பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Saturday, December 19, 2009

தமிழீழத்துக்கான வாக்கெடுப்பினால் அதிர்ச்சி!

தமிழீழத்துக்கான வாக்கெடுப்பினால் அதிர்ச்சி! முறியடிப்பதற்கு சிங்கள புத்திஜீவிகள் அரசுக்கு ஆலோசனை!!
புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்களினால் எல்லா நாடுகளிலும் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் தமிழீழத்துக்கான சர்வஜன வாக்கெடுப்பு ஐக்கிய இலங்கைக்கு பாரிய ஆபத்தாக மாறவுள்ளது. ஆகவே, புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள் மேற்கொண்டுவரும் இந்த நடவடிக்கைக்கு சமாந்தரமாக சிறிலங்கா அரசு வடக்கு கிழக்கில் சிங்கள குடியேற்றங்களை தேர்தல் முடிவடைந்த கையோடு வேகமாக ஆரம்பிக்கவேண்டும் என்று சிங்கள புத்திஜீவிகள் சிலர் சிறிலங்கா அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.
வெளிநாடுகளில் உள்ள சிங்கள மக்கள் மத்தியில் இனவாத கருத்துக்களை விதைத்துவரும் குமார் மேசஸ், வோல்டர் ஜெயவர்த்தன போன்ற சிங்கள இனவாத புத்திஜீவிகள் குழுவே இந்த ஆலோசனையை சிறிலங்கா அரசுக்கு வழங்கியுள்ளது.
அந்த ஆலோசனையில் அவர்கள் மேலும் தெரிவித்திருப்பதாவது:-
புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள் எனப்படும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் சிறிலங்காவில் விடுதலைப்புலிகளின் அமைப்பின் வீழ்ச்சிக்கு பின்னர் சளைத்துவிடவில்லை. தமது மக்களுக்கான சுயநிர்ணய உரிமைக்கு சர்வதேச அளவில் ஆதரவு தேடும்வகையில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்திவருகிறார்கள்.
அந்தந்த நாடுகளில் உள்ள அரச அதிகாரிகளின் அனுசரணையுடன் அந்நாட்டு தேர்தல் கண்காணிப்புடன் முறையான தேர்தலாக இதனை நடத்தி அந்த முடிவுகளை அந்நாட்டு அரசுக்கு சமர்ப்பித்துவருகிறார்கள். இது அவர்களது மிகப்பெரிய ஒரு நடவடிக்கையாகவே சிறிலங்கா பார்க்கவேண்டியுள்ளது.
ஏற்கனவே இவ்வாறான தேர்தல்கள் இரண்டு நடைபற்று முடிந்துவிட்டன. இன்னொன்று எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. அடுத்த 12 மாதங்களினுள் மொத்தம் நான்கு தேர்தல்களை நடத்தி முடிக்கும் நோக்குடன் துரித கதியில் புலம்பெயர்ந்துவாழும் மக்கள் செயற்பட்டுவருகிறார்கள்.
நீதியாகவும் நேர்மையாகவும் நடத்தப்பட்ட இந்த தேர்தல் முடிவுகள் புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்களின் உண்மையான அபிலாஷை என்ற விடயத்தை சர்வதேச சமூகத்தை நம்பவைப்பதற்கான முயற்சியாகவே இந்த தேர்தல்கள் மேற்கொள்ளப்படுகிறது.
ஆனால், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைக்கு சிறிலங்கா அரசு மேற்கொள்ளும் பதில் நடவடிக்கை மிக மெதுவானதாகவே காணப்படுகிறது.
தேர்தல்கள் முடிவடைந்த கையோடு உடனடியா – துரித கதியில் – வடக்கு கிழக்கில் சிங்கள குடியேற்றங்களை ஆரம்பிக்கவேண்டும். அங்கு தமிழ்மக்களின் அடையாளங்களை முற்று முழுதாகவே அழித்தொழிக்கும் வகையில் காரியங்களை நிறைவேற்றிவிட்டால், சர்வதேச ரீதியில் தமிழ்மக்களின் உணர்வுகள் இயற்கை மரணத்தை அடைந்துவிடும். அதற்கு பிறகு சிறிலங்கா அரசே ஏதாவது தமிழ் மக்களுக்கு தருவதாக அறிவித்தால் கூட அதனை ஏற்றுக்கொள்வதற்கு அவர்கள் தயாராக இருக்கமாட்டார்கள்.
சிறிலங்காவின் தேசப்பற்றாளர்கள் அனைவரும் அரசு மேற்கொள்ள வேண்டிய இந்த நடவடிக்கைக்கு வேகமாக உழைக்கவேண்டும். விடுதலைப்புலிகளை அழித்தொழித்த அதே வேகத்துடன் இந்த நடவடிக்கையும் அமையவேண்டும்.

Friday, December 18, 2009

வேட்டைக்காரன்- பட விமர்சனம் 55/100


நடிப்பு: விஜய் , அனுஷ்கா, சலீம் கவுஸ், ஸ்ரீஹரி, ஷாயாஜி ஷிண்டே

ஒளிப்பதிவு: கோபிநாத்

இசை: விஜய் ஆண்டனி

இயக்கம்: பாபு சிவன்

தயாரிப்பு: ஏவிஎம்


மாஸ் மசாலா என்ற வட்டத்தை விட்டு வெளியில் வர முடியாத அல்லது விருப்பமில்லாத விஜய்யின் மற்றுமொரு வழக்கமான மசாலா வேட்டை இந்த வேட்டைக்காரன்.

கதைப்படி ரவி என்கிற போலீஸ் ரவி (விஜய்) ஒரு தூத்துக்குடி பையன். ப்ளஸ்டூவை நான்காவது அட்டம்டில் தாண்டும் சராசரி மாணவரான அவருக்கு, பெரிய லட்சியம் ஒன்று உண்டு. அது தனது ஆதர்ஸ நாயகனான தேவராஜ் ஐபிஎஸ் (ஸ்ரீஹரி) மாதிரி பெரிய போலீஸ் ஆ...பீஸர் ஆவது. தன் முயற்சியில் சற்றும் மனம் தளராமல் சென்னையில் கல்லூரியில் சேர்ந்து படிக்க ரயிலேறுகிறார். அப்போதுதான் அனுஷ்காவைச் சந்திக்கிறார். வழக்கம்போல அந்தக் கணத்திலேயே விஜய்யின் கனவு நாயகியாகி விடும் அனுஷ்கா, வழக்கம் போல டூயட்டெல்லாம் பாடி ஓய்கிறார்.

அப்போதுதான், செல்லா என்ற மோசமான வில்லனைச் சந்திக்கிறார் விஜய். அழகான பெண்ணைப் பார்த்த கணத்தில் படுக்கைக்குத் தூக்கிச் செல்லும் சைக்கோ கேரக்டர் இந்த செல்லா. தன் வகுப்புத் தோழி ஒருத்திக்கு இந்த சோகம் நிகழ, நாயகன் விஜய் பொங்கியெழுந்து போட்டுப் புரட்டியெடுத்து கொன்று விடுகிறார் செல்லாவை.இந்த செல்லாவின் அப்பா வேதநாயகம் (சலீம் கவுஸ்) பெரிய டான். மகனைக் கொன்ற விஜய்யை போட்டுத் தள்ள போலீஸ் அதிகாரி சாயாஜி ஷிண்டேக்கு அஸைன்மெண்ட் தருகிறார். ஆனால் அதை உதாசீனப்படுத்தும் சாயாஜி, 'நீயென்ன பெரிய மந்திரியா, எனக்கு உத்தரவு போட' என திருப்பிக் கேட்க, அப்போதே மகன் கொலையை மறந்து, மந்திரியாகும் வெறியில் அரசியல் காய் நகர்த்துகிறார் வேதநாயகம்.

ஒரு கட்டத்தில் விஜய்யின் ஆதர்ச நாயகனான தேவராஜ் ஐபிஎஸ், இந்த வேதநாயகத்தால் பாதிக்கப்பட்டு கண் பார்வை போய், வேலையையும் இழக்கிறார்.விஜய்யின் கோபம் இப்போது இன்னும் பல மடங்கு பெருக, வில்லனை வேட்டையாட புறப்படுகிறார்... (ஹை... டைட்டிலுக்கு காரணம் கண்டுபிடிச்சிட்டோம்)வேதநாயகத்தை அழிக்கிறார்...

இதிலென்ன புதுசா இருக்கு என்கிறீர்களா... இந்தக் கேள்வி விஜய் அண்ட் கோவுக்கு போக வேண்டியது. எனவே படத்தில் கலைஞர்களின் பங்களிப்பைப் பார்க்கலாம். கஷ்டப்பட்டு நடிக்க விஜய்க்கு இதில் ஒன்றுமில்லை.

காமெடி என்ற பெயரில் ஏதோ செய்கிறார். சத்தியமாக சிரிப்பு வரவில்லை. அதுக்குதான் வடிவேலு, சந்தானம் போல நிறை இருக்கிறார்களே... இவருக்கு ஏன் இந்த வேலை என்று தெரியவில்லை. கவுண்டரை காப்பியடித்தார் சந்தானம். இப்போது சந்தானத்தை காப்பியடிக்கிறார் இந்தப் படத்தில் விஜய்யுடன் ஒட்டிக் கொண்டே வரும் ஸ்ரீநாத்.

சகிக்கலை!

படத்தில் அட பரவாயில்லையே என்று சொல்ல வைப்பவர் ஸ்ரீஹரி என்ற தெலுங்கு பார்ட்டி. இவர்தான் தேவராஜ் எனும் நல்ல போலீசாக வருகிறார். ஆனால் கொடுமை என்னவெனில்,

இதே கேரக்டரை நாம் தரணியின் தில் படத்தில் பார்த்து விட்டோம் (இயக்குநர் தரணியின் உதவியாளர்தான் வேட்டைக்காரன் இயக்குநர் பாபு சிவன்!).அனுஷ்கா அம்சமாக இருக்கிறார். அவரிடமிருந்து நமது ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பது நிச்சயம் நடிப்பை அல்ல என்று நன்றாகத் தெரிந்து கொண்டு, தனது அழகால் அசரடித்து விட்டுப் போகிறார். முதல் பாதியில் காட்சிகள் பழசாக இருந்தாலும் உட்கார்ந்து பார்க்க முடிகிறது.

இரண்டாம் பாதியில் ரொம்ப்பக் கஷ்டம்!கோபிநாத்தின் ஒளிப்பதிவில் பெரிய சாகஸங்கள் எதுவும் இல்லை. விஜய் ஆண்டனி... பாடல்களைக் கேட்ட பிறகு, அவரிடம் 'ஏன் இந்த கொல வெறி' என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. அப்படி ஒரு அதிவேகம்.நல்ல ஸ்கிரிப்ட் என்றால், ஏற்கெனவே ஹிட்டான படங்களின் சீன்களை உருவி புதுசாக உருவாக்குவதுதான் என யாரோ தவறாக சொல்லிவைத்திருக்கிறார்கள் போல, இயக்குநர் பாபு சிவனிடம். படத்தில் விஜய் ஆண்டனியின் பாடலில் நிக்காம ஓடு ஓடு ஓடு என்று ஒரு வரி அடிக்கடி வருகிறது.

அனேகமாக படத்தைப் பார்த்து விட்டு வரும் ரசிகர்கள் இந்த வரியை தங்கள் நண்பர்களிடம் சொல்லக் கூடும்!!

முதலமைச்சரின் பாவனைக்குரிய வாகனம்

அக்கரைப்பற்றிலுள்ள முதலமைச்சரின் காரியாலயத்திலிருந்து த.ம.வி.பு கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மூன்று வாகனங்களில் விநாயகபுரத்திலுள்ள மரண வீடு ஒன்றுக்குச் சென்றுவிட்டுத் திரும்பும் வழியில் திருக்கோவில் என்னுமிடத்தில் வைத்து மாற்று அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களால் தாக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த பரமநாதன் சிவராஜ்(வயது 28), லிங்கசாமி கேதீஸ்வரன்(வயது 32), மார்க்கண்டு ஜீவாகரன்(வயது 31) ஆகியோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த த.ம.வி.பு கட்சி ஆதரவாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் தேவையொன்றின் நிமித்தம் திருக்கோவில் இலங்கை வங்கிக் கிளைக்கு முன்பாக நின்று கொண்டிருந்த வேளை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் நபர்கள் கம்பு, இரும்புக் கம்பி போன்றவற்றால் தாக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, இச்சம்பவத்தின் பின்னர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளைச் சேர்ந்த ஒரு சிலர் காணாமல் போயுள்ளதாகவும் அவர்களைத் தேடிச் சென்ற போதே முதலமைச்சரின் பிரத்தியேக வாகனம் நேற்று மாலை தீ வைக்கப்பட்பட்டு முற்றாக சேதமாக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள்களில் தங்களின் முகத்தை அடையாளம் காட்டாதவாறு வாகனத்தைப் பின் தொடர்ந்த நபர்கள், வழிமறித்து சாரதியைக் கலைத்து விட்டு வாகனத்திற்குள் குண்டை வெடிக்கச் செய்து தீ வைத்துள்ளனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட குண்டர்களையும் இச்சம்பவத்திற்கு தூண்டுதலாக இருந்த நபர்களையும் இனம் கண்டு மக்கள் முன் நிறுத்து வேண்டும் என பொலிசார் பல தரப்பினராலும் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

மன்மத குருக்கள்! வெளியில் வராத...

