பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Tuesday, December 8, 2009

பொட்டு அம்மான் உயிருடன்:விடுதலைப்புலிகளின் புதிய இயக்கம்:PLA

விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர் பொட்டு அம்மான் தப்பிச் செல்லும்போது கொல்லப்பட்டதாக இலங்கைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் உயிருடன் இருப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக டைம்ஸ் இதழ் குறிப்பிட்டுள்ளது.

விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகள் ஒடுக்கப்பட்டதால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் புதிய இயக்கம் எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த இதழ் குறிப்பிட்டுள்ளது.

புலிகள் அமைப்பு அழிக்கப்பட்டு 6 மாதங்கள் கழிந்துள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தில் மக்கள் விடுதலை இராணுவம் எனும் புதிய மாக்சிஸ்ட் தமிழ் குழு ஒன்று உருவாகியுள்ளதாக லண்டன் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பிரச்சினை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும் இலங்கை அரச படைகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் தொடரும் என்றும் பி.எல்.ஏ என்ற மேற்படி அமைப்பு தெரிவித்துள்ளது.

கோணேஸ் என்பவரை தளபதியாக கொண்டுள்ள மேற்படி அமைப்பில் 300 உறுப்பினர்களும், 5000 உதவியாளர்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளதுடன். இந்த அமைப்புக்கும் புலிகள் அமைப்புக்கும் எந்தவித தொடர்புகளும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்.
புலிகளின் முன்னைநாள் உறுப்பினர்களும் இணைத்து கொள்ளப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புக்கும் பலஸ்தீனம், கியுபா, இந்தியன் மவோயிஸ்ட் போன்ற அமைப்புக்களுடன் தொடர்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும்