பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Saturday, March 6, 2010

நித்யானந்தரிடம் ரஞ்சிதா சிக்கியது எப்படி? பெட்ரூமில் கேமரா வைத்த சாமியார் ஸ்ரீநித்ய தர்மானந்தா

""நக்கீரனால்தான்இந்த துணிச்சலான செயலை செய்யமுடியும். ஆன்மீகப் போர்வையைப் பொத்திக்கொண்டுசல்லாப ஆட்டம் போடுபவர்களை முகம் மறைக்காமல் வெளிப்படுத்த உங்களால்மட்டும்தான் முடியும்'' -தமிழகம் முழுவது மிருந்து வாசகர்களும்பொதுமக்களும் தொடர்புகொண்டபடியே இருக்கிறார்கள்.பரமஹம்ஸ(!) நித்யானந்தருடன் நடிகை ரஞ்சிதா நெருங்கியிருக்கும் காட்சிகளுக்காகத்தான்மக்களிடமிருந்து இந்த பாராட்டு.
உலகம் முழுவதும் பிரபல மான நித்யானந்தாவை சிக்க வைக்கும் வீடியோவை எடுத்த நபர் யார்?கடந்த 6 மாத காலமாக நம்முடன் தொடர்பில் இருந்தவர்.
தற்போது தலைமறைவான அவரது இருப்பிடம் அறிந்து நேரில் சென்று சந்தித்தோம்.
முன்புபார்த்தபோது காவி உடை, உத்திராட்சம், நெற்றிப் பொட்டு என நித்யானந்தாபோலவே ஸ்ரீநித்ய தர்மானந்தாவாக (ஆசிரமத்தில் நித்யானந்தர் வைத்தபெயர்)இருந்தவர், இப்போது ஜீன்ஸ் பேண்ட்- ஷர்ட்டில் "உன்னைப்போல்ஒருவன்'கமலஹாசன் போல லேப்-டாப் சகிதம் இருந்தார். அவருடைய பழைய சிரிப்புமட டும்மாறவில்லை.
""மிகப்பெரியசாதனையைச் செய் திருக்கீங்க'' என்று கை கொடுத்தோம். அவர் அடக்கமாகப் புன்னகைத்தார். அந்த இளைஞரின் பெயர், லெனின். கம்யூனிஸ்ட்குடும்பத்தைச்சேர்ந்த தமிழ் இளைஞர். என்ன நடந்தது என்பதை விவரிக்கத்தொடங்கினார். அவர்உண்மைதான் பேசுகிறார் என்பதை தீர்க்கமான கண்கள்உணர்த்தின. (பாதுகாப்புகாரணங்களுக் காக அவரின் படம் வெளியிடப்பட வில்லை.)
""நான்கடவுள் நம்பிக்கையில்லாதவனாகத்தான் இருந்தேன். நித்யானந்தாவின்பிரசங்கங்களைக் கேட்க ஆரம் பித்ததும், அவர் மீது ஒரு ஈர்ப்புஏற்பட்டது.இத்தனை சின்ன வயதில், மக்களுக்கு நம்பிக்கை தரும் வகையில்ஆன்மீகச் சேவைசெய்கிறாரே என்று ஆச்சரியப்பட்டேன். நாம் வாழ்ந்ததற்குஅடையாளமாக இந்தசமுதாயத்திற்கு ஏதாவது நன்மை செய்யவேண்டும்ங்கிற விருப்பத்தோடுதான் பெங்களூரில் உள்ள நித்யானந்தர் ஆசிரமத் தில் சேர்ந்தேன். இந்து மதவளர்ச்சிக்கு அவர் மூலம் என்னை அர்ப்பணித்துக்கொள்ளும் வகையில் தலையில் , சிறு குடுமியளவுக்கு முடியை விட்டுவிட்டு, மற்ற பகுதி களை மொட்டையடிச்சிக்கிட்டேன். காவி கட்டிக் கிட்டேன். ஜட்டி அணியக் கூடாதுஎன்பதால்லங்கோடுக்கு மாறினேன்.
