பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Friday, November 20, 2009

சரியும் சாம்ராஜ்யம்! - ஜெகத் கஸ்பர்

ஈழம் வருமா? வரும். எங்ஙனமென்பதை இவ்விதழில் விவாதித்து விவரிப்பதாயிருந் தோம். இடையில் அரங்கேறிய ராணுவத் தளபதி சரத் பொன் சேகா தொடர்பான அதிரடிக் காட்சிகள் முக்கிய சில செய்தி களை சொல்லிச் செல்வதால் முதலில் அதனைப் பார்ப்போம்.

காட்சிச் சுருளை சற்று பின்னோக்கி ஓடவிட்டு இயக்கு வோம். தமிழரை அழித்த போருக்கு களத்தில் தலைமை ஏற்றிருந்தவர் சரத் பொன்சேகா. போர் வெற்றியின் முழுப் பெருமை யினையும் ராஜபக்சே-கோத்த பய்யா சகோதரர்கள் அரசிய லாக்கி அபகரிக்க, உள்ளுக்குள் ராஜபக்சே சகோதரர்களுக்கும் பொன்சேகாவுக்கும் உரசல் என அரசல் புரசலாய் செய்திகள் வந்தன. செய்திகளை உண்மை யாக்கும் வண்ணம் ராணுவ தலை மைத் தளபதி பதவி பொன் சேகாவுக்கு நீட்டிக்கப்படவில்லை. இது நடந்த அக்டோபர் மாதத் தில்தான் இலங்கையில் ராணுவப் புரட்சி வெடிக்கக் கூடுமென்ற அச்ச அதிர்வலைகள் எழுந்து இந்திய ராணுவத்தின் உதவியை ராஜபக்சே அக்டோபர் 15-ம் தேதி வேண்டியதாக பொன்சேகா இப்போது குற்றம் சாட்டியுள்ளார். இதே காலகட்டத்தில் சிறப்பு இந்திய கமாண்டோக்கள் ஏதோ கொழும்பு நடவடிக்கைக்காக ஆயத்தமாய் வைக்கப்பட்டிருந்த செய்திகளும் அப்போது உலவின.இப்பின்னணியில் பொன் சேகா அதிபர் தேர்தலில் போட்டி யிடக் கூடுமென்ற செய்திகளும், எதிர்க்கட்சிகளின் பொது வேட் பாளராக அவர் நிறுத்தப்படும் சாத்தியப்பாடுகளும் விவாதிக்கப்பட, கொழும்பு அரசியற் களம் சூடேறத் தொடங்கியது.
அமெரிக்க குடி யுரிமையும் கூடவே கொண்ட பொன்சேகா திடீரென அமெரிக் காவில் வாழ்ந்து வரும் தனது மகளை சந்திக்கப் புறப்பட்டதும், அங்கு அவரை தமிழர்கள் மீது நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்து "சம்மன்' இல்லாமலேயே விசாரிக்க அமெரிக்க தேச பாது காப்பு பிரிவு விருப்பம் தெரி வித்ததும் வெப்ப நிலையை மேலும் சூடேற்றின.

