பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Thursday, November 26, 2009

போலீஸ் கஸ்டடியில் மன்மத குருக்கள் கிளப்பிய கிளுகிளு பூதம்!

காஞ்சிபுரம் மன்மத குருக்கள் தேவநாதனின் லீலைகளை பற்றி... கடந்த இதழில் ரிப்போர்ட்டாக கொடுத்த நாம்... அவனது கிளுகிளு செல்போன் காமிராவில் சிக்கிய பெண்கள் சிலரையும் தேடிப்பிடித்து அவர்களின் வாக்குமூலத்தையும் அதில் சுடச்சுடத் தந்திருந்தோம்.இதற்கிடையே மேலும் விசாரிக்க ஒரு வாரம் தங்கள் கஸ்டடியில் அவனை ஒப்படைக்க வேண்டும் என காக்கிகள் கேட்க... மாஜிஸ்திரேட்டோ 2 நாள் மட்டும் கஸ்டடிக்கு ஒப்புக்கொண்டார். இதன்படி தேவநாதனை தங்கள் கஸ்டடிக்கு கொண்டுவந்தனர்.


விசாரணையின் போது தேவநாதன் எப்படி நடந்துகொண்டான்?


""சரியான கல்லுளி மங்கனா இருக்கான். கொஞ்சம் கூட அவன் அலட்டிக்கலை. அவனுக்கு எந்த விதமான குற்ற உணர்ச்சியும் இல்லை. அதுதவிர நேரா நேரத்துக்கு நல்ல சாப்பாடா கேட்டு வாங்கி திருப்தியா சாப்பிட்டான். "என்னடா... நீ கோயில்ல செக்ஸ் வச்சிக்கிட்டது தப்பில்லையா'ன்னு கேட்டதுக்கு... "வேதங்கள் செக்ஸைக் கொண்டாடுது. காமம் கடவுளுக்கு விரோதமான விஷயம் இல்லை'ன்னு லெக்ஸர் அடிச்சவன்... மன்மத விஷயங்களைச் சொல்லும் சமஸ்கிருத வேத சூத்திரங்களை கடகடன்னு ஒப்பிச்சான் பாருங்க.


அசந்துபோய்ட்டோம். அதேபோல் சிவன் தொடங்கி இந்திரன் வரை கடவுள்கள் செய்த மன்மத லீலைகள் பத்தியும் பட்டியலிட்டான். இன்னும் கொஞ்சநேரம் அவனை காமம் பத்தி பேச விட்டிருந்தா எங்களையே அவன் டைரக்ஷனுக்கு மாத்திவிட்டிருப்பான் போல'' என்கிறார்கள் அவனை விசாரித்த காக்கிகள்.

அவன் காக்கிகளிடம் கொடுத்த வாக்குமூலத்தில் பல விஷயங்களை பகிரங்கமாகச் சொல்லியிருக்கிறான். அதில் ஒரு பகுதியை மட்டும் பார்ப்போம்.""நான் ஐந்தாவது வரைதான் படிச்சேன். அதுக்குப் பிறகு சங்கரமட வேத பாடசாலையில் வேதம் படிச்சேன். சின்ன வயசிலிருந்தே காமத்தின் மீது அதீத ஆர்வம் எனக்கு. அப்பாவுடன் கோயிலுக்கு போறச்ச பெண்கள்ட்ட பக்குவமா... இதமா... பேசற கலையை வளர்த்துண்டேன். கோயிலுக்கு வர்ற பெண்களோட எண்ணங்களை அவங்க கண்களைப் பார்த்தே படிச்சுடுவேன். குழந்தை வரம் வேணும்னு ஆண்டவனைப் பிரார்த்திக்கிற பொண்ணுக லேசில் படிய மாட்டாங்க. ஆனா... குழந்தைக்கோ கணவனுக்கோ உடல்நிலை சரியில்லைன்னு கவலையோட கோயிலுக்கு வர்ற பொண்ணுகளை இதமா ஆதரவா பேசி வளைச்சிட முடி யும். அதேபோல் எல்லோர்ட்டயும் கலகலன்னு பேசற பொண்ணுகளை... "அம்பாள் கணக்கா இருக்கே... அம்சமான உடம்பு. கட்னவன் கொடுத்து வச்சவன்'னு கொஞ்சம் புகழ்ந்தா போதும்... நம்ம பக்கம் சரிஞ்சிடுவாங்க. ""அதேபோல் "கடவுள்முன் கருவறையில் சங்கமிச்சா... வாழ்க்கை ஏகபோகமா ஆகும்'னு சொல்லியும் பலரைத் தொட்டிருக்கேன். சிலர் கருவறையில் வேணாம்னு தயங்குவாங்க. அப்படிப்பட்டவங்களை... அவங்க வீட்டில் வைத்தோ... அல்லது லாட்ஜில் வைத்தோ... சல்லாபிப்பேன். பலபேரைத் தொட்டாலும் அவங்கள்ல 8 பேரை மட்டும்தான் செல்போன்ல கிளுகிளுப்பா படம் எடுத்திருக்கேன். அதிலும் கோயில்ல வச்சி ரெண்டுபேரை மட்டும் எடுத்திருக்கேன். அதில் ஒருத்தி டாக்டரேட் வாங்கின லேடி புரபஸர். இன்னொருத்தி பூக்காரி. மத்தவங்களை காஞ்சிபுரம், மாமல்லபுரம், சென்னைன்னு லாட்ஜில் வச்சி உல்லாசம் அனுபவிச்சி படம் எடுத்திருக்கேன். அப்படி நான் படம் எடுத்ததில் ஒருத்தி... தாசில்தாரோட மனைவி. இன்னொருவர் ஒரு லேடி டாக்டர்.""என்னோட கோயில் லீலைகளுக்கு அந்த பூக்காரி ரொம்ப உடந்தையா இருப்பா. நான் யாருடனாவது கருவறையில் சல்லா பிச்சா.. அந்தப் பூக்காரிதான் வாசல் பக்கம் காவலிருப்பா. யாராவது வந்தா... "சாமி அர்ச்ச னைக்கு


