பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Friday, January 1, 2010

பாதிரியாருடன் கன்னியாஸ்திரி!


வேளாங்கண்ணி என்றாலே கிறிஸ்தவர்களின் புனித தலமாக மட்டு மல்ல ஜாதி, மதம் கடந்த சாந்திக்கான அமைவிடமும் கூட. இந்த புனித பூமியை ஒருமுறையாவது வந்து தரிசித்து விட வேண்டும் என்று கிறிஸ்தவர்கள் எண்ணுவது வழக்கம்.
வேளாங்கண்ணி மாதா தேவாலய திருவிழாவில் பல லட்சம் மக்கள் கூடி கொண்டாடுவது வழக்கமாகிக் கொண்டிருக்கிறது. வெளி மாநிலத்து சுற்றுலா பயணிகளும் கூட இப்படி வந்து செல்வது வழக்கம்.
இதே புனித பூமிக்கு புனிதர்கள் மட்டுமல்ல, பலநூறு காமுகர்களும் அவ்வப்போது வந்து செல்வதும், கூட்டத்தைப் பயன்படுத்தி திருட்டு கும்பல் அதிகரிப்பதும் வழக்கம்தான்.
இந்த புனித வெள்ளி நாளில் மட்டும் பலநூறு திருட்டு சம்பவங்கள் நடந்தும் வழக்காக பதிவாகவில்லை.அதே புனித வெள்ளி நாளில்தான் வேறொரு ஏடாகூடமான 10 நிமிடம் ஓடக்கூடிய அந்த வீடியோ காட்சி வெளியாகி புனித பூமியை நிலைகுலைய செய்து வருகிறது.
ஒரு பெட்ரூமில் உள்ளே நுழையும் ஒரு பாதிரியாரும், ஒரு கன்னியாஸ்திரியும் அவரவர்க்கே உரிய உடையில் இருக்கின்றனர். இது ஃபாதரின் அறை என்பது மட்டும் நன்றாக தெரிகிறது.உள்ளே நுழைந்த ஃபாதரின் முகம் காட்டப்படவில்லை. ஆனால் எதிரில் பெட்டில் உட்கார்ந்திருக்கும் கன்னியாஸ்திரி முகம் மட்டும் நன்றாகவே காட்டப்படுகிறது. கன்னியாஸ்திரி யான அந்த பெண்தான் முதலில் அந்த வேலையை தொடங்கு கிறார்.
சொல்ல முடியாத வரைமுறையற்ற விளையாட்டு களும் நடக்கிறது. இவையனைத்தையும் அந்த ஃபாதராக காட்டப்பட்ட நபர்தான் வீடியோ பதிவுகளையும் செய் திருக்கிறார். பல்வேறு விளையாட்டு களில் தொடங்கி உறவுகளில்தான் முடிகிறது. புனித பூமியில் புனிதர் களாக கருதப்பட்டவர்களின் லீலைகளை படம் பிடித்த பாதிரியாரே தன் நண்பர்கள் மூலமாக வீடியோவை வெளியிடங் களுக்கும் பரவ விட்டதால் இப்போது வேளாங் கண்ணி தாண்டியும் செய்தி பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.தேவாலய ஊழியர்கள் நம்மிடம், ""கன்னி யாஸ்திரிகளும், ஃபாதர்களும் ஏசுவின் உத்தரவுப்படி மக்களுக்கு முகம் சுளிக்காமல் சேவை செய்ய வருபவர்கள்தான்.
தங்கள் சேவையில் ஏதும் தடை வந்துவிடக்கூடாது என்பதற்காகவே திருமணம், இல்வாழ்வை துறந்து வருவார்கள். இந்த தேவாலயம் புகழ்பெற்றது. இங்கு பலநூறு பெண்கள் தினம் தினம் வந்து மக்கள் சேவை செய்ய வருகின்றனர். தேவன் அனுப்பினார்னு வருவாங்க. சேவையும் செய்வாங்க. புனிதமான உடையும் அணிந்து கொள்வாங்க. அவர்களில் ஒருசில காம இச்சை கொண்ட பெண் கள்தான் இப்படி கண்ட இடத்தில் தவறாக புனித மான உடையுடன் நடந்துகிட்டு புனித தலத்துக்கும், உடைக்கும் இழுக்கு ஏற்படுத்துறாங்க.
