பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Saturday, November 14, 2009

'ஈழம் மௌனத்தின் வலி' புத்தக வெளியீட்டு விழா!

பேரழிவும் அவநம்பிக்கைகளுமாய் சிதைந்து கிடக்கும் ஈழத்தமிழ் மக்களின் இன்றைய துயர்களை பரந்துபட்ட பொதுமக்கள் வெளிக்கு அன்பு நேயத்தோடு எடுத்துச் சொல்லும் மிக முக்கியமான, தனித்துவமான முயற்சியாய் ''ஈழம்: மௌனத்தின் வலி'' என்ற புத்தகம், சென்னை எழும்பூர் காசா மேஜர் சாலையில் உள்ள டான் போஸ்கோ அரங்கில் சனிக்கிழமை மாலை வெளியிடப்பட்டது.முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் மே 16, 17, 18 நாட்களில் நடந்த தமிழர் இன அழித்தல் கொடுமைகளின் நெஞ்சடைக்கும் காட்சிகளை புகைப்படமாய் கண்டு நூறு புகழ்பெற்ற மனிதர்கள் இப்புத்தகத்தொகுப்பில் பதிவு செய்துள்ளார்கள். மனிதம் பட்டுப்போகவில்லையென்ற அறிவித்தலாகவும், மானுடம் வெல்லும் என்ற நம்பிக்கையாகவும் இப்பதிவுகள் அமைந்துள்ளன. பத்திரிகையாளர்கள் அருந்ததி ராய், அனிதா பிரதாப், நக்கீரன் கோபால், ஆன்மீகப் பெரியோர்களான சத்குரு ஜக்கி வாசுதேவ், பேராயர் சின்னப்பா, திரையுலகின் கமல்ஹாசன், சூர்யா, பிரகாஷ்ராஜ், நந்திதா தாஸ், சத்யராஜ், சீமான், சேரன், அமீர், பாலாஜி சக்தவேல், பாலா, ஏ.ஆர்.முருகதாஸ், மிஸ்கின், கே.வி.ஆனந்த், லிங்குசாமி, ராதா மோகன், கவிஞர்கள் வைரமுத்து, இன்குலாப், அப்துல் ரஹ்மான், மு.மேத்தா, அறிவுமதி, கனிமொழி, தாமரை, தமிழச்சி, கபிலன், நா.முத்துக்குமார், பா.விஜய், தபு சங்கர், யுகபாரதி, கலாப்ரியா, கல்யாண்ஜி, ஈரோடு தமிழன்பன், கல்வியாளர்கள் அனந்தகிருஷ்ணன், வசந்தி தேவி என சமூகத்தில் பெயரும் புகழும் பெற்று விளங்கும் நூறுபேர் ஆசிரியர்களாக இருந்து ஆக்கியுள்ள புத்தகம் இது.'போருக்கு எதிரான பத்திரிகையாளர்' என்ற அமைப்பின் இருபது பத்திரிகையாளர்கள், நூறு பேரையும் தொடர்புகொண்டது முதல் புத்தகத்திற்கு இறுதி வடிவம் கொடுத்ததுவரை முழுப்பணியினையும் உள்ளார்ந்த மனிதநேயப் பிடிப்பிலும் ஆழ்ந்த தமிழுணர்விலும் நின்று செய்துள்ளார்கள். இந்த புத்தக வெளியீட்டு விழாவில் புத்தகம் ஆக்கிய நூறு பேரில் பலர் பங்கேற்றனர்.

விமானத்துறையில் கால் பதிக்கும் கலாநிதி மாறன்!

சென்னை: சன் டிவி குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் ஸ்டார் ஏவியேஷன் நிறுவனத்தை ரூ. 1,000 கோடிக்கு வாங்கவுள்ளதாகத் தெரிகிறது.ஸ்டார் ஏவியேஷன் நிறுவனம் தென் இந்தியாவில் விமான சேவையைத் துவக்க அனுமதி பெற்றுள்ள நிலையில் இன்னும் தனது சேவையைத் துவக்கவில்லை.இந் நிலையில் அந்த நிறுவனத்தை கலாநிதி வாங்கவுள்ளதாகத் தெரிகிறது.சன் குழுமத்தின் மூலமாக அதை வாங்காமல் தனிப்பட்ட முறையில் இந்த நிறுவனத்தை கலாநிதி வாங்கவுள்ளார்.ஆனால், அப்படிப்பட்ட திட்டம் ஏதும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று சன் நெட்வோர்க் தரப்பும், ஸ்டார் ஏவியேஷன் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.43 வயதான கலாநிதி மாறன் போர்ப்ஸ் பில்லியனர்கள் பட்டியலில் 601வது இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 1.2 பில்லியன் டாலர்களாகும்.ஸ்டார் ஏவியேஷன் நிறுவனம் துபாயைச் சேர்ந்த தமிழரான தொழிலதிபர் சையத் முகம்மதுக்கு சொந்தமானது. இவர் உலகம் முழுவதும் பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருபவர். 3.8 பில்லியன் டாலர் மதிப்பிலான பல தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் சையத் தான் கால் பதித்த அனைத்துத் துறைகளில் வெற்றிக்கொடி நாட்டியவர்.சர்வதேச அளவில் விமானத்துறையில் நிலவி வரும் பெரும் நெருக்கடிகள் காரணமாகவே ஸ்டார் ஏவியேஷன் தனது சேவையை துவக்குவதை தாமதப்படுத்தி வருகிறது. இந் நிலையில் தான் இதை கலாநிதி வாங்குவதாக தகவல்கள் வெளியாகின்றன.கலாநிதி வாங்கினாலும் இல்லாவிட்டாலும் ஸ்டார் ஏவியேஷன் தனது சேவையை வரும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் துவக்கிவிடும் என்று கூறப்படுகிறது. இந்த சேவையைத் துவக்க 2010ம் ஆண்டு ஜூன் மாதம் வரை ஸ்டார் ஏவியேஷன் நிறுவனத்துக்கு கால அவகாசம் உள்ளதாகத் தெரிகிறது.இதற்காக பிரேசிலிடம் ஏழு E170 ரக விமானங்களை வாங்கவுள்ளது இந்த நிறுவனம்.சன் டிவி குழுமத்திடம் குளோபல் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் விமான சேவையை இயக்க ஏற்கனவே லைசென்ஸ் உள்ளது. இந்த லைசென்சின் கீழ் சார்ட்டர்ட் விமானங்கள் மற்றும் ஏர் டாக்ஸிகளை சன குழுமம் இயக்க முடியும். வர்த்தகரீதியிலும் விமான சேவையை இயக்க தனது பங்குதாரர்களின் அனுமதியை சன் குழுமம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பெற்றுவிட்டதும் குறிப்பிடத்தக்கது.மேலும் சன் ஏவியேஷன் என்ற பெயரில் விமான நிறுவனத்தை நடத்தவும் ஏற்கனவே கலாநிதி மாறன் பதிவும் செய்து வைத்துள்ளதாகத் தெரிகிறது.முன்னதாக பாரமவுண்ட் ஏர்வேஸ் நிறுவனம் ஸ்டார் ஏவியேஷனை வாங்கவுள்ளதாக செய்திகள் வந்ததும் குறிப்பிடத்தக்கது. ஆனால், அப்படியேதும் நடக்கவில்லை.இதனால் இப்போது கலாநிதி இந்த நிறுவனத்தை வாங்கவுள்ளதாகக் கூறப்படுவதும் கூட ஸ்டார் ஏவியேஷன் உறுதிப்படுத்தினால் மட்டுமே நிச்சயமாகும்.

Friday, November 13, 2009

பதவி விலகலுக்கான காரணங்கள் ! :சரத் பொன்சேக்கா


விடுதலைப் புலிகளுக்கெதிரான யுத்த வெற்றியின் பின்னர் இராணுவத்திற்குள் சூழ்ச்சியொன்றை மேற்கொள்ளப் போவதாக பல்வேறு நிறுவனங்களும், நபர்களும் ஜனாதிபதிக்கு பொய்யான தகவல்களை வழங்கியதை அடுத்து அதுகுறித்து சந்தேகம் கொண்ட ஜனாதிபதியும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் கடந்த காலங்களில் தன்னை வேறுபடுத்தி வந்ததாகவும், இந்த நிலைமையில், ஜனாதிபதி தொடர்பாக நம்பிக்கை இழந்திருப்பதாகக் கூறி, கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேக்கா, இராணுவ சேவையிலிருந்து ஓய்வுபெறும் பதவி விலகல் கடிதத்தை நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதிக்கு அனுப்பியிருந்தார். பதவி விலகலுக்கான காரணங்களைக் குறிப்பிட்டு சரத் பொன்சேக்கா
அனுப்பியிருந்த ஐந்து பக்கங்களைக் கொண்ட கடிதத்தின் பிரதி ஜனாதிபதி செயலகத்திற்கும் கிடைத்துள்ளது. ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த அந்தக் கடிதத்தின் பிரதி எமது இணையத்தளத்திற்கும் கிடைத்தது.


பாதுகாப்பு, மக்கள் பாதுகாப்பு, சட்டம் மற்றும் சமாதானம்தொடர்பான அமைச்சின் செயலாளர் ஊடாகஜனாதிபதிக்கு, ஜனாதிபதி செயலகம்,கொழும்பு2009 நவம்பர் 12,


மேதகு ஜனாதிபதி அவர்களுக்கு,
இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கான வேண்டுகோள்
1. தற்போது கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரியாக பணியாற்றும் ஜெனரல் ஜீ.எஸ்.சீ. பொன்சேக்கா ஆர்.டபிள் யு .பி, ஆர்.எஸ்.பி, வி.எஸ்.வி, யு எஸ்.பி, ஆர்.ஈ.டி.எஸ், பி.எஸ்.சி. ஆகிய நான் 1970ம் ஆண்டு பெப்ரவரி 5ம் திகதி இலங்கை இராணுவத்தில் இணைந்துகொண்டதுடன், 1971ம் ஆண்டு ஜூன் மாதம் 1ம் திகதி அதிகாரி தரத்திற்கு நியமிக்கப்பட்டேன். தனிப்பட்ட ரீதியாகவும் வேறு வழிகளிலும் கடந்த 25 வருட காலம் தீர்விற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது. இரத்தம் சிந்தும் பயங்கரவாதத்தில் நாடு சிக்கியிருந்த சந்தர்ப்பத்தில் என் மீது அதிக நம்பிக்கையும், தெளிவும் இருந்ததனால் 2005ம் ஆண்டு டிசம்பர் 6ம் திகதி நீங்கள் என்னை லெப்டினன் ஜெனரலாக தரம் உயர்த்தி இராணுவத் தளபதியாக நியமித்தீர்கள்.

2. உங்களுக்குத் தெரியும், மூன்று வருடம், ஏழு மாதங்களுக்குள் இராணுவத்தில் நடவடிக்கையின் மூலம் பயங்கரவாத அமைப்பை முழுமையாக கிள்ளியெறிந்து விடுதலைப் புலிகளையும், அதன் தலைமைத்துவத்தையும் தீர்க்கமான வகையில் தோற்கடித்து எண்ணிப் பார்க்க முடியாதளவில் ஆயுதங்களையும் மீட்க முடிந்தது. நீங்கள் வழங்கிய அரசியல் உதவியின் காரணமாக பெற்றுக்கொள்ள முடிந்த இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்காக இராணுவத்தை வழிநடத்தியது நான் எனக் கூறுவதில் தவறில்லை. சிரேஸ்ட கட்டளை அதிகாரிகள், ஏனைய இராணுவ உறுப்பினர்கள் அந்தப் பொது இலக்கை நோக்கிச் செல்ல முனைப்புக்களை மேற்கொண்டாலும் எனது பார்வையும் தலைமையும் காரணமாகவே அந்த நோக்கத்தை நிறைவேற்ற முடிந்தது.

3. நான் மேற்கொண்ட சேவையை நாடும் நீங்களும் வரவேற்றதுடன் இதன் காரணமாக நான் இராணுவ சேவையிலிருந்த போது முதல் முறையாக நான்கு நட்சத்திரங்களைப் பெற்ற ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டேன் என்பதை நன்றியுடன் நினைவுகூறும்போதிலும், இதன் பின்னர் ஏற்பட்ட சம்பவங்கள் நான் மிகவும் தைரியமிழக்க காரணமாக அமைந்தன.

4. இணைப்பில் கூறப்பட்டுள்ள விடயங்களை வெளியிட விருப்பமின்மை காரணமாக எனது விருப்பமின்றியேனும் நம்பவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நீங்கள் மாத்திரமே அறிந்த காரணங்கள் என்பதால் நீங்களும் உங்கள் அரசாங்கமும் என்னில் கொண்ட நம்பிக்கையும், புரிந்துணர்வும் தொடர்ந்தும் காணப்படவில்லை. இதனால், 40 வருட சேவை அனுபவம் கொண்ட சிரே~;ட இராணுவ அதிகாரி என்ற வகையில் தொடர்ந்தும் சேவையில் ஈடுபட, காணப்படும் நிலைமைகள் இடமளிக்காது. இதனால், கௌரவமாக நான் கூறுவது என்னவெனில் 2009 டிசம்பர் 01ம் திகதி அமுலுக்கு வரும் வகையில் இராணுவ சேவையிலிருந்து ஓய்வுபெற அனுமதி வழங்குமாறு கோருகிறேன்.

5. அதேபோல் நான் கௌரவமாக கேட்டுக்கொள்வது என்னவெனில் நான் ஓய்வுபெற்றுச் சென்ற பின்னர் நான் விடுதலைப் புலிகளின் பிரதான இலக்கு என்பதால் அவர்கள் என்னை இலக்கு வைக்கக் கூடிய இயலுமை இன்னும் இருப்பதால் ஆயுதப் பயிற்சிப் பெற்ற படையினர், பொருத்தமான குண்டு துளைக்காத வாகனம், பாதுகாப்பு வாகனம் உள்ளிட்டவை அடங்கிய போதுமான பாதுகாப்பை வழங்குமாறு நான் உங்களிடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் டபிள்ய+.கே.ஜே. கரண்ணாகொடவிற்கு 100 படையினர், பாதுகாப்பு வாகனம், குண்டு துளைக்காத வாகனம் என்பன வழங்கப்பட்டுள்ளதை உங்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். நீங்கள் அறிந்ததுபோல் எனக்கிருக்கும் உயிர் அச்சுறுத்தல் காரணமாக எனக்கும் இவ்வாறான பாதுகாப்பை வழங்குவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.


6. இதற்கு உங்களுக்கு நான் உதாரணமொன்றை சுட்டிக்காட்டுவதானால், 1984ம் ஆண்டு அமிர்தசரசிலுள்ள பொற்கோயிலில் சீக்கியப் பிரிவினைவாதிகளுக்கெதிராக வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட “ப்ளு ஸ்டார் ” இராணுவ நடவடிக்கைகக்கு தலைமை தாங்கிய முன்னாள் இந்திய இராணுவ கூட்டுப் படை அதிகாரி ஜெனரல் ஏ.எஸ்.வார்டியா ஓய்வுபெற்ற பின்னர் அவர் பெற்ற வெற்றி காரணமாக 1986ம் ஆண்டு அவர் பலிதீர்க்கப்பட்டார். விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையினரின் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த நான், அவ்வாறான நிலைமையை எதிர்நோக்க விருப்பமில்லை. இதனால் வாழ்நாள் முழுவதும் எனக்கு பாதுகாப்பு வழங்குவது உங்களுடைய பொறுப்பாகும்.

7. அதேபோல், இராணுவத் தளபதியாக பணியாற்றிய காலத்தில் என்னால் தெரிவிக்கப்பட்ட கருத்தை இங்கு வலியுறுத்த விரும்புகிறேன். அப்போது நான் கூறியதும் பின்னர் நிறைவேற்றிய உறுதிமொழியானது நான் தொடர்ந்தும் இராணுவத் தலைமைப் பதவியில் இருப்பதற்கு விருப்பமில்லை என்பதாகும். அத்துடன், எனது ஓய்வுபெறும் காலம் நான்கு வருடங்களாக தாமதித்துவருவது என்பதால் தொடர்ந்தும் தாமதிக்காது நான் ஓய்வுபெற விரும்புகிறேன்.

உங்களது தாழ்மையான பரிசீலினைக்காக ,

கௌரவமான முறையில் உங்களின் கீழ் பணியாற்றியஜி.எஸ்.சி. பொன்சேக்கா ஆர்.டபிள்ய+.பி, ஆர்.எஸ்.பி, வி.எஸ்.வி, ய+.எஸ்.பி, ஆர்.ஈ.டி.எஸ், பி.எஸ்.சி.ஜெனரல்கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி
இரகசியமானது
இணைப்பு – அ2009 நவம்பர் 12


