பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Thursday, November 5, 2009

திரைக்கூத்து!

நமீதாவுக்காக துடிக்கும் போலீஸ் அதிகாரி!

கவர்ச்சியை நம்ம டைரக்டர்கள் கையாளுவதற்கும், மலையாள டைரக் டர்கள் கையாளுவதற்கும் "பெரிய' வித்தியாசம் உண்டு. ஷகீலாவையே பிரமாண்டப்படுத்தியவர்கள் நமீதா கிடைத்தால் விடு வார்களா? இரட்டை இயக் குநர்களான பிரமோத்- பப்பன் "நில் கவனி என்னை காதலி' என்கிற படத்தை தமிழில் எடுத்து வருகிறார்கள். நமீதாவை அடைய துடிக்கும் ஒரு அடாவடி போலீஸ் அதிகாரி... அவரிடமிருந்து நமீதா தப் பித்தாரா? என்கிற கதையாம். கேட்கவா வேணும்.... நமீதாவை விதவிதமா படம் புடுச்சுக்கிட்டிருக் காங்க.

கௌப்பி விடுறாங்கண்ணே!

வீக் எண்ட் பார்ட்டியை வீட்டிலேயே கொண் டாடிவிடுகிறார் பாடலாசிரியர் சிநேகன். பார்ட்டியில் அவருக்கு சிநேகிதியாக வருவது நடிகை சுவாதி (பழைய சுவாதி) என கிசுகிசுக்கள் கிறங்கடிக்கிறது கோலிவுட்டில். ‘"அண்ணே... வீட்ல பொண்ணு பாத்துக்கிட்டு இருக்க நேரத்துல இப்படி அபாண்டமா கௌப்பி விடுறாங் கண்ணே...' கேட்கிறவர்களிடம் தன்னிலை விளக்கம் தர்றார் சிநேகன்.

அனுஷ்கா ஃபீலிங்!

தனக்கும் கோலிவுட்டுக்கும் சரியா ஒர்க்-அவுட் ஆகலியோ என ஃபீல் ஆகிறார் அனுஷ்கா! காரணம்.... சில வருடங்களுக்கு முன் அம்மணி கோலிவுட்டில் அறிமுகமான ‘"ரெண்டு' படம் சுமாராகத்தான் போனது! இப்போது விஜய்யுடன் நடித்திருக்கும் வேட்டைக்காரன் ரிலீஸாவதில் ஏகப்பட்ட தடங்கல். இதுதான் ஃபீலிங்கிற்கு காரணம்.

மீண்டும் பாக்யராஜ்!

"முந்தானை முடிச்சு', "தாவணிக் கனவுகள்' பட சமயங்களில் என் அப்பா எப்படி பரபரப்பாக இருந் தாரோ.. அதேபோல மீண்டும் அவரை பரபரப்பானவராக ஆக்குவேன்' என சாந்தனு உணர்ச்சிவசப்பட... மகனை ஆசு வாசப்படுத்திய பாக்யராஜ், "ஃபைனான்ஸ் பிரச்சனைகளால்தான் எனக்கு இந்த பின்னடைவு ஏற்பட்டது. படைப்பு ரீதியாக அல்ல. மறுபடியும் என் இடத்தை பிடிப்பேன்' என்றார். இந்த உணர்ச்சிமயம் நிகழ்ந்த இடம் "சித்து +2' படத்தின் ஆடியோ விழா. மகனை வைத்து பாக்யராஜ் இயக்கியிருக்கும் இந்தப்படம் பிரமாதமாக வந்திருப்பதாக கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள். திரைக் கதை மன்னன் என பெய ரெடுத்த பாக்யராஜ் சோடை போவாரா என்ன?

அப்படியா?

நிமோனியா காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி 1-ந் தேதியன்று சென்னையில் நடந்தது! இதில் சீப்-கெஸ்ட்டாக ஜட்டிப் பேச்சு காமெடி நடிகர் கலந்து கொண்டார். அவரை பார்த்ததும் செய்தி சேகரிக்க வந்த நிருபர்களும், புகைப்படக் கலைஞர்களும் ‘"காமெடி நடிகர் இருந்தா நாங்க நிகழ்ச்சியை கவரேஜ் செய்யமாட்டோம்' என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் சொல்லி விட்டார்கள். இதையடுத்து சோர்ந்துபோன முகத்துடன் வெளியேறினார் காமெடியர்.