பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Wednesday, December 2, 2009

நொடிக்கு ஒரு பைசா: கட்டணப் போரில் குதித்தது எம்டிஎன்எல்!

அரசுத் துறை நிறுவனமான எம்டிஎன்எல் இ்பபோது 3 ஜி மொபைல் சேவைக்கும் நொடிக்கு ஒரு பைசா எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
டெல்லி, மும்பை நகரங்களின் தொலைபேசி மற்றும் செல்போன் சேவயை எம்டிஎன்எல்தான் கவனிக்கிறது. இங்கு 2 ஜி மற்றும் 3 ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது எம்டிஎன்எல். இப்போது தனியார் தொலைபேசி நிறுவனங்கள் ஒரு நொடிக்கு ஒரு பைசா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன. இதைத் தொடர்ந்து எம்டிஎன்எல்லும் இந்த கட்டணப் போரில் குதித்துவிட்டது.
இந்த மாதம் முதல் எம்டிஎன்எல்லின் 2 ஜி மற்றும் 3 ஜி மொபைல்கள் உள்ளிட்ட அனைத்து செல்போன் சேவைகளுக்கும் ஒரு நொடிக்கு ஒரு பைசா கட்டணத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.