இராணுவத்திலிருந்து ஓய்வுபெற காரணமாக அமைந்த விடயங்கள்

1. இராணுவத்தின் 60வது ஆண்டு நிறைவு கொண்டாடப்படும் வரை இராணுவத் தளபதியாக கடமையாற்ற வேண்டும் என நான் விடுத்த வேண்டுகோளை கவனத்தில் கொள்ளாது சூழ்ச்சியொன்று ஏற்படலாம் என பல சக்திகள் உங்களை தவறாக வழிநடத்தியதன் காரணமாக விடுதலைப் புலிகளுக்கெதிரான யுத்தத்தை வெற்றிகொண்டவுடனேயே இராணுவத் தளபதி பதவியில் மாற்றத்தை மேற்கொண்டது. சூழ்ச்சி தொடர்பான அச்சம் பற்றி இராணுவத்தினர் நன்று அறிந்தவிடயமாகும்.
2. யாழ்ப்பாணத்தின் கட்டளை அதிகாரியாக மூன்று வருடங்கள் முன்னுதாரணமாக சேவையாற்றிய அப்போது கூட்டுப் படை தலைமை அதிகாரியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறியை எனக்குப் பின்னர் இராணுவத் தளபதியாக நியமிக்குமாறு நான் செய்த பரிந்துரையைக் கவனத்தில் கொள்ளாது ஹோல்டிங் ப்ரோமசன் கட்டளை அதிகாரியாக மாத்திரம் இறுதிப் போரில் கடமையாற்றிய, ஒழுக்காற்று விசாரணையை எதிர்நோக்கவிருந்த அதிகாரியொருவரை எனக்கு அடுத்ததாக நியமித்தமை.
3. இராணுவத் தளபதி என்ற பதவி மிகவும் சிரேஸ்ட பதவியென்ற போதிலும் சாதாரண மக்களையும், இராணுவ உறுப்பினர்களில் அதிகளவானவர்களையும் தவறாக வழிநடத்தக் கூடிய சிறிய இணைப்புப் பொறுப்புக்களைத் தவிர வேறு அதிகாரங்கள் அற்ற பாதுகாப்புக் கூட்டுப் படைத் தலைமை அதிகாரியாக நியமித்தமை, போரை முன்னெடுத்த இராணுவ உறுப்பினர்களுக்கு சிறந்த நிர்வாகக் கட்டமைப்பையும், அவர்களின் நலன்புரி நடவடிக்கைகளை உரிய நிலைக்குக் கொண்டு வருவதற்காகவும் எனது கடமைகளை நிறைவேற்ற சந்தர்ப்பமளிக்காது, இராணுவப் பதவியிலிருந்து விலகுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் யுத்த வெற்றியின் பின்னர் இரண்டு வாரங்களில் அழுத்தம் கொடுத்தமை, மற்றும் இரண்டு மாதங்களுக்குள் எனது பதவியின் அதிகாரங்களை கையளிக்குமாறு நீங்கள் மேற்கொண்ட அழுத்தங்கள்,
4. அதுமாத்திரமல்லாது, எனது நியமனம் வழங்கப்பட முன்னர் பாதுகாப்புக் கூட்டுப் படைத் தலைமை அதிகாரிக்குள்ள அதிகாரங்கள் தொடர்பில் நான் தவறாக வழிநடத்தப்பட்டேன். முன்னர் இருந்த அதிகாரங்களைவிட அந்தப் பதவிக்கு, அதிகளவான அதிகாரங்கள் வழங்கப்படும் என என்னிடம் கூறப்பட்ட போதிலும், எனது நியமனத்தின் பின்னர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் சூட்சும விவகார ஆலோசகரினால் எழுத்தப்பட்ட கடிதத்தில், எனது நியமனமானது படையினருக்கிடையில் இணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவே அன்றி அனைத்துப் படைகளுக்கும் தலைமைத்துவம் வழங்க அல்ல எனத் தெரிவித்திருந்தார். நீங்கள் அறிந்துகொள்ளும் வகையில் அந்தக் கடிதத்தை இதனோடு இணைந்து அனுப்பியிருக்கிறேன். இந்த நடவடிக்கைகளின் மூலம் இராணுவத் தலைமைத்துவத்தின் அதிகாரங்களை எனக்கு வழங்க நீங்களும், அரசாங்கமும் விருப்பமில்லை என்பதுடன், என்னைக் குறித்த அவநம்பிக்கைக் கொண்டுள்ளமையும் தெளிவாகியுள்ளது. யுத்த வெற்றியைப் பெற்றுக்கொள்ள மேற்கொண்ட சேவையைக் கருத்திற்கொள்ளும் போது இவ்வாறான நிலைமை மிகவும் அதைரியத்தை ஏற்படுத்த ஏதுவாக அமைந்தது.
5. அதேவேளை, பின்னர் நடைபெற்ற பாதுகாப்புத் தலைமை அதிகாரிகளின் கூட்டத்தில் உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஒழுக்கமற்ற வகையில் அநாவசியமான கருத்தொன்றை வெளியிட்டிருந்தார். முப்படைகளையும் செயற்படுத்தும் அதிகாரம், கூட்டுப் படைத் தலைமை அதிகாரிக்கு வழங்கினால் அது மிகவும் ஆபத்தானதாக இருக்குமென எனக்குக் கீழ் பணியாற்றும் இராணுவ அதிகாரிகளின் முன் தெரிவிக்கப்பட்ட இந்தக் கருத்தினால் நான் மிகவும் அசௌகரியத்திற்குள்ளானேன்.
6. யுத்தம் முடிவடைந்து விட்டதாக 2009 மே மாதம் 18ம் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற முதலாவது பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் உரையாற்றிய நீங்கள், தொடர்ந்தும் இராணுவத்தினரைப் படையில் இணைப்பது அநாவசியமானது எனவும், தேவைக்கதிகமான பலத்தைக் கொண்ட இராணுவமொன்று இருப்பதாக மக்கள் மத்தியில் கருத்தொன்று நிலவுவதாகவும் கூறினீர்கள். யுத்த வெற்றி சம்பந்தமாக தனது பாராட்டுக்களை தொடர்ந்தும் கூறிவந்த உங்களின் வாயால் இவ்வாறான கருத்து வெளியிடப்பட்டமை ஆச்சரியத்திற்குரிய விடயமாகும். பெற்றுக்கொள்ள முடியாது எனக் கூறிய வெற்றியை இரண்டு வாரங்களுக்கு முன்னர் பெற்றுக்கொண்ட இராணுவத்தை பக்கசார்பான இராணுவம் என நீங்கள் ஏற்றுக்கொண்டிருப்பதை நான் தனிப்பட்ட ரீதியில் உணர்ந்துகொண்டேன். நான் இராணுவத்தின் அதிகாரங்களிலிருந்து விலகிய பின்னரும் நீங்கள் மீண்டும் அந்தக் கருத்தை வெளியிட்டிருந்தீர்கள். இந்த அறிக்கையானது என்னை மிகவும் அருவருப்பிற்குள்ளாக்கிய விடயமாகியது. இது யுத்தத்தில் உயிர்த் தியாகம் செய்த இராணுவத்தினருக்குச் செய்யும் அவமதிப்பு எனக் கூறவேண்டும்.
7. தற்போதைய இராணுவத் தளபதி தான் பதவியேற்றுக்கொண்ட பின்னர் எனது பணிக் காலத்தில் யுத்தத்திற்காக பாரிய பங்களிப்புக்களை வழங்கிய சிரே ட இராணுவ அதிகாரிகளை இடமாற்றும் நடவடிக்கைகளையே உடனடியாக ஆரம்பித்தார். இராணுவத்தின் சேவா வணிதா பிரிவின் எனது மனைவியுடன் பணியாற்றிய கனிஸ்ட ஊழியர்கள்கூட இடமாற்றப்பட்டனர். இதன்மூலம் அதிகாரிகள் பக்கசார்பாக சவாலுக்கு உட்படுத்துவதும், எனது பலம் சம்பந்தமாக தவறான தகவலை இராணுவத்தினருக்கு வழங்கி அவர்களை அதைரியத்திற்கு உட்படுத்தும் முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது என்பதே இதன்மூலம் தெளிவாகியது.
8. தேசத்திற்காக வெற்றியைப் பெற்றுக்கொடுத்த இராணுவம், சூழ்ச்சியில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாக நீங்கள் சந்தேகித்து 2009 ஒக்டோபர் 15ம் திகதி இந்திய அரசாங்கத்தை உசhராக இருக்குமாறு எச்சரிக்கை அறிவிப்பு விடுத்து இராணுவத்தினரை உசார் நிலையில் வைக்க நடவடிக்கை எடுத்தமையானது மிகவும் மனவருத்தத்தை அளித்தது. பயங்கரவாதக் குழுவொன்றைத் தோற்கடிக்க முடிந்த திறமையானதும், தொழில்ரீதியான இலங்கை இராணுவத்தின் தோற்றமும், நற்பெயரும் இதன்மூலம் உலக இராணுவத்தினரால் குறைத்து மதிப்பிடப்பட்டது. வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை நோக்கி கொண்டுசெல்ல தலைமை வழங்கிய எனக்கு, இராணுவத்திற்குள் இருக்கும் சார்பு நிலை இந்த சந்தேகத்திற்கு காரணமாக இருக்கலாம்.
9. வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொள்வதற்காக விடுமுறைப் பெற்று கடந்த ஒக்டோபர் 23ம் திகதி முதல் நவம்பர் 5ம் திகதி வரை நான் நாட்டிலிருந்து வெளியேறியிருந்த காலப்பகுதியில் இராணுவத் தலைமையகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் பிரதான நுழைவாயில்களுக்கு அருகில் பணியில் அமர்த்தப்பட்டிருந்த எனக்குரிய சிங்கப் படைப் பிரிவின் படையினர் நீக்கப்பட்டு, மற்றுமொரு படைப் பிரிவின் படையினர் பணியில் அமர்த்தப்படுமளவிற்கு அச்சமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பிற்காக நான்கு வருட காலமாக பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த சிங்கப் படைப் பிரிவின் படையினரின் திறமையானது பாதுகாப்புச் செயலாளரின் கருத்திற்கமைய ஒரு இரவிற்குள் குறைந்தமையானது ஆச்சரியத்தை ஏற்படுத்தும் சம்பவமாகும். இராணுவத் தலைமையகத்தின் பிரதான நுழைவாயிலில் வாகனங்களை சோதனையிடும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த சிங்கப் படைப் பிரிவின் போர்ப் பயிற்சி பெறாத நான்கு பேருக்குப் பதிலாக இராணுவப் பயிற்சிகளைப் பெற்ற 14 படையினர் ஈடுபடுத்தப்பட்டமை சிங்கப் படைப் பிரிவின் பயிற்சிப் பெறாத இராணுவ சிப்பாய்கள் நால்வரின் பணிகளுக்கு இடைய+று ஏற்படுத்தி, இரண்டு இராணுவ அணிகளை பணியில் அமர்த்தியதன் மூலம் சில வெளிநாட்டுத் தூதரகத் தரப்பினரையும், மக்களையும் குழப்பத்திற்குள்ளாகியமை.
10. பாதுகாப்புச் செயலாளரின் ஆலோசனையின்படி கஜபா படைப் பிரிவின் படையினர் பாதுகாப்பு அமைச்சின் கட்டிடத்தில் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டதன் மூலம் இராணுவத்தினருக்கிடையில் பக்கசார்பு நிலை ஏற்பட்டு அவர்கள் பிரிந்துசெல்லும் நிலைமையை ஏற்படுத்தி, இராணுவம் அரசியல் மயப்படுத்தப்பட்டிருப்பதாக நம்பிக்கையை உருவாக்கி, ஆயுதம் தாங்கிய ஆயுதப் படைப்பிரிவினர், சிங்கப் படைப் பிரிவினரை மீறிச் செல்ல வேண்டும் என நம்பிக்கைக் கொண்டுள்ள தற்போதைய இராணுவத் தளபதி இதற்கு உறுதுணை வழங்கி வருகிறார்.
11. எமது தேசத்தின் வரலாற்றை மாற்றுவதற்காக அரசாங்கத்திற்கு நான் வழங்கிய தனிப்பட்ட பங்களிப்புக்களைக் கருத்திற்கொள்ளாது நான் தேசத் துரோகி என அடையாளப்படுத்த அரசாங்கத்திலுள்ள சிரேஸ்ட அரசியல்வாதிகள், ஏனைய தரப்பின் ஊடாக இழிவுபடுத்தும் வகையில் செய்திகளை வெளியிட்டு, வதந்திகளுக்கு இடமளித்தமை,
12. நான் வெளிநாட்டில் இருந்த காலத்தில், எனது பணிக்காக பதில் அதிகாரி மற்றும் பதில் கூட்டுப் படைத் தலைமை அதிகாரியொருவரை நியமிக்கப்படவில்லை. இதன்மூலம் மிகவும் பேசப்பட்டதும், பலர் கூறுவது போல் அது மிகவும் முக்கியமான பதவியெனில் அந்தப் பதவிக்காக பதில் அதிகாரியொருவரை நியமிக்காததன் மூலம் என்னால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற சகல சேவைகளையும் கருத்திற்கொள்ளாது முக்கியமற்ற பதவியை எனக்கு வழங்கியிருப்பதையே உணர்த்தியது.
13. சாதாரண நிலையிலிருந்து தொழில்ரீதியாக உயர் நிலைக்குக் கொண்டுவர நான் மிகவும் சிரமப்பட்டு பணியாற்றிய இராணுவம் தற்போது கைவிடப்பட்டிருப்பது கவலைக்குரியது என்பதை உணரமுடிகிறது.
14. யுத்தத்தில் இடம்பெயர்ந்த மக்களின் தற்போதைய நிலைமையும் எனக்கு அதிருப்தியை ஏற்படுத்திய விடயமாகியது. அவர்கள் சுதந்திரமாகவும் ஜனநாயகமாகவும் வாழக்கூடிய வகையில் விடுதலைப் புலிகளின் கொடூரத்திலிருந்து அவர்களை மீட்பதற்காக ஆயிரக்கணக்கான படையினர் தமது உயிர்களைத் தியாகம் செய்தனர். எனினும், தற்போது அவர்களில் பலர் மிகவும் பாரதூரமான நிலைமையின் கீழ் வாழ்ந்து வருகின்றனர். அரசாங்கத்திடம் உரிய திட்டமிடல் இல்லாததன் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. தமது பிரதேசங்களில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகள் உரிய முறையில் அகற்றப்படும் வரை இடம்பெயர்ந்தவர்களை நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள நண்பர்கள், உறவினர்களுடன் வாழ அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்.
15. எனது தலைமையின் கீழ் யுத்தம் வெற்றிகொள்ளப்பட்டாலும் உங்களது அரசாங்கத்தினால் இதுவரை சமாதானத்தை வெற்றிகொள்ள முடியவில்லை. தமிழ் மக்களின் மனதை வெல்ல தெளிவான கொள்கை இல்லாததன் காரணமாக, பெறப்பட்ட வெற்றி அழிந்துபோவதுடன் எதிர்காலத்தில் மற்றுமொரு எழுச்சி ஏற்படக் கூடிய நிலைமை உருவாகியுள்ளது.
16. யுத்தத்தின் இறுதியில் முழு நாடும் எதிர்பார்த்த சமாதானத்தின் பிரதிபலன்கள் இன்னும் கிடைக்கவில்லை. மக்கள் எதிர்நோக்கியிருக்கும் பொருளாதாரக் கஸ் டங்கள் அதிகரித்துள்ளதுடன், வீண் விரையமும், ஊழல் மோசடிகளும் அதிகரித்துள்ளன. ஊடகச் சுதந்திரமும் ஏனைய ஜனநாயக உரிமைகளும் அடக்கப்பட்டு வருகின்றன. எமது தாய் மண்ணில் சமாதானமும் அபிவிருத்தியும் கொண்ட புதிய யுகத்தை உருவாக்க எம்மால் முடியுமானால் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட பல அர்ப்பணிப்புக்கள் வீண் போகாது.




Pranab to discuss Fonseka and other issues with Lanka during visit

India’s Union Finance Minister Pranab Mukherjee, is due in the country tomorrow. He is expected to discuss the resignation of General Sarath Fonseka, alleged attack on fisherman by the Lankan Navy and resettlement of IDPs, India’ News Today reported.

ராஜபக்சே அதிரடி:பொன்சேகாவின் உறவினர்கள் பணிநீக்கம்

இலங்கை இறுதிப் போரில் வெற்றிகரமாகச் செயல்பட்டதற்காக சரத் பொன்சேகாவுக்கு முப்படைத் தளபதி என்கிற புதிய பதவி வழங்கப்பட்டது.
போர்க்குற்றங்கள் குறித்து அவரிடம் அமெரிக்கா விசாரிக்கப் போவதாகச் செய்தி வெளியானது. இலங்கை அதிபர் ராஜபட்சவின் தம்பியும் பாதுகாப்புச் செயலருமான கோத்தபய ராஜபட்சவுக்கு எதிரான ஆதாரங்களை பொன்சேகாவிடம் அமெரிக்கா கோரியதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், இலங்கை திரும்பிய பொன்சேகா, அதிபர் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்துள்ளார். அதனால் தனது பதவியை நேற்று ராஜிநாமா செய்திருக்கிறார்.
இந்த ராஜிநாமா ஏற்கப்பட்டதும் படைப்பிரிவுகளில் பணியாற்றும் அவரது உறவினர்கள் பதவியில் இருந்து முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளார்கள் என்று இலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.

திரைக்கூத்து!

விழா நாட்களில்தான் பெரிய ஹீரோக்களின் படங்களை ரிலீஸ் செய்ய வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம் போட்டிருக்கிறது. ஆனால் விஜய்யின் "வேட்டைக்காரன்' படத்தை டிசம்பர் 18-ல் ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கிறது சன் பிக்சர்ஸ். இதனால் சினிமா வட்டாரங் களில் முணுமுணுப்பும், பரபரப்பும் ஏற் பட்டிருக்கிறது.

பிரபுதேவா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படத்தில் நயன்தாரா ஜோடியாக நடிப்பதாக இருந்தது. இதில் ரவி தரப்பிற்கு உடன்பாடில்லையாம். இதனால் கமல் மகள் ஸ்ருதியை ஒப்பந்தம் செய்யும் வேலைகளில் தீவிர மாக இருக்கிறார் பிரபுதேவா. தனது பாலிவுட் அறிமுகப் படம் ‘"லக்' அதிர்ஷ்டத்தை தராததால் இசையின் மீது கவனம் செலுத்த முடிவு செய்திருந்தார் ஸ்ருதி.ஆனால் பெரிய சம்பளம் கொடுத்து தெலுங்கு படம் ஒன்றில் சித்தார்த் ஜோடியாக ஒப்பந்தம் செய்துவிட்டார்கள். தெலுங்கில் நடிக்க தயாராகிவிட்ட ஸ்ருதி தமிழை தள்ளிவைப்பாரா என்ன? அதிலும் பிரபுதேவா இயக்கம் என்பதால் ஸ்ருதியும் ஆர்வம் காட்டு கிறாராம்.

கைவசம் சரியான வாய்ப்பில்லாமல் இருந்த பூனம்பாஜ்வாவை தனது ‘"கச்சேரி ஆரம்பம்' படத்தில் ஜோடியாக்கிய ஜீவா, தனது "சிங்கம் புலி' படத்திலும் ஜோடியாக்கியிருக்கிறார்.‘என்ன சங்கதி?... என கேட்டால் "கதைக்கு பொருத்தமாக இருந்ததால் டைரக்டர்கள் பூனம்பாஜ்வாவை தேர்வு செய்திருக்காங்க. இதில் என்னோட கைங்கர்யம் ஏதுமில்லை' என்கிறார். அடடே... நல்ல கதையா இருக்கே?!

ஹீரோக்களுக்கு நயன் மீதான மோகம் குறைந்துகொண்டே வர.... டைரக்டர்களுக்கு நயன் மீதான மோகம் அதிகரிக்கிறதோ என்னவோ?வெங்கட்பிரபு, தான் இயக்கிவரும் "கோவா' படத்தில் ஒரு குத்துப்பாட்டுக்கு நயனை ஆடவைத்தே தீரவேண்டும் என அடம் பிடித்து வருகிறாராம்.

வடிவேலுவின் காமெடி கூட்டணியில் இருந்த சிலருக்கும் வடிவேலுவுக்கும் சில மனஸ்தாபங்கள். இதனால் கூட்டணியில் இருந்தவர்கள் விவேக்கிடம் போனார்கள். ஆனால் அங்கு வரவேற்பு இல்லை. இதையடுத்து சந்தானத்திடம் ஜாய்ண்ட் ஆகியிருக்காங்க.

அடுத்த ரவுண்ட்டில் களமிறங்கியிருக்கும் சுவா நடிகை ஒரு படவிழாவிற்கு கண்கூசும் விதமாக துணி(!) உடுத்தி வந்திருந்தார். அது ஒரு பத்திரிகையில் பளிச்சென வந்துவிட்டது. கல்யாண பேச்சுகள் நடந்துகொண்டி ருக்கும் நேரத்தில் இந்த போட்டோ பிரசுரமானது நடிகையை சங்கடப்படுத்திவிட்டது. அந்த புகைப்படக்காரருக்கு போன் போட்ட நடிகை, "என்னாண்ணா இப்புடி போட்டோ புடுச்சு போட்ருக்கீங்க?' என வருத்தப்பட.... "அப்புறம் ஏம்மா இப்படி ட்ரெஸ் பண்ணீட்டு வந்தீங்க?' என போட்டோ பார்ட்டி கேட்டிருக்கிறார். "இந்த மாதிரி விழாக்களில் தயாரிப்பாளர், டைரக்டர், நடிகர்கள் வருவாங்க. அவங்க கண்ல கிளாமரா தட்டுப்பட்டா எதாவது சான்ஸ் கிடைக்குமே... அதான்! மத்தபடி பொது இடத்துல இப்புடி வரணும்னு ஆசையா என்ன?’’ -என பாவமாக பதில் சொன்னாராம்.

தலைமை நீதிபதி தினகரனுக்கு ஆதரவும்...!

