன் மோதும் தைலாபுரம்!


முக்கியமான அரசியல் கட்சித் தலைவரை, பெரிய ஆதரவோடு வலம் வரும் ஒரு சாமியாரை எதிர்த்துப் பேச வைத்திருக் கிறது.
அந்த தலைவர் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ். அவரது விமர்சனத்திற்கு ஆளான சாமியார்... மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார்.பா.ம.க.வின் மாவட்ட செயற்குழு உறுப்பினரும் ராமதாஸ் டிரைவரின் மாமனாருமான வைத்தீஸ்வரன் தம்பி வெங்கடாசலபதியின் திருமணம் மேல் மருவத்தூரிலுள்ள என்.வி.எம். திருமண மண்டபத்தில் நடந்தது.அந்த திருமண விழாவுக்கு வந்த ராமதாஸ் தனது பேச்சில், ""காஞ்சிபுரத்துல கோயில் கருவறையிலேயே ஒரு அய்யர் அசிங்கம் செய்யுறான்.

நாம அவங்களை வைச்சு பூஜை கல்யாணமெல்லாம் பண்றோம். இந்த சாமியார் பசங்கள வச்சுதான் கல்யாணம் சடங்கெல்லாம் நடத்தணுமா? பெத்தவங்களை வச்சு நடத்துனா நல்லாருக்காதா?'' என திருமண சடங்குகளை விமர்சித்து பேசிக் கொண்டே வந்தவர் திடீ ரென டிராக் மாறினார். அங்கே கூடி யிருந்த மக்களைப் பார்த்து பேச ஆரம்பித்தவர், ""காஞ்சிபுரத்து கருவறையில மட்டுமா அநியாயம் நடக்குது. இங்கே மேல் மரு வத்தூருல அநியாயமே நடக்கலையா?'' என கேட்க, அங்கிருந்தவர் கள் ""ஐயா ரொம்ப அநியாயம் நடக்குது'' என சொன்னார்கள். அதை அப்படியே ஒரு ஓப்பனிங் ஆக எடுத்துக் கொண்ட ராமதாஸ், ""பங்காரு அடிகளார் இருபது வரு டத்திற்கு முன்னாடி பென்ஸ் கார்லயா போனாரு.

எதுல போனாரு?'' என பொதுமக்களை கேட்க, அவர்கள், ""ஓட்டை சைக்கிளிலதான் போனாரு'' என பதில் சொன்னார்கள். ""பங்காரு அடிகளாரோட கோயில் இவ்வளவு பெருசா மாட மாளிகை மாதிரியா இருந்தது? காலேஜு காலேஜா கட்டியிருக்கிறாரே?'' என அடுத்த கேள்வியை கேட்டு தொடர்ந்தார். ""இதுவரைக்கும் அரசுக்கு சொந்தமான எத்தனை ஏரிகளை அடி களார் தூர்த்து பில்டிங் கட்டி யிருக்காரு?'' என கேட்க, ""மொத்தம் மூணு ஏரியை தூர்த்துப்புட்டாரு'' என குரலெழுப்பினார்கள் திருமண வீட்டுக்கு வந்திருந்தவர்கள்.

திருமண விழாவில் இருந்த பங்காரு அடிகளா ரின் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து முணுமுணுக்க ஆரம்பித்தார்கள்.தனது பேச்சிற்கு எதிர்ப்பு வரு வதைப் பார்த்த ராமதாஸ், ""நான் சும்மா சொல்லலை. கீழ்மருவத்தூர் ஏரி, குளமெல்லாம் என்னாச்சு? எங்கே இருக்குது? எல்லாம் அவங்க கட்டுன காலேஜுக்குள்ளே இருக்குது. அரசு நிலத்துல லாட்ஜ், கடையெல்லாம் கட்டி வியாபாரம் பண்றாரு. கல்வி நிலையம் வச்சு காசு பார்க்குறாரு. ஏழை பாளைங்க... பணம் கட்ட முடியா தவங்களை கண்டுக்கவே மாட்டேன் கிறாரு'' என்று ஆவேசமாக பேசிய தோடு, திடீரென்று பங்காரு அடி களாரை எதிர்ப்பதன் காரணத்தையும் அந்த மேடையிலேயே சொன்னார்.""நான் நினைச்சா உங்க முன் னாடியே தமிழக முதல்வர் கலைஞர் கிட்ட இந்த மேடையிலிருந்தே பேசமுடியும். பிரதமர்கிட்ட பேச முடியும்.

அவங்க எல்லாம் மரியாதை கொடுக்க தெரிஞ்சவங்க. அந்த மரியாதை பங்காரு அடிகளிடம் இல்லை. நான் கைப்பட அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். மாச கணக்காச்சு. இன்னிக்கு வரைக்கும் பதில் இல்லை'' என டாப் கியரில் போனவர், ""வன்னியர்கள் எல்லோரும் செவ்வாடை கட்டிக்கிட்டு லட்சக்கணக்குல பணத்தை கொண்டுபோய் அடிகளாரின் உண்டியலில் கொட்டுறோம்.

நம்ம வீட்டு பொம்பளைங்களை கொட்டுற மழையில் கொண்டுபோய் நிறுத்தி வைச்சு ஆதரவு காட்டுறோம். இதையெல்லாம் காண்பிச்சு அடிகளார் வந்தவாசி இடைத்தேர்தலில் வன்னியர் ஓட்டெல்லாம் நான் வாங்கித் தர்றேன்னு பேரம் பேசுறார்'' என சொல்லி முடித்தார்.ராமதாஸின் இந்த பேச்சு பங்காரு அடிகளாரின் பக்தர்கள் மத்தியில் சலசலப்பை உருவாக்கியுள்ளது. இதுபற்றி பங்காரு அடிகளார் என்ன சொல்கிறார் என்பதை அறிய அவரை ஓம்சக்தி பத்திரிகை ஆசிரியர் முருகானந்தத்தின் உதவியுடன் சந்தித்தோம்.தனது அத்தையின் மரணத்தால் சோகத்தில் இருந்த அடிகளாரிடம் உறவினர்கள் துக்கம் விசாரித்துக்கொண்டி ருந்தார்கள். அவரிடம் "ராமதாஸின் பேச்சு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?' என கேட்டதற்கு, ""இருபது வருஷத்துக்கு முன்னாடி மேல்மருவத்தூருக்கும் சோத்துப்பாக்கத்துக்கும் இடையில் பயணம் செய்ய ஏரோபிளானா இருந்தது? அன்று என்னிடம் ஓட்டை சைக்கிள்தான் இருந்தது.