காஞ்சிபுரம் மன்மத குருக்கள் விவகாரம்... சில மாதங்களுக்கு முன்பே காவல்துறை யின் கவனத்துக்கு வந்ததும்... அவர்கள் இதை வைத்து பெரிய அளவில் வசூல் நடத்தி இருப்பதும் தற்போது தெரிய வந்திருக்கிறது.காஞ்சி மன்மத குருக்கள் தேவநாதன் கோயில் கருவறையில் சல்லாபித்த தகவலும் அதை அவன் படம்பிடித்து வைத்திருக்கும் விஷயமும் சில மாதங்களுக்கு முன்பே சிவகாஞ்சி இன்ஸ்பெக்டர் பட்டாபி மற்றும் அவரது ஸ்டேஷன் காக்கிகளின் கவனத்துக்குப் போயிருக்கிறது.
உடனே துடித்தெழுந்த காக்கிகள்... மன்மத குருக்களை அழைத்து மிரட்டி அவன் எடுத்து வைத்திருந்த ஆபாச வீடியோ படங்களை கேட்ச் பண்ணிவிட்டு.... மன்மத குருக்களை துரத்திவிட்டுவிட்டனர்.
இதன்பின் இந்த படத்தை வைத்து எப்படி ஆதாயம் பார்ப்பது என மூளையைக் கசக்கிக்கொண்ட சிவகாஞ்சி காக்கிகள்... படத்தில் சிக்கியுள்ள பெண்களில் யாராவது வசதியான பார்ட்டிகள் இருக்கிறார்களா என தேடினர்.அந்த கிளுகிளு சி.டி.யில் தென்பட்ட ஒரு முகத்தைப் பார்த்த தும் காக்கிகள் துள் ளிக் குதித்திருக்கிறார் கள். காரணம் அந்த சி.டி.யில் இருந்த முகங்களில் ஒன்று காஞ்சிபுரத்துக்கே அறிமுகமான பிரபல முகம்.
பிரபல டாக்டரின் மனைவி. வசதிக்கும் பஞ்சமில்லாத வர். டாக்டர் அடிக்கடி சென்னை மற்றும் வெளியூர்களுக்கு பறந்த படியே இருக்கும் ரகம். உடனே அந்தப் படத்தை மட்டும் தனியே காப்பி பண்ணிக் கொண்டு டாக்டரையும் அவரது மனைவியையும் சந்தித்த காக்கிகள்...
அவர்களின் மிரட்சியைப் பார்த்து கணிசமாகக் கறந்துகொண்டு கிளம்பினர். இதன் பின் தனது கணவரின் காலில் விழுந்து கதறி மன்னிப்பு கேட்ட அந்தப் பெண்ணை... அதோடு காக்கிகள் விட்டுவிட வில்லை. திரும்பத்திரும்ப வருவதும் அநாகரிகமாகப் பேசுவதும்... கரன்ஸிக் கட்டோடு திரும்புவதுமாக இருந்தனர். இதனால் மனம் வெறுத்துப்போன டாக்டரின் மனைவி... ஒரு கட்டத்தில் விஷம் குடிக்க...
கடைசி நிமிடத்தில் தீவிர சிகிச்சைக்குப் பின் காப்பாற்றப்பட்டுவிட்டார். இன்னும் அவர் மருத்துவ சிகிச்சையில் இருந்து மீளவில்லை.இதை அதே ஸ்டேஷனில் வேலை பார்க்கும்...
சரியாக பங்கு கிடைக்காத ஒரு காக்கியே விஷயத்தை கசிய விட்டுவிட்டு சைலண்ட் ஆக... இதைப் பார்த்து நம் லிமிட்டில் இப்படியா என கொதித்துப்போன டி.எஸ்.பி.சமுத்திரக்கனி, வழக்கை பதிவு செய்யவைத்து... விசாரணையையும் தீவிரப்படுத்திவிட்டார். இடையில் நடந்த கலெக்ஷன் விவகாரங்கள் அவர் கவனத்துக்கு வர..
இதன்பிறகே இந்த வழக்கை மாவட்ட குற்றப்பிரிவின் கையில் கொடுத்து விட்டார் டி.எஸ்.பி.தேவநாதனை இரண்டாவது முறை கஸ்டடி எடுத்தபோது அவன் மூலம் செல்போன் ரிப்பேர் கடையில் கைப்பற்றப்பட்ட...
லேப்டாப், மற்றும் தேவநாதனின் செல்போன் ஆகியவற்றை சென்னையில் இருக்கும் தடய அறிவியல்துறைக்கு அனுப்பி வைத்திருந்தனர். அவற்றை துருவித் துருவி ஆராய்ந்த தடயத்துறையினர்.... "இவை செல்போன் மூலம் மட்டும் எடுத்த படங்களாகத் தெரியவில்லை. கேமராவைப் பயன்படுத்தியும் படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன.
அதேபோல் தேவநாதனும் பெண்களும் இருக்கும் சில படங்களை மூன்றாம் நபர் ஒருவர் எடுத்திருப்பதாகவும் தெரிகிறது' என்றெல்லாம் ரிப்போர்ட் கொடுத்திருக்கிறார்கள்.அதோடு... அந்த லேப் டாப் வழியாக தேவநாதன் மூலம் எடுக்கப்பட்ட படங்களை தேவநாதனின் செல்போன் கடை நண்பர்களான பாலாஜியும் செந்திலும் இதற்காகவே இருக்கும் இணையதளங்களுக்கு அனுப்பி ஏகத்துக்கும் காசு பார்த்ததோடு...
இதற்காகவே தனியாக ஒரு வெப்சைட்டைத் தொடங்கும் முயற்சியிலும் அவர்கள் இருந்ததைக் காக்கிகள் கண்டு பிடித்துள்ளனர். அதேபோல் ஆரம்ப கட்ட விசாரணையின் போது...
காந்திரோடு ஐ.சி.ஐ.சி.ஐ கிளையில் வைத்திருந்த தேவநாதனின் கணக்கில் இருந்து பல லகரங்களையும் முந்தைய விசாரணை டீம் வாங்கியதாகவும் பரபர டாக் அடிபட்டுக்கொண்டிருக்கிறது. இதற்கிடையே தேவநாதனின் நெருங்கிய சகாவான கார்த்திக் குருக்கள் மீதும் காக்கிகளின் சந்தேகப் பார்வை விழுந்திருக்கிறது.அந்த கார்த்திக் குருக்கள் நம்மிடம் ""அவன் வேதபாட சாலையில் என்னோட படிச்சவன்.
அவ்வளவுதான். எனக்கும் அவனது குற்றங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை'' என்கிறார் கைபிசைந்தபடியே.சிவகாஞ்சி காக்கிகளுக்கு வசூல் உண்டியலாகப் பயன்பட்ட அந்த டாக்டர் மனைவி யின் சி.டி.யில் அப்படி என்னதான் இருக்கிறது என விவரமறிந்த காக்கி ஒருவரிடம் கேட்டோம். அவரோ “""தேவநாத குருக்கள் சாதாரண ஆள் இல்லை. அந்த விஷயத்தில் கில்லாடியா இருக்கான். அவன் யாரை ஆபாசப் படம் எடுத்தாலும் அவங்க யாரு என்பதை சிம்பாலிக்கா முதல்ல காட்டுவான்.
உதாரணமா.. பூக்காரியை லாட்ஜ்ல ஆபாசப் படம் எடுக்கும் போது... முதல்ல அவளை கட்டில்ல உட்கார்ந்து பூ கட்ற மாதிரி காட்டிட்டு... அப்புறம்தான் தன் லீலைகளை ஆரம்பிப்பான்.
அதே மாதிரி டாக்டர் மனைவியை... டாக் டர்களுக்கே உரிய கோட்டோடவும் ஸ்டெதஸ்கோப்போடவும் ரொம்ப மரியாதையாகக் காட்டிட்டு அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா உரிச்சிக் காட்டியிருக்கான்.
இன்னும் வெளில வராத படங்கள் நிறைய இருக்கு. கொஞ்சம் கொஞ்சமா எல்லாமே வெளிச்சத்துக்கு வந்துடும் பாருங்க'' என்கிறார் மீசையை வருடியபடியே.தற்போதைய காஞ்சிபுரம் டி.எஸ்.பி. விஜயராகவனோ ""விசாரணை தீவிரமா நடந்துக் கிட்டு இருக்கு.
இப்ப எதையுமே சொல்ல முடியாது''’என்கிறார் சஸ்பென்ஸ் வைத்து.தேவநாத குருக்களின் லீலைகள் இன்னும் எப்படி எப்படியெல்லாம் வெளிப்படப் போகிறதோ?

Thursday, December 17, 2009

கேணல் ராம் தலமையில் புதிய புலிப்படை அதிரடி! சிங்கள ராணுவம் பலி! - ஈழ யுத்த கள ரிப்போர்ட்!

ழத்தமிழர் இன்று எதிர் கொள்ளும் பேராபத்து, பொய்மைகள். எது உண்மை, எது பொய்... யார் சரியானவர்கள், யார் வேஷக்காரர்கள் என்பதைப் பிரித்தறிவது இன்று பெரும் பாடாயுள்ளது.
விடுதலைப் புலிகள் விட்ட இடத்தி லிருந்து ஆயுதப் போராட்டத்தை, முன்நடத்த "மக்கள் விடுதலை ராணுவம்' என்ற அமைப்பு சமீபத்தில் தன்னை பிரகடனம் செய்தது.
தமிழ் இணைய தளங்களெல்லாம் இச்செய்தியை தமிழர்கள் ஏதோ முல்லைத்தீவை மீளக் கைப்பற்றி விட்டதுபோல் கொட்டு முரசே கூறிக் கொண்டாடின. "மக்கள் விடுதலை ராணுவத்தின்' பிறப்பினால் ராஜபக்சே சகோதரர்கள் உதறல் பிடித்து உறக்கமின்றி தவிப்பதுபோலும் சில இணையக் கட்டுரைகள் எழுதப்பட்டன. ஆனால் உண்மை என்ன?
மக்கள் விடுதலை ராணுவத்தை உருவாக்கியிருப்பதே ராஜபக்சே சகோ தரர்கள்தான். கருக்கொடுத்து, உருவாக்கி, பிறப்பித்து இயக்கிக் கொண்டிருக்கிறவர் களே அவர்கள்தானென்ற உண்மையை தமிழர்களுக்கு எப்படி நாம் விளங்கப் படுத்துவது? கடந்த இரு இதழ்களில் எழுதியதைப் போல முக்கிய சில கார ணங்களுக்காகத்தான் இக்குழுவை இலங்கை அரசு உருவாக்கியுள்ளது. முக்கியத்துவம் கருதி மீண்டும் அவற்றை இங்கு எழுதுகிறேன்: தமிழர் தாயக நிலப் பரப்பை நிரந்தர ராணுவ ஆக்கிரமிப்பி லும், நிர்வாகத்திலும் வைத்திருப்பதற் கான ராணுவ நியாயம் தேடுவது முதல் நோக்கு; கட்டளைத் தொடர்பு களின்றி பல்வேறு இடங்களிலுமாய் சிதறுண்டு நிற்கும் போராளிகளை ஈர்த்து, பின்னர் அழித்தொழிப்பது இரண்டாவது நோக்கு; இன அழித்தல் கொடுமைகட்கு பழிதீர்க்கும் வெறியோடு களத்திலும், புலத்திலும் இருக்கிற புதிய தமிழ் இளையர்களை உள்வாங்கி, காயடித்து பின்னர் அழிவுக்குக் கையளிப்பது மூன்றாம் நோக்கு; இலங்கைக்கு உள்ளே தமக்கு வேண்டாத அரசியல் ராணுவப் புள்ளிகளையும், இலங்கைக்கு வெளியே காத்திரமான தமிழீழ ஆதரவாளர்களையும் அழித்தொழிக்கும் கூலிப்படையாய் பயன்படுத்துவது நான்காம் நோக்கு.
"மக்கள் விடுதலை ராணுவம்' அமைப்பது தொடர்பான முக்கிய உரையாடல்கள் லண்டனில்தான் நடந்ததாகச் சொல்லப் படுகிறது. சென்னையில் இலங்கை தூதரகத்தில் இருந்துகொண்டு இங்குள்ள பல தமிழர்களை கெடுத்துக் குட்டிச் சுவராக்கிவிட்டு இப்போது லண்டனுக்கு மாற்றலாகிச் சென்றுள்ள மனிதரும் இதில் முக்கிய பங்காற்றியதாகவும் சொல்லப்படுகிறது. ஆக, சிங்கள இனவெறியும் தமிழினத் துரோகிகளும் இணைந்து நடத்திவரும் எத்தனையோ சதி நாடகங்களில் "மக்கள் விடுதலை ராணுவம்' கடைசியாக வந்துள்ள ஆபத்தான ஓரங்க நாடகம். உலகத் தமிழர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இயங்கு வார்களாக!
மக்கள் விடுதலை ராணுவம் போலவே உலகத் தமிழ் மக்களை, குறிப்பாக உணர்வாளர்களை தொடர் குழப்பத்திற்கு உள்ளாக்கி வரும் பிறிதொன்று கேணல் ராம் தொடர்பானது. முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் இறுதி போருக் குப்பின் சுமார் 500 போராளி களுடன் தம்மைப் பாதுகாத்துக் கொண்டு வெற்றிகரமாக கிழக்கு மாகாணக் காடுகளுக்குள் பின்வாங்கி களம் அமைத்து நின்ற ஒரே கேணல் தகுதி பெற்ற விடுதலை இயக்கத் தளபதி ராம் அவர்கள்தான். அவரைப் பற்றியும் அவரோடிருக்கும் போராளிகளின் உண்மையான எண்ணிக்கை பற்றியும் முன்னுக்குப் பின் முரணான, குழப்பியடிக்கும் பல செய்திகள் வந்தன, இடைவிடாது தொடர்ந்தும் வந்து கொண்டிருக்கின்றன.
கேணல் ராம் ராணுவ ஆய்வாளர்களின் ராடாரில் விழுந்தது 2007-ம் ஆண்டு. அவ்வாண்டில் இலங்கை ராணுவத்தின் 53, 57, 58-ம் டிவிஷன்களும் சிறப்பு கமாண்டோ அணிகளுமாய் மேற்கொண்ட தொப்பிகலா சுற்றி வளைப்பு நடவடிக்கையின்போது கணிசமான போராளிகள் சண்டையிட்டு மடிய, பெரும் ராணுவ முற்றுகையை உடைத்து வெளியேறிய ஒரே அணி கேணல்ராமின் அணி. அப்போது அவருக்கு உடன் துணை தளபதியாயிருந்த நகுலன் இப்போதும் ராமுடனே இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
முல்லைத்தீவு களச் சமர்களில் ராமின் அணிகள் பெரிதாக ஈடுபடுத்தப்படவில்லை. ஆனால் ஏப்ரல் மாத இறுதியிலும் மே மாதத் தொடக்கத்திலும் வேலுப் பிள்ளை பிரபாகரன் அவர்களை களத்திலிருந்து பாது காப்பாக வெளியேற்றும் திட்டத்திற்காய் மிக முக்கியமான அணியாக கேணல் ராம் தலைமையிலான போராளிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக அப்போது செய்திகள் வந்தன. முல்லைத்தீவு ஆயுத மௌனிப்பிற்குப்பின் வில்பட்டு- யாலா காடுகளுக்குள் பாதுகாப்பாய் பின்வாங்கிச் சென்று நிலையெடுத்ததாய் கூறப்பட்டது.
தமிழீழக் கனவு உயிர்த்துடிப்பு கொண்ட யதார்த்த சாத்தியப்பாடாய் தொடர தமிழீழ தாயக நிலப்பரப்பு மற்றும் தமிழ் மக்கள் பாதுகாக்கப்படுவதும், உலக அரசியற் கருத்து தனித்தமிழீழத்திற்கு ஆதரவாய் மாறுவதும், இந்தியாவின் பாதுகாப்பு- வெளியுறவுக் கொள்கையும் அவ் வாறே மாறுவதும் முக்கியமாக நிகழ வேண்டும் என முன்னர் நாம் எழுதியிருந்த அதேவேளை களத்தில்- அதாவது இலங்கைக் குள் தமிழருக்கான வலுவான அரசியல் அணி யொன்று அமைவதும், மீண்டும் ஒரு கொரில்லா போராட்டம் தொடர்வதும் கூட முக்கியமான தொன்றாய் அரசியல் ராணுவ ஆய்வுக் கருத்தாகக் குறிப்பிட்டிருந்தோம். கொரில்லா போராட்டம் தொடர்வது பற்றி எழுதியபோது என் மனதில் நின்றவர் கேணல் ராம் அவர்கள் தான். அவருடன் சுமார் 400 போராளிகள் இருந்ததாக அப்போது கதைக்கப்பட்டது.
பின்னர், குறிப்பாக கடந்த மாவீரர் தினப் பின்னணியில் கேணல் ராம் பற்றி பலவிதமான செய்திகளும் கருத்துக்களும் தமிழ் வட்டங்களில் உக்கிரமாக உலவின. அவரது பெயரில் வெளிவந்த மாவீரர் தின உரை சர்ச்சைகளுக்கு மேலும் நெருப்பு மூட்டியது. அவர் இப்போது ராணுவப் பிடியில் இருப்பதாகவும், ராணுவம் அவரைப் பயன்படுத்துவதாகவும் கட்டுரைகள் எழுதப் பட்டன. விடுதலை இயக்கத்தின் கட்டளைக் கட்டமைப்பு குலைந்துபோய் தெளிவற்றிருந்த- தெளிவற்றிருக்கும் சூழலில் அக்கட்டுரைகள் மேலும் கேணல் ராம் தொடர்பான குழப்பங்களை அதிகமாக்கியது.
இப்போதும் இதுதான் உறுதியான உண்மை என்று எதையும் எழுதுகிற நிலையில் நாம் இல்லை. ஆயினும் புறச் சூழமைவுகளினடிப் படையில் சில அனுமானங்களை நாம் அறுத் தெடுக்க முடியுமென்ற கருதுகோளின்படியும், கடந்த இருமாத காலமாய் எனது பழைய வானொலி கள முகவர்கள், திருச்சபை நண்பர்கள், கொழும்பு ஊடக நண்பர்கள் என பலரோடுமான இடைவிடா தேடலின் பயனாகவும் சில செய்திகள் கிடைக்கின்றன. அவற்றை வாசகர்களோடும், தமிழுலகோடும் பகிர்ந்து கொள்ளத் தலைப்படு கிறேன். கேணல் ராம் மற்றும் சுமார் 500 போராளிகள் இருப்ப தாகக் கூறப்படும் கிழக்குப் பகுதிக் காடுகளில் நடந்த -நடக்கிற ராணு வப் புறச் சூழமைவுச் செய்திகள் முக்கியமானவை. அவையாவன:
கடந்த இரு மாத காலத்தில் கல்முனை, தொப்பிகலா, கரடிய னாறு ஆகிய மூன்று பகுதிகளை யும் மையப்படுத்தி, மூன்று ராணுவ நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டன என்பதை எமது கொழும்பு தொடர்பாளர் கள் உறுதி செய்கின்றனர். வெளியே சொல்லப்படவில்லையென் றாலும் ஆங்காங்கே ஒருங்கிணைக் கப்பட்டும், ஒருங்கிணைக்கப்படா மலும், சில நேரங்களில் உணவுப் பொருட்கள் ஏற்பாடு செய்ய வருகையில் எதிர்பாரா விதத்தில் ராணுவத்தினரை எதிர்கொள்ள வேண்டிய நிலையிலுமாய், விடு தலைப்புலிகள் நடத்தி வரும் கொரில்லா தாக்குதல்களில் வாரத் திற்கு சராசரி நான்கு ராணுவத் தினர் கடந்த இரு மாதங்களில் மட்டுமே கொல்லப்பட்டு வரு கின்றனர் என்ற செய்தி பல தரப்பி னராலும் உறுதி செய்யப்படுகிறது. மேற்சொன்ன மூன்று நடவடிக் கைகளுமே கேணல் ராம் அவருடன் இயங்கும் அணிகளைக் குறிவைத்தே நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.
இப்பின்னணியில் காட்டுப் பகுதியில் கடந்த நவம்பர் 27-ம் தேதி ராணுவ வானூர்தி (ஐங்ப்ண்ஸ்ரீர்ல்ற்ங்ழ்) ஒன்று விழுந்து நொறுங்கியது. இந்த சம்பவம் பற்றி இலங்கை ராணுவம் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வெளியிட் டது. புதியதோர் விமான நிலை யத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவின்போது நடந்த வானூர்தி களின் வண்ண விளையாட்டின் போது தற்செயலான விபத்தில் அந்த வானூர்தி விழுந்து நொறுங் கியதாய் இலங்கை ராணுவம் மழுப்பியது. ஆனால் வானத்து வண்ண விளையாட்டில் ஈடுபட்ட வானூர்தி அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் விழுந்ததெப்படி என்ற கேள்விக்கு பதில் சொல்லப்பட வில்லை. அதுவும்கூட விழுந்த காட்டுப்பகுதி பற்றிய நிஜச் செய்தியும் மறைக்கப்பட்டதாய் கூறுகிறார்கள். நிஜத்தில் அந்த வானூர்தி விழுந்தது மின்னேரியா காட்டுப்பகுதி என்ற சந்தேகம் நிலவுகிறது. மிகவும் அடர்ந்த காட்டுப்பகுதியான மின்னேரியாவில்தான் கேணல் ராமும் அவரது அணிகளும் உள் நகர்ந்து நிற்கிறார்கள் என வந்து கொண்டிருந்த செய்திகள் வானூர்தி விழுந்து நொறுங்கியதன் பின்னணி தொடர்பான கேள்விகளையும் கூர்மையாக்கியது.
மின்னேரியா கடும் காடுகளோடு மலைத்திண்டுகளும் கொண்ட பகுதி எனப்படுகிறது. திண்டுகளில் நின்றுகொண்டு சிறு துப்பாக்கிகளாலேயேகூட வானூர்திகளை சுட்டு வீழ்த்த முடியும் என்கிறார்கள். ஒருவேளை கேணல் ராமின் அணிகள்தான் அவ்வாறு வானூர்தியை சுட்டு வீழ்த்தினவா என்ற கேள்வியும் இப்போது எழுப்பப்படுகிறது. இந்நிலையில் கிடைக்கும் உறுதியான செய்திகளின்படி மிகப்பெரிய ஒருங்கிணைக்கப்பட்ட ராணுவ நடவடிக்கையொன்று மின்னேரியா காட்டின் உட்பகுதி நோக்கி கடந்த வார இறுதியில் தொடங்கப்பட்டு மும்முரமாய் நடந்து வருவதாகவும், கருணா- பிள்ளையான் இருவரது அணிகளும் ராணுவத்தோடு பெரிய அளவில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. மின்னேரியா காடுகளில் மிஞ்சியுள்ள கேணல் ராம் தலைமையிலான வீரர்களை அழித்தொழிப்பதுதான் இந்நடவடிக்கையின் ஒரே நோக்கு எனவும் உறுதி செய்யப்படுகிறது. ஆயிரம் வீரர்கள் தீயினில் போயினர், ஆயினும் போரது நீளும்! எனில் கேணல் ராம் ராணுவக் கட்டுப்பாட்டிற் குள் வந்துவிட்டதாக வந்த செய்திகளின் உண்மைத் தன்மை, பின்னணி என்ன? அதுபோல விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இப்போதைய ராணுவக் கொள்கை என்ன? மின்னேரியா முற்றுகையை கேணல் ராமின் அணிகள் தாக்குப்பிடிக்க முடியுமா?

