பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Thursday, November 19, 2009

இஞைர்கள் வேட்டை! களத்தில் குதித்த கட்சிகளின் காட்சிகள்!

2011 சட்டமன்றத் தேர்தலுக்கான களப்பணிகளை இப்போதே துவக்கிவிட்டன அரசியல் கட்சிகள். களப்பணியின் முதன்மைப் பணியாக, இளைஞர்களின் ஆதரவை திரட்டுவதில் கவனம் செலுத்தி வருகின்றன அத்தனை கட்சிகளும்!
இளைஞர் காங்கிரசின் உறுப்பினர் எண்ணிக்கை யை அதிகரிப்பதற்காகவே தமிழகத்தில் 3 நாள் அதிரடி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார் ராகுல் காந்தி. இளைஞர்களை அதிக அளவில் அ.தி.மு.க. பக்கம் இழுப்பதற்கான அஜெண்டாவோடு மாவட்டம் தோறும் இளைஞர், இளம்பெண்கள் பாசறையின் கூட்டத்தை நடத்தி வருகிறார் டாக்டர். வெங்கடேஷ். புதிய தலைமுறை இளைஞர்கள் ம.தி.மு.க.வை விரும்புகிறார்கள் என்ற நம்பிக்கை யோடு 100 நாள் பயணத்திட்டத்தை வகுத்திருக்கிறார் வைகோ. மார்க்சிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், தீவிர உறுப்பினர் சேர்க்கையை ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் நடத்தி முடித்ததோடு மேலும் உறுப்பினர் சேர்க்கையில் கவனம் செலுத்தி வருகிறது. ஜனவரி முதல் கிராம சுற்றுப்பயணத் திற்கு திட்டமிடும் பா.ம.க.வின் டாக்டர் அன்புமணியும் பெரிய அளவில் இளைய தலைமுறையை ஈர்க்கும் எண்ணத்திலேயே களம் இறங்குகிறார். ஆளும் கட்சியான தி.மு.க.வின் பக்கம் இளைஞர்களின் ஆதரவை திருப்ப அதிரடி திட்டத்தோடு தயாராகி வருகிறார் இளைஞர் அணியின் செயலாளரான ஸ்டாலின்.
இந்த தலைமுறை இளைஞர்களுக்கு அரசியல் ஆர்வமே குறைவுதான். அவர்கள் அரசியலை வெறுக்கி றார்கள் என்கிற பொதுக்கருத்து உருவாகியுள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் “இளைஞர்கள் ஈர்ப்பு’’ முயற்சிக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது?
தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. வில் இருந்து உற்சாகமாகவே வருகிறது பதில். ""இளைஞர், இளம்பெண்கள் பாசறையில் இதுவரை 38 லட்சம் பேர் இணைந்திருக்கிறார்கள். கிராமப்புற இளைஞர்கள், நகர்ப் புற இளைஞர்கள் என்று எல்லோருமே அம்மாவின் தலை மையை ஏற்க ஆர்வத்துடன் வருகிறார்கள்''’என நம்மிடம் உற்சாகமாக பேசுகிறார் பாசறை செயலாளர் டாக்டர் வெங்கடேஷ். கூடவே, ""தமிழக இளைஞர்களிடம் இப்போதும் அண்ணா ஊட்டி வளர்த்த இன உணர்வும், மொழி உணர்வும் இருப்பதை உணர முடிகிறது. இந்த தலைமுறை இளைஞர்களிடம் விழிப்புணர்வும் அதிகம். குடும்ப அரசியலுக்கு எதிராக பேசுகிறார்கள். ஈழப் பிரச்சனை உள்ளிட்ட பலவற்றில் காங் கிரஸ் கட்சியை நிராகரிப்பதாக சொல்கி றார்கள். இலவச டி.வி. வழங்குவதை, இடியட் பாக்ஸ் கொடுத்து மக்களை முட்டாளாக்கு கிறது ஆளும் கட்சி என்று ஒரு இளம் பெண் மேடையில் பேசுகிறார்'' என்கிறார் டாக்டர் வெங்கடேஷ்.