ஓட்டை சைக்கிளில் போனதை நான் இழிவாக நினைக்கவில்லை. இன்று பென்ஸ் காரில் போறதை பெருமையாகவும் நினைக்கலை. இரண்டும் எனக்கு ஒன்றுதான். நான் லட்சக்கணக்கான மக்களை இயற்கையை வழிபடுங்கள் என்றுதான் போதிக்கிறேன். மக்களுக்கு என்னால முடிஞ்ச நல்ல சேவைகளை செஞ்சுக்கிட்டு வர்றேன். என்னைப் பத்தி தப்பா பேசுறவங்களுக்கு நான் பதில் சொல்ல விரும்பலை. எல்லாம் கடவுளுக்கும் மக்களுக்கும் தெரியும்'' என்றார் மிகவும் அமைதியாக.ராமதாஸ் ஏதாவது சிபாரிசு கடிதம் கொடுத் தாரா என அடிகளாருக்கு நெருக்கமானவர் களிடம் கேட்டபோது, ""அப்படி எதுவும் அடிகளாரின் கவனத்திற்கு வரவில்லை'' என சொன்ன அவர்கள்...""கலைஞரிடம் ராசியாக போகணும்னு ராமதாஸ் விரும்புறார். அதற்கு அடிகளாரை தூது போகச் சொன்னாரு. அடிகளார் அரசியலை எப்பொழுதும் விரும்பாதவர்.

அதனால் அந்த ஆலோசனையை ஏற்க மறுத்திட்டாரு. அந்த கோபத் துல அடிகளாரை சகட்டு மேனிக்கு தாக்கிட்டாரு'' என்கிறார்கள்.மருவத்தூரும், தைலா புரமும் மோதிக்கொள்வது அரசியல் நெடுஞ்சாலையில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

விஜய்யின் வேட்டைக்காரன் கேரளா-கர்நாடகத்தில் சாதனை!

விஜய் நடித்துள்ள வேட்டைக்காரன் படத்தின் கேரள மற்றும் கர்நாடக உரிமைகளை மிகப் பெரிய தொகைக்கு விற்று சாதனைப் படைத்துள்ளனர் அதன் உரிமையாளர்களான சன் பிக்ஸர்ஸ்.
இந்தப் படத்துக்கு தரப்பட்ட விலை எவ்வளவு என்பதை வெளிப்படையாக கூறவில்லை. ஆனால் ரஜினி படத்துக்குப் பிறகு இந்த மாநிலங்களில் இத்தனை பெரிய தொகை விற்கப்பட்ட ஒரே படம் வேட்டைக்காரன்தான் என்பது மட்டும் உறுதி என்றனர் வேட்டைக்காரன் யூனிட்டார்.

கேரளாவில் மட்டும் 75 திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது. இதற்கு முன் அதிக திரையரங்குகளில் வெளியான படம் சிவாஜி மட்டுமே.

திரையரங்குகளில் சிவாஜி வெளியானது!அதற்கு அடுத்து வேட்டைக்காரன்தானாம். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கேரளாவில் மம்முட்டி மற்றும் மோகன்லாலின் படங்கள் வெளியாகும் நிலையில், அந்தப் படங்களுடன் போட்டிபோட்டு 75 திரையரங்குகளில் விஜய் யின் படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் போக்கிரி கேரளாவில் 100 நாட்களைத் தாண்டி ஓடியது நினைவிருக்கலாம்.

விபச்சார வழக்கில் சிக்கிய புவனேஸ்வரி அரசியலில் குதித்தார் - மூ.மு.கவில் மகளிர் அணி செயலாளரானார்

வீட்டில் ஆள் வைத்து விபச்சாரம் செய்ததாக கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் விடுதலையாகியுள்ள நடிகை புவனேஸ்வரி திடீரென தீவிர அரசியலில் குதித்து விட்டார். ஜாதிக் கட்சியான டாக்டர் சேதுராமனின் மூவேந்தர் முன்னேற்றக் கழகம் கட்சியில் இணைந்துள்ளார்.
அவருக்கு மாநில மகளிர் அணிச் செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.சென்னை அடையாரில் உள்ள தனது வீட்டில் பெண்களை வைத்து விபச்சாரம் செய்து கையும் களவுமாக பிடிபட்டவர் புவனேஸ்வரி.

இவரது கைது சம்பவம் மற்றும் அதைத் தொடர்ந்து வெளியான நடிகைகள் குறித்த செய்திகள் தமிழகத்தில் புயலைக் கிளப்பின.எந்தெந்த நடிகை உல்லாசத்திற்கு எவ்வளவு வாங்குகிறார் என்ற பட்டியல் தன்னிடம் இருப்பதாக கூறி அதை போலீஸாரிடம் புவனேஸ்வரி தெரிவித்ததாகவும், வயிற்றுப் பிழைப்புக்காக விபச்சாரம் செய்த தன்னை கைது செய்தது நியாயமில்லை என்று கூறி புவனேஸ்வரி புலம்பியதாகவும் செய்திகள் வெளியாகின.

தற்போது புவனேஸ்வரி ஜாமீனில் விடுதலையாகியுள்ளார். இந்த நிலையில் நேற்று திடீரென அரசியலில் குதித்து விட்டார் புவனேஸ்வரி.மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தில் அவர் சேர்ந்துள்ளார். அக்கட்சியின் நிறுவனரான டாக்டர் சேதுராமன் முன்னிலையில், கட்சியில் இணைந்தார்.இதுகுறித்து புவனேஸ்வரியின் வக்கீல்கள் டி.ரமேஷ், காமேஸ்வரராவ் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,திரைப்பட மற்றும் டி.வி. நடிகை டி.புவனேஸ்வரி, மூவேந்தர் முன்னேற்ற கழகத்தில், கட்சியின் தலைவர் டாக்டர் சேதுராமன் முன்னிலையில் இணைந்தார்.

சென்னை தியாகராயநகரில் உள்ள அலுவலகத்தில் டாக்டர் சேதுராமனுக்கு அப்போது மாலை அணிவித்தார்.

நடிகை டி.புவனேஸ்வரிக்கு மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் மாநில மகளிர் அணி செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டது என்றனர்.முன்பு அதிமுகவுக்கு ஆதரவாக இருந்து வந்தார் புவனேஸ்வரி. தேர்தல் பிரசாரத்திலும் கூட ஈடுபட்டிருந்தார்.

இந்த நிலையில் விபச்சாரத்தில் ஈடுபட்டு கைதான பின்னர் தற்போது மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தில் அவர் இணைந்துள்ளார்.