பிரபல இந்திப் பாடகி ஆஷா போன்ஸ்லே பாட மகிந்த கேட்டு ரசித்தார்




இலங்கை ஜனாதிபதியின் பாரியார் (முதல் பெண்மணி) பிரபல இந்திப் பாடகி ஆஷா போன்ஸ்லே அவர்களை இலங்கைக்கு வருமாறு அழைப்பை விடுத்திருந்தாராம். அதற்கமைவாக அவர் நேற்றைய தினம் இலங்கை சென்றிருந்தபோது அலரிமாளிகை சென்று தனிப்பட்ட முறையில் ஜனாதிபதி மகிந்தவைச் சந்தித்து, அவருக்காக தனிப்பட்ட சில பழைய பாடல்களை பாடிக்காட்டியுள்ளார் .

Wednesday, December 16, 2009

விஜய் விவகாரம்: சன் டிவிக்கு வந்த தலைவலி


கலைஞர் டிவியும், சன் டிவியும் விஜய் நடிக்கும் 50-வது படமான சுறா’வை வாங்குவதற்கு போட்டியிட்டன. இறுதியில் சன் வென்றுள்ளது.
படத்தை வெளியிடும் உரிமையையும் பெற்றுள்ளது. சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் சுறா...என்று பார்க்கலாம் என்றால் அதில் ஒரு சிக்கல்.
இந்த சிக்கலுக்கு காரணம் விஜய் சந்தித்திற்கும் புதிய வில்லங்கம்.
’’ஈழத்தமிழருக்கு ஆதரவு என்பது போல் உண்ணாவிரதம் இருந்து விட்டு ஈழ துரோகி காங்கிரஸ் கட்சியில் சேருவதற்கு ராகுல் காந்தியை சந்தித்தார் விஜய்.
இது போதாது என்று தனது வேட்டைக்காரன் படத்தில் சிங்களப்பாடல் மெட்டில் ஒரு பாடல் இடம்பெற்றுள்ளது. தமிழர்களுக்கெதிரான போரில் சிங்கள ராணுவத்தினரை உற்சாகப்படுத்த அந்த மெட்டில் பாடல் அமைத்தவர் ராஜ்வீரரத்ன என்பவர்.
அவருடன் இணைந்துதான் வேட்டைக்காரனுக்கு இசையமைத்திருக்கிறார் விஜய் ஆண்டனி. இதற்கு விஜய் ஏன் சம்மதித்தார். தொடர்ந்து விஜய் ஈழத்தமிழர்களூக்கு துரோகம் செய்துவருகிறார் என்று அவரது படங்களை புறக்கணிக்க வேண்டும் என புலம்பெயர்ந்த தமிழர்கள் முடிவெடுத்துள்ளனர்.
வேட்டைக்காரன் மட்டுமல்லாது, பெருந்தொகை கொடுத்து சுறாவை வாங்கியிருக்க இந்த விவகாரத்தால் வெளிநாட்டு பிஸினஸ் பாதிக்கப்படுமோ என்று யோசிக்கிறதாம்.
அடுத்தடுத்து இரண்டு படங்களும் பிஸினஸ் ரீதியாக பாதிப்பட்டால் என்னாவது? இந்த தலை’வலி’ தீர வழி என்ன என்றும் யோசிக்கிறதாம் சன் தரப்பு.

வரலாற்றுத் துரோகிகள் பற்றிய தகவல்கள் இன்னும் 24 மணித்தியாலத்துக்குள் வெளிவரும்


எவன் எவன் எங்கள் தமிழீழ தேசத்தை எதிரிக்கு
கூட்டிக் கொடுத்தவன், எவன் எவன் எலும்புத்
துண்டுக்கு வாலாட்டியாவன், வாலாட்டுபவன், என்பது பற்றிய முழு விபரணத்தை உங்கள் நெருடல் அம்பலப்படுத்தப் போகின்றது. கடைசி வரை எங்கள் தலைவனுக்கு நம்பிக்கையாக இருந்த சில துரோகிகளும் இதில் அடங்குகின்றனர்……
இன்னும் 24 மணிநேரத்தில் ….

தமிழீழ தேசிய தலைவரின் மகள் துவாரகாவின் அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன




தமிழீழ தேசிய தலைவரின் மகள் துவாரகாவின் இறந்த உடல் புகைப்படமாக தற்போது வெளியாகியுள்ளது. இறுதிப் போர் நடைபெற்ற கால கட்டத்தில் காயப்பட்ட போராளிகளுடன் துவாரகாவும் சரணடையச் சென்றதாகக் கூறப்படுகிறது.
சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள், மற்றும் ஜ.நா வின் பிரதிநிதிகள் அங்கு பிரசன்னமாகியிருப்பதாக விடுதலைப் புலிகளுக்கு கூறப்பட்டுள்ளது. இதனையடுத்தே புலித்தேவன், மற்றும் ப.நடேசன் ஆகியோர் வெள்ளைக் கொடியுடன் சென்றுள்ளனர். பார்ப்பவர் இரத்தம் உறையும் வகையில் இக்கொலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


பிறிதொரு இடத்தில் இவ்வாறான சூழ்ச்சி சதிவலை காரணமாக பாலச்சந்திரன் உட்பட, துவாரகாவையும் இலங்கை இராணுவத்தினர் கொடூரமாக கொலைசெய்துள்ளதாகவும், அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி இந்தப் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. துவாரகா என நம்பப்படும் இந்த உடல் நிர்வாணமாக்கப்பட்டு உள்ளதால், இப்புகைப்படதை நாம் முழுமையாக வெளியிட முடியவில்லை.


சர்வதேசத்தின் சதிவலையில், சிக்கி இறுதிநேரத்தில் இவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என தற்போது அஞ்சப்படுகிறது. இதில் இந்தியா பெரும் பங்கு வகித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இவ்வளவு நாள் கழித்து ஏன் தற்போது இந்தப் படம் வெளிவரவேண்டும் என்ற சந்தேகங்கள் மேலோங்கியுள்ளன. குறிப்பாக தமிழர்களைக் கவர சரத் பொன்சேகா தற்போது புலிகளின் தலைவர்களைச் சுடச்சொன்னது கோத்தபாய தான் என்று கூறிக் கொள்கிறார். தம்மிடம் தவறு இல்லை என்பது போன்ற தோற்றப்பாட்டை வெளிப்படுத்த முயல்கிறார்.


இன் நிலையில் சிங்கள இராணுவத்தினரின் கையடக்கத் தொலைபேசியில் பதிவாகியதாகக் கூறப்படு சில படங்களையும், மற்றும் வீடியோக்கள் சிலவற்றையும், சிலர் கசிய விட்டுள்ளனர் என்பதே உண்மை.


இதுபோல பல வீடியோக்கள் இலங்கை இராணுவத்தால் எடுக்கப்பட்டுள்ளதாக தற்போது அறியப்படுகிறது. அனைத்தும் போர்க்களத்தில் இறுதி நாட்களில் எடுக்கப்படவை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இது உண்மையிலேயே துவாரகாவின் படமா என்பதை சுயாதீனமாக உறுதிசெய்ய முடியவில்லை, அவருடைய மூக்கு மற்றும் புருவம் போன்ற உருவ அடையாளங்கள் சில ஒத்துப்போவதையே இந்த உடலம் காட்டி நிற்கிறது. துவாரகா என்று கூறப்படும் இவ் உடலம் நிர்வாணமாக்கப்பட்டு, கொலைசெய்யபட்டுள்ளமையானது ஒரு ரத்தவெறிபிடித்த சிங்கள காடையரின் மனப்போக்கை நமக்கு உணர்த்தி நிற்கிறது. தமிழ்ப் பெண்களை நிர்வானப்படுத்தி அவர்களை மானபங்கப்படுத்தி சிங்கள இனம் காட்டும் குரோதம் சொல்லில் அடங்காதவை, வார்த்தையால் விவரிக்க முடியாத கொடுமை. சரணடைய வந்தவர்களை ஈவு இரக்கமின்றி கொலைசெய்யும் சிங்கள வெறியர்களுடனா நாம் இனியும் சமஷ்டி தீர்வு என்றும், ஒன்றுபட்ட இலங்கையில் வாழ்வோம் என்றும் நினைக்க முடியும் ?


ரத்தம் உறைகிறதா நாம் தமிழனாகப் பிறந்து பட்ட துன்பங்களை ஒரு நிமிடம் நினைத்துப் பார்க்கிறோமா ?


பிரிவுகளிலும் பிளவுகளிலும் ஊறி நிற்கிறோமே அன்றி ஒற்றுமையாக , சிங்களவனை எதிர்க்க இன்னும் தயாரில்லை, இன்னும் எத்தனை எத்தனை எம்குலப் பெண்களின் , சிறுவர்களின் இளைஞர்களின் உடலங்களைப் படமாகக் காட்டப் போகிறதோ சிங்களம், இன்று இந்த நாள் ஒரு உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள் ! தமிழனாக நாம் பிறந்ததால் பட்ட கஷ்டங்கள் போதும், தடைகளை உடைத்து தமிழீழம் காண நாம் ஒன்றுபட்டு செயப்படுவோம் என்று, புலம் பெயர் நாட்டில் உள்ள அனைத்துத் தமிழர்களும் தமது பிள்ளைகளுக்கு எமது போராட்டம் பற்றிய வரலாற்றை சொல்லி வளர்க்கவேண்டும், புலம்பெயர் நாடுகளில் உள்ள அனைத்து தமிழ் கல்வி நிலையங்களிலும் வரலாற்றுப் பாடம் புகட்டப்படவேண்டும், அதில் எமது போராட்ட வரலாறு கற்பிக்கப்படவேண்டும், இன்று நாம் இல்லையேல் எமது பிள்ளைகள் தமிழீழ போராட்டத்தைக் கொண்டுசெல்லவேண்டும் ! இன்று தொடக்கம் 50 ஆண்டுகள் ஆனாலும் சரி போராட்டம் ஒன்று புதிதாக ஆரம்பமாகவேண்டும் ! அதுவே நாம் எடுத்துக் கொள்ளும் உறுதிமொழியாகும்.

Tuesday, December 15, 2009

நஞ்சூறிய தொப்புழ் கொடி உறவு

நாம் மிகவும் மோசமானதொரு மனநிலையிலும் பரிதாபகரமான சிந்தனை முறையிலும் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறோம். எஞ்சியிருக்கிற வாழ்வில் நம்பிக்கை வைத்துக்கொள்ள நம்மில் பலருக்கு எதுவுமில்லாமல் இருக்கிறது. நடந்து முடிந்த யுத்தம் ஈழமக்கள் அனைவருக்கும் மிகக் கொடிய அனுபவங்களையே தந்து விட்டிருக்கிறது. நாம் விரும்பியோ விரும்பாமலோ இன்னுமொரு சந்ததி யுத்த தளும்புகளுடனேயே வாழ்வைக் கழிக்க வேண்டியிருக்கிறது. 2006 யூன் 26இல் மாவிலாறில் தொடங்கிய இறுதி யுத்தம் முள்ளிவாய்க்காலில் முடியும் வரையான மூன்று வருடத்தில் தமிழ் மக்களது இழப்பு என்பது எந்த அளவீடுகளைக் கொண்டும் அளவிடமுடியாதளவுக்கு கொடூரமானது.

யுத்தப்பிரதேசங்களில் வாழந்திருந்த ஒவ்வொரு குடும்பங்களிலும் பாரிய உயிரழிவுகள் நடந்தேறியிருக்கிறது. மே 18 வரையான இறுதி மூன்று மாதங்களில் கும்பல் கும்பலாய் அப்பாவித் தமிழர்கள் யுத்தகளத்தில் பலியாகினார்கள். விடுதலைப்புலிகளுக்கெதிரான யுத்தம் அப்பாவித் தமிழ் மக்களுக்கெதிரானதாக மாற்றப்பட்டுக் கொண்டிருந்ததை உலகம் பார்த்துக்கொண்டிருக்க யுத்த வெற்றியின் உச்சத்தில் மிதந்த இலங்கை அரசும் சிங்கள மக்களும் தலைநகரில் வெடிகொழுத்திக் கொண்டாடிக் கொண்ருந்தார்கள். ஏறத்தாள இருபதாயிரம் மக்களை கொன்று மூன்று இலட்சம் மக்களை அகதிகளாக்கிவிட்ட ஒரு யுத்தம் குறித்து நாம் மவுனமாக இருந்து விடமுடியாது. நமது சமூகம் கட்டிவைத்திருந்த வீரம் பற்றியும் தேசியம் பற்றியுமான பலவித கதையாடல்களின் புனிதங்களை கேள்விக்குட்படுத்த வேண்டியதும் நம்மீது கட்டிவைக்கப்பட்ட கட்டுக்கதைகளைத் தகர்க்க வேண்டியதுமான காலகட்டத்தில் இருக்கிறோம்.

நீண்ட காலமாகவே புனைகதைகளுக்குப் பழகிப்போன நமது மனம் நிசத்தை நம்ப மறுக்கிறது. உண்மை எதுவெனத் தெரிந்தும் ஒத்தக்கொள்ளமுடியாத இயலாமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. புதிய புதிய பொய்களைக் கண்டுபிடிக்க வேண்டிய தேவையில் இருக்கிறது நமது இனம். இது நல்லதொரு மாற்றத்தை ஒருபோதும் நமக்குத் தந்துவிடப் போவதில்லை. ஈழவிடுதலைப் போராட்டத்தை தனது குறுகிய நலனுக்கான தேவையோடு கையகப்படுத்திய விடுதலைப்புலிகள் கடந்த 25 வருடங்களில் தமிழ் மக்களது விடுதலை சார்ந்து எவ்வித ஆக்கபூர்வமான முன்னெடுப்புக்களையும் செய்யவில்லை என்பதை நாம் பல இடங்களில் சொல்லியிருக்கிறோம். இங்கை இராணுவத்துடன் பலமான மோதல்களைச் செய்து கொண்ட அளவுக்கு தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியாக கைகூடிவந்த பல தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை அவர்களால்.
தமிழ் தேசியவாதிகள் சொல்வது போல் தமிழ் மக்களுக்கு இருக்கின்ற கடைசி நம்பிக்கை விடுதலைப் புலிகள் தான். இலங்கை அரசிடம் இருந்து தமிழ் மக்களுக்கு ஏதாவது ஒரு தீர்வு கிடைக்க வேண்டுமென்றால் அது விடுதலைப் புலிகள் காலத்தில் தான் முடியும் என்று சொன்ன வார்ர்தைகள் இன்று எப்படிப் பொய்த்துப் போனது? இலங்கை அரசுடன் பலமேசைகளில் பேச்சுவார்த்தை நடாத்தியவர்களை இனி ஒருவித அரசியலிலும் இயங்க முடியாதபடி ஒன்றுமில்லாமல் செய்துவிட்டதற்கு காரணம் யார்? இவற்றிற்கு நாம் விடையை எப்போது தேடுவது?
ஆனால் நமது தமிழ் சமூகம் இவற்றிற்கான விடையைத் தேடுவதில் கொஞ்சம் கூட அக்கறை காடட்வில்லை. மீளவும் மீளவும் பொய்மையிலும் கட்டுக்கதையிலும் பிரளயம் பண்ணிக் கொண்டிருக்கிறது. சம்பூர், வாகரை, தொப்பிகலை என்று நடைபெற்ற யுத்தத்தில் விடுதலைப் புலிகள் கிழக்கிலிருந்து முற்றாக வெளியேற்றப்பட்டபின் 2007 மார்ச் 27இல் சின்னப்பண்டிவிரிச்சானுக்கூடாக இராணுவம் வன்னியை நோக்கி நகர்ந்தது. புலிகள் தமது பலவீனத்துடன் முள்ளிவாய்க்காலுக்குள் ஒதுங்க இரண்டுவருடமாகியது. இந்த யுத்தத்திலிருந்து புலிகளைக் காப்பாற்ற யாருமற்றுப் போக புலம்பெயர் தமிழ்ச்சமூகம் தன்னைக் களத்திலிறக்கியது. தமிழர்கள் பெரும்பாலும் வாழுகின்ற லண்டன், பாரிஸ், சுவிஸ், கனடா,அவுஸ்ரேலியா என்று அனைத்து நகரங்களையும் தனது போராட்டங்களால் நிறைத்திருந்தது. உண்ணாவிரதப் போராட்டம், அமைதிப் பேரணி, நடைபவனி, மெழுகுவர்த்தி ஊர்வலம், என்று என்னவகையான போராட்டங்களை முன்னெடுக்க முடியுமோ அவ்வளவு வகையாகவும் போராட்டம் செய்தார்கள். கனடாவிலும் இலண்டனிலும் பெருந்தெருவை வழிமறித்தும் தமது எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தினார்கள்.

இதில் பின் நின்று இயக்கியது புலம் பெயர் புலி அமைப்புக்கள் என்றாலும் பெருந்திரளான மக்கள் பங்கேற்றார்கள். ஈழத்தில் இன அழிப்பு ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற புலம்பெயர் தமிழ் மீடியாக்களது பிரச்சாரம் அவர்களைக் கொதிநிலைக்குக் கொண்டு சென்றது.

புலிகளது பினாமியாகச் செயற்படும் அத்தனை தமிழ் மீடியாக்களும் முள்ளிவாய்க்காலிலிருந்த புலிகளைப் பேட்டி எடுத்து பிரச்சாரம் பண்ணின. மே மாதம் 12ந் திகதி புலிகளின் கடற்படைத் தளபதி சூசையின் பேட்டியில் புறச்சூழலை விளங்கிக் கொள்ளாத சூசை அவர்கள் நாம் இறந்து கொண்டிருக்கிறோம் நீங்கள் தெருவில் இறங்கிப் போராடுங்கள் அதுதான் விடுதலையை வேண்டித்தரும் என்று கேட்டுக் கொண்டார். சூசை அவர்கள் தனது மனைவி பிள்ளைகளைக் கூட இராணுவத்திடம் அனுப்பிவிடும் அளவுக்கான இறுதித் தருணம் அது. அந்த நிலையைக்கூட நமது தமிழ் மீடியாக்கள் விளங்கிக் கொள்ளவில்லை. தமிழின அழிப்பு என்ற கொதிநிலையிலிருந்து மக்களை மீட்க யாருக்கும் விருப்பம் இருக்கவில்லை. இரவு பகலாக தொடர் போராட்டங்களை நடாத்தி சர்வதேச உலகிற்கு இலங்கை அரச இராணுவத்தின் கொடூரங்களைத் தெரியப்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஆரம்பத்தில் மிகவும் ஆர்ப்பாட்டத்துடனும் ஆக்குரோசத்துடனும் போராட்டம் செய்தவர்கள் புலிகளின் இறுதி நாட்களில் மெதுமெதுவாக மண்டியிட்டு மனித சங்கிலிப் போராட்டம், மெழுகுவர்த்தி நடைபவனி என கெஞ்சும் நிலைக்கு வந்தார்கள். ஆனால் சர்வதேசம் இந்தப் போராட்டங்கள் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. சர்வதேச அரங்கில் போராட்டம் நடாத்திய தமிழ் மாணவர் அமைப்புக்களை விட பொதுவாக சர்வதேச அரசுகள் உள்ளிட்ட மற்றய அனைவருக்கும் ஈழத்தில் நடந்து கொண்டிருந்த உண்மை நிலை நன்றாகத் தெரிந்துகொண்டிருந்தது.
புலிகளால் உருவாக்கப்பட்ட சர்வதேச தமிழ் மாணவர் அமைப்புக்களுக்கும் சரி தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கும் சரி சிந்தனைமுறையில் பெரிய வேறுபாடுகளைக் காணமுடியவில்லை. இவர்கள் இருபகுதியினரும் தமிழ்த் தேசிய வெறியை உள்வாங்கியவர்களாகவும் வெறுமனே உணர்ச்சிவசப்பட்ட கருத்துக்களை மட்டுமே உரைக்கத் தெரிந்தவர்களாகவுமே இருந்தார்கள். இவர்கள் இருபகுதியினரும் ஈழவிடுதலையின் பெரும்பாலான பக்கங்களை அறியாதவர்கள். விடுதலைப்புலிகளது தொடர் வன்முறைக்கலாச்சாரம் தமிழ் மக்களது ஒட்டுமொத்த அழிவுக்கு ஆரம்பத்திலிருந்து எப்படி வித்திட்டது என்பதை இவர்கள் அறியாதவர்கள்.
இவர்களே தமக்காக சர்வதேசத்தில் தம்மை முன்நிறுத்தத் தகுதியானவர்கள் என்று விடுதலைப் புலிகளால் அடையாளம் காணப்பட்டார்கள். ஆகையால் தான் பல புலம்பெயர் மாணவர்களும் தமிழ்நாட்டிலிருந்து திருமாவளவன் உள்ளிட்ட சினிமாக்காரர்களும் வன்னிக்கு அழைக்கப்பட்டவர்கள். இவர்கள் யாருக்குமே ஈழத்தமிழர்களது உண்மையான பிரச்சனைகள் குறித்தோ அதன் வரலாறு குறித்தோ அக்கறையிருக்கவில்லை.
தமது இருப்புக்காக வெறும் உணர்ச்சிவசப்பட்ட கருத்துக்களை உதிர்த்துக் கொள்ளக்கூடியவர்களாகவே இருந்தார்கள். இவர்களது இந்தமாதிரியான உணர்ச்சிவசப்பட்ட கொதிநிலைக் கருத்துக்களை அப்படியே உள்வாங்கி அப்பாவிப் புலம்பெயர் மக்களிடத்தில் கொண்டு செல்வதில் தமிழ் மீடியாக்கள் முக்கிய பங்காற்றின. ஈழப் போராட்டம் பற்றி மிக முட்டாள்தனமான கருத்துக்களை சீமான் திருமாவளவன் போன்றவர்கள் உரைத்துக் கொண்டதைக் கூட இவர்களால் விளங்கிக் கொள்ளமுடியவில்லை.
வன்னியில் போர் நடைபெற்ற காலத்தில் அங்கே தனது சாதிக்காரர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று வன்னிமக்கள் அனைவரையும் வன்னியர்சாதி என தவறாக நினைத்து டாக்டர் ராமதாஸ் அவர்கள் கருத்து வெளியிட்ட கொடுமையை என்னவென்பது.
இதுதான் ஈழம் பற்றிய தமிழ் நாட்டு அரசில்வாதிகளது அறிவு. தமது அரசியல் இலாபங்களுக்காக முத்துக்குமார் போன்ற 30க்கும் மேற்பட்ட அப்பாவிகளைப் பலிகொடுத்துவிட்டு வெள்ளை வேட்டியுடன் மனங்கூசாமல் உலாவந்தவர்கள் வை. கோபால்சாமியும், திருமாவளவனும். இந்தவருடம் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு முத்துக்குமார் என்று பெயரிடவேண்டும் என்று குழந்தைத் தனமாகக் கதைத்தவர்தான் பாரதிராஜா என்ற திரைப்படத்துறைத் தலைவர்.
சீமான் அவர்கள் கனடாவிற்கு புலிகளால் வரவழைக்கப்பட்டிருந்தார். அவர் நிகழ்த்திய உரையை இங்குள்ள புலிகளது தமிழ் மீடியாக்கள் ஒலிபரப்புச்செய்தன. வெறும் உணர்ச்சிவசப்பட்ட கதறல். புலிகள் பற்றி சாதாரண தமிழ்நாட்டு குடிமகனுக்குத் தெரிந்த விடையம் கூட அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.
வெறும் தமிழ்த் தேசிய வெறியூட்டக்கூடிய பேச்சு அது. அதைக் கேட்டு வாயூற ரசித்துக் கொண்டிருந்தது ஈழத்தமிழ் மனங்கள். திருமாவளவன் சீமான் போன்றவர்களது திடீர் ஈழப்போராட்ட ஆதரவு குறித்து கருத்து வெளியிட்ட கருணாநிதி அவர்கள்; முதலில் ஈழப்போராட்டத்தில் முக்கியமான முகுந்தன் ரஞ்சன் போன்றவர்களைத் தெரியாமல் ஈழப்பபோராட்டம் பற்றிபேசமுடியாது என்று அவர்களை நோக்கிக் கிண்டலாகச் சொல்லியிருந்ததை நாம் கவனிக்க வேண்டும்.
ஆனால் இந்தவகையான சீரழிந்த தமிழ்நாட்டு அரசியல்வாதிகளைக் கொண்டே நமது மக்களுக்கு இங்கிருக்கின்ற தமிழ்மீடியாக்கள் அதிகமாகப் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறது. நடந்து முடிந்த யுத்தம் தந்த பாடம் நமது மக்கள் ஒவ்வொருவருக்கும் கைகளிலிருக்கும்போது தமிழ்நாட்டு அரசியல்லாதிகளை தமிழ் மீடியாக்கள் அறிவுசார் தளத்தில் வைத்து பாடம் நடாத்த வைப்பது மிகவும் கேலியானது. காலையிலிருந்து இரவுவரை வெறும் சினிமாப்பாடல்களோடு மட்டும் காலந்தள்ளும் வானொலிகளையும், வெறும் விளம்பரங்களையும் புலிகளது செய்திகளையும் மட்டும் பிரசுரம் செய்யும் பத்திரிகைகளையும் யாரும் இனிவருங்காலங்களில் கணக்கெடுக்கப்பேவதில்லை. நடந்து முடிந்த போரின் உண்மை முகங்களை அநேக மக்கள் தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள். இதை முன்கூட்டியே உணர்ந்த திரு.திருச்செல்வம் போன்ற புலிகளது கனடிய அரசியல் ஆய்வாளர்கள் தாமாக ஒதுங்கிக் கொண்டது மிகமிக நல்லதொரு விடையம். புலிகளும் இந்நாள் இல்லையேல் மண்ணில் எலிகளும் தின்னும் இத்தமிழர் இனத்தையே என்று எழுதிய முழக்கம் பத்திரிகை நின்று போனது மிக முக்கியமான ஒன்று.
வெறும் ஏமாற்றுத் தனங்களையே நீண்டநாட்களாக செய்து கொண்டிருக்க முடியாது. கனடாவில் வரும் மற்றய பத்திரிகைகளும் வெறும் தமிழ்த் தேசிய வெறியூட்டலில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்ள வேண்டியதருணம் வந்து விட்டது. ஒவ்வொரு அரசியல் நிகழ்வுமீதும் ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றம் இன்று அவசியமாகிறது. முப்பது வருடங்களுக்கு மேலால் கட்டிவைக்கப்பட்ட தமிழ்த்தேசிய கதையாடல் இன்று நம் கண்முன்னால் உருக்குலைந்துள்ளது.
இங்கிருந்து நமது கடந்தகாலத் தவறுகள் குறித்த மீள்பார்வையைத் தொடங்கமுதல் இனிவரப்போகும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் பரந்த மனதளவில் இருந்து எதிர்கொள்ள வேண்டியது மிகமுக்கியமானதாகும். முதலில் விடப்பட்ட தவறுகளை நாம் எல்லோருமே அவரவர் நிலை சார்ந்து ஏற்றுக் கொள்ளுதல் என்பது மிக முக்கியமானது. விடுதலைப்புலிகளது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் வாழநேர்ந்தவர்கள் செய்த தவறுகளை விட பலமடங்கு அவமானமானது புலம்பெயர் சூழலில் இழைக்கப்பட்ட தவறுகள்.
தங்களுடைய வருமானங்களுக்காக தமிழ் மக்களது வாழ்வைக் கேலிக்கூத்தாக்கியவர்கள் இந்தத் தமிழ்த்தேசியவெறியர்கள். இவர்களே இன்னும் எஞ்சியிருக்கும் மக்களது வாழ்வை கேள்விக்குள்ளாக்கிக் கொண்டிருப்பவர்கள். இன்று எமக்கு முன்னிருக்கும் முக்கிய தேவை மக்களது வாழ்வியலை அடுத்தகட்டத்திற்கு நகர்த்துவதற்கான வார்த்தைகள். மிகப்பெரிய ஏமாற்றத்தின் பின் அனைத்தையும் தவறவிட்டு உயிரைத் தொலைத்து நிற்கும் மக்களுக்கான இருப்பிடம்.
இதுவே இன்றைய உடனடித்தேவை. அதைவிடுத்து சிங்கள அரசின் அத்து மீறிய சிங்களக் குடியேற்றம் பற்றியும், புத்தவிகாரை கட்டுவது பற்றியும், இராணுவமுகாம் அமைப்பது பற்றியும், அல்லது மகிந்த அரசை யுத்தக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும் என்றெல்லாம் பேசுவதால்ஆவதென்ன? இன்று அனைத்தையும் இழந்து நிற்கும் அவல நிலையில் அந்த மக்களுக்கு என்ன கவலை இருந்து விடப் போகிறது.
தமிழீழ விடுதலையை நேசித்தவர்கள் அதற்காக தன்பிள்ளைகளை காவுகொடுத்த அந்த வன்னிமக்கள் விடுதலைப்புலிகளாலேயே கணக்கில்லாமல் கடைசி நாட்களில் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னால் இங்கை அரசினது வன்முறை பற்றியும் புதிய புரட்சி பற்றியும் புலம் பெயர் தமிழ் மீடியாக்கள் அந்த மக்களுக்கு வகுப்பெடுப்பது என்பது எவ்வளதூரம் கொடுமையான கேவலம்.
கடந்த மூன்று மாதங்களின் முன்னர் யூனிசெப் கணக்கின்படி 850 குழந்தைகள் இறுதி யுத்தத்தில் மாத்திரம் தமது பெற்றோரை இழந்து அநாதையாக நிற்பதாக அறிவித்திருக்கிறது.
எதிர்காலம் யார்கையில் என்பது தெரியாத நிலையில் தமிழினம் தமது வாழ்வைத் தொலைத்திருக்கிறது. ஆனால் புலம் பெயர் புலிப் பினாமிகளுக்கும் தமிழ் நாட்டு திரைப்படத்துறையினருக்கும் மாத்திரம் புலிகளது தலைவர் திரும்பிவரும் திகதி தெரிந்திருக்கிறது.
மீண்டுமொருதடவை ஈழத்தமிழ் மக்கள் மீது இவர்கள் சவாரிவிடத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.
அண்மையில் வை.கோபால்சாமி அவர்கள் தமிழீழம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று அசிங்கமாக அறிக்கை விட்டிருந்தார். அதுதான் புலம் பெயர் தமிழ் மீடியாக்களுக்கு மிகப் பெரிய செய்தியாக இருந்தது. அகதியாக தமிழ்நாட்டில் தஞ்சம் கேட்டிருக்கும் பல இலட்சம் மக்களுக்கு ஒரு துணி வேண்டிக் கொடுக்காதவர்கள் இவர்கள். மண்டபம் முகாம்பற்றி இவர்கள் பேசியது கிடையாது. முள்ளுக்கம்பிகளுக்குள்ளே சேலம் மாவட்டத்திலுள்ள கிராமங்களில் 20வருடங்களுக்கு மேலாக வாழும் இலங்கைத் தமிழ் அகதிகள் பற்றி இவர்கள் என்றும் வாய்திறந்தது கிடையாது.
இவர்கள் சொல்லும் ஈழத்தமிழ் மக்களது தொப்புழ்கொடி உறவு இப்படித்தன் நஞ்சூறிப் போயிருக்கிறது.
தாம் தற்போதுதான் புலிகளின் தலைவருடன் பேசிவிட்டு வருவதாக திருமாவளவனும் நெடுமாறனும் சொல்வதைக் கேட்பதற்கு அங்கே ஆட்கள் இருக்கிறார்கள்.
தேவையும் இருக்கிறது. நமக்கு எங்கே போனது புத்தி என யோசிக்க வேண்டாமா? திருமாவளவன் வை. கோபால்சாமி உள்ளிட்ட தமிழ்நாட்டு அரசியல் வாதிகளிடம் நாம் இரங்கிக் கேட்பது எல்லாம் தயவுசெய்து எங்களை விட்டுவிடுங்கள் எங்களது தொப்புழ்கொடி உறவாக இருந்து நீங்கள் ஆதரவு தந்தது போதும். எப்போதும் நாம் உங்களுக்கு நன்றியுடையவர்களாக இருக்கிறோம். இனிவருங்காலங்களில் நீங்கள் அங்கே தனிநாடு கேட்டுப் போராடுங்கள் உங்களுக்கு நாம் தொப்புழ் கொடி உறவாக இருந்து ஆதரவு தருகிறோம். இவ்வளவு காலமும் நாம் இழப்பதற்கும் மேலால் இழந்து விட்டோம் தயவு செய்து கெஞ்சிக் கேட்கிறோம் எங்களை விட்டுவிடுங்கள்.
(கற்சுறா)
நன்றி: வைகறை கனடா