கர்நாடக உயர்நீதி மன்றம் ஒரு போர்க்களம் போல நவம்பர் 9-ந் தேதி மாறியது. தலைமை நீதிபதி பி.டி.தினகரனுக்கு எதிராக கோர்ட் புறக்கணிப்பு போராட்டம் நடத்திய வழக்கறிஞர்களின் ஒரு தரப்பு, கோர்ட் ஹாலுக்குள் நுழைந்து பணிகள் நடக்கவிடாமல் தடுக்க, இதுகுறித்து கேள்வி கேட்ட சக வழக்கறிஞர்களுக்கு சரமாரியாக அடி விழுந்தது. தலைமை நீதிபதி உட்படபெண்நிருபர், டி.வி. கேமராமேன் என ஊடகக்காரர்களும் இந்தத் தாக்குதலுக்குத் தப்பவில்லை.உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்ட கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான நீதிபதி தினகரன் மீது நில ஆக்கிரமிப்பு புகார் எழுந்ததையடுத்து, அவரது பதவி உயர்வு நிறுத்திவைக்கப்பட்டது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் சக நீதிபதிகளும் அடங்கிய கொலீஜியத்தில் இதுகுறித்து விசாரணை நடைபெற்றது. இந்தப் பிரச்சினை தொடர்பாக, கர்நாடக வழக்கறிஞர்கள் போராட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில் சி.பி.எம்மின் நிலமீட்பு போராட்டம் என நிலைமை தீவிரமாகியுள்ளது.தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கும் நீதிபதி தினகரன், ""எனக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உச்சநீதிமன்றத் தலைமைநீதிபதி நியமித்துள்ள குழு முன் உள்ளது. அந்த குழு முன் என் மீதுள்ள புகாரில் உண்மையில்லை என்பதற்கான ஆதாரங்களைக் கொடுத்துள்ளேன்.அந்த நிலமெல்லாம் அனாதீன நிலம். புகார் பற்றி அந்த குழுதான் முடிவெடுக்கணும். அதேநேரத்தில், நீதிமன்றப் பணிகளை மேற்கொள்வது அரசியல் சட்டம் எனக்களித்துள்ள கடமை. அதைத்தான் நான் மேற்கொள்கிறேன்.வழக்கறிஞர்களே எனது பாதுகாப்புக்கு வராவிட்டால் நான் எங்கே செல்வது? நான் என்ன பாவம் செய்தேன்'' என தன் பக்க நியாயத்தை முன் வைக்கிறார்.நீதிபதியை சுழன்றடிக்கும் புகார்ப் புயல் குறித்த விவரங்களை அறிவதற்காக, அவரது நிலங்கள் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டம் காவேரிராஜபுரத்திற்கு நேரில் சென்றோம். தொண்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் ஏகாம்பரம், ""ஜட்ஜ் எங்க தலித் சமூகத்தவர்தான். ஆனா, எங்களை அடிமையா வச்சிருந்த நாயுடு- கொண்டா ரெட்டி சமுதாயத்தினர்தான் அவ ருக்கு நண்பர்கள். எங்க ஊர்த் தலைவரா இருந்த சென்சய நாயுடு, சுப்ராயலு நாயுடு இவங்கதான் ஜட்ஜூக்கு நிலம் வாங்கிக் கொடுத்தாங்க. அந்த நிலத்துக்கு பக்கத்திலே உள்ள ஏரிகளில்தான் எங்க தலித் மக்கள் ஆடு,மாடு மேய்ப்பாங்க. அதுக்குப்போற வழியை வேலி போட்டு அடைச்சதோடு, ஏரியையும் தன்னோட இடமா மாத்திக்கிட்டாரு. ஆடு, மாடு மேய்க்கப் போனவங்க மேலே போலீஸை வச்சு பொய்க் கேசும் போட்டாரு. இத்தனை காலமா அவருக் குப் பயந்துகிட்டிருந் தோம். இப்ப நிறைய பேர் போராட முன் வந்ததால, நில மீட்பு குழு சார்பா 400 பேர் கலெக்டர்கிட்டே போய் மனு கொடுத்தோம்'' என்றார்.""தலித் சமுதாயத் தைச் சேர்ந்த நீதிபதிக்கு எதிராக சதித்திட்டம் நடப்பதாக சொல்லப்படும் நிலையில் தலித் மக்களே அவருக்கு எதிராகப் பேசுகிறீர்களே'' என கேட்டதற்கு, தலித் காலனியை சேர்ந்த பஸ் கண்டக்டரான ஜெயபால், ""இந்த கிராமத்தில் தீண்டாமைக் கொடுமை தலைவிரிச்சு ஆடிச்சின்னா அதுக்கு காரணம் நாயுடுகளும் கொண்டா ரெட்டிகளும்தான். அவங்ககூட ஜட்ஜ் சேர்ந்துகிட்டார். அவர் எங்க ஆளாகவே இருந்திருந்தா புறம்போக்கு நிலங்களை வளைச்சிருக்க மாட்டார்'' என்றார் அழுத்தமாக. ""நிலத்தை மீட்டே தீருவோம்'' என்றார் ராமன் என்பவர்.நீதிபதியின் நிலத்தை மீட்க சி.பி.எம் ஆதரவில் நில மீட்புக்குழு தீவிர போராட்டங்களை மேற்கொள்ள, முள்வேலிகளை அகற்றியது நீதிபதி தரப்பு. தொடர்ந்து நீடித்துவரும் இந்தப் பிரச்சினை தொடர்பாக காவேரிராஜபுரம் வி.ஏ.ஓ.கோவிந்தசாமி நம்மிடம், ""சுப்ரீம் கோர்ட் செகரட்டரி ஜெனரல் பத்ரன் உத்தர வுப்படி நீதிபதி தினகரனின் சொத்துகள் பற்றிய ரிப்போர்ட்டை எங்க கலெக்டர் பழனிகுமார் ரெடி பண்ணி அனுப்பினார். அதற்கான டேட்டாக்களை எங்க ரெவின்யூ துறைதான் கலெக்ட் செய்தது. எங்க கணக்கெடுப்பில் 199 ஏக்கர் 53 சென்ட் புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. இதுபோக அவர் பெயரிலும் அவர் மனைவி பெயரிலும் உள்ள நிலங்களையும் கணக்கிட்டதில் பட்டா நிலம் 250 ஏக்கர். புறம்போக்கு 199.53 ஏக்கர். எல்லாவற்றுக்கும் முள்வேலி போட்டிருந்தார்'' என்றார் புள்ளிவிவரமாக. நிலத்தைக் கணக் கெடுப்பு செய்யச் சென்றபோது போனில் தன்னை நீதிபதி மிரட்டியதாகச் சொல்லும் தாசில்தார் விஜயராகவலு, இது பற்றி கண்ணம்மாசத்திரம் போலீசில் புகார் கொடுத்திருக்கிறேன்'' என்றார்.நிலம் தொடர்பான புகார்களை நீதிபதி தரப்போ திட்டவட்டமாக மறுக்கிறது. தினகரனின் மனைவி வினோதினி, தமிழக அரசின் வருவாய்த்துறைச் செயலாளருக்கு அனுப்பியிருக்கும் விளக்கத்தில் பல விவரங்களைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.புறம்போக்கு நிலத்தை வளைத்திருந்தால், அதனை ஆக்கிரமிப்பு என ரெகார்டுகளில் பதிவுசெய்து, எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்க வேண்டும். அப்படி எந்தப் பதிவும் இல்லை. எங்களுக்கு நோட்டீசும் அனுப்பப்படவில்லை. இ-மெமோ கொடுத்து, இவ்வளவு தண்டத் தொகை கட்ட வேண்டும் என உத்தரவிடப்படும். அதுவும் இதுவரை செய்யப்படவில்லை. இப்போது கலெக்டர் அறிக்கை அனுப்பியபிறகுதான், அடங்கல் ரிப்போர்ட்டில் நிலம் வளைப்பு எனப் பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால், இந்த நிலத்துக்குச் சொந்தமானவர்கள் என 18 பேர் மீதான பட்டா கேன்சல் ஆகவில்லை. அப்புறம் எப்படி இது புறம்போக்கு நிலம் என்கி றார்கள்? ஏரிகளை நாங்கள் வளைத்துவிட்டதாகவும் ரிப்போர்ட் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், அந்த ஏரிகளில் போன வருடம்கூட மீன் ஏலம் நடத்தியிருக்கிறார்கள். ஏரியை சுற்றியுள்ள மரங்களும் ஏலம்விடப்பட்டுள்ளன.நாங்கள் வளைத்திருந்தால் ஏலம் எப்படி நடந்திருக்கும்? வாய்க்கால்-வண்டிப்பாதை ஆக்கிரமிப்பு என்பதும் இப்படிப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுதான். அவற்றின் இரண்டுபக்கமும் இருப்பது எங்கள் நிலம் என்பதால் பொது வான வேலி அமைத்திருந்தோம் கலெக்டர் அனுப்பிய ரிப்போர்ட் அப்பட்டமான பொய் என நீதிபதியின் மனைவி சுட்டிக் காட்டியிருக்கிறார்.நீதிபதிக்கும் குடும்பத்தாருக்கும் சொந்தமானநிலங்களை மீட்டு, 2 ஏக்கர் இலவச நிலம் திட்டத்தின்கீழ் இதனை இப்பகுதி தலித் மக்களுக்கு வழங்கவேண்டும் என 9ந் தேதி போராட்டம் நடத்திய சி.பி.எம் தரப்பில் 306பேர் கைது செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்டுள்ளனர். சுப்ரீம் கோர்ட் தலையிட்டுள்ள விவகாரம் என்பதால் தமிழக அரசு இந்த நில விவகாரத்தில் உண்மைத் தகவல்களின் அடிப்படையில் செயல்படுவதில் கவனமாக இருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டுக்கு திருவள்ளூர் கலெக்டர் ரிப்போர்ட் அனுப்பும்போதே, தவறான தகவல் எதுவும் இடம்பெற்றுவிடக் கூடாது. நியாய மான விசாரணை நடத்தி ரிப்போர்ட் கொடுங்கள் என கலெக்டரிடம் தெரிவித்திருக் கிறார் தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி. நீதிபதி மனைவி அளித்துள்ள விளக்கத்தின் பேரிலும் உண்மையை அறிய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதில் உறுதியாக இருக்கிறோம் என்கிறது அரசு வட்டாரம்.அதேநேரத்தில், இந்த நில விவகாரத்தை வைத்து அரசுக்கு சி.பி.எம். கொடுக்கும் நெருக்கடியை கலைஞர் விரும்பவில்லை. சிறுதாவூரில் ஜெ. ஆக்கிரமித்துள்ள தலித் நிலத்தை மீட்க போராட்டம் நடத்தாத சி.பி.எம், நீதிபதி தினகரன் விவகாரத்தில் மட்டும் வேகம் காட்டுவது ஏன் என அறிக்கை வெளியிட, அதற்கு சி.பி.எம் தரப்பில் பதில் தரப்பட, இந்த விவகாரத்தில் அரசியல் உஷ்ணம் அதிகமாகியுள்ளது. தினகரன் வளைத்திருப்பது தலித் நிலம் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் போராட்டங்கள் தீவிரமடைய, இது எங்கள் மூதாதையர் நிலம் என கொண்டா ரெட்டி தரப்பினர் கோர்ட்டுக்குச் சென்றுள்ளனர்.நாங்க வரி கட்டாமல் இருந்துவிட்டோம். ஆனா, பட்டா எங்க பெயரில்தான் இருக்குது. நிலத்துக்கு வரி எவ்வளவுன்னு போன வருட ரிஜிஸ்டரிலும் பதிவாகியிருக்குது. அந்த நிலத்தை எங்களுக்குத் தான் தரணும் என வழக்குத் தொடர்ந்துள்ளனர் கொண்டா ரெட்டி தரப்பினர். புதிய திருப்பங்களையும் தொடர் சர்ச்சைகளையும் எதிர் கொண்டுவரும் இந்த விவகாரத்தில் நீதிபதி தினகரனுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள வக்கீல் யானை ராஜேந்திரன் நம்மிடம், ""ஒரு தலித் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகிவிடக்கூடாது என இங்குள்ள பிராமின் லாபி செயல்படுகிறது. அதுபோல ஒரு தென்னாட்டவர் நீதிபதியாவதை வடஇந்திய லாபியும் விரும்பவில்லை. அதனால்தான் நீதிபதி மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர். கலெக்டரின் அறிக்கை தவறு என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியிடம் மனு கொடுத்திருக்கிறேன். நான் கொடுத்த சில விவரங்களைத் தொடர்ந்துதான் மத்திய அரசின் கீழ் உள்ள சர்வே ஆஃப் இந்தியா மூலமாக ஆய்வு நடத்தி உண்மை விவரங்களை தரச்சொல்லியிருக்கிறார் தலைமை நீதிபதி'' என்றார். கர்நாடக உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சிலர் நீதிபதி தினகரனுக்கு எதிராக போராட்டம் நடத்திய நிலையில், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் நீதிபதிக்கு ஆதரவான போராட்டத்திற்கு ஆயத்தமாகி வருகின்றனர். புயல் சின்னம் லட்சத்தீவிற்குச் சென்றபிறகும் தமிழகத்தில் மழை ஓயாமல் பெய்வதுபோல, நீதிபதி தினகரன் விவகாரமும் இப்போதைக்கு ஓய்வதாகத் தெரியவில்லை.

விவசாயத்துக்கு பிராந்தி!

குடிமகன்களுக்குப் போட்டியாக டாஸ்மாக் கடை வாசலில்.... தற்போது குடிப்பழக்கம் இல்லாத விவசாயிகளும் போட்டிபோட்டுக்கொண்டு வரிசை கட்டி நிற்கிறார்கள். விவசாயிகளை டாஸ்மாக் பக்கம் இழுப்பது எது?யாரோ ஒரு நாட்டு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு விவசாய டெக்னிக்தான்... அவர்களை பாட்டிலும் கையுமாக டாஸ்மாக்கையும் வயற்காட்டையும் சுற்றிவர வைக்கிறது. திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம் போன்ற பகுதிகளில் இந்த வினோதக் கூத்துக்களை அதிகமாய்ப் பார்த்து வியந்தோம்..""என்னண்ணே... கடைப்பக்கம் உங்களைப் பார்த்த மாதிரி இருக்கு?''’’ என கணக்கம்பட்டி விவசாயி லட்சுமணனின் வாயை நாம் கிளறியபோது... ""ஆமா தம்பி... விவசாயத்துக்காக சரக்கு வாங்கப்போயிருந்தேன். விவசாயத்துக்கு சரக்கான்னு ஆச்சரியப்படாதீங்க. நானும் ஆரம்பத்தில் இப்படி ஆச்சரியப்பட்டவந்தான். எங்க விவசாயப் பயிர்களைப் பூச்சிகள் அதிகமா நாசமாக்குச்சு. இதுக்காக வழக்கமா நாங்க வாங்கி அடிக்கும்... எண்டோசெல்பான், மிடா, அசிலி, மாலதியான் போன்ற மருந்துகளுக்கு இப்ப பூச்சிகள் கட்டுப்படறது இல்லை. போனமாசம் கோயமுத்தூருக்குப் போனப்ப... அங்க இருக்கும் விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்துகளோட பிராந்தியைக் கலந்து அடிச்சா சுத்தமா பூச்சியெல்லாம் அழியுதுன்னு சொன்னாங்க. நானும் எண்டோசெல்பானோட பிராந்தியைக் கலந்து மக்காச் சோளப் பயிருக்கு அடிச்சிப்பாத்தேன். என்ன ஆச்சரியம்? மருந் துக்கு கட்டுப்படாத பூச்சிகள்.. பிராந்தியக் கலந்து அடிச்சதும்... ரெண்டே நாள்ல சுத்தமா செத்துப்போச்சு. இதை பார்த்த மத்த விவசாயிகளும் இப்ப பூச்சிக்கொல்லி மருந்தைவிட பிராந்தியை நம்பறாங்க''’என்றார் கூலாய்.பச்சனநாயக்கன்பட்டி விவசாயி ராமலிங்கமோ ""மருந்துகளை அடிச்சும் எங்க பருத்திப் பயிர்களை கம்பளிப்பூச்சிகள் நாசம்பண்ணி வந்துச்சு. மிடா பூச்சிக்கொல்லி மருந்தோட சரக்கைக் கலந்து அடிச்சோம். அவ்வளதான்... கம்பளியாவது கிம்பளியாவது.. எல்லாம் அழிஞ்சி போச்சு''’என்றதோடு... "100 மில்லி மருந்துக்கு ஒரு குவார்ட்டர் சரக்கைக் கலக்கணும்' என்கிற டிப்ஸையும் கொடுத்தார்.""வெறும் பூச்சிக்கொல்லி மருந்தை அடிச்சா பிரயோஜனமில்லை. சரக்கு கலந்த மருந்துக்குத்தான் வீரியம் அதிகமாக இருக்கு. இதில் பூச்சிகள் செத்து விழறதை கண்கூடாய் பார்த்தவன் நான்'' என்கிறார் சரக்கு மருந்தை அடித்துக்கொண்டிருந்த கண்ணுச்சாமி. ஒட்டன்சத்திரத்தில் தாவரங்களுக்கான மெடிக் கல் வைத்திருக்கும் முத்து சாமியோ ""இதெல்லாம் விவசாயிகளின் மூட நம் பிக்கை. இதனால் டாஸ் மாக் கடைகள்லதான் யாவாரம் அதிகமா நடக் குது''’என்கிறார் எரிச்ச லாய்.இதுதொடர்பாக வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சங்கர லிங்கத்திடம் நாம் கேட்ட போது “""இந்த விசயத்தைக் கேட்டு ஆச்சரியப் பட்டேன். இது தொடர்பா கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்திடம் கருத்து கேட்டிருக்கிறோம். அது வந்தபிறகுதான் உறுதியான கருத்துக்கு வரமுடியும்''’என்கிறார் புன்னகையோடு. போகிற போக்கைப்பார்த்தால் குடிமகன்களுக்கு சரக்கு கிடைக்காது போலிருக் கிறது.

சீரழியும் கண்ணகியின் பூம்புகார்!



கண்ணகி, கோவலன், மாதவி என காப்பிய நாயக-நாயகிகள் உலவிய பூம்புகாரில் இப்போது எந்தப் பக்கம் ஒதுங்கி னாலும் காதல் ஜோடிகள் தழுவிக் கொண் டிருக்கின்றன. நாங்களும் காதலிச்சுதான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அதற்காக இப்படியா? அக்கம் பக்கத்துல உள்ளவங்க பாப்பாங்களேன்னுகூட வெட்கப்படாம கூச்ச நாச்சமில்லாம நடந்துக்கிட்டா ஃபேமிலியோடு வர்றவங்க எப்படி சுத்திப்பாக்குறது'' என்றனர் திருப்பூரிலிருந்து நாகை மாவட்டம் பூம்புகாருக்கு வந்திருந்த குமரன் தம்பதியர்.அக்கம்பக்கம் பற்றி பூம்புகாருக்கு வரும் காதலர்கள் கண்டுகொள்ளாவிட்டாலும் அவர்களை ஒரு சில கும்பல் கண்டு கொண்டுதான் இருக்கிறது. பூம்புகாரில் காவிரி கடலுடன் கலக்கும் பகுதிக்கு சந்துரு-விஜி (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) கல்லூரி காதல் ஜோடி வந்தது. கூடவே நண்பனையும் அழைத்து வந்திருந்தான் சந்துரு. காதலர்கள் முத்தங்களை பரிமாறிக் கொள்ள, நாகரிகமாக ஒதுங்கிச் சென்று விட்டான் நண்பன். தூரத்திலிருந்து ஜோடியை கவனித்துக்கொண்டிருந்த 3 பேர் கும்பல், நெருங்கி வந்தது. சந்துருவை தண்ணீரில் பிடித்து தள்ளிவிட்டு, விஜியை கருவைக் காட்டுக்குத் தூக்கிச்செல்ல, விஜியின் அலறல் கேட்டு அப்பகுதி மீனவர்கள் ஓடிவந்து , மூவரையும் விரட்டி, விஜியைக் காப்பாற்றியுள்ளனர். சந்துருவோ தப்பித்தால் போதும் என மயிலாடுதுறைக்கு பஸ் ஏறிவிட, ஜோடியைக் காணோமே என அலையாய் அலைந்திருக்கிறான் நண்பன்.இப்படிப்பட்ட சம்பவங்கள் இங்கே சர்வசாதாரணம் என்கிற சுண்டல் வியாபாரி பாலு, ""நிலவரம் தெரியாம வர்ற ஜோடிகளை கண்காணிச்சு, பையனை அடிச்சுப்போட்டுட்டு, பொண்ணை தூக்கிட்டுப்போய் சீரழிக்கிற கும்பல் இங்கே நிறைய இருக்குது. கள்ளக்காதல் ஜோடிகள், பள்ளிக்கூட காதல் ஜோடிகள், புதுசா கல்யாணமான புருசன் பொண்டாட்டி இவங்களெல்லாம் இந்தப் பக்கம் வர்றதே ஆபத்துதான். ஆனா, தப்புத்தண்டா ஜோடிகள் இங்கேதானே வருதுங்க. 60 வயசு கிழவன், 19வயசு பொண்ணோடு வந்து ஓரமா ஒதுங்குனான். மீனவர்கள்தான் பிடிச்சு போலீசுகிட்டே கொடுத்தாங்க. ஒரு நடவடிக்கையும் இல்லை'' என்றார் விரக்தியாக.

நம்முடன் டீக்கடையில் பேசிக்கொண்டிருந்த ஒரு காக்கி, ""கடல் கொண்ட இந்த ஊரை பெருமையா மறுபடியும் உருவாக்கினாரு நம்ம முதலமைச்சர். இங்கதான் இத்தனையும் நடக்குது. சுற்றுலாத்துறையும் கண்டுக்கிறதில்லை. காவல்துறை உயரதிகாரிகளும் கண்டுக்கிறதில்லை. எங்க கடமையையும் செய்ய விடுறதில்லை'' என்று பெருமூச்சு விட்டார்.காமாந்தகர்களின் ஊராகிவிட்டது கண்ணகி வாழ்ந்த பூம்புகார்.

தவறுகளைத் தட்டிக் கேட்கக்கூடாதா?

