பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Wednesday, December 9, 2009

நமீதாவை பார்த்து மற்ற பெண்கள் திருந்தவேண்டும்

நமீதா கதாநாயகியாக நடித்து வரும் படம், `நில் கவனி என்னை காதலி. இந்த படத்தில் நமீதா நடித்த படுகவர்ச்சியான காட்சிகள் இடம்பெறுகின்றன.
படத்தின் பாடல் வெளியீட்டு விழா, சென்னை போர்பிரேம் தியேட்டரில் நடந்தது.
பாடல்களை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் சிவசக்தி பாண்டியன் வெளியிட்டார்.
விழாவில் கவிஞர் சினேகன் பேசினார்.
அவர், ’’இந்த படத்தில் நமீதா அதிக கவர்ச்சியாக நடித்து இருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். கிராமப்புறங்களில் கூட, பெண்கள் இப்போதெல்லாம் பாவாடை-தாவணி அணிவதில்லை. சினிமாவில் கதாநாயகிகள் அணிவதுபோல் நாகரீக உடைகளையே அணிகிறார்கள்.
எனக்கு நீண்ட நாட்களாக ஒரு ஆசை.

நமீதாவை ஒரே ஒரு படத்திலாவது பாவாடை-தாவணியில் பார்த்துவிட வேண்டும். நமீதா ஒரு படத்தில் பாவாடை-தாவணி அணிந்து நடித்து என் ஆசையை நிறைவேற்ற வேண்டும்.
நமீதா போன்ற பெரிய கதாநாயகிகள் பாவாடை-தாவணி அணிந்து நடித்தால், அதைப் பார்த்தாவது மற்ற பெண்களும் பாவாடை-தாவணி அணிய ஆரம்பிப்பார்கள்’’என்று பேசினார்.