முஸ்லிம்,கிறிஸ்டியன் என்ற பேதமில்லாமல் எல்லோருக்கும் நம்பிக்கையளிக்கும்விதத்தில் நித்யானந்தா பிரசங்கம் செய்தார். தியானம், யோகா,ஹீலிங் என்றுஉளவியல் சார்ந்த அவரோட செயல் பாடுகள் மன ஆற்றலைமேம்படுத்திக்கொள்வதற்குஊக்கமளித்தது. சரியான இடத்திற்கு வந்திருக்கிறோம்என்ற நம்பிக்கையுடன்ஆசிரமத்தில் இன்னும் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தேன். பல நாடுகளிலும்கிளைகள் விரிந்து, டாலர்களும் யூரோக்களும்கொட்ட ஆரம்பித்ததும் நான்தான்கடவுள் என்றும் சிவனின் அவதாரம் என்றும்பக்தர்களிடம் பிரசங்கம் செய்யஆரம்பித்துவிட்டார். அவர் உட்கார்வதற்குதங்க சிம்மாசனம் உருவாக்கப்பட்டது. ஒன்றல்ல, 10 தங்க சிம்மாசனம்.ஒவ்வொன்றும் தலா 25 லட்ச ரூபாய்மதிப்புடையது.
தன்னைசந்திக்க வரும் பக்தர்களைக் கட்டிப்பிடிக்கும் பழக்கத்தையும்ஆரம்பித்தார்.வசூல்ராஜா படத்தில் வருவதுபோல இதுவும் ஒரு கட்டிப்பிடிவைத்தியம்தான் என்றுஆசிரமத்தில் உள்ளவங்க சொன்னாங்க. அதாவது,நித்யானந்தரிடம் உள்ள எனர்ஜி,பக்தர்களுக்கு கிடைப்பதற்காகத்தான் இந்தகட்டிப்பிடி ஃபார்முலா என்றார்கள்.
அப்படின்னா, எல்லா பக்தர்களுக்கும் எனர்ஜி தரலாமே, ஏன் இளம்பெண்களுக்கு,அதிலும் பணக்காரபெண்களுக்கு மட்டும் இந்த கட்டிப்பிடி ஃபார்முலா என்றுஅவர்களிடம்கேட்டேன். சாமி, எது செய்தாலும் அதில் அர்த்தம் இருக்கும்னுசொன் னாங்க.
மாற்றங்கள்ஏற்படுவதை நான் புரிந்துகொண்டேன். இருந்தாலும், நம்பிக்கைகுறைய வில்லை.ஆசிரம சேவைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தேன். நித்யானந்தாதங்கியுள்ளகுவார்ட் டர்சுக்கு அவரோட அனுமதி யில்லாம ஈ-காக்கைகூட நுழையமுடியாது. அந்தஇடத்துக்கு பெண் சாமியார்கள் போயிட்டு வருவதையும்அவங்களில் சிலர்கலங்கியிருப்பதையும் பார்த்தப்ப, ஏதோ மனக் குழப்பத்தில் இருக்காங்கன்னும்,அதற்காகத்தான் நித்யானந்தாகிட்டே போய் எனர்ஜிபெற்றுக்கிட்டுவர்றாங்கன்னும் நினைச்சேன். அதில் ஒரு பெண் சாமியார்ரொம்பவும் கலங்கியிருந்ததைப் பார்த்து அவர்கிட்டே பேசியப்பதான், தவறானஇடத்தில் வந்துமாட்டிக் கொண்டு, ஒரு அயோக்கியனை நம்பி இத்தனை நாளாசேவைபண்ணிக்கிட்டிருக்கோம்ங்கிற உண்மை தெரியவந்தது.