விசாரணை எதையும் சந்திக் காமலேயே சரத் பொன்சேகா கொழும்பு திரும்பினார் எனச் சொல்லப்பட்டது. ஆனால் முக்கிய அமெரிக்க அதிகாரிகள் அவரைச் சந்தித்தனர் என்றும், அமெரிக்கா அறிய விரும்பிய முக்கிய சில செய்திகளை அவர் சொல்லிவிட் டார் என்றும் இப்போது தெரிய வருகிறது. இந்நிலையில் ராணுவ அமைப்பில் இப்போது பொன்சேகா வகித்து வரும் முதன்மை அதி காரி என்ற பதவியிலிருந்தும் அவரை விடு வித்து அதிபர் ராஜபக்சே கடந்த சனிக்கிழமையன்று கடிதம் எழுத, அவசர கதியில் இந்திய அரசின் இரண்டாம் நிலையில் இருக்கும் பிரணாப் முகர்ஜி அவர் கள் கொழும்புக்குப் புறப்பட, இலங் கை அரசியல் உலகின் கூர்த்த கவ னம் பெற்றது. மேற்குலக நாடுகளின் அரசியல்-ராஜதந்திர முற்றுகை இறுக்கத்திலிருந்து ராஜபக்சே சகோதரர்களை காப்பாற்றும் நோக் குடன் பிரணாப் முகர்ஜி புறப்பட் டாரா, இல்லை சர்வாதிகாரிகளாய் கொக்கரித்தவர்கள் பலவீனப்படுகிற தருணத்தை பயன்படுத்தி அரசியற் தீர்வு முயற்சிகளை துரிதப்படுத்தும் வாய்ப்பு தேடிச் சென்றாரா என்பது ராஜதந்திர வட்டங்களில் ஒருபுறம் விவாதிக்கப்பட, வந்திறங்கியபின் முதல் நிகழ்வாக அவர் ஆற்றிய லக்ஷ்மண் கதிர்காமர் நினை வுரையில் "அரசியற் தீர்வுக்கான வரலாற்றுத் தருணமும் வாய்ப்பும் இது' என வலியுறுத்திக் குறிப்பிட்ட தும் கவனிக்கப்பட்டது.

இதற்கிடையில் ராஜபக்சே அரசும் தனியார் நிறுவனங்களும் நடத்தியுள்ள ஆய்வுகளில் சரத் பொன்சேகா எதிர்கட்சிகளின் ஆதரவின்றித் தனித்து நின்றாலே சராசரி 22 சத வாக்குகள் பெறு வார் என்பதும், குறிப்பாக இலங்கை சமூகத்தில் சக்திமிக்க பௌத்த பிக்குமாரின் பெருவாரியான ஆதரவு அவருக்கு இருப்பதும், போர் வெற்றி யின் நாயகனாக சாதாரண சிங்கள மக்கள் சரத் பொன் சேகாவைத்தான் பார்க்கிறார்களென்ப தும் தெரிய வந்துள் ளது. இந்தப் பின்ன ணியில்தான் 2012-ம் ஆண்டு நடைபெற வேண்டிய அதிபர் தேர்தலை வரும் ஆண்டு ஏப்ரல் மாதமே நடத்தலாம் என முன்னர் ராஜபக்சே செய்திருந்த முடிவினை இப்போது மறுபரிசீலனை செய்யும் செய்திகளும் வந்திருக்கின்றன. கடந்த ஞாயிறு தனது கட்சியின் மாநாட்டில் ஏப்ரல் மாதம் தேர்தல் என அறிவிப்பதாய் முன்னர் முடிவு செய் யப்பட்டிருந்தது. இப்போதோ தேர்தல் அறிவிப்பு உரிய நேரத்தில் வரும்'' என ராஜபக்சே சமாளித்துள்ளார்.வரலாறு நெடுகிலும் நாம் தரிசிக்கும் மகா மன்னர்களின் குப்பைமேடுகளும், சரிந்த சாம்ராஜ் யங்களின் இடிபாட்டுச் சிதறல்களும் கொஞ்ச நஞ்சமல்ல. முள்ளிவாய்க் கால் கொடுமை நடந்த வாரத்தில் -வரலாறு ஓர் சுழல் வினை -சாம்ராஜ் யம் சரியும்- அதிகார போதையின் உச்சகட்ட கிறக்கத்தில் நிற்கும் ராஜபக்சே சகோதரர்களை யதார்த்த உண்மைகள் ஒருநாள் நிச்சயம் சுற்றி வளைக்குமென எழுதியிருந்தோம். இத்துணை விரைவில் அது நடக்குமென நினைக்கவில்லை.

