பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Friday, November 13, 2009

பொன்சேகா ராஜினாமா ஏற்பு: 3பக்க கடிதம்-16காரணங்கள்!

இலங்கை இறுதிப்போரில் ராணுவ தளபதியாக இருந்தவர் சரத் பொன்சேகா. அவர் இப்போது இலங்கை முப்படைகளின் தலைவர் பதவியில் இந்துவந்தார்.
இந்நிலையில் அவர் இலங்கையில் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிட முடிவு செய்துள்ளார். அதனால் அவர் முப்படைகளின் தலைவர் பதவியில் இருந்து நேற்று ராஜினாமா செய்துவிட்டார்.
மகிந்த ராஜபக்சேவுக்கு அனுப்பிய 3 பக்க ராஜினாமா கடிதத்தில், ராஜினாமா செய்வதற்கான 16 காரணங்களை எழுதியிஉருந்தார்.
அக்கடிதத்தில், ‘’இலங்கையில் ராணுவ ஆட்சி ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறார் ராஜபக்சே.
புரட்சியை தடுக்கும் பொறுட்டு அவர் கடந்த அக்டோபர் 15ல் இந்தியாவின் உதவியை நாடினார்’’என்பன உட்பட 16 காரணங்களை குறிப்பிடிருந்தார்.