பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Saturday, November 21, 2009

வவுனியா தடுப்பு முகாம்கள் டிசம்பர் முதலாம் திகதியில் இருந்து சுதந்திரமான நடமாட்டத்திற்காக திறந்துவிடப்படும்: பசில் ராஜபக்ச

வவுனியாவில் உள்ள தடுத்து முகாம்கள் எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி முதல், சுதந்திர நடமாட்டத்திற்காக திறந்து விடப்படும் என அரசாங்கத்தின் சார்பில், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச, இதனை சற்று முன்னர் வவுனியா செட்டிக்குளம் தடுப்பு முகாமில் வைத்து அறிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலுக்கு ஆயத்தமாகி வரும் நிலையில், இந்த அறிவித்தல் அரசியல் நோக்கம் கருதி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் முட்கம்பிகள் தகர்க்கப்பட்டு முகாம்களில் உள்ளவர்கள் விரும்பிய இடங்களுக்கு சென்று வரலாம் என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அத்துடன் எதிர்வரும் ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்னர் இடம்பெயர்ந்துள்ள மக்கள் மீளக்குடியேற்றப்படுவர் என்றும் பசில் ராஜபக்ச அறிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, இன்று பசில் ராஜபக்ச வரலாற்று ரீதியான ஒரு அறிவிப்பை வெளியிடுவார் என தெரிவித்தமைக்கு அமையவே இன்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.