பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Monday, November 2, 2009

மனித உருவில் மிருகம்!

பன்னிரெண்டு வயசு பட்டாம்பூச்சியாய் சிறகடித்த கௌசல்யாவை நைஸாகப் பேசி காட்டுக்குள் அழைத்து... காம வேட்டை ஆடியது ஈவு இரக்க மில்லாத அந்த மிருகம். பருவம் கூட அடையாததால் அந்த ஆண் மிருகத்தின் குதறலில் தாக்குப்பிடிக்க முடியாமல் துடிதுடித்து இரத்தம் சிந்திய அந்த பிஞ்சு... ஆஸ்பிட்டலில் அட்மிட் ஆனது.சிகிச்சை முடிந்தாலும் அந்த மிருகத்தின் பசி அடங்கவில்லை. தொ டர்ந்து கொண்டுதான் இருந்தது அந்த காம வேட்டை. பருவம் அடைந் தாள் கௌசல்யா. விடுமா அந்த மிருகம்? தன் உடம்பை புடைத்துக் கொண்டு புதிய உற்சாகத்துடன் களமிறங்கியது காம வெறிபிடித்த அந்த நாய்.ம்ஹும்... இதற்கு மேலும்... மகளை வைத்திருந்தால் குடும்ப மானம் போய்விடும் என்று வேதனைப்பட்ட கௌசல்யாவின் தாய் செந்தாமரை, புது விராலிப்பட்டியைச் சேர்ந்த மணிகண்ட னுக்கு திருமணம் செய்து அனுப்பி வைத்தாள். முதலிரவு கூட நடக்க விடாமல் தடுத்து மிரட்டினான் அந்த வக்கிரன். பல நாட் களுக்கு பிறகுதான் நடந்தேறியது முதலிரவு.
அதற்குப் பிறகு கண்ணீருடன் கௌசல்யா... ""முதல் பிரசவம்ங்றதால வளைகாப்பு எல்லாம் நடத்தி தாய் வீடான வேப்பந்தட்டைக்கே வந்தேன். பத்து மாசம் முடிஞ்சு ரெட்டை ஆண் குழந்தை பிறந்தது. ரொம்ப சந்தோஷமா இருந்தேன்.குழந்தை பொறந்த 14-வது நாள் குழந்தைக்கு பால் கொடுத்துக்கிட்டிருந்தேன். பின்னால ஒரு கை என்னை சீண்டியது. மிரண்டு போய் திரும்பிப் பார்த்தா அதே மிருகம்... அதே பார்வை. எனக்குள்ளே கோபம் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பிச்சது. எத்தனை நாள் கத்தியை காண்பிச்சு என்னை மிரட்டி மிரட்டி சித்ரவதை செஞ்சிருப்பான்? அந்தக் காயங்களே இன்னும் ஆறல. இனி யும் இவனை சும்மா விடக்கூடாதுன்னு குழந்தையை கீழே கிடத்திட்டு எழுந் திருக்கிறதுக்குள்ள என்னை கட்டி அணைச்சு பலவந்தப் படுத்த ஆரம்பிச்சுட் டான். உடனே நான் கத்தி கூச்சல் போட அம்மா ஓடி வந்து அவனை பிடிச்சு இழுத்துத் தள்ள... ரெண்டுபேருமே சேர்ந்து அவனை அடிச்சு உதைச்சு தள் ளிட்டு... அந்த நள்ளி ரவு இருட்டி லேயும் ரெண்டு குழந்தை யையும் தூக்கிக் கிட்டு சோ ளக்காட்டுல புகுந்து புருஷன் வீட்டுக்கு தப்பிச்சு ஓடி வந்தேன்.மறுநாள் என் கணவன்கிட்ட... சின்ன வயசிலேர்ந்து அந்த காமக் கொடூரனால நான் பட்ட கஷ்டங் களையெல்லாம் ஒண்ணு விடாம சொல்லி அழுதேன். என் புருஷன் கடவுள்ங்க. "நடந்தது நடந்ததா இருக் கட்டும்... இனி நீ பயப்பட வேணாம்'னு ஆறுதல் சொன்ன கடவுள். தெய்வத்துக்கு சமமான என் மாமியாரும், மாமனாரும் ஆறுதல் சொன்னாங்க. எப்படிங்க ஆறும் மனசு? சின்ன வயசுல அந்த மிருகம் என்னை ஏதேதோ செய்யும்போது எனக்குப் புரியல. ஆனா அந்த நாய் என்ன பண்ணினான்னு நெனைக்கும் போதே... இந்த உலகத்துல இன்னும் உசுரோட இருக்கணுமான்னு தோணுது. ஜீரணிச்சுக்கவே முடிய லைங்க'' என்கிறார் கண்களில் தாரை தாரையாய் வழியும் கண்ணீரை துடைத்தபடியே கௌசல்யா.