பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Saturday, November 21, 2009

முகாம்கள் திறந்த இடங்களாக மாறப்போகின்றன -பசில் ராஜபக்ஷ (எம்.பி)

மோதல்கள் காரணமாக இடம்பெயர நேர்ந்திருந்த மக்களில் சுமார் ஒரு லட்சத்து முப்பத்து ஐந்தாயிரம் பேர் வரையிலான மக்கள் இன்றளவும் முகாம்களில் தங்கியுள்ள நிலையில், இந்த முகாம்கள் திறந்த இடங்களாக மாறப்போகின்றன என்றும், உள்ளேயிருப்பவர்கள் சுதந்திரமாக நடமாடவும், வெளியில் சென்று தமது உறவினர்கள் மற்றும் நண்பர்களை பார்க்கவும் முடியும் என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட ஆலோசகரும் அவரது சகோதரருமான பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.
வரும் ஜனவரி மாத இறுதிக்குள் முகாம்களில் உள்ள மக்கள் அனைவரையும் மீளக் குடியமர்த்துவது என்ற அரசாங்கத்தின் திட்டத்தை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
தற்போது இடம்பெயர்ந்தவர்களுக்கு மீள்குடியேற்றத்திற்கென வழங்கப்படுகின்ற 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவானது, டிசம்பர் 15 ஆம் திகதி முதல் 50 ஆயிரமாக உயர்த்தப்படும் என்றும் சனிக்கிழமை மனிக்பாமுக்கு விஜயம் செய்த ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், வடக்கின் வசந்தம் திட்டத்தின் தலைவருமாகிய பசில் ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.