பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Saturday, December 5, 2009

சந்தியாவின் கவர்ச்சி ஆல்பம்!

வாரிசு நடிகரை வளைத்துவிட்டார் என்ற சீரியஸான புகாரில் சிக்கியுள்ள சந்தியா, இப்போதல்லாம் கோடம்பாக்கம் பக்கம் அதிகம் தலைகாட்டுவதில்லையாம்.பெரும்பாலும் மலையாளம் மற்றும் தெலுங்கு ப் படங்களில் நடிக்கவே அதிக ஆர்வம் காட்டுகிறாராம்.
இப்போது தமிழில் இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படத்தில் நடித்துவரும் சந்தியா, சமீபத்தில் ஒரு ஸ்பெஷல் போட்டோ செஷன் நடத்தினாராம். இதிலிருந்து கவர்ச்சி ததும்பும் (?) தனது ஸ்டில்களைத் தேர்ந்தெடுத்து, தனி ஆல்பமாக்கி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடப் பட உலக பிரமுகர்களின் பார்வைக்கு அனுப்பியுள்ளாராம்.

இதற்கு ஓரளவு பலனும் கிடைத்துள்ளதாம். இனி இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் வெளியாகி வெற்றி பெற்றால் தவிர, வேறு தமிழ்ப்படங்கள் ஒப்புக் கொள்வதில்லை என்று முடிவு செய்துவிட்டாராம் சந்தியா.