பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Thursday, December 3, 2009

மன்மத குருக்களுக்கு செருப்படி!

பெண்கள், பொதுமக்கள், அர்ச்சகர் சங்கத்தினர் அனைவரின் கோபப் பார்வைக்கும் உள்ளாகியிருக்கும் மன்மத குருக்கள் தேவநாதன், மீதான போலீஸ் கஸ்டடியை நீட்டிப்பு பெற்று விசாரித்தனர் சிவகாஞ்சி ஸ்டேஷன் காக்கிகள்.


அவனோ... ""காமம் கடவுள் கொடுத்த வரம். கருவறைக்குள் சல்லாபித்தால் சுபிட்சங்கள் சேரும் என்ற நம்பிக்கையாலும்... என் மீதான விருப்பத்தாலும்தான்... பெண்கள் தானாக என்னிடம் வந்து விழுந்தார்களே தவிர... நானாக யாரையும் வற்புறுத்தி செக்ஸில் ஈடுபடுத்தவில்லை''’என சொல்லிக் கொண்டிருந்தான்.தமிழகம் முழுக்க அந்த மன்மத குருக்களுக்கு எதிரான அலை வீசுவதை அறிந்த டி.ஜி.பி. ஜெயின், "அவனை விட்டுவிடாதீர்கள். தீர விசாரித்து கடுமையாக நடவடிக்கை எடுங்கள்'’என காவல்துறைக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர் காக்கிகள். தேவநாதனை "செமையாய் கவனித்ததோடு'... அவனது கருவறைப் பார்ட்னர்களில் ஒருவர் என, ஏற்கனவே நாம் அடையாளம் காட்டியிருந்த பெண் புரபஸரான தாராவை அந்த தேவநாதன் முன் கொண்டுவந்து நிறுத்தினர்.



தாராவோ தேவநாதனை கண்டதும் "இந்தச் சண்டாளனால் என் வாழ்க்கையே இப்ப வீணாப் போயிடிச்சி. கோயிலுக்குப் போன என்னை... ஒருநாள் கருவறைக்குள் அழைத்து பலவந்தமா கெடுத்தான். அப்புறம் அந்தக் காட்சிகள் தன் செல்போனில் இருப்பதாச் சொல்லி மிரட்டியே... பலமுறை அதே கோயிலுக்கு வரச்சொல்லியும்... என் வீட்டுக்கே வந்தும்... உல்லாசமா இருந் தான். என்னை பலவந்தமா கெடுத்தவன்தான் இந்தப்பாவி''’என கதறினார்




இதேபோல் இன்னொரு கருவறைப் பார்ட்னரான நக்கீரனில் வாக்குமூலம் தந்த பூக்காரப்பெண் கலாவையும் கும்பகோணத்தில் மடக்கி அ

வரிட மிருந்தும் முதற்கட்டமாக தேவநாதன் தன்னைக் கெடுத்ததாக வாக்குமூலம் பெற்றனர். இதன் பின்னரே பல பெண்களை வலுக்கட்டாயமாகக் கெடுத்ததாக ஒத்துக்கொண்டான் தேவநாதன். இதையறிந்த காவல்துறை மேலிடம்... வழக்கை மாவட்ட குற்றப்பிரிவுக்கு உடனடியாக மாற்ற.. மூன்றாம்நாள் விசாரணையை மாவட்டத்துறை மேற்கொண்டது.அவர்கள் அவனை அதே மச்சேஸ்வரர் கோயிலுக்கு அழைத்துச்சென்றனர். அங்கு பூஜைப்பாடலை ரெக்கார்டர் வாய்ஸில் ஒலிபரப்பும், சின்ன வடிவிலான எலக்ட்ரானிக் கருவியைக் கைப்பற்றினர். கிளுகிளு லீலைகளில் இருக்கும்போது இந்த வாய்ஸை ஒலிக்கவிட்டுவிட்டு... பக்திப்பரவசமாய் ஈடுபடுவானாம் தேவநாதன்.
அங்கு தனது சிருங்கார லீலைக்காட்சிகளை நடித்துக்காட்டிய அவனை... பாலாஜியின் செல்போன் கடைக்குக் கொண்டு சென்றனர். அங்கு குருக்களின் சைனா செல்போனையும்... அவனது செக்ஸ் காட்சிகள் பதிவான கம்ப்யூட்டரையும் கைப்பற்றினர். அப்போது நடந்த விசாரணையில் அவன், தான் எடுத்த கிளுகிளு படங்களை இணையதளங்க

