பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Friday, December 4, 2009

அவசர அழைப்பின்பேரில் பொன்சேகா நேற்றிரவு இந்தியா பயணம்: விமானநிலையத்தில் கெடுபிடி!

ந்திய அரசின் அவசர அழைப்பின்பேரில் சிறிலங்காவின் முன்னாள் இராணுவ தளபதியும் எதிர்க்கட்சிகளின் அரசதலைவர் வேட்பாளருமான சரத் பொன்சேகா நேற்று புதன்கிழமை இரவு இந்தியா சென்றுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொன்சேகாவை முக்கியஸ்தர்கள் செல்லும் வழியாக செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, சாதாரண பயணிகள் செல்லும் வழியாகவே அவர் விமானத்தை சென்றடைந்துள்ளார்.
இந்திய அரசின் அவசர அழைப்பின்பேரில் அங்கு செல்வதற்காக நேற்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் வி.ஐ.பிகள் செல்லும் வழியாக பொன்சேகா விமானநிலையத்திற்கு சென்றுள்ளார். ஆனால், அவரை வழிமறித்த விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகள், பொன்சேகா வி.ஐ.பிகள் செல்லும் பாதையை பயன்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து, பொன்சேகாவின் பாதுகாப்பு ஒருங்கமைப்பாளர் விமானநிலைய கட்டுப்பாட்டாளர் கேணல் பிரசன்ன விக்ரமசூரியவை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதற்கு அவர் பொன்சேகா வி.ஜ.பி. பாதையை பயன்படுத்த அனுமதி வழங்கவெண்டாம் என்று தமக்கு உயர் மட்டத்திலிருந்து உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த உத்தரவு பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாயவினால் பிறப்பிக்கப்பட்டத என்று பொன்சேகா தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து, பயணிகள் மற்றும் பிக்குகள் சிலருடன் பொன்சேகா சாதாரண பயணிகள் விமானத்தை சென்றடைய பயன்படுத்தும் வழியாக விமானத்துக்கு சென்றார் என்று விமானநிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியாவுக்கு இரண்டு நாள் விஜயமாக சென்றுள்ள பொன்சேகா நாளை வெள்ளிக்கிழமை மாலை நாடு திரும்புவார் என்று எதிர்கட்சிவட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவரது விஜயத்திற்கான காரணத்தை கேட்டபோது அது தனிப்பட்ட விஜயம் சென்று பொன்சேகா தரப்பினர் தெரிவித்துள்ளனர். நாளை நாடு திரும்பவுள்ள பொன்சேகா நாளை மறுதினம் சனிக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய சம்மேளனக்கூட்டத்தில் கலந்துகொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.