பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Sunday, January 10, 2010

சுறா கேமராமேன் மாற்றம்... ஒரு அதிர வைக்கும் பின்னணி!!

விஜய்யின் 50வது படம் சுறாவில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் வடிவேலு என்பது தெரிந்த விஷயம். இந்தப் படத்தின் இயக்குநர் எஸ் பி ராஜ்குமாருக்கும் வடிவேலுக்கும் நல்ல அண்டர்ஸ்டாண்டிங் உண்டாம்.
வடிவேலுவின் இன்றைய சம்பளம் ரூ 10 லட்சம், நாளொன்றுக்கு.
இவரை சமீபத்தில் 5 நாட்கள் மட்டும் கால்ஷீட் பேசி அழைத்துச் சென்றுள்ளனர். வடிவேலு தொடர்புடைய காட்சிகள் அனைத்தையும் இந்த 5 நாளில் சுருட்டிக் கொடுத்துவிடலாம், இயக்குநர் நினைத்தால்.
அவரோ வேறு மாதிரி நினைத்துவிட்டார் போலிருக்கிறது. ஒருநாளைக்கு இரண்டொரு சீன் மட்டுமே எடுத்து வந்த இயக்குநர், மீண்டும் 5 நாள் வடிவேலுவின் கால்ஷீட்டை நீட்டிப்பதாகச் சொல்ல, கேமராமேன் எம்எஸ் பிரபுவுக்கு சந்தேகம் வந்துவிட்டதாம். ஒரு நாளைக்கு 10 லட்சம் ரூபாய் சம்பளம் பேசி கூட்டிவந்த ஆர்டிஸ்டை வைத்து இப்படி இழுத்தடித்தால், மேற்கொண்டு ரூ 50 லட்சம் செலவாகுமே என்று யோசித்தவர் அதை இயக்குநரிடமும் கேட்க, அவர் கண்டு கொள்ளவே இல்லையாம்.அடுத்து சில காட்சிகளுக்கு 500 துணை நடிகர்கள் தேவைப்பட்டார்களாம்.
ஆனால் இயக்குநரே 1000 பேரை வரச்சொன்னாராம். 'எதுக்கு இப்படி... காசுக்கு பிடிச்ச கேடு. 500 பேர் இருந்தா 5000 பேரா காட்டக்கூடிய டெக்னிக் இருக்கும் போது இது வெட்டி செலவுதானே, என்று கேட்டுள்ளார் மீண்டும் எம்எஸ் பிரபு. அடுத்த நாள் பிரபுவுக்கு கல்தா கொடுத்த எஸ்பி ராஜ்குமார், என் கே ஏகாம்பரத்தை ஒளிப்பதிவாளராக போட்டுள்ளார்.