பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Wednesday, January 13, 2010

நயன்-பிரபுதேவா! கும்பகோணம் கும்மாளம்!

சென்னை புத்தகக் காட்சியில், நக்கீரன் ஸ்டாலில் இருந்து வெளியே வந்த காவேரியின் கரங்களில் இருந்த புத்தகங்களை வாங்கிப் பார்த்தார் மெரீனா.
""இன்னாம்மே... பிரபாகரன் பேசுகிறார்... பிரபாகரன் சிந்தனைகள்... பிரபாகரன் நூறு... வீரம் விளைந்த ஈழம்னு ஒரே பிரபாகரன் கலெக்ஷனா கீது?''""என் டேஸ்ட் இப்படி.
நீ கவிதைப் புத்தகம் வாங்கினியா... இது யாருடி உன் கூட புதுசா ஒரு குட்டீஸ்? கவிதை மாதிரி அழகழகா?''""இவ பேர்கூட கவிதா தாண்டி... என் கிளாஸ் மெட்டோட கவிதைடி...
இவளை எழுதின கவிஞனையும் எழுதப்பட்ட காகிதத்தையும் காட்டவா? அதோ பார்... அந்த ஸ்டால்ல... நடனப் புயல் பிரபுதேவாவும் நயன்தாராவும் மாதிரி... அவங்கதான் இந்த கவிதையைப் பெத்தவங்க!''.""நிஜமாவே பிரபுதேவா-நயன்தாரா பத்தின ஒரு கும்பகோணம் சீக்ரெட் நியூஸ் எங்கிட்ட இருக்குடி... வாங்க வெளில...
பட்டிமன்றம் ஆரம்பிக்க இன்னும் நேரம் இருக்கு... அங்கே போய் உக்கார்ந்து சொல்றேன்...!''.""சொல்லுங்க காவேரி... சொல்றேன்னு கூட்டி வந்துட்டு... மேடையைப் பாத்துட்டு இருக்கீங்களே!''""ம்... மெரீனாவும் பெண்ணையும் வரட்டும்னுதான் இருந்தேன்... சொல்றேன்.
"சிவா மனசில சக்தி' படம் டைரக்டர் ராஜேஷ்... "பாஸ் என்ற பாஸ்கரன்'னு ஒரு படம் எடுக்கிறாரு... திருவாடுதுறை, திருவிடைமருதூர், திருச்சி, தஞ்சாவூர் ஏரியாக்கள்ல படம் சூட்டிங். படத்தோட ஹீரோயின் நயன்தாரா வுக்கும் ஹீரோ ஆர்யாவுக்கும் கும்ப கோணம் ஹோட்டல் ரிவர் சைட் ரிசார்ட்ல ரூம் போட்டுக் கொடுத்திருந்தாங்க...''""ஒரு நிமிஷம்... கன்டினீயூட்டிய மறந்திராத... நீ சொல்லப் போற நியூஸ், நம்ம திண்ணைக் கச்சேரியை நக்கீரன் அட்டையில கவர் ஸ்டோரியா போட்றாமாதிரி இருக்கும்ல... ஏன்னா... இதுவரை நாம் கவர்ல வர்ற லைடி அதான்... இன்னக்காச்சும் உன் நயன்தாரா நியூசால நமக்கு பிரமோஷன் கிடைச்சா சரி... ஆமா, நயன்தாராவுக்கும் ஆர்யாவுக்கும் ரூம் போட்டுக் கொடுத்தாங்க... அப்புறம்?''.""அவங்க ரெண்டுபேருக்கும் தனித்தனி ரூம்... ஆர்யா அந்தப் படத்திலதான் ஹீரோ... நம்ம நியூஸ்ல இல்லை.
8 நாள் சூட்டிங் ஒழுங்கா போச்சு... அந்த எட்டுநாளும் கேமராவுக்கு முன்னால நிக்கிற நேரம் தவிர மற்ற நேரமெல்லாம், ஒரு காதில ஐபேடு ஒயர்... மறுகாதில செல்போன் ஒயர்... இன்ட்ரஸ்டா பாட்டுக் கேக்கிற மாதிரி செல்போன்ல சீரியஸா பேசிக்கினே இருந்தாராம் நயன்தாரா...!''.""பொறுமையைச் சோதிக்காம விஷயத்துக்கு வாங்கங்க!''.""கடைசி நாள் 23-ஆம் தேதி சூட்டிங் முடிஞ்சு ஹோட்டலுக்கு வந்த நயன்தாரா... அரைமணி நேரத் தில, ஹோட்டல் ரூம்ல இருந்து பிரபுதேவாவோட இறங்கி வந்து கார்ல ஏறிப் பறந்துட்டாரு... "பாஸ் கரன்' பட யூனிட்டே வாயைப் பொளந்திருக்கு. நாம இங்கேதானே இருக்கோம்... பிரபுதேவா எப்ப வந் தாருனு எல்லாருக்கும் ஷாக். அதே ஹோட்டல்லதான் ஆர்யா இருந்தார். "மாப்பிள்ளை' ரீமேக் படத்துக்காக வந்த நம்ம தனுஷ் தங்கியிருந்தார்.
இவங்களுக் கெல்லாம் நடனப் புயல் வந்தது பற்றி எதுவும் தெரி யலை. ஹோட்டல் பாய் ஒருத்தர் எனக்கிட்ட ரகசியமா சொன்னாரு... ரெண்டுநாள் முன்னயே வந்து... அந்த ரூமுக்குள்ளயே இருந்தாரு பிரபுதேவா... ஒரே கும்மாளம்தான். எனக்கே காலைலதான் தெரியும்னு... மறுநாள் சொன்னார். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில பிரபுதேவா-நயன்தாராவுக்கு பிரபுதேவா அப்பா சுந்தரம் மாஸ்டர்தான் வீடு பாத்திட்டு இருக்காராம்!''.
""யாருக்கும் தெரியாம எப்படி ரெண்டுநாள் அந்த ரூம்ல இருக்க முடியும்?''""ஸாரிடி... நயன்தாராவோட மேனேஜருக்கும் மேக்கப்மேனுக்கும் தெரியு மாம்டி... பப்ளிக்குக்கும் மீடியா வுக்கும் தெரியக் கூடாதுனு சீக்ரெட்டை மெயின் டைன் பண்ணிருப் பாங்கம்மே... சரி வுடுங்க... இதெல் லாம் சீக்ரெட் டாவே இருந்துட்டு போவட்டும்!''