-ஓங்கி ஒலிக்கும் மனித உரிமைக்குரல்
""ஒரு வருஷத்துக்கு முன்னால எங்களோட தொண்டு நிறுவனத்துக்கு மனித உரிமை இயக்கம்னு பேரு வச்சோம். பதிவும் செஞ்சோம். இன்னைக்கு வரைக்கும் அந்தப் பேருக்கு ஒரு பங்கமும் வராம செயல்படறோம். ஆனாலும், எங்களையே உறுத்துற அளவுக்கு இந்த விருதுநகர் மாவட்டத்துல கந்து வட்டிக்கு விடறவங்க, சாராய பார் நடத்துறவங்க, கட்டப் பஞ்சாயத்து பண்ணுறவங்கன்னு மனித உரிமைகளை காலடில போட்டு மிதிக்குறவங்களே இந்த அமைப்புகளை நடத் துறாங்க. இப்பல்லாம் மனித உரிமை இயக் கம்னு பேரச் சொல்லவே தயக்கமா இருக்கு''.மிகவும் நெக்குருகித்தான் பேசினார் மனித உரிமை இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளரான விஜயகுமார். "மனித உரிமை கள் என்ற பெயரில் இனி தொண்டு நிறு வனங்கள் செயல்பட முடியாது' என்று அர சாங்கமே சாட்டையைச் சுழற்றியிருக்கிறதே?சாம்பிளுக்கு ஒன்றிரண்டு-மந்திரி பி.ஏ. உத்தரவு போட, கலெக்டர் பி.ஏ. பரிந்துரைக்க... கோயம்புத்தூர் சர்க்யூட் ஹவுசில் ரூம் கிடைக்கிறது அந்த டுபாக்கூர் மனித உரிமை ஆசாமிக்கு. அங்கேயே "ப்ரஸ் மீட்' வைத்து மாட்டிக் கொள்ளும் அளவுக்கு விவரம் இல்லாத அந்த நபர்தான் மனித உரிமைகளின் பெயரால் தமிழகம் முழுவதும் மரியாதைக்குரியவராக பவனி வந்திருக்கிறார்.சிவகாசியில் ஒரே டூவீலரில் மூன்று பேர் வருகிறார்கள். அந்த வண்டியை நிறுத்துகிறார் டிராஃபிக் எஸ்.ஐ. முத்தரசு. ஃபுல் மப்பில் இருந்த மூவரும் மனித உரிமை அடையாள அட்டையை எஸ்.ஐ.யின் முகத்துக்கு நேரே நீட்டிவிட்டு "பை... பை...' சொல்லியிருக்கிறார்கள்.இதுபோன்ற மனித உரிமை கலாட்டாக்கள் ஒரு புறம் நடந்தேறினா லும், உருப்படியான காரியங்களையும் சில அமைப்புகள் செய்யா மல் இல்லை. திருத்தங் கல்லில் அப்படி நடந்த ஒரு கூட்டத்தில்...""லஞ்சம் கொடுக்காம எந்த ஒரு காரியமும் நடக்காதுன்னு ஏன் நெனக்குறீங்க? உங்க மனுவை நேர்ல கொடுக்க வேண்டிய அவ சியமே இல்லை. பதிவுத் தபால்ல அனுப்பி வைங்க. ஒரு மாசம் பொறுத்திருங்க. ஒரு நடவடிக்கையும் இல்லைன்னா 10 ரூபாய் ஸ்டாம்பு ஒட்டி தகவல் உரிமைச் சட்டத்தின் துணை கொண்டு கேள்வி கேளுங்க. மக்கள் விவரமா நடக்க ஆரம்பிச்சாலே லஞ்சம் கேட்குறது தன்னால குறைஞ் சிடும்'' என்று மக்களுக்கு வகுப்பே எடுத்தார்கள்.அகில இந்திய நுகர்வோர் மனித உரிமை பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் ராஜேந்திரன் நம்மிடம் ""எங்கே அநியாயம் நடந்தாலும் எங்க அமைப்பு மூலம் தட்டிக் கேட்பேன். அதனால இதுவரைக்கும் 18 வழக்குகளைச் சந்திச்சிருக்கேன். தட்டிக் கேட்டால்தானே தவறுகள் குறையும். ரேசன் கடைக்குக் கூட போயி எடையச் சரிபார்ப்போம். இந்த மாதிரி அரசு இயந்திரங்களை நாங்க கண்காணிக்குறது பிடிக்காமத்தான் எங்கள ஒடுக்க நெனக்குது அரசாங்கம். தவறான அமைப்புகளைக் கண்டறிந்து களையெடுப் பதை விட்டுவிட்டு, மொத்தத்துல மனித உரிமை அமைப்புக்களே இருக்கக் கூடாதுன்னா என்ன அர்த்தம்?'' -கண் சிவக்க கேள்வி கேட்டார்.மனித உரிமை அமைப்புக்கள் மீதான உத்தரவை மறுபரிசீலனை செய்யுமா அரசாங்கம்?

சினிமா தியேட்டரில் டாக்டர்கள்!

மதியம் தாத்தா வீட்டில் பிரி யாணி விருந்து. 3 வயது யாஷிகாவுக்கு அது பெரிய விஷயமில்லை. வெளியே கிளம்புகிறோம் என்பதில்தான் சந் தோஷம். காரைக்குடியின் பிரபல லாரி அதிபர் ஜஹாங்கீர் குடும்பம் அக்டோ பர் 25 அன்று மாருதி ஆம்னியில் புறப் பட்டது. ஜஹாங்கீர், மனைவி ஜெரினா, யாஷிகா, ஜஹாங்கீரின் அண்ணன் மகள்கள் 7 வயது ஹசீனா, 5 வயது ஹாஜிரா ஆகியோர் மேலூரில் உள்ள தாத்தா வீட்டுக்குப் புறப்பட்டனர்.பயணம் தொடங்கிய 28-வது நிமிடம். நாச்சியார்புரத்தில் மாருதி ஆம்னி வேன் போய்க்கொண்டிருந்த போது மதுரையிலிருந்து மரம் ஏற்றி வந்த லாரி ஒன்று நேருக்கு நேர் மோத, ஆம்னி வேன் நொறுங்கியது. ஜஹாங் கீரும் அவரது அண்ணன் மகள்களும் ஸ்பாட்டிலேயே துடிதுடித்து இறந் தனர். ஸ்பாட்டில் உயிருக்குப் போரா டிக்கொண்டிருந்த ஜெரினாவையும் குழந்தை யாஷிகாவையும் நாச்சியார்புரம்அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஜெரினா மட்டும் இங்கே இருக்கட்டும்.. குழந்தையை மதுரைக்கு கொண்டுபோனாதான் காப்பாத்த முடியும் என நாச்சியார்புரம் மருத்துவமனையில் இருந்தவர்கள் தெரிவிக்க, 108 ஆம்புலன்ஸ் யாஷிகாவுடன் மதுரை விரைந்தது. அங்கே அரசு பொதுமருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு வார்டு நம்பர் 99 முன் வண்டி நின்றது. பிறகு 108 ஆம்புலன் ஸில் சேவை செய்யும் ஜான் பெரியசாமி, அதன் பின் நடந்த கொடுமைகள் பற்றி பேசுகிறார். ""ஞாயித்துக்கிழமை பகல் 12.45 மணி. குழந்தையை அட்மிட் செய்யாம, அதோட அப்பா வந்திருக்காரா? அம்மா இருக்காங்களா? சொந்தக்காரவுக எங்கேன்னு கேள்வியா கேட்டுக்கிட்டிருக்காங்க. 2 மணி நேரமா குழந்தை வலியால துடிச்சுக்கிட்டே இருக்குது. குடும்பமே விபத்தில் சிக்கிக்கொண்டதை சொல்லி, சிகிச்சை தரச்சொல்றேன். அதுக்கும் நர்சுகள் கேட்கலை. முதலுதவிகூட செய்யாம, வார்டு வாசலிலேயே குழந்தையை துடிதுடிக்க விட்டுட்டாங்க.

3 மணிக்கு யாஷிகாவின் பெரியப்பா சையது வந்து கையெழுத்து போட்டபிறகுதான் அட்மிட் செஞ்சாங்க. ஆனா, டாக்டர்கள் யாரும் இல்லை. டூட்டியில் இருந்த பயிற்சி டாக்டர்களும் ரெஸ்ட்டுக்குப் போயிட்டாங்க. ஜி.ஹெச்சில் குழந்தைய வச்சிருந்தா, ட்ரீட்மெண்ட் கொடுக்காம கொன்னுடுவாங்கன்னு பயந்து,பிரைவேட் ஆஸ்பிட்டலுக்கு கொண்டு போக நினைச்சாரு பெரியப்பா. நானும் ஒரு சக மனுஷன்ங்கிற முறையில் அப்பல்லோ இருக் குன்னு சொன்னேன். அங்கே தூக்கிக்கொண்டு ஓடினாங்க'' என்றார் வேதனையுடன். அந்த நேரத்திலும் அரசு மருத்துவமனை ஊழியர் கள் சில பேர், ""இவ்வளவு நேரம் இங்கே குழந்தையை வச்சிருந்தீங்கள்ல.. 300 ரூபாய் கொடுங்க'' என்று லஞ்சம் கேட்டிருக்கிறார்கள்.அதன்பின், அப்பல்லோவில் என்ன நடந் தது என்பதை விவரிக்கத் தொடங்கினார் சையது. ""அங்கே 5 டாக்டர்கள் இருந்தாங்க. குழந்தைக்கு நுரையீரலில் காயம்பட்டிருப்ப தால் ரத்தம் அடைபட்டிருக்கு. அதற்கான மருந்து ஸ்டாக் இல்லைன்னு சொல்லி மதுரை முழுக்க தேடினாங்க. அப்புறம் டாக்டர் ஜஹாங்கீர் நியூயார்க்கிலிருந்து வாங்கி வந்தி ருந்ததை யூஸ் பண்ணிக்கலாம்னு சொல்லி, 1 லட்சத்து 40ஆயிரம் கட்டச் சொன்னாங்க. எப்படியாவது காப்பாத்திடலாம்ங்கிற நம்பிக்கையோடு மொத்த பணத்தையும் கட்டினோம். இரண்டு நாள் ஐ.சி.யு.விலேயே வச்சிருந்தாங்க. யாரையும் அனுமதிக்கலை. மூணாவது நாள் நாங்க, குழந்தையை பார்த்தே ஆகணும்னு சண்டை போட்டோம். அப்பதான், குழந்தை செத்துப்போச்சு. மீதி பில்லை க்ளியர் பண்ணுங்கன்னு குண்டை தூக்கிப் போட்டாங்க. 2 நாளா எங்க யாஷிகா உயிரோடு இருந்தாளா? ட்ரீட்மெண்ட் கொடுத்தாங்களா? ஆபரேஷன் செஞ் சாங்களா? எதுவும் தெரியலை. கவர்மெண்ட் ஆஸ்பத்திரியின் அலட்சியமும், பிரைவேட் ஆஸ்பத்திரியின் பணத்தாசையும் எங்க குடும்பத்து வாரிசை கொன்னுடுச்சி'' என்றார் கண்ணீருடன்.மதுரை அரசு மருத்துவமனை டீன் வரை புகார் செய்தும் நடவடிக்கை இல்லை என சையது கூறியதால், பொறுப்பு டீன் சிவகுமாரிடம் பேசினோம். ""அந்த குழந்தைக்கு நடந்த சம்பவம் என் கவனத்துக்கு வந்தது. டூட்டியில் இருந்தவங்களை எச்சரித் திருக்கேன். டாக்டர்களுக்கும் நர்சுகளுக்கும் சங்கங்கள் இருக்குதே'' என்றார். நம்மிடம் பதிலளித்தபின் விசாரணையை தீவிரமாக்கி யிருக்கிறார் டீன். ஞாயிறன்று டூட்டியில் இருந்த பயிற்சி டாக்டர்களை நவம்பர் 2-ந் தேதியன்று தனது அறைக்கு விசாரணைக்கு அழைத்தார் டீன் சிவகுமார். பயிற்சி டாக்டர்களோ, ""நாங்க ஜூனியர்ஸ். நர்சுகளெல்லாம் எங்களைவிட சீனியரா இருக்காங்க. வந்தோமா.. ட்ரெயினிங் எடுத்தோமா.. போய்க்கிட்டே இருக்கணும்னு சொல் றாங்க. சீனியர் டாக்டர்கள்கிட்டே புகார் கொடுத்தால், நர்சுகள் சொல்றபடி நடந்துக்குங்கன்னு சொல்றாங்க'' என்று புலம்பி யிருக்கிறார்கள். கடுப்பான டீன், சீனியர் டாக்டர் ஒருவருக்கு போன் போட்டிருக்கிறார். அவர் ஆதவன் பகல் ஷோ பார்த்துக்கொண்டிருப்பது தெரியவந்தது. அந்த டாக்டரின் வார்டில் உள்ள நர்சை செல்போனில் தொடர்புகொள்ள அவரும் அதே தியேட்டரில் ஆதவன் பார்த்துக் கொண்டிருந் திருக்கிறார். நொந்துபோன டீனிடம் பயிற்சி டாக்டர்கள், ""பெரும்பாலும் இப்படித்தான். பயிற்சிக்கு வரும் லேடி ஹவுஸ் சர்ஜன்களோடும் நர்ஸ்களோடும் பகல் ஷோ போவதுதான் சீனியர் டாக்டர்களின் ஹாபியா இருக்குது. சாயங்காலம் தங்கள் கிளினிக்குக்கு பேஷண்டுகளை வரச்சொல்லிடுறாங்க'' என்றிருக் கின்றனர். தலையிலடித்துக்கொண்ட டீன், வார்டில் யார், யார் இல்லை என கணக்கெடுத்திருக்கிறார். நவம்பர் 2-ந் தேதி மட்டும் 6 டாக்டர்கள் 9 நர்சுகள் மட்டம் போட்டி ருக்கின்றனர். மதுரை அரசு மருத்துவமனை டாக்டர்கள்-நர்சுகளின் கடமையுணர்ச்சி, ஊசலாடும் உயிர் களை எமலோகத் திற்கு அனுப்பி வைக்கிறது.

சென்னை அருகே பெரும் ஆபத்து!

""அம்ம்மா... ப்பா... ம்மா...' ஏழு வயதாகும் ஜோதிகாவுக்கு இதைத்தவிர வேறெதுவும் சொல்லத் தெரியாது. ""பொறந்ததிலிருந்தே இப்படித்தாங்க. நாம சொல்றதை எதுவும் புரிஞ்சுக்கத் தெரியாது. பசிச்சாக்கூட சோறு வேணும்னு கேட்கத் தெரியாதுங்க. புள்ளைக்கு பசிக்குமேன்னு நாமளே ஊட்டிவிட்டாத்தான் உண்டு'' -வாய்பொத்தி அழுகிறார்கள் கற்பகமும் வெங்கடேசனும்.ஒன்றரை வயது குழந்தை புவனேஸ்வரி. பிறக்கும்போதே ஒரு காலும் ஒரு கையும் இல்லை. கீழே தட்டுத் தடுமாறி தவழும்போது அந்தக்குழந்தை படும் வேதனையைக் கண்ணால் பார்க்கவே கல்நெஞ்சம் வேண்டும்.ஒன்றரை வயது சஞ்சய், ""கழுத்து நிக்காம இப்படி தொங்கிக்கிட்டே இருக்குங்கய்யா'' குமுறுகிறார்கள் பெற்றோரான வாணியும் சுகனும். எட்டு வயது பாலாஜி. ""மூணு பசங்க. அதுல முதல் பையன்தான் இவன். இப்படி மூளை வளர்ச்சியில்லாம பொறந்துட்டான்.'' பத்து வயது கோகுலோ... ""ஆறாவது படிக்கிறேண்ணே. நல்லா படிப்பேன். ஆனா ஒரு கை இல்லாததாலதான் ரொம்ப கஷ்டப்படுறேண்ணே. நல்லவேளை என் அக்காவும் தம்பியும் மைசூர்ல பொறந்தாங்களாம். அவங்களும் இங்கேயே பொறந்திருந்தா இதே மாதிரி ஆகியிருக்கு மில்லண்ணே'' என்று பரிதாபமாய் கேட்கும் சிறுவனின் அப்பா நரசிம்மன் அணுமின் நிலையத்தின் டெம்ப்ரவரி சூப்பர்வைஸர்.பத்து வயது பவித்ரா. நிற்கும் போது சாதாரணமாகத்தான் தெரிவாள். ஆனால் நடக்கும்போது தான் விந்தி விந்தி காலை இழுத்துக்கொண்டு இடறி நடப்பது தெரியும். நான்கு மாத குழந்தை சுகாசின். பத்து விரல்களோடு இன்னும் இரண்டு விரல்கள் தேவையில்லாமல் ஒட்டிக் கொண்டு தொங்குகிறது பரிதாபமாக.பத்தொன்பது வயது ஷகீலா... ""அப்பப்போ வலிப்பு வந்து உசுரு போற அளவுக்கு அவ வேதனைப் படுவாங்க. பெரிய பொண்ணா ஆயிட் டாள்னுதான் பேரு. மூளை வளர்ச்சியில்லாம பொறந்ததால எல்லாமே நாம தான் கூடயிருந்து கவனிச்சுக் கணும். இதனால வேலைக்கும் போகமுடியாம, சாப்பாட்டுக்கும் வழியில்லாம கஷ்டப்படு றோம்ங்க'' -விசும்பு கிறார் அந்த இளம்பெண்ணின் தாய்.அணுமின் நிலையத்தில் டெம்ப்ரவரியாக வேலை செய்யும் பூந்தண்டலத்தின் பதினோரு வயது மகன் அஸ்வினுக்கு ஆறு விரல்கள் இருப்பதோடு, மூளை வளர்ச்சி யும் இல்லை. அதே இடத்தில் மெக் கானிக்காக பணிபுரியும் செங்கழனியின் பத்துமாத குழந்தை ஹரீஷுக்கும் காலிலும் கையிலும் ஒரு விரல் கூடுதலாக இருக்கிறது.முப்பத்தைந்து வயதாகும் லட்சுமிக்கோ குளிர் தாங்க முடியாது. தொண்டை கட்டிக் கிட்ட மாதிரி உணர்வு. இப்படி 2 வருடமாக போராடிக் கொண்டிருந்தவரை பரி சோதித்தபோதுதான் அவரை தாக்கியிருப்பது "ஆட்டோ இம்மின் தைராய்டு டிசீஸ்' என்று தெரிய வந்திருக்கிறது. அதைவிடக் கொடுமை அபிபுராணியின் நிலைமை. ""தைராய்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அஞ்சாறு வருஷமா ஹாஸ்பிடல், வீடுன்னு அலைஞ்சுக்கிட்டிருந்தேங்க. சென்னையில இருக்கிற அடையார் புற்றுநோய் ஆஸ்பத்திரிக் கெல்லாம் போயிட்டு வந்துட்டேன். அணுமின் நிலையத்தோட கதிர்வீச்சாலதாம்மா உனக்கு இப்படி ஆகியிருக்கு'ன்னு சொல்லி அனுப்பிட்டாங்க. இந்த மாதிரி ஏகப்பட்டபேர் பாதிக்கப்பட்டிருக்காங்க. சிலர் இறந்தும் போயிட்டாங்க. நானும் ஒரு வருஷமா படுத்த படுக்கையாய் கிடக்குறேன். நான் இன்னும் எத்தனை நாளைக்கோ?'' என்று அவர் கண்ணீர் வடிக்க... இளம் வயதிலேயே வாழ்க்கையை தொலைத்து விட்டு படுத்த படுக்கையாய் கிடக்கும் சந்தோஷ் குமாரின் நிலைமை நம்மை பதைபதைக்க வைக்கிறது.""சம்பளம் கொஞ்சம்... கூட கொடுக்குறாங் களேன்னு வயித்துப் பொழைப்புக்காக அணுமின் நிலையத்துக்கு டெம்பரவரி வெல்டரா வேலைக்குப் போனேங்க. 45 வயசுக்குமேல வர்ற பெருங்குடல் புற்றுநோய் 34 வயசிலேயே வந்துடுச்சு. ஒருநாளைக்கு இன்ஜெக்ஷன் மட்டுமே 450 ரூபாய் செலவாகுது. தினமும் வாந்தி, மயக்கம். பாத்ரூம், லெட்ரின் எல்லாமே வயித்துல டியூப் மூலமாத்தான் போறேன்'' என்று அவர் வேதனையோடு சொல்லும்போதே அவரது மனைவி குழந்தைகளின் முகத்தில் கண்ணீர் தாரையாய் ஓடுகிறது.-இப்படி புற்றுநோய்கள், பெண்களைத் தாக்கும் தைராய்டு பிரச்சனைகள், பிறவி ஊனம், இதய பாதிப்பு, மூளை வளர்ச்சியின்மை, வலிப்பு நோய்... என மிகக்கொடுமையான நோய்களுடன் குழந்தைகள் பிறப்பதும், பெரியவர்கள் பாதிக்கப்படுவதும் வெவ்வேறு இடங்களில் அல்ல. காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையம் அருகில் 16 கிலோமீட்டர் சுற்றளவுள்ள கிராமப் பகுதிகளில்தான்.""நீங்க பார்த்தது வெறும் சாம்பிள்தாங்க. இந்த மாதிரி பாதிக்கப்பட்டவங்க இன்னும் நெறைய பேரு இருக்காங்க'' என்று வேதனையுடன் சொல்லத் தொடங்குகிறார் அணுமின் நிலையத்திலிருந்து வெளியாகும் அணு கதிர்வீச்சு (ரேடியேஷன்)கள் குறித்து ஆய்வு செய்து... அப்பகுதி மக்களை அதன் பாதிப்பிலிருந்து மீட்கப் போராடிவரும் பொதுநல மருத்துவர் டாக்டர் வீ.புகழேந்தி.""மின்சாரம் மற்றும் அணுகுண்டுகளை தயார் பண்ணி நாட்டை காப்பாற்றத்தான் அணுமின் நிலையத்தை அமைச்சதா மத்திய அரசு சொல் லுது. அதே நேரத்துல இந்தப் பகுதி மக்களின் பாதுகாப்பும் முக்கியம்ங்கிறதை அரசாங்கம் புரிஞ்சுக்கணும்.அணு உலையிலிருந்து வெளியாகுற ரேடியேஷன் மூலமா... அணுமின் நிலையத்துல வேலை பார்க்கிற ஊழியர் களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் "மல்டிபிள் மைலாமா'ங்கிற எலும்பு மஜ்ஜை புற்றுநோய் இருப்பதும் அதன்மூலமா பலர் உயிரிழப்பதையும் 2003-ல் நான் செய்த ஆய்வின் மூலமா தெரிவிச்சிருக்கேன். இதற்கு மருத்துவ ஆராய்ச்சி புத்தகங்களுமே ஆதாரம். அதனாலதான் அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள்ல அணுக்கதிர் வீச்சால் ஏற்படும் மல்டிபிள் மைலாமா புற்று நோயால் பாதிக்கப்படுற பணியாளர் களுக்கும், பொதுமக்களுக்கும் மருத்துவ இழப்பீட்டுத்தொகை வழங்க சட்டமே இருக்கு.அதேமாதிரி அணு உலையிலிருந்து வெளியாகும் அயோடின் 131 என்னும் கதிர்வீச்சால் "ஆட்டோ இம்மின் தைராய்டு டிசீஸ்' என் னும் நோய் வராது என்று மறுக்கிறது அணுமின் நிலைய நிர் வாகம். ஆனால் அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் எபி டெமியாலஜி 2006 நவம்பர் புத்தகத் தில் அயோடின் 131 கதிர்வீச்சால் அப்படிப்பட்ட பிரச்சனை வரும் என்பது தெளிவாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.குறைவான கதிர்வீச்சு வெளி யேறுவதால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாதுன்னு தவறான பிரச்சாரத்தை செய்யுறாங்க. ஆனா, கதிர்வீச்சைப் பொறுத்த அளவில் பாதுகாப்பான அளவு (நஹச்ங் க்ர்ள்ங்) என்பது ஒன்று இல்லவே இல்லை என்பதும் எக்ஸ்ரே காமா கதிர்கள், நியூட்ரான்கள் போன்றவை புற்றுநோயை ஏற்படுத்தும் என்பதும் விஞ்ஞானிகளுக்கு நன்றாகத் தெரியும்.அப்படியிருக்க புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ஆல்ஃபா கதிர்வீச்சு, கல்பாக்க கடற்கரையில் அதிகமா இருக்குங்குறதும் உண்மை. கதிர்வீச்சால் பாதிப்பு இருக்குன்னு ஆய்வின் மூலமும் பாதிக்கப்பட்டவர்களை கண்ணால் பார்த்தும் தெரிந்து கொள்ள முடியுது. இதற்காக அணுமின்நிலையத்தையே நாங்க அகற்ற சொல்லலை. பாதிக்கப்படுவது தமிழர்களாக இருப்ப தால் மத்திய அரசின் அணுமின் நிலைய நிர்வாகத்துடன் தமிழக அரசும் இணைந்து 16 கிலோமீட்டர் சுற்றளவுள்ள புதுப்பட்டினம், வயலூர், மணமை, வெங்கம்பாக்கம், பூந்தளம்னு அத்தனை கிராமங்களுக்கும் மருத்துவக் குழுவை அனுப்பணும். அனுசக்தி வீச்சு மூலம் நோயினால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு அணுமின்நிலையத்துல பணிபுரியும் நிரந்தர பணியாளர்களுக்கு கொடுப்பதுபோல தனி அடையாள அட்டை கொடுத்து இலவச மருத்துவப் பரிசோதனைகள், மருந்துகள், சிகிச்சைகள் அளிக்கணும். தைராய்டு நோயை கண்டறிந்து சிகிச்சை செய்யும் நவீன வசதியை கல்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே ஏற்படுத்தணும்.ஜப்பான், அமெரிக்கா போன்ற மேலைநாடுகள்ல புற்றுநோய் போன்ற பெருநோய்களால் தாக்கப்பட்டால் இழப்பீடு வழங்கப்படுவது சட்டமாக இருப்பதுபோல் நம்ம நாட்டிலும் சட்டமாக்கணும். இதையெல்லாம் சொல்லிப் போராட ஆரம்பித்தால் என்னை பலர் மிரட்ட ஆரம்பிச்சிடுறாங்க. மக்களின் நலனுக்காக நான் எதையும் சந்திக்கத் தயார்'' என்கிறார் அதிரடியாக.அணுமின்நிலைய கதிர்வீச்சால் ஆபத்து மக்களுக்கு... ஆதாயம் யாருக்கு? என்ற கேள்வியோடு மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளது மனித நேய மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் அப்துல் சமது தலைமையில். ம்... இவ்வளவு எதிர்ப்புகள் பாதிப்புகளின் மத்தியிலும் "இன்னும் அணுமின்நிலையங்களை அமைக்கப் போகிறோம்... கதிர்வீச்சால் பாதிப்பு இல்லை' என்று ஆய்வு செய்து நிரூபிக்காமலேயே சமாளித்துக்கொண்டி ருக்கிறது அணுமின்நிலைய நிர்வாகம். உண்மை வெளிவரும் வரை அப்பகுதி மக்களின் நிலைமை?

