பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Friday, December 18, 2009

மன்மத குருக்கள்! வெளியில் வராத...

காஞ்சிபுரம் மன்மத குருக்கள் விவகாரம்... சில மாதங்களுக்கு முன்பே காவல்துறை யின் கவனத்துக்கு வந்ததும்... அவர்கள் இதை வைத்து பெரிய அளவில் வசூல் நடத்தி இருப்பதும் தற்போது தெரிய வந்திருக்கிறது.காஞ்சி மன்மத குருக்கள் தேவநாதன் கோயில் கருவறையில் சல்லாபித்த தகவலும் அதை அவன் படம்பிடித்து வைத்திருக்கும் விஷயமும் சில மாதங்களுக்கு முன்பே சிவகாஞ்சி இன்ஸ்பெக்டர் பட்டாபி மற்றும் அவரது ஸ்டேஷன் காக்கிகளின் கவனத்துக்குப் போயிருக்கிறது.
உடனே துடித்தெழுந்த காக்கிகள்... மன்மத குருக்களை அழைத்து மிரட்டி அவன் எடுத்து வைத்திருந்த ஆபாச வீடியோ படங்களை கேட்ச் பண்ணிவிட்டு.... மன்மத குருக்களை துரத்திவிட்டுவிட்டனர்.
இதன்பின் இந்த படத்தை வைத்து எப்படி ஆதாயம் பார்ப்பது என மூளையைக் கசக்கிக்கொண்ட சிவகாஞ்சி காக்கிகள்... படத்தில் சிக்கியுள்ள பெண்களில் யாராவது வசதியான பார்ட்டிகள் இருக்கிறார்களா என தேடினர்.அந்த கிளுகிளு சி.டி.யில் தென்பட்ட ஒரு முகத்தைப் பார்த்த தும் காக்கிகள் துள் ளிக் குதித்திருக்கிறார் கள். காரணம் அந்த சி.டி.யில் இருந்த முகங்களில் ஒன்று காஞ்சிபுரத்துக்கே அறிமுகமான பிரபல முகம்.
பிரபல டாக்டரின் மனைவி. வசதிக்கும் பஞ்சமில்லாத வர். டாக்டர் அடிக்கடி சென்னை மற்றும் வெளியூர்களுக்கு பறந்த படியே இருக்கும் ரகம். உடனே அந்தப் படத்தை மட்டும் தனியே காப்பி பண்ணிக் கொண்டு டாக்டரையும் அவரது மனைவியையும் சந்தித்த காக்கிகள்...
அவர்களின் மிரட்சியைப் பார்த்து கணிசமாகக் கறந்துகொண்டு கிளம்பினர். இதன் பின் தனது கணவரின் காலில் விழுந்து கதறி மன்னிப்பு கேட்ட அந்தப் பெண்ணை... அதோடு காக்கிகள் விட்டுவிட வில்லை. திரும்பத்திரும்ப வருவதும் அநாகரிகமாகப் பேசுவதும்... கரன்ஸிக் கட்டோடு திரும்புவதுமாக இருந்தனர். இதனால் மனம் வெறுத்துப்போன டாக்டரின் மனைவி... ஒரு கட்டத்தில் விஷம் குடிக்க...
கடைசி நிமிடத்தில் தீவிர சிகிச்சைக்குப் பின் காப்பாற்றப்பட்டுவிட்டார். இன்னும் அவர் மருத்துவ சிகிச்சையில் இருந்து மீளவில்லை.இதை அதே ஸ்டேஷனில் வேலை பார்க்கும்...
சரியாக பங்கு கிடைக்காத ஒரு காக்கியே விஷயத்தை கசிய விட்டுவிட்டு சைலண்ட் ஆக... இதைப் பார்த்து நம் லிமிட்டில் இப்படியா என கொதித்துப்போன டி.எஸ்.பி.சமுத்திரக்கனி, வழக்கை பதிவு செய்யவைத்து... விசாரணையையும் தீவிரப்படுத்திவிட்டார். இடையில் நடந்த கலெக்ஷன் விவகாரங்கள் அவர் கவனத்துக்கு வர..
இதன்பிறகே இந்த வழக்கை மாவட்ட குற்றப்பிரிவின் கையில் கொடுத்து விட்டார் டி.எஸ்.பி.தேவநாதனை இரண்டாவது முறை கஸ்டடி எடுத்தபோது அவன் மூலம் செல்போன் ரிப்பேர் கடையில் கைப்பற்றப்பட்ட...
லேப்டாப், மற்றும் தேவநாதனின் செல்போன் ஆகியவற்றை சென்னையில் இருக்கும் தடய அறிவியல்துறைக்கு அனுப்பி வைத்திருந்தனர். அவற்றை துருவித் துருவி ஆராய்ந்த தடயத்துறையினர்.... "இவை செல்போன் மூலம் மட்டும் எடுத்த படங்களாகத் தெரியவில்லை. கேமராவைப் பயன்படுத்தியும் படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன.
அதேபோல் தேவநாதனும் பெண்களும் இருக்கும் சில படங்களை மூன்றாம் நபர் ஒருவர் எடுத்திருப்பதாகவும் தெரிகிறது' என்றெல்லாம் ரிப்போர்ட் கொடுத்திருக்கிறார்கள்.அதோடு... அந்த லேப் டாப் வழியாக தேவநாதன் மூலம் எடுக்கப்பட்ட படங்களை தேவநாதனின் செல்போன் கடை நண்பர்களான பாலாஜியும் செந்திலும் இதற்காகவே இருக்கும் இணையதளங்களுக்கு அனுப்பி ஏகத்துக்கும் காசு பார்த்ததோடு...
இதற்காகவே தனியாக ஒரு வெப்சைட்டைத் தொடங்கும் முயற்சியிலும் அவர்கள் இருந்ததைக் காக்கிகள் கண்டு பிடித்துள்ளனர். அதேபோல் ஆரம்ப கட்ட விசாரணையின் போது...
காந்திரோடு ஐ.சி.ஐ.சி.ஐ கிளையில் வைத்திருந்த தேவநாதனின் கணக்கில் இருந்து பல லகரங்களையும் முந்தைய விசாரணை டீம் வாங்கியதாகவும் பரபர டாக் அடிபட்டுக்கொண்டிருக்கிறது. இதற்கிடையே தேவநாதனின் நெருங்கிய சகாவான கார்த்திக் குருக்கள் மீதும் காக்கிகளின் சந்தேகப் பார்வை விழுந்திருக்கிறது.அந்த கார்த்திக் குருக்கள் நம்மிடம் ""அவன் வேதபாட சாலையில் என்னோட படிச்சவன்.
அவ்வளவுதான். எனக்கும் அவனது குற்றங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை'' என்கிறார் கைபிசைந்தபடியே.சிவகாஞ்சி காக்கிகளுக்கு வசூல் உண்டியலாகப் பயன்பட்ட அந்த டாக்டர் மனைவி யின் சி.டி.யில் அப்படி என்னதான் இருக்கிறது என விவரமறிந்த காக்கி ஒருவரிடம் கேட்டோம். அவரோ “""தேவநாத குருக்கள் சாதாரண ஆள் இல்லை. அந்த விஷயத்தில் கில்லாடியா இருக்கான். அவன் யாரை ஆபாசப் படம் எடுத்தாலும் அவங்க யாரு என்பதை சிம்பாலிக்கா முதல்ல காட்டுவான்.
உதாரணமா.. பூக்காரியை லாட்ஜ்ல ஆபாசப் படம் எடுக்கும் போது... முதல்ல அவளை கட்டில்ல உட்கார்ந்து பூ கட்ற மாதிரி காட்டிட்டு... அப்புறம்தான் தன் லீலைகளை ஆரம்பிப்பான்.
அதே மாதிரி டாக்டர் மனைவியை... டாக் டர்களுக்கே உரிய கோட்டோடவும் ஸ்டெதஸ்கோப்போடவும் ரொம்ப மரியாதையாகக் காட்டிட்டு அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா உரிச்சிக் காட்டியிருக்கான்.
இன்னும் வெளில வராத படங்கள் நிறைய இருக்கு. கொஞ்சம் கொஞ்சமா எல்லாமே வெளிச்சத்துக்கு வந்துடும் பாருங்க'' என்கிறார் மீசையை வருடியபடியே.தற்போதைய காஞ்சிபுரம் டி.எஸ்.பி. விஜயராகவனோ ""விசாரணை தீவிரமா நடந்துக் கிட்டு இருக்கு.
இப்ப எதையுமே சொல்ல முடியாது''’என்கிறார் சஸ்பென்ஸ் வைத்து.தேவநாத குருக்களின் லீலைகள் இன்னும் எப்படி எப்படியெல்லாம் வெளிப்படப் போகிறதோ?