சனல்- 4 இல் ஒளிபரப்பான வீடியோ உண்மையானது என நிரூபிக்கப்பட்டுள்ளது

கைகள் கட்டப்பட்ட நிலையில் முழு நிர்வாணமாக தமிழ் இளைஞர்களை இலங்கை இராணுவம் சுட்டுக்கொல்லும் காட்சிகள் ஆகஸ்ட் மாதம் வெளியாகியிருந்தது.
உலகில் அதிர்வலைகளை கிளப்பியிருந்த அந்த வீடியோக் காட்சிகள், போலியானவை என இலங்கை அரசாங்கம் கூறியது மட்டுமல்லாது, அவுஸ்திரேலியாவில் உள்ள நிபுணர்களைக் கொண்டு தான் அந்த வீடியோவை பரிசீலித்ததாகவும் அதன் பெறுபேறுகளின்படி அது போலியானது என நீரூபிக்கப்பட்டதாகவும் இலங்கை தெரிவித்திருந்தது.
இந்த ஆய்வை நடத்தியவர் ஒரு அவுஸ்திரேலியா வாழ் சிங்களவர் என்பது பின்னர் தெரியவந்தது.
இருப்பினும் தற்போது அமெரிக்காவில் இயங்கிவரும் சுதந்திரமான அமைப்பொன்று இந்த வீடியோக் காட்சிகளை ஆராய்ந்து அவை உண்மையானவை எனக் கூறியுள்ளனர். டைம்ஸ் நிறுவனம் இந்த வீடியோவை தொழில் நுட்பரீதியாக ஆராயத் திட்டமிட்டு இதனை பிரட்ரிக் எனப்படும் நபரிடம் கையளித்துள்ளனர்.
பிரட்ரிக் என்பவர் அமெரிக்க FBI க்கு தொழில்நுட்ப ஆலோசனை வழங்குபவரும், வீடியோக் காட்சிகளை , நுண் தொழில்திறன் கொண்டு பகுத்தாய்வு செய்பவரும் ஆவார்.கொலை நடைபெறும் போது எடுக்கப்பட்ட தொடர் காட்சிகள் நொக்கியா போனில் எடுக்கப்பட்டது எனவும், நொக்கியா போனில் உள்ள படத்தை பதிவுசெய்யும் மென்பொருளுடன் (software) இந்த வீடியோ ஒத்துப்போவதாகவும் முதலில் அவர் கண்டுபிடித்துள்ளார். காட்சிகள் எடுக்கப்பட்ட விதம் ஒருவர் கமராவை அசைக்கும் வேகம் என்பனவற்றையும் அவர் துல்லியமாக அளந்து, பிணங்களுக்கு இடையே உள்ள இடைவெளிகளையும் அளந்து அதன் உண்மைத் தன்மையை விளக்கியுள்ளார்.இந்த வீடியோ முழுவதும் செல்போனில் உள்ள கமராவால் எடுக்கப்பட்டது என்றும், இதில் எந்தவிதமாகவும் வேறு ஒளிப்பதிவுகள் எதுவும் சேர்க்கப்படவில்லை எனவும் அவர் உறுதியாகக் கூறியுள்ளார்.
அமெக்காவில் உள்ள கொலராடோ மாநிலத்தில் இயங்கும் ஒலி ஒளி தடய நிபுணர்கள் இந்த வீடியோ குறித்து தமது ஆய்வுகளையும் பூர்த்திசெய்துள்ளனர். அவர்களும் இந்த வீடியோ முற்றாக உண்மையானவை எனக் கூறியுள்ளனர்.
அமெரிக்காவில் இயங்கிவரும் தமிழின அழிப்பிற்கு எதிரான அமைப்பினரே மிகுந்த சிரமத்தில் இந்த வீடியோவை, பல தடயவியல் நிபுணர்களிடம் கொடுத்து அதன் உண்மைத் தன்மையை வெளிக்கொண்டுவர பாடுபட்டுள்ளனர் என்பது, குறிப்பிடத்தக்க விடயம், அதுமட்டுமல்ல பாராட்டிற்குரிய விடயமும் ஆகும்.

ஜேம்ஸ் கேமரூனின் 'அவதார்'!

டைடானிக் படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனின் அடுத்த பிரமாண்டமான படம் தயாராகிவிட்டது.
12 ஆண்டுகள் ஜேம்ஸ் கேமரூன் பெரும் பொருட்செலவு மற்றும் ஆராய்ச்சி செய்து உருவாக்கியுள்ள படம் 'அவதார்'. வரும் வெள்ளிக்கிழமை உலகமெங்கும் வெளியாகிறது.இந்தப் படம் இந்தியாவில் மட்டும் 700 பிரிண்டுகளுடன், தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் வெளியாகிறது.
ரூ. 1200 கோடி செலவில் தயாராகியுள்ள இந்த அவதார், இதுவரை உலகில் வெளியான அனைத்து கிராபிக்ஸ் படங்களையும் விட மிகச் சிறந்த படம் என்று 'டைம்' பத்திரிகை பாராட்டியுள்ளது.
இந்தப் படத்துக்காக தனி கிரகம் ஒன்றையே உருவாக்கினார்களாம் கேமரூன் மற்றும் குழுவினர். அதில் வித்தியாசமான விலங்குகள், மரங்கள் போன்ற தோற்றங்களை உருவாக்கி அவற்றைத்தான் முப்பரிமாணத்தில் அவதாரமடுக்க வைத்துள்ளனர்.உயிரற்ற பொருட்களையும், அசைவுகளுடன் உயிரோட்டமாகக் காட்டும் புதிய தொழில்நுட்பத்தின் துணையுடன் உருவாக்கப்பட்டுள்ளது.ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனத்தினர் இந்தப் படத்தை இந்தியாவில் வெளியிடுகின்றனர்.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் சிஇஓ விஜய் சிங் கூறுகையில், "அவதார் படத்துக்கு இந்தியாவில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இந்தியாவில் இதுவரை எந்த ஹாலிவுட் படத்துக்கும் இந்த அளவு கிராண்டான ரிலீஸ் இருந்ததில்லை என்று வியக்கும் வகையில் அவதார் படத்தை வெளியிடப் போகிறோம்" என்றார்.தமிழில் நேரடியாக வெளியாகும் முதல் ஹாலிவுட் '3 டி' படம் என்ற பெருமையைப் பெறுகிறது அவதார்.
உலகம் முழுக்க வரும் டிசம்பர் 18ம் தேதி 2 டி மற்றும் 3 டி வடிவங்களில் வெளியாகும் அவதார், தமிழில் மட்டும் 100 பிரிண்டுகளுடன் வருகிறது.தமிழகம் முழுக்க சத்யம் சினிமா வெளியிடுகிறது. இதுகுறித்து அதன் இயக்குநர் ஸ்வரூப் ரெட்டி கூறுகையில்,இந்த பத்தாண்டு காலத்தில் உலகம் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தது இந்தப் படத்துக்காகத்தான்.
டிஜிட்டல் '3 டி' வடிவத்தில் வெளியாகும் இந்தப் படம் பெரிய வரலாறு படைக்கும் என நம்புகிறோம்" என்றார்.இந்தப் படத்தின் மூலம் 'அவதார்' என்ற இந்திய வார்த்தை உலகெங்கும் தெரிந்த வார்த்தையாகப் போகிறது.

புளொட் தலைவர் த.சித்தார்த்தன், பிரதிநிதிகள் முறிகண்டி பிள்ளையார் கோவில் கும்பாபிஷேக நிகழ்வில் பங்கேற்பு-

கிளிநொச்சி முறிகண்டிப் பிள்ளையார் கோவிலின் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் முற்பகல் (13.12.2009) நடைபெற்றது. இந்நிகழ்வில் புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன், புளொட்டின் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் பவன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர். அரசாங்க அதிகாரிகள் மற்றும் இராணுவ உயரதிகாரிகளும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.
முறிகண்டிப் பிரதேசத்தில் இன்னமும் 15நாட்களுக்குள் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்படவுள்ள நிலையில் முறிகண்டிப் பிள்ளையார் கோவில் நேற்று முன்தினம் முதல் பொதுமக்களின் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புளொட் தலைவர் த.சித்தார்த்தன் தலைமையிலான புளொட் பிரதிநிதிகள் கிளிநொச்சி மாவட்டத்தின் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்ட உருத்திரபுரம், ஜெயந்திநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு (13.12.2009) நேற்றுமுன்தினம் பிற்பகல் விஜயம் செய்திருந்தனர். அங்கு மீள்குடியமர்த்தப்பட்ட மக்களின் நிலைமைகள் மற்றும் அவர்களின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டனர். விவசாய நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியாத நிலைமை, உரிய வீட்டுவசதிகள் இல்லாமை, போக்குவரத்துப் பிரச்சினைகள் ஆகியவற்றையும் அங்கு காணக்கூடியதாக இருந்தது. இப்பிரச்சினைகளை அரச உயர்மட்டத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கைகளை எடுக்க முயற்சிப்பதாக புளொட் தலைவர் அம்மக்களிடம் தெரிவித்தார். அத்துடன் மீள்குடியேறிய மக்களுக்கான வீடமைப்புக்கென 45ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கு கிராம அதிகாரிகளின் ஊடாக அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருப்பதையும் அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. அனைத்து வசதிகளும் பூர்த்தி செய்யப்படாத நிலையிலும், தமது சொத்துக்களை இழந்த நிலையிலும் முகாம்களிலிருந்து தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பி வந்துள்ளமை தமக்கு சற்று ஆறுதலளிப்பதாக அம்மக்கள் புளொட் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளனர்.

தமிழீழமே தீர்வு!தமிழகத்திலும் பொதுவாக்கெடுப்பு: திருமாவளவன்

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தமிழீழம் தொடர்பாக அறிக்கை விடுத்துள்ளார்.
அவ்வறிக்கையில், ’’உலகெங்கும் பரந்துவாழுகிற புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள், தங்களுக்கான ‘நாடுகடந்த தமிழீழ அரசு’ தொடர்பாக ஆங்காங்கே பொதுமக்கள் வாக்கெடுப்பு நடத்திவருகின்றனர்.
அத்துடன், ஈழத்தந்தை செல்வா, காலத்தில் நிறைவேற்றப்பட்ட ‘வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை’ ஆதரிக்கும் வகையில் இன்றைய புலம்பெயர்ந்த தமிழர்களின் மனநிலையை அறியும்பொருட்டும் ‘பொதுவாக்கெடுப்பு’ நடந்து வருகிறது.
அண்மையில் நார்வே மற்றும் ஃபிரான்சு ஆகிய நாடுகளில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று வாக்களித்துள்ளனர்.
நார்வேயில் 98 விழுக்காடு மற்றும் ஃபிரான்சில் 99 விழுக்காடுஅளவிலும் பொதுமக்கள் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்துள்ளனர். அதாவது, ஈழத்தமிழர்களுக்கு நிலையான பாதுகாப்பு தமிழீழ விடுதலை மட்டுமே என்பதை மீண்டும் மக்கள் இத்தகைய வாக்கெடுப்பின் மூலம் மறுஉறுதி செய்துள்ளனர்.
ஈழச்சிக்கலுக்கு ஒரே தீர்வு - இறுதித் தீர்வு தமிழர்களின் இறையாண்மையினைப் பாதுகாப்பதற்கான தமிழீழ விடுதலை மட்டுமே!
இத்தனை இழப்பிலும் ஈழமக்கள் சோர்வடையாமல், சலிப்படையாமல், தமிழீழத்தை வென்றெடுக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாகவுள்ளனர்.
சிங்கள அதிபருக்கான தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் தங்களுக்குள் வாக்கெடுப்பு நடத்தி தமது ஒற்றுமையை வெளிப்படுத்தியிருப்பது மிகுந்த ஆறுதலையளிக்கிறது.
ஈழத்தமிழினத்தின் இந்த உறுதிமிக்க உணர்வுகளை- விடுதலைவேட்கையை, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் யாவும் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். தமிழீழத் தேவையை இந்திய அரசு புரிந்து கொள்வதோடு அதனை அங்கீகரிக்கவும் முன்வரவேண்டும்.
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை - நாடுகடந்த தமிழீழ அரசை விடுதலைச்சிறுத்தைகள் முழுமையாக வரவேற்று ஆதரிக்கிறது. அத்துடன், தமிழகத்திலும் அத்தகைய பொதுவாக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக விடுதலைச்சிறுத்தைகள் முன்முயற்சிகளை மேற்கொள்ளும்!’’என்று தெரிவித்துள்ளார்.

Monday, December 14, 2009

சீன 'கண்டுபிடிப்பு'-இந்தியா ஷாக்!

இந்திய வர்த்தகத் துறைக்கு சற்று கலவரம் தரும் செய்தி இது...
'சீனா வில் 1 பில்லியன் டன் இரும்புத் தாது இருப்பு கண்டறியப்பட்டுள்ளது'.

இதனால் இந்தியா வுக்கு என்ன கலவரம்?இதுவரை சீனா பயன்படுத்தி வந்த இரும்புத் தாதுவில் பாதி இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதுதான். அதாவது இந்த கண்டுபிடிப்பு மூலம் இந்தியாவின் இரும்பு ஏற்றுமதி பெருமளவு பாதிக்கப்பட உள்ளது என்பது கலவரமான செய்திதானே.

சீனாவின் ஹீபே மாகாணத்தில் லூனான் கவுன்டி என்ற இடத்தில் ஆறு கிலோமீட்டர் தூரத்துக்கு இந்த இரும்புத் தாது படுகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதில் 41.43 மீட்டரிலிருந்து 108.95 மீட்டர் அடர்த்தியில் இந்தத் தாது படர்ந்துள்ளதாம்.

100 முதல் 600 மீட்டர் ஆழத்தில் உள்ள இந்தத் தாதுவை தோண்டியெடுக்கும் பணி விரைவில துவங்க உள்ளது.சீனாவைப் பொறுத்தவரை இந்த கண்டுபிடிப்பு மிகப்பெரிய உற்சாகத்தைத் தந்துள்ளது. காரணம், இரும்புத் தேவை அந்நாட்டுக்கு மிக அதிகம்.

ஆனால் அதைச் சமாளிக்கும் அளவு இருப்பு அவர்களிடம் இல்லாமல் இருந்தது. இதனால் பெருமளவு இரும்புத் தாதுவை இந்தியாவிடமிருந்தும், லத்தீன் அமெரிக்க நாடுகளிடமிருந்தும் இறக்குமதி செய்துவந்தது.ஏராளமாக இறக்குமதி செய்வதால், தங்களுக்கு சிறப்புச் சலுகை வேண்டும் என சமீபத்தில்தான் வெனிசூலா நிறுவனத்துடன் தனி ஒப்பந்தமே போட்டது சீனாவின் 'வோன் அயர்ன் அண்ட் ஸ்டீல் நிறுவனம்'.

இப்போது இந்த புதிய கண்டுபிடிப்பால், தனது இரும்புத் தாது இறக்குமதியை பாதிக்கும் மேல் குறைத்துக் கொள்ளத் திட்டமிட்டிருப்பதாக அறிவித்துள்ளது சீனா.

பிரபாக்கும் தலிபானுக்கும் முடிச்சுபோட்ட

பிரபாக்கும் தலிபானுக்கும் முடிச்சுபோட்ட மகிந்த சிந்தனை தலிபானுடன் உள்நீச்சள் அடிக்கின்றதா? என்ற குற்றச்சாட்டு இன்றுசர்வதேசத்திற்கு எழுந்துள்ளது!!!...
தலைவர் பிரபாகரன் அமரர் அவர்கள் பயங்கரவாதத்தில் ஈடுபட்டார் என்று, பலத்த குற்றச்சாட்டை சோடித்து, வெள்ளைக்கொடியுடன் சென்றவர்களை கொலைசெய்தது என்று மகிந்த அரசின் மேல் குற்றம் சாடும் முன்னால் இராணுவத்தளபதியில் வாக்குமூலத்தைவைத்து, இன்று ஐநா மனித உரிமைகள் அமைப்பு அல்லது குழு குற்றம் சாட்டப்பட்டவர்களை கைதுசெய்யமுடியும். அல்லது பதவியில் இருந்து நிறுத்தமுடியும் என்று பல வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்துவருகின்றூர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் பயங்கரவாதத்தை அடக்கிவிட்டோம் என்ற மமதையில் அல்லது வெற்றியின் பிரமிப்பில் மகிந்த அரசுபலசவால்களை விட்டது. இதனால், கூடக்கூடாத இராணுவ தலமைகளுடன் கூடியதால் இன்றுபலத்த பின்னடைவுக்குள் தள்ளப்பட்டுள்ளது.
பயங்கர வாதிகள் என்று முத்திரைகுத்தி புலிகளின் தலமையையும் அதன் பிரதிகளையும் நேர்வேயுடன் சேர்ந்து அழித்த, மகிந்த அரசு ஐநாசபையின் மனித உரிமைக்கு பலவிதத்தில் அசௌவுரியங்களை விளைவித்து விட்டது. என்ற குற்றச்சாட்டுடன் சேர்ந்த ஆயுத்கடத்தல் குற்றச்சாட்டும் இன்று மகிந்த அரசின் தலையில் சூடப்பட்டதா? அல்லது திணிக்கப்படுகின்றதா?? என்ற கேள்விகள் பலமாகவே எழுகின்றது. எனினும் தலிபானன்களுக்கும் இலங்கையில் உள்ள தமிழீழவிடுதலைப் புலிகளுக்கும் தொடர்புகள் இருப்பதாக பல இடங்களில் பகிரங்கமாகவே குற்றத்தை சாட்டிவந்த மகிந்த அரசு இன்று புலிகளை முற்றாக அழித்த பின் ஏன்? எதற்கு?? ஆயுதங்களை கடத்துகின்றது? அல்லது வாங்குகின்றது??
அப்படியானால் இந்த ஆயுதங்கள் வாங்கபணம் யார் கொடுத்தது??? என்றும், பயங்கரவாதத்திற்கு உதவும் முறைகள் மகிந்த அரசுக்கு இனறு ஏன் தேவைப்படுகின்றது??? என்ற பல்லாயிரக்கணக்காண கேள்விகள் சர்வசேத்திடம் எழுந்துவிட்டது என்றுதான் கூறமுடியும்.காரணம் கடந்த புதன் கிழமை பாகிஸ்தான் – வங்க தேச கடல் எல்லையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் கப்பல் ஒன்று நடமாடியதனை கண்ட இந்திய கரையோர காவல்படையினர் அந்த கப்பலை பிடிப்பதற்கு உசார்படுத்தப்பட்டனர். அந்த கப்பல் தலைமறைவாகும் முயற்சியில் ஈடுபட்டது. சரியான அடையாளங்களை தெரிவிக்க மறுத்ததால் அந்த கப்பல் பிடிக்கப்பட்டது.
அந்த கப்பலில் 11 பாகிஸ்தானியர்கள் இருந்தது மட்டுமன்றி பெருமளவான ஆயுதங்கள் அதற்குள் இருந்தன ஆனால் இந்த கப்பல் பற்றிய விபரங்களை இந்திய அரசு தெரிவிக்க மறுத்து விட்டது. அதற்கு என்ன நடந்தது என்ற விபரம் தெரியவில்லை.