தற்கொலையை தடுத்த நக்கீரன் செய்தி!

ண்ணீர் மட்டுமல்ல... நம் நெஞ்சை பதற வைத்த இந்தத் தொலைபேசிக் கதறலில் தற்கொலைத் துடிப்பும் கலந்திருந்தது.
""இனி உயிரோட இருக்கக் கூடாதுனு ரெண்டுவாரம் முன்னயே நானும் என் மனைவியும் முடிவு பண்ணிட்டோம். பசங்க ரெண்டு பேரையும் என்ன பண்றது? அந்தக் குழப்பத்திலதான் டிலே பண்ணிட்டோம். இந்த வாரம் நக்கீரன்ல "மனித உருவில் மிருகம்' செய்தியைப் படிச்சோம். பெத்த மகளையே நாசம் செய்து கொண்டிருந்த அந்த மிருகத்தை எதிர்த்துப் போராடி தண்டனைக்கு ஆளாக்கிய கௌசல்யாவின் மன உறுதியை படிச்ச பிறகுதான்... இந்த பாவிகளை எதிர்த்து போராடணும்கிற உறுதி கொஞ்சம் வந்திருக்கு... ஆனாலும் தற்கொலை எண்ணம் இன்னும் இருக்கு...!'' -விம்மினார் வீரபுத்திரன்.""நேரில் வருகிறோம்!'' முகவரியை கேட்டோம். விரைந்தோம்.சென்னை திருவேற் காட்டிலிருந்து ஆவடி செல்லும் சாலையில் உள் வாங்கிய பரிசுத்தமான ஒரு பட்டிக்காடு. செங்கல் சூளை களுக்கு நடுவில் வெக்கை படிந்து நின்ற அந்த "சுந்தர சோழபுரம்' கிராமத்தில் ஏரிக்கரைத் தெருவில், செங்கல் சூளை அதிபர் சீனிவாசன் வீட்டில் குடியிருக்கிறார் வீரபுத்திரன்.""நான், என் மனைவி பாக்கியலெட்சுமி, ரெண்டு பையன்கள்... எப்போதும் பினாத்திக் கொண்டிருக்கும் நடக்க முடியாத என் விதவைத் தாய்... இதுதான் என் குடும்பம். பிழைப்புக்காக கோவில்பட்டியில் இருந்து 2 வருடம் முன்பு சென்னைக்கு வந்து மதுரவாயலில் குடியிருந் தேன். 5 மாதம் முன்னால இங்கே வந்தோம்.இந்த ஹவுஸ் ஓனர் சீனிவாசன் இந்த ஏரியாவில முக்கியமான ஆளு... போலீஸ் ஸ்டேஷனே இவர் கண்ட்ரோல்ல தான் இருக்கு...! எந்தப் பொம்பளையைப் பார்த்தாலும் ரெட்டை அர்த்தத்தில கேலியும் கிண்டலுமா பேசுவார் சீனிவாசன்... வயசானவர்... நமக்கென்னனு பேசாம இருந்துட்டேன். எப்பவாச்சும் நான் குடிப்பேன்... 9.9.09 அன்னக்கி கொஞ்சம் கூடவே குடிச்சிட்டேன். மொட்டை மாடிக்கு போய் தூங்கிட்டேன். என் ஒய்ப் கௌசல்யா வந்து எழுப்பிப் பார்த்திருக்கா... நான் எந்திரிக்கலை... கிடக்கட்டும்னு கீழே இறங்கி... வீட்டுக்குள்ள போயிருக்கிறாள்... கௌசல்யாட்டயே கேளுங்களேன்!'' மனைவியைக் காட்டினார் வீரபுத்திரன்.""சொல்லுங்கம்மா...!'' என்றோம்.""அந்த சீனிவாசன்... எங்க கிச்சன்ல இருட்ல உட்கார்ந்திருந்தான். எனக்குத் தெரியலை. திடீர்னு பின்னால வந்து கட்டிப் புடிச்சான் திமிர்னேன்... சுவர்ல என் தலை மோதி மயங் கிட்டேன். என்னைத் தூக்கிட்டு அவன் வீட்டுக்கு கொண்டு போய் போட்டு என்னைச் சீரழிக்கும் போதுதான் சுயநினைவு வந்தது. அலறுனேன்... அவன் பொண் டாட்டி மாரியம்மாளும் என் மகன்களும் ஓடிவந்தாங்க... அப்பத் தான் என்னை விட்டுட்டு அவன் போனான். மாரியம்மா என் கால்ல விழுந்து கெஞ்சுச்சு. யார்ட்டயும் சொல்லாதே... ரொம்ப அசிங்கம்னு அழுதுச்சு.ஒருவாரம் கழிச்சு மறுபடியும்... கட்டிப் புரண்டேன்... முடியலை... என் சேலையை உருவி என் காலையும் கையை யும் கட்டினான். கதறினேன். வாயில துணியை வைத்து அடைச்சான். சிகரெட்டால என் உடம்பெல்லாம் சுட்டான். கெடுத்தான். அப்பத்தான் பக்கத்து காயலாங்கடை பையன் ஓடிவந்து பார்த்தது. அவனையும் மிரட்டி அனுப்பினான்.28-ஆம் தேதி மூணாவது தடவையா அதே கொடுமை. அப்புறம்தான் சாக முடிவு செஞ்சேன். இவர் என்னை சமாதானப்படுத்தினார் 7.10.09 அன்னைக்கு, திருவேற்காடு போலீஸ் ஸ்டேஷன்ல போய் இன்ஸ்பெக்டர் துரைராஜ்ட்ட சொன்னோம். புகாரும் எழுதிக் கொடுத்தோம். வழக்குப் பதிவு பண்ணாம... சீனிவாசன்ட்ட சொல்லிவிட்டார் இன்ஸ்பெக்டர்.தினமும் போலீஸ் ஸ்டே ஷனுக்கு அலைஞ்சோம். சீனி வாசன், அவர் நண்பர்கள் சேகர், பழனித்தேவர், அவங்க ஆளுங்க ஸ்டேஷன் இருந்து வீடு வரை எங்களை கேவலப்படுத்தி டார்ச்சர் செய்வாங்க... அப்புறம் கமிஷனர் ஜாங்கிட் சார்ட்ட புகார் கொடுத் தோம். அந்தப் புகாரும் இன்ஸ்பெக்டர் கைக்கு வந்திருச்சு... எந்த நிமிஷம் இந்தக் கும்பல் எங்களை கொலை செய்யும்னு தெரியலை... அப்புறம்தான் தற்கொலை முடிவுக்கு வந்தோம். நக்கீரன்ல கௌசல்யா கொடுமையை படிச் சிட்டு உங்களுக்குப் போன் செய்தோம்... எங்களை சீரழிச்சு... தற்கொலைக்கு தூண்டுன... இவருக்கு தண் டனை வாங்கிக் குடுக்க ணும்...!''.அவர்களுக்கு ஆறுதல் கூறி, மனதிற்கு துணிவூட்டிவிட்டு, திருவேற்காடு காவல்நிலையம் சென்றோம். ""ஆமா அந்தப் பொண்ணு அடிக்கடி வந்தது. சீனிவாசன் மேல புகார் சொல்லுது. நம்ப முடியலையே... ஒண்ணு செய்யலாம்... நான் வேணும்னா எஃப்.ஐ.ஆர். போடட்டுங்களா?'' சிரிக்காமல் சீரியஸாகவே கேட்டார் இன்ஸ்பெக்டர் துரைராஜ்.நாம் அந்தக் காவல் நிலையத்தில் இருந்தபோதே அங்கு வந்தார் செங்கல் சூளை சீனிவாசன். அவரிடமே பாக்கியலட்சுமியின் கதறல் புகார்கள் பற்றிக் கேட்டோம்.""அவளோட மகன் என் கடையில 500 ரூபாயை திருடிட்டான். அதைக் கேட்டேன்... வீட்டைக் காலி பண்ணச் சொன்னேன். உடனே அபாண்டமா சொல்ல ஆரம்பிச்சிட்டாள்!'' இன்ஸ்பெக்டரை பார்த்துச் சிரித்தபடி சொன்னார் சீனிவாசன்.ஏரிக்கரை தெரு மக்களோ, ""இந்தக் கொடூரத்தை மறைப்பதற்காக இதுவரை ஒரு லட்சத்துக்கு மேல் ஸ்டேஷனுக்கு கப்பம் கட்டி இருப்பார் செங்கல்சூளை!'' என்கிறார்கள்.

யுத்தம் சேலஞ்ச் - II


க்கீரன் மீது ஜெயலலிதா என்கிற ஜெயா வழக்குகளைப் போட்டு முடக்கப் பார்த்தார். டெஹல்கா மீது ஜெயா ஜெட்லி என்ற ஜெயா வழக்குகளைப் போட்டபடியே இருந்தார். வழக்குகளைத் தாக்குப் பிடிக்க முடியாமல் எங்கள் டெஹல்கா நிறுவனத்தி லிருந்து பலரும் வெளியேறத் தொடங்கினர். பத்திரிகையின் எதிர்காலம் குறித்த அச்சம், அவர்களின் சொந்த எதிர்காலம் குறித்ததாக மாறியது. அதன் விளைவு, 125 பேர் இருந்த எங்கள் நிறுவனத்தில் என் சகோதரி லீனா தேஜ்பால் மற்றும் சோமா சௌத்ரி, பிரிஜ் கிஷோர், பிரயாக் இந்த 4 பேர் மட்டுமே மிச்சமிருந்தனர். ஆனால், ஜெயலலிதா போட்ட வழக்குகளை எதிர்த்து உங்கள் நக்கீரன் நிறுவனம் வலுவாக இருந்தது. வழக்குகளைத் துணிச்சலாக எதிர்கொண்டது. நக்கீரன் நிறுவனத் தைச் சார்ந்தவர்கள் உறுதியோடு நின்றதை இந்தியாவின் பெரிய பெரிய பத்திரிகை நிறுவனத் தினரே ஆச்சரியத்தோடு பார்த்தனர்.

-தருண் தேஜ்பால்ஆசிரியர்-டெஹல்கா

எங்கள் நிறுவனத்திற்கு உள்கட்டமைப்புகள் அதிகம். எல்லா வசதிகளும் இருக்கிறது. நினைத்தால் ஃப்ளைட்டில் பறந்து சென்று எந்த செய்தியையும் எடுப் பதற்கான வசதி உள்ளது. அதற்குத் தகுந்தது போல எங்களிடம் பலம் வாய்ந்த ஆட்கள் இருக்கி றார்கள். ஆனால், எந்தவித கட்டமைப்பு வசதிகளும் இல்லா மல் பெரிய அரசாங்கத்தை எதிர்த்துப் போராடி ஜெயித்த நக்கீரன் பத்திரிகையின் துணிச்சலைக் கேள்விப்படும் போது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

-பிரணாய் ராய்தலைமை நிர்வாகி- என்.டி.டி.வி

நேர்மைத்திறத்துடன் செயல்படும் ஊடக சாதனையாளர்களே வியக்கும் போராட்டத்தை எதிர்கொண்டது உங்கள் நக்கீரன். திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்பட்டது அன்றைய ஆட்சி. 2001 ஆம் ஆண்டு சட்ட மன்றத் தேர்தலுக்கு முன் அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஜெயலலிதா. அதில் நக்கீரன் மீதான அவரது வஞ்சகம் தெளிவாகவே பதிவாகியிருந்தது. வீரப்பனின் பிடியில் 108 நாட்கள் சிக்கியிருந்த கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்கும் போராட்டத்தில் அரசுத்தூதராக நக்கீரன் செயல்பட்டு, கர்நாடகத் தமிழர்களின் நிம்மதியான வாழ்வுக்கு உத்தர வாதத்தை ஏற்படுத்தி, மீட்புப் பணியில் வெற்றி பெற்றது. அதைப் பொறுக்க முடியாத ஜெ, தன் தேர்தல் அறிக்கையில், நக்கீரன் கோபால் என என் பெயரைக் குறிப்பிட்டு, "ஆட்சிக்கு வந்தால் நக்கீரன் மீது உறுதியாக நடவடிக்கை எடுப்போம். மைய அரசையும் நடவடிக்கை எடுக்க வற்புறுத்துவோம்" என தெரிவித்திருந்தார்.தேர்தல் அறிக்கையிலேயே பொறி வைக்கப்பட்ட நிலையில், தேர்தல் முடிவுகள் ஜெ.வுக்கு சாதகமாக அமைந்தன. தேர்தலில் போட்டியிடும் தகுதியிழந்தும் அவசரகதியில் முதல்வராகப் பொறுப்பேற்றார்.ஆரம்பமானது பேயாட்டம்.அசரவில்லை நக்கீரன்.அய்யன் திருவள்ளுவர் சொல்லுவார்...

கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்ஆற்றல் அதுவே படை.

உயிரைப் பறிக்கும் எமனே எதிர்வந்து நின்றாலும் அதனைத் துணிவுடன் எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடையதுதான் படை. நக்கீரன் படை அந்த ஆற்றலுடன் எமனை எதிர்த்து நிற்கத் தொடங்கியது... யுத்தம்!

ரஜினி வழியில் விஜயகாந்த்!

""ஹலோ தலைவரே... தலைவரே...''""நான்தாம்ப்பா பேசுறேன். சொல்லு...''""நீங்கதான் பேசுறீங்களா தலை வரே... உங்க குரல்தானா?''
""என்னப்பா... 15 வருசத்துக்கு மேலே உன்கிட்டே பேசிக்கிட்டி ருக்கேன். என் குரல் தெரியாதா உனக்கு?''

""நல்லா தெரியுங்க தலைவரே... ஆனா புதுப்புதுத் தகவல்களால் பீதியை கௌப்பு றாங்களே... அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகி களோடேயே அதிகம் பேசாதவர் ஜெ. அவர் குரலில் தமிழ்நாடு முழுக்க நூற்றுக்கணக்கான பேர்கிட்டே காலையில 2 மணிநேரம், சாயங்காலம் 2 மணிநேரம்னு சளைக்காம பேசுறதா போன வாரமே தகவல் வந்தது... அந்த பீதியிலதான் உங்க குரலைக் கேட்டதும் ஒரு டவுட் வந்திடிச்சி. மன்னிச்சிடுங்க தலைவரே...''""நானும் அந்த நம்பரை வாங்கி தொடர்புகொண்டேன். பேசுற குரல் ஜெ. குரல் மாதிரிதான் இருக்குது. ஆனா, அவர் எல்லோர் கிட்டேயும் பேசுற அரசியல் தலைவரில்லையே... அந்த டவுட்டோடு பல வழிகளிலும் விசாரித்தேன். பேசுனது ஜெ. இல்லை. இன்னும் சொல்லணும்னா அது பெண் குரலே இல்லை. ஒரு ஆண் குரல்.''

""என்னங்க சொல்றீங்க தலைவரே...''