அந்தபெண் சீடர் சொன்ன விஷயங்கள் பகீரென்றிருந்தது. யாரையும் தன்குவார்ட்டர்சுக்குள் அவ்வளவு எளிதாக அனுமதிக்காத சாமியார், பெண்சீடர்களில்இளமையான- கோடீஸ்வர குடும்பத்தைச் சேர்ந்த அழகான பெண்களைமட்டும்அனுமதிக்கிறார் என்றும், இதற்கு அந்த ஆசிரமத்தில் உள்ள ஒருகேரக்டரேஉதவுகிறது என்றும் அந்த பெண் சாமியார் கண்கலங்கினார். (அந்தகேரக்டரைப்பற்றி அப்புறம் சொல்கிறேன்) பிரசங்கம், ஹீலிங், மெடிடேஷன் என்றபெயரில்அவர்களை வசியம் செய்தபிறகு, அவர்களை குவார்ட்டர்சுக்குள்வரச்சொல்வார். பணிவிடை என்ற பெயரில் இப்படி பல பெண்கள் சென்றாலும், ஒருவர்செல்வது இன்னொரு வருக்குத் தெரியாது. அந்தளவுக்கு நித்யானந்தர்மெயின்டெய்ன்செய்தார்.
தியானமண்டபத்துக்கு பக்கத்திலிருக்கும் அவருடைய அறைக்கோ அல்லதுஆசிரமத்தில் அவருக்கென்று இருக்கும் பிரத்யேகமான தங்குமிடத்திற்கோபணிவிடைப் பெண்கள்போக வேண்டும்.
எப்போதும்யாராவதுஒரு பெண்ணை பக்கத்தில்வைத்து தடவிக்கொண்டேதான்இருப்பார். ஒவ்வொருபெண்ணிடமும் தனித்தனியாக கவுன்சிலிங் செய்வார். ஹீலிங்என்ற பெயரில்சகஜமாகத் தொடுவார். தன்னை கிருஷ்ணருடைய அவதாரம் என்றும், தன்னுடன் உள்ளபெண்களை கோபியர்கள் என்றும் சொல்லிக் கொஞ்சுவார். அவர்மீதுள்ளபக்தியினாலும், அவரது மெடிடேஷன் திறமையாலும், குவார்ட்டர்சுக்கு செல்லும்பெண்கள் ஒரு கட்டத்தில், நித்யானந்தரின் எந்த விருப்பத்தையும்நிறைவேற்றும்மனநிலைக்கு வந்துவிடுவார்கள்.
உணவுபரிமாறுவது, கால் அமுக்கிவிடுவது, மாத்திரை கொடுப்பது என்றுதொடங்குகிறபணிவிடை அப்படியே செக்ஸ் பக்கம் திரும்பும். காமசூத்ரா போன்றபுத்தகங்களைக் கொடுத்துப் படிக்கச் சொல்லு வார். ஆசிரமத்தில் யாரும்டி.வி.பார்க்கக்கூடாது என்று கட்டுப்பாடு உண்டு. நித்யானந்தர் அறையில்டி.வி,டி.வி.டி.பிளேயர் மட்டுமில்லாமல் அந்த மாதிரியான கேசட்டுகளும்இருக்கும்.கிருஷ்ண அவதாரமான தன்னுடன் படுக்கையை பகிர்ந்துகொள்ளும் கோபியர், சீக்கிரமாக ஞானம் பெறலாம் என்று சொல்லியே படுக்கைக்கு உடன்படச் செய்துவிடுவார். அப்படித் தான் என்னிடம் பேசிய பெண் சீடரையும்உடன்படவைத்திருக்கிறார். இதையெல்லாம் அவர் என்கிட்டே சொன்னப்ப, இந்தஆசிரமம் ஒருடைட்டானிக் கப்பல். இது மூழ்க ஆரம்பிச்சிடிச்சி. கேப்டன்மட்டுமில்ல, இதிலபயணிக்கிறவங்களும் மூழ்க வேண்டியதுதான். தப்பிக்கமுடிஞ்சவங்கதப்பிச்சுக்குங்கன்னு சொன்னேன். ஏன்னா, அப்பவே என் மனசில் ஒருதிட்டம்உருவாயிடிச்சி. ஆன்மீக சேவைன்னு நம்பி இந்த ஆளால் என்வாழ்க்கையையே தொலைத்துவிட்டேனேங்கிற ஆத்திரம் மனதில் உருவானது. அதைஅடக்கிக்கிட்டு, இந்த அக்கிரமங்களை அம்பலப்படுத்த முடிவு செய்திட்டேன்.அதற்காக 3 மாசம்ப்ளான் பண்ணி, இந்த வீடியோவை எடுத்து முடித்தேன். இதில்எனக்கு ஆசிரமத்துக்குள்ளேயே பலர் ஒத்துழைச்சாங்க. எப்படி எடுத்தோம்ங்கிறதைஅப்புறம்சொல்றேன்.
ரஞ்சிதாவும்நித்யானந்தாவும் இருக்கிற வீடியோ காட்சிகளை நாடே பார்த்திருக்குது.நித்யானந்தர் குவார்ட்டர்சுக்குள் ஒரு பெண் நுழையணும்னாஅதற்கு எவ்வளவுகாலமாகும்னு ஏற்கனவே சொல்லியிருந்தேன்.ஆனா, நடிகை ரஞ்சிதாவிஷயம்அப்படியல்ல. 2009ல் சென்னையில் நடந்த நித்யானந்தாவின்கல்பதருநிகழ்ச்சிக்கு வந்தார் ரஞ்சிதா. அப்போதே அவருக்கு ஈர்ப்புவந்துவிட்டது. கல்யாண வாழ்க்கையில் நிம்மதியில்லாத ரஞ்சிதா, நித்யானந்தாவை சென்னையில் ஒரு வீட்டில் சந்தித்தார். 10 நிமிஷம் பேசினால் ப்ரெய்ன்வாஷ்பண்ணிவிடும்சக்தி நித்யானந்தாவுக்கு உண்டு. அதில் ரஞ்சிதாகிறங்கிப்போயிட்டார். ரொம்பபவ்யமான பக்தையாக நடந்துக்கிட்டார். அதனால,ரொம்ப சீக்கிரமாஆசிரமத்துக்குள் நுழைஞ்சு, நித்யானந்தாவின் குவார்ட்டர்சுக்குப்பக்கத்திலேயே தங்குற அளவுக்கு ரொம்ப சீக்கிரமா முன்னேறிட்டார். நித்யானந்தாவுக்கும் ரஞ்சிதாவின் பணிவிடைகள் பிடிச்சுப்போனதால, குறுகியகாலத்திலேயே தன்னோட குவார்ட்டர்சுக்குள் அனுமதிச் சிட்டார்.அவங்கஅன்னியோன் யத்தைத்தான் வீடியோவில் பார்த்தீங்க.
ஒருரஞ்சிதா மட்டுமல்ல... சாமியாரால் கட்டிலில் தள் ளப்பட்டு, வெளியே தெரியாதபல ரஞ்சிதாக்கள் ஆசிரமத்தில் இருக்கிறார்கள். ஆனால், நடிகைஎன்றுபார்த்தால் ரஞ்சிதா மட்டும்தான்'' என்று சொன்ன லெனின் என்கிற நித்யதர்மானந்தா, ஆசிரமத்தில் நடக்கும் மற்ற விஷயங்களையும் சொல்ல ஆரம்பித்தார்.
""பிடாடிஆசிரமத்தில் இன்னர் அவேக்கனிங் என்ற புரோகிராம் நடக்கும்.அதாவது, மனதுக்குவிழிப்புணர்ச்சி ஏற் படுத்தும் வகையில் நித்யானந்தர்அருளுரை வழங்குவார்.இது போன்ற ஒரு நிகழ்ச்சிக்கு கனடா நாட்டிலிருந்து ஒருபிரஜை வந்திருந்தார்.ஆசிரமத்தில் உள்ள அனந்தபுரி அபார்ட்மென்ட்டில்தங்கவைக்கப்பட்டிருந்த அவர்காலை 6 மணியளவில் அந்த அபார்ட்மென்ட்டுக்கு கீழே விழுந்துகிடந்தார். பலத்தஅடி பட்டிருந்த அவரை நாங்களெல்லாம் பார்த்தபோது, இரண்டாவது மாடி யிலிருந்துவிழுந்திருக்கிறார் என்றுதெரிந்தது. உடனடியாக அவரை பக்கத் தில் இருந்தபி.ஜி.எஸ்.மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். பரிசோதித்த டாக்டர்கள்,கொண்டுவரும் வழியி லேயே அவர் இறந்து விட்டார் என்று சொல்லிவிட்டார்கள்.
இறந்துவிட்டார்என்று உறுதி செய்யப் பட்டபிறகும், அந்த மருத்துவமனையின்ஓனரான கர்நாடகாவைச்சேர்ந்த பிரபல சாமியார் பாலகங்காதர் சாமி மூலம்டாக்டருக்குப் பிரஷர்கொடுத்து, பாடியை ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்துட்ரீட் மெண்ட் தர வைத்தார்நித்யானந்தர். அதோடு, ஹார்ட் அட்டாக்கினால்தான்அந்த கனடா நாட்டுக் காரர்இறந்துபோனார் என்று சர்டிபிகேட் கொடுக்கவும்பிரஷர் செய்தார் நித்யானந்தா.அப்படியே சர்டிபிகேட்டும் கொடுக்கப்பட்டது.கீழே விழுந்து அடிபட்டு, ரத்தம் கொட்டி, இறந்து போன வரின் உடலை போஸ்ட்மார்ட்டம்கூட செய்யாமல், ஹார்ட்அட்டாக் என்று சர்டிபி கேட் கொடுக்கவைத்தார் நித்யானந்தா.
இந்தவிஷயம் லோக்கல் போலீசுக்கும் தெரிந்துவிட்டது. அவர்கள் விசாரணைக்குவரும்முன்பே, வெயிட்டாக பணம் அனுப்பப்பட்டு விட்டது.விசாரணைமுடக்கப்பட்டுவிட்டது.
அதோடு இந்த செய்தி வெளியே வராதபடி சர்வ ஜாக்கிரதையாக மூடி மறைத்து விட்டார்கள் எங்கள் பீடத்து ஆட்களும் போலீசாரும்.
இறந்தவர்கனடா நாட்டுக்காரர் என்ற போதும், அவரது உடலை பெங்க ளூரிலேயேரகசியமாக எரித்து விட்டார்கள்'' என்ற லெனின், எல்லா மட்டங்களிலும் நித்யானந்தரின்தொடர்புகள் விரிந்திருப்பதையும் விளக்கி னார்.
""மெடிடேஷன்ங்கிறதுஒரு கலை. என்னைப்போன்ற பலர் அதை கற்றிருக்கிறார்கள்.ஆனா, நித்யானந்தா அதைஆன் மீகத்தோடு சேர்த்து வசியம் செய்ய ஆரம்பித்துவிட்டார். அவருடைய மெடிடேஷன், ஹீலிங் மூலம் உடல்நலன் குணமாவதாபலருக்கும் நம்பிக்கை வந்தது.இதன் மூலம் 60% பேருக்கு உடல் நலன்சரியாகும் என்பது உண்மை தான்.
நித்யானந்தர் அதையே தன்னோட பவரா காண்பிச்சிக் கிட்டார். அதனால பல வி.வி. ஐ.பிக்கள் அவரோட டிவோட்டி ஆயிட்டாங்க.
கர்நாடகமுதல்வரில் தொடங்கி, அமைச் சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள்,அரசு அதிகாரிகள் என்று பலரும் நித்யானந்தரின் பிறந்த தினகொண்டாட்டங்களுக்காகஆசிரமத் திற்கு வந்து போவதால், போலீசார் எப்போதுமேஆசிரம விஷயத்தில் அடக்கியே வாசிப்பார்கள். கர்நாடக முன்னாள் முதல்வர்எஸ்.எம் கிருஷ்ணாவின்மனைவிக்கு ஹீலிங் மூலம் சிகிச்சை தந்தார்நித்யானந்தா. அதனால கிருஷ்ணாஆட்சியில் நித்யானந்தா ஆசிரமம் ஓஹோன்னு வளர்ந்திடிச்சி. மத்திய மந்திரிகள்பலரும் நித்யானந்தருக்குப் பக்தர்கள்.உங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருசில மந்திரிகளையும் உயரதிகாரிகளையும்கூட எங்கள் ஆசிரமத்தில் பார்த்திருக்கிறோம். ஸ்டேட், சென்ட்ரல் என்றுஎல்லா இடத்திலும் தனது பக்தர்கள்இருப்பதால், எல்லா அக்கிரமத்தையும்துணிச்சலாகவே செய்வார் நித்யானந்தா.இங்கே நடக்கிற குற்றங்களையெல்லாம் மறைப்பதுதான் நித்யானந்தரின் செயலாளர்ஸ்ரீநித்ய சதானந்தா, பி.ஆர்.ஓ.நித்ய சேவானந்தா ஆகியோருக்கு முழுநேர வேலை.ஆசிரமத்தில் நடக்கும் குற்றங்களால் அதிக பாதிப்புக் குள்ளாகிறவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த இளம்பெண்கள்தான்'' என்ற பகீர் தகவலையும் சொன்னார்லெனின்.
""லைஃப் ப்லிஸ்டெக்னாலஜி என்ற இலவச வகுப்பு இந்த ஆசிரமத்தில் ரொம்பபாப்புலர். அதில்கலந்து கொள்வதற்காக தமிழ்நாட்டி லிருந்தும் மற்றமாநிலங்களிலிருந் தும்ஏராளமான இளம்பெண்களும் இளைஞர்களும் வருவார்கள்.இலவச வகுப்புமுடித்துவிட்டுப் போய் விடலாம் என்றுதான் அவர்கள்நினைத்திருப்பார்கள்.ஆனால், அவர்களை மூளைச் சலவை செய்து ஆசிரமத்திலேயேதங்கவைத்து விடுவார்கள்நித்யானந்தாவும் அவரது சீடர்களும். இப்படி இந்தஆசிரமத்தில் தற்போது சுமார்70 பிரம்மச்சாரிகளும் 50 பிரம்மச்சாரினிகளும்இருக்கிறார்கள். இதில் பலர்தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
இலவசவகுப்புக்குப் போன தங்கள் பையனோ பெண்ணோ திரும்பி வருவார்கள் எனக்காத்திருக்கும் பெற்றோர், பிள்ளைகள் வரவில்லை என்றதும் பதறியடித்துக் கொண்டுஇங்கே வருவார்கள். ஆனால், அவர்களை ஆசிரமத்து ஆட்கள் மதிக்கவேமாட்டார்கள்.சரியாகப் பதில் சொல்ல மாட் டார்கள். பிள்ளைகளை ஆசிரமத்திலேயே தங்க வைக்கபெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாதாடினால், அவர்களின்பையனையோ பெண்ணையோ ஆசிரமக்காரர்கள் அழைத்துக்கொண்டு வருவார்கள். அந்தப்பிள்ளைகள் வாயா லேயே,நாங்க இங்கதான் இருப்போம் என்று சொல்ல வைப்பார்கள். அந்தளவுக்குநித்யானந்தாவின் வசிய வேலைகள் நடந்திருக்கும். வீட்டுக்கு வரமறுக்கும்பிள்ளைகளை அவர்களது பெற்றோரோ, உறவினர்களோ வற்புறுத்தி அழைத்தால், அவர்களைஆசிரமக்காரர்கள் அடித்து விரட்டி விடுவார்கள். இந்தசம்பவங்கள்பற்றியெல்லாம் நிறைய புகார்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. தமிழக ஸ்டேஷன்களிலும் கம்ப்ளைண்ட் கொடுக் கப்பட்டிருக்கிறது. ஆனால், தன்பவர்மூலம் எல்லாவற்றையும் சமாளித்து விட்டார் நித்யானந்தா.