Sunday, December 6, 2009

உடைகிறது ஐ.தே.கட்சி: எஸ்.பி;.திஸாநாயக்க உட்பட மூவர் மகிந்தவுக்கு ஆதரவு?

க்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.பி;.திஸாநாயக்க ஜனாதிபதி தேர்தலில் மகிந்தவுக்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை எஸ்.பி;.திஸாநாயக்கவுக்கும் மகிந்தவுக்கும் இடையில் ஹிங்குராகந்தையில் இடம்பெற்ற இரகசிய சந்திப்பினையடுத்தே ஆதரவு வழங்க முன்வந்துள்ளதாக எஸ்.பி;.யின் நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தந்தன.இது தொடர்பான ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நாளை கூட்டவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை குருணாகல் மாவட்ட ஐ.தே.க.பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் மகிந்தவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதுடன் குருணாகல் மாவட்டத்தின் மேலும் ஒரு ஐ.தே.க.பாராளுமன்ற உறுப்பினரும் மகிந்தவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

3 வாரங்களில் சபரிமலை கோவில் வருவாய் ரூ. 34 கோடி

பரிமலை ஐயப்பன் கோவில் வருவாய் 3 வாரங்களில் ரூ. 34 கோடியை கடந்துள்ளது.நவம்பர் 15ம் தேதி இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை காலம் தொடங்கியது. அன்று முதல் ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் பெருமளவில் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.கடந்த 3 வாரங்களில் மட்டும் பக்தர்கள் மூலம் கோவிலுக்குக் கிடைத்த வருவாய் ரூ. 34 கோடியைத் தாண்டியுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ. 4 கோடி அதிகமாகும்.கடந்த ஆண்டு 3 கோடி பேர் ஐயப்பன் கோவிலுக்கு வந்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

விதி முறைகளை தளர்த்தி இலங்கை தமிழர்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்க நடவடிக்கை: புழல் அகதி முகாமில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

விதிமுறைகளை தளர்த்தி இலங்கை தமிழர்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னையை அடுத்த புழல் அகதிகள் முகாமில் இலவச கலர் டி.வி. வழங்கும் விழா நடந்தது. துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவில் கலந்து கொண்டு புழல் அகதிகள் முகாம்களில் உள்ள 440 குடும்பங்களுக்கு தமிழக அரசின் இலவச கலர் டி.வி.க்களையும், மற்றும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வந்து நீண்டகாலமாக வாழும் இலங்கை தமிழர்களுக்கு நிவாரணங்கள் வழங்கும் வகையில் தமிழக முதல்வர் கருணாநிதி ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். அதன் அடிப்படையில் தமிழகத்தில் முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு பலஉதவிகள் வழங்கப்பட்டுள்ளது.ரூ.100 கோடி ஒதுக்கீடுகுறிப்பாக ரூ.4 கோடியே 54 லட்சத்து 49 ஆயிரத்தில் வண்ணத்தொலைக்காட்சி பெட்டிகளும், ரூ.1 கோடி மதிப்பில் இலவச காப்பீடு திட்டமும், மூவளூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித்திட்டத்தில் 1,200 பெண்களுக்கு ரூ.2 கோடியே 40 லட்சம் ரூபாயும், விளையாட்டு சாதனங்களாக ரூ.4 லட்சத்து ஆயிரம் ரூபாயும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பேருந்து கட்டணம் ரூ.8 லட்சத்து 7 ஆயிரமும், குடியிருப்புகளை பழுது பார்க்க குடிநீர் வசதி, கழிவறை கட்ட, பழைய கழிவறைகளை புதுப்பிக்க, புதிய கால்வாய்களை அமைக்க, கால்வாய்களை பழுது பார்க்க, சாலைகளை அமைக்க, புதிய மின்கம்பங்கள் இணைப்புகள் அமைக்க ரூ.45 கோடியே 39 லட்சத்து 67 ஆயிரமும், கான்கிரீட் வீடுகள் கட்ட ரூ.54 கோடியே 60 லட்சத்து 33 ஆயிரம் என ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அரசின் சார்பில் உடல் ஊனமுற்றவர்களுக்கு செயற்கை உபகரணங்கள், 3 சக்கர சைக்கிள்கள் ஈமச்சடங்கு தொகை ரூ.2,500 ஆக உயர்த்தியுள்ளது, முகாம்களில் பணக்கொடை வழங்கும் போது இல்லாதவர்களுக்கு அவர்கள் வந்தவுடன் பணத்தொகை வழங்கும் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.ஓட்டுனர் உரிமம்இதேபோல் ஓட்டுநர் உரிமம் வழங்க அனைத்து விதிமுறைகளையும் தளர்த்தி உரிமம் வழங்க நடவடிக்கை எடுத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

புழல் முகாமில் தற்போது ஜே.சி.பி. எந்திரம் மூலம் சாலைகள் சரி செய்யப்பட்டுள்ளன. புதிய மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கழிவுநீர் அகற்றப்பட்டு விளையாட்டு மைதானங்கள் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. 25 கழிவறைகளை சுத்தம் செய்து 4 கழிவறைகளுக்கு கதவுகள் போடப்பட்டுள்ளன. 440 குடும்பங்களுக்கு வண்ணத்தொலைக்காட்சி வழங்கப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு திருமண உதவிதொகையும், 2 பேருக்கு ஈமச்சடங்கு நிதியும், இங்குள்ள இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன.

தமிழக அரசின் சாதனை திட்டமான இலவச மருத்துவக்காப்பீடு திட்டத்திற்கு புகைப்படம் எடுக்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது. ரூ.21/2 லட்சத்தில் புதிய ரேஷன் கடை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய குடியிருப்புகளை கட்ட ரூ.8 கோடி மதிப்பீடு செய்து அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு தமிழக அரசு எப்போதும் துணையிருக்கும்.இவ்வாறு துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

விழாவில் மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பழனிகுமார், திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ. இ.ஏ.பி.சிவாஜி, பொன்னேரி ஆர்.டி.ஓ.குமார், அம்பத்தூர் தாசில்தார் ராமச்சந்திரன், புழல் பேரூராட்சி தலைவர் மகாதேவி அன்பழகன், மாதவரம் நகரமன்றத்துணைத்தலைவர் எஸ்.சுதர்சனம், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், தொலைபேசி ஆலோசனைக்குழு உறுப்பினர் து.திருநாவுக்கரசு மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் ஒரு ஈழம்!

