பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Thursday, December 3, 2009

ஏழு பெண்களை மணந்தவனின் ஆடடா...

"நான் அவனில்லை' திரைப்படத்து ஹீரோ ஜீவன்... பல பெண்களை ஏமாற்றுவதுபோல்... ஒரு கில்லாடிக் கிங்கரன் பல பெண்களை ஏமாற்றி அவர்களின் கற்பையும் காசையும் ஏகத்துக்கும் சூறையாடியிருக்கிறான்.அத்தகைய மன் மதத் திருட னிடம்... தான் ஏமாந்த கதை யைச் சொல் லித் தேம்பு கிறார்... தேனி மாவட்ட போடி யைச் சேர்ந்த பட்டதாரி இளம் பெண்ணான நளினி.அவரது அனுபவத்தை அவரது வாய்ஸிலேயே கேட்போம்.""நான் செல்லமா வளர்க்கப் பட்டவள்.

வசதியான குடும்பம். அப்பா வரதராஜன் திடீர்னு இறந்துபோனதால்... என்னோட திருமணத்தை கடந்த எட்டு வருஷமா தள்ளி வச்சிக்கிட்டே இருந்தேன். வயது 35-ஐ நெருங்கியதால் எங்க அம்மா... இப்பவாச்சும் கல்யா ணத்துக்கு ஒத்துக்கோன்னு சொன்னதால்... மனசு மாறி நானே இண்டர்நெட்டில் மணமகனைத் தேடினேன்.

அப்ப... பொன்குமரன்ங்கிற ஒருத்தன் தன்னை லண்டன் வாழ் தமிழர்னும்... பெரிய தொழிலதி பர்னும் அறிமுகப்படுத்திக்கிட்டு தனக்கு ஏத்த வயதில் பெண் தேடுவதா விளம்பரப்படுத்தியிருந் தான். ரொம்ப நாகரிகமா விளம்பரம் இருந்ததால் என்னைப் பற்றிய விபரங்களைக் கொ டுத்து... பதிலுக்குக் காத்திருந் தேன். அடுத்த ரெண்டுநாளில் என் மொபைல் நம்பருக்கு வந்த அந்த ஆள்... புனேவிலும் தனக்கு சொத்துக்கள், தொழில்கள் இருப்பதாகவும்... இந்தியா வந்ததும் வீட்டுக்கு வர்றேன்னும் சொன் னான். இதையெல்லாம் மனப் பூர்வமா நம்பி.. எங்க வீட்டில் திருமணத்துக்கு ஒப்புதல் வாங்கினேன்.கொஞ்சநாள்ல அந்த ஆள் மறுபடியும் என்னைத் தொடர்புகொண்டு... "எங்க அப்பா, அம்மா விபத்தில் இறந்துட்டாங்க. அதனால் கொஞ்சம் திருமணத்தைத் தள்ளிவச்சுக்கலாம்'னு சொல்ல... நாங்களும் அந்த விபத்துக்காக வருத்தப்பட்டோம்.

அடுத்த கொஞ்சநாளில் மீண்டும் தொடர்புகொண்டு... "சீக்கிரம் திருமணத்தை ஏற்பாடு செய்யச் சொல்லு. திருமணம் முடிஞ்ச கையோடு என் புனே சொத்துக்களை உன்பெயரில் மாத்திடப் போறேன்'னு என்னிடம் சொன்னான். அதேபோல் திருமணத்தை போன மார்ச்சில் திருப்பதியில் ஏற்பாடு செஞ்சோம். கல்யாணத்துக்கு அவன் மட்டும் தனியா வந்தான்.

அப்பா, அம்மா இறந்ததால் தன் சொந்த பந்தத்துக்கெல்லாம் சொல்லலைன்னு சொன்னான். கல்யாணமும் நடந்தது. எங்க வீட்டில் 150 பவுன் நகைகளைப்போட்டு 15 லட்சம் தட்சணையாவும் கொடுத்தாங்க. இனிக்க இனிக்கப் பேசி என்னை எல்லாத்துக்கும் பணியவச்சான். கல்யாணமான பிறகு... "இனி நான் லண்டன் போகப் போறது இல்லை. இங்கேயே தங்கி பிசினஸை பார்க்கப்போறேன். முன்னாள் சி.எம்.மான ஓ.பி.எஸ்., ஏலக்காய் ஏற்றுமதி பிஸினஸுக்கு பார்ட்னரா கூப்பிடறார். அதுக்கு 40 லட்சம் கேட்கறார்'னு அவன் சொல்ல... அதையும் எங்க நிலத்தை அடமானம் வச்சிக்கொடுத்தோம். அதன் பிறகு அவனோட போக்கு சந்தேகப்படற மாதிரி இருந்தது. நாங்க விசாரிக்க ஆரம்பிச்சோம்.

அப்பதான் ஓ.பி.எஸ். குடும்பத்துக்கு இவனைத் தெரியாதுங்கிற விஷயம் தெரிந்தது. இதைப்பத்தி நாங்க பொன்குமரன்கிட்ட கேட்டோம். பதில் சொல்லாம மழுப்பிய பொன்குமரன் சொல்லாம கொள்ளாம புனேவுக்கு ஓடிப்போயிட்டான்.அதுக்குப் பிறகுதான் அந்த ஆளைப்பத்தின வண்டவாளமெல்லாம் எங்களுக்குத் தெரிய ஆரம்பிச்சது. அவன் பல பெண்களை மோசமான கோலத்தில் படம் எடுத்திருந்ததைப் பார்த்து ஆடிப்போய்ட்டேன். அந்த ஆல்பத்தை முழுசாப் பாக்கறதுக்குள்ள அதை எடுத்துட்டு ஓடிப்போய்ட்டான். என்னையும் இப்படி மோசமா படம் எடுத்திருப்பானோன்னு பயமா இருக்கு.