இங்க 6 பாதிரியார்களும், 5 பூஜை செய்றவங்களும், 15 பர்மனென்ட் கன்னியாஸ்திரிகளும் இருக்காங்க. ஆனா தினமும் 1000 பெண்கள் கன்னியாஸ்திரிகள் தியான கூடத்துக்கு வந்து பாட்டு பாடுவாங்க, சேவைகள் செய்வாங்க.இங்கேயே இருக்கிற ஒருசில ஃபாதர்கள் கொஞ்சம் கவுச்சி புடிச்சவங்களும் இருக்காங்க. இந்த பாட்டு பாட வர்ற கன்னியாஸ்திரிகளை பர்ம னென்ட் ஆக்குறேன்னு சிலரை பணிய வச்சிடு றாங்க. எல்லாருக்கும் தனித்தனியா தங்கும் அறைகள் தேவாலயம் ஒட்டியே இருக்கு. எல்லா சவுகரியமும் இருந்தாலும் பெண் உறவு வேணும் கிறபோது சிலர் இதுபோன்ற வேலைகள் செய்றாங்க.
சில பேர் வெளியிடங்களுக்கு போவாங்க. சிலர் இதுபோல அவங்க அறைகள்லயே நடந்துக்கிறாங்க. வெளியில இருந்து வரக்கூடிய பக்தர்களும் ஏதாவது பெண்களை தள்ளிக்கிட்டு வந்து இங்க அறையெடுத்து தங்கிட்டு போறவங்களும் இருக்காங்க. இப்ப இந்த வீடியோவுல இருக்கிற அந்த ஆண் யார்னு தெரியல. இதே தேவாலயத்துல பலமுறை சர்ச்சைகள்ல சிக்கியவராக ஒருவர் இருக்கிறார். அவர்தான் இந்த வேலை செய்வார்.
இங்க யாரும் யாரையும் கட்டுப் படுத்த முடியாமதான் நடந்துக் கிட்டு இருக்காங்க. புனித நாளான புனித வெள்ளியில் இந்த காட்சிகள் வெளியாகி இருப்பது ரொம்ப கஷ்டமாதான் இருக்கு. உடனே இது யார்னு கண்டு பிடிக்கணும். இல்லைன்னா புனித தலத்தின் புனிதம் கெட்டுப் போறதோட மேலும் தொடர்ந்து நடக்கத் தொடங்கிடும். இதுக்கு அரசுதான் நல்ல முடி வெடுக்கணும்'' என்று பேசியவர்கள் ஓடினார்கள் பூசைக்கு நேரமாச்சு என்று.இன்னும் சிலரோ, ""காஞ்சிபுரம் குருக்கள், சென்னை சாமியார், ஆந்திர கவர்னர் திவாரி வரிசையில இப்ப வேளாங்கண்ணியில வெளியாகி இருக்கிற இந்த புனித உடை ஏடாகூட காட்சிகள் ரொம்ப கேவலமா இருக்கு. இதுக்கெல்லாம் நல்ல நடவடிக்கை எடுக்கணும்.
வீடியோ எடுத்தவரையும் இதை வெளியில விடறவனையும் முதல்ல பிடிச்சு உள்ளே போடணும். ஊர் பேரை கெடுத்துட்டாங்க.புனிதமாக நினைக்கிற இந்த உடையும், உடைக்குள் இருக்கிற பெண்ணும் எப்படி என்ன சர்ச்சையை ஏற்படுத்தப் போகுதோ'' என்றனர். வேளாங்கண்ணி நகர மக்களோ, ""ஊர் பேரை கெடுத்துட்டாங்க'' என வருத்தப்பட்டனர்.
இந்த வீடியோ காட்சியில் பாதிரியார், கன்னி யாஸ்திரி வரைமுறையற்ற ஏடாகூட லீலைகளில் ஈடுபட்டிருக்கிறார்களே? யாரென்று தெரிந்து அவர்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட்டுள்ளதா? என்று தலைமை பாதிரியார் மைக்கேலிடம் பேசினோம்.""நீங்க சொல்றது புதுசா இருக்கு. இதுவரை என் கவனத்துக்கு வரல. இந்த வீடியோவுல யார் இருக்காங்க என்பதையும், எங்க எடுத்தாங்கன்னும் விசாரிக்கிறேன்.
தினமும் பல ஃபாதர்கள், கன்னியாஸ் திரிகள் வந்து போற இடம். இதுல யார்னு கண்டுபிடிக் கிறது? விசாரிக்கிறேன்'' என்றார் பொறுப்பாக.பாவங்களை மன்னியுங்கள் என்று மண்டியிட்டு நிற்கும் மக்களின் தூதுவர்களாக தேவனிடம் கொண்டு செல்லும் பாதிரியார்கள் போன்றவர் கள் இப்படியும் இருக்கலாமா? கன்னியாஸ்திரி என்றாலே புனித வார்த் தை.
அதை குழி தோண்டி புதைக்கலாமா பெண்கள்? என்ற வினாக்கள் தேவால யம் சுற்றி வந்து கொண்டிருக்கிறது.