
அவ்வாறு பொன்சேகாவினால் முன்வைக்கப்படும் எந்த குற்றச்சாட்டுக்களையும் எதிர்கொள்வதற்கு தாம் தயார் என்றும் அரச தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கையில் -
விடுதலைப்புலிகளின் அரசியற்பிரிவினர் சிறிலங்கா அரச படையினரிடம் சரணடைவதற்கு நோர்வே அரசின் ஊடாக பசில் ராஜபக்சவுடன் தொடர்புகொண்டமை, அதனை கேள்வியுற்ற கோத்தபாய ராஜபக்ச எவ்வாறு நடந்துகொண்ட விதம் ஆகியவை குறித்து மக்களுக்கு உண்மை கூறப்போவதாக புறப்பட்டுள்ளார் என்று அரசு தரப்புக்கு தகவல் கிடைத்துள்ளது.
சரணடைய முடிவெடுத்த விடுதலைப்புலிகள் செஞ்சிலுவை சங்கத்தின் ஊடாக எந்த கோரிக்கையையும் முன்வைக்கவில்லை. அதுவே அக்காலப்பகுதியில் சரியான ஏற்பாடாக இருந்திருக்கும்.
விடுதலைப்புலிகள் சரணடைவதாக அறிவித்த காலப்பகுதியானது சிறிலங்கா படையினர் மீளத்திரும்ப முடியாத புள்ளிக்கு சென்றுவிட்ட நாட்கள் ஆகும். இவை குறித்தெல்லாம் அரசு சரியாக சிந்தித்துத்தான் முடிவெடுத்தது.
இவை பற்றி பொன்சேகா என்ன கூறினாலும் அதற்கு பதிலளிக்க அரசு தயார். இந்த விடயத்தையே தனது பிரதான தேர்தல் பிரசார மூலோபாயமாக பொன்சேகா திட்டமிட்டு வருகின்றார் என்பதும் எமக்கு தெரியும் – என்று கூறியுள்ளன.