குறைந்த பட்சம் 5 லட்சம் உறுப்பினர் களையாவது இளைஞர் காங்கிரசில் சேர்த்து விட வேண்டும் என்ற டார்கெட்டோடு தமி ழகத்தில் களம் இறங்கியது ராகுல் டீம். பாண்டிச்சேரியில் சுமார் 1 லட்சம் உறுப்பி னர்கள் சேர்க்கப்பட்டதும் அந்த உறுப்பினர் களில் 90 சதவீதத்துக்கு மேலானவர்கள் கடந்த எம்.பி.தேர்தலில் காங்கிரசுக்கே வாக்களித்ததும் ராகுலுக்கு உற்சாக டானிக்காக இருந்ததாம். பாண்டிச்சேரியைப் போன்று தமிழகத்திலும் காங்கிரசுக்கு இளைஞர் சக்தியை கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையில்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டாராம்.
’ராகுல்ஜியின் சுற்றுப்பயணத்திற்கு பிறகு இளைஞர்கள் அதிக அளவில் இளை ஞர் காங்கிரசில் உறுப்பினர் ஆனார்கள். 13 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் தமிழக இளைஞர் காங்கிரசில் இணைந்திருப்பதால் உற்சாகமாகியிருக்கிறோம். தமிழகத்தில் திராவிடம் மட்டுமே இளைஞர்களை ஈர்க்க முடியும் என்கிற நிலையை மாற்றியிருக்கிறார் ராகுல்ஜி'' என்று வெங்கடேஷின் கருத்தை மறுக்கிறார் இளைஞர் காங்கிரசின் அகில இந்திய செயலாளர்களில் ஒருவரான ஜோதி.
""கேப்டனுக்கு இருக்கும் இளைஞர்கள் ஆதரவை சென்ற ஆண்டு நாங்கள் நடத்திய இளைஞரணி மாநாட்டின் மூலம் அனைத்து கட்சியினரும் தெரிந்துகொண்டார்கள். 2006 தேர்தலில் 12 நாட் களுக்கு முன்புதான் எங்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது. குறை வான நாட்களில் எங்கள் சின்னத்தை பிரபலப்படுத்த எஸ்.எம்.எஸ்., இ-மெயில் மூலம் பரப்பியது படித்த, நகர்ப்புற இளைஞர்கள்தான். இப்போது கட்சியின் உறுப்பினர்களாக 75 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் அதிகம் பேர் இளைஞர்கள்தான். அந்த வகையில் மற்ற கட்சிகளை விட எங்களிடமே அதிக இளைஞர்கள் இருக்கிறார்கள்''’ என்று அழுத்தமாக சொல்கிறார் தே.மு.தி.க. இளைஞரணி செயலாளர் சுதீஷ்.
மார்க்சிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கண்ணன் பேச்சிலும் உற்சாகம் தெரிகிறது. ""ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் தீவிர உறுப்பினர் சேர்க்கை இயக்கம் நடத்தியபோது 7 லட்சத்து 40 ஆயிரம் பேர் சேர்ந்திருக்கிறார்கள். அதன் பிறகும் உறுப்பினர் சேர்ப்பு தொடர்கிறது'' என்றவர், ""எங்கள் கட்சி மாஸ் கட்சி அல்ல. கேடர் பேஸ்டு கட்சிதான். அதே நேரத்தில், மத்திய-மாநில அரசுகள் மீது அதிருப்தியில் இருக்கும் இளைஞர்களும் எங்கள் மீது நம்பிக்கையோடு வருகிறார்கள். எங்கள் உறுப்பினர்கள் யாரும் வேறு கட்சியில் இருக்க மாட்டார் கள். மற்ற கட்சிகளில் அப்படி அல்ல''’ என் கிறார் கண்ணன்.
பா.ம.க. இளைஞரணி கடந்த ஆண்டே மாவட்டம் தோறும் மாநாடுகள் நடத்தி, தரமான கட்டாயக்கல்வி, தனியார் துறை இட ஒதுக்கீடு, ரசிகர் மன்றங் களை கைவிடுதல் உள் ளிட்ட 10 அம்ச உறுதிமொழி யை தங்கள் இளைஞர்களை எடுக்க வைத்தார் டாக்டர் அன்பு மணி ராமதாஸ். ""இப்போது நடைபெறும் உறுப்பினர் சேர்க் கையில் லட்சக்கணக்கான பேர் இளம்பெண்கள் அணியிலும், இளைஞர் அணியிலும் சேர்ந்து வருகிறார்கள்'' என்கிறார் பா.ம.க. இளைஞரணி செயலாளர் அறிவுச் செல்வன்.