ளுக்கு விற்க... பேரம் நடத்தியதையும் ஒப்புக்கொண்டிருக்கிறான். அதையும் விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள். அவன் பட்டியலிட்ட எட்டு பெண்களையும் ஏறத்தாழ மடக்கிவிட்ட காக்கிகள் அவர்களிடம் வாக்குமூலமும் வாங்கி வருகிறார்கள்.இதற்கிடையே திங்கட்கிழமை மாலையோடு தேவநாதனின் கஸ்டடி காலம் முடிந்ததால்... அவனை அன்று மாலை 5 மணிக்கு காஞ்சிபுரம் ஒன்றாவது கோர்ட்டுக்குக் கொண்டு வந்தனர். அதற்கு முன்பாகவே பத்திரிகையாளர்களும்... மக்கள் மன்றத்தைச் சேர்ந்த மகேஷ், ஜெஸி போன்றவர்களுடன் ஏராளமான பெண்களும் திரண்டிருந்தனர். தேவநாதனுடன் அந்த ஜீப் வந்ததுதான் தாமதம்... ஏறத்தாழ 200-க்கும் மேற்பட்ட பெண்கள் அந்த ஜீப்பை சுற்றிவளைத்தனர். 'தேவநாதனை வெளியே விடாதே... போலீஸே தேவநாதனைத் தூக்கில் போடு...' என்பதுபோன்ற கோஷங்களுடன்... ஜீப்பில் இருந்து இறங்கிய தேவநாதன் மீது... சாணியையும்... பிய்ந்த செருப்புகளையும்... துடைப்பத்தையும் சரசரவென அவர்கள் வீச... தேவநாதனின் முகமெல்லாம் சாணி.
திகைத்துப்போன காக்கிகள் பெண்களைத் துரத்த முயல... எரிமலையான பெண்கள் போலீஸை நெட்டித்தள்ளினர். போலீஸ் அவர்களை அடித்து விரட்ட முயன்ற நொடியில்... வேகமாக ஓடிவந்த டி.எஸ்.பி. சமுத்திரக்கனி “""யாரையும் அடிக்காதீங்க. வேனில் ஏத்துங்க''’என காக்கிகளுக்கு உத்தரவிட்டார். பெண்களை மடக்கி வேனில் ஏத்தும் சமயத்தில் தேவநாதனை மாஜிஸ்திரேட்டிடம் பாதுகாப்பாகத் தூக்கிக் கொண்டு ஓடினர் காக்கிகள். கோர்ட் அறைவரை செருப்புகளும் துடப்பக் கட்டைகளும் வந்து விழுந்தன. கொஞ்சம் அசந்திருந்தாலும் அந்த பெண்கள் சேனை, அந்த மன்மத குருக்களைப் பீஸ் பீஸாக்கியிருக்கும். மாஜிஸ் திரேட்டோ, தேவநாதனை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதற்கிடையே வேனில் ஏற்றப்பட்ட பெண்களை ஸ்டேஷன்வரை அழைத்துச் சென்று அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தியதாக வழக்கைப் பதிவு செய்துவிட்டு உடனே ரிலீஸ் செய்தனர் காக்கிகள். பெண்களின் எழுச்சியான எதிர்ப்புணர்வைக் கண்டு காக்கி களே திகைத்துப்போயிருக்கிறார்கள்.மன்மத குருக்கள் தேவநாதனை ஒருவேளை... சட்டமே நழுவவிட்டாலும் பெண்ணினம் விடாது போலிருக்கிறது.