மஹிந்த தெரிவு செய்யப்பட்டால் தமிழ் மக்களுக்கு சிறந்த எதிர்காலம் உண்டு. பா.உ.தங்கேஸ்வரி.


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்க மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கான தீர்வினை எட்ட முடியும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி தெரிவித்துள்ளார். அத்துடன் ஜனாபதி மஹிந்த ராஜபக்சவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் யாவும் வெற்றியளித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

அதே நேரம் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவதா என்ற விடயம் தொடர்பாக தொடர்ந்தும் கூட்டமைப்புடன் கலந்துரையாடி வருவதாக பா.உ சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளதுடன் இது தொடர்பான முடிவொன்றை விரைவில் எட்ட முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

'பிரபாகரனைக் கொன்றவன் நான்" - சரத் பொன்சேகா

ரத் பொன்சேகா அமெரிக்காவின் நோக்கத்தை நிறைவேற்றத் தொடங்கியிருக்கின்றார்.மகிந்த ராஜபக்சவிற்கு எதிராகவும், கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராகவும் சாட்சியங்களைப் பெறுவதற்கு சரத் பொன்சேகா சரியான ஆள் என்று கணக்குப் போட்ட அமெரிக்கா, அவரிடமிருந்து சாட்சியத்தைப் பெற முயற்சித்தது. அவர் அமெரிக்காவிற்கு கடந்த மாதம் சென்றிருந்தபோது அவரிடம் சாட்சியத்தைப் பதிவுசெய்ய முயன்றது.அவர் சாட்சியமளிக்காமலே அவசரம் அவசரமாக நாட்டிற்கு திருப்பி அழைக்கப்பட்டார். ஒரு ஓய்வுபெற்ற ராணுவத் தளபதியாக மட்டும் இருந்துகொண்டு மகிந்த மீதான குற்றச்சாட்டுக்களை சுமத்துவதைவிட அவரது அரசியல் எதிரியாக- ஒரு அரசியல்வாதியாக இருந்துகொண்டு குற்றம்சுமத்துவது நல்லது என்று கணக்குப்போட்ட அமெரிக்கா, அவரை அரசியல்வாதியாக மாற்றியது.இன்று அவர் மகிந்த மீது விடுக்கும் குற்றச்சாட்டுக்கள் ஒரு எதிர்தரப்பு அரசியல்வாதியாக இருந்துகொண்டு தொடுக்கும் அரசியல் குற்றச்சாட்டுக்களாகிவிடுகின்றன. யார் இந்த சரத் பொன்சேகா? சரத் பொன்சேகா பற்றியும், அவரது தமிழ் மக்கள் மீதான படுகொலைகள் குறித்தும் தெரியாத தமிழர்கள் இருக்கமுடியாது. யாழ்ப்பாணத்தில் நூற்றுக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டு செம்மணி மயானப்பகுதியில் புதைக்கப்பட்ட வரலாற்றை தமிழ் மக்கள் இலகுவில் மறந்திருக்கமாட்டார்கள்.
அறுநூறுக்கும் அதிகமான அப்பாவித் தமிழர்களை செம்மணியில் புதைத்த பெருமைக்குரிய சிங்கள படையதிகாரி வேறுயாருமல்ல, சாட்சாத் இந்த சரத் பொன்சேகாவேதான். அந்த ஒருயொரு தகுதிதான் அவரை இராணுவத்தளபதியாக மாற்றியது. புலிகளுக்கு எதிரான யுத்தம் தீவிரமடையும்போது அப்பாவி தமிழ் மக்களும் பலியாகவேண்டிவரும் என்பது அனைத்து தரப்பினருக்கும் புரிந்திருந்தது.
அவ்வாறு அப்பாவி தமிழ்மக்கள் பலியாகின்றபோது, யுத்தத்தை விழிநடத்துகின்ற தளபதி, யுத்தத்தை தொடர்வதற்கு தயக்கம்காட்டலாம். ஆனால் சரத் பொன்சேகா தளபதியாக இருந்தால், அப்பாவிகள் பலியாவது கண்டு அவர் சஞ்சலமடையப்போவதில்லை. இதனை நன்கு தெரிந்து வைத்திருந்ததால்தான் அவரை தளபதி ஆக்கினார் கோத்தபாய.
யாழ்ப்பாணத்தில் சரத் பொன்சேகா தமிழ்மக்களை கொன்றுகுவித்த காலங்களில் சாதாரண மேஜர் தர அதிகாரியாக வடமராட்சியில் பணியாற்றிய கோத்தபாய, சரத் பொன்சேகா பற்றி தெரிந்து வைத்திருந்ததால் அவரை தளபதியாக்கினார்.
கடந்த ஜுலை மாதம் பத்தாம் திகதி யுத்த வெற்றிக்காக சரத் பொன்சேகாவுக்கு அம்பலாங்கொடையில் பாராட்டுவிழா நடாத்தப்பட்டது. அங்கு உரையாற்றிய அப்போதைய ராணுவத்தளபதி சரத் பொன்சேகா பின்வருமாறு கூறினார். நான் படை வீரர் என்ற வகையில் அவ்வப்போது தேவையான உத்தரவுகளை பிறப்பித்து யுத்தத்தை வெற்றிகொண்டேன்.
படை வீரர்களிடம் சரணடைய வரும் எவரையும் ஒன்றும் செய்ய வேண்டாம் என எனக்கு உத்தரவு வழங்கப்பட்டிருந்தது. குளிர் அறையிலிருந்து சொல்பவர்களின் உத்தரவை நான் ஏற்கவில்லை என்றார். அதாவது, புலிகளின் முக்கிய தலைவர்களான நடேசன், புலித்தேவன் உட்பட்ட சில தலைவர்கள் தாம் சரணடைய விரும்புவதை நோர்வே ஊடாக பசில் ராஜபக்சவிற்கு தெரிவித்தனர். அவர்களை வெள்ளைக்கொடிகளை ஏந்தியவாறு வந்து படையினரிடம் சரணடையுமாறு பசில் கூறியிருந்தார். ஆனால் அவ்வாறு அவர்கள் சரணடைந்தபோது படையினர் அவர்களை சுட்டுக்கொன்றதாக அப்போது புலிகள் குற்றம்சாட்டியிருந்தனர்.அதாவது, குளிர் அறையிலிருந்து பசில் விடுத்த உத்தரவை சரத் பொன்சேகா ஏற்கவில்லை. அவர் தனது படைத் தளபதிக்கு அவர்களை சுட்டுக்கொல்லுமாறு உத்தவிட்டிருந்தார்.
இதே சரத் பொன்சேகா கடந்த ஞாயிறன்று வெளியான ஆங்கிலப் பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய பேட்டியில் பாதுகாப்பு செயலர் கோத்ததபாயவின் உத்தரவின்பேரில் சவேந்தர் சில்வா என்ற அதிகாரியே புலித் தலைவர்களை சுட்டுக்கொன்றதாக கூறியிருக்கிறார்.
ராணுவத்தளபதியாக இருந்தபோது தானே சுட்டுக்கொன்றதாக கூறிய அவர், இப்போது அரசியல்வாதியாக மாறியபின்னர் இவ்வாறு கூறுவது ஏன்? ஒன்று தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக. மற்றயது அமெரிக்காவிற்கு வழங்கும் சாட்சியமாக..... ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை விழுத்த முனைகின்றார் சரத்.
யுத்தம் கடைசிக் கட்டத்தில் இருந்த மே 16ம் திகதியில் சரத் பொன்சேகா சீனாவில் இருந்தார். எனவே கடைசிக்கட்ட யுத்தத்தில் அவர் பங்கேற்கவில்லை என்று சிலர் அவர் மீது குற்றச்சாட்டை சுமத்தியபோது, அவர் தெளிவாக்க கூறினார்.நான் சீனாவுக்கு அப்போது போயிருக்காவிட்டாhல் நாட்டிற்கு பாரிய நட்டம் ஏற்பட்டிருக்கும். ஆனால் நான் சீனாவில் இருந்தபோதும் யுத்தத்தை நானே அங்கிருந்தவாறு வழிநடத்திக்கொண்டிருந்தேன்.
ஆக, நடேசன் போன்றவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டபோதும், சரத் பொன்சேகாதான் தனது படையினருக்கு உத்தரவுகளை விடுத்துக்கொண்டிருந்தார். தான் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவிப்பதற்காக கூட்டியிருந்த பத்திரிகையாளர் மாநாட்டில் சரத் பொன்சேகா மிகத் தெளிவாக ஒரு விடயத்தை கூறினார்.
2008ம் ஆண்டு மாவீரர் தின வைபவங்களின்போது நான் கூறினேன். அடுத்த மாவீரர் தின வைபவத்தில் கலந்துகொள்ள பிரபாகரன் இருக்கமாட்டார் என்று கூறியிருந்தேன். நான் கூறியவாறு 2009ம் ஆண்டு மாவீரர் தினத்திற்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே பிரபாகரனைக் கொன்றுவிட்டேன். இது தேர்தல் அறிவிப்பை வெளியிட்ட பத்திரிகையாளர் மாநாட்டில் அவர் வெளியிட்ட தகவல்.
ஆக, புலிகளின் தலைவர் பிரபாகரனைக் கொன்றவர், நடேசன் போன்ற முக்கிய தலைவர்களை கொன்றவர் சரத் nhபன்சேகா.இன்று தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக அவர் என்னதான் கூறினாலும், தமிழ் மக்கள் ஏமாளிகள் அல்ல

இலங்கைப்பிரச்சனை தீர்வு இந்தியாவிடம் கையளிப்பு

மீண்டும் தமது ஆட்சி நீடிக்குமானால் மஹிந்த ராஜபக்ஷ மேற்கொள்ள உத்தேசித்திருக்கும் அதிகாரப் பகிர்வுத் திட்டத்தின் அடிப்படை விடயங்கள் அடங்கிய ஆவணம் ஒன்றை இலங்கை அரசு இந்தியாவிடம் கையளித்திருப்பதாக நம்பிக்கையான வட்டார தகவல்கள் கூறுகின்றன. கடந்த புதன், வியாழக்கிழமைகளில் புதுடில்லிக்கு விஜயத்தை மேற்கொண்ட மஹிந்த சகோதரர்கள் மற்றும் லலித் வீரதுங்க ஆகியோரே இந்த அதிகாரப் பகிர்வு திட்ட ஆவணத்தை புதுடில்லியிடம் கையளித்துள்ளனர்.
ஆனால் இதிலுள்ள விடயங்கள் வெளித்தெரிந்தால் நடக்கப்போகும் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கருதப்படுவதால், இது பற்றிய தகவலை இப்போதைக்கு வெளியிடுவதில்லை என இரு தரப்புகளும் இணங்கிக்கொண்டன என்றும் அறியப்பட்டுள்ளது.
எனவே, மேற்படி குழுவின் புதுடில்லி விஜய அறிக்கையை வெளியிடும்போது, "இலங்கையில் அரசியல் தீர்வு நோக்கிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற விடயத்தில் இரு தரப்புகளும் இணங்கிக் கொண்டன" என்று மட்டும் சூட்சுமமாக வெளியிட தீர்மானித்துள்ளனராம்.

வி.புலிகளின் பணத்தில் ஜனாதிபதி தேர்தல் செலவுகள் புதிய திட்டம் அம்பலம்

கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விடுதலைப் புலிகளின் சர்வதேச செயற்பாட்டாளர் குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி.யுடன் இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்புப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல கடந்த 11ம் திகதி மாலை பேச்சுவார்த்தையொன்றை நடத்தியுள்ளதாக மிகவும் நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்கு ஆதரவளிக்குமாறு கெஹெலிய ரம்புக்வெல்ல இதன்போது கே.பி.யிடன் கோரியுள்ளதாக தெரியவருகிறது.
ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவை வெற்றிபெறச் செய்வதற்கான பிரசாரப் பணிகளுக்கு விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான நிதியைப் பயன்படுத்தினால் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் சலுகைகளைப் பெற்றுக்கொடுக்க முடியுமென கெஹெலிய ரம்புக்வெல்ல இதன்போது கே.பி.யிடம் கூறியுள்ளாராம்.
சரத் பொன்சேக்கா ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றால் கே.பி. பின்னர் எவ்விதத்திலும் விடுபட முடியாது எனவும் கெஹெலிய ரம்புக்வெல்ல இதன்போது கூறியதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

விஜய்யின் புதுக்கூட்டணி!

விஜய் தனது அரசியல் ஆசையைத் தெரி வித்த நேரத்தில் பல்வேறு விதமான நெருக்கடி உண்டாகிவிட்டது. "அரசியலில் நுழைவது உங்க மனநிம்மதியை கெடுக் குதுன்னா அரசியலை விட்றதுதான் நல்லது என்பது ஒரு நண்பனா என்னோட கருத்து' என அஜீத் கூட விஜய்யிடம் சொல்லியிருக்கிறார். இந்நிலையில் அசராமல் அரசியல் பண்ணவே விரும்புகிறாராம் விஜய். தன்னை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் அரசியல் கலந்த தமிழ் உணர்வு கதை ஒன்றை எதிர்பார்த்துக் காத்திருந்தவருக்கு அப்படி ஒரு கதை கிடைத்து விட்டதாக காதைக்கடிக்கிறார் ஆபீஸ்பாய் அய்யாவு.
விஜய் - சீமான்- கலைப்புலி எஸ்.தாணு என அமையவிருக் கிறதாம் அந்த கூட்டணி.

போராளிகளே கவனம்! ராணுவத்தின் புது சதி!