அவனை பிடிக் கும்வரை எனக்கு நிம்மதியே இல் லைங்க''’என்றார் வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டே. மேற்கொண்டு நடந்ததை நளினியின் அண்ணன் வெங்கட் ராமனே விளக்குகிறார்.

""அந்த பொன்குமரன் சொல்லிக்காம புனேக்கு ஓடிப் போனதால் நாங்க அவனைத் தேடிக்கிட்டு அவன் வீட்டுக்குப் போனோம். திடீர்னு நாங்க போனதால் திகைச்சுப்போய்ட்டான். அந்த வீட்டுச் சுவத்தில்... ஐந்து பெண்களோட அவன் திருமணக்கோலத் தில் இருக்கும் படம் தொங்குச்சு.
அதோட அவன் பல பெண்களிடம் நெருக்கமாக இருக்கும் படங்களும் அங்க ஆல்பத்தில் இருந்தது. இதைபத்தி யெல்லாம் நாங்க கேட்டதும்.. இதோ வர்ரேன்னு ஆல்பத்தோட ஓட்டம் பிடிச்சிட்டான். அக்கம்பக்க வாசிகளிடம் அவனைப் பத்தி நாங்க விசாரிச்சப்ப... அவனுக்கு எந்தத் தொழிலும் இல்லைங்கிறதும்... கடந்த 22 வருடமா அவன் புனேயில் வாடகை வீட்டில் வசிப்பதும் தெரியவந்தது. பெரிய பிஸினஸ்மேனைப்போல் தன்னைக் காட்டிக்கொண்டு... இணையதளத்தின் மூலம் பெண்களை வளைத்து... அவர்களுடன் கொஞ்சநாள் வாழ்ந்து பணம் பறிப்பதுதான் அவனோட பிரதான தொழிலா இருந்திருக்கு.
இதையெல்லாம் சரியா தெரிஞ்சிக்காம எங்க தங்கை நளினியின் எதிர்காலத்தையும் ஏறத்தாழ 4 கோடி ரூபாயையும் அவனிடம் பறிகொடுத் திருக்கோம். இப்படிப்பட்ட பித்தலாட்டக் காரனை... சும்மாவிடக் கூடாதுன்னுதான் மதுரை தென்மண்டல ஐ.ஜி.யிடம் மனு புகார் மனு கொடுத்திருக்கோம்''’என்றார் ஆதங்கம் மாறாமல்.நளினியைப் போலவே 7 பெண்களை இணையதளத்தில் வலைவிரித்து வளைத்திருக் கிறான் பொன்குமரன். இவனது வலையில் சிக்கி... கடைசிநேரத்தில் தப்பி யிருக்கிறார் நாக்பூரைச் சேர்ந்த பெண்டாக்டர் நர்மதா. அவரிடம் தனக்கு லண்டனில் ஓட்டல் இருப்ப தாகச் சொல்லி ஏமாற்றி... நிச்சயதார்த்தம்வரை போயிருக் கிறான். அதற்கு முன்பே பல லட்ச ரூபாயை அதை இதைச் சொல்லி அவரிடம் வாங்கியும் விட்டான். அந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு வந்தவர்களில் ஒரு பெண், டாக்டர் நர்மதாவிடம் போய், "போயும் போயும் இவனிடமா சிக்கினாய்? இவன் பயங்கர பிராடாச்சே.
இவனின் டுபாக்கூர் டயலாக்கில் சிக்கி ஏமாந்தவர் களில்... நானும் ஒருத்தி'’என விஷயத்தைப் போட்டுடைக்க... இதைக்கண்ட பொன் குமரன்... அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டான். தன்னை ஏமாற்றிப் பணம் பறித்த பொன்குமரனைத் தேடிக்கொண்டிருந்த டாக்டர் நர்மதா... அவன் மீது நளினி புகார் கொடுத்திருப்பதை அறிந்து... தானும் புகார் கொடுக்க ரெடி யாகிவிட்டார். இதேபோல் சென்னையைச் சேர்ந்த ஒரு பெண் எஸ்.ஐ. ஒருவரையும் அவன் தன் வலையில் வீழ்த்தியிருப்பதாக தற்போது கூடுதலாக ஒரு தகவல் கசிய ஆரம்பித்திருக்கிறது.நளினியின் வழக்கறிஞரான சரவணகுமாரோ, ""நளினியைப் போலவே இந்தியா முழுக்க பல மாநிலங்களிலும் பல பெண்களை வளைத்து தனது திருவிளை யாடல்களை நடத்தியிருக்கிறான் பொன்குமரன். அவனைக் குற்றக்கூண்டில் ஏற்றாமல் ஓயமாட்டோம்''’ என்கிறார் ஆவேசமாக.ஐ.ஜி.கிருஷ்ணமூர்த்தி யோ, ""இன்ஸ்பெக்டர் பாண்டி யன் தலைமையில் ஒரு தனிப் படையை நியமிச்சி...., பொன் குமரனைப் பிடிக்க நடவடிக் கைகள் முடுக்கி விடப்பட்டிருக் கிறது.
அவனை விரைவில் மடக்கிவிடுவோம். அவன் பிடி பட்ட பிறகுதான் அவன் இன் னும் எத்தனைப் பெண் களை வீழ்த்தியிருக்கான்னு தெரிய வரும்''’என்கிறார் அழுத்தமாக.