பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Monday, November 23, 2009

ஒரு லீற்றர் மனிதகொழுப்பு 15,000 டொலர்!

60 க்கு மேற்பட்ட மனிதர்கள் படுகொலை!
ஒரு லீற்றர் மனிதகொழுப்பு 15,000 டொலர்!!
ஐரோப்பியரின் அழகுசாதனைக்கு மனித கொழுப்பா!!!
ஆட்டைக்கடித்து! மாட்டைக்கடித்து!! மனிதனைக் கடிக்கும்!!! வெள்ளை ஏகாதிபத்தியர்களின் அழகுசாதலைக்கு மனிதகொழுப்பு தேவை என்பதற்காக கடந்த காலத்தில் 60மேற்பட்டவர் களை கொலை செய்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் நால்வர்கைது. இவர்கள் கொலை செய்த மனிதர்களிடம் இருந்து பெற்ற கொழுப்பை ஒரு லீற்றர் 15,000 டொலர் வீதம் விற்று வந்துள்ளனர். மேற்படி நால்வரைக் கொண்ட குழுவானது பின்தங்கிய கிராமங்களைச் சேர்ந்த அப்பாவிகளுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக ஆசை காட்டி, இனிக்க கதைத்து அழைத்து வந்து படுகொலை செய்தமை குறிப்பிடத்தக்கது. இன்று பலவிதங்களில் பணம் சம்பாதிப்பதற்கு கிராமங்களை அழிப்பதும் அங்குவாழும் மக்களை கொலை செய்வதும் சர்வதேசத்தில் ஒரு சாதாரன நிகழ்வாகிவிட்டது. ஆனால் அந்த கிரமப்புரங்களில் வாழும் மக்கள் சேற்றில் குளித்தால் தான் பட்டனத்தில் அரைகுரை பூச்சுக்களுக்கும், வயிற்றுக்கும் ஆகாரங்கள் கிடைக்கும் என்ற பகுத்தறிவுகள் அற்றவர்கள் இன்று பட்டனத்தில் அதிகரித்து விட்டார்களா? அல்லது அவர்களிடம் மனிதாபிமானம் தொலைந்துவிட்டதா?? என்று கேள்விகள் எழுகின்றது. மேலும் சந்தேகநபர்கள் ஐரோப்பாவிலிலுள்ள அழகுசாதன மற்றும் மருந்தக கம்பனிகளுக்கு மனிதக் கொழுப்பை விற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்ததாக காவல்துறை கவலை தெரிவித்துவருகின்றது. இந்த சர்வதேச மனிதக் கொழுப்பு கடத்தல் தொடர்பான பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.