ஆளுவருது'ன்னு குரல் கொடுத்து உஷார் படுத்துவா. உடனே சல்லாபத்தில் இருந்த பெண்ணை ஓரமா -கருவறை உள்ளே யே நிக்கவச்சிட்டு.. அப்பாவி மாதிரி அர்ச்ச னைத் தட்டை வாங்கி... அர்ச்சனை பண் ணிட்டு... வர்றவாளை அனுப்பிடுவேன். காமம் தப்புன்னு நினைக்கிறது தப்பு. கோயில்ல சிலை களை மன்மத லீலைகளோட படைச்சதே... மன்மதக் கலையை பரப்புறதுக்காகத்தான். புதுசா கல்யாணமாகும் தம்பதிகளை கோயி லுக்கு அனுப்பறதே... சிலைகளைப் பார்த்துக் கத்துக்கோ என்பதற்காகத்தான். மன்மதத்தை சரியா கத்துக்காததால்தான் பலபேர் குடும் பத்தில் குழப்பம். என்னைப் பொறுத்தவரை கடவுள் கொடுத்த வரம் காமம்'' என்ற ரீதியில் அவன் கொடுத்த ஓப்பன் ஸ்டேட்மெண்ட்டைக் கேட்டு விக்கித்துப் போயிருக்கிறார்கள் காக்கிகள்.இவனது ஸ்டேட்மெண்ட்டைப் பற்றி கேள்விப்பட்டு அதிர்ந்துபோன காஞ்சிபுரம் கோயில் அர்ச்சகர்கள் தங்கள் சங்கத்தைக்கூட்டி... "இனி எந்தக் கோயிலிலும் தேவநாதனை அர்ச்சனை பண்ண அனுமதிப்பதில்லை' என தீர்மானமே போட்டிருக்கிறார்கள்.மற்ற பெண்கள் தேவநாதனோடு வீட்டிலும் விடுதி அறையிலும் உல்லாசமாக இருந்திருக்கிறார்கள். எனவே இவர்களை கோயில் புனிதத்தைக் கெடுத்த குற்றவாளி களாக வழக்கில் சித்தரிக்க முடியாது. அதே சமயம் தேவநாதனின் கருவறை உல்லாசத்திற்கு பார்ட்னராக இருந்த...

அந்த லேடி புரபஸரையும் பூக்காரியையும் சேர்த் தால்தான் வழக்கு வலுவாக நிற்கும். எனவே மேற்கண்ட இரு பெண்களையும் கைது செய்யலாமா என்ற ஆலோசனையில் காவல்துறை இருக்கிறது. அதேபோல் பெண்கள் தொடர்பான வழக்கு என்பதால் ஒரு நேர்மையான பெண் ஆய்வாளரை விசாரணை அதிகாரியாகப் போட்டு மேலும் வழக்கைத் துருவலாமா? அல்லது வழக்கை சைபர் கிரைமிடம் ஒப்படைக்கலாமா?

என்றெல்லாம் பலத்த யோசனையிலும் இருக்கிறார்கள் காக்கிகள்.தேவநாதன் தனது மனைவி கங்காவையும் செல்போனில் கிளுகிளுப்பாக படம் எடுத்திருக்கிறானாம். இது போன்ற படங்களை தனது சொந்த ரசனைக்காக மட்டுமே தேவநாதன் எடுத்திருக்கும்போது...

"செக்ஸ் படம் எடுத்து இண்டெர்நெட்டில் பரப்பி னான்' என்ற குற்றச்சாட் டையும் இவன்மீது வைக்க முடியுமா? என காக்கிகளே நிறையவே நெற்றி சுருக்குகிறார் கள்.

ஏனெனில், அந்தப் படங்களை பரப்பியவர்கள் செல்போன் ரிப்பேர் கடை நடத்திய பாலாஜியும் செந்திலும்தான். எனவே பல்வேறு கோணங்களில் ஆலோசனை நடத்திவரும் காக்கிகள்... மேலும் தேவநாதனை ஒரு வாரம் விசாரிக்க... கஸ்டடி கேட்டு உயர்நீதி மன்றத்தில் அப்பீல் செய்திருக்கிறார்கள்.ஒருவேளை அப்பீல் கிடைத்தால்...

இன்னும் பல கிளுகிளு பூதங்கள் தேவநாதனின் வாக்குமூலங்களில் இருந்து கிளம்பும்.