ள்ளிரவு நேரம். அடர்ந்த மலைக் காடு. சோவென்று அடைமழை. "அய்யோ அம்மா... வலி தாங்க முடியலையே' -அடிவாரத்தி லுள்ள ஒற்றைக் குடிசையிலுள்ள பிரசவப் பெண்ணின் அலறல். மலையின் மறு ஓரத்தில் டெண்டிற்குள்ளிருந்த "சீருடை மனிதரின்' காதுகளில் விழ, ஓடோடிப் போய் அப்பெண்ணை அள்ளி இரு கைகளால் சுமந்து வந்து தனது ஜிப்ஸியில் கிடத்துகிறார். அடுத்தநொடி ஒற்றை மண் ரோட்டில் நிலவொளி சாட்சியாக பனிக்காற்று மழையை கிழித்தபடி பறந்தது ஜிப்ஸி.


ஐந்தாவது நிமிடம் வண்டி மருத்துவமனையை அடைய, மூடப்பட்ட கண்ணாடி கதவுகளுக்கு மறுபுறம் கண்ணைக் கசக்கியபடி வந்த மருத்துவர் கதவுகளைத் திறக்க, பிரசவ பெண்ணை கையில் சுமந்தபடி நிலைமையை விவரிக்கிறார் சீருடை மனிதர். பரபரப்பை புரிந்து கொண்ட மருத்துவர் மள மளவென பிரசவம் பார்க்க "க்குவா க்குவா' அழகான ஆண் குழந்தை பிறக்கிறது. ஐந்து நிமிடம் தாமதித்திருந்தாலும் இருவர் உயிரையும் காப்பாற்றியிருக்க முடியாது . "குட் ஜாப் மை டியர் பாய்' மருத்துவர் சீருடை மனிதரின் முதுகை தட்டிக் கொடுக்க, அவர் கண்ணில் ஆனந்தக் கண்ணீர். தக்க சமயத்தில் இராணுவ வேகத்தில் மலை ஜாதிப்பெண்ணை காப்பாற்றிய அந்த சீருடை மனிதர் -"பொன்னம்மான்'. விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர். 1983 இலங்கை ஜூலை படுகொலைக் குப் பின் அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் ஆதரவோடு இயக்கத்தினர் 1984-ல் பயிற்சிக்கு வந்த இடம் மேட்டூர் கொளத்தூர் கும்பாரப்பட்டி மலைக்கிராமம்.


பயிற்சிக்கு வந்தாலும் மக்களோடு மக்களாக இணைந்து கிராமத்து சனங்களின் இன்ப -துன்பங்களில் இயக்கத்தினர் பங்கெடுத்த வாழ்க்கை முறையில் நெஞ்சுருகி போன கிராமத்தினர் கும்பாரப்பட்டி என்ற கிராமத்துப் பெயரையே புலியூர் என மாற்றி கடந்த 20 வருடமாக "மாவீரர் நாள்' நிகழ்வையும் நடத்தி அவர்களை நினைத்துப் பார்த்து வரு கின்றனர். இவ்விஷயமறிந்து நவம்பர்-27 மாவீரர் நாளன்றே மதிய நேரத்தில் கொளத்தூர் கும்பாரப்பட்டி மன்னிக்கணும் "புலியூருக்கு' பயணமானோம். தோரணை, தமிழீழ ஆதரவு சுவரொட்டி பிரபாகரன் பேனர்கள் என ஊரே பண்டிகை களை கட்டியிருக்க, "தமிழா தமிழா ஒன்றுபடும் தருணம் இதுதான் ஒன்றுபடு' என ஒலிபெருக்கியில் முழங்கிய இனவுணர்வு பாடல் முறுக்கியபடி நம்மை வரவேற்றது. "பொன்னம்மான்' நினைவு மண்டபம் அருகே பெரியவர் கள், பெண்கள், குழந்தைகள் குழுமியிருக்க. "அய்யா இங்க விடுதலைப்புலிகள் பயிற்சி செய்த இடத்திற்கு போகணும்' எனும்போதே... ""ஓ பொடியன்ங்க மண்ணை பார்க்கணுமா? யெலேய் முத்துசாமி, ராமசாமி நீங்களே கூட்டிப்போய் தம்பிக்கு எடத்தை காட்டுங்க'' என கூட்டு முழக்கமிட, அவர்களோடு பயிற்சி இடத்திற்கு நடந்தோம். 2 கி.மீ. மலைப்பாதையில் நடந்த பின் அகன்று விரிந்த 40 ஏக்கர் சமவெளி. ஆங்காங்கே பெரிய பெரிய தொட்டிகள் கட்டப்பட்டும், சில உடைந்தும் காணப்பட் டன. மறுபக்கம் பெரியளவில் சுவர்கள் 100 அடி இடைவெளியில் எதிரெதிராக கட்டப் பட்டு இருக்க, ஒரு சுவரில் கோலிகுண்டு அளவில் அய்ந்தாறு ஓட்டைகள். நெருங்கிப் பார்த்த நம்மை ""என்ன தம்பி பாக்குறீங்க? அதெல்லாம் புலிகள் துப்பாக்கி பயிற்சி செய்யும்போது சுடப்பட்ட குண்டுகள்'' என்ற ராமசாமி அய்யா, ""இந்த சுவர்கள் தடுப்பரண்கள் அந்த பக்க சுவரிலிருந்து இங்கு சுட்டு பயிற்சி எடுப்பாங்க.







அப்புறம் சுவர் மேல கட்டையால செஞ்ச மனுஷ பொம்மைகளை செஞ்சு மாட்டி இதயப்பகுதியை குறிபார்த்து சுட்டு பயிற்சி எடுப்பாங்க. நாங்கள்லாம் அப்போ வாலிப பட்டாளங்கள், தூரத்தில இருந்து வேடிக்கை பார்ப்போம். ஜெய்சங்கர் படம் பாக்குற மாதிரியிருக்கும்... ஹ்ம் அது ஒரு காலம்... ஆழப் பெருமூச்சுவிட ""1984 சனவரியில இங்க மொதல்ல 140 பேருங்க வந்தாங்க. ஒல்லியா ஆனா உயரமா மிடுக்கா ஒருத்தர் 140 பேருக்கும் கடும் பயிற்சி கொடுப்பாரு. அவர்தான் பொன்னம்மான். அப்போ எங்க ஊருக்கே அவர்தான் ஹீரோ'' என்றபடியே நினைவலைகளை விட்ட முத்துசாமி அய்யா, ""அவர்தான் அந்த டீம் லீடர். முதல் பயிற்சியாளர். காலையில 5 மணிக்கெல்லாம் பொடியன்களை எழுப்பி விட்டுடுவார்.


