பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Friday, November 20, 2009

80 ஆயிரத்துக்கு மனைவியை அடகு வைத்தவன் கைது

ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனபள்ளி நகரைச் சேர்ந்தவர் பாலாஜி (30). இவரது மனைவி உஷா (28). இவர்களுக்கு பத்ரி என்ற 4 வயது மகன் இருக்கிறான்.
பாலாஜி எப்போதும் குடித்துவிட்டு சூதாடுவதையே தொழிலாக வைத்திருந்தார்.பாலாஜி இதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் (30) என்பவரிடம் ரூ.45 ஆயிரம் கடன்பட்டார். மேலும் சூதாடுவதற்காக ரூ.80 ஆயிரத்திற்கு தனது மனைவி உஷாவை பணயம் வைத்தார். அதற்கு சம்மதித்த வெங்கடேஷ் பாலாஜியிடம் இருந்து மீதமுள்ள ரூ.35 ஆயிரத்தை வாங்கிக் கொண்டார்.
உஷாவும் வெங்கடேசுடன் சென்று குடும்பம் நடத்தி வந்தார். இந்த நிலையில் பாலாஜி, தனது மனைவி உஷாவை வெங்கடேசிடம் இருந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்ல முயன்றார்.
அப்போது ஏற்பட்ட தகராறு தொடர்பாக போலீசார் இருவரையும் கைது செய்து விசாரித்ததில் இந்த தகவல்கள் வெளிப்பட்டன. தன்னுடன் உஷாவை அனுப்பிவைக்குமாறு போலீசாரிடம் பாலாஜி கேட்டுக்கொண்டார்.
ஆனால் வெங்கடேசுடன் தான் வாழ்வேன் என்று உஷா தெரிவித்தார். இந்த நிலையில் வெங்கடேஷ் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.