ஏதோ உலக மகா சரித்திர புருஷர்கள் போல் தமிழர் இன அழித்தலை கொக்கரித்துக் கொண்டாடிய ராஜபக்சே, கோத்தபய்யா, பொன்சேகா மூவரையும் திருவிழாக்கூத்தின் வித்தியாசமான பரமபத மரண விளையாட்டில் மேற்குலக நாடுகள் எப்படி எலி-பூனைகளாக மணி கட்டி ரசமான வேடிக்கை ஜீவராசிகளாக இறக்கி விட்டிருக்கின்றன என்பதை உன்னிப் பாய் கவனித்தால் உலக அதிகார ஒழுங்கு எவ்வாறெல்லாம் இயங்க முடியும், அந்த உலக அதிகார ஒழுங்கினை தமிழர்கள் தம் நலன் களுக்காய் எவ்வாறு பயன்படுத்த முடியும் என்ற சூட்சுமங்கள் புரியும்.சாமான்யமானதோர் அரசியல் விஞ்ஞான மாணவனாய் எனது அவதானங்களும், அவற்றினடிப்படையிலமைந்த அனுமானங் களும் இவை: ஆனையிறவு வெற்றி யின் உச்சியில், நின்ற விடுதலைப் புலிகளை பேச்சுவார்த்தை வளை யத்திற்குள் இந்தியா மற்றும் அமெரிக்க மேற்குலக நாடுகள் உந்தித் தள்ளியதில் பல பிராந்திய வல்ல மைக் கணக்குகள் இருந்தன. ஆனால் அவற்றினூடே தமிழ் மக்க ளுக்கு அதிகபட்ச அரசியல் உரிமை களை உறுதி செய்யும் ஓர் ""கூட் டாட்சி ஏற்பாட்டினை'' உருவாக்க வும், அதன் முதன்மை நாயகர் களாய் விடுதலைப் புலிகளை ஏற் றுக் கொள்ளவுமான முடிவுகளும் மேற்குலக நாடுகளைப் பொறுத்த வரை இருந்தன. அமைதிப் பேச்சு வார்த்தைகளின் காலத்தில் அமெ ரிக்க பயங்கரவாத இயக்கம் எனத் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அன்டன் பாலசிங்கம் அவர்களை அவரது லண்டன் இல்லத்திற்கே சென்று அதே அமெரிக்காவின் தென் ஆசியாவிற்கான அரசியற் செயலர் ரிச்சர்ட் அர்மிடாஜ் சந்தித்தது மிக முக்கியமான நிகழ்வு. அதுபோலவே இப்போதைய அமெரிக்க வெளி யுறவுச் செயலர் ஹிலாரி கிளிண் டன் அவர்களின் கடந்த 15 ஆண்டுகால ஈழத்தமிழர் பிரச் சனை தொடர்பான உரைகளையும், நேர்காணல்களையும் நோக்கினோ மென்றால் ஒரு தருணத்தில் கூட தமிழ் மக்களின் அரசியற் போராட்டத்தை பயங்கரவாதமாக அவர் தீர்ப்பிட்டதில்லை. விடுதலைப் புலிகளை வன்முறை- பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் இயக்கமாகக் குறிப்பிடும் அவர் தமிழரின் விடுதலைப் போராட்டத்தில் நியாயங்கள் உண்டு, அவர்களது போராட்ட நியாயங்களுக்குப் பதில் தரப்பட வேண்டுமென்றே கூறி வந்திருக் கிறார். இந்த அணுகுமுறையின் தெளிவான தொடர்ச்சியை இன்றும் அமெரிக்க-மேற்குலக நாடுகள் அதனிலும் தெளிவாக வலியுறுத்துகின்றன. செய்தி இதுதான்: ""விடுதலைப்புலிகளை பயங்கரவாத இயக்கமாக நாங்கள் பட்டியலிட்டாலும் தமிழர்களின் நீண்ட அரசியற் சிக்கல் பயங்கரவாதமல்ல. அதற்கு அரசியற் தீர்வு ஓர் கூட்டாட்சி ஏற்பாடாக காணப்பட வேண்டும்''.

போருக்குப் பின் ராஜபக்சே சகோதரர்கள் காட்டிய ஆணவமும், அப்பட்டமான தமிழ் இன வெறுப்பு அணுகுமுறையும் மேற்குலக நாடுகளை கோபப்படுத்தியுள்ளன. இப்போதைய தென் ஆசியாவுக் கான அமெரிக்காவின் வெளி யுறவுச் செயலர் ராபர்ட் பிளேக்ஸ் ராஜபக்சே சகோதரர்களை மண்டியிட வைக்கும் வியூகங்களை வாஷிங்டனில் இருந்துகொண்டு வகுக்கிறார். இந்த ராபர்ட் பிளேக்ஸ் முன்னர் இலங்கையில் அமெரிக்காவுக்கான தூதராக இருந்தார். ராஜபக்சே சகோதரர் களை- குறிப்பாக கோத்த பய்யாவை போர்க்குற்றவாளியாக கூண்டில் நிறுத்த வேண்டுமென்பதில் குறியாக இருப்ப வரும் இவர்தான் எனக் கூறப்படு கிறது.காரணம் வெள்ளைக்கொடி ஏந்தி வந்த நடேசன்- புலித் தேவன் படுகொலை. இந்த உண்மை நார்வே நாட்டுத் தொலைக்காட்சி ஒன்றிற்கு முன்னாள் அமைதி பேச்சு வார்த்தையாளர் எரிக்சோல் கெய்ம் வழங்கிய செவ்வியில் வெளிப்பட்டுள்ளது. நடேசன்-புலித்தேவன் சரணடைதல் பேச்சுவார்த்தை களை இலங்கை அதிபர் -இந்தியத் தலைவர்கள் -ஐ.நா. அமைப்புகள் -புலித்தேவன் என நான்கு முனையிலும் ஒருங் கிணைத்ததுதான் என்பதை அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தி பதிவு செய்துள்ளார் எரிக்சோல் கெய்ம். தென் ஆசியாவுக்கான அமெரிக்காவின் வெளியுறவுச் செயலர் ராபர்ட் பிளேக்ஸ்தான் எரிக்சோல்கெய்மை அதில் வழி நடத்தியிருக்கிறார். அவரது உத்தர வாதத்தின்பேரில்தான் சரணடையும் அறிவுறுத்தல் புலித்தேவனுக்குத் தரப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக புலித்தேவனுடன் கடைசியாக நடந்த தொலைபேசிப் பதிவையும் எரிக் சொல் கெய்ம் வெளிப்படுத்தி யுள்ளார். வெள்ளைக் கொடியேந்தி சரணடையச் சென்ற நடேசன், புலித் தேவன் உள்ளிட்ட சுமார் 17 பேரை படுகொலை செய்ய உத்தரவிட்டது கோத்தபய்யா ராஜபக்சே. இதனை மன்னிக்க ராபர்ட் பிளேக்ஸ் தயாராக இல்லை.

வாஷிங்டனிலிருந்து நமக்கு கிடைக்கிற முக்கிய தகவல்கள் இவை: ""சரத் பொன்சேகா அமெ ரிக்கா செல்லவில்லை, வர வழைக்கப்பட்டார். நடேசன்-புலித் தேவன் படுகொலை பற்றி அவரிடம் கேட்கப்பட்டது. கோத்தபய்யா உத்தரவில் அது நடந்ததென்றும், படுகொலை நடந்து பத்து நிமிடங்களுக்குப் பின்னரே தனக்கு அதுபற்றித் தெரிய வந்ததாகவும் வாக்குமூலமும் கூறியுள்ளார் பொன்சேகா. சரத் பொன் சேகாவை அதிபர் தேர்தலில் போட்டியிடும்படி அறிவுறுத்தியதும் -உண்மையில் உத்தரவிட்டுள் ளதும்- அமெரிக்காதான் என்றும் தெரிய வருகிறது. கோத்தபய்யா வுக்கெதிராய் வாக்குமூலம் தரவில்லையெனில் அமெரிக்க குடிமகனென்ற வகையில் அவர் மீது போர்க்குற்றங்கள் சுமத்தப்பட்டு எங்கு வைத்து வேண்டுமானாலும் அவர் கைது செய்யப்பட முடியு மென்றும் எச்சரிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இந்த ""எங்கு வைத்து வேண்டுமானாலும் எங்களால் உங்களை கைது செய்ய முடியும்'' என்ற எச்சரிக்கைதான் அவரை வழிக்குக் கொண்டு வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இதற்கும் வேறு பின்னணி கள் உள்ளது. அவை...!