பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Friday, November 20, 2009

ஆபாச அர்ச்சகர்: பரபரப்பு வாக்கு மூலம்

காஞ்சீபுரம் ஸ்ரீமச்சேஸ்வரர் கோவில் அர்ச்சகராக இருந்தவர் தேவநாதன். (35). இவர் கோவில் கருவறையில் பல பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்று வெளியான ஆபாச வீடியோக்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையொட்டி அர்ச்சகர் தேவநாதன் மீது பெரிய காஞ்சீபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர். சில தினங்களுக்கு முன்பு காஞ்சீபுரம் முதல் வகுப்பு குற்றவியல் கோர்ட்டில், பெண் மாஜிஸ்திரேட் சுதா முன்பு அர்ச்சகர் தேவநாதன் சரண் அடைந்தார். தேவநாதனை வருகிற 30-ந்தேதி வரை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
அர்ச்சகரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க பெரிய காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாபிராமன் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். மாஜிஸ்திரேட் சுதா அர்ச்சகரை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டார்.
அதன்படி போலீஸ் பாதுகாப்புடன் அர்ச்சகர் தேவநாதன் பெரிய காஞ்சீபுரம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அர்ச்சகர் தேவநாதனிடம் போலீசார் துருவி, துருவி விசாரித்தனர். விசாரனையில் அவர் போலீசிடம்,
’’காஞ்சீபுரம் ஸ்ரீமச்சேஸ்வரர் கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பெண்கள் தங்களது குடும்ப கஷ்டத்தைக்கூறுவார்கள். அவர்களுக்கு நான் அர்ச்சனை செய்து ஆறுதல் கூறுவேன்.
இவ்வாறு வரும் சில பெண்களுடன் எனக்கு நெருக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கோவில் கருவறையிலே அவர்களது சம்மதத்தோடு நான் உல்லாசமாக இருப்பேன். அந்த காட்சியை நான் என்னுடைய செல்போன் கேமராவில் ரகசியமாக படம் பிடிப்பேன். பிறகு ஓய்வாக இருக்கும் நேரத்தில் அந்த காட்சியை நானே பார்த்து, ரசித்து, இன்பமடைவேன்.
மேலும் சில பெண்களை லாட்ஜூகளுக்கு அழைத்துச் சென்று அவர்களுடன் உல்லாசமாக இருப்பேன். நான் கோவில் கருவறையில் பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ எனது செல்போனில் இருந்து எப்படி பரவியது என்பது எனக்கு தெரியவில்லை.
செல்போனை ஒரு கடையில் ரிப்பேருக்கு கொடுத்தேன். அவர்கள் இந்த வீடியோ காட்சியை எனது செல்போனிலிருந்து எடுத்து பரப்பினார்களா? என்று எனக்கு புரியவில்லை’’என்று தெரிவித்தார்.
அர்ச்சகர் தேவநாதன் மீது 153-(எ) (2), 295எ, 506(2) ஆகிய 3 பிரிவுகளில் பெரிய காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாபிராமன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்.
காஞ்சீபுரம் செல்போன் கடைகாரர்கள் பாலாஜி, பிரவின்குமார் ஆகியோர்களிடம் அர்ச்சகரின் செக்ஸ் லீலைகளை சி.டி.யில் பரப்பினீர்களா? என்று போலீசார் விசாரிக்கின்றனர்.