நிறைய விஷயங்கள் கடந்த பத்து நாட்களில் நிகழ்ந்திருக்கின்றன. நல்லனவும், அல்லாதனவும். மே 17-க்குப்பின் ஈழமக்கள் தொடர்பாக இந்தியாவில் நடந்த மிக முக்கியமான முன்னேற்றம் கடந்த வாரத்தின் பாராளுமன்ற விவாதம்தான்.
இதனை நேர்மையான அக்கறை யுடன் முன்னெடுத்த பா.ஜ.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இன்னபிற கட்சிகள் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவர்கள். பாராளுமன்ற விவாதத்தின் எதிரொலியாக இலங்கையின் உயர்மட்டக் குழு ஒன்று -அதில் ராஜபக்சேவின் சகோதரர்கள் கோத்தபய்யா, பசில் இருவரும் உள்ளடக்கம் -புதுடில்லி வந்து -அல்லது வரவழைக்கப்பட்டு, தமிழ் மக்கள் மீள் குடியமர்வு, அரசியல் தீர்வு தொடர்பாக முக்கிய விவாதங்கள் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.அனைத்துலக மனித உரிமை நீதி விசாரணையாளர் ஒருவர் கூறியுள்ளதைப் போல உலகின் ஜனநாயக அமைப்பு களும், உபகரணங்களும் வழங்குகிற வாய்ப்புகளை தமிழர்கள் இதுவரை காலமும் தவறவிட்டார்கள்.
இப்போதேனும் அக்குறை சரி செய்யப்பட வேண்டும். அனைத்துலக அரங்கைப் பொறுத்தவரை தமிழீழ விடுதலைப்புலிகள் அதே பெயருடன் உலகோடு உரையாடுகின்ற நாள்வர இன்னும் நீண்ட காலம் ஆகலாம். அதேவேளை அரசியற்தன்மை கொண்ட முயற்சிகள் உடனடியாக முன் நகர்த்தப்படவேண்டிய தேவை உள்ள காரணத்தினால் அவர்களே வேறு பெயரில் இயங்குவதுகூட இன்றைய காலச்சூழலில் பிழையான தல்ல. விரைவாகவும், உறுதியாகவும், துணிவாகவும் இயங்கவேண்டிய காலகட்டம் இது. அவ்வாறு செய்யவில்லையென்றால் இரண்டு காரியங்கள் நடக்கும்.ஒன்று தமிழர் பிரச்சினையில் இப்போது உலகம் காட்டி வருகிற அக்கறை குறையும், அதற்கான அறிகுறிகள் ஏற்கெனவே தெரியத் தொடங்கிவிட்டன.
இலங்கை தொடர்பான அமெரிக்க செனட் அவையின் சமீபத் திய அறிக்கையும், கடந்த வியாழன்- வெள்ளி நாட்கள் கொழும்பு வந்த தென் ஆசியாவுக்கான அமெரிக்க வெளியுறவுப் பொறுப்பாளர் ராபர்ட் பிளேக்-ன் செய்தியாளர் களோடான உரையாடல்களும் நம் பிக்கைத் தரவில்லை. ""இந்தியப் பெருங் கடலில் அமெரிக்க மேலாண்மைக்கு இலங் கையை நாம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். அது நட்பின் ஊடாகவென்றால் அப்படியே ஆகட்டும்'' என்பதான கொள்கை மாற்றத்தை அவதானிக்க முடிகிறது.தமிழ் மக்கள் மீது நடந்த போர்க் குற்றங்களில் தீவிர அக்கறை காட்டி வந்த அமெரிக்கா திடீரென வேகம் குறைத்துள்ளது. அமைதிக்கான நோபல் பரிசினை பெற்றுக் கொண்டு உரையாற்றிய அதிபர் பராக் ஒபாமா உலகின் மோசமான மனித உரிமை மீறல் குற்றவாளிகளாக ஸிம்பாப்வே, சூடான், பர்மா நாடு களை பெயர் குறித்துக் குறிப்பிட்டார்.
ஆனால் இந்நாடுகளையெல்லாம்விட பெருங்கொடுமை செய்த இலங்கையை சொல்வதை தவிர்த்தார்.அதேநாள் -அதாவது டிசம்பர் 10, உலக மனித உரிமை நாளன்று ஐ.நா. பாதுகாப்பு அவையில் அமெரிக் காவின் பிரதிநிதி ஸ்டீபன்ரப்பிடம் "இன்னர்சிட்டி' இணைய இதழின் நிருபர் இலங்கையின் தமிழருக்கெதி ரான போர்க்குற்றங்கள் பற்றியும் -அவை தொடர்பான அமெரிக்க வெளியுறவுப் பிரிவின் முந்தைய அறிக்கைகள் பற்றியும் கேட்டபோது, ""அவற்றை நாங்கள் எமக்குள் விவா திப்போம், பின்னர் இலங்கை அர சோடும் விவாதிப்போம்'' என்றார். ஆக, போர்க்குற்றங்களை ""அனைத் துலக நீதி விசா ரணை'' என்ற சட் டகத்திலிருந்து பவ்யமாக அகற்றி ""இருதரப்பு உரை யாடல்'' என்ற மிகக் குறிய அர சியல் வெளிக்குள் அமெரிக்கா நகர்த்த முயல்கிற தென்பது தெளிவா கத் தெரிகிறது.அமெரிக்காவைப் பொறுத்தவரை இலங்கை, சீனாவின் மேலாதிக்கப் பிடியில் வருவதைத் தடுத்து இந்தியப் பெருங்கடலில் தன் ஆளுமை இறுக்கத்தை நிலைநிறுத்துவதே முதன்மை இலக்கு.
அந்த இலக்கிற்குள் தமிழர் தலையெழுத்துக்கு முக்கியமான இடம் உண்டா, இல்லையா என்பது போகப் போகத்தான் தெரியும். ஆனால் இப்போது கிடைக்கிற சமிக்ஞைகள் நம்பிக்கை தருவதாக இல்லை. இவற்றையெல்லாம் உடனுக்குடன் உள்வாங்கி வேகமான பதில் இயக் கம் தருகிற அரசியல் கட்டமைப்பும், வளங்களும் ஈழத்தமிழர்களுக்கு இன்று இல்லை என்பது மிகப்பெரிய குறையாக உள்ளது. கிடைக்கிற பிறிதொரு செய்தியின்படி இந்தியப்பெருங்கடலில் துரிதகதியில் தன் ஆளுமையை விரிவாக்கி வரும் சீனாவை கட்டுப்படுத்துகிற ஆற்றல் இந்தியாவுக்கு இல்லை என்று அமெரிக்கா மதிப்பீடு செய்துள்ளதாகவும் தெரிகிறது.
எனவேதான் அமெரிக்கா இலங்கையை தானே நேரடியாகக் கையாளும் முடிவினை எடுக்க முனைந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.இன்னொன்று களத்தில் -அதாவது இலங்கைக்குள் இயங்கும் ஓரளவுக்கு நேர்மையான தமிழ் அரசியற் சக்திகளும், புலம்பெயர் தமிழர்களும் ஒன்றிணைந்து தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க வழிநடத்துதலில் வலுவாகத் தெரிகிற அரசியல் அமைப்பினை முன் நிறுத்தவில்லையென்றால் தமிழருக்கான அரசியல் வெளியை சிங்களப் பேரினவாதமும் உலக உளவு அமைப்புகளும் பின் நின்று இயக்குகிற பரிதாப நிலையே ஏற்படும்.கடந்த இதழில் நாம் எழுதியிருந்த "புதிய குழு புருடா' ஓர் சிறு உதாரணம். அக்கட்டுரையைப் படித்துவிட்டு களத்தின் விபரமறிந்த ஒருவர் தொடர்புகொண்டார். இலங்கை அரசே புதிய தமிழ் போராளிக் குழுக் களை அறிமுகப்படுத்த நான் குறிப்பிட்டிருந்த காரணம் மட்டுமல்லாது இன்னொரு காரணத்தையும் அவர் கூறி அதையும் தயவு செய்து எழுதுவதோடு பிற தமிழ் ஊடகங்களிலும் வெளிவரச் செய்து தகவல் பரப்புங்கள் எனக் கேட்டுக்கொண்டார்.
அவர் கூறிய காரணம் ஆபத்தான சதித்தன்மை கொண்டது. இதுவே அது : ""கட்டளைத் தொடர்பின்றி இன்று இலங்கைக்குள் நூற்றுக்கணக்கான போராளிகள் இருக்கக்கூடும். அவர்கள் பழிதீர்க்கும் வெறியோடு நாள் பார்த்துக் காத்திருப்பார்கள். இப்படி புதிய குழுவொன்று வீரியமான முழக்கத்தோடு களம் வருகையில், அந்த அறிவிப்பினை தமிழ் இணைய தளங்கள் பிரபலப்படுத்துகையில் -அதனை நம்பி முன் குறிப்பிட்ட போராளிகள் அக்குழுவை தொடர்புகொள்ள முயல்வார்கள்.
அதன் மூலம் போராளிகளை அடையாளம் கண்டு அழித்தொழிக்கும் இராணுவப் புலனாய்வுச் சதிதான் அது'' என்று அவர் கூறினார்.பொதுவாக நாம் நினைப் பதுபோல் சிங்களவர்கள் மொக் கர்களும், மூடர்களுமல்லவென் பதைத் தொடர்ந்து நிரூபித்து வருகிறார்கள். நாம்தான் வாய்ச்சொல் வீரர்களாக, கூச்சல் கூடாரமாக, சொந்த உறவுகளின் பிணங்களின் மீதே நின்று அரசியல் நடத்தத் துணியும் ஒழுக்கமற்ற இனமாக இருக்கிறோம்.எந்த அளவுக்கு ராஜபக்சே கும்பலின் சிங்களப் பேரினவாதம் ஆதிக்கக் கும்மாளம் ஆடுகிறதென்றால் இருபதாயிரத்திற்கும் மேலான அப்பாவித் தமிழர்களை படுகொலை செய்த அதே முல்லைத்தீவு நிலப்பரப்பில், புதுமாத்தளன் நந்திக்கடல் ஓரத்து மாமரக் காடுகளுக்கு அருகில் ""சிங்கள தேசிய யுத்த வெற்றி நினைவுச் சின்னம்'' பிரம்மாண்டமாய் எழுப்ப கடந்த புதன்கிழமையன்று ராஜபக்சே அடிக்கல் நாட்டியுள்ளார்.தமிழர் இன அழித்தல் செய்து முடித்த தளபதிகள் சூழ நிற்க, சிறப்பு அதிரடிப்படை யினரின் அணிவகுப்புக்குப் பின் சிங்கள தேசியக்கொடியை ராஜபக்சேவும், தொடர்ந்து முப்படைக் கொடிகளை தளபதியர்களும் ஏற்றியுள்ளார்கள். அதனினும் கொடுமை வன்னி நிலப்பரப்பு நீண்ட காலத்திற்கு இனி ராணுவப் பிடியில்தான் இருக்கும் என்ற செய்தியாய் வன்னி ராணுவத் தலைமையகத்துக்கென தனி வண்ணக்கொடி அறிமுகம் செய்யப்பட்டு அதுவும் ஏற்றப்பட்டிருக்கிறது.
புதுக்குடியிருப்பு, புதுமாத்தளன் பகுதி களில் மட்டுமே சுமார் முப்பதாயிரம் அப்பாவித் தமிழர்களின் எலும்புக்கூடுகள் தெய்வத்தின் நீதி கேட்டுப் புதைந்து கிடக்க, தமிழீழ நிலமெங்கும் அதற்கும் மேலான போராளிகளின் ஆத்மாக்கள் என்றேனும் தமிழீழக் கனவு நனவாகுமென்ற நம்பிக்கையோடு விதையாகிக் கிடக்க, சிங்களப் பேரினவாதம் வெற்றித் திமிரில் மிகக் குறைந்தபட்ச மனித உணர்வுக் கரிசனைகூட இன்றி இனவாத வெறிக்கூத்தாடுகிறது.
இக்கட்டுரையின் தொடக்கத்தில் நான் குறிப்பிட்டிருந்த அனைத்துலக மனித உரிமை நீதி விசாரணையாளர் தனது உரையொன்றில் கூறியிருந்தார், ""உலகில் ராஜபக்சே போல் சிறுபான்மை இன மக்களை கொடூரமாக நசுக்கி அழித்த சர்வாதி காரிகள் பலர் இருந் திருக்கிறார்கள். ஆனால் அம்மக்களின் போராட்டங்களை அவ் வாறு கொடூரமாக அழித்தபின் தோற் கடிக்கப்பட்ட மக்களின் இனமான உணர்வுகளை ஆசுவாசப்படுத்தும் நடவடிக்கைகளை மேற் கொண்டார்கள். உள்ள நேர்மையோடு செய் தார்களோ இல்லையோ, குறைந்தபட்சம் உலகக் கருத்தை திருப்திபடுத்தவேண்டும் என்ற அரசியற் தேவையினையாவது அவர்கள் ஒத்துக்கொண்டார்கள். ஆனால் அந்த குறைந்தபட்ச மானுடப்பண்பும், அர சியற்பண்பும்கூட ராஜபக்சே சகோதரர்களுக்கு இல்லை யென்பது விசித்திரமாகவும் வியப்பாகவும் இருக்கிறது'' என்றிருந்தார்.தமிழ் மக்களின் புண்பட்ட உணர்வுகள் பற்றி துளியளவும் அக்கறை காட்டவேண்டிய அவசியமில்லையென ராஜபக்சே கூட்டம் நினைக்கிறதே, அதற்குக் காரணம் அவர்களின் இனவெறித் திமிரா - இல்லை தமிழராகிய நமது கேவல நிலையா என்ற கேள்வியை சில நேரங்களில் தவிர்க்க முடியவில்லை.
வானூர்தி விபத்தில் மரணமடைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி அவர்களின் மனைவியார் கடந்த வாரம் தன் கணவரது தொகுதியில் போட்டியிட்டபோது -எதிர்க்கட்சிகள் யாரும் போட்டி வேட்பாளரை நிறுத்தவில்லை. துயரின் காலச்சூழமைவை போற்றும் மேன்மை அரசியல் மாச்சரியங்களைக் கடந்து அங்கிருக்கும் அரசியற் கட்சிகளுக்கு இருக்கிறது.அவ்வாறே தெலுங்கானா வினை-எதிர்வினை காட்சிகள். இன, மொழி அடையாளங்களை அழுத்தி அடக்கிப் புதைத்துவிட்டு "கார்ப்பரேட் அரசியலை' கட்டியெழுப்பலாம் என கவு காணும் நவயுக அரசியல் வியூகவாதிகளின் கணக்குகள் ஒரே நாளில் தகர்ந்து தவிடுபொடியாவதை தெலுங்கானா காட்டி நிற்கிறது.காலம் வரும்...
நிறைய விஷயங்கள் கடந்த பத்து நாட்களில் நிகழ்ந்திருக்கின்றன. நல்லனவும், அல்லாதனவும். மே 17-க்குப்பின் ஈழமக்கள் தொடர்பாக இந்தியாவில் நடந்த மிக முக்கியமான முன்னேற்றம் கடந்த வாரத்தின் பாராளுமன்ற விவாதம்தான். இதனை நேர்மையான அக்கறை யுடன் முன்னெடுத்த பா.ஜ.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இன்னபிற கட்சிகள் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவர்கள். பாராளுமன்ற விவாதத்தின் எதிரொலியாக இலங்கையின் உயர்மட்டக் குழு ஒன்று -அதில் ராஜபக்சேவின் சகோதரர்கள் கோத்தபய்யா, பசில் இருவரும் உள்ளடக்கம் -புதுடில்லி வந்து -அல்லது வரவழைக்கப்பட்டு, தமிழ் மக்கள் மீள் குடியமர்வு, அரசியல் தீர்வு தொடர்பாக முக்கிய விவாதங்கள் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.அனைத்துலக மனித உரிமை நீதி விசாரணையாளர் ஒருவர் கூறியுள்ளதைப் போல உலகின் ஜனநாயக அமைப்பு களும், உபகரணங்களும் வழங்குகிற வாய்ப்புகளை தமிழர்கள் இதுவரை காலமும் தவறவிட்டார்கள். இப்போதேனும் அக்குறை சரி செய்யப்பட வேண்டும். அனைத்துலக அரங்கைப் பொறுத்தவரை தமிழீழ விடுதலைப்புலிகள் அதே பெயருடன் உலகோடு உரையாடுகின்ற நாள்வர இன்னும் நீண்ட காலம் ஆகலாம். அதேவேளை அரசியற்தன்மை கொண்ட முயற்சிகள் உடனடியாக முன் நகர்த்தப்படவேண்டிய தேவை உள்ள காரணத்தினால் அவர்களே வேறு பெயரில் இயங்குவதுகூட இன்றைய காலச்சூழலில் பிழையான தல்ல. விரைவாகவும், உறுதியாகவும், துணிவாகவும் இயங்கவேண்டிய காலகட்டம் இது. அவ்வாறு செய்யவில்லையென்றால் இரண்டு காரியங்கள் நடக்கும்.ஒன்று தமிழர் பிரச்சினையில் இப்போது உலகம் காட்டி வருகிற அக்கறை குறையும், அதற்கான அறிகுறிகள் ஏற்கெனவே தெரியத் தொடங்கிவிட்டன. இலங்கை தொடர்பான அமெரிக்க செனட் அவையின் சமீபத் திய அறிக்கையும், கடந்த வியாழன்- வெள்ளி நாட்கள் கொழும்பு வந்த தென் ஆசியாவுக்கான அமெரிக்க வெளியுறவுப் பொறுப்பாளர் ராபர்ட் பிளேக்-ன் செய்தியாளர் களோடான உரையாடல்களும் நம் பிக்கைத் தரவில்லை. ""இந்தியப் பெருங் கடலில் அமெரிக்க மேலாண்மைக்கு இலங் கையை நாம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். அது நட்பின் ஊடாகவென்றால் அப்படியே ஆகட்டும்'' என்பதான கொள்கை மாற்றத்தை அவதானிக்க முடிகிறது.தமிழ் மக்கள் மீது நடந்த போர்க் குற்றங்களில் தீவிர அக்கறை காட்டி வந்த அமெரிக்கா திடீரென வேகம் குறைத்துள்ளது. அமைதிக்கான நோபல் பரிசினை பெற்றுக் கொண்டு உரையாற்றிய அதிபர் பராக் ஒபாமா உலகின் மோசமான மனித உரிமை மீறல் குற்றவாளிகளாக ஸிம்பாப்வே, சூடான், பர்மா நாடு களை பெயர் குறித்துக் குறிப்பிட்டார். ஆனால் இந்நாடுகளையெல்லாம்விட பெருங்கொடுமை செய்த இலங்கையை சொல்வதை தவிர்த்தார்.அதேநாள் -அதாவது டிசம்பர் 10, உலக மனித உரிமை நாளன்று ஐ.நா. பாதுகாப்பு அவையில் அமெரிக் காவின் பிரதிநிதி ஸ்டீபன்ரப்பிடம் "இன்னர்சிட்டி' இணைய இதழின் நிருபர் இலங்கையின் தமிழருக்கெதி ரான போர்க்குற்றங்கள் பற்றியும் -அவை தொடர்பான அமெரிக்க வெளியுறவுப் பிரிவின் முந்தைய அறிக்கைகள் பற்றியும் கேட்டபோது, ""அவற்றை நாங்கள் எமக்குள் விவா திப்போம், பின்னர் இலங்கை அர சோடும் விவாதிப்போம்'' என்றார். ஆக, போர்க்குற்றங்களை ""அனைத் துலக நீதி விசா ரணை'' என்ற சட் டகத்திலிருந்து பவ்யமாக அகற்றி ""இருதரப்பு உரை யாடல்'' என்ற மிகக் குறிய அர சியல் வெளிக்குள் அமெரிக்கா நகர்த்த முயல்கிற தென்பது தெளிவா கத் தெரிகிறது.அமெரிக்காவைப் பொறுத்தவரை இலங்கை, சீனாவின் மேலாதிக்கப் பிடியில் வருவதைத் தடுத்து இந்தியப் பெருங்கடலில் தன் ஆளுமை இறுக்கத்தை நிலைநிறுத்துவதே முதன்மை இலக்கு. அந்த இலக்கிற்குள் தமிழர் தலையெழுத்துக்கு முக்கியமான இடம் உண்டா, இல்லையா என்பது போகப் போகத்தான் தெரியும். ஆனால் இப்போது கிடைக்கிற சமிக்ஞைகள் நம்பிக்கை தருவதாக இல்லை. இவற்றையெல்லாம் உடனுக்குடன் உள்வாங்கி வேகமான பதில் இயக் கம் தருகிற அரசியல் கட்டமைப்பும், வளங்களும் ஈழத்தமிழர்களுக்கு இன்று இல்லை என்பது மிகப்பெரிய குறையாக உள்ளது. கிடைக்கிற பிறிதொரு செய்தியின்படி இந்தியப்பெருங்கடலில் துரிதகதியில் தன் ஆளுமையை விரிவாக்கி வரும் சீனாவை கட்டுப்படுத்துகிற ஆற்றல் இந்தியாவுக்கு இல்லை என்று அமெரிக்கா மதிப்பீடு செய்துள்ளதாகவும் தெரிகிறது. எனவேதான் அமெரிக்கா இலங்கையை தானே நேரடியாகக் கையாளும் முடிவினை எடுக்க முனைந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.இன்னொன்று களத்தில் -அதாவது இலங்கைக்குள் இயங்கும் ஓரளவுக்கு நேர்மையான தமிழ் அரசியற் சக்திகளும், புலம்பெயர் தமிழர்களும் ஒன்றிணைந்து தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க வழிநடத்துதலில் வலுவாகத் தெரிகிற அரசியல் அமைப்பினை முன் நிறுத்தவில்லையென்றால் தமிழருக்கான அரசியல் வெளியை சிங்களப் பேரினவாதமும் உலக உளவு அமைப்புகளும் பின் நின்று இயக்குகிற பரிதாப நிலையே ஏற்படும்.கடந்த இதழில் நாம் எழுதியிருந்த "புதிய குழு புருடா' ஓர் சிறு உதாரணம். அக்கட்டுரையைப் படித்துவிட்டு களத்தின் விபரமறிந்த ஒருவர் தொடர்புகொண்டார். இலங்கை அரசே புதிய தமிழ் போராளிக் குழுக் களை அறிமுகப்படுத்த நான் குறிப்பிட்டிருந்த காரணம் மட்டுமல்லாது இன்னொரு காரணத்தையும் அவர் கூறி அதையும் தயவு செய்து எழுதுவதோடு பிற தமிழ் ஊடகங்களிலும் வெளிவரச் செய்து தகவல் பரப்புங்கள் எனக் கேட்டுக்கொண்டார். அவர் கூறிய காரணம் ஆபத்தான சதித்தன்மை கொண்டது. இதுவே அது : ""கட்டளைத் தொடர்பின்றி இன்று இலங்கைக்குள் நூற்றுக்கணக்கான போராளிகள் இருக்கக்கூடும். அவர்கள் பழிதீர்க்கும் வெறியோடு நாள் பார்த்துக் காத்திருப்பார்கள். இப்படி புதிய குழுவொன்று வீரியமான முழக்கத்தோடு களம் வருகையில், அந்த அறிவிப்பினை தமிழ் இணைய தளங்கள் பிரபலப்படுத்துகையில் -அதனை நம்பி முன் குறிப்பிட்ட போராளிகள் அக்குழுவை தொடர்புகொள்ள முயல்வார்கள். அதன் மூலம் போராளிகளை அடையாளம் கண்டு அழித்தொழிக்கும் இராணுவப் புலனாய்வுச் சதிதான் அது'' என்று அவர் கூறினார்.பொதுவாக நாம் நினைப் பதுபோல் சிங்களவர்கள் மொக் கர்களும், மூடர்களுமல்லவென் பதைத் தொடர்ந்து நிரூபித்து வருகிறார்கள். நாம்தான் வாய்ச்சொல் வீரர்களாக, கூச்சல் கூடாரமாக, சொந்த உறவுகளின் பிணங்களின் மீதே நின்று அரசியல் நடத்தத் துணியும் ஒழுக்கமற்ற இனமாக இருக்கிறோம்.எந்த அளவுக்கு ராஜபக்சே கும்பலின் சிங்களப் பேரினவாதம் ஆதிக்கக் கும்மாளம் ஆடுகிறதென்றால் இருபதாயிரத்திற்கும் மேலான அப்பாவித் தமிழர்களை படுகொலை செய்த அதே முல்லைத்தீவு நிலப்பரப்பில், புதுமாத்தளன் நந்திக்கடல் ஓரத்து மாமரக் காடுகளுக்கு அருகில் ""சிங்கள தேசிய யுத்த வெற்றி நினைவுச் சின்னம்'' பிரம்மாண்டமாய் எழுப்ப கடந்த புதன்கிழமையன்று ராஜபக்சே அடிக்கல் நாட்டியுள்ளார்.தமிழர் இன அழித்தல் செய்து முடித்த தளபதிகள் சூழ நிற்க, சிறப்பு அதிரடிப்படை யினரின் அணிவகுப்புக்குப் பின் சிங்கள தேசியக்கொடியை ராஜபக்சேவும், தொடர்ந்து முப்படைக் கொடிகளை தளபதியர்களும் ஏற்றியுள்ளார்கள். அதனினும் கொடுமை வன்னி நிலப்பரப்பு நீண்ட காலத்திற்கு இனி ராணுவப் பிடியில்தான் இருக்கும் என்ற செய்தியாய் வன்னி ராணுவத் தலைமையகத்துக்கென தனி வண்ணக்கொடி அறிமுகம் செய்யப்பட்டு அதுவும் ஏற்றப்பட்டிருக்கிறது.புதுக்குடியிருப்பு, புதுமாத்தளன் பகுதி களில் மட்டுமே சுமார் முப்பதாயிரம் அப்பாவித் தமிழர்களின் எலும்புக்கூடுகள் தெய்வத்தின் நீதி கேட்டுப் புதைந்து கிடக்க, தமிழீழ நிலமெங்கும் அதற்கும் மேலான போராளிகளின் ஆத்மாக்கள் என்றேனும் தமிழீழக் கனவு நனவாகுமென்ற நம்பிக்கையோடு விதையாகிக் கிடக்க, சிங்களப் பேரினவாதம் வெற்றித் திமிரில் மிகக் குறைந்தபட்ச மனித உணர்வுக் கரிசனைகூட இன்றி இனவாத வெறிக்கூத்தாடுகிறது.இக்கட்டுரையின் தொடக்கத்தில் நான் குறிப்பிட்டிருந்த அனைத்துலக மனித உரிமை நீதி விசாரணையாளர் தனது உரையொன்றில் கூறியிருந்தார், ""உலகில் ராஜபக்சே போல் சிறுபான்மை இன மக்களை கொடூரமாக நசுக்கி அழித்த சர்வாதி காரிகள் பலர் இருந் திருக்கிறார்கள். ஆனால் அம்மக்களின் போராட்டங்களை அவ் வாறு கொடூரமாக அழித்தபின் தோற் கடிக்கப்பட்ட மக்களின் இனமான உணர்வுகளை ஆசுவாசப்படுத்தும் நடவடிக்கைகளை மேற் கொண்டார்கள். உள்ள நேர்மையோடு செய் தார்களோ இல்லையோ, குறைந்தபட்சம் உலகக் கருத்தை திருப்திபடுத்தவேண்டும் என்ற அரசியற் தேவையினையாவது அவர்கள் ஒத்துக்கொண்டார்கள். ஆனால் அந்த குறைந்தபட்ச மானுடப்பண்பும், அர சியற்பண்பும்கூட ராஜபக்சே சகோதரர்களுக்கு இல்லை யென்பது விசித்திரமாகவும் வியப்பாகவும் இருக்கிறது'' என்றிருந்தார்.தமிழ் மக்களின் புண்பட்ட உணர்வுகள் பற்றி துளியளவும் அக்கறை காட்டவேண்டிய அவசியமில்லையென ராஜபக்சே கூட்டம் நினைக்கிறதே, அதற்குக் காரணம் அவர்களின் இனவெறித் திமிரா - இல்லை தமிழராகிய நமது கேவல நிலையா என்ற கேள்வியை சில நேரங்களில் தவிர்க்க முடியவில்லை. வானூர்தி விபத்தில் மரணமடைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி அவர்களின் மனைவியார் கடந்த வாரம் தன் கணவரது தொகுதியில் போட்டியிட்டபோது -எதிர்க்கட்சிகள் யாரும் போட்டி வேட்பாளரை நிறுத்தவில்லை. துயரின் காலச்சூழமைவை போற்றும் மேன்மை அரசியல் மாச்சரியங்களைக் கடந்து அங்கிருக்கும் அரசியற் கட்சிகளுக்கு இருக்கிறது.அவ்வாறே தெலுங்கானா வினை-எதிர்வினை காட்சிகள். இன, மொழி அடையாளங்களை அழுத்தி அடக்கிப் புதைத்துவிட்டு "கார்ப்பரேட் அரசியலை' கட்டியெழுப்பலாம் என கவு காணும் நவயுக அரசியல் வியூகவாதிகளின் கணக்குகள் ஒரே நாளில் தகர்ந்து தவிடுபொடியாவதை தெலுங்கானா காட்டி நிற்கிறது.காலம் வரும்... முல்லைத்தீவு புதுமாத்தளன் பரப்பில் எழுப்பப்படும் சிங்கள வெற்றிச் சின்னத்தை தமிழ் தலைமுறை யொன்று தகர்க்கும், தமிழ்க்கொடி அங்கு பறக்கும்..

Sunday, December 13, 2009

இந்தியா கேள்வி: திணரும் இலங்கை

கடந்த மே மாதம் வன்னியில் நடந்த பெரும் போரின் இறுதியில் பிரபாகரன் கொல்லப்பட்டதாக சிங்கள அரசு கூறியது. இது தொடர்பாக பொய்யான உடலைக் காட்டியது இலங்கை.
இந்நிலையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொன்ற வழக்கில் முதல் குற்றவாளி பிரபாகரன். அவர் மரணம் உண்மை என்றால் அது குறித்த அதிகாரப்பூர்வ சான்றுகள் வேண்டும். அப்போதுதான் ராஜீவ் வழக்கை முடிக்க முடியும் என்பதால், பிரபாகரன் மரணச் சான்றையும், இறப்புச் சான்றிதழையும் தருமாறு இந்தியா கேட்டது.
ஆனால் மவுனம் சாதித்து வந்தது இலங்கா. இந்தியா தொடர்ந்து கேட்கவும்,
இறப்புச் சான்றிதழ் இலங்கை சட்டத்துறை நிபுணர்கள் பரிசீலனையில் உள்ளதாக இலங்கைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ராஜீவ் காந்தி கொலைவழக்கு முடிவுக்கு வருகிறது. இந்த வழக்கை முடிக்கவே, இப்படியொரு அவசர நிலை என்று கூறப்படுகிறது.

சரணடைய வந்த விடுதலைப் புலி தலைவர்களை சுட்டுக் கொல்லுமாறு கோத்தபாயவே உத்தரவிட்டார் : சரத் பொன்சேகா தகவல்

லங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே, சரணடைய வந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் மூன்று முக்கிய தலைவர்களையும் சுட்டுக்கொல்லுமாறு உத்தரவிட்டதாக ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் இராணுவ தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்று வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். வன்னியில் இறுதிகட்ட யுத்தத்தின் கடைசி மூன்று நாட்கள் தமக்கு தொடர்புகள் இருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்கள், நோர்வே மற்றும் வெளிநாட்டு தரப்புக்கள் ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்சவுடன் தொடர்பு கொண்டு விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பாலசிங்கம் நடேசன், சமாதான செயலக பிரதானி புலிதேவன் எனப்படும் சீவரட்ணம் பிரபாகரன் மற்றும் சிரேஸ்ட இராணுவ தளபதி ரமேஸ் ஆகியோரும் அவர்களின் குடும்பத்தினரும் படையினரிடம் சரணடையப்போவதை அறிவித்துள்ளனர்.
இந்த செய்தியை பசில் ராஜபக்ச பின்னர், கோத்தபாய ராஜபக்சவுக்கு தெரிவித்துள்ளார். இதன்படி கடந்த மேமாதம் 17 ஆம் திகதி, அதிகாலை, இந்த மூன்று தலைவர்களும் தமது குடும்பத்தினருடன் பசில் ராஜபக்ச மற்றும் வெளிநாட்டு தரப்பு ஆலோசனையின்படி வெள்ளையாடை அணிந்து சரணடைவதற்காக வந்துள்ளனர். இதன் போதே கோத்தபாய ராஜபக்ச, 58 வது படையணித்தளபதியாக இருக்கும் சவேந்திர சில்வாவுக்கு எந்த ஒரு தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்களையும் சரணடைய அனுமதிக்கவேண்டாம் அவர்களை சுட்டுக்கொல்லுமாறு உத்தரவிட்டுள்ளதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
இதன்படியே குறித்த தலைவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.எனினும் அரசாங்கம் மே 18 ஆம் திகதி மோதல் ஒன்றின் போது நடேசன்,புலிதேவன் மற்றும் ரமேஸ் ஆகியோர் கொல்லப்பட்டதாக அறிவித்திருந்தது. இந்த சம்பவம் தமிழீழ விடுதலைப்புலிகள் வெல்லமுள்ளிவாய்க்காலில் 100க்கு 100 மீற்றர் பிரதேசத்திற்குள் அகப்பட்டிருந்தபோதே இடம்பெற்றது என சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக இராணுவத்தளபதி கருத்து கூற மறுத்துள்ளார்சரத் பொன்சேகாவின் இந்த தகவல் தொடர்பில், 58 வது படையணித்தளபதி சவேந்திர சில்வாவும், இராணுவத்தளபதி ஜெகத் ஜெயசூரியவும் தமது கருத்தை தெரிவிக்க மறுத்துள்ளதாக இலங்கையின் ஆங்கில இதழ் தெரிவித்துள்ளது.
எனினும் நோர்வேயின் சர்வதேச விவகார அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், தமக்கு கடந்த மே மாதம் 17 ஆம் திகதி தமிழீழ விடுதலைப்புலிகள் தாம் சரணடையப் போகும் விருப்பத்தை தொலைபேசி மூலம் அறிவித்திருந்ததாக தெரிவித்திருந்தார்
அதேநேரம், தமிழீழ விடுதலைப்புலிகளின் இரண்டு தலைவர்கள், சரணடையப் போவதாக நோர்வே தரப்பு தமக்கு அறிவித்ததாக இலங்கையில் உள்ள சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பேச்சாளர் சரசி விஜேரட்ன தெரிவித்துள்ளார். எனினும் இறுதி நாட்களில் என்ன நடந்தது என்பது தமக்கு தெரியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். இறுதி நாட்களில் உரியவர்களுடனான தொடர்புகள் அற்றுப்போயிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் வெளியுறவு செயலாளராக இருந்தவரும் தற்போது ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான தூதருமான பாலித கோஹன, செய்தி நிறுவனங்களுக்கு தகவல் அளிக்கையில், நடேசனிடம் இருந்தும் புலிதேவனிடம் இருந்தும் பல செய்திகளை பெற்றதாக குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை, சமபவத்தின் போது, 58 வது படையணி தளபதி சவேந்திர சில்வாவுடன் இருந்த ஊடகவியலாளர்களே தமக்கு உண்மையில் என்ன நடந்தது என்ற விடயத்தை கூறியதாக ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு செயலாளரே சரணடையும் தமிழீழ விடுதலைப்புலிகளை சுட்டுக்கொல்லுமாறு உத்தரவிட்டதாக அந்த ஊடகவியலாளர்கள் தம்மிடம் தெரிவித்ததாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்சவும் மறுப்பு சரத் பொன்சேகாவின் இந்த குற்றச்சாட்டு தொடர்பில் கருத்துரைத்துள்ள ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ச, தாம் நோர்வே தரப்பிடம் இருந்து புலிகளின் தலைவர்கள் சரணடைவது தொடர்பான எந்த ஒரு தகவலையும் பெற்றிருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளின் மூன்று தலைவர்கள் சரணடையப்போவதான தகவலை அறிந்திருக்கவில்லையா என பசில் ராஜபக்சவிடம் கேட்டபோது, இல்லை. தாம் அவ்வாறு கூறவில்லை.ஆனால் நோர்வே தரப்பினர் தம்முடன் தொடர்புக் கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.
சகோதரர் கோத்தபாய ராஜபக்சவுக்கு இது தொடர்பான செய்தி எதனையும் நீங்கள் வழங்கவில்லையா? என அவரிடம் கேட்டபோது நோர்வே தம்முடன் தொடர்புகொள்ளாத முதல் விடயம் நடக்காத போது, இரண்டாவது விடயமும் நடந்திருக்க வாய்ப்பில்லை என பதிலளித்துள்ளார். இந்தநிலையில் குறித்த கருத்துக்கள் செய்திகள் தொடர்பாக இலங்கையின் ஆங்கில ஊடகம், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும், அது பலனளிக்கவில்லை என தெரிவித்துள்ளது.