"இப்பதான் தூய்மையான ஆக்சிஜன் கிடைக்கும்'னு மூச்சு பயிற்சி தருவார். அப்புறம் க்ரௌண்ட் எக்ஸசைஸ். சரியா 9 மணிக்கு காலை உணவு. பின் 10 மணிக்கு பயிற்சி. கயிறு ஏறுதல், ஓடுதல், மல்யுத்தம்னு பயிற்சி நடக்கும். மதியம் 1 மணிக்கு சாப்பாடு நேரம். 3 மணி வரை ரெஸ்ட். அந்த நேரத்திலதான் குளிப்பாங்க. பின் 3-லிருந்து 5 வரை அரசியல் வகுப்பு. வெறும் துப்பாக்கி மட்டும் வச்சுக்கிட்டு விடுதலை வாங்கிட முடியாது. அரசியல் இல்லாம எந்த தேச விடுதலை யும் சாத்தியமில்லை. "அரசியலும் ஆயுதமும் தேச விடுதலையின் இரு கண்கள்'னு பொன்னம்மான் அரசியல் வகுப்பெடுப்பாரு. பின்பு 5 டூ 6 ஓய்வு. அந்த நேரத்தில துணி துவைப்பாங்க. பின்பு அதோ மேற்கால தெரியுதே அந்த மலை அங்க போயி சுள்ளி, விறகு பொறுக் கிட்டு வந்து சமையல் செய்து சரியா 8 மணிக்கு சாப்பிடுவாங்க.

இந்த டைம் டேபிள்ல ஒரு நிமிடம்கூட குறையவோ, கூடவோ செய்யாது. எல்லாம் துல்லியமா நடக்கும். அந்தளவு இராணுவ தன்மை யோடு மிடுக்கா இருக்கும். பொன்னம்மான் மிக கண்டிப்பானவர்'' எனும்போதே "அது பயிற்சியின்போதுதான் மற்ற நேரங்களில் அவரைப் போல மெல்லிய உணர்வுள்ளவரை பார்க்க முடியாது' என இடைமறித்த ராமசாமி அய்யா, ""ரொம்ப அன்பானவர் அவர். எங்க கிராமத்து சனங்களோட நெருங்கி தாயா புள்ளையா பழகுவாரு. இங்க பல சாதியினர்கள் இருந்தாலும் நாமெல்லாம் தமிழர்கள். நமக்குள் சாதியே கிடையாது. ஆரிய சதி அது என சொல்லிக் கொடுத்து ஒற்றுமையை வளர்த்தாரு. இப்பவே இது காடுன்னா அப்போ எப்படி இருக்கும்? ரோடு இருக்காது. மின்சார வசதியிருக்காது. ஆனாலும் எந்த நேரத்தில் எந்த பிரச்சனைனாலும் உடனே ஓடோடி வந்துடுவாங்க. அவங்ககிட்ட ஒரேயொரு ஜிப்ஸி ஜீப் இருக்கும். அதுதான் பலநேரம் எங்களுக்கு ஆம்புலன்ஸ். இங்க இப்ப வாலிபர்களாக, இளைஞர்களாக பலர் நம்மோடு இருக்காங்கன்னா அதுக்குக் காரணம் பொடியன்கள்தான். யாருக்கு பிரசவமென்றாலும் ஜிப்ஸியில தூக்கிப் போட்டுக்கிட்டு 18 கி.மீ. தள்ளி இருக்கிற மேட்டூர் மருத்துவமனைக்கு பறந்துடுவாங்க. கடைசி கடைசியா என் கல்யாணத்தை அவங்கதான் நடத்திவச்சு 400 பொடியன்ங்க வந்து சாப்பிட்டுட்டு போனாங்க'' என்க...

""400 பேரா?'' என்றோம். ""ஆமாம் தம்பி மொதல் செட்டுல 140 பேர்கள். அடுத்த செட்டு 200 பேர்கள். அப்புறம் புலவேந்திரன் மாஸ்டர் தலைமையில் 400 பேர்கள் என 1000 பேர்களுக்கு மேல 1989 வரை பயிற்சிக்கு வந்தாங்க. எங்கள அப்படி பாதுகாத்தாங்க. அவங்கள்லாம் இப்ப உசுரோட இருக்காங்களா இல்லையானு தெரியாது. ஆனா எங்க சனங்கள பொறுத்தவரை எல்லைசாமிகளா இருந்தாங்க'' -மேற்கொண்டு பேச முடியாமல் நா தழுதழுக்க... ""ஆமாங்க தம்பி தலைமையே எளிமையின் அடையாளமா இருக்கும்போது பொடியன்கள் இல்லாமலா இருப்பார்கள்'' என்றபடியே நாம் வந்திருப்பது அறிந்து ஆஜராயினர் அவ்வூர் பெரியவர்கள் குட்டபாலனும், மாதுவும். "தலைமையா?' நாம் இழுத்தோம். ""ஆமாங்க தம்பி, தலைவர் பிரபாகரனைத்தான் சொல்றோம்'' என்றவர்கள்... ""ஒவ்வொரு பயிற்சி முடியும்போதும் "தம்பி' வந்துதான் அவங்கள நாட்டுக்கு (ஈழம்) அனுப்பி வைப்பாரு. 1983, ஜூலை படுகொலை ஒவ்வொரு தமிழனின் மனதிற்குள்ளும் கடும்பாதிப்பை ஏற்படுத்தி போராளியாக மாற்றி வந்த நேரம் அப்பொழுதும் "நமது ஆயுதங்கள் எப்பொழுதும் எதிரியின் மீதுதான் இருக்க வேண்டுமே தவிர மக்கள் மீது திரும்பக் கூடாது' என யுத்த கல்வி கொடுத்து அனுப்புவார் "தம்பி'. கேம்ப் முடிந்து போகும் கடைசிநாள் ஆடல், பாடல் என களைகட்டும். ஆடு, கோழி வெட்டி தடபுடலாக விருந்து தரப்படும். "தம்பி'தான் தருவார். ஊர் சனங்களையும் "தம்பி' எங்க விழாவில இணைச்சுக்குவாரு. ரொம்ப எளிமையானவரு.

சாப்பாடு போடும்போது எல்லோரும் போல "தம்பியும்' வரிசையில நின்னுதான் வாங்குவாரு. தன்னோட துணிகளை மட்டுமல்ல, சக பயிற்சியாளர்கள் துணிகளையும் துவைச்சு போடுவாரு. எனும்போதே குட்டபாலன் கண்ணில் நீர் ததும்ப ஆறுதல்படுத்திய மாது ""எங்க கிராம மக்களோட நெருங்கிப் பழகி எங்க பிள்ளைகளுக்கு கல்வி கத்து தருவாங்க. ஓய்வு நேரத்தில் எங்களோட வந்து விவசாயம் பாப்பாங்க. ஒருமுறை மலையில ஆடு மேச்சுகிட்டு இருந்த ஒரு பையனை பாம்பு கடிக்கவும் முதலுதவி செஞ்சு கையால ஆஸ்பத்திரி தூக்கிட்டு போயி உசுர காப்பாத்தினாங்க. இப்படி பல சம்பவம். அதனாலதான் புலவேந்திரன் மாஸ்டர், லூகேஸ் மாஸ்டர், ரோகி மாஸ்டர் திரும்பும்போது ஊரே அழுதது. நாட்டுக்கு திரும்பிய பொன்னம்மான் ஒரு வெடி விபத்துல இறந்தது தெரிஞ்சு இங்க கொளத்தூருல நாங்க 5000 பேர்களுக்கு மேல திரண்டு அழுதுகிட்டே வீரவணக்கம் செஞ்சோம். எங்க ஊரே துக்கமா இருந்தது. அவர் நினைவாதான் இங்க பொன்னம் மான் நினைவு மண்டபம் கட்டி மாவீரர்கள் தினமான நவ. 27-ல் கடந்த 20 வருஷமா வீரவணக்க நிகழ்வை பல எதிர்ப்புகளுக்கு மீறி நடத்தி வர்றோம். மேலும் அவங்களோட நினைவா இங்க பலருக்கு மில்லர், சங்கர், மாலதி, அங்கயர்கண்ணினு பேர் வச்சிருக்கோம். நவ.-27 அன்றே எங்க பையன்களும் பிறந்ததால தம்பி பிரபாகரன்னு பேர் வச்சிருக்கோம்'' என்றனர் குட்டபாலனும் மாதுவும். அதற்குள் மாலையாகிவிட, அவசர அவசரமாக பொன்னம்மான் நினைவு மண்டபம் திரும்பினோம். பெரியவர்கள், சிறுவர்கள், பெண்கள் என 500-க்கும் மேற்பட்ட கிராமத்து மக்கள் திரண்டிருக்க... சரியாக 6.05 மணிக்கு கையில் மெழுகு வர்த்தியுடன் ஊர்மக்கள் வரிசையில் நின்று வீரவணக்கம் செலுத்தினர். பெ.தி.க.வினர் வழிநடத்த மெழுகுவர்த்தி வைத்துவிட்டு திரும்பிய குழந்தைகளிடம் ""குட்டிகளா எதற்காக இந்த நிகழ்வு?'' என்றோம்.

"ஏழைங்களுக்காக, தமிழர்களுக்காக, இறந்துபோன மாமாக்களை நெனச்சு இப்படி செய்றோம்' என சிந்தனை தெளிவோட பேசிய அச்சிறார்களிடம் "பிரபாகரன் இல்லைன்னு சிலபேர் சொல்றாங்களே அவருக்கும் சேர்த்துதான் இப்படி வீரவணக்கம் செய்றீங்களா?' என்றோம்.

"இல்லை இல்லை இந்த காட்டைவிட பயங்கரமா ஒரு காடு அங்க இலங்கையில இருக்காம். அங்கதான் தம்பி மாமா (பிரபாகரன்) மறைஞ்சிருக்காராம். சீக்கிரம் வருவாராம். எங்க தாத்தாங்களாம் சொன்னாங்க' என்றனர் மழலை மொழியில். அதை ரசித்தபடியே திரும்பிய நம் காதுகளில் "விழ விழ எழுவோம் ஒன்று விழ நாங்கள் ஒன்பதாய் எழுவோம்' என்ற பாடல் ஒலித்தபடியே இருந்தது.

அப்பா வருவார்! - ஜெகத் கஸ்பர்

சில சிறு செய்திகள். நிறைவாய், நிம்மதியாய். இரவு கவிந்த பின்னரும் எங்கோ மூலையில் எரிந்து கொண்டிருக்கும் அகல் விளக்கு போல் வாடிப் போகாத நம்பிக்கையாய்.



ஈழத்தமிழுலகம் தேசியத் தலைவரென வணங்கிப் போற்றும் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தனது தனிப் பட்ட திருக்கோயிலாயும், தன் நெஞ்சுறங்கும் தாய்மடித் தொட்டிலாயும் கருதி வளர்த்துப் பேணிய செஞ்சோலை குழந்தைகள் இல்லமும் இனவாத யுத்தத்தின் கோரப்பசிக்கு இரையானதை நாம் அறிந்திருந்தோம். கிளிநொச்சியிலிருந்து ஜனவரி மாதம் புறப்பட்ட சிங்களப் பேரினவாதத்தின் ராணுவப் பூதங்களால் கூடு கலைக்கப்பட்ட நான்கு லட்சம் தமிழர்களில் செஞ்சோலைப் பிள்ளைகளும் உள்ளடக்கம். இடைவிடா குண்டுவீச்சு, தொடர் தப்பியோட்டம், பசி, தாகம், அச்சம், பிணங்கள் என்றாகிய இறுதிகட்டப் போரில் எல்லோரையும் போல் இந்தப் பிஞ்சுகளும் கூடு கலைந்து ஓடினார்கள். சுமார் 60 பிள்ளைகள் தப்பி ஓடுகையில் எறிகணை வீச்சுக்கு கோரமாய் பலியானார்கள் என்றொரு செய்தி முன்னர் கிடைத்திருந்தது. எஞ்சியவர்களைப் பற்றின தொடர் விசா ரணைகளில் செஞ்சோலையிலிருந்த ஆண்பிள்ளைகள் தென் னிலங்கை குருநாகல பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்ட தாகவும், அவர்களை சிறுவர் போராளிகளென்றே சிங்களம் உலகிற்குக் கணக்குக் காட்டியதாகவும் சிலர் சொன்னார்கள். ஆனால் உறுதி செய்ய முடியவில்லை. அதேவேளை செஞ்சோலையின் பெண் குழந்தைகள் என்னவானார்கள் என மனம் தவித்து பலரை வினவியும் நிலை தெரியவில்லை. அதற்கான பதில், தவிப்பினை தீர்த்து கடந்த வியாழனன்று கிடைத்தது.



