பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Thursday, November 19, 2009

பிரபல நடிகைக்கு ஆபாச மிரட்டல்: கமிஷனரிடம் புகார்

செல்போனில் தனக்கு அடிக்கடி ஆபாச மிரட்டல் வருவதாக நடிகை சி.ஆர்.சரஸ்வதி சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் கொடுத்துள்ளார்.
தமிழில் ஏராளமான படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தவர் நடிகை சி.ஆர்.சரஸ்வதி. அ.தி.மு.க.வில் நட்சத்திர பேச்சாளராகவும் உள்ளார். இவர் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில் சி.ஆர்.சரஸ்வதி கூறியிருப்பதாவது, கடந்த சில தினங்களாக மர்ம நபர் ஒருவர் எனது செல்போன் எண்ணுக்கு போன் செய்து ஆபாசமாக பேசி வருகிறார். யார்? என்று கேட்டால் மிரட்டும் வகையில் பேசி வைத்து விடுகிறார். நேற்று முன் தினம் செல்போனில் மீண்டும் பேசிய போது, தியாகராயநகரில் உள்ள ஒரு ஓட்டல் அறைக்கு வர சொல்லி ஆபாசமாகவும், அறுவெறுக்க தக்க வகையிலும் பேசினார். நான் அவரிடம் என் செல்போன் நம்பர் எப்படி கிடைத்தது? பேசுவது யார்? போலீசில் புகார் செய்வேன் என்றேன். அதற்கு அவர் வெறோரு செல்போன் நம்பரை கொடுத்து அந்த நபர் தான் பேச சொன்னார் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். அந்த நபர் தந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினேன். எதிர்முனையில் ஒரு பெண் போனை எடுத்தார். மேற்கண்ட விவரத்தை கூறினேன். அதற்கு அவர் இதே போல் சில தினங்களாக ஒரு நபர் என்னிடம் ஆபாசமாக பேசி மிரட்டி வருகிறார். அவர் யாரென்று தெரியவில்லை என்று தெரிவித்தார். இதனால் என்னிடம் செல்போன் மூலமாக ஆபாச மிரட்டல் விடும் நபர் ஏராளமான பெண்ணிடம் இது போல் சில்மிஷ பேச்சு பேசி மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறார். அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சி.ஆர்.சரஸ்வதி கூறியுள்ளார்.