தமிழ்நாட்டைச்சேர்ந்த 22 வயது பிரம்மச்சாரினி, தற்கொலைக்கு முயன்றசம்பவம் ஆசிரமத்தில்உள்ள எல்லோரையும் அதிர்ச்சியடைய வைத்துவிட்டது.ரொம்பவும் வெகுளியான அந்தப்பெண்ணால், நித்யானந்தாவின் செக்ஸ்டார்ச்சர்களைத் தாங்க முடியலை. நடந்ததைநினைத்து நினைத்துஅழுதிருக்கிறார். இனிமேல் இங்கிருந்து தப்பிக்க முடியாதுஎன்றுதான் அந்தப்பெண் தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார்.
இந்தவிவகாரத்தையும் அமுக்கி, அந்தப் பெண்ணை சத்தமில்லாமல் அவளுடையவீட்டுக்குஅனுப்பிவைத்துவிட்டார்கள். வழக்கம்போல, போலீஸ் கேஸ்வராமலும்பார்த்துக்கொண்டது ஆசிரம நிர்வாகம்.
கனடாநாட்டைச் சேர்ந்தவர் மாடியிலிருந்து விழுந்து மர்மமான முறையில்மரணமடைந்தஒரு வாரத்தில், 18 வயது பெண் சந்நியாசி பூச்சி மருந்துகுடித்துதற்கொலைக்கு முயன்றார். இவரையும் பி.ஜி.எஸ்.மருத்துவமனைக்குத்தான் கொண்டுசென்றார்கள். மூச்சு பேச்சில்லாமல் 10நாட்கள் கோமாவில் கிடந்தார் அந்தப்பெண். இது சம்பந்தமாக பிடாடி, கெங்கேரிஇரண்டு காவல் நிலையங்களிலும்வழக்குப் பதிவு செய்யப் பட்டபோதும் எந்த நடவடிக்கையும் எடுக் கலை.
போனடிசம் பர் 24ந் தேதிகூட ஒரு சந்தியாசி இளைஞர் 14 தூக்கமாத்திரைகளைச்சாப்பிட்டு தற் கொலைக்கு முயன்றார். என்ன காரணம் என்றால்,டிசம்பர் 23ந்தேதி முதல் ஜனவரி 1ந் தேதி வரை ஆசிரமத்தில் பிரம்மோத்சவத்தைநித்யா னந்தாநடத்துவார். அதற்கானதொடக்க ஏற்பாடுகளை சரியாகச் செய்யவில்லை என்று, அந்த இளைஞரை கடுமையாகத்தாக்கிவிட்டார் நித்யானந்தா. அதனால்தான் அந்த இளைஞர், மாத்திரைகளைச் சாப்பிட்டார்.
வழக்கம்போலபி.ஜி.எஸ். ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு போலீஸ் கேஸ்இல்லாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது என்று நம்மிடம் விரிவாக விளக்கியலெனின், ஆசிரமத்தில் உள்ள இளம் பெண்களுக்கு செக்ஸ் டார்ச்சர் என்றால்,இளைஞர்களுக்கு அடி-உதைதான். நித்யா னந்தாவே ஒரு மூங்கில் குச்சியைஎடுத்துவந்து,இளைஞர் களைக் கடுமையாகத் தாக்கு வார். அடி வாங்கினால் அந்தஇளைஞர் கொடுத்துவைத்தவர், சாமியே அடித்துவிட்டார் நமக்கு அந்த வாய்ப்புகிட்ட வில்லையேஎன்று மற்றவர்கள் ஏங்குவார்கள். அந்தளவுக்கு அவரை கடவுளாகஎல்லோரும் நினைத்தார்கள். ஒருசிலர்முகம் சுளித்தால், அந்த இளைஞர் குரு துரோகம் செய்துவிட்டதாகவும்,பாவத்திலேயே பெரிய பாவமே குரு துரோகம் தான் என்றும் ஆசிரமத்திலிருந்துபதில் வரும். ஆனால், குரு செய்கின்ற பெரிய பாவம் எதற்கும்எந்தத்தண்டனையும் கிடையாது. குருதுரோகத் திற்கான தண்டனையை இந்தஜென்மத்தில் மட்டுமல்ல, அடுத்தடுத்த ஜென் மங்களிலும் அனுபவிக்க வேண்டும்என்று தன்னுடையசீடர்களையும் பக்தைகளையும் மிரட்டி வைப்பார் நித்யானந்தா.
இவர்களிடம் பல பெண்களும் ஆண்களும் சிக்கிக்கொண்டு இருக்கிறார் கள். உண்மைகளை வெளியே சொன்னால் உயிருக்கு உத்தரவாதமில்லை என்ப தால்தான் எல்லோரும் பேசாமல் இருந்தோம்.
இப்போது,சாமியாரின் லீலைகள் வீடியோவாக வெளியாகி, அவருடைய யோக்கியதையை எல்லோரும் பார்த்து விட்டார்கள். இன்னும் பல பெண் சீடர்களுடன் நித்யானந்தாபரமானந்தமாகஇருக்கும் ஆதாரங்கள் இருக்கின் றன. இனிமேலாவதுநடவடிக்கை எடுத்து, ஆசிரமத்தில் சிக்கியிருக்கும்நூற்றுக்கும் அதிகமானவர்களை மீட்க வேண்டும். நக்கீரனால் அது முடியும்''என்ற லெனின்என்கிற ஸ்ரீநித்ய தர்மானந்தாவின் கண்களில் நம்பிக்கை தெரிந்தது.
""இன்னும் பல விஷயங்கள் இருக்கு. அடுத்த சந்திப்பில் சொல்கிறேன்'' என்று விடைபெற்றார்.

திருவண்ணாமலையில்பிறந்த ராஜசேகரன், குடியாத்தத்தில் டிப்ளமோ படித்து, 16வயதில்வீட்டைவிட்டு ஓடினார். கன்னியாகுமரி யிலிருந்து இமயமலை வரை 9வருடங்கள்நடந்தே சென்று, பிச்சை எடுத்து சாப்பிட்ட தனக்கு, புத்தாயிரம்தினமான2000-ஜனவரி 1-ந் தேதி ஞானம் பிறந்ததாகச் சொல்லி நித்யானந்தாவானராஜசேகரன்,2003-ம் ஆண்டில் ஈரோடு மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் முதல்ஆசிரமத்தைஅமைத்தார்.

ஆன்மீகப்பிரசங்கம் செய்வதில், உரையாற்றுவதில் வல்லவரான நித்யானந்தர்,தியானம்,யோகா, ஹீலிங் இந்த மூன்றிலும் சிறப்பாக பயிற்சி தரக்கூடியவர்.தற்போது 33நாடுகளில் இயங்கும் 1500 கிளை களையும் சேர்த்து இவரது சொத்துமதிப்பு 2000கோடி ரூபாயைத் (20ஆயிரம் கோடி என்றும் சொல்கிறார்கள்)தாண்டும்என்கிறார்கள். இதன் சார்பில் 8-க்கும் மேற்பட்ட டிரஸ்ட்டுகள்இருக்கின்றன.பல்லா யிரம் கோடி வருமானம் வந்தாலும்அதில் 50% மட்டுமேகணக்கில்காட்டப்படுகிறதாம். வரி ஏய்ப்பு விவரங்களையும் தோண்டினால் அதுதனிக்கதை.கணக்கில் காட்டப்படாத கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கும்லாக்கர்கள்பிடாடி ஆசிரமத்தில் உள்ள ஆனந்த நிலையக் கட்டிடம்,நித்யானந்தரின் தனிதங்குமிடம், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மென்ட், அனந்தபுரிஅபார்ட்மென்ட், பலஊர்களிலும் நித்யானந்த தியானபீடத்துக்காகஎடுக்கப்பட்டிருக்கும் தனியார்அபார்ட்மென்ட்டுகளிலும் கறுப்பு பணம்பதுக்கிவைக்கப்பட்டிருப்ப தாகசொல்கிறார்கள்.