கணவரும், மாமியார் மாமனா ரும்... இப்படி பலரும் ஆறுதல் சொல்லி நிம்மதி அடையாத கௌ சல்யாவை வேட்டையாடிய மிருகம் யார் தெரியுமா? மனதை கல்லாக்கிக் கொள்ளுங்கள். கௌசல்யாவை பெற்ற அப்பன் ரெங்கராஜன்தான்.""அப்பனாங்க அவன்? சே! பெத்தப் புள்ளைக்கிட்ட இப்படி கேவலமா நடந்துக்க எப்படித்தான் அவன் மனசு போச்சோ தெரியல. "குழந்தையை நீங்க பாத்துக்கோங்க... இப்படிப்பட்ட கொடுமை யாருக்கும் வரக்கூடாது'ன்னு உண்மையை சொல்லி கதறினவ... தற்கொலை பண்ணிக்கப் போய்ட்டா. தனியா போற பெண்களை கூப்பிட்டு கற்பழிச்சுடறானுங்களே கொடூர நாய்ங்க. அதுக்காக அந்தப் பெண் தப்பானவளா ஆகிடுவாளா? என்னை பொறுத்தவரைக்கும் நீ பத்தினி தாண்டி'ன்னு சமாதானப்படுத்தினேன். "இருந்தாலும் இந்த மாதிரி ஈவு இரக்க மில்லாத காமக் கொடூரனை சட்டத்தின் முன்னால நிறுத்தி ஆயுள் தண்டனை கொடுக்கணும். தூக்கு தண்டனை கொடுத்தா உடனே செத்துப் போய்டு வான். ஆனா பெத்த மகளையே இப்படி சீரழிச்சோமேன்னு நெனைச்சு நெனைச்சு தினம் தினம் சாகணும். அப்படி ஒரு தண்டனையை அவனுக்கு வாங்கிக் கொடுக்கணும்ங்க'ன்னு எங்கிட்ட கதறினவ போலீஸ் ஸ்டேஷன்லயும் புகார் கொடுத்துட்டா என் மனைவி'' என்கிறார் உயர்ந்த மனப்பான்மையுள்ள கணவரான மணிகண்டன்.இவர்களுக்காக ஆஜராகும் வழக்கறிஞர் வாசு தேவனோ, ""தகப்பன் மகள்ங்குற உறவு எவ்வளவு புனித மானது. அந்த உறவையே இந்த ஆளு கேவலப்படுத்திட்டான். இது சமூகச் சீரழி வின் உச்சக்கட்டம். அதுவும் பருவமடை யாத மைனர் பொண்ணாக இருக்கும் போதே இப்படி பாலியல் பலாத்காரம் செய்ததற்கு பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை வாங்கிக் கொடுக்கலாம். இப்படிப்பட்ட கொடூரனை சமூக குற்ற வாளியாக்க வேண்டும்'' என்று கொந்தளிக் கிறார் அவர்.மகளிர் போலீசாரோ அவன் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். ""பெத்த மகளையே வேட்டையாடின அவனோட பிறப்புறுப்பையே அறுத்து எறியணும்'' என்கிறார்கள் கோபம் கொப்பளிக்க.கௌசல்யாவையும் அந்த காமக் கொடூர ரெங்கராஜ னையும் எதிரே எதிரே அமர வைத்துதான் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். அவன் செய்த சித்ரவதைகளை எங்கெல்லாம் ரத்தக்காயங்களை ஏற்படுத்தினான் என... தன் உடம்பைக் காட்டி சொல்ல அவனின் முகம் கடுகடுத்துப் போனதாம்.""அந்த மனித உருவிலான மிருகத்தை சட்டம் கடுமையாக கண்டித்தே தீரும். அவன் உசுரோட இருக்கிறதை விட சாகுறதே மேல். இவனுக்கெல்லாம் ஜாமீன் கொடுக்க சில கொடூரன்களும்... வாதாட வக்கீல் களும்... சே!'' என்று தலையில் அடித்துக் கொண்டு போகிறார்கள் பெரம்பலூர் மாவட்ட மக்கள்.