பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Sunday, December 6, 2009

உடைகிறது ஐ.தே.கட்சி: எஸ்.பி;.திஸாநாயக்க உட்பட மூவர் மகிந்தவுக்கு ஆதரவு?

க்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.பி;.திஸாநாயக்க ஜனாதிபதி தேர்தலில் மகிந்தவுக்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை எஸ்.பி;.திஸாநாயக்கவுக்கும் மகிந்தவுக்கும் இடையில் ஹிங்குராகந்தையில் இடம்பெற்ற இரகசிய சந்திப்பினையடுத்தே ஆதரவு வழங்க முன்வந்துள்ளதாக எஸ்.பி;.யின் நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தந்தன.இது தொடர்பான ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நாளை கூட்டவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை குருணாகல் மாவட்ட ஐ.தே.க.பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் மகிந்தவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதுடன் குருணாகல் மாவட்டத்தின் மேலும் ஒரு ஐ.தே.க.பாராளுமன்ற உறுப்பினரும் மகிந்தவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.