செய்தியைச் சொல்லுமுன் செஞ்சோலை பற்றித் தெரியாதவர்களுக்காய் சில வரிகள். சிங்களப் பேரினவாதம் அனாதைகளாக்கிய தமிழ்ப் பிஞ்சுகள், சிறார் யாவருக்கும் தானே தாயும், தகப்பனும், தெய்வமுமாகி வேலுப்பிள்ளை பிரபாகரன் தனது நேரடி பார்வையிலும், பராமரிப்பிலும் உருவாக்கிப் பேணிய இல்லம்தான் செஞ்சோலை. சதிகள், துரோகச் சகதிகள், இடர்கள், மனக்குழப்பங்கள் என அம்மாமனிதன் சுமைப்பட்ட பொழுதுகளிலெல்லாம் தாய்மடித் தஞ்சம் நாடியது இச்செஞ்சோலை மலர்களிடம் தான். எனது நேர்காணலில் கூட அதனை அவர் ரம்யமாகக் குறிப்பிட்டார். ""அங்கு போனால் மனம் அமைதியாயிருக்கும். நிம்மதி கிடைக்கும்''. இறுக்கமான போர்முனைகளில் நின்ற தரு ணங்களில் கூட, ஒருவாரம் செஞ்சோலைக்குச் செல்ல முடியாதென்றால் முன்னதாகவே தனிப் பட்ட முறையில் அப்பிள்ளைகளுக்கு இனிப்புகள், பரிசுகள் அனுப்பி வைப்பாராம். தமிழீழத்தின் ஒவ்வொரு குழந்தையையும் தன் சொந்தக் குழந்தை போல் பேணிய அந்தத் தாயுமானவர்.



அச்செஞ்சோலையின் 150-க்கு மேலான பெண் குழந்தைகளும், பிள்ளைகளும் பாது காப்பாய் இருக்கிறார்கள், அதுவும் பிரபாகரன் அவர்களைப் போலவே அரவணைப்பும் நேசமும் அப்பிள்ளைகளுக்குத் தருகிற அன்னை தெரசாவைப் போன்ற இதயமும் அர்ப்பணமும் கொண்ட கத்தோலிக்க அருட்கன்னியர்களின் பராமரிப்பில் இருக்கிறார்கள் என்ற செய்தி கடந்த வியாழனன்று கிட்டியது. ஓடி ஓடிக் களைத்த இச்சிறு புள்ளிமான் கூட்டம், வெறிபிடித்த சிங்கக் கூட்டத்திடமிருந்து தப்பி ஆறுதலின் நீரோடையை அன்னை தெரசா போன்ற அருட்சகோதரியர்களிடம் கண்டிருக் கிறார்களென்பதில் நம் அனைவருக்கும் நிம்மதியே. அவ்வாறே எங்கோ இருக்கிற செஞ்சோலையின் ஆண் பிள்ளைகளும் அன்புடையோர் பராமரிப்பிற்கு வந்து சேர வேண்டுமென இறையருளை மன்றாடுவோம்.


பிரபாகரன் அவர்களை ""அப்பா'' என உரிமையுடன் அழைத்து வளர்ந்தவர்கள் இந்தப் பிள்ளைகள். இப்போது அவர்கள் இருக்கும் இல்லத்தில் முகமலர்ச்சியோடு அவர்கள் ஓடித் திரிந்து விளையாடினாலும் தங்கள் "அப்பா'வின் நினைவாகவே இருக்கிறார்களாம். அதுபோலவே அங்கிருக்கும் அருட்சகோதரியர்களிடத்தில், ""அப்பா உயிரோடுதான் இருக்கிறார். முக்கிய வேலையாய் அவர் வெளியே தூரத்தில் நிற்கிறார். நிச்சயம் எங்களை அவர் பார்க்க வருவார்'' என்று நம்பிக்கை யோடும், ஐயமற்ற உறுதி யோடும் சொல்கிறார்களாம்.


செஞ்சோலைச் சிறார் களில் ஒரு பகுதியினரேனும், தலைவனின் பாசப் பிள்ளை களாய் உயிர் பிழைத்திருக் கிறார்கள். அதுவும் அன்புடை யோரின் அரவணைப்பில் இருக்கிறார்கள் என்ற செய்தி உலகத் தமிழர் பலரை நிம்மதி கொள்ளச் செய்யும் என்பதால்தான் இதனை முக்கிய செய்தியாய் இங்கு பதிவு செய்ய விழைந்தேன்.


இதுபோலான இன்னுமொரு சிறிய நற்செய்தி. எமது ""நாம்'' அமைப்பு செஞ்சோலை போன்ற பிறிதொரு திட்டத்தை ஈழத்து நண்பர்கள் சிலருக்குப் பரிந்துரைத்து கடந்த இருமாத காலமாய் அதனை விவாதித்து வந்தோம். பேரினவாதம் நடத்திய யுத்தத்தில் கணவன், பிள்ளைகள், உடன் உறவுகள் யாவரையும் இழந்து தனிமரமாய் நிற்கிற விதவைத் தாய்மார்கள் பலர் அங்கு இருக்கிறார்கள். அவ்வாறே தாய்-தந்தை இருவரையும் பறித்தெடுத்து யுத்தம் அனாதைகளாக்கிய பல்லாயிரம் பிள்ளைகளும் இருக்கி றார்கள். இப்படி பெற்றோரை இழந்த பிள்ளைகளும், பிள்ளைகளை இழந்த தாய்மார்களும் இணைந்து வாழும் நந்தவனமொன்று உருவாக்குங்களேன் என்றுதான் அந்த நண்பர்களோடு உரையாடி, விவாதித்து வந்தோம். அதனை எடுத்துச் செய்ய அவர்கள் முன்வந்துள்ளார்கள்.


இதைத் தொடர்ந்து மனம் வருந்தக்கூடிய செய்தி ஒன்று. இலங்கையில் ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டிருக்கிற அதிபர் தேர்தலும் அதனை எதிர்கொள்வதில் தமிழ் மக்களுக்கான அரசியல் வெளிப்படுத்தும் பரிதாப நிலையும் நமது தொடரும் அவலத்தின் அடையாளங்கள் மட்டுமல்ல, தமிழீழ மக்களின் அரசியல் சுயநிர்ணய உரிமையை உலகம் கரிசனையோடு பரிசீலிக்கிற வாய்ப்புகளையும் விரைவாகச் சுருங்கிப் போகவைப்பவை.




முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகள் அறிவித்த ஆயுத மௌனிப்பு அதுவரை நாளும் தமிழருக்காய் இருந்த தவிர்க்கவும் அசைக்கவும் முடியாத ஓர் அரசியல் பலத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. மீண்டும் அப்படியொரு நிலைக்கு ஆயுதப் போராட்டத்தினூடாய் தமிழருக்கான அரசியற்பலத்தை கட்டியெழுப்ப மிக நீண்ட காலம் ஆகலாம். ஒருவேளை பழைய ராணுவச் சமநிலைக்கு தமிழர்கள் திரும்பி வர முடியாமலே கூட போகலாம். அதுவரை தமிழருக் கான அரசியற்களம் வெற்றிடமாக இருக்கக்கூடாது. அரசியலைப் பொறுத்தவரை வெற்றிடங்களை அது அனுமதிப்பதில்லை. நல்லவர்கள் அதனை நிரப்பாவிட்டால் துரோகி களும், தரகர்களும் சுயநலப் பேர்வழிகளுமே அவ்வெற்றிடத்தை நிரப்புவார்கள்.
இன்றைய நிலையில் தமிழரின் அரசியல் இடைக்குரலாய் தமிழ் தேசியக் கூட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சிகளை புலம்பெயர் தமிழர்கள் செய்திருக்கலாம். அவர்களில் நம்பகத் தன்மையும் நாணயமும் கொண்டவர்களை கடந்து போன மாவீரர் நினைவு நிகழ்வுகளுக்கு அழைத்து அவர்களின் அரசியற் தகுதியை மேலும் வலுச்செய்திருக்கலாம். அவ்வாறே பன்முனை உரையாடல்கள், முயற்சிகள் மூலம் தமிழ் -மலையகத் தமிழ் - இசுலாமிய மக்களின் பொதுவேட்பாளராக திரு.சம்பந்தன் ஐயா போன்ற மூத்த வேட்பாளர் ஒருவரை நிறுத்தியிருக்கலாம். அதேவேளை இன்று இலங்கை ராணுவப் பிடியில் இருக்கிற பாலகுமாரன், யோகி உள்ளிட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க அரசியல் -பொருண்மிய -புனர்வாழ்வுப் பிரிவுகளின் முக்கிய தலைவர்களை விடுதலை செய்ய வைத்து அவர்களை தமிழீழ விடுதலையின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் முகங்களாக்கிட அனைத்துலக அழுத்தத்தினை புலம்பெயர் தமிழர்களால் செய்திருக்க முடியும். இத்தகையதோர் செயற்பாட்டின் மூலம் தமிழரின் அரசியல் சுயநிர்ணய உரிமைக்கான ஓர் அடிப்படையை அன்று வட்டுக்கோட்டை தீர்மானத்திற்குப் பின் நடந்ததுபோல் இப்போதைய அதிபர் தேர்தலிலும் தமிழர்கள் நிகழ்த்திக் காட்டியிருந்தால் நமது அரசியற் தோற்றப்பாடும் உலகத்தின் பார்வையில் மதிப்பிற்குரியதாய் இருந்திருக்கும்.
ஆனால் நிஜத்தில் இன்று நாம் காணும் கவலைக் காட்சி என்ன? தமிழரை இன அழித்தல் செய்த யுத்தத்திற்கு அரசியற் தலைமை தந்த ராஜபக்சேவுக்கு சில தமிழ் குழுக்களும், அதனை ராணுவ களத்தில் ஈவிரக்கமின்றி நடத்தி முடித்த பொன்சேகாவுக்கு வேறு சில தமிழ் குழுக்களும் ஆதரவு செய்து களப்பணியும் ஆற்றுகிற அசிங்கக் காட்சியின் அரசியல் அரங்கு நம்முன் விரிகிறது. காரணம் யார்? எல்லாவற்றிற்கும் சிங்களப் பேரினவாதத்தின் மீதும் அந்நிய சக்திகள் மீதும் பழி போட்டுக்கொண்டு நாம் மட்டும் தூய யோக்கியவான்கள் என்பதுபோல் படம் காட்டிக்கொண்டு தொடர முடியாது. நமக்குள் இன்று நடந்து கொண்டிருக்கும் உட் சண்டைகளின் உள் நோக்கங்களை விவாதிக்கும் பொறுப்புணர்வு நமக்கு இல்லையெனில் பேசா பொருளை பேசும் துணிவு பெற வில்லையெனில் தமிழீழம் என்ற கனவையும் நாம் முன் நகர்த்த முடியாது.
தோழர்கள் சிலர் இந்த வாரம் நான் இந்திய உளவாளி என உளறிக்கொட்டியிருந்த ஒருவரைப் பற்றியும், எந்தக் கட்டுரைக்கு எதிர்வினை எழுதுகிறோம் என நன்றாகவே தெரிந்தும் மெனக்கெட்டு திசை திருப்பல் செய்திருந்த ஒருவரைப் பற்றியும் கேட்டார்கள். முதலாமவரது பேட்டியும் இரண்டாமவரது கட்டுரையும் பதிலுக்குத் தகுதியுடையன அல்ல.
இனவிடுதலைப் போராட்டத்தை ரசிகர் மன்றச் செயற் பாடுபோல் ஆக்கும் இவர்களை ஒரு பொருட்டாகக் கருதாமல் இயங்குவதே சரியானது. ஆயி னும் தூய உள்ளத்தோடு களப்பணிகள் ஆற்றும் உணர்வாளர்களிடையே இக்குழப்பங்கள் சலிப்பேற்படுத்துவதால் ஒரு மிகச்சிறிய பதில் தேவைப்படுகிறது: தமிழகத்தில் ஈழ விடுதலையைப் பொறுத்தவரை எவ்வித அரசியல், சுயநல நோக்குகளுமின்றி மிக நீண்ட காலமாய் இயங்கி வரும் கொளத்தூர் மணி, கோவை ராம கிருஷ்ணன், விடுதலை ராஜேந்திரன் போன்ற பல தோழர்களும், ஈழ விடுதலைக்காய் பல தியாகங்கள் செய்து, எண்ணிலா இன்னல்களை சந்தித்து அதேவேளை தங்களின் சுய விருப்பு வெறுப்புகள் அரசியற் தேவைகளுக்கேற்றபடி ஈழச் சிக்கலை வளைத்து அதன் அழிவுக்கும் காரணமான தலைவர்கள் இன்னொரு புறம்... தேசியத் தலைவருக்குத் துரோகம் செய்து, கடைசிவரை அவருக்குத் தவ றான தகவல்கள் தந்து, போரின் அழிவு களைக் காட்டி பெரும்பணம் கொள்ளை யடித்து, தமது பெண்டு பிள்ளைகளை யெல்லாம் வெளிநாடுகளில் "செட்டில்' செய்துவிட்டு இன்று பண, அதிகார நலன்களுக்காய் விடுதலைப் போராட்ட தியாக களத்தை கபளீகரம் செய்ய வரிந்து நிற்கும் ஓர் சிறு கூட்டத்தின் கூலிக்குரல்களாய் மேடைகளிலும் இணையதளங்களிலும் சலப்பும் ஓர் புதிய கூட்டம்... காலம் யாவற்றையும் வெளிப் படுத்தும், விரை வாகவே.