""ஆமாப்பா.... கோவை மாவட்டம் அவி னாசியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. 28 வயசு. பெண் குரலில் பிசிறில்லாம பேசி அசத்துறவர். அவர் ஏரியாவில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்ததுன்னா சிறப்பு பேச்சாளர் வருவதற்கு முன்னாடி, கூட்டத்துக்கு வந்தவங்களுக்கு போரடிக்காம இருக்கிறதுக்காக 4 குரலில் பேசி கலக்குவார். லோக்கலில் ஜெ. குரலில் பேசிக்கிட்டிருந்த வெள்ளியங்கிரிதான் இப்ப பல வி.ஐ.பி.க்களிடம் அதே குரலில் பேசி பரபரப்பை உண்டாக்கிட்டார்.''

""இப்படியொரு வேலை யை செய்தவர் மேலே நட வடிக்கை ஏதாவது உண்டா?''

""ஜெ தரப்பிலிருந்தோ அ.தி.மு.க சார்பிலோ புகார் தந்தாதானே காவல்துறை நடவடிக்கை எடுப்பாங்க.''""தலைவரே.. .. நீங்க டூப்ளிகேட் ஜெ. வாய்ஸ் பற்றி சொன்னீங்க. நான், ஒரிஜினல் விஜயகாந்த் வாய்ஸ் பற்றி சொல்றேன். தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் 9-ந் தேதியன்னைக்கு மாநில மாணவரணி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அப்ப விஜயகாந்த், தி.மு.க. இவ்வளவு பெரிய கட்சியா வளர்ந்ததற்கு காரணம் மாணவரணியின் சிறப்பான செயல்பாடுதான்னு சொன்னார். மாணவ ரணி மா.செ. ஒருவர் விஜயகாந்த்தை குஷிப்படுத்துறதா நினைச்சு, நீங்கதான் அடுத்த முதல்வர், உங்களை அரியணை யில் ஏற்றாம விடமாட்டோம்னு சொல்ல, சட்டென குறுக்கிட்டிருக்கிறார் விஜயகாந்த். அட.. போங்கப்பா இதை கேட்டு கேட்டு புளிச்சுப்போச்சு. நான் முதலமைச்சர் ஆகுறதும் ஆகாததும் ஆண்டவனோட பிராப்தம். அவன் நினைச்சா எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும். நீங்க ஊருக்குப் போய் ஃபீல்டு ஒர்க் பாருங்கன்னு சொல்லியிருக்காரு.''

""புது டைப்பான வாய்ஸா இருக்கே?''""

தே.மு.தி.க மாணவரணி நிர்வாகிகளும் அதைத்தான் சொல்றாங்க. நம்ம கேப்டன் ரஜினி வழியில் போக ஆரம்பிச்சிட் டாரோன்னு தங்களுக்குள்ளே பேசிக்கிட்டு, கூட்டம் முடிந்ததும் மட்டன் பிரியாணி விருந்தில் கலந்துக்கிட்டாங்க. தலைவரே.... அடுத்த மேட்டருக்கு வர்றேன். இதோ அதோன்னு ஒரு வழியா திருநாவுக்கரசர் காங்கிரசில் சேர்ந்துட்டாரு. ஜூலை மாதமே பா.ஜ.க கொடியை தன்னோட காரிலிருந்து அவிழ்க்கச் சொல்லிட்ட திரு, அப்போதிருந்தே காங்கிரசில் சேர தொடர் முயற்சி மேற்கொண் டிருந்தார். தீபாவளி சமயத்தில் டெல்லியில் சோனியா, ராகுல் இருவரையும் சந்தித்திருந் தார். இணைப்புத் தேதிக்கு சோனியா அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்காமலே இருந்தது. அவரை காங்கிரசுக்கு கொண்டு வருவதில் மும்முரமா இருந்தவர் ப.சிதம்பரம்.'' ""அவர் முன்னிலையில்தானே காங்கிரசில் இணைந்திருக்கிறார் திருநாவுக்கரசர்.

""இந்த முறை 4 நாட்கள் டெல்லியில் முகாமிட்டிருந்தும் சோனியா அப்பாயிண்ட் மெண்ட் கிடைக்கலை. அவருக்கு ப.சி மூலமா தகவல் போனப்ப, நீங்களும் ஆசாத்தும் இருந்து கட்சியில் சேர்த்திடுங்கன்னு சொல் லிட்டாராம் சோனியா. இதையடுத்து, தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவை அவசரமா டெல்லிக்கு அழைத்து, குலாம்நபி ஆசாத், ப.சிதம்பரம் முன்னிலையில் திருநாவுக்கரசரை காங்கிரசில் சேர்த்துக்கிட்டாங்க.''""தனியாக ஒரு இணைப்பு விழா நடக்கும்னும் அறிவிக்கப்பட்டிருக்குதே!''""திருநா வுக்கரசர் தன்னோட ஆதரவாளர்களோடு திருச்சியில் டிசம்பர் மாதம் இணைப்பு விழாவை பிரமாண்டமா நடத்த திட்டமிட்டிருக்கிறார். அதில் சோனியா கலந்துக்குவாராங்கிற எதிர்பார்ப்பும் இருக்குது. திருநாவுக்கரசர் காங்கிரசில் சேர்ந்துவிட்டாலும் அவரோடேயே இதுநாள்வரை அரசியல் பயணம் மேற்கொண்ட கவிஞர் காசிமுத்து மாணிக்கம் போன்ற தீவிர ஆதரவாளர் கள் தி.மு.க பக்கம் போவதற்கு பேச்சு வார்த்தை நடத்திக்கிட்டிருக்காங்க.''""நானும் காங்கிரஸ் தரப்பு தகவல் சொல்றேம்ப்பா.. இது புதுச்சேரி மேட்டர். புதுச்சேரி கடற்கரையில் மகன் கண் முன்னேயே தாய்க்கும் மகளுக்கும் நடந்த பாலியல் கொடுமை பற்றி நம்ம நக்கீரனில் வெளியாகியிருந்த செய்தி ஒட்டுமொத்த மாநிலத்தையும் பரபரப் பாக்கியிருந்தது. சமீபத்தில் மத்திய அமைச்சர் நாராயணசாமி நிதியி லிருந்து புதுவை காவலர்களுக்கு வாகனங்கள் வழங்கும் விழா நடந்தது. அதில் பேசிய நாராயணசாமி, நம்ம நக்கீரன் செய்தியை சுட்டிக்காட்டி, நக்கீரனில் இந்தளவுக்கு எழுதிய பிற காவது நடவடிக்கை எடுக்கக்கூடாதா? யாருக்காக பயந்து கிடக்குறீங் கன்னு போலீசாரை பார்த்து காரசாரமா கேட்டார். ராஜ்யசபா எம்.பி. கண்ணனும், எல்லா அரசியல்வாதி களும் ஒரு ரவுடி குரூப்பை கையில் வச்சிருக்காங்க. போலீஸ்காரங்கள் துணிச்சலா நட வடிக்கை எடுக்க ணும்னார்.''""விழாவில் புதுச்சேரி முதல்வரும் இருந்திருப்பாரே?''""மேடையிலிருந்த புதுவை முதல்வர் வைத்திலிங்கம் நொந்து போய் உட்கார்ந் திருந்தார். ஒரு சி.எம்.மே பத்திரிகை பார்த்துதான் செய்தியை தெரிஞ்சுக்க வேண்டிய அளவுக்கு பாண்டி போலீசாரின் செயல்பாடு இருக்குது. இப்படியொரு சம்பவம் நடந்ததுமே என்கிட்டே சொல்லியிருந்தா என்ன நடவடிக்கை எடுக்குறதுன்னு சொல்லியிருப்பேன். யார்யாரோ செய்ற தப்புக்கு என் தலை உருளுதுன்னு போலீஸ் அதிகாரிகள் கிட்டே கடுப்பைக் காட்டியிருக் கிறார்.''""இதுக்குப் பிறகாவது புதுவை போலீசார் பொறுப்பா செயல்படுறாங் களான்னு பார்ப்போம்.... மறுபடியும் தமிழ்நாட்டுக்கு வர்றேங்க தலைவரே.. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் அழகிரியை குறிவைத்து பல கேள்விகளை எழுப்பணும்னும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை பெருசா கிளப்பணும்னும் அ.தி.மு.க எம்.பி.க்களுக்கு இன்ஸ்ட் ரக்ஷன் கொடுத்திருக்கிறார் ஜெ. அதோடு திருச்செந்தூர், வந்தவாசி இடைத் தேர்தல்களில் யாரை களமிறக்கலாம்னு செங் கோட்டையன்கிட்டே ரிப்போர்ட் கேட்டிருக்கிறார். திருச்செந்தூரில் அனிதாராதாகிருஷ்ணனை தி.மு.க. நிறுத்தினால் அ.தி.மு.க மா.செ. சண்முகநாதன், சுப்ரமணிய ஆதித்தன், கார்னட் வைகுண்டராஜனின் தம்பி இந்த மூவரில் ஒருவரை நாம நிறுத்த லாம்னு செங்கோட்டையன் ரிப்போர்ட் கொடுத் திருக்கிறார். இதில் வைகுண்டராஜனின் தம்பி நான் ஆட்டத்துக்கு வரலைன்னு சொல்லிட்டாராம். அதனால டாக்டர் வெங்கடேஷை நிறுத்தலாமா அல்லது முந்தைய இடைத்தேர்தல் போல இதையும் புறக்கணிக்கலாமான்னு ஜெ. யோசிச்சுக்கிட்டி ருக்கிறார்.''""நான் சொல்லப்போறதும் இடைத் தேர்தல் நியூஸ்தான்.மேற்குவங்கத்திலும் கேரளா விலும் நடந்த இடைத்தேர்தல்களில் மார்க் சிஸ்ட் கட்சிக்கு ஏற்பட்டுள்ள அதிர்ச்சித் தோல்வியையடுத்து, கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்தை மாற்றணும்ங்கிற கோஷம், சி.பி.எம் தோழர்களிடம் அதிகமாகி யிருக்குது.''

அஜீத் - விஜய் ரகசிய சந்திப்பு அதிரடி ப்ளான்

தமிழ் சினிமா தொடங்கிய காலத்திலிருந்தே இருக்கிற சங்கதிதான் அது. ஒரே கால கட்டத்தில் எத்தனை ஹீரோக்கள் ஃபீல்டில் இருந்தாலும் இரண்டு பேர் மட்டுமே சினிமா வின் அடையாள நட்சத்திரங்களாக இருப்பார் கள். பெரும்பான்மை ரசிகர்கள் அந்த இரு நட் சத்திரங்களின் ரசிகர்களாக இருப்பார்கள். எம்.கே.தியாகராஜ பாகவதர் - பி.யூ.சின்னப்பா என ரசிகர்கள் பிரிந்து கிடந்தார்கள். பாகவதர் மென்மையான கதைகளில் நடித்து வந்தார். சின்னப்பா வீரதீர கதைகளில் நடித்து வந்தார். அடுத்தபடியாக எம்.ஜி.ஆர்.-சிவாஜி காலம். வாள்வீச்சு வீரன் என பெயர் பெற்றவர் எம்.ஜி.ஆர். ஒரு கட்டத்தில் அரசர்கால கதைப்படங்கள் ஓய்ந்து முழுக்க சமூகப் படங்கள் உருவாகத் தொடங்கியிருந்தது. அப்போது ஒரு கல்யாண நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆரும், சிவாஜியும் சந்தித்துக் கொண்டார்கள். ""என்னண்ணே.... இனிமே உங்க கத்திச் சண் டைக்கெல்லாம் வேலை இல்லாமப் போச்சே என்ன செய்யப் போறீங்க?' என சிவாஜி கேட்க... "நானும் சமூகப் படங்களில் நடிக்க முடிவு செஞ்சிருக் கேன்'’என எம்ஜிஆர் சொன்னார். "அதெல்லாம் உங்களுக்கு சரிப்பட்டு வராதுண்ணே'’என சிவாஜி சொல்ல... விழாவுக்கு வந்த வி.ஐ.பி.கள் பலரிடமும் "பாருங்க கணேசு தம்பி இப்புடி சொல் லீருச்சே' என ஆதங்கப்பட்டார் எம்ஜிஆர். ஒரு சவாலாகவே இறங்கி சமூகப் படங்களின் மூலம் மாஸ் ஹீரோவாக உயர்ந்தார் எம்ஜிஆர். குணச்சித்திர நாயகனாக வாழ்ந்து காட்டினார் சிவாஜி. இருவரும் வேறு வேறு பாதையில் பயணித்தாலும்கூட அவர்களின் அரசியல் பின் புலம் காரணமாக அவர் களின் ரசிகர்கள் கடு மையாக மோதிக் கொண்டார்கள். எம்.ஜி.ஆரும், சிவாஜியும் சேர்ந்து நடித்த "கூண்டுக்கிளி' படம் திரையிடும் போதெல்லாம் இருதரப்பு ரசிகர் களும் கடுமையாக மோதிக்கொள்வார்கள். 1980-களில்கூட கூண்டுக்கிளி மதுரையில் வெளி யிடப்பட்டபோது சிவாஜி ரசிகர் ஒருவர் சைக்கிள் ஸ்டாண்ட்டில் வைத்து படுகொலை செய்யப் பட்டார். அதன் பிறகுதான் ஒரு நல்லெண்ண அடிப்படையில் ‘"கூண்டுக்கிளி' படத்தை திரை யிடுவதில்லை என தியேட்டர்-விநியோகஸ்தர் தரப்பினர் முடிவெடுத்தனர்.
அடுத்த தலைமுறையில் ரஜினி ரசிகர்களும், கமல் ரசிகர்களும் பயங்கர வன்முறையில் ஈடுபட்டார்கள். ஆரம்பகாலங்களில் இருந்தே கமல் வித்தியாசமான படங்களில் நடித்து வந்தாலும் கூட ஒரு கட்டத்தில் ரஜினி போல் கமலும் மாஸ் ஹீரோவாக முடிவு செய்தார். ஒரே நாற்காலிக்கு இருவரும் குறி வைத்ததால் இருதரப்பு ரசிகர்களும் கடுமையாக மோதிக் கொண்டனர். இந்த ஹீரோக்களும் ஒருவரை ஒருவர் தங்கள் படங்களில் சாடிக்கொண்டனர். அதன்பின் கமல் வித்தியாசமான படைப்புகளில் கவனம் செலுத்த... மாஸ் ஹீரோ நாற்காலி ரஜினிக்கு கிடைத்தது.இப்போது விஜய்க்கும், அஜீத்துக்கும்தான் போட்டி. அஜீத் அவ்வப்போது வித்தியாசமான கெட்-அப்களில் நடித்து வந்தாலும் விஜய் போலவே மாஸ் ஹீரோ நாற்காலியைத்தான் விரும்புகிறார். அதனால் இவர்களிடையே போட்டி கடுமையாக இருக்கிறது. அவரின் ரசிகர்களும் அதனால் மோதல் போக்கையே கடைப்பிடித்து வருகிறார்கள்.அஜீத்தும், விஜய்யும் பெரிய நட்சத்திரங்களாக உருவெடுப்பதற்கு முன் "ராஜாவின் பார்வையிலே' படத்தில் சேர்ந்து நடித்தார்கள். அந்தப் படத்தில் விஜய்க்குத்தான் முன்னுரிமை கொடுக்கப்பட்டது. அதன்பின் இருவரும் தனித்தனியே அசுர வளர்ச்சியை நோக்கி விரைந் தார்கள். அப்போதெல்லாம் அவர்களுக்கிடையே எந்த மோதலும் கிடையாது. அஜீத்தும் பல ஹிட்களை கொடுத்த பிறகு 'அஜீத்தையும், விஜய்யையும் சேர்ந்து நடிக்க வைத்தால் என்ன? என்கிற ஐடியாவில் இறங்கியது மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம். வசந்த் இயக்கத்தில் "நேருக்கு நேர்' படம் ஆரம்பிக்கப்பட்டது! படத்திற்கும் பயங்கர எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில் ‘கதையில் தனக்கு முக்கியத்துவம் இல்லை' என்று தெரிந்த அஜீத் படத்திலிருந்து விலகிக் கொண்டார். (அஜீத்திற்குப் பதில் சூர்யா நடித்தார்) அந்த சம்பவத்திலிருந்துதான் அஜீத்-விஜய் போட்டி தொடங்கியது. "கல்லூரி வாசல்' படத்தில் பிரசாந்த்தும் அஜீத்தும் சேர்ந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் மனக்கசப்பு. எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற நியதிப்படி திடீரென விஜய்யும், பிரசாந்த்தும் சந்தித்து பரபரப்பு மூட்டினார்கள். இதனால் அஜீத்தை தனிமைப்படுத்துவது போல ஒரு தோற்றம் அப்போது கோலிவுட்டில் நிலவியது. அதற்கேற்ப அஜீத்தும் தொடர் தோல்விகளை சந்தித்து வந்தார். பிரசாந்த்தும், அப்பாஸும் சேர்ந்து நடிக்கவிருந்த "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்தில் கதாநாயகி விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரசாந்த் விலக... விஜய்-பிரசாந்த் கூட் டணிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அஜீத் அந்த படத்தில் நடித்தார். இப்படி பிரசாந்த் தை நடுவில் வைத்து அஜீத்-விஜய் மோதல் கொஞ்சநாள் நடந்தது. அடுத்து விஜய் தோல்வியை தொடர்ந்து சந்தித்துவிட்டு "குஷி' படம் மூலம் எழுந்தார். அந்தப் படத் தில் ‘என்னைய மட்டுமில்ல.... என் இமேஜைக் கூட ஒன்னால ஒண்ணும் பண்ணா முடியாது' என பஞ்ச் டயலாக் பேசினார் விஜய்.
அஜீத் தன்னை "தல'யாக "தீனா' படத் தில் சொன்னார். உடனே "திருமலை' படத்தில் ‘"இங்க எவண்டா தல?' என டயலாக் பேசினார் விஜய்! இப்படி மாறி மாறி மோதிக்கொண் டார்கள். இதனால் அவரின் ரசிகர்களும் அடித்துக்கொண் டார்கள்."ஏகன் அப்படின்னா அழிக்கும் கடவுள் சிவன். ஆனா இந்த ஏகன் புரொடி யூஸரையும் சேத்து அழிச்சுட் டான்' என விஜய் தரப்பு மெஸேஜ் அனுப்புவதும், ‘"வில்லு' படம் பார்த்த குழந்தைகளுக்கு வாந்தி பேதி. படத்தை தடை செய்யச் சொல்லி மக்கள் அரசுக்கு கோரிக்கை' என அஜீத் ஆட்கள் பதில் மெஸேஜ் தர... இப்படி விஞ்ஞான வளர்ச்சியையும் தங்கள் மோதலுக்கு பயன்படுத்திக் கொண்டார்கள். இந்நிலையில்... கடந்த 5-ந் தேதி ஏவி.எம். ஸ்டுடியோவில் "அசல்' படத்தின் சண்டைக் காட்சியில் நடித்துக் கொண்டிருந்த அஜீத்தும், "சுறா' படத்தின் பாடல் காட்சியில் நடித்துக் கொண்டி ருந்த விஜய்யும் காலை 11.30 மணியளவில் சந்தித்துப் பேசிக் கொண்டார்கள்!இந்த சந்திப்பிற்கான வாய்ப்பு இப்போது இருவருக்கும் கிடைத்தாலும் மூன்று மாதத்திற்கு முன்பி ருந்தே இவர்களை சந்திக்க வைக்க கணேஷ் எனும் தொழிலதிபர் முயற்சி எடுத்து வந்தார்! இரு வருக்கும் பொதுவான நண்பரான கணேஷ் ஒரு சமரச திட்டத்தையே தயாரித்து இருவரிடமும் மாறிமாறி பேசி வந்தார். அந்த திட்டம்?விஜய் படமும், அஜீத் படமும் ஒரே நாளில் வெளியாகிறது; அவரவர் ரசிகர்கள் படத்தை பார்க்கிறார் கள். இந்த இரண்டு படத்தில் எது நல்ல படம் என தெரிந்து கொண்ட பிறகே பொதுவான ரசிகர்கள் அந்த படத்தை மட்டும் பார்க்கிறார்கள். இதனால் ஒருவர் படம் ஹிட். மற்றவர் படம் தோல்வியடைகிறது. வருடத்துக்கு ஒருபடம் தரும் அஜீத்தும், விஜய்யும் அதை ஒரேநாளில் தராமல் பொங்கலுக்கு விஜய் படம் என்றால், சித்திரைக்கு அஜீத் படம், தீபாவளிக்கு விஜய் படம், பொங்கலுக்கு அஜீத் படம்னு வெளியிடலாம். இதனால் இருவர் படமும் தொடர்ந்து வெற்றி பெறும். இதன் மூலம் இருவரும் தங்கள் இமேஜை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள முடியும். இதுதான் அந்த நண்பரின் சமரச திட்டம்! இந்த திட்டம் குறித்து விஜய்யும், அஜீத்தும் சந்தித்து பேசிக்கொள்ள முடிவும் செய்யப்பட்டி ருந்த நிலையில் சந்திப்பிற்கான தோது இல்லாமலேயே இருந்தது. ஆனால் அந்த வாய்ப்பு ஏவி.எம்.மில் அமைந்துவிட்டது!அஜீத் வந்து விஜய்யை சந்திப்பதா? விஜய் வந்து அஜீத்தை சந்திப்பதா? என்கிற கேள்விக்கு இடம் தராமல் விஜய் தன் செட்டிலிருந்து நடந்து செட் வாசலுக்கு வந்தார். அதற்குள் அஜீத் விஜய் யின் செட்டுக்குள் நுழைய.... . "சுறா' யூனிட்டுக்கு செம ஷாக்! விஜய் புன்னகைத்தபடி அஜீத்தை கை குலுக்கி வரவேற்றார். இருவரும் யூனிட்டில் இருந்தவர்களிடம் கேஷுவலாக பேசிவிட்டு அதன்பின் தனியே அமர்ந்தார்கள்! இருவரும் பரஸ்பரம் குடும்ப நலன் விசாரித்துக் கொண்ட னர். இருவருக்கும் பழரசம் தரப்பட்டது. அஜீத்தின் கிருதாமீசை கெட்-அப்பை விஜய் பாராட்டினார். தொடர்ந்து.... தீபாவளிக்கு தனது "வேட்டைக் காரன்' படம் வெளிவராமல் போனதன் பின்னணியையும் அதனால் தனக்கு ஏற்பட்ட மனவருத்தங்களையும் அஜீத்திடம் பகிர்ந்து கொண்டாராம் விஜய். தங்களின் பட வெளியீடு சம்பந்தமான சமரச திட்டத்தின் மீதும் ஒரு நல்ல முடிவுக்கு வந்திருப்பதாக தெரிகிறது. இனி தொடர்ந்து நட்புறவுடன் செயல்படுவது என்றும், இதனால் தங்களின் ரசிகர்கள் மோதிக் கொள்ளும் சூழலுக்கு இடம் தரக்கூடாது என்றும் முடிவு செய் திருக்கிறார்களாம்.ஆக... இளைய தளபதி - தல சந் திப்புதான் இப்போ தைய கோலிவுட் டின் ஹாட் டாபிக். ரசிகர்கள் மோதிக் கொண்டு ரத்தம் சிந்தா மல் இருக்க இந்த சந்திப்பு பயன்பட்டால் சரி!

