பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Saturday, December 5, 2009

வாழைச்சேனையில் இலங்கை இராணுவம் அகதிகள் மீது துப்பாக்கிசூடு

வாழைச்சேனை கரடித்தோட்டம் கடற்கரையில் தமிழ் அகதிகள் மீது இலங்கை இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ஒருவர் பலியாகியுள்ளார். அத்துடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். சற்று முன்னர் நடந்த இச் சம்பவத்தை, சிங்கள இணையத்தளங்கள் ஆயுதம் தரித்த மும்பல் ஒன்றே தமிழ் அகதிகளை சுட்டதாக கட்டுக்கதை ஒன்றை பரப்பியுள்ளது.
தமிழ் அகதிகள் கரடித்தோட்டம் கடற்கரையில் இருந்து வேறு நாட்டிற்குச் செல்ல காத்திருந்த வேளை அங்கு வந்த இலங்கை இராணுவம் இவர்களைக் கைதுசெய்ய முயன்றதுடன் துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொண்டுளனர்.கடற்கரையில் துப்பாக்கிச் சத்தம் கேட்டபோது தான் இராணுவம் அங்குசென்றதாக சில சிங்கள இணையத்தளங்கள் செய்திவெளியிட்டுள்ளபோதும், வாழைச்சேனையில் நடைபெற்ற இச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதும், காயமடைந்ததும் தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது.