பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Thursday, November 19, 2009

அமிதாப்பின் பக்கத்து வீட்டுக்காரராகும் ஷில்பா- ராஜ் குந்த்ரா ஜோடி!

திருமணம் முடிந்த கையோடு நடிகை ஷில்பா ஷெட்டி தன் கணவர் ராஜ் குந்த்ராவுடன் ஜூஹு கடற்கரையில் உள்ள ஜல்சா பகுதியில் கட்டப்பட்டுளள புதிய வீட்டுக்குக் குடிபோகிறார். இங்குதான் அமிதாப்பின் பிரமாண்ட வீடு அமைந்துள்ளது.லண்டன்வாசியான ராஜ் குந்த்ரா, திருமணத்துக்குப் பிறகு மும்பை க்குக் குடியேற சம்மதித்துவிட்டதில் ஷில்பா ஷெட்டி மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளாராம். கொஞ்ச நாள் மும்பையிலும் பெரும்பாலான நாட்கள் லண்டனிலும் வசிக்கத் திட்டமிட்டுள்ளதாம் ஷில்பா - ராஜ் குந்த்ரா ஜோடி!மேலும் மும்பையில் மிகப் பிரமாண்டமான மாளிகை ஒன்றையும் ஷில்பாவுக்கு வாங்கியுள்ளார் ராஜ் குந்தரா. ஆனால் அந்த வீட்டில் இன்னும் அலங்கார வேலைகள் பாக்கியுள்ளன. இந்தப் பணியில் தீவிரமாக இறங்கியிருப்பவர் சூஸன். இவர் வேறு யாருமல்ல.. நடிகர் ஹிரித்திக் ரோஷனின் மனைவி!புதிய மாளிகை தயாராகும் வரை வேறு வீட்டில் குடியிருக்க முடிவு செய்த ஷில்பா ஜோடி, பிரபல தயாரிப்பாளர் வாசு பக்னானிக்குச் சொந்தமான சொகுசு அபார்ட்மெண்ட்டைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இது மும்பை ஜல்ஸா பகுதியில் அமிதாப் பச்சனின் வீட்டுக்குப் பக்கத்தில் அமைந்துள்ளது.