ஊதிவிட்ட விவேக்: பற்றி எரிந்த பத்திரிக்கையாளர்கள்

ஒரு நடிகையை பற்றி அவதூறாக செய்தி வெளியிட்டதாக சொல்லி ஒட்டுமொத்தப் பத்திரிகையாளர்களையும் ஆபாசமாகத் திட்டித்தீர்த்தார் விவேக்.
’குவாட்டரும், கோழி பிரியாணியும்...’என்று சினிமாவில் பேசிய டயலாக்கை பத்திரிக்கையாளை நக்கலடிக்கவும் பயன்படுத்தினார்.
பின் விளைவுகள் எப்படி இருக்கும் என்று கொஞ்சமும் கவலைப்படாமல் பேசிவிட்டீர்களே சக நடிகர்களே கடிந்துகொண்டார்கள். உங்களால் ஒட்டுமொத்த நடிகர்கள் மீதும் கோபம் வரும் என்று கோபப்பட்டார்கள்.
இதெல்லாம் ஜுஜூபி என்று சிரித்த விவேக் இப்போது ’அன்றைக்கு ஒரு நாள் என் தொண்டை கட்டிப்போய் பேச முடியாமல் போயிருக்கக்கூடாதா’ என்று தன் வட்டத்திடம் நொந்து போய் புலம்பிக்கொண்டிருக்கிறாராம்.
ஆனாலும் அவரின் வில்லங்கம் மட்டும் ஓயவேயில்லை.
விவேக் கலந்து கொள்ளும் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்பதில்லை என்று பத்திரிக்கையாளர்கள் முடிவு செய்திருந்தனர்.
பத்பஸ்ரீ விருது வாங்கியதை எந்த பத்திரிக்கையும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அந்த விருது வாங்குவதற்கான தகுதி விவேக்கிற்கு இல்லை என்று அந்த விருதை தடுக்க பலர் முற்பட்டபோது பயந்து போய்தான் தனது சாதி சங்கத்திடம் முறையிட்டார்.
உன் வாய்க்கொழுப்புக்கு நீயே அவஸ்தைபடு என்று சொல்லி சாதி சங்கம் கழட்டிவிட்டது. தன் சாதியை சேர்ந்தவர்கள் மூலமாக பத்திரிக்கையாளர்களுக்கு சமாதானத்தூது விட்டுப்பார்த்தார். பிரயோசனமில்லை.
கடந்த வாரம் நடந்த ஒரு மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் சிறப்பு விருந்தினராக விவேக் கலந்து கொண்டது தெரிந்ததும், விழாவையே ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களும் புறக்கணிக்க, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கதிகலங்கிப் போனார்கள். அந்த நிகழ்ச்சி பற்றிய செய்தியே எந்த பத்திரிக்கையிலும் வராமல் போகவே,இனிமேல் விவேக்கை எந்த நிகழ்ச்சிக்கும் கூப்பிடக்கூடாது என்று முடிவெடுத்தார்களாம்.
இந்நிலையில் இன்று சென்னை பிலிம்சேம்பரில் ‘நல்வரவு’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது.
’விவேக் பேசிய வார்த்தைகள் காற்றோடு போய்விடுபவை அல்ல... காலம் உள்ளவரை பத்திரிகையாளர்கள் மீது வீசப்பட்ட அவச்சொற்கள். அவர் அன்றைக்கு அனைத்துப் பத்திரிகையாளர்களையுமே வேண்டுமென்றே திட்டினார் என்பது அவருக்கே தெரியும்.
பத்திரிகையாளர்களைப் பார்த்து மிகவும் கீழ்த்தரமாக, அருவருக்கத்தக்க வார்த்தைகளைப் பிரயோகித்த இந்த நடிகருக்கு இதுவரை பகிரங்கமாக பத்திரிகையாளர்கள் எதிர்ப்பு காட்டவில்லை.
அதற்கொரு வாய்ப்பை அவரே உருவாக்கித் தருகிறார். இந்த நிகழ்ச்சிக்கு வரும் அவருக்கு நிச்சயம் கறுப்புக் கொடி காட்டுவோம்’என்று ஆவேசமடைந்தார்கள்.
அப்புறம் யோசித்த பத்திரிக்கையாளர்கள், இது ஒரு பாடல் வெளியீட்டு விழா. இதில் போய் நாம் அபசகுணமாக எதுவும் செய்து தயாரிப்பாளர் மனதை புண்படுத்தவேண்டாம் என்று ஒதுங்கிக்கொண்டார்கள்.
நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே வில்லங்கத்தோடுதான் வந்திருந்தார். தான் பேசினால்தானே பிரச்சனை. மற்றவர்களை பேச வைப்போம் என்று உள் வேலை பார்த்திருக்கிறார்.
ஆர்.கே.செல்வமணி பேசும் போது அந்த உள் வேலை ஆரம்பமானது.
‘’அன்று பெரியக்கலைவாணர் மஞ்சள் பத்திரிக்கையை எதிர்த்து பரபரப்புக்குள்ளானார். இன்று சின்னக்கலைவாணர்...மஞ்சள் பத்திரிக்கை என்று சொல்லமாட்டேன்...மஞ்சள் செய்தியை எதிர்த்து பரபரப்புக்குள்ளாகியிருக்கிறார்...’’என்று ஆத்திரமூட்டினார்.
’இது இசை வெளியீட்டு விழா. பாடல்கள், பாடலாசிரியர், இசையமைப்பாளர், இயக்குநர், படம் பற்றி பேசுங்கள். இந்த பிரச்சனையை பேச இதுவல்ல இடம்’’என்று பத்திரிக்கையாளர்கள் ஆவேசமானார்கள்.
’இல்ல..இல்ல..அதுவந்து..’என்று செல்வமணி சமாளிக்க முடியாமல் திணறியபோது விழிபிதுங்கி உட்கார்ந்திருந்தார் விவேக்.
’அவர் பேசியது தவறுதான்..இது இசைவெளியீட்டு விழா..’என்று சிவசக்தி பாண்டியன் சமாதானம் செய்தார். வியர்த்து விறுவிறுத்துப்போன செல்வமணி, சரி,சரி என்று படத்தைப்பற்றி பேசிவிட்டு உட்கார்ந்துவிட்டார்.
விவேக் மட்டும் எதாவது வாய்திறக்கட்டும். அப்புறம் இது இசை வெளியீட்டு விழாவாக இருக்காது என்று பத்திரிக்கையாளர்கள் அமைதியானார்கள்.ஆனால் விவேக் பேச எழுந்த போது பத்திரிக்கையாளர்கள் அரங்கத்தை விட்டு வெளியேறிவிட்டார்கள்.
விவேக் பேச வரும்போது பலரும் அவர் காதில் கிசுகிசுத்து அனுப்பினார்களாம். அதன்படி இந்த பிரச்சனை பற்றி பேசவே இல்லையாம். வழக்கமாக பேசுவது போல் நக்கல்,இரட்டை அர்த்தத்துடனும் பேசவில்லையாம்.

Fonseka allowed to retire with “immediate effect”

The government information department quoted President’s Secretary Lalith Weeratunga as saying Chief of Defence Staff General Sarath Fonseka has been given permission by President Mahinda Rajapaksa to retire from service with immediate effect.

பொன்சேகா ராஜினாமா ஏற்பு: 3பக்க கடிதம்-16காரணங்கள்!

இலங்கை இறுதிப்போரில் ராணுவ தளபதியாக இருந்தவர் சரத் பொன்சேகா. அவர் இப்போது இலங்கை முப்படைகளின் தலைவர் பதவியில் இந்துவந்தார்.
இந்நிலையில் அவர் இலங்கையில் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிட முடிவு செய்துள்ளார். அதனால் அவர் முப்படைகளின் தலைவர் பதவியில் இருந்து நேற்று ராஜினாமா செய்துவிட்டார்.
மகிந்த ராஜபக்சேவுக்கு அனுப்பிய 3 பக்க ராஜினாமா கடிதத்தில், ராஜினாமா செய்வதற்கான 16 காரணங்களை எழுதியிஉருந்தார்.
அக்கடிதத்தில், ‘’இலங்கையில் ராணுவ ஆட்சி ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறார் ராஜபக்சே.
புரட்சியை தடுக்கும் பொறுட்டு அவர் கடந்த அக்டோபர் 15ல் இந்தியாவின் உதவியை நாடினார்’’என்பன உட்பட 16 காரணங்களை குறிப்பிடிருந்தார்.

யார் துரோகி?

மே 17. முள்ளிவாய்க்கால் கடற்கரை. பின் பகல். எங்கு பார்க்கினும் பிணங்களும் உயிர் ஏங்கும் காயமுற்றவர்களும். வெயிலின் வெம்மை ஒருபுறம், இடைவிடாது பொழியப்பட்ட வெடிகுண்டுகள்- எறிகணைகளின் தீ மறுபுற மென கடற்கரை மணல்வெளி கந்தகப் பரப்பாய் கிடக்கிறது. நிறைமாத கர்ப்பிணித்தாய், குனிய முடியாமல் குனிந்தும், ஊர்ந்துமாய் கொலைக் களத்தை கடக்க முயல்கிறார். வேகமாய் நகரவும் முடியாமல் அம்மணல்வெளியின் நெருப் புத் தணலை தாங்கவும் முடியாத வலியின் தவிப்பு. சற்று தூரத்தில் தன்னைப்போலொரு இளம்தாய் எறிகணை குண்டுக்கு இரையாகி இறந்து கிடக்கிறார். அவரது கால்களில் காலணி அப்படியே இருக்கிறது. ஊர்ந்து நகர்கையில் எறிகணை தாக்கியிருக்க வேண் டும். உயிரோடு தவிக்கும் இந்தத்தாய் மெல்ல மாய் பிணமாகக் கிடந்தவ ரின் காலணிகளை அகற்றி, தான் அணிந்து கொள்கிறார். மரண நிழல் கவிந்த மண்ணில் பயணம் தொடர்கிறது. உயிர்தப்பி வவுனியா வந்து, வதை முகாமில் பதிவாகி, ஆண்பிள்ளையொன்றை பெற்றெடுத்து தாயாகி, இப்போது உறவினர்களின் உதவியில் கொழும்பு வந்துவிட்டார். ஆனால் கந்தக நிலத்தில் தனக்கு காலணி தந்த உயிரற்ற அந்தத் தாயின் காட்சியும் நினைவும் சதா அவரைப் பிழிகிறது. ஆறுதலின்றித் தவிக்கிறார். ஆற்றுப்படுத்தல் (Counselling) அருட்பணி செய்துவரும் அருட் தந்தையொருவர் பகிர்ந்துகொண்ட அனுபவம் இது. போர்க்கொடுமைகளை அனுபவித்தும் பார்த்தும் வந்த அப்பாவி மனித ஜீவன்களின் கதைகளையும் அவர்களை ஆற்றுப்படுத்துவதிலுள்ள சவால்களையும் அவர் விவரிக்க மனது தாங்கவில்லை. ஒன்றல்ல, இரண்டல்ல... அவலத்தின் நெடுங்கதையாய்...
பதினாறு வயதில் விடுதலைப்போரில் இணைந்த அந்த மாணவன் இரு வாரங்களுக்கு முன்புவரை உயிரோடிருந்த இளைஞன். வயது 26. கடைசி சண்டையில் வீரமரணம் தழுவாது உயிரோடிருந்தவர்களில் ஒருவர். காடு கடலென அலைந்து பிறந்த ஊர் வந்திருக்கிறார். உறவுகள் உயிரோடிருக் கிறார்களா, இருந்தால் எங்கே என்ற விபரங் களெல்லாம் தெரியவில்லை. காட்டிக்கொடுக் கும் பலர் ஊருக்குள் ஊடுருவியிருப்பது மட்டும் அவனுக்குத் தெரிகிறது. சரணடைய முடிவெடுத்து அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியை நாடுகிறான். ""சண் டைக் களத்தில் மட்டுமே சரணடையும் ஒழுங்குகளை செஞ்சிலுவைச் சங்கம் செய்ய முடியும். போர் முடிந்ததாய் அறிவிக்கப்பட்ட பின் தங்களால் அதைச் செய்யமுடியாது'' என்பதை எடுத்துச் சொல்லும் அவர்கள் வேறொரு தொண்டு நிறுவனத்தோடு அவனை தொடர்புபடுத்திவிட்டார்கள். அந்நிறுவனம் அத்தமிழ் இளைஞனை காவல்நிலையத்தில் ஒப்படைத்து தயவு செய்து சித்ரவதை எதுவும் செய்யாதீர்கள், போர்க் கைதியாய் நடத்துங் கள் என மன்றாடி விடைபெறுகிறது. நான்கு நாட்களுக்குப்பின் அந்த இளைஞனின் பிணத்தை பெற்றுக்கொள்ளும்படி காவல்நிலை யத்திலிருந்து செய்தி வருகிறது. ""முல்லைத் தீவில் புலிகள் ஆயுதங்களை புதைத்து வைத் திருக்கும் இடங்களை அடையாளம் காட்டக் கூட்டிச் சென்றோம். தப்பியோடி நந்திக் கடலில் குதித்து தற்கொலை செய்துகொண் டார்'' என்று மிகச் சாதாரணமானதோர் செய்தியாகச் சொல்லி விடை கொடுத்திருக் கிறார்கள்.

ஊரறியாமல் உலகறியாமல் இன்னும் எத்தனை தமிழ் உயிர்கள் அறுக்கப்படுகின் றன... எத்தனைபேரது தாய்மை மலடாக்கப் படுகிறதென்பதெல்லாம் நமக்குத் தெரியாது. உலக அளவில் மிகவும் மதிக்கப்படும் ""மனித உரிமைகள் கண்காணி (HRW) என்ற அமைப்பின் ஆசிய இயக்குநர் பிராட் ஆடம்ஸ் சமீபத்தில் இலங்கையின் இன்றைய மனித உரிமைகள் நிலை பற்றி குறிப்பிட்டுக் கூறியிருக்கிறார். ""மனித உரிமை களைப் பொறுத்தவரை உலகில் மிக ஆபத்தான நாடுகளில் ஒன்றாக ஸ்ரீலங்கா இன்று திகழ்கிறது. ஒரு தேசத்தின் உள்நாட்டுச் சட்டங் களுக்கு உள்ள அனைத்து தன்மை களும் மனித குலத்திற்குப் பொது வாகவென வார்க்கப்பட்டுள்ள அனைத்துலக மனிதாபிமானச் சட் டங்களுக்கும் உண்டு. அச்சட்டங் களை ஒருபொருட்டாக ஸ்ரீலங்கா மதிக்கவில்லை. மிகக்குறைந்தபட்சம் போர்க்கைதிகளையும், அகதி மக்களையும் முறைப்படி பதிவு செய்யும் கடமையைக்கூட ஸ்ரீலங்கா செய்ய வில்லை.''

பின் நவீனத்துவ (Post Modernism) கருத்தியல் விரிந்து வேரூன்றிய இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தையதான காலத்தில் மனிதகுலத் திற்குப் பொதுவான மனிதாபிமானச் சட்டங்களை அரசியற் களத்திற்கு நகர்த்துகின்ற ஆற்றலாக விழிப்புணர்வு பெற்ற குடிமக்களாலான "பொதுவெளிகள்'' (Civil Society) முன்னின்று முக்கிய பங்காற்றியுள்ளன. ஈழத்தமிழ் மக்களுக்கான அத்தகு பொதுவெளிகள் தமிழர் செறிவுடன் வாழும் ஐரோப்பிய - வடஅமெரிக்க நாடுகளில் இன்று வலுவாக உருவாகி வருவதை அவதானிக்க முடிகிறது. அப்படியான பொதுவெளி தமிழகம்-இந்தியாவில் வேண்டுமென்பதும், ஈழ மக்களுக்காய் இந்திய மக்களாட்சி அமைப்புகள், அலகுகள், அரசியற்கட்சி களுடன் உரையாடுகின்ற, வாதாடுகின்ற, மன்றாடுகின்ற பணியில் அத்தனை அரசியற் சக்திகளோடும் அப்பொதுவெளி ஈடுபட வேண்டுமென்பதுமே நம் அவா.நக்கீரன் படிக்கிறவர்களில் சிலர் என்னைக் கேட்பது ""நீங்கள் ஏன் கலைஞரை விமர்சிப்பதில்லை?'' இக் கேள்விக்கான பதில் இதுதான் : நாற்பதாண்டு கால விடுதலைப் போராட்டம் கொடூரமாகச் சிதையுண்டு, சகல நம்பிக்கைகளும் தகர்ந்து போய் எதிர்காலம் சூன்யமாகி நிற்கும் அம்மக்களுக்கு நாம் ஏதேனும் உண்மையில் செய்யக்கூடுமானால் அது "அம்மக்களுக் கானதோர் பொது அரசியல், மனிதாபிமானக்' கருத்தினை இங்கு உருவாக்குவது, அதை நம் நாட்டின் அரசாங்கக் கொள்கையாக மாற்றிட அரசியற் கட்சிகள், ஊடக வெளி, பாராளுமன்றம் என பன்முகக் களங்களூடே உழைப்பது. அதை விடுத்து ஈழமக்களின் பேரழிவை கலைஞருக்கும் தி.மு.க.விற்கும் எதிரான அரசியலாக இங்கு கட்டமைக்க முயல்வது அம் மக்களுக்கு எப்பயனையும் தந்துவிடப் போவதுமில்லை, இன்றைய சூழலில் அத்தகு அணுகுமுறை ஏற்புடையதுமல்ல. கட்சி அரசியல், தேர்தல் அரசியல் என்ற முரண்பாடுகளுக்குள் சிக்கி கந்தலாகிக் கிடக்கும் ஈழப்பிரச்சனையில் மிச்சமிருக்கிற சன்னமான சிறு நம்பிக்கைகளையும் பட்டுப்போகச் செய்கிற அணுகுமுறையாகவே அது அமையும். இன் னொன்று கலைஞருக்கோ, தி.மு.க.விற்கோ துரோகி என்று பட்டம் சுமத்துகிற பவித்திர நிலையில் இங்கு எந்த அரசியற் கட்சி களும், தலைவர்களும் இல்லை.ராஜபக்சே கும்பலின் இனவெறி உச்சம் தொட்டு பேரழிவின், தமிழின அழித்தலென்ற ஊழிக்கூத்து முள்ளிவாய்க்காலை நெருங்கிக் கொண்டிருந்த தருணத்தில், யாருடைய பாதங்களில் விழுந்து அப்பேரழிவைத் தடுக்கலா மென கட்சி பலமெல்லாம் இல்லாத சாதாரண உணர்வாளர்கள் இரவு பகலென அங்குமிங்கும் அலைந்து திரிந்த காலை ""இந்தக் கூட்டணிக்கு ஆதரவாய் அறிக்கையொன்று விடுங்கள்'' என விடுதலைப்புலிகள் இயக்க அரசியற்பிரிவு பொறுப் பாளர் நடேசன் அவர்களுக்கு உரைத்தவர்களுக் கெல்லாம் நிச்சயமாய் அந்த ஒழுக்க தார்மீகம் இல்லை.மிக முக்கியமாக ஈழ விடுதலைப் போராட் டத்தின் வேதனையான பின்னடைவுக்குக் காரணம் ஏதோ தமிழகமும் தமிழகத் தலைவர் களும்தான் என்பது போன்ற விவாதம் பிரச் சனையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திடத் தேவையான புரிதல்களையும் சுருக்குகிறது. விடு தலைப் போராட்ட பின்னடைவுக்கும் அம்மக்களின் அவலங்களுக்கும் முக்கிய காரணங்கள் பல. வெறிபிடித்தாடும் பௌத்த சிங்களப் பேரினவாதம் முதற் காரணம். தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதம் என உலகம் ஏற்றுக்கொள்ள வைத்ததில் சிங்களப் பேரினவாதம் பெற்ற வெற்றியும் அக்களத்தில் ஒன்றிணைந்து திறம்பட இயங்கி தமிழரின் அரசியல் சுயநிர்ணய உரிமையை உலகம் அங்கீகரிக்கச் செய்வதில் உலகத்தமிழ்ச் சமுதாயம் தவறியமையும் இரண்டா வது காரணம். இந்தியப் பெருங்கடல் அரசியலில் அமெரிக்க மேலாதிக்கத்தை இடைமறிக்கவேண்டி சீனா, ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகள் ஸ்ரீலங்கா வுக்கு அள்ளித்தந்த பேராயுதங்களும், பெருநிதியும் உலக ராஜதந்திர உதவிகளும் மூன்றாவது கார ணம். ஈழம் மலர்ந்தால் தமிழகத்தில் பிரிவினை வாதம் தலைதூக்குமென்ற கருதுகோளினடிப்படை யில் தமிழினம் அழிந்தாலும் பரவாயில்லை விடு தலைப்புலிகள் இயக்கம் நசுக்கப்படவேண்டுமென நிலையெடுத்து ஸ்ரீலங்காவுடன் போரில் இணைந்து நின்ற இந்தியாவின் கொள்கை நிலைப்பாடு நான்காவது காரணம்.

