பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Thursday, November 5, 2009

பழகலாம் வாங்க! வீடியோ...!

"உட்காந்து யோசிப்பாய்ங்களோ' என்று வடிவேலு சொல்வது போலத் தான் சிலரது செயல்பாடுகள் இருக் கின்றன. கரூர் லட்சுமிபுரத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்ற சுரேந்திரனுக்கு தொழில் என்னவோ வீடியோகடை தான். ஆனால், அவரும் அவர் கடையில் வேலை பார்க்கும் முத்துக்குமாரும் சேர்ந்து "நுகர்வோர் அமைப்பு மனித உரிமைகள் பாதுகாப்பு சங்கம்' என ஊரில் அடை யாளம் காட்டிக்கொண்டனர். வீடியோ கடைக்கு வந்து போகும் வடக்கு காந்திபுரத்தைச் சேர்ந்த 25 வயது பிரியாவுடன் இவர்களுக்கு நட்பு வளர்ந்தது.தனக்குப் பணம் தேவைப்படுவதாக சுரேந் திரனிடம் பிரியா சொல்லியிருக்கிறார். ""வட்டி வியாபாரம் செய்யும் மளிகைக்கடைக்காரர் மோகன்ராஜூக்கு உன்னை அறிமுகம் செய்து வைக்கிறேன். அந்த ஆளு ஒரு சபலிஸ்ட்டு. சரி பண்ணிக்க. எங்க வீடியோ வேலையை நாங்க காட்டுறோம். அப்புறம் நீ கேட்குற நேர மெல்லாம் பணம் கிடைக்கும். நாம ஷேர் பண்ணிக்கலாம் '' என்று பிரியா வுக்கு ஐடியா கொடுத்தார் சுரேந்திரன்.சொன்னபடியே மோகன்ராஜின் அறிமுகம் பிரியாவுக்குக் கிடைத்தது. ""தீபா வளிக்கு ஜாலியா பழனிக்குப் போகலாமா'' என்று பிரியா கேட்க, போகலாமே என்றார் மோகன்ராஜூ ஜொள்ளு வடிய. பஸ் ஸ்டாண்டு பக்கத்தில் உள்ள ஒரு லாட்ஜில் பக்கம் பக்கமாக 2 ரூம்களை ஏற்கனவே புக் செய்திருந்தார் கள் சுரேந்திரனும் முத்துக்குமாரும். ஒரு ரூமில் மோகன்ராஜூ-பிரியா ஜோடி நுழைய, இன்னொரு ரூமில் வீடியோ கேமராவை செட் பண்ணி வைத்தது -சுரேந்திரன் முத்துக்குமார் டீம். உச்சகட்ட நேரத்தில், ""மனசு சரியில்லே.. இந்த ரூம் வேணாம். ..அடுத்த ரூமுக்குப் போகலாம்'' என பிரியா சொல்ல, மோகன்ராஜூம் சம்மதித்தார். பழனிக்குப் போய்விட்டுத் திரும்பி, இரண்டு நாள் கழித்து மோகன்ராஜூக்கு மர்ம டெலிபோன் வந்தது. ""லாட்ஜ்ல நீயும் ...ம் இருந்த கோலத்தை பார்க்குறியா? 1 லட்சம் கொடு. இல்லேன்னா ஊரே பார்க்கும்படி செஞ்சிடு வோம். வீடியோ ஆதாரம் இருக்குது'' என்று மிரட் டியது டெலிபோன் குரல். திரும்பத் திரும்ப இப்படி மிரட்டல் வந்தால் என்ன செய்வது என கரூர் டி.எஸ்.பி யிடம் போய் உண்மையை சொன்னார் மோகன்ராஜூ.காக்கிகள் ஐடியாபடி, 1 லட்சம் தருவதாகச் சொல்லி சுரேந்திரன்-முத்துக்குமார் டீமை வரச் சொன்னார் மோகன்ராஜூ. ஆசையோடு வந்தவர்களை, அமுக்கிப்பிடித்தது மறைந்திருந்த போலீஸ். ஆபாச வீடியோ என்று கேஸில் பதிவானால் தன் இமேஜ் டேமேஜாகும் என்று மளிகைக்கடைக்காரர் பயந்ததால், பணம் கேட்டு மிரட்டியதாக மட்டும் வழக்குபோட்டு மனித உரிமை ஆசாமிகளை உள்ளே தள்ளியிருக்கிறது காவல்துறை. மனிதஉரிமை-நுகர் வோர் அமைப்பு என்ற பெயரில் ஏற்கனவே பலரிடம் இப்படி ஆட்டையைப் போட்டிருக்கும் இந்த இந்த இருவர் டீம் சிறைக்குள் என்ன புது ஐடியாவை யோசித்துக் கொண்டிருக் கிறதோ!