""லட்சக்கணக்கான இளைஞர்களை ஈர்த்திருக்கிற கட்சியாக நாங்கள்தான் இருக்கிறோம். இளைஞர்களை எழுச்சி பெற வைக்கும் தலைவராக தோழர் திருமா இருக்கிறார்'' என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் எம்.எல்.ஏ.ரவிக்குமார். மற்ற கட்சிகளின் இளைஞர்கள் எண்ணிக்கை இப்படி இருக்க ஆளும்கட்சியான தி.மு.க.வின் இளைஞரணி துணை செயலாளரான வக்கீல் அசன்முகமது ஜின்னா,’""எங்கள் கட்சி யில் சுமார் 45 லட்சம் இளைஞர்கள் இருக்கிறார்கள். 2007ம் ஆண்டு நடந்த இளைஞரணி மாநாட்டுக்கு பிறகு மேலும் உத்வேகத்தோடு செயல்படுகிறது இளைஞரணி. துணை முதல்வர் ஸ்டாலின் பெயரில் செயல்படும் இணைய தளத்தில் மட்டுமே 15 லட்சம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அத்தனை பேருமே இளைஞர்கள்தான். படித்த இளைஞர்கள் மத்தியிலும் எங்கள் தளபதிக்கு ஆதரவு அதிகம் என்பதற்கு இதுவே உதாரணம்'' என்கிற ஜின்னா, ""தர்மபுரியில் இளைஞரணி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட துணை முதல்வரிடம் மனு ஒன்றை கொடுத்தார் பள்ளி மாணவி ஒருவர். அந்த மனுவில் தங்கள் பள்ளியை தரம் உயர்த்த 2 லட்ச ரூபாய் வேண்டும் எனக் கோரியிருந்தார். அந்த பணத்தை இளைஞரணி மூலம் உடனடியாக கட்ட வைத்து பள்ளி யின் தரம் உயர நடவடிக்கை எடுத்தார். அதே போல, குற்றாலத்தில் எம்.பி.பி.எஸ். படிக்க உதவ வேண்டும் என்று மனு கொடுத்த மாணவனின் விருப்பத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தார். அந்த மாணவனின் ஆசிரியர்களை தொடர்பு கொள்ளச் செய்து, அந்த மாணவரின் படிப்பு குறித்து விசாரித்தார். அந்த மாணவனின் கல்வி செலவு உள்ளிட்டவற்றை தொடர்ந்து கவனிக்க இளைஞரணி பொறுப்பாளர் ஒருவரை நியமித்தார். இவையெல்லாம் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போலதான்'' என்று உதாரணங்களை அடுக்கினார் ஜின்னா.
கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு கவிஞர் கனிமொழி நடத்தும் வேலைவாய்ப்பு முகாம்களின் மூலம் இதுவரை 54 ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்திருக்கிறது எனக் குறிப்பிடும் தி.மு.க.வினர், இதன் மூலமும் நிறைய இளைஞர்கள் தி.மு.க. பக்கம் ஈர்க்கப்படுவதாக சொல்கிறார்கள்.2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தமிழக மக்கள்தொகையில் 2.88 கோடி இளைஞர் கள். இப்போது அந்த எண்ணிக்கை மூன்றரை கோடியாக உயர்ந்திருக்கலாம் என்கிறார்கள் சர்வே துறையினர். முக்கிய கட்சிகளின் கூற்றுப்படி 2 கோடிக்கு மேலான இளைஞர்கள் அரசியல் கட்சி களில் உறுப்பினர்களாக இருப்பதாக தெரியவருகிறது.முக்கிய கட்சிகளின் இளம் தலைவர்கள் சொல்வது எவ்வளவு தூரம் உண்மை?இன்றைய தலைமுறை, அரசியலில் ஆர்வமாக இருக்கிறதா? எந்த கட்சியை பெரும்பான்மை இளை ஞர்கள் ஆதரிக்கிறார்கள்? இளைய தமிழகத்தை கவர்ந்த இளம்தலைவர் யார்? என்பது போன்ற கேள்வி களுடன் நக்கீரன் சர்வே டீம் களமிறங்கியுள்ளது.இளைய தலைமுறையினரின் அரசியல் பார்வை நமது டீமிற்கு பல ஆச்சர்யங்களை கொடுத்து வருகிறது. நக்கீரன் சர்வே முடிவுகள் வரும் இதழில்...