உலகில் சிங்களவர் எண்ணிக்கை ஒரு கோடி. தமிழர்களோ எட்டு கோடிக்கும் மேல். எனினும் இனத்தைக் காக்கும் அக்கறையில் இணைந்து நிற்க முடியாத இந்த தமிழினத்தின் குறிப்பாக இந்தியத் தமிழகத்தின் சாபக்கேடு இறுதி காரணம். இன்னும் சிறு சிறு, சில பல காரணங்களையும் சேர்க்கலாம். ஆக, பெரியதோர் வரைபடத்தில், ஈழ விடுதலைப் போராட்ட பின்னடைவுக்கான காரணங்கள் மிகப்பல. தொடர்ந்த பயணத்திற்கு இந்தப் புரிதல் மிக முக்கியமானதென்பதால்தான் நமக்குள்ளேயே ஒருவருக்கொருவர் துரோகப் பட்டங்கள் சுமத்துவதைத் தவிர்த்தல் நலமென்றும், இணைந்து குறைந்தபட்ச பொதுக்கருத்தும் திட்டமும் வகுத்தல் சிறப்பென்றும் நம்பி, வலியுறுத்தி அதற்காக வாதிடுகிறோம்.எனவேதான் அரசியல்மாச்சரியங்களுக்கு அப்பால் பொதுவெளிகள் (Civil Society) உருவாவதை முக்கியமானதாய் அடிக்கோடிடுகிறோம். அத்திசையில் ""போருக்கெதிரான பத்திரிகையாளர்'' என்ற அமைப்பின் சுமார் இருபது பத்திரிகையாளர்கள் இணைந்து ஆக்கியுள்ள ""ஈழம் : நமது மௌனம்'' என்ற புத்தகத்தை பற்றி கடந்த இதழில் குறிப்பிட்டிருந்தோம். அப்புத்தகத் தில் நடிகர் கமல்ஹாசன் அவர்களின் பதிவு செறி வுடைத்ததாயிருந்தது.
காக்க ஒரு கனக (AK) 47நோக்கவும் தாக்கவும் ஒரு நொடி நேரம்தோற்கவும் அதே கண நேரம்தான்ஈயம் துளைத்துக் கசிந்து சிவந்தகாயம் தொட்டுக் கையை நனைத்துவிண்ணே தெரிய மண்ணில் சாய்ந்தேன்முன் காக்க மறந்த அமைதியைக் காத்து.மாட்டுத் தோலில் தாய்மண் அறைபடபூட்ஸுக் கால்களால் கடந்தனர் பகைவர்.விட்ட இடத்தில் கதையைத் துவங்கச்சட்டென இன்னொரு குழந்தை பிறக்கும்அதுவரை பொறுத்திரு தாயே, தமிழேஉதிரம் வடியும் கவிதை படித்து...சத்குரு ஜக்கி வாசுதேவ்-""வாழ்க்கையை இழந்தவர்களுக்காகவும்இனி வாழ இருப்பவர்களுக்காகவும்அநீதியை சுட்டிக்காட்டும் துணிவை நாம் பெறுவோம்''
-என தனது பதிவில் நம் அனைவரையும் அழைத்திருந்தார். ...இப்படி புகழ்பெற்ற நூறுபேர் ஈழத்து மானுடத்திற்காய் அணிவகுக்கிறார்கள்.புத்தக வெளியீடு வரும் நவம்பர் 14 சனி மாலை 4.30 மணிக்கு, 13 காசா மேஜர் சாலை, எழும்பூரிலுள்ள டான்போஸ்கோ பள்ளி அரங்கில் நடைபெறும். அனைவரும் வாருங்கள். உடன் பலரை அழைத்தும் வாருங்கள்.


பலரும் அறிய காதல் லீலை - பாழாகிறது சமூக ஒழுங்கு

தெரிந்தும்... தெரியாமலும் பலரும் அறிய காதல் லீலை :

பாழாகிறது சமூக ஒழுங்கு இது போன்ற குஜால் குமாரிகள் ஒவ்வொருவரும் இளம் வயதிலேயே அனைத்து சல்லாப சுகங்களையும் அனுபவித்து முடித்தபின், நல்ல பிள்ளை போல் நடித்து இன்னொரு விட்டில் பூச்சி ஆணைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள். "பேஷான ஜாதகம் போங்கோ. தசவிதப் பொருத்தமும் என்னமா அமைஞ்சிருக்கு" என்று புருடா விடும் ஜோசியனை நம்பியும், "அப்படியே மகாலட்சுமி மாதிரி இருக்காள்" என்று அசடு வழியும் கிழங்களின் சொற்படியும், ஒன்றையும் விசாரிக்காமல் இந்த ஜல்சா குமாரிகளை மணந்து கொள்ளப்போகிறார்கள் சில முட்டாள் ஆண்கள்.

இந்தப் பெண்களோ பழைய சல்லாபங்களை மறக்க முடியாததால் இல்லற வாழ்வில் மனம் பதிக்க மறுத்து கணவன் வீட்டிலிருந்து ஓட்டம் பிடித்துவிட்டு, அவனிடமிருந்து பணம் கறப்பதற்காக, "என் கணவனுக்கு ஆண்மை போதவில்லை. நான் செக்ஸில் திருப்தியே அடையவில்லை. அதனால் கணவன் எனக்கு 2 கோடி ரூபாய் கொடுக்கவேண்டும்" என்றும், "என்னை வரதட்சணை கேட்டு கணவன் வீட்டில் இருக்கும் 6 மாதக் குழந்தை தொடங்கி அவர்கள் வீட்டில் என்னைக் கடித்த கொசு வரையில் அனைவரும் பெரும் கொடுமை செய்தனர்" என்றும் புகார் கொடுப்பார்கள். மேலும் அதில் உப்பு, காரம் சேர்ப்பதற்காக, "கணவனுடைய 80 வயதான (தன் கையையே தூக்கச் சீவனில்லாத) தந்தை என்னைக் கையைப் பிடித்து இழுத்தார்", "75 வயதான என் மாமியார் 25 வயதான என்னை உதைத்தார்" என்று அந்தப் புகாரை அலங்காரம் செய்வார்கள். முத்தாய்ப்பாக, "இத்தகைய கொடுமைகளை எனக்கு இழைத்ததால் Sec 498A சட்டப்படி அவர்களைக் கைது செய்து உள்ளே போட வேண்டும். மேலும் அவர்கள் வீட்டை எனக்குக் கொடுத்துவிட்டு அவர்கள் நடுத்தெருவில் நிற்க வேண்டும். தவிர எனக்கு மாதா மாதம் 1 லட்ச ரூபாய் மெயிண்டெனன்ஸ் கொடுக்க வேண்டும்" இப்படிச் சொல்லிக் கேசு போட்டு நாற அடிப்பார்கள்.

உடனே அந்த லிஸ்டில் கண்ட அனைவரும் ஒரு வெள்ளிக்கிழமை சகல சௌபாக்கியங்களும் நிறைந்த நன்னாளின் நள்ளிரவில் கைது செய்யப்படும் சிறப்பும் நடந்தேரும். மேலும் இவர்கள் கேட்ட பணத்தையெல்லாம் கொடுக்கச் சொல்லி ஆணைகளும் வழங்கப்படும்!இது போன்ற காதல் லீலைகள்தான் எதிர்வரும் கள்ளக்காதல், 498A, விவாகரத்து போன்ற சடங்குகளுக்கு அடித்தளம்!சரி. இப்போது இன்றைய(நவம்பர் 11,2009)தினமலர் இணைய இதழில் வெளிவந்துள்ள சமூகப் பிரக்ஞையை வெளிப்படுத்தும் இந்தக் கட்டுரையை வாசியுங்கள் தொடர்ந்து அதன் இணையப் பக்கத்தில் கட்டுரைக்குக் கீழே நம் மக்கள் பதிந்துள்ள கருத்துரைகளையும் சற்றே காணுங்கள்!

கோவை மாநகராட்சி வ.உ.சி., பூங்கா மற்றும் மிருகக்காட்சி சாலையில் ஆண், பெண் ஜோடிகள் பொது இட மென்றும் பாராமல் ஒழுங்கீனமான செயலில் ஈடுபடுகின்றனர். சமூக ஒழுங்கை சீர்குலையச் செய்யும் இவர் களை, மாநகராட்சி நிர்வாகமும், போலீசும் வேடிக்கை பார்ப்பது மக்களை முகம் சுழிக்க வைக்கிறது.
கோவை நகரவாசிகள், பள்ளி மாணவ, மாணவியரின் பிரதான பொழுது போக்கும் இடம் வ.உ.சி., பூங்கா மற்றும் மிருகக் காட்சி சாலை. பூங்கா மாலை 4.00 மணிக்கு திறக்கப்படுகிறது. மிருகக் காட்சி சாலை, செவ்வாய் தவிர பிற நாட்களில் காலை 10.00 முதல் மாலை 7.00 மணி வரை செயல்படுகிறது. மிருகக் காட்சிசாலையை பார்வையிட நகர் பகுதி பள்ளிகளில் இருந்து மட்டுமின்றி, புறநகர் பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியரும் அதிகம் வருகின்றனர்.
ஒழுங்கீன செயல்கள்: வ.உ. சி., பூங்கா மாலை 4.00 மணிக்கு திறக்கப்பட்டதும் ஆண், பெண் ஜோடிகள் நுழைந்து ஆங்காங்கு ஆக்கிரமித்துக் கொள் கின்றனர். புல்வெளியில், புதர் மறைவில், மரத்தின் பின்னால் என பல இடங்களிலும் தனியாக அமர்ந்து சேஷ்டையில் ஈடுபடுகின்றனர். ஒருவர் மீது ஒருவர் சாய்ந்தும், மடியில் படுத்தபடியும் காதல் விளையாட்டு புரிகின்றனர். இவர்களில் பலரும் வெளியூரைச் சேர்ந்தவர்கள் என்பதால், பூங்காவுக்கு வருவோரை பற்றிய எவ்வித கவலையும் கொள்வதில்லை. சமீபத்தில், இது போன்ற ஜோடிகளின் அத்துமீறல் அதிகரித்ததை தொடர்ந்து, ரேஸ் கோர்ஸ் போலீசுக்கு அதிகளவில் புகார்கள் சென்றன. மாலை நேரத்தில் திடீர் ரெய்டு நடத்திய போலீசார், பூங்காவில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்டிருந்த ஜோடிகளை பிடித்து கடும் எச்சரிக்கைக்கு பின் அனுப்பினர். ஓரிரு நாட்கள் போலீஸ் கண்காணிப்பும் தொடர்ந்த காரணத்தால், ஜோடிகளின் சில்மிஷ வேலைகள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தன. பின்னாளில் போலீசாரின் கண்காணிப்பு படிப்படியாக குறைந்து, தற்போது அத்துமீறல்கள் மீண்டும் அதிகரித்துள்ளன. இதை வேடிக்கை பார்த்து ரசிக்கவும், மொபைல் போன் கேமராவில் படம் பிடிக்கவும் சில வாலிபர்கள் சுற்றித்திரிகின்றனர்; சில ஜோடிகளை படம் பிடித்து மொபைல் போனில் பதிவு செய்யப்பட்ட போட்டோவை காண் பித்து மிரட்டி பணம் பறித்த சம்பவங்களும் நடந் துள்ளன. எனினும் ஆண், பெண் ஜோடிகள் வருவது குறைந்தபாடில்லை.
மாணவர்கள் "கட்': வ.உ.சி., பூங்காவில் காதல் ஜோடிகளின் சில்மிஷ செயல்கள் ஒரு புறம் அதிகரித்திருக்க, மறுபுறம் பள்ளி மாணவர்கள் வகுப்பை "கட்' அடித்துவிட்டு, பூங்கா மற்றும் வ.உ.சி.,மைதானத்தில் சுற்றித்திரிவதும் அதிகம் நடக்கிறது. புத்தக மூட்டைகளை மைதானத்தின் ஓரத்தில் வைத்துவிட்டு, அங்குள்ள விளையாட்டு உபகரணங்களில் விளையாடுகின்றனர். மாலை நேரத்தில் பள்ளி வகுப்பு முடிந்து செல்வதை போல, வீட்டுக்கு கிளம்பிச் செல்கின்றனர். இந்த மாணவர்களில் சிலர் புகை பிடிக்கும் செயலிலும் ஈடுபடுகின்றனர்.
கஞ்சா ஆசாமிகள்: கஞ்சா விற்கும் நபர்கள், பாலியல் தொழிலுக்கு ஆள் பிடிக்கும் புரோக்கர் நடமாட்டமும் வ.உ.சி., பூங்கா மற்றும் மைதானம் பகுதியில் அதிகரித் துள்ளது. கையில் "பேக்'குடன் சுற்றித் திரியும் நபர்கள் கஞ்சா பொட்டலங்களை திறந்தவெளியில் சர்வ சாதாரணமாக விற்கின்றனர். இதை வாங்கவும் "வாடிக்கையாளர்கள்' வருகின்றனர். இவர்கள், பள்ளி மாணவர்களிடம் பேச்சுக் கொடுப்பதால், மாணவர்களையும் கஞ்சா புகைக்கும் பழக்கம் தொற்றிக் கொள்ளும் அபாயமிருக்கிறது. இது போன்ற சட்டவிரோத செயல்களை தடுக்கவும், பொதுமக்கள் வந்து செல்லும் வ.உ.சி., பார்க்கில் ஆண், பெண் ஜோடிகளின் அத்துமீறலை முடிவுக்கு கொண்டு வரவும் மாநகர போலீசார் கடும் நடவடிக்கை எடுப்பது அவசியம்.
ஆசிரியை ஆவேசம்: வ.உ.சி., பூங்காவுக்கு பள்ளிக் குழந்தைகளை அழைத்து வந்திருந்த ஆசிரியை கூறியதாவது: வ.உ.சி., பூங்கா மட்டுமின்றி, மிருகக் காட்சி சாலை வளாகத்திலும் சிலர் ஜோடி, ஜோடியாக அமர்ந்துள்ளனர். பலரும் தங்களை கவனிப்பார்களே, என்ற கூச்சம் கூட அவர் களிடம் இல்லாதது கவலை அளிக்கிறது. மிருகங்களை பார்வையிட பள்ளிக் குழந்தைகளை அழைத்து வந்தால், இது போன்ற ஜோடிகள் தான் அதிகம் இருக்கின்றனர். இவர்களை பிள்ளைகள் வேடிக்கை பார்த்தபடி செல்லும் போது, நாங்கள் கண்டித்து அவர்களின் பார்வையை திசைதிருப்ப வேண்டியுள்ளது. இது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண, கோவை மாநகராட்சி நிர்வாகம், கூடுதல் காவலாளிகளை நியமித்து கண்காணிக்கலாம். சில்மிஷ செயலில் ஈடுபடுவோரை, பார்க்கில் இருந்து வெளியேற்ற வேண்டும் அல்லது, பிடித்து போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு, ஆசிரியை தெரிவித்தார்.

Thursday, November 12, 2009

Fonseka says he will decide on Politics on handing over the Uniform..

Chief of Defence staff General Sarath Fonseka speaking to reporters a short while ago at the Kelaniya Rajamaha Vihara confirmed that he had handed over his retirment papers and that he will decide if he is entering politics once he officially hands over the uniform.
When asked by reporters if he had an issue with the government General Fonseka said "You have to ask that from the Government".
Fonseka also said that he had done his best for the country and now he wants to retire from the current position he holds.

Government confirms Fonseka handed over letter

The Secretary to the President Lalith Weeratunga confirmed a short while ago that Chief of Defence Staff General Sarath Fonseka has handed over a letter to the President’s office seeking to retire from his post. However Mr. Weeratunga refused to divulge the details of the letter.

General Fonseka resigns as Chief of Defense Staff

General Sarath Fonseka resigned as the Chief of Defense Staff today, UNP MP Ravi Karunanayaka told Daily Mirror Online a short while ago. General Fonseka is expected to make a former announcement over his resignation later this evening.

சரத் பொன்சேகாவிற்கு எதிராகப் போராட பல்லாயிரக் கணக்கான பிக்குகள் தயார் ?


சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி, சரத் பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடட்டால் அதற்கு எதிராக பிக்குகள் முன்னணி போராட்டம் நடத்துவதற்கு உத்தேசித்து வருவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சரத் பொன்சேகா இதுவரையில் தான் போட்டியிடுவது குறித்து உத்தியோக பூர்வமாகவோ, அல்லது உறுதியாகவோ, தெரிக்காத போதும், அவர் எதிர்கட்சிகளினால் பொது வேட்பாளராக நிறுத்தப்படலாம் எனும் நிலை படிப்படியாக உருவாகி வருகிறது.
இதனால் ஆளும் தரப்பு, சரத் பொன்சேகா தேர்தலில் நிற்பது அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே தவிர்ப்பதற்கு சகல வழிகளிலும் முயற்சித்து வருகிறது. இதன் ஒரு வழிமுறையாக தற்போதைய அரசுத் தலைவருக்கு ஆதரவு தரும் வகையில், சரத் பொன்சேகா தேர்தலில் போட்டியிட முயன்றால், பிக்குகள் முன்னணி போராட்டத்தில் குதிக்கவுள்ளது.
பிக்குகள் முன்னணி, சுமார் 15 ஆயிரம் பிக்குகளுடன் மாபெரும் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டிருப்பதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்களுக்கு ஆதரவாக மேலும் சில பெளத்த அமைப்புக்களும் போராட்டத்தில் ஈடுபடலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொழும்பில் யுத்தத்துக்கு எதிரான அமைப்ப நடத்தவிருந்த பேரணியொன்றின் இடையில் புகுந்த பிக்குமார்களும், பெளத்த அமைப்புகள் சிலவும் பெரும் குழப்பம் விளைவித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது